பாரதியின் நாலுவர்ண தேச பக்தி

     

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 9

இரண்டாவது அத்தியாயம்

barathi001.jpg

 வேதத்தில் ஜாதிய வேறுபாடு கிடையாது,

‘வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே’

என்றெல்லாம் ஜாதிய எதிர்ப்பாளர் மாதரி, கவிதையளக்கிற சுப்பிரமணிய பாரதி – மனுஸ்மிருதியையோ, நாலு வர்ணத்தையோ-தன் நெருப்புக் கவிதைகளால் ‘தீமூட்ட’ மறுக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் நாலு வர்ணத்துக்கு நல்வாழ்த்து ஒன்று பாடியிருக்கிறார்,

‘வேத மறிந்தவன் பார்ப்பான் – பல
  வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல் – தண்ட
 நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்
  பட்டினி தீர்ப்பவன் செட்டி.

…………………………………………………………………………
…………………………………………………………………………

நாலு வகுப்பும் இங் கொன்றே – இந்த
 நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே – செத்து
 வீழ்ந்திடும் மானிடச் சாதி’

-என்று ராஜகோபால ஆச்சாரியருக்கே குலக்கல்வி திட்டத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறார், இந்த ராஜகுரு.

“அந்தப் பாடலில், பாரதி தனக்கே உரிய முறையில் – ஜாதி ஒற்றுமையை வலியுறுத்துகிறார். ஜாதியக் கல்வியை ஆதரிக்கவில்லை”
-என்று அவரின் பாடலுக்கு ஒட்டுப் போட முயற்சிப்பவர்களை, உருட்டுக் கட்டை எடுத்துக் கொண்டு ஓட, ஒட விரட்டுகிறார்-தன் கட்டுரையில்.

‘அந்நிய-வஸ்து – வர்ஜனம், ஜாதீயக் கல்வி, பஞ்சாய்த்து, சரீரப் பயிற்சி – இந்த நான்குமே சுதேசியம் என்ற புண்ணிய பலத்தைத் தாங்குகின்ற நான்கு தூண்களாகும். இவற்றை ஆதரிப்பது நமது கடமை. இதில் சட்டத்திற்கு எவ்விதமான விரோதமும் கிடையாது. இவற்றை ஆதிக்காமலிருப்பவர்கள் தேசத் துரோகிகள் ஆவார்கள்.’

-என்று தன் நாலுவர்ண தேச பக்தியை வெளிப்படுத்துகிறார்.

-தொடரும்

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

இங்கே சொடுக்கவும்

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி

3 thoughts on “பாரதியின் நாலுவர்ண தேச பக்தி

  1. இப்படி பிரிச்சி மேயரிங்களே …….super

  2. dalit endra vaarthai payanpaattai sari endre solluven. adimai sangiliyin valiyai ulagukku urakka sollum sol dalit. avalathai avalam endre solvom.

Leave a Reply

%d bloggers like this: