சுதேசிப் போர் கப்பல்தளபதி
பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஜம்ஷெட்ஜி டாடா 1877இல் தனது நூற்பாலையை நிறுவி அதற்குப் “பேரரசி ஆலை‘ என்று பெயரிட்டார். கிழக்கிந்தியக் கம்பெனிக்காகச் சீனாவுக்கு கப்பல் மூலம் அபினி கடத்தியதில் கிடைத்த தரகுப் பணத்தையும், 1857இல் ஈரான் மீதும், 1868இல் எத்தியோப்பியா மீதும் பிரிட்டிஷ் இராணுவம் போர் தொடுத்தபோது அவர்களுக்கு உணவு சப்ளை செய்து அந்த “காண்டீன் கான்டிராக்ட்‘ மூலம் கிடைத்த பணத்தையும் வைத்து இந்த நூற்பாலை துவங்கப்பட்டதால், அந்த நன்றி “பேரரசி ஆலை‘ என்று வாலை ஆட்டியது.
இப்படிப் போதைப் பொருள் கடத்திய டாடாவைத்தான் தொழில் தந்தை என்று பெருமையுடன் குறிப்பிடுகிறது “சுதந்திர‘ இந்தியா. அதேபோல, தமிழ்நாட்டின் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், ஆங்கில அரசின் ஆசியோடு பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தங்கள் வட்டித் தொழிலை விரிவுபடுத்தியிருந்தனர்.
இந்தியாவின் சுதேசி வணிகர்கள் இப்படியாகத் திரைகடல் ஓடித் திரவியம் தேடிக் கொண்டிருந்தபோது வெள்ளையனை விரட்ட வேண்டும் என்றால் அவனை எதிர்த்துப் போட்டி வர்த்தகம் நடத்த வேண்டும் என்று ஒரு குரல் தூத்துக்குடியிலிருந்து உரத்துக் கூவியது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வணிகரல்ல. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான வ.உ.சிதம்பரம்.
“”ஒரு பரிதாபத்துக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி. ஏதோ ஒரு உந்துதலில் வெள்ளையனுக்கு எதிராகப் போராடிச் சிறை சென்றவர்” என்பது போன்ற தோற்றம் வ.உ.சி.யைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்ட ஒரு விடுதலை வீரர். பிரிட்டிஷாருக்கு எதிரான நெருப்பாகவே வாழ்ந்தவர்.
“”வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீண்டும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்” என்று சுதேசிக் கப்பலுக்கான “விதை‘ பற்றிக் குறிப்பிடுகிறார் வ.உ.சி.
சுதேசிக் கப்பல் என்பது வியாபாரம் அல்ல, அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் வீரியமிக்க வடிவம் என்ற புரிதல் வ.உ.சி.க்கு இருந்தது. எனவே தன்னுடைய கம்பெனிக்கு மிகச் சாதாரண மக்களிடமெல்லாம் பங்கு வசூல் செய்தார் வ.உ.சி.
1906 அக்டோபர் 16ஆம் நாள் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி‘ என்ற பெயரில் சுதேசிக் கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 1907 மே மாதம் “காலியோ, லாவோ‘ என்ற இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.
கிலி பிடித்த வெள்ளையர்களின் பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியும் (பி.ஐ.எஸ்.என்) பிரிட்டிஷ் அரசும் இணைந்த கைகளோடு சுதேசிக் கப்பலுக்கு எதிராகச் சதிகள் செய்ய ஆரம்பத்தன.
தூத்துக்குடிக்கும் கொழும் புக்கும் இடையில் 5 ரூபாயாக இருந்த மூன்றாம் வகுப்புக் கட்டணத்தை 75 பைசாவாகக் குறைத்தது பி.ஐ.எஸ்.என் நிறுவனம். அடுத்த சதியாக, இந்திய இலங்கை ரயில்வே நிர்வாகம், பி.ஐ.எஸ்.என் நிறுவனக் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கும் பயணிகளுக்கும் ரயிலில் கட்டணச் சலுகை என்று அறிவித்தது.
ஆனாலும் தேசப்பற்று மிக்க மக்கள் இந்த சதி நிறைந்த சலுகைகளைப் புறம் தள்ளி, வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல்களையே ஆதரித்தனர். அதனால் வெள்ளையன் கப்பல் நிறுவனத்திற்கு மாதம் 40,000 வரை நட்டம் ஏற்பட்டது. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல் படுத்தியது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்ட உணர்வை மக்கள் மனதில் விதைத்தது.
சுதேசிக் கப்பல் பதிவு செய்து சரியாக மூன்று மாதம் கழித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் “”வெள்ளையர் எதிர்ப்புணர்வு இங்கு நிலவுகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் அதிகம் நிலவுகிறது” என்று அரசுக்கு அறிக்கை அனுப்பினான். ஆம். நெஞ்சில் நெருப்போடு வெள்ளையர் களுக்கு எதிரான கலவரத்தை நடத்தக் காத்திருந்தது திருநெல்வேலிச் சீமை.
கப்பலோட்டியது மட்டும்தான் வ.உ.சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்ற சித்திரம் தவறானது. பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலையும் கொடுங்கோன்மையையும் எதிர்த்த மக்கள் போராட்டங்களின் மூலம்தான் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற பார்வை வ.உ.சி.க்கு இருந்திருக்கிறது.
வெள்ளை முதலாளிகளால் நடத்தப் பட்ட தூத்துக்குடி கோரல் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் இதற்குச் சான்றாக இருக்கிறது.
கோரல் ஆலையில் 10 வயதுச் சிறுவர்களும் தொழிலாளர்களாக வேலை வாங்கப்பட்டனர். வார விடுமுறை என்பதே கிடையாது. கூலி மிகக் குறைவு. வேலையில் தவறு நேர்ந்தால் பிரம்படி. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் கைகோர்த்தனர்.
“”முதலாளிகளை முடமாக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று இயந்திரங்களுக்கு ஊறு விளைவிப்பது, இன்னொன்று வேலை நிறுத்தம். இரண்டாவது வழியே சிறந்தது” என்று தொழிலாளர்களிடம் உரையாற்றினார் சிவா. பின்னர் பேசிய வ.உ.சி, இரண்டு வழிகளையும் கையாளுமாறு தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
தொழிலாளர்கள் வ.உ.சியின் “கோரிக்கையை‘ உடனே நிறைவேற்றினர். மறுநாளே ஆலையின் மீது கற்களை வீசினார்கள். ஆலையின் தண்ணீர்க் குழாயை உடைத்தெறிந்தார்கள். தொழிலாளர் பிரச்சினையை மக்களிடம் பேசி அதனை வெள்ளையருக்கு எதிரான போராட்டமாக மாற்றினார் வ.உ.சி.
மக்கள் வீதியில் சென்ற வெள்ளையர்களைக் கல்லால் அடித்த னர். வியாபாரிகள் வெள்ளையருக்கு உணவுப் பொருட்களை விற்க மறுத்தனர். தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் உயிருக்குப் பயந்து தங்கள் இரவுகளைக் கப்பல் கம்பெனி அலுவலகத்தில் கழித்தனர். ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால் வெள்ளையனின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாவிதர்களோ வெள்ளையரை ஆதரித்தவர்களுக்குச் சவரம் செய்யவும் மறுத்தனர்.
நிலைமை எல்லை மீறியது. நிர்வாகம் பணிந்தது. வார விடுமுறை, ஊதிய உயர்வு, வேலை நேரக்குறைப்பு ஆகியவற்றுக்கு உடன்பட்டது. தொழிலாளர் பிரச்சினையை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக மாற்றியமைத்த வ.உ.சி.யின் இந்த வியூகம் பிரமிக்க வைக்கிறது. இந்தப் போராட்ட முறை இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டிருந்தால் பிரிட்டிஷ் அரசு அப்போதே கப்பல் ஏறியிருக்கும்.
வெறுமனே கூலி உயர்வுக்குக் குரல் கொடுக்கிற அமைப்பாகத் தொழிற் சங்கத்தை வ.உ.சி பார்க்கவில்லை. ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டே விரட்டுகிற மாபெரும் சக்தியாகவே அவர் தொழிலாளி வர்க்கத்தைப் பார்த்தார். கோரல் ஆலைப் போராட்டம் முடிந்தவுடனேயே அடுத்த அரசியல் போராட்டத்தைத் துவக்குகிறார் வ.உ.சி.
–வே. மதிமாறன்
புதிய கலாச்சாரம் 2006
––&தொடரும்
உழைப்பையும் தியாகத்தையும் மதிக்காத சமுதாயம் ஒருபோதும் உருப்படாது…
நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உழைப்பவர்கள் யார்? போலிகள் யார்? ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் சரியா? தவறா? என்பதைப்பற்றி சிந்திக்காத செயல்படாத மக்கள் கூட்டம் ஒருபோது மானத்தோடும் அறிவோடும் வாழப்போவதுமில்லை… உருப்படப்போவதுமில்லை…
பத்தாயிரம் பேர் கூடும் பேருந்து நிறுத்தத்தில் குடிபோதையால் நாக்கிழுத்து செத்துக்கிடப்பவனை யார் என்று கண்டுகொள்ளக்கூட இன்று நாதியில்லை…
மக்களுக்காக சிந்திக்கும் கூட்டம் மிகக்குறைவு… சிந்தித்ததை செயல்படுத்தும் கூட்டம் அதைவிட மிகமிக குறைவு…
அப்படி செயல்படுவர்களை ஒடுக்குவதற்காகவே காத்திருக்கிறது காவல்துறை
மக்களைப் பற்றி சிந்திக்காத, அவர்களை பொருட்படுத்தாத அட்சியாளர்களை நாம் பெற்றிருப்பது நாம் பெற்றப் பெரும்பேரு…
நாசமாய் போகட்டும்… நம் நாடு வாழ்க! ஜனநாயகம்…
இது போன்ற கட்டுரைக்கு பின் இருக்கும் உங்கள் வாசிப்பு பிரமிக்க வைக்கிறது…
இன்று சிதம்பரம்,கலாம் போன்றவர்கள் பாராட்டும் “உழைப்பால் உயர்ந்த உத்தமர்களின்” வரலாறு தான் எவ்வளவு கேவலமானது ????
வ.உ.சி. யா ஆருங்க அது?
ஒருத்தரு வந்தே மாதரம் ன்னு பாட்டு பாடுனாராம்.
வெள்ளக்காரன் ஓடிப் போயிட்டானாம்.
அப்டித்தானே பாட பொஸ்தகத்தில எழுதி இருக்கு.
வ.ஊ.சின் மர்பிலே பூனூல் இருந்திருந்தால் வரலாறு மாற்றப்பட்டிருக்கும்
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்… சாமிய்….
நம்ம வஉசி களத்தில் போராடிக் கொண்டிருக்கும் போது புரட்சிக் கவிஞர் பாரதி சிட்டுக் குருவிக்கு பாட்டு எழுதிக் கொண்டிருந்தாரே அது ஏன்? வ உ சி அரசியல் அரங்கில் இருந்த காலகட்டம் முழுவதும் இந்தாள் பாரதி பேனாக்குச்சியால முதுகு சொறிஞ்சிக்கிட்டுதான் இருந்தாரு. பின்ன என்னத்தா புரட்சி செஞ்சி கிழிச்சாருன்னு எனக்கு தெரியல.
இந்த விசயத்தை தெரிஞ்சோ தெரியாமலேயோ கப்பலோட்டிய தமிழன் படத்துல நல்லாவே காமிச்சிருக்காங்க. சுப்பிரமணி ஒரு குட்டிமுதலாளித்துவ அல்பவாதி என்பதும், இவரைப் போலவே வாய்ப்பேச்சு சீலையில வடிய அலையும் இன்றைய அறிவுநாணயமற்ற அறிவுஜீவிகளும் இருப்பதை ஒப்பிட்டு புரிந்து கொள்ள அந்த படமும் உதவியது.
அசுரன்
அன்று அவருக்கு ஆதரவாக இருந்தவர்களில் பாரதியும் ஒருவர்.
ஆனால் அதை எழுதும் நேர்மை உங்களுக்கு இல்லை.
“வ.ஊ.சின் மர்பிலே பூனூல் இருந்திருந்தால் வரலாறு மாற்றப்பட்டிருக்கும்”
காந்தியின் மார்பில் பூனூல் இருந்ததில்லை. அன்று சிதம்பரம்
இப்படிப் போராடிக் கொண்டிருந்த போது நீதிக்கட்சியின்
முன்னோடிகள் என்ன செய்தார்கள்.யாருக்கு பல்லக்கு
தூக்கினார்கள். இதையெல்லாம் எழுதும் நேர்மை மதிமாறனுக்கு
உண்டா. வெள்ளையனுக்கு பாதம் தாங்கியாக இருந்தவர்கள்தான்
ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள். பெரியார் 15-8-1947 ஐ
துக்க நாள் என்றார். என்றைக்காவது திராவிடர் கழகம்
வ.உ.சி யின் பங்களிப்பை ஏற்று அங்கீகரித்திருக்கிறதா.
அன்று வெள்ளையனின் காலடியில் கிடந்தவர்களை
கொண்டாடும் மதிமாறன் வ.உ.சி பற்றி எழுதுவது
எதற்காக, யாரை ஏமாற்ற.