‘திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3

https://i0.wp.com/www.ambedkartimes.com/Image/PERIYAR.jpg?w=1170

பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1

‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2

கவி, சிங்கப்பூர்

மிழை ‘நமது தகைமைசால்  தமிழ்’ என்று அழைத்து அது பற்றியும் பெரியார் கூறுகிறார்.

தமிழ் என்றால் என்ன? மக்களா? நாடா?  மொழியா? நாட்டைப் பொறுத்து, மக்களைப் பொறுத்து, மொழிக்குத் தமிழ் என்கின்ற பேர் வந்ததா? அல்லது மொழியைப் பொறுத்து நாட்டுக்கும், மக்களுக்கும் தமிழகம், தமிழ்நாடு, தமிழர் என்கின்ற பேர் வந்ததா! என்ற கேள்விகள், தமிழைப் பொறுத்த வரை வித்து முந்தியா? மரம் முந்தியா என்ற தர்க்கத்தைப் போன்றதாகவே எனக்குத் தோன்றுகின்றன.  எப்படி இருந்தாலும் தமிழ் நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி என்று மூன்று பண்டங்கள் இருக்கின்றன.

இந்த மூன்றையும் முதல் பொருளாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால்  தமிழ் , தமிழ் நாடு, தமிழ் மொழி என்கின்ற சொற்களைக் காண்பதற்கு முன்பிருந்தே, இவற்றை காணாதவர்களிடமிருந்து இந்த மூன்றையும் குறிக்கும் படியாக திராவிடம், திராவிடர், திராவிட மொழி என்பதாகச் சொற்கள் இருந்து வந்ததையும், வருவதையும் பார்க்கிறோம். தமிழ் மொழியும் அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும், நாடுகளும் கூடத் தமிழைச் சேர்ந்ததே என்றும் அந்தக் கருத்தைக் கொண்டே திராவிடம் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது என்றும் அகராதிகளும் , ஆராய்ச்சி உரைகளும் கூறுகின்றன.

வடமொழி ஆதாரங்களான இலக்கியம், இதிகாசம், புராணம் ஆகியவற்றிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழ் மொழியையும், நாட்டையும், மக்களையும் குறிக்கப் பழங்காலத் திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தேச சரித்திரங்களிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்குப் பதிலாக உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறதையும் காண்கிறோம். ஆதியில் ஒரே கூட்டமாக வாழ்ந்த திராவிட மக்கள், இட நெருக்கத்தால் பல பிரிவுகளாகப் பிரிந்து  சென்று ஆங்காங்கு குடி வாழவும், அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அவர்களது மொழியில் சில நீட்டலும், குறுக்கலும் ஏற்படவும், அக்காலத்திய போக்குவரத்து வசதிக் குறைவு காரணமாக ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்கும் தொடர்பில்லாமல் போனதால், நாளடைவில் அந்தந்த இடத்தில் வட நாட்டிலிருந்து வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் தமது மொழிக்குக் கடவுள் பேரால் பல மகத்துவங்களை எடுத்துக் கூறி, அந்தந்தப் பிரதேச மக்களுக் கொஞ்சம் கொஞ்சமாக வடமொழியை அதிகமாக உபயோகப்படுத்தும் படி செய்து, அதன் மூலம் தமது கலை, ஆசசார அனுஷ்டானம் ஆகியவைகளைப் புகுத்தி விட்டனர். அந்த வட மொழிக் கலப்புக் காரணமாகவும், அந்தக் கலாச்சாரப் பண்புகளினால் ஏற்பட்ட பற்றுதல் காரணமாகவும் , அந்தந்த மக்களுக்குத் தமது மொழி தமிழ் அல்லாத வேறு மொழியேயாகும் என்ற கருத்தும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழி களென்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழி லிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது  தமிழ் தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப் பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன்.

இவ்வளவு ஆழ்ந்த விளக்கத்தை தமிழ் மொழிக்குக் கொடுத்த பெரியார்,  தமிழிலிருந்து சிதைந்தவைதான் மலையாளம், தெலுங்கு  மற்றும் கன்னடம் என்று வலியுறுத்திய பெரியார் மேலும் விளக்குகிறார்:

நான்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அனேகமாகத் தமிழ்ச் சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். அகராதி கொண்டு மெய்பிக்கவும் முடியும். சமீப காலம் வரையிலும் கூட அவைகளுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை. தெலுங்கு வைணவர்கள் சமீப காலம் வரை தமிழ்ச் சப்தத்தில் தான் நாலாயிரப் பிரபந்தத்தையும், திருப்பாவையையும், தெலுங்கு எழுத்தில் படித்து பாடி வந்திருக்கின்றனர். அந்தப் புத்தகங்கள் தெலுங்கெழுத்தில், தமிழ்ச் சப்தத்தில் தான் அச்சிடப்பட்டிருக்கின்றன. கன்னடியர் களுக்கும் மலையாளிகளுக்கும் முதல் நூலே கிடையாது.

இதையெல்லாம் இன்று வரை தமிழறிஞர்கள் ஆராய்ந்தார்களா அல்லது பெரியாருக்கு மறுப்புத் தெரிவித்து கருத்துக்களையாவது வெளியிட்டார்களா என்பதற்கு ஆதாரம் இல்லை.

மொழி வழி மாநிலம் அமைக்கப்படும் போது தமிழ்நாட்டிலிருந்து   ஆந்திரம் பிரிந்து சென்றதை “தொலைந்தது சனியன்” என்று கூறிய பெரியார், அதற்கு முன் கூறிய கருத்துக்களையும் இங்கு காண்போம்.

வட நாட்டு ஆதிக்கமும் வடமொழி மோகமும் குறையக்குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழி தமிழ் தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுனர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது. இத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது தமிழ் மொழி தாய் மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது என்ற கிளர்ச்சி செய்தேன்.

இவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்த பெரியார் தமிழ்புலவர்களின், அறிஞர்களின் நடத்தையின் காரணமாக அவர்கள் மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது விளங்குகிறது.

தொடரும்

15 thoughts on “‘திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3

  1. இவ்வளவும் சொன்னப் பெரியார், தமிழை ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது பொருந்தவில்லையே!

    கணியன் பூங்குன்றனின் ஒரு சங்க காலப் பாடலே பெரியாரின் வாயை அடைத்திருக்க வேண்டுமே!
    பத்துப் பன்னிரண்டு வரிகளில் பெரும் தத்துவங்களையே சொல்லிச் சென்றாரே! முதல் வரியிலேயே மனித நேயத்தைப் பேசினாரே!

    யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
    தீதும் நன்றும் பிறர்தர வாரா……..
    ………….. …. ….. …
    நிற்க.

    தமிழுக்கு எப்போது தமிழ் என்ற பெயர் வந்தது என்பது தெரியவில்லை. ஆனால், அது ஆரியர் வருகைக்கு முன்பே என்று கேள்வி.

    வல்லினத்தில் ஒரு மெய்யும், இடையினத்தில் ஒரு மெய்யும், மெல்லினத்தில் ஒரு மெய்யும் எடுத்து, அற்றோடு அ, இ, உ என்ற அடிப்படை (சுட்டும்) உயிர்களைச் சேர்த்து “தமிழு” என்று உருவாக்கி, பிறகு காலப்போக்கில் இறுதி எழுத்தின் உயிரை நீக்கி தமிழ் என்ற பெயர் உருவானது. தமிழ் என்பதைத் திரும்பத்திரும்பச் சொன்னால் அமிழ்து, அமிழ்து என்று காதில் விழும்.

    திராவிடம் என்பது தமிழ் என்பதை உச்சரிக்கத் தெரியாமல் தடுமாறியதால் உண்டான சொல்தான். ஜெர்மானியர்களும், ரஷ்யர்களும் எப்படி ஆங்கிலம் பேசுகின்றனர் என்பதை ஹாலிவுட் படங்களைப் பார்த்தாலே புரியும். 4000 ஆண்டுகளுக்கு முன்பு ழ வுக்கு ஆரியர்கள் எப்படியெல்லாம் தடுமாறி இருப்பார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

    தென்னிந்தியர்கள் அனைவரும் தமிழர்களே என்பதைத்தான் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மதிமாறனும் அவரது சகாக்களும் ஏற்றுக்கொண்டார்களோ என்னவோ? ஆனால், தமிழகத் தெலுங்கர்கள் சிலர், தமிழுக்கு செம்மொழித் தகுதியை, பொறுத்துக்கொள்ள முடியாமல் தவித்தனர் என்பது எனக்கு சொந்த அனுபவத்தில் தெரியும்.

    இப்போது தண்ணீர் தர மறுக்கின்றவனா தன்னை தமிழன் என்று உணரப்போகிறான்? அங்குள்ள பாரப்பான் அப்படி அவர்கள் உணர்வதை அனுமதிப்பானா?

  2. யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
    தீதும் நன்றும் பிறர்தர வாரா……..//

    இதை படித்த பின்பும் ஏன்யா தமிழ் தமிழன்னு பாசிச வெறியை உண்டு செய்கிறீர்கள்?

    எல்லோரும் நம் மக்கள், உறவினர் என்றால்
    ஏன் என் மொழி உயர்ந்தது? ஏன் என் இனம் உயர்ந்தது?
    ஏன் என் மதம் உயர்ந்தது? ஏன் என் சாதி உயர்ந்தது?

    ஏன் மொழி பிரிவினை? இன பிரிவினை? மத பிரிவினை?
    சாதி பிரிவினை?

    மற்றவன் மொழி பிரிவினை பார்ப்பதால், நீங்கள் அதற்கு பதிலாக
    நம் மொழியின் ஆளுமையை வைத்து எதிர்ப்பது சரியா?
    மொழி பிரிவினை கூடாது எனும் சமூக பார்வைதான் சரி.
    அதை விடுத்து எங்கள் மொழிக்கு இவ்வளவு இலக்கியம் இருக்கிறது, சென்றது என்கிற பெருமையெல்லாம் எதற்காக?

    இது மொழி பிரிவினையை தகர்க்குமா அல்லது மொழி பிரிவினையை இறுக பிடிக்குமா?

    சாதியின் பெயரால் மக்கள் ஒடுக்கபடும் போது, ஆதிக்க சாதியை எதிர்த்து தன் சாதியே உயர்ந்தது என்று போராட வேண்டுமா? அல்லது எல்லோரும் சமம் என்று சாதியை ஒழிக்கும் நோக்கில் போராட வேண்டுமா?

    ஆதிக்க சாதியை விட தன் சாதிதான் உயர்ந்தது் எனும் தன் சாதிபற்று எவ்வாறு தவரானதோ, அவ்வாறே தான் மொழிபற்றும்.

    மக்கள் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டால் சாதிபிரிவினையை எதிர்த்து சாதி ஒழிப்பிற்க்காக போராடுவதே ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பதை நிறுவும்.

    மக்கள் மதரீதியாக ஒடுக்கப்பட்டால் மதபிரிவினையை எதிர்த்து மத ஒழிப்பிற்க்காக போராடுவதே ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பதை நிறுவும்.

    மொழி ரீதியாக ஒடுக்கப்பட்டால் மொழிபிரிவினையை எதிர்த்து போராடுவதே ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பதை நிறுவும்.

    இனரீதியாக ஒடுக்கப்பட்டால் இனவேற்றுமைகளை களைய போராடுவதே ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பதை நிறுவும்.

    பாசித்திற்கெதிராக உங்கள் இனத்தை, மொழியை, மதத்தை, சாதியை முன்னிருத்தினால் அதுவும் பாசிசமே!

    அதை தான் பகுத்தறிவு பகலவன்
    “மனிதனுக்கு சாதி பற்று, மதப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று இருக்க கூடாது. அனைவரும் சமம்” என்று வழிகாட்டினார்.

    ஏனெனில் இவையனைத்தும் பாசிசத்திற்கு இட்டு செல்லும் காரணிகள்.

  3. //இவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்த பெரியார் தமிழ்புலவர்களின், அறிஞர்களின் நடத்தையின் காரணமாக அவர்கள் மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது விளங்குகிறது//

    இவ்வளவு தெளிவா பச்சப்புள்ளைக்கு சொல்றமாதிரி சொன்ன பிறகும், முனைவர் வே. பாண்டியன் அவர்கள் எதை முண்டுக்கொடுக்க (தமிழ்) மொழியை தூக்கி பிடிக்கிறார் என்று தெரியவில்லை.. இங்கே உள்ள அனைவருக்கும் தாய்மொழிப்பற்று (தமிழ்) உண்டு. ஆனால் வெறி = மதம் இருக்க கூடாது என்பதை புரியாமலா இருப்பார்..

    திராவிட வரலாற்றில் ஆட்சி செய்த மன்னர்கள், அவர்களை நக்கி பிழைத்த புலவர்கள் மற்றும் மதவாதிகள் மொழியை அவர்கள் தேவைக்குதான் பயன்படுத்தினார்களே தவிர சமகால மக்களுக்கும் எதிர் கால தலைமுறைக்கும் (மொழியால்) எதுவும் செய்யவில்லை என்பதே உண்மை.

    ஏனெனில் ஒரு உலக பழமையான மொழியை, அரபிக், லத்தின், சைனீஸ் வரிசையில் சேர்க்காமல், இந்திய (உருப்படாத) பண்பாட்டு கழகத்தின் கீழ் செம்மொழி அங்கிகாரம் கொடுத்துள்ளது. தமிழோட சமஸ்கிருத கலப்பினால் உண்டான தெலுங்கு, கன்னடத்துக்கும் இப்போது செம்மொழி அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்குத்தான் என்ன நன்மை கிடைத்தது ஒன்றுமே இல்லை வெறும் வெறுப்பு அரசியலே உருவானது..

    தமிழ் தேசியம் என்று ஒன்றை எதிகாலத்தில் நாம் உருவாக்கினால் அதன் தந்தை (வழிகாட்டி) தந்தை பெரியாரே என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை..மனிதனை மனிதனாக பார்க்க சொன்னவரை உங்களால் ஏன் ஏற்க முடியவில்லை என்றால் உள்குத்து ஒன்றே ஒன்று சைவம் அல்லது ஜாதிகூறுகள் (உங்கள் மனம் புண்பட்டால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்)..

    ***அப்புறம் விஜயகோபால்சாமி குறித்து நீங்கள் கொடுத்த தனி மனித தாக்குதல்கள் கண்டிக்கதக்கது***

    தோழமையுடன்

    முகமது பாருக்

  4. டாக்டர் பாண்டியன்,
    நீங்கள் நிறைய உணர்ச்சி வசப்படுகறீர்கள். உங்கள் விளக்கங்கள், உங்களை மேலும் குழப்பமானவராக, விசயங்களை மேலோட்டமாக புரிந்து கொள்பவராக அடையளாப்படுத்துகிறது.

    நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் எழுதுகிறீ்ர்கள் என்று கேட்டால், நீ ஏன் முருகன் என்று கடவுள் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள், இரண்டும் ஒன்றா?

    சரி ஒரு கடவுள் நம்பிக்கையாளர் உங்களை கேட்கிறார் தமிழ்உணர்வாளராக இருக்கிற நீங்கள் ஏன் உங்கள் பெயரை Dr. V. Pandian என்று ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

    ///அடையளங்காட்டியதால் சிக்கல்களையும் சந்திப்பவன் நான். ஒரு உண்மையான போராளி! // என்று தற்புகழ்ச்சியில் மிதக்கிறீர்கள்.

    ஆனால் ஒரு முறை தோழர் வேந்தன், சாதிய உணர்வாளராக, தலித் மக்களின் எதரியாக, தேசியத்தை வலியுறு்த்திய முத்துராமலிங்கத் தேவரை பற்றி ஏன் விமர்ச்சிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு…. பதில் சொல்லமால் நழுவிய ஓடிய நீங்கள்தான்
    /// ஒரு உண்மையான போராளி! // என்று உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
    ஆனால் பெரியாரை கடுமையாக விமர்சிக்கிறீர்கள். இதுதான் பெரியார். அவரிடம் ஜனநாயகத் தன்மையும் அறிவு நாணயமும் இருந்ததால் அவரை உங்களால் விமரிச்சிக முடிகிறது.

    உங்களிடம் அறிவு நாணயம் இல்லாததாலும், சாதிய கண்ணோட்டம் இருப்பதாலும்தான் உங்களால் முத்துராமலிங்கத்தேவர் போன்ற சாதி வெறியர்களை, இந்திய தேசிய வெறியர்கைள கண்டிக்க முடியவில்லை.
    பெரியார் ஒன்றும் தவறாக சொல்லிவில்லை. உணர்ச்சவசப்படாமல் எதையும் அறிவு கொண்டு பார் என்றார். உங்களிடம் நாங்களும் அதைத்தான் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

  5. கவி அவர்களுக்கு நன்றி…
    கட்டுரை மிகவும் நன்றாக இருக்கு..
    கொஞ்சம் ஆழமாக படித்தல் நன்கு puriyum இந்த கட்டுரை…

    சாதி என்ற சொல் தமிழ் மொழியல் இல்லை.. இது ஏன் தமிழ் தேசம் பேசும் நண்பர்களுக்கு புரியவில்லை….

    உங்களுக்கு ஆரியன் வேண்டாம் ஆனால் அவங்க தந்த சாதி மட்டும் வேண்டுமா…?

    இது சாதிக்கு எதிரான கட்டுரை என்று புரிந்துகொளுங்க…

    பெரியார் சாதிக்கு எதிரான பல போராட்டங்களை மேற் கொண்டர் என்று பெரியார் இஸட் நண்பர்களுக்கு புரிய வேண்டும்..

  6. தோழர்களே!
    உங்களுக்கெல்லாம் எழுதி அலுத்துவிட்டது. தூங்குகின்றவனை எழுப்பமுடியும். பாசாங்கு செய்பவனை?

    தமிழ் ஒரு நீச பாஷை என்று அழைக்கப்பட்டது!

    இசையை உலகுக்கு அளித்த தமிழை, சென்னை கான சபைகளின் வௌியே நீறுத்திவிட்டு, தெலுங்கிலும், கன்னடத்திலும், மளையாளத்தில்ம், ஹிந்துஸ்தானியிலும் பாடி மகிழ்ந்தனர் வந்தேறிகள்.

    தமிழன் இளச்சவாயன். எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு பேசாமல் இருந்தால் தமிழன் நல்லவன். தமிழனின் தன்மானத்தை மீட்க நினைத்தால், நாங்கள் பாஸிசவாதிகள்!

    தற்போது தமிழன் ஆங்கில மோகத்தில் சிக்குண்டு தவிப்பதற்கு இவை காரணம். எனது தாய் மொழியைப் பேண எனக்கு உரிமை உண்டு. அதன் மேண்மைகளை எடுத்து விளக்கி, அதை வாழவைப்பது உங்களின் “பகுத்திறிவுக்கு” முரணாகப் பட்டால் அது எனது கவலையல்ல.

    உலகின் மூத்தமொழியை சாவுமணியடிக்கச் சொல்வது உங்களுக்கு ஞாயமாகப் பட்டால், அதில் எனக்கு உடன்பாடல்ல.

    அடச்சீ……

    யவனாவது ஒருவன் தமிழில் பேசுகிறானா? ஆங்கிலத்தைக் கலந்து பேசுவது உங்களுக்கு அசிங்கமாகப் படவில்லை? ஏன் இந்தப் பழக்கம்? தமிழனின் சுயமறியாதை குறைந்ததால் தானே! அதனால் அதன் பெருமைகளைப் பேசுவது, தமிழனது தன்மானத்தை மீட்கவே! அவனது மொழியின் அழகியலை, அறிவியலைச் சொல்லி தமிழனை பெருமைகொள்ள வைக்கிறோம். அது தமிழைக் காக்க!

    அதற்கு வந்தேறிகளின் அனுமதி தேவையில்லை.

    இந்த தளத்திற்கு வருபவர்கள் நேர்மையான, சிந்தனைக்காரர்களாக இருந்தால் என்னைப் புரிந்து கொள்வார்கள். அரைத்த மாவை அரைத்து கொண்டிருப்பவர்களிடம் பேசிப் பயனில்லை.

    சில காலம் கழித்து மீண்டும் வருகிறேன்! அதுவும் கவியின் கட்டுரை முடியும் வரை மட்டுமே!

  7. ///அரைத்த மாவை அரைத்து கொண்டிருப்பவர்களிடம் பேசிப் பயனில்லை.///

    டாக்டர் பாண்டியன் அருமையான சுயவிமர்சனம்.

  8. //NithiChellam (09:43:55) :

    ///அரைத்த மாவை அரைத்து கொண்டிருப்பவர்களிடம் பேசிப் பயனில்லை.///

    டாக்டர் பாண்டியன் அருமையான சுயவிமர்சனம்.//

    அருமையான பதில் தோழர் nithichellam அவர்களே..

    //உலகின் மூத்தமொழியை சாவுமணியடிக்கச் சொல்வது உங்களுக்கு ஞாயமாகப் பட்டால், அதில் எனக்கு உடன்பாடல்ல.

    அடச்சீ……//

    முனைவருக்கு இது போன்று எழுதுவது அழகல்ல.

    //தமிழ் ஒரு நீச பாஷை என்று அழைக்கப்பட்டது!//

    என்று சொன்ன பார்ப்பண கூட்டத்தை நோக்கி கேள்வி கேக்காதது ஏன்?… ஒன்று (பு) நூல் பாசம்.. இல்லை ஏற்கனவே சொன்ன ஜாதி என்னும் சாக்கடை..

    //யவனாவது ஒருவன் தமிழில் பேசுகிறானா? ஆங்கிலத்தைக் கலந்து பேசுவது உங்களுக்கு அசிங்கமாகப் படவில்லை? ஏன் இந்தப் பழக்கம்? தமிழனின் சுயமறியாதை குறைந்ததால் தானே! அதனால் அதன் பெருமைகளைப் பேசுவது, தமிழனது தன்மானத்தை மீட்கவே! அவனது மொழியின் அழகியலை, அறிவியலைச் சொல்லி தமிழனை பெருமைகொள்ள வைக்கிறோம். அது தமிழைக் காக்க!//

    அப்புறம் என்ன —— (மன்னிக்க), ஆங்கிலத்தில் பெயர் எழுதுகிறீர் தமிழ் வலைப்பக்கத்தில்.. இப்படி கேட்டால் ஏன் நீங்க சாமி பெயர் வைக்கிறீங்கன்னு மழுப்பல் வேற, இல்ல எதாவது பெயர் குறித்து விவாதத்தை திசை திருப்பிவிடுகிறீர்..நீங்கள் ஒரு தெளிந்த திரிபு வாதி (உதாரணம்: கருணாநிதி)

    //அதற்கு வந்தேறிகளின் அனுமதி தேவையில்லை. //

    யாரின் மேல் உங்களுக்கு வன்மம். மனிதர்களை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள் முனைவர் வே. பாண்டியரே..

    //இந்த தளத்திற்கு வருபவர்கள் நேர்மையான, சிந்தனைக்காரர்களாக இருந்தால் என்னைப் புரிந்து கொள்வார்கள்//

    இதற்கும் நீங்களே பதில் தருகிறீர்கள்

    //சில காலம் கழித்து மீண்டும் வருகிறேன்! அதுவும் கவியின் கட்டுரை முடியும் வரை மட்டுமே!//

    ஆக கவியின் கட்டுரை உங்களுக்கு மனரீதியில் தாக்கத்தை உண்டு செய்துள்ளது. அதுதான் உண்மையும் கூட வாழ்த்துக்கள் தோழர் கவி அவர்களே இந்த தமிழ் தேசியவாதியை மீண்டும் ஒருமுறை அம்பலபடுத்தியதற்கு வாழ்த்துகள்..

    முனைவர் வே. பாண்டியன் அவர்களுக்கு மனரீதியில் எதோ தடை உள்ளது அதை சரி செய்ய முயற்சி செய்யுங்கள் முனைவரே… அது அவமானமோ அசிங்கமோ அல்ல ஏனெனில் நீங்கள் முனைவரே புரிந்து கொள்ளுவீர்கள்..

    தோழமையுடன்

    முகமது பாருக்

    (பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைப்பவன்)

  9. திராவிடம் – திராவிடம் என்று பேசுபவர்கள் –

    ஒரே ஒரு தெலுங்கரையாவது, கன்னடியரையாவது, மலையாளியையாவது – தமிழ் தான் எங்கள் தாய்மொழி நாம் எல்லாரும் ஒரே இனத்தவர் தான் என்று கூறச்செய்யுங்கள் பார்ப்போம்.

    திராவிடம் – ஆரியம் என்பது எல்லாம் சரித்திரம் !

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய சரித்திரம் !!

    இன்றைய தினத்தில் எது நடைமுறை சாத்தியம் என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

    தனித்தனி நாடுக்ளாக இருந்த நிலங்களை – அதில் வாழும் மக்களை – ஒன்றிணைத்து – ஒரே நாடக்கி நானூறு வருடங்களாக ஒரு குடைக்குள் – ஒரு நிர்வாகத்திற்குள் கொண்டு வந்த ஆங்கிலேயர் – நம்மை அழைத்தது – உணற வைத்தது ‘இந்தியன்’ என்று !!

    சுதந்திரம் பெற்ற பிறகு – மொழி வழி மாநில அரசுகள் அரசியல் சட்டம் மூலமாக உருவாகி – இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னர் – நாம் இயற்கையாக நம்மை உணர்வது – முதலில் தமிழன் என்றும் பிறகு இந்தியன் என்றும் மட்டும் தான். (சிலர் முதலில் இந்தியன் என்றும் பிறகு தமிழன் என்றும் கூறலாம் ). சத்தியமாக திராவிடன் என்கிற உணர்வு மிகப்பெரும்பாலான மக்களுக்கு ஏற்படுவது இல்லை. திராவிட இயக்கத்தில் ஊறி வளர்ந்த வெகு சிலர் மட்டுமே இன்றும் திராவிடன் – ஆரியன் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் !!

    நடைமுறை சாத்தியம் இல்லாத திராவிடர் பற்றிய பேச்சை விட்டு விட்டு – தமிழைத் தாய்மொழியாக கொண்டுள்ள அனைவரும் தமிழர்க்ள் என்கிற – இன்றைய தேதிக்கு பொருத்தமான – ஒரு நிலையை ஏற்பதே பொருத்தமாக இருக்கும்.

    காவிரியில் கன்னடத்தாரும், பாலாற்றில் தெலுஙக்ரும், பெரியாரில் மலையாளத்தாரும் படுத்தும் பாட்டை பார்த்தபின்பும் – தமிழர்கள் பெரும் துன்பத்திற்கும் அவதிக்கும் உள்ளாகி இருக்கும் இந்த நேரத்திலும் இன்னும் திராவிட உணர்வைப் பற்றி பெருமையாக பேசுபவர்க்ளை மக்களே வெறுத்து ஒதுக்கக்கூடிய நிலையில் இன்று இருக்கிறோம்.

    -விருப்பு வெருப்பு இன்றி – இதை ஒரு கணம் யோசித்துப்பார்த்தால் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் !!!

    -காவிரிமைந்தன் (vimarisanam.wordpress.com)

  10. காவிரியில் கன்னடத்தாரும், பாலாற்றில் தெலுஙக்ரும், பெரியாரில் மலையாளத்தாரும் படுத்தும் பாட்டை பார்த்தபின்பும் – தமிழர்கள் பெரும் துன்பத்திற்கும் அவதிக்கும் உள்ளாகி இருக்கும் இந்த நேரத்திலும் இன்னும் திராவிட உணர்வைப் பற்றி பெருமையாக பேசுபவர்க்ளை மக்களே வெறுத்து ஒதுக்கக்கூடிய நிலையில் இன்று இருக்கிறோம்.

    -விருப்பு வெருப்பு இன்றி – இதை ஒரு கணம் யோசித்துப்பார்த்தால் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் !!! //

    தமிழனில் ஆதிக்க சாதி தமிழன் தாழ்த்தப்பட்ட மக்களை சாதிய வன்கொடுமைகளால் படுத்தும் பாட்டை பார்த்தபின்பும் – தமிழ் மக்களிலே ஒரு பிரிவினர் மாத்திரம் பெரும் துன்பத்திற்கும் அவதிக்கும் உள்ளாகி இருக்கும் இந்த நேரத்திலும் இன்னும் தமிழின உணர்வை பற்றி பெருமையாக பேசுபவர்களை, ஒடுக்கபட்ட மக்களே வெறுத்து ஒதுக்கக்கூடிய நிலையில் இன்று இருக்கிறோம்.

    -விருப்பு வெருப்பு இன்றி – இதை ஒரு கணம் யோசித்துப்பார்த்தால் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் !!!

    ஒப்பு கொள்வீரா காவிரிமைந்தனே??

  11. வருணாசிரமத்துக்கும் தமிழர்களின் சாதிமுறைக்கும் தொடர்பு கிடையாது, தமிழர்களின் சாதிப்பிரிவுகள் தமிழர்களுடையதே
    தமிழர்களின் சாதிப்பிரிவுகளின் அடிப்படை பற்றிய தவறான கருத்து தமிழர்களிடையே நிலவி வருகிறது. தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளின் அடிப்படை ஆரிய வர்ணாசிரமமே ( பிராமண, ஸத்திரிய, வைஸ்ய, சூத்திர) என்ற கருத்து தவறானதென்கின்றனர் பல அறிஞர்கள், அதில் குறிப்பாகத் தமிழறிஞரும், சமக்கிருதம் உட்பட பல இந்தியமொழிகளில் புலமை வாய்ந்தவருமாகிய பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் தன்னுடைய The Four Hundred Songs of War and Wisdom” என்ற புறநானூற்றுப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலிலும், திரு.பார்த்தசாரதி அவர்கள் The Tales of An Anklet’ என்ற நூலிலும், கலாநிதி. N.சுப்பிரமணியம் அவரது ‘The Tamils’ என்ற நூலிலும் அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

    தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளை உருவாக்கியவர்கள் தமிழர்களே, தமிழர்களின் சாதி முறைகளும், சாதிப்பெயர்களும் பார்ப்பன வருணாசிரமத்துக்குப் பெருமளவு வேறுபட்டவை என நிரூபிக்கின்றனர் அறிஞர்கள்.

    வருணாசிரமச் சாதிப்பாகுபாட்டிலுள்ளது பிரமிட் போன்ற மேலாதிக்கத் தன்மை தமிழர்களின் சாதிப்பிரிவுகளில் கிடையாது, அத்துடன் சாதியடிப்படையிலான வெறுப்பும் தமிழ்ச்சாதிப் பிரிவுகளுக்கிடையில் கிடையாது. ஆனால் அதன் கருத்து, தமிழ்ச்சாதிகளுக்கிடையில் சமத்துவமின்மை கிடையாது என்பதல்ல.

    தமிழர்களின் சாதிமுறைக்கு அடிப்படை பார்ப்பனர்களின் வருணாசிரமல்ல, நிலவுரிமை அடிப்படையிலான ஆண்டான் – அடிமை வழக்கமே தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளுக்கு அடிப்படையாகும். தமிழ்மண்ணில் நிலவுரிமையுடன், நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த தமிழ் மக்கள் குழுக்கள் பல “வெள்ளாளர்” என்ற பொதுவான பெயருடன் அரசியல், பொருளாதார வலிமையையும் , ஆதிக்கத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.

    தமிழர்களின் சாதிப்பாகுபாட்டுக்கு அடிப்படை எதுவாக இருந்தாலும், இந்த சாதிமுறைகள் தமிழ்ச்சமுதாயத்தைப் பிளவடையச் செய்து, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. நாம் தமிழர் என்ற அடையாளத்தை மட்டும் தமது ஓரே அடையாளமாகத் தமிழர்களை நினைக்க ஊக்குவிப்பதும், அந்த நோக்கத்தையடைய உழைப்பது மட்டுமே தமிழர்களுக்கிடையேயுள்ள சாதியடிப்படையிலான வேறுபாடுகளைக் களைந்து, நாளடைவில் சாதியற்ற தமிழ்ச்சமுதாயம் உருவாக வழிவகுக்கும்.

    பல அறிஞர்களின் கருத்துப்படி தமிழர்களின் சாதிப்பாகுபாட்டை உருவாக்கியது தமிழர்களே அப்படியானால் பார்ப்பனர்களுக்கும், தமிழர்களின் சாதி முறைக்கும் தொடர்பு கிடையாது. பார்ப்பன வருணாசிரமத்துக்கும் தமிழ்ச்சாதிகளுக்கும் தொடர்பில்லை என்றால் அந்தணர்கள், பெருமானார்கள் எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் படுவதெல்லாம் தமிழர்களையே தவிர, வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனர்களையல்ல என்பது தெளிவாகிறதல்லவா?
    தமிழர்களை ஆரியமயமாக்குதல் (Sanskritization) பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. இக்களத்தில் கூட, தமிழ்ச்சாதியையும், வேறு மாநிலங்களில் உள்ள தமிழரல்லாத சாதிக்குழுக்களில் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட சாதிக்குழுவினரையும் ஒன்றாக்கித், தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிப்பதன் மூலம் தமிழர்களின் தனித்துவத்தைக் குலைக்கச் சிலர் முயன்றதை நாம் அறிவோம்.

    உதாரணமாக, கலப்பில்லாத தமிழ்ச்சாதியும், சிலப்பதிகாரத்துக்கும், காவிரிப்பூம் பட்டினத்தின் காலத்துக்கு முன்பிருந்தும் தம்முடைய தமிழ் வேர்களை அடையாளம் காணும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைத் தெலுங்குச் செட்டி என்ற சாதியுடன் இணைத்து, தமிழர்களைப் பிரித்துத் தமிழர்களை ஒரு தனித்துவமில்லாத, கலப்பினமாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் கறுப்பின மக்களின், இரண்டும் கெட்டான் நிலைக்குக் கொண்டு வருவதற்குச் சிலர் முனைந்ததைப் பலரும் அறிவர்.

    இப்படி எல்லாத் தமிழ்க்குழுக்களுக்கும், சாதியைத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்திய ஆரியர்களும் அவர்களின் வாலாயங்களாகிய தமிழெதிரிப் பார்ப்பனர்களும், தமிழர்களை ஆரியமயமாக்கல் மூலம் அதாவது, புராணத்துப் புனைகதைகளை தமிழர்களிடையே இன்றுள்ள பல சாதிப்பிரிவுகளுக்கும் இணைத்து, தமிழர்களைப் பிரித்தனர் ஆனால் அவர்களை விட மோசமாக அந்தப்புனைகதைகளை இன்றும் தாங்கிப்பிடித்துக் கொண்டு, தமக்கும் சத்திரியர் என்ற வருணப் பிரிவுக்கும் ஏதோ தொடர்பிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, தமிழர்களே தமிழர்களைத் தாழ்த்தும் கொடுமையை வன்னியர்கள் மட்டுமல்ல தமிழர்களின் பல சாதிக்குழுவினர்களும் செய்வது தான் தமிழினத்தின் சாபக்கேடு

    அண்மைக் காலம் வரையில் தமிழர்களில் எல்லாச்சாதியினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் சாதிக்கு ஆரியச் சாயம் பூசுவதற்கும், ஆரிய வேர் கண்டு பிடித்து, ஒரு புராணக்கதையை அதனுடன் இணைத்து விட்டுத் தம்மை உயர்வாகவும் காட்டுவதற்கு ஆளுக்காள் முந்திக் கொண்டார்கள், ஏனென்றால் ஆரியத் தொடர்பு உயர்ந்ததாகப் பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டது.

    இவ்வாறு இடையில் வந்த பச்சைப் புளுகுக் கதை தான், உண்மையில் சுத்தத் தமிழர்களான, மலையாளிகளும் அவர்களின் பரசுராம கோத்திரத்தில் வந்ததாகக் கூறப்படும் குப்பைக்கதையும், தமிழர்களைப் பிரித்தாளுவதற்காக நம்பூதிரிப் பார்ப்பான்கள், சேர நாட்டுத் தமிழர்களின் காதில் சுற்றிய பூத் தான் இந்தப் பரசுராம கோத்திரக் கதை.

    என்ன தான், தனிப்பட்ட முறையில் நான் பிராமணர்களைத் தாக்கக் கூடாது என்று நினைத்தாலும், தமிழர்களின் சரித்திரத்தை நாம் உற்று நோக்கும் போது பாரதியார் போன்ற சில தமிழ்ப்பற்றுள்ள பிராமணர்கள் இருந்தாலும், பெரும்பாலான பிராமணர்கள், தமிழினத்தின் முதுகில் குத்தியுள்ளார்கள் என்பதை அறியலாம், எம்முடைய இன்றைய பிராமண நண்பர்கள் விரும்பாது விட்டாலும், உண்மையை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், இன்று இஸ்ரேலும், ஜேர்மனியும் நட்பு நாடுகள், அதற்காக, ஹிட்லரையும், ஆறு மில்லியன் யூதர்களின் இறப்பையும் யூதர்கள் யாரும் மறந்து விடுவதில்லை, அது போல் தான் இதுவும்.

    இந்த தமிழ்ச்சாதியினரை அல்லது தமிழர்களின் தொழில் அடிப்படையிலான, கிராமக் குழுக்களை ஆரியமயமாக்கும் முயற்சியின் முதல் படி தான், மனுசாத்திரத்தைப் பாவித்து, தமிழர்களை வடமொழிப் பெயர் கொண்ட, சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்தது, இதே பிரிவினையைத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், வேறு மாநிலத் திராவிடர்களிடமும் செய்ததால், ஒரே மாதிரியான சாதிப்பெயர்கள், பல மொழி மக்களிடம் பாவனைக்கு வந்தன.

    அந்த அடிப்படையில், உதாரணமாக், தமிழ்நாட்டுத் தமிழர்களான வெள்ளாளரும், பறையரும் ஆளுக்காள் பகைத்துக் கொண்டு, வேற்று மொழி, வேற்று மாநில அதே சாதிப்பெயர் கொண்ட மக்களிடம் நெருங்கிய தொடர்பிருப்பதாக உணர்ந்தார்கள் என்பதை விடத் திட்டமிட்ட ஆரியமயமாக்கலாலும், புராணக்கதைகளாலும் உணர வைக்கப்பட்டார்கள். அதனால் தான் தமிழர்களான வன்னியர்கள் தம்மைச் சத்திரியர்களென்று சொல்லிக் கொண்டு, மகாபாரதத்துப் புளுகுகளுடன் தம்மை இணைத்துக் கொண்டு தாம் சத்திரியர்கள் என்று பொய்யான பெருமையளக்கிறார்கள். இப்படிச் செய்வதால், தம்முடைய தனித்துவமான, தமிழ்ப்பண்பாட்டை இழந்து, ஒரு கலப்புச் சாதியாகத் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

    இதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் தாழ்வு மனப்பான்மையும், யாராவது கலப்பில்லாத தமிழாக, தமிழராக இருந்தால் குறைவானவர்கள், தமிழர்கள் என்றால் கூலிகள் என்ற நிலை ஏற்பட்டதாலும் தான், சோழர்களின் வீழ்ச்சியின் பின்பு, தமிழர்கள் தமது படைப்பலத்தை இழந்ததால், தமிழ்நாட்டை ஆண்ட தமிழரல்லாத பிற மாநிலத்தினரால், தமிழினம் சிறுமைப் படுத்தப் பட்டது, சொந்தமண்ணில் அதிகாரத்தை இழந்து கூலிகளாக்கப் பட்டனர். இன்று கூடத் திராவிடர்கள் என்றால், பெரும்பாலும் அது தமிழர்களைத் தான் குறிக்கும், தமிழர்கள் என்றால் பல வடநாட்டவரின் மனதில் கூலிகள் என்ற நினைப்பு.

    ஒவ்வொரு தமிழ்ச்சாதிப் பிரிவும், ஆரியமயமாக்கப் பட்டது. தமிழர்களும் ஆரியத் தொடர்பையும், அதனுடன் சம்பந்தப்பட்ட புளுகு மூட்டைப் புராணக்கதைகளையும், அதன் மூலம் தமக்கு மற்றவர்களை விடச் சிறப்பு வந்ததாக நினைந்து, அவற்றை உண்மையாக நம்பியதும் தான், தமிழ்மண்ணுக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்களால் தமிழர்களைப் பிரித்தாள முடிந்தது மட்டுமல்ல, அன்னியப் படையெடுப்புகளின் போது, அவர்களுக்கு உளவு பார்த்துத் தமிழரசர்களைக் கவிழ்க்கவும் முடிந்தது.

    உதாரணமாக, வெள்ளாளர் அல்லது வேளாளர் கலப்பில்லாத தமிழ்ச்சாதி, வேளாண்மை – அதாவது விவசாயம் செய்பவர்கள் அல்லது நிலவுடமைக்காரர், இலங்கையில் இன்றும் வெள்ளாளர்கள் நிலச் சொந்தக்காரர்கள். வெள்ளாளர்- வெள்ளம் – தண்ணீர்- அதாவது குளங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விவசாயிகள். இப்படியான தமிழ்ச்சாதியான வெள்ளாளர்களுக்கும், ஆரியப் புராணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.

    இந்த பொய்யான ஆரியத்தொடர்பில் இருந்த மாயையில் தான் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்கள் கூடத் தம்முடைய பட்டப் பெயராக ஆரியச் சக்கரவர்த்திகள் என்று வைத்துக் கொண்டார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் பாண்டிய நாட்டுத் தமிழர்கள்.

    இத் தமிழர்களை ஆரியமயமாக்கலும்,( Sanskritization process) தமிழர்களின் ஆரிய மோகமும், ஏதாவது புராணத்தை தமது தமிழ்ச்சாதிக்கு இணைத்து வீரம் பேசுவது தொடரும் வரை தமிழினம் உருப்படாது, சாதிப்பிரிவே தமிழர்களின் சாபக்கேடு அதற்கும் புராணக்கதையை இயற்றி, நான் உயர்ந்தவன் என்னுடைய வேர்கள் மகாபாரத்ததில் பாண்டவ்ர்களிடம் இருந்து வந்தது அல்லது வடக்கிலிருந்து வந்த முனிவரிலிருந்து வந்தது என்று கதை விட்டு, நாங்கள் தமிழர்கள் வெறும் கலப்பினம் தான், எங்களிடம் எந்த விதமான தனித்துவமும் கிடையாது , நாங்கள், பண்பாட்டையும் நாகரீகத்தையும் வடக்கில் இருந்து வந்த முனிவர்களிடமும், வட மொழியிலிருந்தும் பெற்றுக் கொண்டோம் என்று தமிழெதிரிகள் வெளிப்படையாகச் சொல்வதையும்,வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல், ஜால்ரா போடுவதையும் நாம் தமிழர்களும் ஏற்றுக்கொள்வதாகி விடுகிறது என்பதை விடக் கேவலம் வேறெதுவும் கிடையாது.

  12. யார் ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தமிழா
    தம்மை ஆரியர்கள் எனவும், சமக்கிருதம் தமது மொழி எனவும் ஆரியசமாஜங்கள், ஆரிய கழகங்கள் எல்லாம் அமைத்துக் கொண்டு தம்மை உயர்ந்த ஆரியர்கள் எனவும் பீற்றிக் கொள்ளும் பார்ப்பனர்கள், தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள இணையத்தளங்களில் உலாவும் போது மட்டும் தமிழ் என்ற போர்வையைப் போர்த்துக் கொண்டு, ஆரியப்படையெடுப்பு உண்மையில்லை, அதற்கான ஆதாரமெதுவுமில்லையென்றும் கூட பதிவுகள் செய்வதைப் பார்க்கும் போது அவர்களின் பச்சோந்தித் தனம் மட்டுமல்ல, கூழுக்கும் ஆசை அதேவேளையில் மீசைக்கும் ஆசைப்படும் அவர்களைப் பார்க்க அடக்க முடியாத சிரிப்புத் தான் வருகிறது.

    அந்தளவுடன் நிறுத்தி விடுகிறார்களா?, இல்லை. ஆரியப் படையெடுப்பு என்பது கிடையாது ஆனால் நாங்கள் ஆரியர்கள், நாங்கள் எங்கிருந்தும் வரவில்லை, இந்தியாவைச் சேர்ந்தவ்ர்கள் தான் ஆனால் ஆரியர்களாகிய எங்களிடமிருந்து தான் தமிழர்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார்கள் கற்றுக் கொண்டார்கள் என்பதை நிரூபிப்பதில் அவர்களுக்கு அதிகப் பிரியம். அதனால் ஈழத்தமிழர்களையும் இளிச்ச வாயர்களாக நினைத்துக் கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தமது ஆரிய பிராமண மேலாதிக்கத்தை, அறிமுகமேயில்லாதவர்களின் கட்டுரைகளினாலும், இணைப்புக்களின் மூலமும் ‘நிரூபிக்கப்’ பாடுபடும், பல பார்ப்பனப் பரதேசிகள் தமிழர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு தமிழர்களுக்குக் குழிபறிக்கும் போது, தமிழர்களுக்கு விடிவு காலமேற்படுமா?

    தமிழினம் இன்று சிங்களவர்களால் படும் நெருக்கடியை விட, தமிழர்களுடன் வாழ்ந்து கொண்டே, தமிழர்களுக்கு எதிராக இயங்கும் பார்ப்பனர்களின் நெருக்கடி பாரிய எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தான் உண்மை. சிங்களவர்களின் நேரடி எதிர்ப்பை முகம் கொள்வதை விட, பார்ப்பனர்களின் மறைமுகமான எதிர்ப்பை எதிர்கொள்வது தமிழினத்துக்கு என்றும் சவாலாகவே இருந்து வந்துள்ளது.

    உதாரணமாக, தமிழ்நாட்டு உறுப்பினர்கள் யாவரும் கட்சி வேறுபாடின்றி இலங்கை சனாதிபதியைச் சந்திக்க மறுத்து ஈழத்தமிழர்களுக்காக தமது சகோதரத்துவத்தைக் காட்டிய போது, தமிழர்களின் முகத்திலறைந்து விட்டு, இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தது மட்டுமல்ல, தனது வீட்டுக்கும் அழைத்து விருந்து வைத்தது யார்? வேறு யாருமல்ல, அதுவும் தமிழ் பேசும் பார்ப்பான் தான்.

    ஈழத்தமிழினம் படுகொலை செய்யப்படும் போது, ஈழத்தமிழினம் அழிக்கப்படும் போது அதற்குத் துணைபோய், இலங்கை அரசுடன், இந்திய அரசுக்குத் தெரியாமலே பாதுகாப்புக்குழு அமைத்துத் தமிழர்களை அழிக்கச் சதி செய்வது வேறு யாருமல்ல, அதுவும் ஒரு பார்ப்பான் தான்.

    ஈழவிடுதலையைக் கொச்சைப் படுத்தி, பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதிச் சிங்களவர்களுக்கு ஆதரவாகப் பொய்ப்பிரச்சாரம் செய்பவர்களும் பார்ப்பனர்கள் தாம்.

    உண்மையிலேயே எப்படித்தான் தமிழைப் பேசித் தமிழால், தமிழர்களின் தயவில் வாழ்ந்தாலும் பெரும்பான்மையான பார்ப்பனர்கள் தம்மைத் தமிழர்களாகக் கருதுவதேயில்லை. இரண்டாயிரமாண்டுகளாகத் தமிழர்களுடன், தமிழர்களின் தயவில் வாழ்ந்து கொண்டே, அவர்களை ஆதரித்த, இன மக்களுக்கெதிராக இயங்கும், உலகின் முதலாவது மனிதக்குழு பார்ப்பனர்களாகத் தானிருக்க வேண்டும். வள்ளுவப் பெருந்தகையின் “வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு” என்ற வரிகளைத் தமிழர்கள் மறக்கவே கூடாது.

    பார்ப்பனர்களின் கருத்துப்படி அவர்கள் இன்று தமிழைப் பேசித் தமிழ்மண்ணில் வாழ்ந்தாலும் அவர்கள் ஆரியர்கள், சமஸ்கிருதம் அவர்களின் மொழி என்பதாகும், அவர்களின் முன்னோர்கள் ஆரியவர்த்தாவிலிருந்து தான் தமிழ்நாட்டுக்கு வந்ததாகத் தான் பார்ப்பனத் தலைவர்கள் மட்டுமல்ல, அவர்களின் இணையத்தளங்களும், மனுச்மிருதியும் கூறுகின்றன். அதனால் தான் ஈழத்தமிழர்களின் நாடித்துடிப்பாக இருந்த இந்த இணையத் தளத்திலேயே “ஆரிய” பார்ப்பனர்கள் நாசூக்காக தமது ஆரிய மேலாதிக்கத்தையும், சங்கத்தமிழில் கூட ஆரியர்களைப் பற்றிக் கூறப்பட்ட்டுள்ளது என ஆரம்பித்து, சங்கத்தமிழ்ப் புலவர்கள் எல்லாம் ஆரியர்கள் தான் என நிரூபிக்கும் பணியில் இறங்கி விட்டார்கள் போலிருக்கிறது. சங்கத்தமிழில் ஆரியர்கள் என்ற சொல் குறிப்பிடப்படுகிறது, அதனால் வந்தேறி ஆரியர்களுக்கும் சங்கத்தமிழுக்கும் தொடர்பு என்றோ அல்லது ஆரியர்களிடமிருந்து தான் சங்கத்தமிழ்ப் பாடல்கள் உருவாகின என்றாகி விடுமா.

    தமிழர்களின் ஆரியக் கலப்பற்ற தனித்துவமான மொழி, கலாச்சார அடையாளங்களைக் குலைத்துக் கொச்சைப்படுத்தி, அவற்றைத் தமிழர்கள் இரவல் வாங்கியதாக அல்லது தமிழர்களின் தனித்துவமான இணையற்ற் மொழி, கலாச்சார, இலக்கியங்களில் ஆரியக்கலப்பிருப்பதாக இணைய்த்தளங்களில் ‘நிரூபிக்க’ பார்ப்பன பிரியர்கள் பலர் கிளம்பியிருப்பதை நாம் காணலாம். ஆனால் பார்ப்பனப் பிரியர்கள் என்னதான் இங்கு தமிழர்களுக்கும் ஆரியர்களுக்கும் தொடர்பு கற்பித்தாலும், தமிழர்களின் அறிவு, கலை, கட்டிட, தொழிநுட்பத்துக்குள் வந்தேறி ஆரியர்களையும் நுழைத்துப் பங்கு கேட்டுத் தமிழர்களையும், தமிழையும் தாழ்மைப்படுத்த முனைந்தாலும் தமிழர்கள் வந்தேறி ஆரியர்களை நம்மவர்களாகவே எப்பொழுதுமே ஏற்றுக் கொண்டதில்லை. வடக்கர்களை தம்மிலிருந்து விலக்கித் தான் வைத்திருந்திருக்கிறார்கள் என்பதற்குத் தமிழர்களின் வரலாற்றில் போதியளவு ஆதாரங்களுண்டு.

    கிறித்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டுத் சங்கத்தமிழ் நூலான அகநானூற்றில் ஒரு இளந்தமிழ்ப் பெண் கூறுகிறாளாம் ” எப்படிச் சோழர்கள் ஆரியர்களை வல்லத்தில் நொருக்கினார்களோ அப்படி என்னுடைய வளையல்களை நொருக்குகிறேன் பார்” என்று.(யாராவது தெரிந்தவர்கள் அந்தப் பாடலைத் தரவும்)

    அது மட்டுமல்ல, தமிழையும் தமிழ்ப்புலவர்களையும் பழித்தார்கள் என்பதற்காகப் படையெடுத்துப் போய் ஆரிய வடக்கர்களை கல் சுமக்கச் செய்து, தமிழ்த்தாய்க்குச் சிலையெடுத்ததும், கங்கை வரை படையெடுத்து, வடக்கர்களைக் கொன்று, வெற்றி வாகை சூடி, கங்கை கொண்ட சோழபுரம் அமைத்த வரலாறும், எமது முன்னோர்கள் ஆரியர்களை எதிரிகளாகத் தான் கருதினார்கள் என்பதற்காகச் சான்றாக எம்மிடமுண்டு.

    அதனால் தமிழெதிரிப் பார்ப்பனர்கள் என்ன தான் ஆரியக் கூத்தாடினாலும். ஏமாந்து போகாமல், அவர்களின் கோமாளிக் கூத்தை மட்டும் இரசித்து விட்டுக் காரியத்தில் கண்ணாக, விழிப்புடன் இருக்க வேண்டியது தான் உலகத்தமிழர்களின் கடமையாகும்

  13. தமிழை தாய்மொழியாக ஏற்றவர் அனைவரும் தமிழரே:

    தமிழனுக்கு தமிழ் மட்டும்தான் தாய்மொழியாக இருக்க வேண்டுமா?. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் இருக்கக்கூடாதா?. வேற்று மாநிலத்தவர் தமிழை தாய்மொழியாக ஏற்கக்கூடாதா?

    இன்றைய காலத்தில், வெறும் தமிழை மட்டும் வைத்துக் கொண்டு பிழைக்கமுடியுமா?. ஆங்கிலம் தெரியாவிட்டால் தமிழ்நாட்டில் கூட வேலை கிடைக்காது. அமெரிக்கா இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பல தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது. தமிழ் தெரியாததால், அவர்கள் தமிழரில்லை என சொல்லமுடியுமா?.

    அரபு நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான ஹிந்து தமிழர், அரபி மொழியை முஸ்லிம்களை விட சரளமாக பேசுகின்றனர். “யாதும் ஊரே யாவரும் கேளீர், சென்றுடுவீர் எட்டுத்திக்கும் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என வசதிக்கேற்றவாறு பேசிவிட்டு, தமிழ்ச்சாதி இருப்பவனே தமிழன் என புத்தியை காட்டினால், அது வடிகட்டின அயோக்கியத்தனமல்லவா?.

    குடிக்க தண்ணீர் கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலிருந்து வரவேண்டும். பிழைக்க அரேபியா அமெரிக்கா ஓட வேண்டும். குழந்தைகள் கான்வென்டில் படித்து, அழகாக இங்லீஷ் பேச வேண்டும். அப்புறமென்ன தமிழ்நாடு தமிழ்ஜாதிக்கே வாழுது?.

    தமிழன் அண்டை மாநில, வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்தால், அவர்களுடைய குழந்தைகள் தமிழரில்லையா?. தமிழுக்கு உயிர் தந்தவர் தெலுங்கர் கருணாநிதியென்றால் மிகையாகாது. இயல், இசை, நாடகம், சினிமா மூலம் ஜெயலலிதா, சரோஜாதேவி, எம்.ஜி.ஆர், நாகேஷ் போன்ற எண்ணற்ற அண்டை மாநில கலைஞர்கள் தமிழை வாழ வைத்துள்ளனர்.

    ஆயிரக்கணக்கான இனிய தமிழ் பாடல்களை பாடி, தமிழரின் மனதை கொள்ளை கொண்ட பி.சுசிலா கேரளத்துக்காரர். தமிழனுக்கு தமிழ் கற்றுத்தந்த இவர்களையெல்லாம் தமிழரில்லை என்று சொன்னால், அது வடிகட்டின மோசடியல்லவா?.

    கருப்பன் திராவிடன், வெள்ளையனும் பொன்னிற மேனிக்காரரும் ஆரியர் என்பது மரபணு ஆரய்ச்சியால் நிரூபிக்கப்பட்டு விட்டது. தமிழன் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த கருப்பு திராவிட இனத்தை சார்ந்தவன் என மரபணு ஆராய்ச்சி சொல்கிறது. பெரும்பாலான திராவிடர் தென்னிந்தியாவில் வாழ்கின்றனர். ஆகையால்தான் தந்தை பெரியார் தென்னிந்தியாவை திராவிட நாடு என அழைத்தார்.

    ஜனநாயக ஆட்சியில், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. “அய்யோ என்னோட அப்பனும் ஆத்தாளும் மறத்தமிழனுக.. நாங்க குடிசைல வாழறோம்… தெலுங்கனும் மார்வாடியும் பங்களால இருக்கானுக.. கன்னடத்து பாப்பாத்தி நாட்ட ஆள்றா” என சீமான் போல் கேனத்தனமாக மாரடித்தால், தெரு நாய் கூட சீந்தாது. தெம்பிருந்தால், ஜனநாயக முறையில் ஆட்சியைப்பிடி. முதலில், பாப்பாத்தியின் காலை தொட்டுக்கும்பிடும் உன்னுடைய அடிமை ஜாதியை மண்டையில் தட்டி மானம் மரியாதையுடன் தலை நிமிர்ந்து நிற்கச்சொல்.

    உன்னுடைய பாட்டன் முருகப்பெருந்தையும், முப்பாட்டன் ராஜராஜ சோழனும் தொப்புள்கொடி உறவுகளும் பத்து பைசா கூட உனக்கு இலவசமாக தரவில்லை. புலித்தேவனிடம் போனால் புலிப்பாலை கொண்டு வர சொல்வான்…..

    ஆக “தமிழன் யார்” எனும் கேள்விக்கு “தமிழை தாய்மொழியாக ஏற்றவர் அனைவரும் தமிழரே” என்பதே சிறந்த தீர்வு. இதன் மூலம் தமிழ் பரவும். அண்டை மாநிலங்களனைத்தும் மீண்டும் மெட்ராஸ் ப்ரசிடென்ஸியில்(Madras Presidency) இணைந்துவிடும். நமது தண்ணீர் பிரச்னையும் தீர்ந்துவிடும்……

    கூடிய சீக்கிரம் சீமான் தனது ஜாதி அடிப்படையிலான “நாம் தமிழர்” கட்சியின் கொள்கையை கைவிடாவிட்டால், அட்ரஸ் இல்லாமல் போய்விடுவார்…..

  14. தமிழ்த்தேசியம் ஒரு வடிகட்டின தேவ்டியாத்தனம்:

    சீமான்: “தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்றொரு தனி நாடில்லை. சங்கே முழங்கு சங்கே முழங்கு. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”…. அய்யா வணக்கம்.

    ஜின்னா: அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.

    சீமான்: அய்யா, நான் தமிழில் வணக்கம்னு அழகா சொல்றேன். நீங்க சலாமலைக்கும்னு அரபில சொல்றீங்க. வணக்கம்னு சொல்ல மாட்டீங்களா?.

    ஜின்னா: முடியாதுங்க.. அது எங்க மத நம்பிக்கைக்கு எதிரானது. “ஏக இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்க மாட்டோம்” என அல்லாஹ்வுக்கு நாங்கள் ஷஹாதா எனும் உறுதி மொழி தந்துள்ளோம். ஆகையால் அவனுடைய படைப்புக்களை வணங்க மாட்டோம். தந்தை பெரியாரும் தனது வாழ்நாளில் யாரையும் கையெடுத்து கும்பிட்டதுமில்லை, வணக்கம் சொன்னதுமில்லை.

    சீமான்: ஓ… அப்படீங்களா… இது எங்க தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது.

    ஜின்னா: அப்படின்னா, தமிழர் பண்பாட்டை முழுமையாக பின்பற்றும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தமிழரா?.

    சீமான்: அப்படியில்லை.. எனது பாட்டன் முப்பாட்டன் ராஜ ராஜ சோழன், முருகப்பெருந்தகை, கரிகால் வளவன், அய்யா வ.உ.சி, அய்யா புலித்தேவன் ஆகியோரின் வம்சாவழியில் வந்தவரெல்லாம் தமிழரே… தமிழகத்தில் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் ஆளும் உரிமை தமிழனுக்கே…

    ஜின்னா: ஒரிஜினல் தமிழன் யாருனு எப்படி கண்டுபிடிப்பீங்க?.

    சீமான்: தமிழ் ஜாதிய வச்சுத்தாங்க கண்டுபிடிக்கனும்…

    ஜின்னா: எது தமிழ்ச்சாதினு எப்படி உங்களுக்கு தெரியும்?.

    சீமான்: ஜாதிப்பெயர் தமிழ் பெயரா இருக்கனுங்க.. இல்லாவிட்டால், அது தமிழ்ச்சாதி கிடையாதுங்க… அவர்களுக்கு வாழும் உரிமையுண்டு, ஆளும் உரிமை கிடையாது.

    ஜின்னா: அது சரி… முஸ்லிம்களிடம் ஜாதியே இல்லீங்களே… இஸ்லாத்தை தழுவியதும் ஜாதியை உதறித்தள்ளி விட்டோம்.. அப்ப எங்களுக்கு ஆளும் உரிமை கிடையாதா?

    சீமான்: ஜாதிய உட்டது ஒங்க தப்புங்க .. கிருத்துவர் மாதிரி, மதம் மாறினாலும் ஜாதிய உடாம பத்திரமா காப்பாத்தியிருக்கனும் .. என்ன மாதிரி… நான் செபாஸ்டியன் சீமான். கிருத்துவ நாடார்… உங்களுடைய மத நம்பிக்கையால் ஆளும் உரிமையை இழந்துவிட்டீர்…

    ஜின்னா: பெரியாரிஸ்ட் அம்பேத்கரிஸ்டெல்லாம் ஜாதியை எதிர்க்கின்றனர். ஜாதி ஒழிகனு சொல்றாங்க … இவர்களுக்கு ஆளும் உரிமையுண்டா?.

    சீமான்: அதெல்லாம் சுத்த புருடாங்க… எந்த பெரியாரிஸ்ட் அம்பேத்கரிஸ்டாவது முஸ்லிம்க மாதிரி ஜாதிய உட்டாங்களா?… தலித்துக்கு பொன்னு கொடுத்தாங்களா?… அவுங்க ஜாதி மேல கைய வச்சா அருவாள்தான் பேசும்… தமிழ்ச்சாதி இருக்கும் அனைவருக்கும் ஆளும் உரிமையுண்டு.

    ஜின்னா: அப்படியானால், முஸ்லிம்களுக்கும் தமிழ்ச்சாதியில்லாத வெளிமாநிலத்தவருக்கும் ஓட்டுரிமை இருக்குங்களா?.

    சீமான்: அது இருக்குங்க… தங்களை ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்குண்டு…

    ஜின்னா: அப்ப ஜாதி அடிப்படையில் தேர்தல் நடத்தினால், மெஜாரிட்டி தலித் ஜாதிதான். முஸ்லிம் ஓட்டெல்லாம் தலித்துக்குத்தான் போகும். ஆகையால் தலித்துக்குத்தான் சி.எம், நிதியமைச்சர் போன்ற பெரிய பதவிகளனைத்தும் கிடைக்கும். தேவர், வன்னியர், நாடார், முதலியாருக்கெல்லாம் பெரிய பதவி கிடைக்காதுங்க… ஒரு பத்து வருடத்தில், நீங்க கீழ்ச்சாதி ஆயிடுவீங்க…. அவுக மேல்சாதி ஆயிடுவாங்க… இது 15 சதவீத மேல்ஜாதிக்கு ஆபத்தில்லையா?

    சீமான்: அது எந்த ஜென்மத்திலும் நடக்காதுங்க…

    ஜின்னா: எப்படி சொல்றீங்க?

    சீமான்: அவுக வாய்ல பீய திணிப்போம்… தண்டவாளத்துல வெட்டி எறிவோம்.. வீட்ட கொளுத்துவோம்… ஆயிரக்கணக்கான வருஷமா அப்படித்தாங்க அடக்கி வச்சிருக்கோம்….

    ஜின்னா: அவுக ஒட்டுமொத்தமா இஸ்லாத்த தழுவுனா என்ன செய்வீங்க?. எங்கள வாழவிடாம செஞ்சா, எங்களுக்கு ஆதரவா பாக்கிஸ்தான், தாலிபான் ஜிஹாதியெல்லாம் வருவாங்க.. இஸ்லாமிய ஏவுகணை அணுகுண்டு எல்லாம் எங்களிடம் இருக்கு. இந்திய ராணுவம் விடுதலைப்புலிகள அட்ரஸ் இல்லாம் செஞ்ச மாதிரி, இந்திய ராணுவமும் பாக்கிஸ்தான் ராணுவமும் ஒன்னா சேந்து ஒங்க தமிழ்த்தேசியவாதிகளையும் 24 மணி நேரத்துலே அட்ரஸ் இல்லாம செஞ்சுடுவோம். அப்புறம் ஈழத்துல ஒங்க தொப்புள்கொடி உறவுகள் ஒரு வேளை கஞ்சிக்கு அலுமினிய லோட்டாவ தூக்கிட்டு க்யூல நிக்கற மாதிரி நீங்க நிக்க வேண்டியதுதான்… ஒங்களால என்ன புடுங்கமுடியும்?

    சீமான்: அடடா… என்னா பாய்… புரியாம பேசறீங்க… அம்மா அய்யாக்கிட்டயிருந்து பெட்டி வந்ததும், தமிழ்த்தேசியத்தெல்லாம் அடுத்த தேர்தல் வரை மூட்ட கட்டி வச்சிடுவோமுங்க.. எங்களுக்கும் கல்லா கட்ட எதாச்சும் ஒரு அரசியல் வேணாங்களா… அத்தேன்.. ஹி.. ஹி.. வரட்டுங்களா… ரொம்ப நன்றிங்க…

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading