மராட்டியன், கன்னடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வோம்

ambedkar22

ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!-2
டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3
டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – 4

டாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது  – 5

‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’- டாக்டர் அம்பேத்கர்- 6


என்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன் -7

‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை  -8

மார்க்சியத்திற்கு-முஸ்லீம்களுக்கு எதிரானவரா அம்பேத்கர்? -9

உண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்? -10
டாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும் – 11
டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்? -12

தொடர் – 13

டாக்டர் அம்பேத்கர் பற்றியான தொடர் எழுதுவதற்கு முன்பு எனது வலைப்பதிவின் பார்வையாளர்கள் எண்ணிக்கை, நாள் ஒன்றுக்கு 700, 800, 900 என்று இருந்தது. அம்பேத்கர் தொடரின் முதல் அத்தியாயம் முடியும் முன்பே 400, 300, 200 என்று சரிய ஆரம்பித்தது. பதிவின் இணைப்பை தருகிற ஒரு சில தளங்கள் அம்பேத்கர் பற்றியான நமது கட்டுரையின் இணைப்பை புறக்கணித்தன. தொடருக்கு முன்பு, என்னை சிறப்புப் பகுதி எழுத கேட்டுக் கொண்ட பிரபலமான இரண்டு இணையதளங்கள், அம்பேத்கர் தொடர் துவங்கியபிறகு, என்னோடான உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டனர். இன்றுவரை அவர்கள் என்னிடம் எழுத கேட்டுக் கொண்ட விஷயத்தைப் பற்றி எந்தத் தகவலும் சொல்லவில்லை. அதேபோல் தொடருக்கு முன்பு என் எழுத்துக்ளையும் என்னையும் சிலாகித்து, என்னோடு பேசுவதே பெருமைக்குரியது என்று புல்லரித்த ‘முற்போக்காளர்கள்’ பலர் தொடருக்கு பின்பு தொலைந்து போயினர். ‘டாக்டர் அம்பேத்கரை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?’ என்று நாம் கேட்டோம். நம்மையும் சேர்த்து புறக்கணித்தனர்.

தந்தை பெரியாரைப் பற்றி எழுதும்போது, பார்ப்பனர்கள், மதவாதிகள் போன்றவர்கள் நம்மீது கடுமையான கோபம் கொள்கிறார்கள். டாக்டர் அம்பேத்கரை பற்றி எழுதும்போது பார்ப்பனர்கள், மதவாதிகளோடு கூடுதலாக பிற்படுத்தப்பட்டவர்களும் சேர்ந்து கொண்டு, நம்மீது கடுமையான கோபம் கொள்கிறார்கள். நமது தொடர் சாதிய கண்ணோட்டம் கொண்ட பிற்படுத்தப்பட்டவர்களையும் முற்போக்காளர்களையும் கேள்வி கேட்டது, நம்மீதான கோபத்திற்கான இன்னொரு சிறப்புக் காரணம்.

சரி. இதுவொன்றும் சமூகத்திற்கு புதியதில்லை. ஆனால் பிரச்சினை இதோடு மட்டும் நிற்கவில்லை. தொடரை ஒட்டி பல அவதூறுகளும், புரளிகளும் டாக்டர் அம்பேத்கர் மீதும், என்மீதும், அம்பேத்கர் T.shirt தயாரிப்பில் தீவிரமாக இருக்கிற எனது நண்பர்கள் மீதும் வீசப்பட்டன. அந்த அவதூறுகளில் இரண்டு அவதூறுகளை மிக மோசமானதாக உணர்கிறேன்.

1. அம்பேத்கர் T.shirt போட்டு நன்றாக சம்பாதிக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதற்கு நல்ல வழி.

2. டாக்டர் அம்பேத்கர் பார்ப்பனப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரை எப்படி பார்ப்பன எதிர்ப்பாளராக சொல்வது?

இந்த இரண்டு புரளிகளும் அற்பமானவை, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் எழுபவை என்று முற்றிலுமாக புறம் தள்ளிவிடலாம். ஆனால் இந்த அற்பமான புரளிகளின் இன்னொருபுரம் ஆபத்தானதாக இருப்பதால், இந்தப் புரளிகளுக்கு நம் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கிறது.

அற்பம் 1. அம்பேத்கர் T.shirt போட்டு நன்றாக சம்பாதிக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதற்கு நல்ல வழி.

இது போன்ற அவதூறுகள் பெரியார் T.shirt போடும்போதோ, சே குவோர T.shirt போடும்போதோ சொல்லப் படவில்லை. அம்பேத்கர் T.shirt போட வேண்டும் என்று சொல்லும்போதுதான் இந்த அவதூறு தீவிரமாகப் பரப்பப்படுகிறது. இந்த அவதூறு வழக்கமான மற்ற அவதூறுகளை போன்ற ஒன்று என்று சாதாரணமாக, எளிதாக வரையறுத்துவிட முடியாது. இது அவைகளை விடவும் மிகவும் இழிவானது, கேவலமானது. காரணம் இது அவ்வளவு தலித் விரோதமும் காழ்ப்புணர்ச்சியும் கொண்டது.

அம்பேத்கர் T.shirt வாங்குவதற்கு ஆளில்லை என்பதால்தான் அதை யாரும் விற்பனைக்கே கொண்டுவரவில்லை. லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற வியாபார நோக்கோடு பார்த்தால், அம்பேத்கர் படம் போட்ட T.shirt விற்பனைக் கொண்டு வருவது முட்டாள்தனமானது. பெரும் நஷ்டத்திற்குரியது. இன்றைய நிலையில் வர்த்தக நோக்கத்தோடு T.shirt போட வேண்டும் என்றால், அதற்கு பொருத்தமானது சே குவேரா படம் போட்ட T.shirt போடுவதுதான். அதுதான் பெருத்த லாபம் தரும். யதார்த்தம் இப்படி இருக்கையில், நம்மீது வீசப்படும் அவதூறோ இப்படி இருக்கிறது. ஆத்திரம் அறிவுக்கு ஆகாது என்பர்களே அதற்கு இந்த அவதூறு நல்ல உதாரணம்.

டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T.shirt அணிவது ஸ்டைலுக்காகவோ அல்லது பார்வைக்கு தன்னை ஒரு முற்போக்காளனாக மற்றவர்களுக்கு ‘பந்தா’வாக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவோ அல்ல. அப்படி ஒரு பொதுப்பார்வை அம்பேத்கர் மீதும் இருந்திருக்குமாயின் சே குவேரா T.shirt அணிபவர்கள் எல்லாம் அம்பேத்கர் T.shirt டும் அணிந்திருப்பார்கள். ஆனால் அம்பேத்கர் T.shirt அணிவது ஜாதிகளுக்கு எதிரான, ஜாதிவெறியர்களுக்கு எதிரான ஒரு கலகக் குறியீடு என்பதால்தான்.

அண்ணலின் படம் போட்ட T.shirt அணிந்து பாருங்கள் அன்பர்களே, இந்த ஜாதிய சமூகம் உங்களை எப்படி அடையாளப்படுத்துகிறது? அண்ணலின் படத்தை பார்த்தவுடன் எப்படி அலறுகிறது? என்று அனுபவித்து பாருங்கள். அந்த அனுபவம் புதுமையாக இருக்கும். ஆனால் இனிமையாக இருக்காது.

அற்பம் 2. அம்பேத்கர் பார்ப்பனப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

சமூகத்தில் ஜாதி இருக்கிறது. ஜாதிரீதியான ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறது. அதனால்தான் அதை எதிர்த்து தீவிரமாக இயங்கினார் டாக்டர் அம்பேத்கர். ஆனால் ‘உண்மையில் ஜாதி என்பது பொய். அப்படி ஒன்று மனிதர்களுக்கு அவசியம் இல்லை.’ என்கிற கண்ணோட்டம் டாக்டர் அம்பேத்கரிடம் தீவிரமாக இருந்தது. அதனால்தான் தன்னுடைய தனிவாழ்க்கையில் அவர் ஜாதி உணர்வற்று இருந்தார். அவரிடம் சுயஜாதி உணர்வு என்பது துளியும் இல்லை. ‘இந்திய ஜாதிகளிலேயே மகர் ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான் உயர்ந்தவர்கள். இந்த நாட்டை ஆண்டவர்கள்.’ என்பதுபோன்ற சுயஜாதி பெருமைகளில், பிரியங்களில் அம்பேத்கர் ஒருநாளும் கவனம் செலுத்தியதில்லை.

அருந்ததயிர் சமூகம் உட்பட எல்லா தாழ்த்தப்பட்ட மக்களின் துயரங்களையும் புரிந்திருந்தார். ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத்தான் டாக்டர் அம்பேத்கரின் குரல் இருந்தது. அதனால்தான் அவரை இந்தியாவில் இருக்கிற அனைத்து தலித் மக்களும் தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இந்தச் சிறப்பு தலித் தலைவர்களிலேயே டாக்டர் அம்பேத்கரிடம் மட்டுமே இருந்து. காரணம் ஜாதி என்பது பொய். ‘பிறப்பால் ஜாதி பார்ப்பதும், தன்னை ஜாதியாக உணர்வதும் 2000 ஆண்டுகளாக பார்ப்பனியம் இந்த சமூகத்தில் ஏற்படுத்திய பழக்கம்’ என்கிற கண்ணோட்டம் அவரிடம் உறுதியாக இருந்தது. அதனால்தான் ஜாதிகளுக்கு எதிரான புத்தரை தனது முன்னோடியாக கொண்டார்.

ஒருவரை தனிவாழ்க்கையில் நண்பராக ஏற்றுக் கொள்வதற்கும், துணைவராக ஏற்றுக் கொள்வதற்கும், ‘அந்த நபர் தனக்கு பொருத்தமாக இருப்பாரா?’ என்பதை தீர்மானிப்பதில் ஜாதியின் பங்களிப்பு இருப்பது மோசடியானது. அதுதான் இந்து மத ஜாதியக் கண்ணோட்டம் நிறைந்தது. நட்பையும், காதலையும், கல்யாணத்தையும் ஜாதி தீர்மானிக்கக்கூடாது, தனது விருப்பங்களே தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கர் வலியுறுத்திய சமத்துவம்.

ஜாதியை தெரிந்துகொண்டு ஒரு நபரை விரும்ப முடியாது. கூடாது. அப்படி விரும்பியப் பிறகு ஜாதி தெரிந்தால் விலக்கிக் கொள்ள முடியாது. கூடாது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் டாக்டர் அம்பேத்கரை குறைசொல்பவர்கள் இன்னும் ஜாதிய கண்ணோட்டத்தில் இருந்து வெளியே வரவில்லை என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

ambedkar1மேற்சொன்ன இந்த விளக்கம் தந்தை பெரியாருக்கும் பொருந்தும். தன்கொள்கை சார்ந்தவர்களோடு, தன்னுடைய தோழர்களோடு சண்டை வந்து பேச்சு வார்த்தைக்கூட இல்லாமல் இருந்திருக்கிறார் பெரியார். ஆனால் தன் காலம் முழுவதும் ராஜாஜியை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்தபோதும், அவரோடு தனிப்பட்ட முறையில் நட்பை முறித்துக் கொண்டதில்லை. அவரோடு அவர் பேசாமல் இருந்ததுமில்லை. தனது இரண்டாவது திருமணத்தின் போது உறவினர்கள் உட்பட யாரிடமும் ஆலோசனைக் கேட்காத பெரியார், தனது அரசியல் எதிரியான ராஜாஜிடம்தான் ஆலோசைனக்கேட்டார். ராஜாஜியின் மரணம் வரை அவரோடு நட்பாகத்தான் இருந்தார்.

தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, மருத்துவமனையில் தன்னை பார்க்க வந்த தொண்டர், தனக்கு கொடுத்த பசும் நெய்யை, ராஜாஜி விரும்பி உண்பார் என்பதற்காக, மருத்துமனையில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ராஜாஜியின் வீட்டில் நெய்யை தந்து விட்டுச் சென்றவர்தான் பெரியார்.

தன் சொந்த வாழ்க்கையில் பார்ப்பனர்களோடு நட்பாக இருப்பதற்காக, அல்லது அவர்கள் மூலம் கிடைக்கும் தனிப்பட்ட லாபங்களுக்காக  பார்ப்பன எதிர்ப்பு என்கிற அரசியலையே கைவிட்டுவிட்டு அதற்கு எதிராகவே மாறிவிடுகிற இன்றைய சில அறிவாளிகளைப்போல் அல்ல அவர்கள் இருவரும்.

டாக்டர் அம்பேத்கர்-தந்தை பெரியார் இருவரிடமும் சுயஜாதி அபிப்பராயம் சுத்தமாகக் கிடையாது. அவர்கள் ஜாதியை துளியும் நம்பியதில்லை. அதனால்தான் அவர்களால் ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக, தீவிரமாக போராட முடிந்தது. அவர்களால் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவிற்கு அதில் வெற்றியும் பெறமுடிந்தது.

இதையும் மீறி ஜாதி என்கிற உங்களின் அழுகிய நாற்றத்தை மறைப்பதற்காக, ‘தமிழ்தேசியம்’ என்கிற வாசனை திரவியம் பூசிக் கொண்டு தந்தை பெரியாரை ‘கன்னடன்’ என்றும், தலைவர் அம்பேத்கரை ‘மராட்டியன்’ என்றும் சொல்வீர்களேயானால், நாங்களும் எங்களை ‘கன்னடன்’என்றும் ‘மராட்டியன்’ என்றும் சொல்லிக் கொள்வதில் பெருமைக் கொள்வோம்.

-முற்றும்

டாக்டர் அம்பேத்கர் T.shirt தயாரிப்பு மற்றும் ஆலோசனைக் குழு

மும்பை

கதிரவன்

மகிழ்ன்

கோவை

பாலா

அய்தாரபாத்

விஜய் கோபாலசாமி

பெங்களூர்

பிரடெரிக்

தமிழன்பன்

வெங்கடேஷ்

சென்னை

ஆறுமுகம்

சசி

வெங்கட்

சுவன்

அருண்

கலாநிதி

28 thoughts on “மராட்டியன், கன்னடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வோம்

  1. I am proud to say that i am one of the readers of your articles about Dr. Ambedkar. I am ready to buy and wear (wholeheartedly) the Ambedkar T-Shirt (though i do not have the habit of wearing T-Shirts that has prints of leaders’ photos).

    I sincerely appreciate your good work.

    Nithil

  2. ///டாக்டர் அம்பேத்கர் பற்றியான தொடர் எழுதுவதற்கு முன்பு எனது வலைப்பதிவின் பார்வையாளர்கள் எண்ணிக்கை, நாள் ஒன்றுக்கு 700, 800, 900 என்று இருந்தது. அம்பேத்கர் தொடரின் முதல் அத்தியாயம் முடியும் முன்பே 400, 300, 200 என்று சரிய ஆரம்பித்தது. பதிவின் இணைப்பை தருகிற ஒரு சில தளங்கள் அம்பேத்கர் பற்றியான நமது கட்டுரையின் இணைப்பை புறக்கணித்தன. தொடருக்கு முன்பு, என்னை சிறப்புப் பகுதி எழுத கேட்டுக் கொண்ட பிரபலமான இரண்டு இணையதளங்கள், அம்பேத்கர் தொடர் துவங்கியபிறகு, என்னோடான உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டனர். இன்றுவரை அவர்கள் என்னிடம் எழுத கேட்டுக் கொண்ட விஷயத்தைப் பற்றி எந்தத் தகவலும் சொல்லவில்லை. அதேபோல் தொடருக்கு முன்பு என் எழுத்துக்ளையும் என்னையும் சிலாகித்து, என்னோடு பேசுவதே பெருமைக்குரியது என்று புல்லரித்த ‘முற்போக்காளர்கள்’ பலர் தொடருக்கு பின்பு தொலைந்து போயினர். ‘டாக்டர் அம்பேத்கரை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?’ என்று நாம் கேட்டோம். நம்மையும் சேர்த்து புறக்கணித்தனர். ///

    I expected this… :-(…. But what I didn’t expect is you would announce this… Good that you announced this ‘கேடுகேட்ட நிலை’.

    இதையெல்லாம் மீறித்தான் நாம் போராட வேண்டியுள்ளது….

  3. //அருந்ததயிர் சமூகம் உட்பட எல்லா தாழ்த்தப்பட்ட மக்களின் துயரங்களையும் புரிந்திருந்தார். ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத்தான் டாக்டர் அம்பேத்கரின் குரல் இருந்தது. அதனால்தான் அவரை இந்தியாவில் இருக்கிற அனைத்து தலித் மக்களும் தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இந்தச் சிறப்பு தலித் தலைவர்களிலேயே டாக்டர் அம்பேத்கரிடம் மட்டுமே இருந்து. காரணம் ஜாதி என்பது பொய். ‘பிறப்பால் ஜாதி பார்ப்பதும், தன்னை ஜாதியாக உணர்வதும் 2000 ஆண்டுகளாக பார்ப்பனியம் இந்த சமூகத்தில் ஏற்படுத்திய பழக்கம்’ என்கிற கண்ணோட்டம் அவரிடம் உறுதியாக இருந்தது. அதனால்தான் ஜாதிகளுக்கு எதிரான புத்தரை தனது முன்னோடியாக கொண்டார்.//

    இங்கே சில கேள்விகள் எழுகின்றன. சாதி ரீதியாக உணர்வது வேண்டாம் என்று கூறீயவர் அம்பேத்கர. அப்படிப்பட்ட தலித் விடுதலை போராட்டம் என்பது பார்ப்பனியத்தின் விதிமுறைக்கு உட்பட்டு போராடும் மோசடி என்பதுதான் எனது கருத்தும்.

    ஆனால் இன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக்கு போராடுபவர்கள் தலித் என்ற அடையாளத்துடன் மட்டும்தான் ஒன்று சேர முடியும் என்று அம்பேத்கரை உரிமை கொண்டாடுவதை நாம் எப்படி பார்ப்பது? இது பார்ப்பனியத்தின் வரையறையிலிருந்து கொண்டே நமது விடுதலையே வென்றெடுக்க போராடுவது ஆகாதா?

    அப்புறம் அம்பேத்கரின் அஹிம்சா வழி போராட்டம் குறித்து, அதாவது பார்ப்பனிய அதிகாரத்துவத்தால் கெட்டி தட்டி போன இந்த அரசை தூக்கியேறிவதில் அம்பேத்கர் உடன்படாமல் இருந்த நிலை குறித்து உங்களது விமர்சனம் என்ன? குறீப்பாக வன்முறயை அவர் எதிர்த்து நின்றது குறித்து விமரசனமும், அம்பேத்கர் கடைசி காலங்களீல் தனது அரசியல் திசை வழி குறித்து வருத்ததுடன் குறிப்பிட்டவை குறித்த விமர்சனத்தையும் உங்களிட எதிர்பார்க்கிறேன்.

    அம்பேத்கர் நமது தலைவர் என்ற போதும் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எனக்கு உண்டு. அதனை எழுப்ப இது சரியான தளமா என்ற சந்தேகம் இருந்தபடியால்தான் இந்த தொடர் கட்டுரையில் இதனை பேசவில்லை. ஆனால் அம்பேத்கரை புறக்கணிக்கும் அவலம் வெளிப்படையாக தெரிந்த பிற்பாடு இந்த விசயங்கள் பேசப்பட்டே தீர வேண்டும் என்று உணர்கிறேன்.

    இது மட்டும்தான், இப்படிப்பட்ட விவாதம்தான் அம்பேத்கரின் வீரியமான அரசியலை நாம் மீட்டெடுத்து நமது விடுதலை போராட்டத்தை கூர்மைபடுத்த உதவும்.

    யாரோ

  4. Mathimaran,

    I would have thought that writing about Ambedkar would have increased your hit count. It is depressing to hear the opposite.

    I have several disagreements with you. Particularly, for a person who professes to have no caste feelings, you tend to blame brahmins a lot. Even in this post, you write: // ந்தை பெரியாரைப் பற்றி எழுதும்போது, பார்ப்பனர்கள், மதவாதிகள் போன்றவர்கள் நம்மீது கடுமையான கோபம் கொள்கிறார்கள். டாக்டர் அம்பேத்கரை பற்றி எழுதும்போது பார்ப்பனர்கள், // In other words, if a person born in brahmin caste disagrees with you, his/her motives are suspect in your eyes. This is just reverse casteism.

    I also don’t beleive in Ambedkar T-shirts. I put it on par with Kalaignar’s attempts to erect statues, mani mandapams, release stamps etc.

    Having said all that, you are the only person that I know of who has tried to bring Ambedkar out of the Dalit identity. Almost everything I know about Ambedkar’s writings come from your posts. I always thought that if a person is capable of leading an effort to draft a constitution, identifying him as only a dalit is to focus on only aspect of his genius. Unfortunately, every speech/article on Ambedkar focuses only on his dalit identity. My congratulations on your attempt to bring his writings to everyone.

    P.S. Why do you waste time answering comments like since Ambedkar married a brahmin, he is not really against casteism?

  5. ஆனந்த விகடனின் யோக்கியதை

    ஆனந்த விகடன் இதழ் அம்பேத்கர் குறித்து நீங்கள் முதல் அத்தியாயத்தில் எழுதிய பகுதியை அப்படியே எடுத்து ஒரு வாசகரின் பெயரில் பிரசரித்துள்ளது. அதில் உங்கள் பெயரையோ உங்கள் வலைப்பூ முகவரியோ அதில் படித்தது என்றோ குறிப்பிட வில்லை. இது தான் ஆனந்தவிகடனின் யோக்கிதையா?.

    இது மட்டுமல்லாமல் பல வலைப்பூ பக்கங்களின் அறிமுகம் செய்கிற விகடன் பக்கத்தில் உங்கள் வலைப்பூ இது வரை வந்ததில்லை. நீங்கள் விகடனை கடுமையாக விமர்சனம் செய்வதுதான் அதற்கு காரணமா?

  6. //தொடருக்கு முன்பு, என்னை சிறப்புப் பகுதி எழுத கேட்டுக் கொண்ட பிரபலமான இரண்டு இணையதளங்கள், அம்பேத்கர் தொடர் துவங்கியபிறகு, என்னோடான உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டனர். இன்றுவரை அவர்கள் என்னிடம் எழுத கேட்டுக் கொண்ட விஷயத்தைப் பற்றி எந்தத் தகவலும் சொல்லவில்லை. //

    ஆம் தோழர் நான் ஒரு மாததற்கு முன் கீற்று என்ற இனையதளத்தில் உங்கள் கேள்வி-பதில் வருகிறது என்று ஆசிரியர் பக்கத்தில் அறிமுகம் பார்த்தேன் பிறகு உங்கள் கேள்வி-பதிலும் வரவில்லை அந்த அறிவிப்பையையும் காணவில்லை.

    என்ன ஆயிற்று கீற்று முற்போக்கு தளத்திற்கு?.

    சதிஸ்
    சுவிஸ்

  7. வணக்கம் தோழர்,
    பொதுவாகவே நம் எழுத்தாளர்கள் பலர் ஒரு தொடரை எழுதும்போது அதை வாசகர்கள் குறைவாக படிக்கிறார்கள் என்றால் விரைவாக அந்த தொடரை முடிதுக்கொல்வர்கள்.ஆனால் நீங்கள் அதை பற்றிஎல்லாம் கவலைகொள்ளாது எழுதியது என்பது மிக அறிய நல்ல செயல்.

    இப்படிக்கு,
    செ.தமிழ்ச்செல்வன்

  8. //டாக்டர் அம்பேத்கர்-தந்தை பெரியார் இருவரிடமும் சுயஜாதி அபிப்பராயம் சுத்தமாகக் கிடையாது. அவர்கள் ஜாதியை துளியும் நம்பியதில்லை. அதனால்தான் அவர்களால் ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக, தீவிரமாக போராட முடிந்தது. அவர்களால் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவிற்கு அதில் வெற்றியும் பெறமுடிந்தது. //

    சரியாக முடித்திருக்கிறீர்கள். சிறந்த தொடர். நூலாக வெளியிடவும்.
    நன்றி.

  9. ஒடுக்க பட்ட மக்களுக்காக அம்பேத்கார் போராடிய அளவுக்கு யாரும் ஆதிக்க சக்தியை எதிர்த்து போராடியிருக்க முடியாது. ஆனால் அவர் மொழி ரீதியாக பிறறை ஆதிக்கம் செலுத்துவதை ஆதரித்தது தவறான செயல்

    http://www.tribuneindia.com/2003/20031220/windows/main4.htm

  10. அய்யா ! தங்களின் “அம்பேத்கர் T.shirt” அணிவது தொடர்பான கட்டுரையின் ஒரு பகுதியை எனது http://muzhangu.wordpress.com ல் “அம்பேத்கர் என்றவுடன் அடி வயிறு எரியுதடா” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன்.நன்றி.

  11. டாக்டர் அம்பேத்கர் பற்றியான தொடர் எழுதுவதற்கு முன்பு எனது வலைப்பதிவின் பார்வையாளர்கள் எண்ணிக்கை, நாள் ஒன்றுக்கு 700, 800, 900 என்று இருந்தது. அம்பேத்கர் தொடரின் முதல் அத்தியாயம் முடியும் முன்பே 400, 300, 200 என்று சரிய ஆரம்பித்தது. பதிவின் இணைப்பை தருகிற ஒரு சில தளங்கள் அம்பேத்கர் பற்றியான நமது கட்டுரையின் இணைப்பை புறக்கணித்தன. தொடருக்கு முன்பு, என்னை சிறப்புப் பகுதி எழுத கேட்டுக் கொண்ட பிரபலமான இரண்டு இணையதளங்கள், அம்பேத்கர் தொடர் துவங்கியபிறகு, என்னோடான உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டனர். இன்றுவரை அவர்கள் என்னிடம் எழுத கேட்டுக் கொண்ட விஷயத்தைப் பற்றி எந்தத் தகவலும் சொல்லவில்லை. அதேபோல் தொடருக்கு முன்பு என் எழுத்துக்ளையும் என்னையும் சிலாகித்து, என்னோடு பேசுவதே பெருமைக்குரியது என்று புல்லரித்த ‘முற்போக்காளர்கள்’ பலர் தொடருக்கு பின்பு தொலைந்து போயினர். ‘டாக்டர் அம்பேத்கரை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?’ என்று நாம் கேட்டோம். நம்மையும் சேர்த்து புறக்கணித்தனர்”

    வணக்கம்,

    பார்ப்பனீயத்துக்கெதிரான போரில் நாம் இன்னமும் நிறையவே இழக்க வேண்டியிருக்கின்றது த்ன் மானத்திற்காக சுய மரியாதைக்காக தந்தை பெரியார் சந்தித்த இழப்புகள் ஏராளம்.ஆனால் அவை இழப்புகளாக எடுத்துக்கொள்ளவில்லை பெரியாரும் சரி மற்றும் புரட்சியாளர்கள் அதை பெருமையாகவே எண்ணினர்.தோழர் மதிமாறன் அவர்களே பெருமைகொள்ளுங்கள் நீங்கள் களத்தில் நிற்கிறீர்கள். தந்தை பெரியார் கடவுளின் சிலையை அடித்தாரே அந்த செருப்பு மீண்டும் தேவைப்படுகின்றது

    பார்ப்பனீயத்துக்கெதிராக அது பார்ப்பனீய களமாக மட்டுமிருந்தால் பார்ப்பனீயத்தை வீழ்த்த முடியாது வாருங்கள் வர்க்கபோரில் ஒன்றாய் களம் புகுவோம்.ஏனெனில் பார்ப்பனீயமும் மறுகாலனியும் பின்னிப்பிணைந்த பாம்புகள்

    கலகம்

  12. நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்கள்?… தலிதுகளுக்காகவா இல்லை தமிழினத்துகாகவா?

    உங்கள் எழுத்துகளை யார் படிக்க வேண்டுமோ, யாரின் குற்ற உணர்ச்சியை வெளி கொண்டுவது நீங்கள் அரவணைக்க வேண்டுமோ அவர்களை வசை பாடுங்கள்.. நன்றாக வந்து உங்கள் பக்கங்களை படிப்பார்கள்…

    முற்போக்காளர்களையும், பிற்படுத்தவர்களையும் நீங்கள் வசை பாடியவுடன் உங்கள் கொள்கைகள் வெற்றி பெற்றுவிடுமா? இல்லை தலித் மீதான அடக்குமுறை தான் நின்றுவிடுமா?..

    யார் நண்பன், யார் எதிரி என்று அறிந்துகொள்ள தெரியாத மூடராய் இருக்கும் காரணத்தினால் தான் உங்களை புறக்கணிக்கின்றனர் என்பது என் கருத்து…

    உங்கள் எழுத்தை தீவிரமாய் படித்து, இந்த தொடர் எழுதிய பின் வெறுத்த, ஒரு பிற்படுத்தப்பட்ட முற்போக்குவாதி..

    பாக்கியராசன் சேதுராமலிங்கம்

  13. //இதையும் மீறி ஜாதி என்கிற உங்களின் அழுகிய நாற்றத்தை மறைப்பதற்காக, ‘தமிழ்தேசியம்’ என்கிற வாசனை திரவியம் பூசிக் கொண்டு தந்தை பெரியாரை ‘கன்னடன்’ என்றும், தலைவர் அம்பேத்கரை ‘மராட்டியன்’ என்றும் சொல்வீர்களேயானால், நாங்களும் எங்களை ‘கன்னடன்’என்றும் ‘மராட்டியன்’ என்றும் சொல்லிக் கொள்வதில் பெருமைக் கொள்வோம்.//

    அற்புதமான ஒரு தொடர் முடிந்து விட்டது.
    வலை பகுதியின் பார்வையாளர்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
    அதிகமானவர்கள் படித்து பயனுறாமல் போவதை விட, குறைவானவர்கள் படித்து பயனுருவதே மேல்.

  14. புறக்கணித்த தளங்களை பட்டியலிட்டால், அவற்றை புறக்கணிக்க எனக்கு ஏதுவாக இருக்கும். கண்டிப்பாக புத்தகமாக வரவேண்டிய தொடர். அதிகம் படித்திராத எனக்கு இது பல புது தகவல்களை தந்து உதவியது.

    பல ஈடுஇணையற்ற பணியாற்றிய அம்பேத்கருக்குள்ள இத்தகைய ஆதரவின்மையை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

  15. மதிமாறன் அவர்களே உங்களது கருத்துகள் எல்லாம் சரிதான். ஆனால்,

    இதையும் மீறி ஜாதி என்கிற உங்களின் அழுகிய நாற்றத்தை மறைப்பதற்காக, ‘தமிழ்தேசியம்’ என்கிற வாசனை திரவியம் பூசிக் கொண்டு தந்தை பெரியாரை ‘கன்னடன்’ என்றும், தலைவர் அம்பேத்கரை ‘மராட்டியன்’ என்றும் சொல்வீர்களேயானால், நாங்களும் எங்களை ‘கன்னடன்’என்றும் ‘மராட்டியன்’ என்றும் சொல்லிக் கொள்வதில் பெருமைக் கொள்வோம்.

    என்ற உங்களின் நிறைவுப் பத்தியைப் படித்து அதிர்ந்து போனேன். ஆக, உங்களிடமும் அரசியல் உள்ளதென்பது தெளிவு. தமிழ்த்தேசியம் பேசுவது தவறா? பெரியார் தி.க தமிழ்தேசியத்திற்கெதிரானது என்பது எனக்குத் தெரியும். உங்களின் தனிப்பட்ட எண்ணமும் அது தானா? இது கொடுமையல்லவா? ஒரு சில தமிழ்தேசிய வாதிகள் பெரியாரை கன்னடரென்று வாதிக்கலாம். தமிழக எல்லைப் போராட்டங்களில் பெரியார் கவனம் செலுத்தவே இல்லை என்பது போன்ற சில ஞாயமான விமர்சனங்கள் உண்டுதான். ஆனால், பெரும்பாண்மை தமிழ்த்தேசிய வாதிகள் பெரியாரை நேசிப்பவர்கள் தாம். அவரிடம் நன்றி பாராட்டுபவர்கள் தாம்.

    உங்களைப் புரக்கனித்தவர்களின் பெயர்களை நீங்கள் வெளியிடவில்லை. ஆனால், தமிழ்த்தேசிய வாதிகளை இப்படிக் கொச்சைப் படுத்தலாமா?

    கடைசியாக, நீங்களும் கன்னடரென்று (தெலுங்கரென்று) சொல்லிக் கொள்வீர்களா? இப்படி உங்களது கட்டுரையை முடிப்பது உங்களுக்கு அபத்தமாக தெரியவில்லையா? உங்களது கருத்துக்கு எதிராகவே நீங்களே பேசுவது போல் உங்களுக்கு தெரியவில்லையா?

    ஈ. வி.கெ.ஸ் இளங்கோவன் சொல்கிறார், ‘தமிழகத்தில் தமிழர் மட்டும் இல்லை அதனால், சென்னை உயர்நீதி ம்ன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி ஆகக்கூடாது’ என்று. இவர் ஓட்டுக் கேட்க பயன்படுத்தும் மொழி தெலுங்கல்ல, தமிழ். ஆனால், சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாகக் கூடாதாம். எப்பேற்பட்ட அயோக்கியத்தனம்! பெரியாரின் சொந்தத்தில் இப்படி ஒரு அபத்தப்பிறவி!

    மதிமாறன் அவர்களே! நீங்களும் இப்படிப்பட்டவரா? இந்தியா தற்போது ஒரே நாடுதான். ஆந்திராவுக்கோ, கர்நாடகாவுக்கோ சென்று வாழலாமே!

    வந்தேறிகளால் தமிழன் பட்டதெல்லாம் போதுமய்யா! நீங்கள் பெரியாரைப்பற்றியும், அம்பேத்கரைப் பற்றியும் படித்தது போல, தமிழர் வரலாற்றையும் சற்றே படியுங்களேன். இந்த இனத்தின் மீது சற்று இறக்கம் கொள்ளுங்கள்.

    தமிழ்த் தேசியம் பிறந்தே தீரும். ஈழமக்களின் படுகொலையே அதற்கொரு உத்வேகமாக அமையும்.

    மொழிக்கொரு தேசம் இன்றியமையாதது. ஞாயமானது. அதை எவன் மறுக்கிறானோ அவன் ஒரு அயோக்கியன்.

  16. மருத்துவர் அல்லது முனைவர் பாண்டியன் அவர்களே, அறிவார்ந்த உங்கள் பின்னூட்டுக்கள் பலவற்றையும் பல்வேறு தளங்களில் கண்டுள்ளேன். நீங்களா இப்படி எழுதுவது என்று இங்கே கண்டுள்ள பின்னூட்டம் நினைக்க வைக்கிறது. வந்தேறிகளால் தமிழன் பட்டது போதும் என்கிறீர்கள். திரைகடலோடித் திரவியம் தேடிய இனம் தமிழினம். அப்படிப் பார்த்தால் பெரும்பங்குத் தமிழினத்தை சென்றேறி என்று சொல்லிவிடலாமா?

    நாடு விட்டு நாடு, அல்லது மாநிலம் விட்டு மாநிலம் சென்று பொருளீட்டுவது அவரவர் விருப்பம் சார்ந்தது. தமிழன் சென்று பிழைக்கின்ற நாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் நீங்கள் சொல்கிறவாறு நினைத்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள். தமிழ் மாநிலத்துக்கு வெளியே தமிழுணர்வுடன் வாழ்கிறவன் என்ற உரிமையில்தான் இதை எழுதுகிறேன்.

    நன்றியுடன்,
    விஜய்கோபால்சாமி

  17. திரு. விஜயகோபால்சாமி அவர்களே!

    நான் ச்ற்று உணர்ச்சிவசப்பட்டுத்தான் எழுதினேன். எழுதியவிதம் எனக்கே சற்று சங்கடமாக இருந்தாலும் எழுதியதில் தவறில்லை என்றே கருதுகின்றேன்.

    தமிழனும் சென்றேறிதான். நிச்சயமாக. ஆனால், அவன் எங்காவது அங்குள்ள மக்களின் உரிமைகளில் தலையிட்டுள்ளான் என்று உங்களால் கூற இயலுமா? அதானய்யா தமிழன்.

    ஆனால், இங்கு வந்தேறி இளங்கோவன் சுப. தயிழ்ச்செல்வனின் இறங்கல் பதாகையைக் கிழிக்கிறான். சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ் வழிக்காடு மொழியாகக் கூடாது என்கிறான். தங்கபாலு என்ற தெலுங்கன்,தமிழன் தனது ஈழ ரத்த சொந்தங்களுக்கு குரல் கொடுத்தால், சிறை படுத்தச் சொல்கிறான். அதுவும் நடக்கிறது. மணியரசன், சீமான் மற்றும் கொளத்தூர் மணி இப்போது சிறையில்! டிராபிக் ராமசாமி என்ற தெலுங்கு நாய், தமிழ்ப்புத்தாண்டை தையில் மாற்றுவதை எதிர்த்து, நீதி மன்றம் செல்கிறது. இவனுக்கு தமிழனை எதிர்ப்பதே தொழிலாகிவிட்டது.

    எனது கல்லூரி நன்பன். 30 வருட அண்ணன் தம்பி உறவு. அவனது வீட்டு நிகழ்வுகளுக்கு எனது அண்ணன் தம்பிகளும் சென்று கலந்து கொள்வார்கள். நான் வெளி மாநிலத்தில் கல்வி கற்க சென்ற போதும், எனது குடும்பத்தாரோடு அவனது நட்பு தொடர்ந்திருந்தது. அவன் தெலுங்கன் என்றாலும் அவனை தமிழனாகவே, வெகு இயல்பாகவே பாவித்தோம்.

    தமிழ் செம்மொழியான பொழுதில் அவனை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டபோது, இயல்பாக தமிழுக்கான செவ்வியல் தகுதி பற்றிப் பேச எத்தனித்தேன். அதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பேச்சை மாற்றினான். நான் முதன் முறையாக அதிர்ந்துபோனேன். அப்போது தான் அவன் ஒரு தெலுங்கன் என்று, 30 வருடங்களுக்கப்புறம், முதன் முறையாக எனக்குப் பட்டது. நான் ஒன்றும் சொல்லவில்லை. சமீபத்தில் அவனை நான் சந்தித்தேன். மீண்டும் ஒரு அதிர்ச்சி. நாத்திகனான அவன் கருத்த நெற்றியில் பளபளக்கும் நாமம். புரிகிறதா அதன் அர்த்தத்தை! அவன் மீதிருந்த கொஞ்சநஞ்ச மறியாதையும் போய்விட்டது.

    விஜயகோபால்சாமி அவர்களே! தமிழன் மீது மாற்று இனத்தவருக்கு காழ்ப்பு இருக்கிறதையா! இது எதார்த்தம்.

    ஆனால், தெலுங்கனோ, கன்னடனோ, மளையாளியோ அடிப்படையில் தமிழர்களே! தமிழ்ப் பாரம்பர்யத்தில் அவர்களுக்கு பங்குண்டு. தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாய் வாழும் இவர்களாவது இதை உணரவேண்டாமா? சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தில் தெலுங்கு ஏது, கன்னடம் ஏது, மளையாளம் ஏது? எல்லாம் தமிழ் தானே. இவற்றை இயற்றியதில் அந்த பகுதி மக்களின் பங்கும் இருந்திருக்குமல்லவா?

    தமிழ் உலகின் மூத்த மொழி. 1400 ஆண்டுகளே ஆன இம்மொழிகள் இவர்களின் அடையாளமா, இல்லை ஐம்பதினாயிறம் ஆண்டு பழமையுள்ள இவர்களின் பாட்டி மொழியான தமிழ் இவர்களின் அடையாளமா? தமிழகத்தில் வாழும் இவர்களாவது இதை உணர வேண்டாமா?

    எங்கிருந்தோ வந்த பெஸ்கி தனது பெயரைக்கூட முதலில் ‘தைரியநாதன்’ என்று மாற்றி பிறகு அது வட சொல் என்றறிந்தபின் ‘வீரமாமுனிவர்’ என்று தூயதமிழ்ச் சொல்லால் அழைத்தானே! அப்பேர்பட்ட மொழியையா தமிழ். இவர்கள் தமது பாட்டி மொழியை நேசிக்க வேண்டாமா? நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை, தூற்றாமலிருக்க வேண்டாமா?

    இறுதியாக, தமிழைக் காதலிக்கும் எவரையும் எனது உடன்பிறப்பாகவே கருதுகிறேன். எல்லா தமிழரும் அப்படித்தான் கருதுவார்கள் என்பது திண்ணம்.

    இந்த தன்னிலை வளக்கத்திற்கு காரணமாயிருந்த உங்களுக்கு எனது நன்றிகள் பல.

  18. இன்னும் ஒரு சிலவற்றை எழுதிவிடுகின்றேன், விஜய்கோபால்சாமி அவர்களே!

    அம்பேத்கர் கடுமையாக பார்ப்பனீயத்தை எதிர்த்தவர். இந்திய மொழிகள் எல்லாமே, தமிழைத் தவிர, சமஸ்கிருதம் கலந்துள்ளதால் தமிழை மட்டுமே அவர் நேசித்தார். தமிழைக்கற்றவும் முயற்சித்தார். மராட்டியத்தைவிட தமிழின் மீது அவருக்கு மரியாதை இருந்தது.

    கன்னடம், தெலுங்கு மற்றும் மளையாளத்தை திட்டமிட்டே உருவாக்கியவர்கள் பிராமனர்கள் தான். வந்தேறிகளான அவர்கள் இந்த மன்னின் மொழி, அடையாளங்கள், வரலாறு போன்றவற்றை அழிப்பதிலே குறியாயிருந்தனர். தமிழை சிதைத்துத் தான் இந்த மொழிகளை உருவாக்கினார்கள். இம்மொழிகளின் முதல் இலக்கண நூல்கள் கூட வடமொழியில் தான் உள்ளது. சமீபத்தில் வெளியான ‘திராவிடச்சான்று’ என்ற நூலில் தாமஸ் ட்ரவுட்மன் என்ற அமெரிக்க ஆய்வாளர், தெலுங்குக்கு ஒரு செட்டியார் இலக்கணம் எழுதியதைப் பொருத்துக்கொள்ளாத தெலுங்கு பார்ப்பனர்கள் அந்த செட்டியாரின் வீட்டை இரண்டு முறை இடித்துள்ளனர் என்ற வரலாற்று நிகழ்வை சொல்கிறார். ஆக, கன்னடம், தெலுங்கு மற்றும் மளையாளம் எல்லாம் பார்ப்பனர்களின் மொழி. இதைக் கொண்டாடுவதில், திராவிட கன்னடனுக்கோ, தெலுங்கனுக்கோ அல்லது மளையாளிக்கோ என்ன பெருமை இருக்கப்போகிறது.

    தன்னை இழிவு படுத்திய பார்ப்பன மொழியான மராட்டியத்தை விட தமிழை நேசித்த அம்பேத்கரைப் போல, தமிழ் நாட்டில் வாழும் இம்மொழி மக்கள் தங்களது பாட்டி மொழியைக் கொண்டாட வேண்டாமா? நான் அதிகமாக கேட்கவில்லை ஐய்யா, தமிழனைத் தூற்றாதீர் என்று தான் இவர்களைக் கேட்கின்றேன். நான் மொழி வெறியன் அல்ல. ஆனால், உலக மொழி எல்லாம் அழிந்தாலும், தமிழ் வாழவேண்டும். ஏனென்றால் இந்த மொழி உலக மாந்தனின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது.

    தமிழகத்தை பச்சைத் தமிழன் ஆண்டது வெறும் 8 ஆண்டுகள் தான் (அண்ணாவும், காமராசரும்). மற்ற 53 ஆண்டுகளும் தமிழனை வந்தேறிகள் தானய்யா ஆளுகின்றனர். தமிழனின் சகிப்புத் தன்மைக்கு இது ஒரு வரலாற்றுச் சான்றல்லவா?

    வந்தேறி கருனாநிதியின் துரோகம் எப்படிப் பட்டது என்று தெரிந்துள்ளதா? தமிழ், தமிழ் என்று தமிழைக் கெடுப்பவர் இவரே! கலைஞர் தொலைக் காட்சியைப் பார்த்தாலே புரியாதா? இவரது ஆட்சியில் தமிழன் நாசமாய்ப் போனது தான் மிச்சம்.

    ஜெயலலிதா என்ற வந்தேறியின் ஆட்சியில் தமிழரெல்லாம் ‘பொடா’ சிறையில்!

    பக்தவச்சலம் என்ற வந்தேறியின் ஆட்சியில் இந்தியைத் திணிக்க தமிழர் மீது துப்பாக்கிச்சூடு! நூற்றுக்கணக்கானோர் உயிரழப்பு!

    இப்போது கொள்கை, கோட்பாடு, அறிவு, ஆளுமை எதுவுமே இல்லாத விஜயகாந்த் என்ற தெலுங்கு குடிகாரன் தயாராகிறான். இன்னமும் தமிழனுக்கு சகிப்புத் தன்மை வேண்டுமா?

    உலகிலேயே சிறந்த இனம் தமிழினம் தான். இந்த மூத்தக் குடியின் இலக்கியத் தாக்கத்தால் உண்டான மன முதிர்ச்சி! அவனிடம் பரிவு கொள்ளுங்கள் என்று தான் விண்ணப்பிக்கின்றோம்.

  19. ராஜகோபாலாச்சாரி என்ற வந்தேறிப் பார்ப்பனர் 6000 கிராமப்புர பள்ளிக்கூடங்களை மூடினார். மனு தர்மத்தைக் காக்க!

    இதையெல்லாம் வைத்துத்தான் வந்தேறிகளால் நாங்கள் பட்டதெல்லாம் போதும் என்று எழுதினேன்.

    தமிழ்த்தேசம் பிறந்தால், இங்குள்ள அனைவரும், பார்ப்பனர்கள் உட்பட, அவர்களுக்குரிய சம உரிமைகளோடு அமைதியோடும், அன்போடும், பாசத்தோடும் வாழக்கூடிய தேசமாகத் தான் இருக்கும். இதில் யாருக்கும் ஐயப்பாடு வேண்டாம். தமிழன் என்றுமே தமிழன் தான்.

    என்னுடைய அசைக்கமுடியாத, பட்டறிவால் பெற்ற, ஞாணம் என்ன தெரியுமா?

    எந்த சூழ்நிலையிலும் நல்லவனாகவே இருந்தால் நீ அழிக்கப்படுவாய். நல்லவனுக்கு நல்லவனாய் இரு! எதிரிக்கு எதிரியாய் இரு! வாழ்வியல் எதார்த்தம் அது தான். தற்காப்பு எதார்த்தம்!

  20. நண்பர் பாண்டியன் அவர்களே
    “ஒருவர் யாராக இருந்தாலும் அவர் தமிழ் மொழிப்பற்றுடையவராக இருந்தால் நான் அவருக்கு அடிமையே ஆவேன் என்றார் தந்தை பெரியார்.
    அதே போல் உங்கள் மொழிப்பற்றை நான் மதிக்கிறேன்.
    உங்கள் எழுத்துகளை பல இடங்களில் படித்து மகிழ்ந்திருக்கிறேன்.
    இப்போது நான் சொல்ல வருவது என்னவென்றால்,தமிழர்களாகிய நாம் இப்போது தான் ஓரணியில் ஒன்று திரண்டிருக்கிறோம்.
    எனவே நமக்குள் பிரிவினை வேண்டாம். கருத்துகளை ஆரோக்கியத்துடன் பகிர்ந்து கொள்வோம். தொடர்ந்து உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

    -நட்புடன்
    ந.செந்தில்

  21. உங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன் செந்தில்!

    செவ்வியல் மொழியான தமிழை தமிழனுக்கானதாக மட்டும் குறுக்கிப் பார்க்க வேண்டியதில்லை. இந்த வரலாற்றுப் பெட்டகம் அனைவருக்குமானது. அனைத்து உலக மொழிகளின் மூலம் இது.

    நாவாய் -> Naval Force
    பின்னு -> ஸ்பின்னு -> Spinning
    பஞ்சு -> ஸ்பஞ்சு -> Sponge
    பேச்சு -> ஸ்பேச்சு -> Speach
    மூலக்கூறு -> Molecule
    உரையாற்று -> Orate

    ஆங்கிலத்திற்கான சில சான்றுகளை மட்டும் கொடுத்துள்ளேன். சான்றுகள் ஏறாளம்.

  22. டாக்டர் பாண்டியன் அவர்களின் வாதத்தில் உள்ள கருத்துக்களின் மூலம் சில புதிய தகலவல்களை தெரிந்து கொண்டேன் . அவருக்கு மிக்க நன்றி. அவர்களின் கேள்விக்கு மதியுன் பதிலுக்காக காத்திருக்கிறேன்

    //ஆம் தோழர் நான் ஒரு மாததற்கு முன் கீற்று என்ற இனையதளத்தில் உங்கள் கேள்வி-பதில் வருகிறது என்று ஆசிரியர் பக்கத்தில் அறிமுகம் பார்த்தேன் பிறகு உங்கள் கேள்வி-பதிலும் வரவில்லை அந்த அறிவிப்பையையும் காணவில்லை.//

    உண்மையிலேயா ?? தயவு செய்து உறுதி படுத்தவும்

  23. மேலும் சில…..
    ஜப்பானியர்கள் தந்தையை ஐயா என்கின்றனர். வச்சிரபோதி என்ற காஞ்சி முனிவரின் உதவியால் ஜப்பானிய எழுத்துவடிவம் தமிழின் அடிப்படையில் செம்மைப் படுத்தப்பட்டது.

    கொரியர்கள் தாயை அம்மா என்று அழைக்கின்றனர். ‘தாய்லாந்தில்’ உள்ள தாய் அன்னைதான்.

    மலேசிய கோலாலம்பூர் தமிழ்ப்பெயர் தான். சிங்கப்பூரும் அப்படியே! பர்மா, இந்தோநேசியா போன்ற பல நாடுகளில் பல ஊர்களின் பெயர்கள் மருவிய தமிழ்ப் பெயர்களே!

    பரதவர் (மீனவர்) -> பரத்தர் -> பிரத்தர் -> Brittons

    மூத்தக் குடியான தமிழன் தான் பல தொழில் நுட்பங்களை உலகுக்கு அளித்தவன். ஆரியர்களின் கடவுள் சுரண்டலால், அவர்கள் தங்களது பிழைப்பிற்காக நம்மிள் விதைத்த பிற்போக்குத் தனங்களால், தான் நாம் வீழ்ந்தோம், நம்மிடம் கற்ற கிரேக்கம் வளர்ந்தது.

    கட்டிடக் கலைக்கு உலகின் முன்னோடி தமிழன். அரசர்களின் கல் தச்சர்கள் தான் கோயல்களைக் கட்டினார்கள். அதிசயிக்க வைக்கும் கோயில்கள்.

    அரசுத் தச்சன் -> ஆர்சி தெக்கான் -> Architect

    உலோகத் தொழில் நுட்பம் தமிழரால் உருவாக்கப்பட்டது. தாதுப் பொருட்களிடமிருந்து உலோகத்தை பிரித்தெடுக்கும் முறைக்கு ஆதிப்பெயர் கம்மியம் என்பது.

    கம்மியம் -> கெம்மியஸ் -> Chemistry

    இடுகாடு என்பது தமிழரின் ஊர்ப்புறத்தில் உள்ளது.

    ஊர்ப் புற மேடு -> புறமேடு -> பிரமீடு

    பிரமீட்டைக் கட்டிய தச்சர்கள் தமிழ் நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட கல் தச்சர்கள் என்ற வரலாற்று ஆதாரம் இருப்பதாக சொல்கிறார்கள்.

    கால்டுவெல் தான் கிரேக்கத்தின் அருசா வும், ஆங்கிலத்தின் Rice ம் தமிழின் அரிசியிலிருந்து பிறந்த சொற்கள் என்று சொன்னவர்.

    தமிழின் தொன்மை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கத்தான் சில எடுத்துக்காட்டுகளை உங்கள் முன் வைத்துள்ளேன்.

  24. திரு பாண்டியன் அவர்களே…

    விசயகாந்தையும் கருணாநிதியையும் வந்தேறிகளாக நாம் வரையறுக்கத் தேவையில்லை. 1956 மொழிவழி மாநிலப் பிரிவிற்கு பின்னர் தமிழகத்தில் குடியேறிய மலையாளி, தெலுங்கர், மார்வாடிகள, குசராத்திகளைத்தான் வந்தேறிகளாக கணக்கில் கொள்ள வேண்டும்.

    அவர்கள் இங்கு வாழ்வதோடு அல்லாமல் தமிழர்களின் தொழில் வணிகங்களின் ஆதிக்கத்தைத் தான் நாம் எதிர்க்கிறோம்.

    தமிழ்த் தேசியவாதிகள் அம்பேத்கரை வெறுப்பவர்கள் என்ற பிம்பம் கட்டமைக்கபடுவதை பலமுறை நான் கண்டிருக்கிறேன். ஆனால் உண்மையில் அப்படி கிடையாது.

    தமிழர்களை பிளவுபடுத்திய பார்ப்பனியத்தை தான் நாம் சாட வேண்டுமே தவிர தமிழர்களை சாதி வேற்றுமைகள் பாராது ஒன்றுபடுத்தும் தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பது தீர்வாகாது.

    பெண் விடுதலையை போல தலித் விடுதலை என்பது தமிழ்த் தேசிய விடுதலையின் ஒரு முக்கியமான கூறு என்பதை யாரும் மறுக்கவில்லை. தமிழர்களாகிய நாம் நம்மை நாமே சீர்திருத்தததிற்கு உட்படுத்தியே தலித் விடுதலையை நாம் சாதிக்க இயலும். நாம் நமக்குள்ளேயே பிளவுபட்டால் பார்ப்பனியத்தின் வெற்றியை நாமே ஏற்றுக் கொள்வது போலாகிவிடும்.

    தோழமையுடன்,
    க.அருணபாரதி

  25. “ வாழ்க திரு தினேஷ்குண்டுராவ் அவர்களே ! “
    // கர்நாடகத்தில் வாழும் கன்னடர்-தமிழர் இடையே நல்லிணக்கம் மேம்படும்வகையில் தமிழர்கள் இனி தங்களை தமிழ்கன்னடர் என்று கூறிக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். – கர்நாடக உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ்.”// மிகவும் நன்றி .வாழ்க திரு தினேஷ்குண்டுராவ் அவர்களே!!! தாங்கள் இது போல மகாகணம் பொருந்திய ராஜபக்சே அவர்களுக்கு ஒரு அன்புச் செய்தி அனுப்பி தமிழர்களையும் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளச் செய்தால் கோடி நன்றி சொல்வோம். – இப்படிக்கு திராவிடத் தமிழன் மன்னிக்கவும் .தமிழ்த் தமிழன்.
    http://dinamani.com/latest_news/2013/07/27/

  26. பிராமணர் அனைவரும் வந்தேரிகள் அல்ல, உள்ளத்திலும் பேச்சிலும் தூய தமிழர்களும் உண்டு, பிற மொழிகள் பேசும் வந்தேரிகளும் உண்டும். ஒட்டு மொத்தமாக பிராமணர்கள் எல்லோரும் வந்தேரிகள் என சாடுவது வீட்டில் பிற மொழி பேசி ‘தமிழர்கள்’ என சொல்லி நடிப்பவர்களின் ‘சால்ஜாப்பு’.

    மடையன் ‘சோ’ ‘இந்து ராம்’ பிராமணர்களின் ‘பிரதினிதி’ அல்ல..

    ஆரிய திராவிட இனக் கொள்கையே ஒரு ஆங்க்கிலேயக் கட்டுக்கதை. ஆனால் தற்போதைய திராவிட இயக்கம் கன்னட வெந்தேறிகளால்.தோற்றுவிக்கப்பட்டு தெலுங்கு வந்தேரிகளால் தொடரப்படுகிறது. திராவிட இயக்கம் அவர்கள் பிற மொழி அடையாளத்தை மறைக்க இக்கட்டுக்கதை தமிழகத்தில் பரப்ப்பபட்டது.

    திராவிடம் தமிழ் இயக்கம் அல்ல. தமிழ் இனத்தையே அழிக்க நோக்கம் கொண்ட இயக்கம்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading