சாரு நிவேதிதா சாமியாராகி விட்டாரா?

எழுத்தாளர் சாரு நிவேதிதா நித்தியானந்தத்தின் பக்தர். அவரைப் பற்றி உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கலாமே?
–மணி
எனக்குத் தெரியாது. பிறகு தோழர்கள் சொன்னார்கள், ‘சாருநிவேதிதா தீவிரமான நித்தியானந்தனின் சீடர்’ என்று. இவரைப் போன்ற தன்முனைப்புக்காரர்கள், பிற்போக்காளராக இருக்கிறார்கள் என்பதுகூட பிரச்சினை இல்லை. குறைந்தபட்சம் அவர்கள் சொல்லுகிற விசயத்திற்கு அவர்களே கூட உண்மையாக நடந்து கொள்வதில்லை.
திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கு குறிப்பாக ‘கருணாநிதிக்கு எழுதவே தெரியாது’ என்பார்கள். நல்லிகுப்புசாமி செட்டியை, பெரிய இலக்கியவாதியாக பேசுவார்கள்.
‘இளையராஜா திருவாசகத்திற்கு இசையமைக்கப் பணம் வேண்டும் என்றால், அவர் கையில் இருந்து செலவு செய்ய வேண்டியதுதானே? எதற்கு அடுத்தவர்களை எதிர்ப்பார்க்கிறார்?’ என்று காட்டம் காட்டுவார்கள். அவர்களே, ‘என்னுடைய எழுத்துக்களை புத்தகமாக கொண்டுவரவேண்டும். உதவி செய்யுங்கள்’ என்று மற்றவர்களிடம் கையேந்துவார்கள்.
கமல்ஹாசனிடம் வசனம், பாட்டு எழுத வாய்ப்புக் கேட்டு முயற்சி செய்து முடியாதுபோன இலக்கியவாதிகள் பலர், பார்ப்பன எதிர்ப்பாளராக மாறி, கமல்ஹாசன் போன்ற கழிசடைகளை விமர்சித்து, தன்னை மிகப் பெரிய பார்ப்பன எதிர்ப்பாளராகவும் சித்திரி்த்துக் கொள்வார்கள். இன்னோருபுரம், தமிழகப் பார்ப்பன பயங்கரவாதத்தின் குறியீடான தினமலர் நாளிதழின் பார்ப்பனத் தன்மையை ஆதரித்து, அல்லது விமர்சிக்க மறுத்து அதன் முதலாளிகளிடம் பல்லைக் காட்டுவார்கள்.
நித்தியானந்த முதலியார் சுவாமிகள், தன்னுடைய முன்னோடிகளும், சகலபாடிகளுமான ஜெயேந்திரன், விஜயேந்திரன் போன்ற பார்ப்பன சாமியார்களின் ஆசிர்வாதம் பெற்றவர்தான். நித்தியானதத்தின் பலான பிரச்சினை அம்பலமான பிறகு, இந்த சாமியாரை திட்டி சாரு நிவேதிதா, கட்டுரை எழுதியதாகவும தோழர்கள் சொன்னார்கள்.
ஆம்பளையோடு ஆம்பிள, பொம்பளையோடு பொம்பள செக்ஸ் வைத்துக்கொள்கிற மனநோயையே நியாயப்படுத்துகிற பின் நவீனத்துவவாதிகள், பின் நவீனத்துவவாதியைப் போல் வாழ்கிற நித்தியானந்தத்தை ஏன் திட்டுகிறார்கள்?
ஒரு வேளை சாரு நிவேதிதா சாமியாராகி இருப்பாரோ?
தெரியலை…. ஆனா ஒன்னு உறுதி,
சாமியார் சாரு நிவேதிதாவாக மாறிட்டார்.
தொடர்புடையவை :
‘கதவைத் திற’-பக்தர்களுக்கு, ‘கதவை மூடு’-நடிகைகளுக்கு-இளமைத்துள்ளும் ஆன்மீக அருள் ஒளி
காஞ்சி மகா ஸ்வாமிகளின் 116 ஜெயந்தி. இவுரு ரொம்ப… நல்லவரு…
ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?
மாட்றவரைக்கும் சாமியார் மாட்டிக்கிட்டா போலிச்சாமியாரா?
ரமணர் படத்துக்கும் செய்திக்கும் என்ன தொடர்பு.. பிறப்பில் பார்ப்பனராக இருந்தால், அது ஒன்றே போதும் உங்களுக்கு குறைக்கூற ???
//நித்தியானந்த முதலியார் சுவாமிகள்//
நல்ல பகுத்தறிவு., ஜாதியை கண்டிபிடித்து மட்டுமில்லாமல், மற்றாரோடு பகிர்ந்துகொள்ளும் மனநிலையை நினைத்துப்பார்த்தால் புல்லரிக்கிறது.,
சன் டி.விக்கு நல்ல இணை…
//நித்தியானந்த முதலியார் சுவாமிகள்//
மதிமாறன்
ராஜசேகருக்கு (நித்தியானந்) சாதிய கண்டுபுடிச்சவருக்கு உங்க சாதிய கண்டுபிடிக்க தெரியலையா ?
//நித்தியானந்த முதலியார் சுவாமிகள்//
மதிமாறன் (சாதிப்பெயர் ???)
ராஜசேகருக்கு (நித்தியானந்) சாதிய கண்டுபுடிச்சவருக்கு உங்க சாதிய கண்டுபிடிக்க தெரியலையா ?
நித்தியாவின் பக்தர்களே ! கோபம் கொள்ளாதீர்கள் …!
மாட்டிகிட்டா ராஜசேகர் (நித்தியானந்த் ) , மாட்டலேனா பரமஹம்ச நித்தியானந்த சுவாமிகளா !
பெரியாரின் போலி தொண்டரே! கோபம் கொள்ளதீர்.,
ஜாதிஉணர்வு வெளிவராதவரை உண்மை தொண்டன்.,
வெளிபட்டுவிட்டால் போலி தொண்டன்..,
//ரமணர் படத்துக்கும் செய்திக்கும் என்ன தொடர்பு.. பிறப்பில் பார்ப்பனராக இருந்தால், அது ஒன்றே போதும் உங்களுக்கு குறைக்கூற ???//
என்னமா படுத்து இருக்காரு ரமணரு ! செம போசு .. ரமணரு போசு குடுத்துட்டு இருக்குற இந்த இடத்துல ஒரு அழகான நடிகை வந்தா என்ன செஞ்சிருபாரு.. ஒரு வேல அத்துவைதம் சொல்லி பேசி இருப்பாரோ ! ஓ அவரு பிராமணாளா ! பிராமணாள பற்றி யாரும் பேசாதிங்கப்பா !
நித்தியானந்தன் குட்டு வெளிப்பட்டதும் அவனது ஆசிரமத்தை தாக்கும் இந்து பக்த கேடிகள் ,ஜெயேந்திரனின் குட்டு வெளிப்பட்டதும் , ஏன் பார்பன ஜெயேந்திரனின் மடத்தை தாக்கவில்லை. ? அதுக்கு பெயர்தான் சனாதான தர்மம் ! இதை நாம கேட்டோம்னா ,இந்து மத விரோதிகள் ,தேச துரோகிகள், ஜாதி துவேஷிகள் என்று நமக்கு பட்டம் கொடுப்பார்கள் , ஜெயேந்திரனுக்கு லோக குரு பாட்டம் கொடுப்பார்கள் , பார்பனர்களும் ,தங்களை இந்துக்கள் என்று நினைத்து கொண்டிருக்கும் முட்டாள்களும்.
Matt என்ற பெயரில் முகமுடிஇட்டு பின்னூட்டமிடும் உண்மையான பெரியார் தொண்டர் வாழ்க !!!
மடாதிபதிகள் சாமியார்கள் இவர்களில் கூட ஜாதி பார்த்துதான் இந்து மதம் எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டிக்கும். அதான் இந்துத்துவா ! ஆதாரத்துடன் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டும் ,சம்பந்த பட்ட பெண்கள் உண்மைகளை உடைத்தும் காஞ்சி ஜெயேந்திரன் பார்பன பகுதிகளுக்கு வரும் போது தீபாராதனையே நடக்கிறது. அவரு சிறையில் இருந்த போது பார்பனர்கள் பூஜைகள் நடத்தினர் அவர் நல்லபடியாக வெளி வரவேண்டும் என்று. தேவநாத குருக்கள்வாளின் வழக்கிற்கு பார்பன சங்கம் எல்லா விதமான உதவியும் அந்த காம நாயகனுக்கு செய்கிறது. இப்போது தெரிகிறதா ..இந்து மத கடவுள்கள் செய்யாததையா இவர்கள் செய்து விட்டனர் .. கோவில்களில் இருக்கும் சிற்பங்களிலேயே ஆபாசங்கள் நிறைதுள்ளனவே ..! கேட்டால் கலை கண்ணோடு பார்க்கவேண்டுமாம். அப்படி என்றால் இந்து மதத்தின் கலை கண் பால் உறுப்புகளில் தான் இருக்கிறது போலும். இந்த பூமிதான் புனித பூமியாம்.
ஏம்ப்பா, பெரியாரோட பேரைக் கெடுக்குறீங்க.,
வெளியூரில் கடவுள், ஜாதி மறுப்பு பேசி ரெண்டாவது செருப்பை பரிசா வாங்கியவர், பெரியார். நியாயமான கருத்தை, நாகரீகமாகச் சொல்ல தைரியம் வேண்டும்.
நண்பர் //Matt // ஜாதி எதிர்ப்பில், என்னோடு சேர்ந்து, நித்யாவின் ஜாதியை கண்டுபிடித்து வெளியிட்ட வே. மதிமாறனை கண்டிப்பார் என எதிர்பார்க்கிறேன்.,
முரு,
நீங்கள் சாதியை கண்டிக்கிறீர்களா ? அப்போ நீங்கள் இந்து மத விரோதியா..? சாதிதான் இந்து மதம் என்பது புரியாத இந்துவா ..? நித்தியானந்தன் உங்க ஆளா ,இல்ல ரமணன் உங்க ஆளா ..என்னதான் உங்க பிரச்சன ..? காம களியாட்டம் நடத்தும் இந்த பொறுக்கிகளை கண்டிக்காமல் மதிமாறன் மீது ஏன் கோபம். மதிமாறன் சாதியை கண்டு பிடித்து எழுதினார் என்று கோபப்படும் நீங்கள் சாதி இல்லாத இந்துவா…
Matt.,
அன்பு நண்பா.,
என்னோட பிரச்சனையை நான் சரி பண்ணிக்கிறேன். நன்றி.,
காமகளியாட்டம் நடத்திய, நடத்தும், நடத்தப்போகும் முட்டாள்களை புறம்தள்ளுங்கள்.,
பகுத்தறிவு பேசி, ஜாதி பார்க்கும் மதிமாறனை கவனியுங்கள்.(உதவுங்கள்)
சாமியாரை விட பகுத்தறிவுவாதிகள் தான் ஒழுக்கமாக, கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில்,. ஜாதிதான் இந்துமதத்தின் அடையாளம் என சொன்னீர்கள், மதிமாறனிடம் இந்துமத வெறி வெளிப்படுகிறது. அடக்க சொல்லுங்கள்….
முரு எதுக்கு இப்படி கவலை படுறீங்க?
ரமணரை பற்றி யாரும் ஒன்னும் தப்பா பேசலியே?
Vetrikkathiravan
ரமணர் பார்ப்பனர் என்று யாரும் சொல்லைவில்லையே?
அவர் புணூல் கூட அணியவில்லையே?
அப்புறம் எப்படி அவரை பார்ப்பனர் என்று சொல்கிறீர்கள்? அதற்காக கவலைப்படுகிறீர்கள்?
ஞாநி போல் ரமண மகிரிஷியும் முற்போக்காளர் போல… அவரும் புனூல் அணியவில்லையே?
முரு அவர்களே,
நாம் நாத்திகனின் தவறை சுட்டிகாட்டினால் ஆத்திகனாக்க படுவோம் அல்லது இந்து வெறியராக்கபடுவோம்.
அதே ஆத்திகனின் தவறை கூறினால் நாத்திகனாக்க படுவோம் இதுதான் இவர்கள் நீதி.
எனக்கு பார்ப்பன சாயமும் உங்களுக்கு இந்து சாயமும் தான் மிச்சம்
மதிமாறன் பதில் சொல்லமாட்டார் ஏன் என்றால் பெரிய சிந்தனைவாதி அல்லவா -:)
சிந்தனை வாதிகள் பதிலளிக்க மாட்டார்கள் :))))
Matt,
ஒருவரின் ஓரிரு பதிலை வைத்து சாயம் பூச துடிக்கும் பகுத்தறிவாதியாக இருக்கும் உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
//நாம் நாத்திகனின் தவறை சுட்டிகாட்டினால் ஆத்திகனாக்க படுவோம் அல்லது இந்து வெறியராக்கபடுவோம்.
அதே ஆத்திகனின் தவறை கூறினால் நாத்திகனாக்க படுவோம் இதுதான் இவர்கள் நீதி.//
ஆமாம் வெற்றி.,
சீக்கிரம் நமக்கான அடையாளத்தை கண்டுபிடித்து., சம்பாரிக்கும் வழியை பார்க்கவேணும்.
ஏன்ன, ரெண்டு பக்கமும் திருடனுங்க இருக்கத்தானே செய்யுறாங்க…
//சிவராஜ் (09:53:29) :
Vetrikkathiravan
ரமணர் பார்ப்பனர் என்று யாரும் சொல்லைவில்லையே?
அவர் புணூல் கூட அணியவில்லையே?
அப்புறம் எப்படி அவரை பார்ப்பனர் என்று சொல்கிறீர்கள்? அதற்காக கவலைப்படுகிறீர்கள்?
//
இங்கு தேவையில்லாமல் எதற்கு ரமணரை இழுக்கின்றார் என்பது தான் என் கேள்வி, கண்ணைக்கட்டிக்கொண்டு பார்ப்பனர் எதிர்ப்பை காட்டுபவர்களுக்குத்தானே என் பின்னூட்டம் புரியும் உங்களுக்கு எப்படி புரியும் ( அதை நீங்கள் செய்யவில்லை என்றால்),.
அந்த பின்னூட்டம் தோழர் மதிமாறனுக்கு நன்றாகவே புறிந்திருக்கும்.
Vetrikkathiravan
உங்கள் தளத்தில் சேகுவேரா படம் எல்லாம் வைச்சிருக்கீங்க, ஆனால் ரமணர் மிது பாசமா இருக்கீங்க.
கீழே உள்ள இரண்டு வலைபக்கங்களும் அமெரிக்காவில் இருந்து எழுதப்படுகின்றன. இதை எழுதுபவர்களும் comment எழுதுபவர்களும் நித்யனந்தவைப்பற்றி முன்பே அறிந்து வெளியில் வந்த சீடர்கள். நித்தியானந்தா மடத்தைப்பற்றி ஏராளமான ரகசிய தகவல்கள் உள்ளன.
1) http://nithyananda-cult.blogspot.com/
2) http://guruphiliac.blogspot.com/
முரு (07:28:11) :
//நித்தியானந்த முதலியார் சுவாமிகள்//
நல்ல பகுத்தறிவு., ஜாதியை கண்டிபிடித்து மட்டுமில்லாமல், மற்றாரோடு பகிர்ந்துகொள்ளும் மனநிலையை நினைத்துப்பார்த்தால் புல்லரிக்கிறது.,
சன் டி.விக்கு நல்ல இணை…///
என்ன முரு என்கிற முதலியார்வாள் ரொம்ப கோவப்படுறீங்க?
வாழ்க பாதி பகுத்தறிவு., வளர்க்க பாதி பகுத்தறிவு.,
இப்பிடித்தான் இருக்கணும், தப்பை சுட்டிக்காடினலோ அல்லது கேள்வி கேட்டாலோ அவங்களை இப்பிடத்தான் முட்டாள்தனமா மடக்கி பேசமுடியாத மாதிரி செய்யணும்….
மதிமாறன், எனது, வெற்றியின் கேள்விகளுக்கு பெயரிலிகளின் பதில்களை ஒத்துக் கொள்கிறீர்களா?
இவற்றை உங்களின் பதிலாக எடுத்துக்கொள்ளலாமா?
ஏனெனில், பின்னூட்டம் மட்டருதளுக்கு பின் வருவதால், உங்களின் முழு அனுமதியோடு தான வருகின்றன….
அவனிடத்தில் பார்பணீய கூறு இருந்தது என முடித்திருக்கலாம் தோழர்!
பதிவின் நோக்கமே திசை மாறுகிறது!
சாதி மறுப்பு, சாதி ஒழிப்பிற்கு இது அழகல்ல!
பார்ப்பனியத்தின் கைப்பிள்ளை நித்தியானந்தம்.
:)))
//சிவராஜ் (11:47:07) :
Vetrikkathiravan
உங்கள் தளத்தில் சேகுவேரா படம் எல்லாம் வைச்சிருக்கீங்க, ஆனால் ரமணர் மிது பாசமா இருக்கீங்க.
///
நாத்திக வாதி என்பவன் ஆத்திகனை திட்ட வேண்டும் அதேப்போல் ஆன்மீகத்தை நம்புபவன் நாத்திகனை திட்ட வேண்டும் என்பது தான் உங்கள் கருத்தோ -:)))))
ஒருத்தர ஒரு பின்னூட்டத்த வச்சி ஒரு சாயம் பூசுவதால் வந்த பிரச்சனை உங்களுக்கு. தேவை இல்லாமல் ஒருவரை எதற்கு இழுக்கவேண்டும் என்பது தான் என் கேள்வி, இங்கு ரமணருக்கு பதில் பெரியாரின் படம் இருந்திருந்தாலும் இதே போல் கேள்வி தான் என்னிடமிருந்து வந்திருக்கும்.
///வெற்றிக்கதிரவன்
ரமணர் படத்துக்கும் செய்திக்கும் என்ன தொடர்பு.///
எனக்கும் ஏதே கேள்வி தான் எழுகிறது.என்ன செய்ய அவர்கள் பகுத்தறிவு அப்படி.
எனக்கும் இதே கேள்வி தான் எழுகிறது.என்ன செய்ய அவர்கள் பகுத்தறிவு அப்படி.
Vetrikkathiravan (15:17:12) :
//உங்கள் தளத்தில் சேகுவேரா படம் எல்லாம் வைச்சிருக்கீங்க, ஆனால் ரமணர் மிது பாசமா இருக்கீங்க.
///
நாத்திக வாதி என்பவன் ஆத்திகனை திட்ட வேண்டும் அதேப்போல் ஆன்மீகத்தை நம்புபவன் நாத்திகனை திட்ட வேண்டும் என்பது தான் உங்கள் கருத்தோ -:)))))
ஒருத்தர ஒரு பின்னூட்டத்த வச்சி ஒரு சாயம் பூசுவதால் வந்த பிரச்சனை உங்களுக்கு. தேவை இல்லாமல் ஒருவரை எதற்கு இழுக்கவேண்டும் என்பது தான் என் கேள்வி, இங்கு ரமணருக்கு பதில் பெரியாரின் படம் இருந்திருந்தாலும் இதே போல் கேள்வி தான் என்னிடமிருந்து வந்திருக்கும்.///
தவறாக நினைக்காதீர்கள். சிலர் கம்யுனிஸ்ட் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அதை ப்ற்றி ஒன்றுமே தெரியவில்லை.
பெரியாரையும் அம்பேத்கரையும் விமர்சிப்பதற்காகவே சில பார்ப்பனர்கள் கம்யுனிஸ்ட் மாதிரி நடிக்கிறார்கள். அவர்களை போல் ஒரு ஆள் நீங்கள் என்று நினைத்தேன்.
திருவண்ணாமலைக்கு பிச்சைப் பார்ப்பானாக ஓடி வந்த வெங்கட்ரமணன் இந்த நாட்டில் ரமண ரிஷியாகி, கோடிக்கணக்கில் சேர்த்த சொத்துகளை சகோதரனுக்கு எழுதி வைக்கவில்லையா?
சந்நியாசிக்கு வாரிசு ஏது என்று நீதி மன்றம் கேட்ட கேள்விக்கு, நான் சந்நியாசம் வாங்க வில்லையே! என்று அந்தர்பல்டி அடிக்கவில்லையா?
லோகக் குரு என்று சொல்லப்பட்ட காஞ்சிபுரத்து ஆசாமி ஒருவர் கொலை வழக்கில் சிக்கவில்லையா? பெண்கள் விஷயத்தில் ஆகட்டும் எவ்வளவு அசிங்கம்!
ஆனாலும் அந்த ஆசாமி பெரிய மனுஷராக பவள விழா கொண்டாடிக் கொண்டு வீதி உலா வந்து கொண்டுதானே இருக்கிறார்?
சாமியார் தொழிலை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு சாமியாரையும் விசாரணைக்கு உட்படுத்தி குற்றங்களின் அடிப்படையில் கடும் தண்டனையைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் ரமணரிஷிகளும், ஜெயேந்திரர்களும், ஷிவ் முராத் திவிவேதிகளும் நாளும் புழுத்துக் கொண்டு தானிருப்பார்கள், எச்சரிக்கை!
===================
“விடுதலை” தலையங்கம் 2-3-2010
திசைதிருப்புவாதிகள் மிகச் சரியாக வேலை செய்கிறார்கள். நித்தியானந்தனையும் விட்டுவிட்டார்கள், சாரு நிவேதிதாவையும் விட்டுவிட்டார்கள். ரமணனைப் பிடித்துக் கொண்டார்கள்.
ரொம்ப குற்ற உணர்ச்சி மேலிடுகிறது.இந்த ஜெமோ,சாரு ஆகியோரைப்படிக்க முடியாமல் போவதால் கட்டுரைகளை முழுசா விளங்கிக்கொள்ள முடியவில்லை.
மதிமாறன் வாழ்த்துக்கள்
ஒரு கழிசடை இன்னொரு கழிசடையைப் பற்றி விமர்சித்திருக்கிறது . இதற்கு அந்த கழிசடை தக்க பதில் அடியை விரைவில் கொடுக்கும் . முற்போக்கு எழுத்தாளன் என்று கூறி கொண்டு அலையும் இது போன்ற தற்குறிகளை ஊக்குவிக்க வேண்டாம் தமிழினமே!
@vivek:
இங்கே ரெண்டு கழிசடைங்க தானே உரையாடிக்கிட்டிருந்தது, மூணாவது கழிசடை நீ எதுக்கு உள்ளே நுழையுறே?
Dear Mathi thozhar,
This article very nice and perfect to be continue your service to the people.
Truly yours
P.Selvaraj
நித்தியானந்தன் என்னும் பொறுக்கியின் செயலால் தனக்கு ஏற்ப்பட்ட அவமானத்தால் சாறு நிவேதிதா தனது தளத்தில் எழுதிய எழுத்தும்,
பெரியாரின் திருமணத்தால் தனக்கு ஏற்ப்பட்ட அவமானத்தால் அறிஞர் அண்ணா தனது கடிதத்தில் எழுதிய எழுத்தும்
-இரண்டுமே தங்கள் மதிப்பிற்குரிய மாமனிதர்களாக (கடவுளாக) போற்றி வணங்கப்பட்டவர்களின் நம்பிக்கைதுரோகத்தால் எழுந்தவையே.
பொறுக்கி நித்தியானந்தம் மட்டுமில்லை.
சாருநிவேதிதாவின் சந்தர்பப்பவாதத்தை காரணம் காட்டி பெரியாரை நித்தியானந்தத்ததோடு ஓப்பிட்டு எழுதும் இந்த தனபால் என்கிற பெயரில் ஒளிந்திருப்பவன்தான் அசல் பொறுக்கி.
இவனை மாதரி பொறுக்கிகளை ஒழிச்சாலே நித்தியானந்தம் போன்ற பொறுக்கிகளை ஒழிக்கலாம்.
இவனை மாதிரி ஆட்கள் நித்தியானந்ததிற்க கூட்டி கூட குடுப்பானுங்க.
தனபால் மாதிரி ஆட்கள் நித்தியானந்ததிற்க கூட்டி கூட குடுப்பானுங்க.
சதீஷ் அவர்களே,
///பெரியாரை நித்தியானந்தத்ததோடு ஓப்பிட்டு எழுதும் இந்த தனபால் என்கிற பெயரில் ஒளிந்திருப்பவன்தான் அசல் பொறுக்கி////
அப்படியென்றால் நித்யானந்தன் என்னும் பொறுக்கியோடு ரமணரை ஒப்பிட்ட மதிமாரனை நீங்கள் எப்படி அழைப்பீர்கள்???
நித்யானந்தன் என்னும் பொறுக்கியோடு ரமணரை ஒப்பிட்டதைப் பற்றி ஒன்றும் சொல்லாத நீங்கள் யார்???
///தனபால் மாதிரி ஆட்கள் நித்தியானந்ததிற்க கூட்டி கூட குடுப்பானுங்க///
உங்கள் எழுத்து உங்களை இந்த பதிவுலகுக்கு அடையாளம் காட்டுகிறது.
பாலா அவர்களே,
///பெரியாரை நித்தியானந்தத்ததோடு ஓப்பிட்டு எழுதும் இந்த தனபால் என்கிற பெயரில் ஒளிந்திருப்பவன்தான் அசல் பொறுக்கி////
அப்படியென்றால் நித்யானந்தன் என்னும் பொறுக்கியோடு ரமணரை ஒப்பிட்ட மதிமாரனை நீங்கள் எப்படி அழைப்பீர்கள்???
நித்யானந்தன் என்னும் பொறுக்கியோடு ரமணரை ஒப்பிட்டதைப் பற்றி ஒன்றும் சொல்லாத நீங்கள் யார்???
///திருவண்ணாமலைக்கு பிச்சைப் பார்ப்பானாக ஓடி வந்த வெங்கட்ரமணன் இந்த நாட்டில் ரமண ரிஷியாகி, கோடிக்கணக்கில் சேர்த்த சொத்துகளை சகோதரனுக்கு எழுதி வைக்கவில்லையா?
சந்நியாசிக்கு வாரிசு ஏது என்று நீதி மன்றம் கேட்ட கேள்விக்கு, நான் சந்நியாசம் வாங்க வில்லையே! என்று அந்தர்பல்டி அடிக்கவில்லையா?///
ரமணன் உன்னபோல் ஒரு பொறுக்கிதான். அவன் மேல் கோர்ட்டில் நடந்த வழக்கை போய் பார். தெரியும்.
சாமியாருக்கு சொத்து எதுக்கு?
அவன் கட்டியிருக்கறது ஒரு கோவணம். ஆனால் அவன் சேத்து வைச்சிருக்கறது கோடிக்ககணக்கான சொத்து. அதுக்கு வாரிசு அவன் தம்பி. கோயிலுக்கு எழுதி வைச்ச வேண்டியதுதானே?
இவன் ஒரு சாமியாரா?
பெரியாரை சம்பந்தமில்லாம அவரை பற்றி தெரியமா விமர்ச்சிக்கறவனுங்க…. பெரியாருக்கு எதிராக எதாவது பண்ணனும்னா…
மாமா வேலை கூட பாப்பானுங்க…
பாலா மற்றும் சதீஷ் அவர்களே,
நித்யானந்தன் செய்கையால் நொந்து போன சாரு நிவேதிதா எழுதியதை நீங்கள் படித்திருப்பீர்கள்.அதே போல பெரியாரின் திருமணத்தால் அண்ணா கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு நொந்து போன மனநிலையில் எழுதியதின் சில வரிகள் கீழே உள்ளன. அவை இதோ …
………
தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய்,விடுதலை வீரர்களாய்,ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள்,இன்று உடைந்த உள்ளத்தை சுமந்து கொண்டு,வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு,பின்னும் கால்களுடன்,பிசையும் கரங்களுடன் யார் யார் என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும் பொது கல்நெஞ்சமும் கரைந்துவிடும்……..
…………
இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது,பெரியாரின் திருமணச் செய்தி கேட்டு……
……….
நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்க வில்லை.இயக்கம் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத் தலைவர் என ,வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு,எந்த இயக்கத்தவரும்,எந்தத் தலைவரிடமும் காட்டாத அளவு மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம்…
………..
அவரை நாம் பின்பற்றி வந்தது ஏறத்தாழ “பக்தர்கள் அவதார புருஷர்களைப்”பின்பற்றி வந்தது போலவே தான்……
பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்ததைக் கேட்டு,கிழவர்கள் கலங்கினர்,குமரிகள் குதூகலித்தனர்…….
……..பிள்ளை இல்லையென்ற காரணத்துக்காக,சொத்துக்கு வாரிசு இல்லை என்ற காரணத்துக்காக,மனைவியைத் தேடும் கொடுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார்……
“பச்சை கோடி போல ஒரு பெண்ணை ,வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும்,பக்குவமும் கொண்டப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதா?-காரணம் ஆயிரம் காட்டட்டுமே,காட்டினாலும் எந்த மானமுள்ளவன்,இந்தக் கலியாணத்தைச் சரி என்றுக் கூறுவான்? யாருக்கு சம்மதம் வரும்?” என்று அவர் (பெரியார்) பேசிய பேச்சுக் கேட்க்காத ஊரில்லை….
இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர்,தமது 72 -ம் வயதில் 26 -வயதுள்ள பெண்ணை,பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால்,கண்ணீரைக் காணிக்கையாகத் தருவதைத் தவிர வேறென்ன நிலைமை இருக்கும்!
ஏம்பா !திராவிடர்கழகம் !உங்கள் தலைவருக்குத் திருமணமாமே?கேட்கும்போது கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே…..
இதோ பாரய்யா! “சீர்திருத்தம் 72 க்கும்,26 க்கும் திருமணம்”என்று கேலி பேசுகிறார்களே -கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே….
“கையிலே தடி மணமகனுக்கு,!கருப்பு உடை மணமகளுக்கு !!”என்று இடித்துரைகிரார்களே…
“ஊருக்குத் தானையா உபதேசம்!” என்று எடித்துரைகிரார்களே….
எங்கே உங்கள் பிரச்சார யோக்கியதை,என்ன சொல்கிறீர்கள் இதற்க்கு ?எப்படி இந்த அக்கிரமத்தை,அநீதியை அருவருக்கத்தக்க அபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்?என்று சவுக்கடி கொடுப்பது போலப் பேசுகிறார்களே,இனியும் பேசப் போகிறார்களே,-என்ன செய்வோம்-என்ன சமாதானம் கூறுவோம்-எப்படி மனப் புன்னை மாற்ற முடியும்-எப்படி மானத்தை காப்பாற்றிக் கொள்வது,என்று எண்ணினார்.-என்னினதும் தாயோ,தகப்பனோ,மனைவியோ,மகளோ,அண்ணன்,தம்பியோ,உடன்பிறந்தவர்களோ இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தைவிட அதிகமான அளவிலே துக்கம் பீறிட்டுக் கிளம்பி கதறுகின்றனர்-கதறிக்கொண்டேயிருக்கிறோம்-கண்நீருக்கிடையே தான்,இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது….
பொருந்தாத் திருமணம்!புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்!எந்தக் காலத்திலும் எதிரியின் எந்த வீச்சும்,சர்க்காரின் எந்த நடவடிக்கையும்,இன்று நமது இயக்கத் தோழர்களை திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை…..
…முகத்திலே கரி பூசிவிட்டார்.மூக்கறுத்து விட்டார்!மூலையிலே உட்கார்ந்து கதறுகிறோம்-சேதி தெரிந்தது முதல்…
…வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண !
வேதனைப் படுகிறோம் தனிமையிலே!
ஒருவர் கண்ணீரை ஒருவர் துடைக்க முயலுகிறோம்-துடிக்கிறோம்-நெஞ்சத்தில் துயரத்தேன் கொட்டியதால்….
…. எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே!இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்பட வேண்டும்?உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இளித்தக் குற்றம் என்ன?நீங்கள் காட்டிய வழி நடந்தோமே,அதற்கா இந்தப் பரிசு?
எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும்,சமர்த்தான விளக்கம் உரைத்தாலும்,72 – 26 இதை மறுக்கமுடியாதே!இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே!
இதைச் சீர்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்பது மறுக்க முடியாதே! ஏன் இதை செய்கிறீர்,எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிரீர்! கண்நீரத்த் துடைத்தபடி நின்று,ஆயிரமாயிரம் இளைஞர்கள் கேட்கும் கேள்விகள் இவை ………..
இவ்வாறு பெரியாரின் திருமண செய்திகேட்டு அண்ணா வருத்தத்துடன் எழுதுகிறார்.
திரு சதீஷ் மற்றும் பாலா அவர்களுக்கு,
இந்தத் தளம் ஓரளவுக்கு நாகரீகமாகத் தெரிவதாலேயே இந்தத் தளத்திற்கு வந்து மாற்றுக் கருத்தை வைக்கிறேன்.
நீங்கள் பகுத்தறிவு வாதிகள் என்பதாலேயே உங்களிடம் மாற்றுக் கருத்துள்ள பின்னூட்டம் இடுகிறேன்.
என் பின்னூட்டங்களுக்கு சரியான கருத்துக்கள் மூலம் பதிலடி தருவீர்கள் என்று நினைத்தேன்.
ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக,மிகக் கேவலமாக,என் பின்னூட்டங்களுக்கு பதில் தருவதில் காட்டும் அக்கறையை விட என்னை தாக்கி எழுதுவதிலேய அக்கறை காட்டுகிறீர்கள்.
இதே உங்கள் நிலையில்-அதாவது-நான் பெரியார் வாதியாக இருந்து -யாராவது என் பின்னூட்டங்களைப் போல் எழுதியிருந்தால்,அதைவிட ஆயிரம் மடங்கு வலிமையான கருத்துக்களை முன் வைத்து ஒரு கருத்து யுத்தம் நடத்தி இருப்பேன்.
ஆனால் நீங்கள் கோழைத் தனமாக,கேவலமாக நடந்து, என் கருத்துக்களுக்கு பதிலளிப்பதை விட என்னையே தாக்குகிறீர்கள்.
பெரியார்,அம்பேத்கர் போன்றோர்களின் கருத்துக்களை படித்தால் எந்த கேள்விக்கும் பதிலளிக்கும் திறன் வருமே?
அந்தத் திறனோடு எந்த வலிமையான கேள்விக்கும் மிகச் சிறப்பாக பதிலளித்து அதனால் வரும் சந்தோசம் இருக்கிறதே அதற்க்கு ஈடு,இணை கிடையாது.
அதை செய்யாமல் ஏன் நீங்கள் என்னை கேவலமாகத் திட்டுவதால் ஏற்ப்படும் ஒரு அருவருப்பான சந்தோசத்தை விரும்புகிறீர்கள்?
இதுவா உங்கள் நாகரீகம்?
இதுவா உங்கள் பெரியார்,அம்பேத்கர் போன்றோரின் பகுத்தறிவு தந்த நாகரீகம்?
என்னால் உங்களைப் போல் கேவலமாக என் உயிரே போகும் சூழ்நிலை வந்தாலும் என்னால் எழுத முடியாது.
திரு மதிமாறன் அவர்களே,
இதற்க்கு முந்தைய சில பதிவுகளில்,என்னுடைய மூன்று பின்னூட்டங்கள் நீக்கப் பட்டன.இது உங்கள் தளம்,உங்கள் கருத்துக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும் கருத்துக்களை நீக்கி இருக்கிறீர்கள்.இது நியாயமானதுதான்.அதனால் எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை.மேற்கண்ட 45 , 46 ஆகிய பின்னூட்டங்களை இதுவரை நீக்காமல் இருந்ததற்கு மிகவும் நன்றி.என்னுடைய -அதாவது 45 -பின்னூட்டமான அண்ணா,பெரியார் திருமணம் பற்றி கூறியதை வேண்டுமென்றால் நீக்கிக்கொள்ளலாம்.ஆனால் அதற்குப் பின் நான் இட்ட பின்னூட்டத்தை நீக்க வேண்டாம் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
மதிமாறன் அவர்களே, தனபால் என்பவன் மீண்டும் பெரியார் திருமணத்தை நித்தியனந்தத்தோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறான். அவன் எவ்வளவு சொன்னாலும் பெரியார் மீது உள்ள அவனுடைய காழ்ப்புணர்ச்சியைதான் வெளிபடுத்துகிறான்.
பெரியார் அம்பேத்கரை வேறு துணை அழைக்கிறான். மிக மோசமானவனாக இருக்கிறான் பெரிய பொய்யனாக இருக்கிறான். ஜெயேந்திர சரஸ்வதிக்கு மதியம ஒரு மணிக்கு பெண்கைளை அனுப்புகிற மாமா பய…
அதை நீங்கள் நீக்கவிட்டால், அவனை மிக கேவலமாக திட்டி எழுதவேண்டிவரும். அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது.
தனபால் என்பது திருச்சிக்காரனின் இன்னோரு பெயர்
சகோதரர் திரு . சதீஸ் அவர்களே,
பெரியாரைப் விமரிசித்து எழுதினால் அதை பொறுத்துக் கொள்ள உங்களால் இயலவில்லை. பெரியார் வள்ளுவர் , கம்பர் உள்ளிட்ட எல்லோரையும் விமரிசித்து இருக்கிறார். ஆனால் அவரை விமரிசித்தால் அவருடைய தொண்டர்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
நீங்கள் இப்படி திரு. தனபால் அவர்கள் பற்றி அசிங்கமாக எழுதுவது அடிப்படை நாகரீகம் இல்லாதது.
“தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தார் காணப் படும்”
என்பது தமிழ் மறை.
ஒருவரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளே அவரின் நிலையை உணர்த்தும்.
புத்தரின் மீது ஒருவன் தொடர்ந்து துப்பிக் கொண்டே இருந்தானாம். புத்தரும் ஒவ்வொருமுறையும் முகத்தை கழுவிக் கொண்டே இருந்தாராம். ஏன் இப்படி என்று கேட்டதற்கு அவருடைய வாயிலுள்ள அசுத்தம் எல்லாம் வெளியே வரட்டுமே என்றாராம்.
நீங்கள் எழுதும் வார்த்தைகளைக் கேட்டால் உங்கள் நெருங்கிய உறவினர் கூட முகம் சுளிப்பார். நாளைக்கு உங்கள் மகன் பெரியவனாகி அவனுக்கு திருமணம் நடந்தால், உங்களுடைய மருமகள் முன்னாள் இது போன்ற வார்த்தைகளை பேச முடியுமா என எண்ணிப் பாருங்கள். இக் காலப் பெண்கள் அதிக சுதந்திரமும், மன வலிமையையும் உடையவர்களாக உள்ளனர். ஆகையால் கோவம் வரும் நிலையிலும் நிதானத்தைக் கைவிட வேண்டாம் என்று ஒரு சகோதரன் என்ற முறையிலே உங்களுக்கு கூறிக் கொள்கிறேன்.
பெரியார் பற்றிய விமரிசனக்கட்டுரை விரைவில் நமது தளத்தில் வெளியாகும். உங்களுக்கு நேரம் கிடைக்குமானால் அதையும் படிக்கலாம்.
//அதை நீங்கள் நீக்கவிட்டால், அவனை மிக கேவலமாக திட்டி எழுதவேண்டிவரும். அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது.//
சரி. இந்த தளத்திலே நீங்கள் திட்டி எழுதுவீர்கள். பொறுப்பு ஏற்க மாட்டீர்கள். சகோதரர் வே. மதிமாறனும் அவற்றை மட்டுறுத்தாமலே வெளியிடுவார். ஆனால் உங்களின் வசவுகளுக்கு பயப் படாமல் தொடர்ந்து இன்னும் அப்பட்டமான உண்மைகளை வெளியிட்டால் என்ன செய்வீர்கள்? விமரிசனங்களை தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்.
பெரியாரை விமரிசிக்கக் கூடாதா? தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தி விடும் என்று சிறுவர்களை பயமுறுத்துவது போல பெரியாரை விமரிசித்தால் பெரியார் கண்ணைக் குத்தி விடுவாரா? பெரியார் கடவுளா? அப்ப கடவுள் என்று ஒருவர் இருப்பதாக கருதுகிறீர்களா?
பெரியாரை விமரிசித்தால் தெய்வக் குத்தமா? பகுத்தறிவுக் குற்றமா? பகுத்தறிவுக் குற்றம் என்றால் நேர்மையான விவாதத்தில் ஈடு பாடலாமே? இப்படி டாஸ் மாக் வார்த்தைகளை உபயோகித்தால் பயந்து விடுவார்களா?
மிகக் கேவலமாக திட்டுவது என்ன பெரிய வீரமா? இந்தியாவிலே எல்லோருமே மிக மிகக் கேவலமாக திட்டுவதில் தேர்ச்சி பெற்றவர்கள்தானே? எனவே நாகாக்க பழகுங்கள்
நன்றி திருச்சிக்காரன்.
அன்புக்குறிய சகோதரர் சிராஜ் அவர்களே,
நான் சகோதரர் வே. மதிமாறனின் தளத்தில் தொடர்ச்சியாக பல பின்னூட்டங்களை இட ஆரம்பித்தது ஆகஸ்டு மாதத்திலெ.
அப்போது முதல்
திருச்சிக் காரன் தான் அதியமான் என்பவர்,
திருச்சிக்காரன் பொய் முகம் என்ற பெயரில் எழுதுகிறார்,
ஆட்டோ சங்கர் என்பது திருச்சிக்காரனின் இன்னோரு பெயர்
தனபால் என்பது திருச்சிக்காரனின் இன்னோரு பெயர்
…. இப்படியாக கம்ப்யூட்டர் மூலம் பார்க்காமலே என் ஜாதகத்தைக் கணிக்கும் ,பகுத்தறிவு பூசாரிகள், எனக்கு லட்சார்ச்சனையே நடத்தி விடுவார்கள் போல இருக்கிரது.
சிராஜ் என்ற பெயரில் எழுதுபவர் திருச்சிக்காரன் தான் என்று சொன்னால் அது எப்ப்டி இருக்குமோ, அதை போலத்தான் தனபால் என்பது திருச்சிக்காரனின் இன்னோரு பெயர் என்று சொல்வதும்.
சகோதரர் வே. மதிமாறனின் தளம் பாப்புலரான தளம். பலரும் அதை படித்து பின்னூட்டம் இடுகின்றனர். எல்லா பெயரிலும் எழுதுவது திருச்சிக் காரன் தான் என்று அலேக் நிரஞ்சன் ஜீபூம்பா போல எழுதாதீர்கள்.
தனபால் என்பது நான்தான் என்று ஒத்துக்கொண்டதிருச்சிக்காரரின் நேர்மையை நானும் பாராட்டுகிறென்.
சகோதரர் சதீஸ் அவர்களே,
இது போல கணிணியின் மூலமே ஒருவரின் ஜாதகத்தைக் கணிக்கும் பகுத்தறிவை எங்கிருந்து , யாரிடமிருந்து பயின்றீர்கள்?
பெரியாரின் தொண்டர்கள் இப்படி அவசரப் பட்டடு ஆரூடம் சொல்வதால் தானெ உண்மையான பகுத்தறிவாளர்கள் உங்களைப் பார்த்து கேலி பேசும் நிலை உருவாகிறது.
இப்போது நானும் , திரு. தனபால் அவர்களும் வெவ்வேறு நபர்கள், நாங்கள் இருக்கும் இடம் வேறு, வேறு, இதை எல்லாம் ஆதரத்தோடு எங்களால் நிரூபிக்க இயலும்? அப்படி நிரூபித்தால் நீங்கள் இப்படி அவசரப் பட்டு ஆரூடம் சொன்னதற்க்கு என்ன செய்வீர்கள்?
எனவே அவசரப் படாமால் பகுத்தறிவோடு சிந்தியுங்கள்.
வழக்கம் போல தலைபிற்கு சம்பந்தம் இல்லாமல் விவாதம் சென்று விட்டதா ..? தனபால் போன்ற பார்பனர்கள் அல்லது சூத்திர இந்துக்கள் ,இந்து மதத்தின் உண்மை முகம் வெளி வர வெளி வர கோபம் கொள்வது இயல்பே ,அதற்காக அவர்கள் தங்கள் மதத்தை சரி செய்து கொள்ள முன் வரமாட்டார்கள். ஏனெனில் இந்து மதத்தின் இத்தகைய இழிநிலையே அதன் அடிப்படை. அதனால் பெரியாரையும் அம்பேத்கரையும் இகழ்ந்து பேச தொடங்கி விடுவர். தங்களுக்கு பிடிக்காதவர்களை பற்றிய கட்டு கதைகள் தானே புராணங்கள். இது ஒன்றும் அவர்களுக்கு புதிது அல்லவே. ஆதலால் தோழர்களே யாரும் கோபம் கொள்ளாதீர்கள். ஏனெனில் அவர்கள் நம்மையும் நம்மை இழிவிலிருந்து விடுவித்த அந்த ஒப்பற்ற தலைவனையும் இகழ்வதே நமக்கான அங்கீகாரம் .
பார்பனர்கள் நம்மை அளவுக்கு மீறி பாராட்டினால் நாம் சிந்திக்க வேண்டும் , எங்கே நாம் சரியான பாதையில் தான் செல்கிறோமா என்று – தந்தை பெரியார்.
அசிங்கம் பிடித்த இந்து மதம் தன்னை தானே வெளிப்படுத்தி கொள்கிறது ரமணன், சந்திரசேகரன் , பிரேமானந்தன் ,ஜெயேந்திரன், சாய்பாபா , தேவநாதன் , நித்தியானந்தன் போன்ற கழிசடைகளின் மூலமாக. நமக்கு வேல மிச்சம் !
சகோதரர் Matt அவர்களின் பின்னூட்டம் உதவியானதே. கோவத்தை விலக்கி நிதானப் போக்கை கடைப் பிடிப்பது சமூக ஒருங்கிணைப்புக்கு, சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைக்க உதவியாக இருக்கும்.
அதே நேரம் இன்னும் சாதிப் பட்டங்களைக் கட்டாயப் படுத்தி சூட்ட வேண்டியது அவசியம் தானா? மக்கள் சாதி அடையாளங்களை களையும் நேரத்திலே, கட்டயப் படுத்தி சாதிப் பட்டம் சூட்டுவது பின்னடைவை உருவாக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
திரு சிராஜ் மற்றும் திரு சதீஷ் ,
நானும்,திருச்சிக்காரர் அவர்களும் வேருவேரானவர்களே.நாங்கள் இருவரும் இந்தத் தளத்தில் உள்ள பல கட்டுரைகளுக்கு பின்னூட்டங்கள் எழுதி வருகிறோம்.நான் திருச்சிக்காரர் அவர்களின் தளத்திலும் அவ்வப்போது பின்னூட்டம் இட்டு வருகிறேன்.எங்கள் இருவரின் எழுத்து,கருத்துக்கள் போன்றவற்றை நீங்கள் உங்கள் பகுத்தறிவின் மூலம் சிறிது ஆராய்ந்தாலே,நாங்கள் இருவரும் வேறுவேறானவர்கள் என்று தெரிந்துவிடும்….
Matt
///தனபால் போன்ற பார்பனர்கள் அல்லது சூத்திர இந்துக்கள் ,இந்து மதத்தின் உண்மை முகம் வெளி வர வெளி வர கோபம் கொள்வது இயல்பே ,அதற்காக அவர்கள் தங்கள் மதத்தை சரி செய்து கொள்ள முன் வரமாட்டார்கள். ஏனெனில் இந்து மதத்தின் இத்தகைய இழிநிலையே அதன் அடிப்படை. அதனால் பெரியாரையும் அம்பேத்கரையும் இகழ்ந்து பேச தொடங்கி விடுவர். தங்களுக்கு பிடிக்காதவர்களை பற்றிய கட்டு கதைகள் தானே புராணங்கள். இது ஒன்றும் அவர்களுக்கு புதிது அல்லவே.////
அருமையான கருத்து. மிகச் சிறப்பாக சொன்னீர்கள் Matt. ஆனால் இதற்கு சரியாக யாரும் பதில் எழுதமாட்டார்கள்.
திருச்சிக்காரன் வழக்கம்போல் சம்பந்தமில்லாமல் எழுதியிருக்கிறார்.
தந்தை பெரியார் அவர்களின் திருமணத்தைப் பற்றி திரு தனபால் பின்னூட்டமிட்டிருக்கும் அறிஞர் அண்ணாவின் கருத்துக்கள் புதிய ஒன்று அல்லவே… தந்தை பெரியார் அவர்களின் திருமணம் இல்லற இன்பத்தை நோக்கமாகக் கொண்டா ? அதுதான் நோக்கமென்றால் அண்ணாவின் இந்தப் புலம்பல் நீதியானதே.. ஆனால், பெரியாரைச் சுற்றியிருப்பவர்களின் நோக்கம் என்ன என்பதை அவர் சரியாகக் கணித்ததால்தான் அந்தத் திருமணம். அது காலத்தின் கட்டாயம். இவர்களின் நொக்கம்தான் அரசு அதிகாரத்தை உருசிக்க வேண்டும், அனுபவிக்க வேண்டுமென்றே காய் நகரத்தியவர்களாயிற்றே! எந்த நோக்கத்திற்காக தந்தை பெரியாரவர்கள் திராவிட இயக்கம் கண்டார்களோ அந்த நோக்கத்தையே குழிதோண்டிப் புதைக்கும் செயலை ÔகருணாÕ போன்றவர்களும் அவர்களின் தலையும் செய்துகொண்டே, பெரியாரிடமிருந்து கொண்டே, சங்கரமடம் வழியாகக் கோட்டையை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். அப்படிப் போய்ச் சேர்ந்தவர்களின் சீரழிவைத்தான் பார்க்கிறோமே நாம்? இவர்களின் செயல் பாடுகளை சரி என்று தனபால் போன்றோர் ஏற்றுக் கொள்கிறீர்களா? அப்படி, இவர்கள் சரியானவர்கள்தான் என்று நிரூபிக்கும் போதுதான் அவர்களின்
கருத்தை நாங்கள் ஒரு பொருட்டாகக் கருதமுடியும், அதற்குப் பதில் சொல்லமுடியும், தவறானவர்களின் கருத்தைப் பின்னூட்டமிடுபவர்களும் தவறானவர்களே..
விமர்சனத்துக்கு யாரும் விதிவிலக்கல்ல, வமர்சனத்தினாலேயே பகுத்தறிவுப் பாதைக்கு திரும்பியவர்கள்தான் பெரியார்த் தொண்டர்கள். அய்யாவின் முதன்மைக் கருத்தே விமர்சனக் கருத்துதான். விமர்சனத்தைக் கண்டு அஞ்சுவர் பெரியார்த் தொண்டர் அல்ல, தன் வழியை நேராக்க விமர்சனத்தை அளவுகோலாகப் பயன் படுத்திக்கொள்வார்கள் பெரியார்த் தொண்டர்கள்.
விமர்சனத்தின் நோக்கத்தைக் கணக்கிட்டே அதன் எதிர்க் கருத்தும் அமையும்.
பெரியார்க் கொள்கை எந்த சமரசத்தையும் ஏற்காது, அதனால்தான் பார்ப்பனர்களின் கடுமையான எதிர்ப்பை இன்று வரைக்கும் சந்திக்கிறது, மதவெறியர்களும், சாதி வெறியர்களூம்
எல்லா தலைவர்களையும் தமக்குள் ஈர்த்துக் கொண்டார்கள்.. ஆனால் பெரியாரை மட்டும் அவர்களால் அணுகவே முடியவில்லை. பெரியாருடையக் கொள்கைகள் சமரசமற்றக் கொள்கைகள்.
காசிமேடு மன்னாரு.
காசிமேடு மன்னாரு.
சிறப்பான பார்வை. சரியான விளக்கம். தொடர்ந்து எழுதுங்கள்.
உங்களைப்போல் நியயமாக எழுதுபவர்கள், எப்போதாவதுதான் எழுதுகிறீர்கள்.
ஆனால் பொய் பின்னூட்டம் போடும் சாதி வெறிபேர் வழிகள்தான் தொடர்ந்து அவதூறுகளை பரப்புகிறார்கள்.
திரு சதீஷ் அவர்களே,
///அருமையான கருத்து. மிகச் சிறப்பாக சொன்னீர்கள் Matt. ஆனால் இதற்கு சரியாக யாரும் பதில் எழுதமாட்டார்கள்.///
என் பின்னூட்டங்களால் உங்களுக்கு ஏற்ப்பட்ட மன வருத்தம் இயல்பானதே.அதனால் இனி இந்த தலைபிற்கு பதில் எழுத வேண்டாம் என்று நினைத்திருந்தேன்.///இதற்கு சரியாக யாரும் பதில் எழுதமாட்டார்கள்.///என்றதை பார்த்த உடன் எனக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைத்த காரணத்தால் இந்த பதில்.இது சரியான பதில் இல்லை என்பது எனக்கே தெரியும்
திரு MATT அவர்களே,
///இந்து மதத்தின் உண்மை முகம் வெளி வர வெளி வர கோபம் கொள்வது இயல்பே///
இதில் இந்து மதத்தின் உண்மை முகம் என்று எதைக் கூறுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.நீங்கள் கூறியதைப் பார்த்தால் இந்து மதத்தின் அடிப்படையே உங்களுக்கு தெரியவில்லைஎன்று கருதுகிறேன்.நீங்கள் கூறுவது நித்யானந்தன் மாட்டிக் கொண்டதையா.??அப்படியென்றால் நீங்கள் கூறியது எனக்குப் பொருந்தாது என்றே நினைகிறேன்.ஏனென்றால் நித்யானந்தன் மாட்டிக்கொண்டபோது அதிக சந்தோசப் பட்டவர்களில் நானும் ஒருவன்.இதை இதே மதிமாறன் தளத்தில்,மற்றும் திருச்சிக் காரர் தளத்தில்,நான் இட்ட பின்னூட்டங்களைப் படித்தால் புரியும்.
http://mathimaran.wordpress.com/2010/03/03/artical285/
ஆனால் நீங்கள் கூறுவது,ரமணரை என்றால்.நான் சில வாத்தைகள் கூறக் கடமைப் பட்டுள்ளேன்.
///ஒய்யாரமாக மன்னிக்கவும் ஓய்வாக ரமண மகரிஷி சுவாமிகள்-நல்லவேளை இவர் காலத்துல ரகசிய கேமரா இல்ல ///
இந்தக் கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத ரமணரின் படமும்,அதன் கீழ் உள்ள வரிகளில் காணப்பட்ட ரமணர் அந்தக் காலத்தில் ரகசியக் கேமரா இருந்திருந்தால் மாட்டியிருப்பார் என்று கருதும் விதமாக ,வெறும் யூகத்தின் அடிப்படையில்,எந்த ஒரு சிறிய அடிப்படை ஆதாரமும் கூட இல்லாத ஒரு விஷயத்தை எழுதியிருக்கிறார்.ஏன் அவரை இப்படி ஆதாரம் இல்லாமல் ஒரு விசயத்தைக் கூறுகிறீர்கள் ?என்று கேட்டால் சொத்துக் கதையை கூறுகிறார்கள்.அப்படி என்றால் இந்த வரிகள் உண்மை இல்லை அல்லவா?உண்மையாக இருந்திருந்தால் அவர் வாழ்ந்த காலத்திலும்,மறைந்து இத்தனை ஆண்டுகளாக ஒரு சிறிய வார்த்தை கூட அதைப் பற்றி பேசப் பட வில்லையே !!!அப்படி ஏதும் இருந்திருந்தால், இந்த சொத்து விஷயம் தெரிந்த மாதிரி தெரிந்திருக்குமே??? இப்படி ஆதாரம் இல்லாத உண்மையென்று நிருபிக்காத விஷயத்தை நீங்கள் நம்புகிறீர்கள்.???நீங்கள் நம்புவதற்கு அதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற ஒரு காரணம் மட்டுமே போதும்..இதற்க்கு பகுத்தறிவை பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.என்ன தான் பகுத்தறிவு வேடம் போட்டாலும்,பல விசயங்களில் நாம் மூளை சொல்வதைவிட மனம் சொல்வதை தான் ஏற்றுக் கொள்கிறோம்.ஆனால், ஒரு அடிப்படை ஆதாரம் கூட இல்லாத,உண்மையில்லாத விஷயத்தை கண்டால் ஒரு உண்மைப் பகுத்தறிவாளனுக்கு வரும் கோபம் போலவே எனக்கும் கோபம் வந்தது.ஆனாலும் அதை மென்மையாகவே பின்னூட்டம் மூலம் வெளிப்படுத்தினேன்.
அதை இங்கே காணலாம்.
தனபால் (16:09:59) :
///வெற்றிக்கதிரவன்
ரமணர் படத்துக்கும் செய்திக்கும் என்ன தொடர்பு.///
எனக்கும் இதே கேள்வி தான் எழுகிறது.என்ன செய்ய அவர்கள் பகுத்தறிவு அப்படி.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
நித்யானந்தன் நடிகையுடன் இருந்ததால் பிடிபட்டான்.அதனால் அவனின் பக்தர்கள்??? மன வேதனை அடைந்தார்கள் .அவனின் பக்தரான சாரு நிவேதிதாவும் மன வேதனை அடைந்து தன தளத்தில் தனது கருத்தை எழுதினார்.இந்தக் கருத்தை நானும் படித்தேன்.அவரது புலம்பல் எனக்கு பெரியாரின் திருமணத்தால் மனம் உடைந்த அண்ணா வேதனையில் எழுதிய கடிதத்தை ஞாபகப் படுத்தியது.இரண்டு பேரின் எழுத்துக்களையும் படித்து உங்கள் பகுத்தறிவால் சிந்தித்துப் பாருங்கள்.இரண்டு பேரின் மன வருத்தமும் ஒரே தளத்தில் இருந்து வெளிப்பட்டவை என்றுப் புரியும்.நான் பெரியார் செய்ததை தவறு என்று கூறவில்லையே.அவர் செய்தது சட்டப் படி தவறு அல்ல.திருமணம் என்பது அவரவர் விருப்பம்,தேவை,சூழ்நிலையைப் பொறுத்தது.நான் ஒப்பிட்டது சாரு நிவேதிதா எழுத்தையும்,அண்ணாவின் எழுத்தையும் தான்..நித்யானந்தரையும் பெரியாரையும் அல்ல.மீண்டும் என் பின்னூட்டங்களை நிதானமாகப் பார்த்தால் புரியும்.நான் குறிப்பிட்டதும் அண்ணாவின் எழுத்தைத்தான். நானாக எதையும் பொய்யாக,புதிதாக எழுதவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
///அதனால் பெரியாரையும் அம்பேத்கரையும் இகழ்ந்து பேச தொடங்கி விடுவர்.//
நான் வரலாற்றில் இடம்பிடித்த உண்மை நிகழ்ச்சியையும், அண்ணாவின் கடித்தத்தையுமே குறிப்பிட்டேன்.என் எழுத்தில் உண்மை மட்டுமே இருந்தது.
///இந்து மதத்தின் உண்மை முகம் வெளி வர வெளி வர கோபம் கொள்வது இயல்பே///
எனக்கு உண்மையைக் கண்டு கோபம் இல்லை.ஆதாரம் இல்லாத பொய்யைக் கண்டு தான் கோபம்.ஆனால்,என் பின்னூட்டத்தில் இருந்த வரலாற்றில் இடம் பிடித்த உண்மை நிகழ்வும்,அண்ணாவின் உண்மைக் கடிதமும் உங்களுக்கு கோபத்தை ஏற்ப்படுத்தியது.நீங்கள் கூறியது போல் உண்மை வெளிவர வெளி வர கோபம் வந்தால் இயல்பு என்று எடுத்துக் கொள்ளலாம்.ஏற்கெனவே வெளிவந்த,பழைய,எல்லோருக்கும் தெரிந்த உண்மையைக் கண்டு கோபம் ஏன்?இது ஒன்றும் புதிதில்லையே.???,
திரு MATT மற்றும் காசிமேடு மன்னாரு,
உங்கள் இருவரின் பின்னூட்டமும் நன்றாக இருக்கிறது.காசி மேடு மன்னாரு அவர்களே உங்கள் பின்னூட்டம் மிகவும் அருமை.இந்த மாதிரி பின்னூட்டங்களைத் தான் நான் எதிர்பார்த்தேன்.உங்களைப் போன்றவர்களின் பின்நூட்டங்களுக்காகத் தான் இந்தத் தளத்திற்கு நான் தவறாமல் வருகிறேன் நன்றி.
//ஆனால் இதற்கு சரியாக யாரும் பதில் எழுதமாட்டார்கள்.
திருச்சிக்காரன் வழக்கம்போல் சம்பந்தமில்லாமல் எழுதியிருக்கிறார்.//
நான் எழுதும் பதில் மட்டுறுத்தல் என்ற பெயரில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
சாதி வெறியும், சுயநலமும் , மோசடி பேர்வழியுமான ரமணர் போன்ற சாமியார்களையும் நீங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தவேண்டும்.
ரமண மகரிஷரி போன்ற மனிதர்களை கடவுளாக கும்பிடும் இந்த மூடர்களின் மனநோயை தெளிய வைக்கவேண்டும்.
தனபால் அவர்களே, இந்து மதத்தின் அடிப்படை மட்டுமல்ல அதை பற்றி மிக நன்றாகவே தெரியும். அதனால் தான் அதன் அடிப்படையை விமர்சிக்கிறேன்.
இந்து மதத்தை பற்றிய சில உண்மைகள்..
௧) இந்து மதம் என்பது ஒரு மதமே அல்ல. சாதிகளின் கூட்டமைப்பு.பார்பனர்களால் உருவாக்கப்பட்டது. சாதியே அதன் அடிப்படை சாதி ஒழிந்தால் இந்து மதம் ஒழிந்து போகும் .அதனால் தான் சாதிகள் காப்பாற்றப்பட்டு வருகிறது.
௨) நீங்க மேலோட்டமாக பேசுகிறீர்கள் , அத்துவைதமே இந்து மதம் உபநிடதமே அதன் சாரம் என்பவர்கள் கூட சாதி நம்பிக்கை உள்ளவர்களே. அத்துவைத தத்துவமோ, அல்லது ஓரிறை கொள்கையோ புத்த மதத்தில் இருந்தும் தமிழ் மறைகளில் இருந்தும் திருட பட்டவை. சரி இந்து மதம்(பார்ப்பனீயம்) கூறும் அத்துவைதம் மேலான கொள்கையோ என்றால் அது கடைசியில் முட்டு சந்தில் நிறுத்துமே அல்லது வேறொன்றும் செய்யாது.
இந்து என்றால் என்ன?
௩) பார்பனர்கள் தங்கள் குறுக்கு புத்தியால், மற்ற மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொண்டு தங்களுக்கு சாதகமான வேதத்தை தர்மத்தை(தர்மம் என்கிற பெயரால்) உருவாக்கி கொண்டு மற்ற மக்களை தீண்ட தகாதவர்களாகினர். முஸ்லிம்களின் படையெடுப்பின் போது இந்த பார்பனர்களுக்கு, சத்திரியர்களுக்கு(பார்பன கூலிகள்) ஒதுக்க பட்ட மக்களின் ஆதரவு கிடைக்க வில்லை. தோல்வியுற்றனர். கோவில் வாசலையே பார்க்க முடியாத ஒதுக்கபட்டவர்கள் இஸ்லாமின் யார் முன்னே வருகிறாரோ அவர் முன் வரிசையில் தொழலாம் என்பது போன்ற சம உரிமைகளில் ஈர்க்கப்பட்டனர். பிறகு கிறித்துவர்கள் … இப்போது பார்பனர்களுக்கு பார்பன அடிவருடிகளான மேல் சாதி காரர்களுக்கு ,எங்கே நமது மேலாண்மை போய்விடுமோ என்கிற பயம் வந்தவுடன் இஸ்லாமியர்களையும் வெள்ளை காரர்களையும் பார்த்து அவர்கள் மிலேச்சர்கள் ,கிருத்துவர்கள் வேருனாட்டவர் , நாமெல்லாம் இந்துக்கள் என்று கூவ தொடங்கினர்.
௪) ஆங்கிலேயன் மக்களை பகுத்து பார்க்கும் போது , அராபிய பழக்கமுல்ல இஸ்லாம் , ஆங்கிலேய பழக்கம் உள்ள கிருத்துவம் தணிக தெரிந்தது. இந்திய பகுதில் உள்ள அனைவரின் பழக்கமும் வெளியில் இருந்து பார்பவனுக்கு ஒரே மாதிரிதான் தெரியும்,அவனுக்கும் தெரிந்தது எல்லோரையும் இந்துக்கள் என்றான். பார்பனர்கள் அதை அப்படியே பிடித்து கொண்டனர். இன்று வரை இந்த இழவு தொடர்கிறது.
சகோதரர்கள் Matt, Dhanapal மற்றும் அனைத்து சகோதரர்களே,
என்னுடைய பின்னூட்டம் இங்கே நிறுத்தப் பட்டுள்ளது. ஆனால் சகோதரர் வே. மதிமாறன் மீது எனக்கு வருத்தம் இல்லை. அவர் தளத்தில் வரும் பின்னூட்டங்களை தடுத்து நிறுத்தும் முழு உரிமையும் அவருக்கு உண்டு. ஆனால் நாம் தவறான வார்த்தைகள் எதுவும் உபயோகிக்காமல் கண்ணியமாக எழுதிய போதும் நம்முடைய பின்னூட்டம் நிறுத்தப் பட்டுள்ளது. எனவே அந்தப் பின்னூட்டத்தை எனது தளத்தில் வெளியிடுகிறேன்.
உண்மையை சந்திக்க தயங்காதவர்கள் என்னுடைய தளத்தில் வந்து விவாதிக்கலாம். அங்கே யாருடைய கருத்தும் மட்டுறுத்தப் படவில்லை. அசிங்க வார்த்தைகள், ஆபாச வார்த்தைகள், சாதாரண திட்டுக்கள், கேவலமான திட்டுக்கள் – இவை மட்டும்( அந்த வார்த்தைகள் மட்டும்) மட்டுறுத்தப் படும்.
இதுகாறும் என் பின்னூட்டங்களை வெளியிட்ட சகோதரர் வே. மதிமாறனுக்கு நன்றி. தேவைப்படும் போது மதிமாறனின் தளத்திலே மீண்டும் பின்னூட்டம் இடுவோம். ஏற்பதும், மறுப்பதும் அவர் உரிமை.
திரு MATT அவர்களே,
///௧) இந்து மதம் என்பது ஒரு மதமே அல்ல. சாதிகளின் கூட்டமைப்பு.பார்பனர்களால் உருவாக்கப்பட்டது. சாதியே அதன் அடிப்படை சாதி ஒழிந்தால் இந்து மதம் ஒழிந்து போகும் .அதனால் தான் சாதிகள் காப்பாற்றப்பட்டு வருகிறது.///
இதைப் பற்றி இன்னொரு இந்து மதம் சம்பந்தமான தலைப்பில் விவாதிப்போம்.நன்றி.
puththi ullavanukku pakthi iruppathillai..
pakthi ullavanukku puththi iruppathillai.
puththi ullavanukku pakthi iruppathillai
pakthi ullavanukku puththi iruppathillai–periyaar
யாரிடம் தவறு இருக்கிறதோ அவருக்குத்தான் கோபம் முதலில் வரும். அதன் அடிப்படையில் பார்த்தால் தனபால் மேல் தவறு இருப்பதாக தெரியவில்லை