தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை

scan0001

திரு. குளோரியஸ் ஸ்டீவ் ச.ச அவர்களை ஆசிரியராக கொண்டு, தொன்போஸ்கோ கல்வி நிறுவனத்தாரால், நடத்தப்படுகிற ‘சலேசியன் செய்தி மலர்’ ஜீலை மாத இதழில்  சிறப்புப் பேட்டியாக என்னுடைய பேட்டியை வெளியிட்டு இருந்தார்கள். தோழர் ஆ.புத்திரன் எடுத்தப் பேட்டியை அவரின் முன்னுரையோடு அப்படியே தருகிறேன்.

-வே. மதிமாறன்.

ன்றையு தமிழ் சூழலில் வே.மதிமாறன் பற்றி சொல்லவேண்டியவை நிறைய உள்ளன. மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனையாளர், எழுத்தாளார், ஆய்வாளர், சமூக ஆர்வலர் என்று பல பாரிமாணங்களில் தீவிரமாக இயங்கிவருபவர்.

பாரதியார் ஒரு பார்ப்பன இந்து கண்ணோட்டம் கொண்ட எழுத்தாளர் என்பதை தனது ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி என்ற நூலில் ஆதாரத்தோடு எழுதி பெரிய சர்சையை உண்டு பண்ணியவர். சமூக விழிப்புணர்வு மாத இதழில் வாசகர் கேள்விகளுக்கு இவர் அளித்த பதில்கள் அடங்கிய ‘வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகம் முற்போக்காளர்கள் மத்தியில் புகழ் பெற்றது.

டாக்டர் அம்பேத்கரை தலித் அல்லாதவர்கள் விரோதிகளாக பார்ப்பதை கண்டித்து, அவர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் நிறைய செய்திருக்கிறார் என்று பல ஆதாரங்களை காட்டி ‘நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கடிமை யாருமில்லை’ என்ற இவரின் புத்தகம் சமீபத்து பரபரப்பு.

இனி அவருடன்…..

1. கலாச்சாரம் என்றால் என்ன? இந்திய காலச்சாரம் பற்றி?

பெரியார் சொல்வதுபோல் ‘உன்னிடம் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதுபோலவே நீ அடுத்தவரிடமும் நடந்துகொள்ள வேண்டும்’- என்பதைதான் கலாச்சாரம் – பண்பாடு -நாகரீகம் எனச் சொல்லவேண்டும். இந்தியாவிற்கு கலாச்சாரம் என்று ஒன்று இல்லை. ஆச்சாரம் தான் இருக்கிறது. சாதி ரீதியான ஏற்றதாழ்வுகளை கொண்ட ஆச்சாரம் தான் இருக்கிறதே ஒழிய சிறந்த பண்பாடு என்று ஒன்று இல்லை. இந்த மண்ணுக்கென்று ஒரு பண்பாடு இருந்ததில்லை. மாறாக ஒவ்வொரு சாதிக்குமான ஒரு வழிபாட்டுமுறை, வாழ்வுமுறை, பேச்சுவழக்கு, உணவுமுறை, உடை என்று இருந்ததே தவிர. பொதுவான கலாச்சாரம் என்று ஒன்று இல்லை. பிறமனிதனை தனக்கு கீழாக வைத்து துன்புறுத்துகிற, அவமானபடுத்துகிற, அசிங்கப்படுத்துகிற ஒரு ஆச்சாரம் தான் இங்கு இருக்கிறது.

2. காலச்சாரம் மற்றும் பண்பாடு என்று இரண்டு சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன…இதில் பண்பாடு என்பது என்ன? கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் வேறுபாடு உள்ளதா?

கலாச்சாரம் என்பது சமஸ்கிருத சொல்… பண்பாடு என்பது அதற்கான மாற்று தமிழ்சொல். பலபேர் கலாச்சாரம் என்பதும் பண்பாடு என்பதும் வேறு வேறு என்று கருதுகிறார்கள். ஆனால் இவை இரண்டும் வேறு வேறு அல்ல.. ஒரே விசயத்தை குறிக்கிற இரண்டு சொற்கள். ‘நடு சென்டர்’ என்று சொல்கிறோம் அல்லவா, அதுபோல்.

3. இந்திய பண்பாடு என்று ஒன்று இல்லை எனச்சொன்னீர்கள் அப்படியானால் தமிழ் பண்பாடு என்ற ஒன்றைப்பற்றி?

தமிழ் பண்பாடு என்றும் ஒன்று கிடையாது. தமிழர்களுக்கு அவர்களின் மொழியைத் தவிர பொதுவான பண்பாட்டு அடையாளம் ஒன்றை நான் இதுவரை கண்டதில்லை. மொழியில் கூட உடல்உழைப்பை மூலதனமாக கொண்ட மக்களை தாழ்த்தி பார்க்கின்ற சொல்லாடல்கள்தான் இருக்கிறது.

கீரை விக்ரவ வந்தாளா? ரிக்க்ஷாகாரன கூப்பிடு! உழைக்கும் எளிய மக்களை அவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும், அவன், அவள் என்று மரியாதை குறைவாக விளிக்கிற மொழி, அதேவேளையில் ஒரு டாக்டரையோ, ஒரு எஞ்சினியரையோ, தொழில அதிபரையோ அப்படி அழைப்பதில்லை. அவர்கள் ஒரு சமூக விரோதியாக இருந்தாலும் – உ.தா: ஒரு டாக்டா; சிறுநீரகத்தை திருடுகிறவாராக இருந்தாலும் -அவர் இவர் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். இதை எப்படி ஒரு பண்பாடு என்று சொல்லமுடியும். மீடியா முதல் இந்த ஏற்றதாழ்வு தமிழ் சமூகத்தில் இன்னும் கட்டி காக்கப்படுகிறது.

4. ஆனால் ஆரிய பண்பாட்டுவழியில் தான் நீங்கள் சொல்லுகிற சமத்துவமற்ற ஒரு வாழ்வுமுறை இருந்துவந்தது என்பதும் தமிழர் பண்பாடு சாதிய பிளவுகளற்ற ஒரு சமத்துவ பண்பாடு என்பதும் உண்மையல்லவா?

நீங்கள் சொல்லுவது இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்வுமுறை. அதை பெருமைக்காக வேண்டுமென்றால் சொல்லிக்கொள்ளலாம். இன்றைககு அதை எப்படி கடைபிடிக்க முடியும்?

மேலும் அன்றைய தமிழ் சமூகத்தில் சாதிய ஏற்றதாழ்வுகள் (Caste Stertification) இருக்கவில்லை என்றாலும் வர்க்க வேறுபாடுகள் (Class Stertification) இருந்தது. உ.தா: மன்னர்கள், உழைக்கும் மக்கள் என்ற வேறுபாடு இருந்திருக்கும். இரண்டுபேரின் பழக்கம் வேறு வேறாகத்தான் இருந்திருக்கும். இதில் எதை நீங்கள் தமிழர் பண்பாடு என்று வகைபிரிப்பிரிகள்? கடைப்பிடிப்பீர்கள்?

தமிழன் என்றும் தமிழர்களின் அடையாளம் என்றும் நீங்கள் எதை சொல்வீர்கள்? இன்றைய தமிழர்கள் யாருடைய வாழ்முறையை கடைபிடிப்பது? மக்களின் முறையையா? மன்னரின் முறையையா?

5. தமிழ் பண்பாடென்று அதன் மொழியை தவிர ஒரு பொதுவான அடையாளம் இல்லை என்றுசொன்னீர்கள் அப்படியென்றால் பண்பாடு என்பதன் அடையாளம் என்னவாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

சக மனிதனின் துயரங்களை புரிந்துகொள்ளுதலும் சகமனிதனை துன்புறத்தாமல் இருப்பதுதான் பண்பாட்டிற்கான அடையாளம். ஆனால் இவர்களின் பண்பாட்டில் இதற்கு நேர்மாறாக ஏற்றதாழ்வுகள் நிறைந்த, சகமனிதனை கீழ்ப்படுத்தி, அசிங்கபடுத்தி (திண்ணிய நிகழ்வுகள்) வாழ்கின்ற நிலைதான் இருக்கிறது. ஜாதி வேறுபாடுகள்அற்ற வர்க்க வேறுபாடுகள் அற்ற ஒரு புதிய பண்பாட்டை உருவாக்கவேண்டும். உழைக்கும் மக்களின் கலைவடிவங்களில் இருந்து அவர்களின் வாழ்வியலில் இருந்து அவைகளை உருவாக்க வேண்டும்.

6. இவ்வாறு வெறும் “ஆச்சாரம்” மட்டுமே இருந்துவந்த சூழமைவில் இந்தியாவிற்கு வந்த கிறித்தவத்தின் நிலை, அணுகுமுறை எவ்வாறு இருந்தது? இப்பொழுது எவ்வாறு இருக்கிறது?

பிறப்பினால் ஏற்றதாழ்வுகளை உறுதிப்படுத்திய பண்பாட்டை அடிப்படையாக கொண்ட இந்துக்களிடையே வந்திறங்கிய கிறித்தவம் பெரும்பாலும் ஜாதியை உள்வாங்கிய ஒன்றாகத்தான் இருந்தது. மேல்சாதிக்கார்களை குறிப்பாக பார்ப்பனர்களை மதம் மாற்றிவிட்டால் மற்றவரை மதம் மாற்றுவது எளிது என்ற நோக்கில் ஆரம்பகால இந்திய கிறித்தவம் செயல்பட்டது. அன்றைய கிறித்தவ கல்வி நிறுவனஙகள் பெரும்பாலும் மேல்சாதி இந்துக்களுக்கே பயன்பட்டது. அதற்கு சாட்சிபோல் இன்றும் சில கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களுக்குள் தாழ்த்தப்பட்ட வசதி குறைந்தவர்கள் நுழைய முடியாது என்பது தொடர்கிறது.

ஆனால் பார்ப்பனர்கள், கிறிஸ்துவத்திற்கு மாறவில்லை என்பது மட்டுமல்ல, அதற்கு எதிராகவே இருந்தார்கள். டாக்டர் அம்பேத்கர் சொல்வார் ‘அவர்கள் கிறிஸ்துவ நிறுவனங்களை ஏமாற்றி விட்டார்கள்’ என்று. இன்னும் சொல்லப்போனால் மேல்சாதி இந்துக்கள் குறிப்பாக கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் படித்தப் பார்ப்பனர்கள் கிறித்தவத்திற்கு எதிராக செயல்படத்துவங்கினார்கள். இன்றும் செயல்படுகிறார்கள். இந்து கண்ணோட்ட அரசியல் அறிவாளிகள் பலர் கிறித்துவ நிறுவனங்களில்தான் படித்தவர்கள்தான். உதாரணத்திற்கு சோ, குருமூர்த்தி போன்றோர்.

இந்தனை நூற்றாண்டுகள் ஆனபிறகும் கிறித்துவர்களின் எண்ணிக்கை வெறும் 2 சதவீதம்தான். இதுகூட தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களால்தான். தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் கிறிஸ்துவ மதத்தின் மூலமாக பெற்ற 1 சதவீத உதவிக்கே அந்த மதத்திற்கு  100 சதவீதம் உண்மையாக நடந்து கொண்டார்கள். கிறிஸ்துவ மதததின் மூலம் 100 சதவீதம் உதவி பெற்ற பார்ப்பனர்கள், அதற்கு நேர் எதிர் கண்ணோட்டம் கொண்டார்கள். தலித் மக்களின் நன்றி உணர்வை, நேர்மையை ‘பால் பவுடருக்கு மதம்மாறிட்டான்’ என்று கொச்சை படுத்தினார்கள். படுத்துகிறார்கள்.

7. கிறித்தவரல்லாத ஒரு மார்க்சிய, பெரியாரிய சிந்தனையாளராக, இன்று கிறித்தவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

கிறித்தவம் என்பதைவிட கிறித்தவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் அல்லது இருக்கவேண்டும் என்றுதான் நான் பார்க்கிறேன்.

பகுத்தறிவளார்களாகிய எங்களின் கிறித்துவ மதம் பற்றிய விமர்சனங்களை கண்டு, நாங்கள் கிறிஸ்துவ மதத்திற்கு எதிராக செய்படுவதாக எங்கள் மீது கடுமையாக கோபப்படுகிறார்கள். ஆனால் அவர்களே கிறித்தவதிற்கு எதிராக செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

ஜாதிய ஏற்றத் தாழ்வுகளும், பிறக்கும் போதே ஒருவன் உயர்ந்தவனாகவும், தாழ்ந்தவனாகவும் பிறக்கிறான் என்கிற இந்துமத தத்துவத்தை இந்துக்களைப் போலவே 100 சதவீதம் கிறித்துவர்களும் நம்புகிறார்க்ள். அதையே கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள். திருமணம் முடிப்பதுகூட அவர் கிறிஸ்துவரா என்று மட்டும் பார்க்காமல், அவர் நம்ம ஜாதிக்காரரா என்பதைத்தான் தீவிரமாக பார்க்கிறார்கள். கிறிஸ்துவராக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, ஆனால் நம்ம ஜாதிக்காரராக கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று தேடிப்பார்த்து திருமணம் முடிக்கிறார்கள்.

இது இந்துக்களின் பழக்கம். ஒரு இந்து இன்னொரு இந்துவோடு சம்பந்தம் வைப்பதற்கு அவர்கள் மதத்தை வைத்து முடிவு செய்வதில்லை. அவர்களின் ஜாதிதான் முடிவு செய்கிறது. அதுபோல்தான் கிறிஸ்துவர்களும். அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு நாள் குறிப்பது நல்லநாள் கெட்ட நாள் பார்ப்பது, தாலி அணிந்து கொள்வது என்கிற அவரிகளின் பழக்கம் இந்துக்களின் பழக்கமாகவே இருக்கிறது. மத சார்பற்ற தனித் தமிழ் பெயர்களை தன் குழந்தைகளுககு வைக்க தயங்குகிற கிறித்துவர்கள், தாராளமாக இந்து சமஸ்கிருத பெயர்களை வைக்கிறார்கள்.

இயேசுவை நம்புகின்ற இந்துவாகத்தான் கிறித்துவர்கள் இருக்கிறாகள். இந்து மதத்தில் இருக்கிற அத்தனை சமூக சீர்கேடுகளையும் கிறித்தவர்களும் பின்பற்றுகிறார்கள்.

அவர்களிடம்ஒரு மார்க்சியவாதியாகவோ, பெரியாரியவாதியாகவோ இல்லாமல் ஒரு சாராசரி மனிதனாக நான் எதிர்பார்ப்பது அல்லது எதிர்பார்ப்போடு விடுக்கும் அழைப்பு, சமூக அக்கறைக் கொண்ட ஒரு முற்போக்காளராக, பகுத்திறவாளராக நீங்கள் வர முடியாவி்ட்டாலும் பரவாயில்லை. ஒரு உண்மையான கிறித்தவராகவாவது வாழுங்கள் என்பது தான். கிறித்துவம் ஏற்றுக் கொள்ளாத அல்லது பரிந்துரைக்காத ஜாதி என்ற நஞ்சை கடைப்பிடித்து கிறிஸ்துவிற்கும், கிறித்துவத்திற்கும் துரோகம் செய்யாதீர்கள்.

8. கிறித்தவ மதம் ஒரு அந்நிய கலாச்சார மதம் எனவே கிறித்தவர்கள் அந்நியர்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது அதை பற்றி?

கிறித்தவம் எந்த நாட்டில் உருவானதோ, அங்கு அந்த மதம் முற்றிலுமாக இப்போது வழக்கத்தில் இல்லை. அதே போல் நம் நாட்டிற்கு சொந்தமானவர் புத்தர். ஆனால் புத்தமதம் இந்தியாவை தவிர சீனா, ஜப்பான், கொரியா, இலங்கை போன்ற நாடுகளில் இருக்கிறது. அப்படியென்றால் சீனா, ஜப்பான், கொரியா, இலங்கை மக்கள் எல்லாம் அவர்களுடைய நாட்டிற்கு அந்நியர்களா? அல்லது அவர்கள் அனைவரையும் இந்தியர் என்று சொல்லமுடியுமா?

இந்தியாவில் வந்து மதம் பரப்பிய வெள்ளையர்கள், ஜெர்மானியர்கள், இத்தாலியர்கள், போர்த்துகீசியர்கள் இப்படி பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கும் கிறித்துவ மதம் தோன்றிய இடத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களுக்கும் கிறித்தும் அந்நிய நாட்டில் இருந்து வந்தது என்றுதான் சொல்லமுடியும். இன்னும் நெருக்கி சொன்னால் அவர்களை விட இந்தியாவிற்கும் கிறித்துவத்திற்கும் இன்னும் கூடுதல் நெருக்கம் இருக்கிறது. இந்தியா இருக்கிற ஆசிய கண்டத்தில்தான் கிறித்துவ மதமும் தோன்றியது. வெள்யைர்களைவிடவும் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் இந்தியர்களுக்குத்தான் அதிக நெருக்கம் கிறித்துவம்.

ஒரு மனிதன் சகமனிதனை கீழ்படுத்தி பார்ப்பது,அதை நியாயப்படுத்தி பல தத்துவங்களை எழுதி வைத்திருக்கிற மதம், இந்த மண்ணின் சொந்த மதம் என்றே வைத்துக்கொண்டாலும், அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஆகவே இந்து மத தீவிரவாதிகள் கிறித்துவத்தை பற்றி சொல்லுகிற இந்த ‘அந்நிய’ என்கிற சொல்லாடலை பகுத்திவாளர்களான நாங்கள், மறுக்க மட்டும் செய்யவில்லை. கடுமையாக கண்டிக்கவும் செய்கிறோம்.

வீட்டு கூறைக்கு நெருப்பு வைக்கிறவன் நம்ம சொந்தக்காரன் என்பதற்காக அவனை நாம் விரும்புவதோ, என்னதான் நம்ம வீடு கட்டுவதற்கு பக்கத்து ஊருகாரன் உதவி செய்தாலும் அவன் அந்நியன் தானே என்று சொல்வது, நியாயம் அன்று எனபது மட்டுமல்ல, அது மோசடியானதும் கூட.

குறிப்பு:

நம்மை பொருத்தவரை நம்மீதுள்ள வெறுப்பினால் அல்ல மாறாக நம்மீது உள்ள பொறுப்பினால் சொல்லப்படுகின்ற விவாதங்களையும் விமர்சனங்களையும் சீர்தூக்கி பார்த்து நம் வாழ்விற்கு நம்பிக்கைக்கு அவற்றை உரங்களாக உள்வாங்கி உண்மைக் கிறித்தவர்களாய் வாழ்வோம்.

நம் வாழ்விற்கு நம்பிக்கைக்கு அவற்றை உரங்களாக உள்வாங்கி உண்மைக் கிறித்தவர்களாய் வாழ்வோம்.

சந்திப்பு : ஆ. புத்திரன்   – நன்றி : சலேசியன் செய்தி மலர்-ஜீலை 2009

92 thoughts on “தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை

  1. அருமையான பதில்கள். ஆனால் தமிழ் நாட்டில் நல்ல பண்பாடு எதுவும் இல்லை என்ற ரீதியில் சொல்வது சற்று மிகைப்படுத்தி சொல்வதுபோல இருக்கிறது. அல்லது இது விரக்தியின் வெளிப்பாடோ?

  2. JESUS CHRIST TEACHES FOR EQUALITY AMONG ALL MEN.’THERE IS NO JEW OR GREEK’.BUT, CHRISTIANS PRACTICE CASTE DIFFERENCES AGAINST THE TEACHINGS OF JESUS.

  3. தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை..

    தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை..

    தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை..

    எத்தனை தடவை இவ்வாக்கியத்தை சொன்னாலும் அல்லது பதித்தாலும் தமிழ் தேசியம் பேசும் சாதி தமிழரின் வழமையான வாக்கியம் மட்டும் மாறவேயில்லை.

    தற்போது தமிழ் தேசியம் பேசும் முற்போக்காளர்களின் முகமூடியை கிழிக்கும் விதமாக பெரியாரின் பகுத்தறிவு பார்வையை கொண்டு, தொடர்ந்து வரும் கட்டுரைகள் சாதி தமிழ் தேசியவாதிகளின் வயிற்றில் புளியை அல்ல பினாயில் கரைக்கிற மாதிரி கூட இருக்கலாம். அதனால் தன் முகமூடியும் கிழிந்து தொங்கி விடுமோ என்று யாரும் இந்த பக்கம் வருவதற்கே யோசிகின்றனர் போலும்.

    மேலும் பெரியாரின் போர்வாளை ஏந்தி வரும் கட்டுரைகளை தொடர்ந்து எதிர்ப்பார்கிறேன்.

  4. தமிழ்நாட்டில் என்று மட்டும் சொல்லிவிட்டதால் வருத்தப்படுகிறீர்களோ ராபின். உண்மையில் தமிழ்நாடு என்பதைவிட தமிழர்களிடத்தில் நல்ல பண்பாடு இல்லையென்று மதிமாறன் பொதுவாக சொல்லியிருக்கலாம் இல்லையா. தமிழ்நாடுதான் வந்தேறிகளின் காடாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டதே இதில் எந்த பண்பாட்டை தமிழர் பண்பாடு என்பது?

    ஏனெனில் நடைமுறையில் தமிழருக்கென்று தனியாக ஒரு பண்பாடு இருந்ததில்லை எல்லாம் மொழியின் பயன்பாட்டிலும் தொடர்ந்து ஆவரவர் தொழில்சார்ந்தும் பண்பாடுகளை அதே தமிழகள் தங்களிடமிருந்து அடுத்தவரை பிரித்தாளுகிறார்கள். இதனால்தான் தனிப்பண்பாடு என்றில்லாமல் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழனை இறக்குமதி செய்யப்பட்ட ஏதாவதொரு மதங்கள்தான் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றன எனலாம்.

    மதங்கள் மக்களை ஒன்றிணைபதற்கு பதிலாக தங்களுக்கு ஆள்சேர்ப்பு விடயங்களையே குறிவைத்து இறங்கியதால் இன்று தமிழன் தன் தொழில், தன் இனம், தன் பண்பாடு (பழைய) என்கிற வரையறைகளை கடந்து, தான் சார்ந்த அல்லது வறுமையின் காரணமாக தன்மீது திணிக்கப்பட்ட மதங்களுக்காக ஆள்சேர்ப்பதிலேயே குறியாக இருக்கிறான். இதனால் தன் முகமிழந்த தமிழன் பார்ப்பனர்களின் அடியாள மாறி தன் இனத்தையே ஒதுக்குவதால் பார்ப்னியர்களின் வேலை இலகுவாகிவிட்டது.

  5. அருமையான பதில்கள். ஆனால் தமிழ் நாட்டில் நல்ல பண்பாடு எதுவும் இல்லை என்ற ரீதியில் சொல்வது சற்று மிகைப்படுத்தி சொல்வதுபோல இருக்கிறது. அல்லது இது விரக்தியின் வெளிப்பாடோ?

    virakthi alla , unmaithaan ,tamil mozhi yai thavira veru ethil thaan pothu adaiyaalam ullathu?

    panbaadu ellaam kidaiyaathu . inke inam mattume pothuvaanathu enabaargal–athuvum mozhiyai adipadaiyaaga kondu thaan antha ina unarvum .

    athu thaan intha katturaiyil ullathu , unmaiyum athu thaane , inku nadappathu athu entru solkiraar avvalavuthaan.

  6. You are saying the christianity is more related to INDIA than to european world, the reason you are saying is that INDIA is in asian continent. Continents are framed in the late centuries, not earlier. Your comment on this seems your are still learning at the Kinder garten school.
    INDIA is in backward because people like you, TamilNadu cm karunanidhi, INDIAN congress party leader sonia(real name -then Waitress Antonio Manio ), mulayam singh, mayawati, lalu prasad, andhra cm rajasekar reddy – these all are pro-communists, pro-islamists, pro-christianists and anti-HINDU, anti-SIKHS, anti-BUDDHISTS, anti-JAINS.
    What these morons do, they took the money & other ornaments sacrified to GOD in TEMPLES and use it for upliftment of muslims & christians, when comapred the whole of INDIA HINDUS comprise of more % of poor people. It might be 95%(HINDU), 3%(Muslims), 2%(Christians) of Poor people in each community.

    If you have kept the words, I am not going to comment like this, but you are an anti-INDIAN, anti-HINDU, anti-SIKH, anti-BUDDH, anti-JAIN…so it is necessary
    kick at your ass to throw out of India and you must be live somewhere iraq, pakistan, afghan. What do you think about this?

  7. கிருஸ்தவர்களை நாம் வெறுக்கவில்லை. அவர்களும் நம் சகோதரர்கள் தான்.

    இயேசு கிறிஸ்துவின் அசலான கிருத்துவ மதத்தையும் நாம் வெறுக்கவில்லை. அதுவும் நல்ல மதம்தான். அதில் உள்ள நல்ல கருத்துக்களை வரவேற்கிறோம், பின் பற்றுவோம்.

    இயேசு கிறிஸ்துவை , கிருஸ்தவர்கள் கடவுளின் மைந்தன் என்கிறார்கள். நமக்கோ ஏசுவும் ஒரு கடவுள்தான். முருகனை, விநாயகரை வழிபடுவது போல இயேசு கிறிஸ்துவை வழிபட நமக்கு தயக்கம் இல்லை.

    ஆனால் இந்தியாவில் உள்ள கிருஸ்தவர்கள், குறிப்பாக கிறிஸ்தவ மத போதகர்கள் நமக்கு கிருஸ்தவ மதம் என்று அறிமுகப் படுத்துவது எதை ?

    சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பரின் (கிருஸ்தவர்) வீட்டிற்கு சென்று இருந்தேன். அவரைப் பார்க்க அவருடைய இன்னொரு நண்பரும் வந்தார்.

    என்னைப் பார்த்தவுடன் அவர் நேராக என்னிடம் வந்து ” பாலாஜி…..” என்றார்.

    நான் ” நல்லது, உங்கள் பெயர் பாலாஜியா?” என்றேன்.

    உடனே அவர் உரத்த குரலில் ” எனக்கு தெரியும்….. நீங்கள் வழி படுவது பாலாஜியைத் தானே. அவர் ஒரு கல், உயிர் இல்லாதவர். உண்மையில் ஜீவனுள்ள கடவுளை நான் உங்களுக்கு காட்டுகிறேன்” என்றார்.

    இத்தனைக்கும் பாலாஜி என்னுடைய இஷ்ட தெய்வமோ, சிறப்பு தெய்வமோ கூட இல்லை.

    சரி இன்றைக்கு நமக்கு நேரம் சரியில்லை. நடப்பது நடக்கட்டும் என்று இருந்தேன்.

    அவர் தொடர்ந்து பல செய்திகளை , பிரச்சாரத்தை தொடர்ந்தார்.

    நான் பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாடு இரண்டையும் படித்து இருந்ததால் எனக்கு அவர் கூறியதில் புதியதாக எதுவும் இல்லை. மேலும் அவர் கூறியதில் இந்து மதக் கடவுள்கள் பொய்யானவை, அல்லது வலிமை இல்லாதவை, இந்து மதம் pagan மதம் என்பது போன்றவற்றுக்கே அதிக நேரம் ஒதுக்கினார்.

    அவரது பிரசாசாரத்தை முடித்து வைக்க முனைந்து நான் பேச ஆரம்பித்தேன்.

    இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் சிறப்பானவை என்றும் , அவரை நான் கடவுளாக கருதுவதாகவும் கூறினேன்! அது அவருக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை.

    அவருடன் சேர்ந்து சர்ச்சில் பிரேயரில் கலந்து கொள்ளத் தயார் என்றும், நான் செய்த பாவங்களுக்கு இயேசு கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்பது எனக்கு மன நிறைவைத் தரும் என்றும் கூறினேன். நான் கிருஸ்தவப் பள்ளியில் படித்து இருந்ததால், பிரேயரில் கலந்து கொள்வது எனக்கு ஒன்றும் புதிதும் அல்ல.

    ஆனால் அவர் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார். அவருக்கு வேண்டியது இரண்டுதான். ஒன்று நானும் அவரைப் போல, அவர் கூறும் தெய்வங்களைத் தவிர பிற தெய்வங்கள் எல்லாம் (குறிப்பாக இந்து கடவுள்கள்) ஜீவன் இல்லாத வலிமை இல்லாத கற்கள் என்று அறிவிக்க வேண்டும். இரண்டாவது நான் கிருஸ்தவனாக மதம் மாற வேண்டும்.

    “நான் ஏற்கனவே கிறிஸ்துவன் தான், இயேசு கூறிய கருத்துகளில் இருந்து நான் மாறி நடக்கவில்லை” என்றேன்.

    ஆனால் சான்றிதழில், கெஜட்டில் பெயர் மாற்றம், மத மாற்றம் செய்வதுதான் அவருக்கு தேவையாக இருந்தது.

    எனக்கு பைபிலில் இயேசு கிறிஸ்து, ” இவர்கள், பிறரை தங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு வானத்தையும், பூமியையும் சுற்றித் திரிகின்றனர். அவர்கள் மதம் மாறிய பின் தங்களை விட கொடிய பாவிகள் ஆக்குகின்றனர்” என்று கூறியதே நினைவுக்கு வந்தது.

    இப்ப‌டியாக‌ பிற‌ ம‌த‌ங்க‌ளின் மீது வெறுப்பைத் தொட‌ர்ந்து உருவாக்கித் தான் முன்பு புனித‌ப் போர்க‌ள் என்ற‌ பெய‌ரில் இர‌த்த‌ ஆறு ஓட‌ விட‌ப் ப‌ட்ட‌து. இப்போதும் வேறு பெய‌ர்களில் அந்த‌ “புனித‌ப் ப‌ணி” புதிய‌ ஆயுத‌ங்க‌ளுட‌ன் ந‌டை பெறுகிற‌து.

    இந்து மதத்தைக் காக்கக் கூட விவேகானதர் போன்ற சிலர் அவ்வப் போது தோன்றுகின்றனர்.இந்துக்களில் கணிசமானவர்கள் ஹிந்து மதத்தை சரியாகப் புரிந்து கொள்கின்றனர்.

    இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொள்ள யாருமே இல்லையா? பேசாமல் சரியான கிறிஸ்தவ மதத்தை விளக்க நானே புதிய பிரிவை ஆரம்பிக்க வேண்டும் என்று கூட எனக்கு உணர்ச்சி தோன்றியது!

  8. அய்யா சொல்வது போல் எல்லாம் வெங்காயம். உரிக்க உரிக்க உள்ள எதுமே இல்லை என்பது தான் தமிழ் பண்பாடு கலாச்சாரம் போன்ற கருமாந்தரம். இதை ஒப்பு கொள்ள மனம் மற்றும் நேர்மை இல்லாமல் தமிழ் தேசியம் என்ற வேடத்தில் சாதியத்தை கட்டி காக்கிறார்கள்.

    தம்பி nithi தப்பான இடத்தில் வந்து நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.

    just like the continents countries like India was framed in 1947 and not before(its obvious that mathimaran was answering in the present context,so find yourself a playschool.). pls dont try to come up with some “pigs can fly” stories about india. pls try concentrating on how team india can win the the next test series or on how india can go the kanthasamy way.
    finally grow up you freaking moron.

  9. உங்கள் பதிவில் சொல்லிய முக்கிய பொருளான தமிழர்களுக்கு என்று ஒரு பண்பாடு இல்லை என்பது மிகைப் படுத்தப்பட்டது எனத் தோற்றுகின்றது. இல்லை எனில், வந்தேறிகள் வரு முன் அவர்கள் காடுமிராண்டிகளாக இருந்தனர் என பொருள் படும். .

    தவிர, கிருஸ்தவர்கள் மேலை நாடுகளில் சாதி பிரிவினை பார்க்காமல் அதாவது சாதி என்ற ஒரு கஸ்மாலம் இல்லாமல் வாழ்கிறார்கள் என்பது உண்மையே.

    ஆனால், இஸ்லாமியர்கள் இந்தியாவில் பெரும் பாலும் சாதி பிரிவிகள் இல்லாமல் வாழ எத்தனிக்கிறார்கள் என்பதே உண்மை. சையதுகளில் அன்சாரி இல்லை என்பதும் நெருடும் உண்மை.

  10. திருச்சிக்காரன்,

    உம்முடைய உள்நோக்கம் நன்றாக புரிகிறது. அருமையான கதை ஒன்றை சொல்லி எதையோ நிரூபிக்க முயற்சி செய்கிறீர்.
    //இந்து மதத்தைக் காக்கக் கூட விவேகானதர் போன்ற சிலர் அவ்வப் போது தோன்றுகின்றனர்.// ஓரூ மதம் அழியும் நிலையில் இருந்தால்தானே அதை காக்க அவ்வப்போது ஒருவர் வரவேண்டும்?

    //இந்துக்களில் கணிசமானவர்கள் ஹிந்து மதத்தை சரியாகப் புரிந்து கொள்கின்றனர். // பல இந்துக்களிடம் கேட்டு பார்த்து விட்டேன் யாருக்கும் இந்து மதம் என்றால் என்ன என்று சரியான விடையை கொடுக்க முடியவில்லை.

    //இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொள்ள யாருமே இல்லையா? பேசாமல் சரியான கிறிஸ்தவ மதத்தை விளக்க நானே புதிய பிரிவை ஆரம்பிக்க வேண்டும் என்று கூட எனக்கு உணர்ச்சி தோன்றியது!// முதலில் இந்து மதம் என்றால் என்ன என்று விளக்கும். பிறகு கிறிஸ்தவ மதத்தை பற்றி பேசலாம்.

  11. //ஏனெனில் நடைமுறையில் தமிழருக்கென்று தனியாக ஒரு பண்பாடு இருந்ததில்லை.// தமிழருக்கென்று பண்பாடு உண்டு என்று பள்ளி பருவத்தில் படித்த ஞாபகம். இப்போதுகூட மற்ற மாநிலத்தவர் தமிழ்நாட்டில் அமைதியாக வசிக்கவில்லையா? எஸ்.பி.பால சுப்பிரமணியம், பி. சுசீலா, சித்ரா இன்னும் பல கலைஞர்களை மொழி வித்தியாசம் பார்க்காமல் ஆதரிக்கவில்லையா? இதெல்லாம் பண்பாடு இல்லாமல் வேறென்ன?

    // எல்லாம் மொழியின் பயன்பாட்டிலும் தொடர்ந்து ஆவரவர் தொழில்சார்ந்தும்
    பண்பாடுகளை அதே தமிழகள் தங்களிடமிருந்து அடுத்தவரை பிரித்தாளுகிறார்கள். //
    புரியவில்லை!

    //இதனால்தான் தனிப்பண்பாடு என்றில்லாமல் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழனை இறக்குமதி செய்யப்பட்ட ஏதாவதொரு மதங்கள்தான் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றன எனலாம்.// ஒவ்வொரு கால கட்டத்திலும்
    எல்லா இனத்தவரின் பண்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்படுவது உலக வழக்கம்தான்.
    அதை போல மதங்கள் மனித மனதில் ஏற்படுத்தும் மாற்றங்களும் தவிர்க்க இயலாததே. இதில் நல்ல மாற்றங்களும் இருக்கலாம். கெட்ட மாற்றங்களும் இருக்கலாம். நீங்கள் கெட்டதை மட்டும் நினைக்கிறீர்கள் 🙂 தென் தமிழகத்தில் கல்வியறிவு இந்த அளவுக்கு வளர்வதற்கு கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்தான் முக்கிய காரணம் என்பேன். உங்களால் மறுக்க முடியுமா?

  12. மும்பையில் நடைபெற இருக்கும் அம்பேத்கர் பற்றிய உங்களின் புத்தக விழா நடைபெறுமா?

    அந்த் விழாவை நிறுத்துவதற்கு ஏக்கப்பட்ட சதிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். சிமானிடம் இந் நேரம் நீங்கள் அவரைப் பற்றி கேவலமாக பேசுவதாக கோள் முட்டி இருப்பார்கள். எழுத்தாளர் பாமரனும், அவருடன் இருக்கும் ஒரு சிலரும் , கும்பகோணத்தை சேர்ந்த மணி செந்தில் என்பவரும் இதே வேலையாக இருக்கிறார்கள்.

  13. தம்பி ராபின், முதலில் பிறரை மரியாதையுடன் அழைக்கும் முறையைக் கற்றுக் கொள்ளுங்கள்.

    முன் பின் அறியாத ஒருவரை “உம்மை” என்று அழைப்பது சரியான முறை அல்ல. பண்பு முதலில் அவசியம். பிறகு எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளலாம்.

    அடுத்ததாக நான் கூறிய ஒரு நடந்த நிகழ்ச்சியை, “அருமையான கதை ஒன்றை சொல்லி” என்று எழுதி, நாம் விவரித்த சம்பவத்தை கதையென கூறுகிறீர்கள். ஆனால் அது என் வாழ்க்கையில் உண்மையில் நடந்த நிகழ்ச்சி. அயனாவரத்திலே என் நண்பர் ஒருவரைக் காணச் சென்ற போது நடந்த உண்மை நிகழ்ச்சி.

    நீங்கள் இந்து மதத்தில் உள்ள கருத்துகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலே அணுகியிருந்தால் உங்களுக்கு எல்லோரும் இந்து மத்தைப் பற்றிக் கூறியிருப்பார்கள்.

    //இந்து மதத்தைக் காக்கக் கூட விவேகானதர் போன்ற சிலர் அவ்வப் போது தோன்றுகின்றனர்.// ஓரூ மதம் அழியும் நிலையில் இருந்தால்தானே அதை காக்க அவ்வப்போது ஒருவர் வரவேண்டும்? நீங்கள் இவ்வாறு எழுதியதைப் படிக்கும் எவருக்குமே உங்களின் உள்ளக் கிடக்கை என்ன என்று புரிந்து கொள்ள முடியும்.

    ‘இந்தியாவைக் காக்க’ அல்லது ‘அமெரிக்காவைக் காக்க’ என்று எழுதினால் அந்த நாடுகள் அழியும் தருவாயில் இருக்கின்றன என்று அர்த்தமா?

    கண்டிப்பாக உங்களுக்கு இந்து மதத்தைப் பற்றி விளக்குவோம். ஆனால் பிற மதங்களை, ஏளனத்துடன் நோக்கும் போக்கை விடுத்து ஆக்க பூர்வமான சிந்தனையுடன் அணுகும் போக்கை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

    என்னுடன் அலுவலகத்தில் பணி புரியும் ஒரு கிருத்துவ நண்பரிடம் இந்த நிகழ்ச்சியை நான் விவரித்து, இதை இணையத்தில் எழுதியும் இருக்கிறேன் என்றேன். அவர் அந்த “பிரச்சாரகரை ” எதற்கு பொறுமையுடன் அனுமதித்தீர்கள் என்று என்னிடம் கோவப் பட்டார்.

    அவர்தான் உண்மையான கிருத்தவர்.

    “ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தப் படுத்தினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ” என்று கூறியுள்ளார் இறை மகனார். அதை உங்களுக்கு நினைவு படுத்தினால், என்னை உங்களுடன் இரண்டு மைல் தூரம் வரும்படி பலவந்தம் செய்கிறீர்கள்.

    முதலில் இறைவன் இயேசு கிருஸ்துவை சரியாக உள் வாங்குங்கள். இயேசு கிருஸ்துவை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மனதை இயேசுவின் இதயத்தில் இணைய விடுங்கள். அப்போது உங்களுக்கு மனதில் அமைதியும் அன்பும் அதிகமாகி, ஏசுவுக்கு மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய கிருத்தவராவீர்கள்.

    அப்போது இந்து மதம் உட்பட எல்லா மதங்களையும் எளிதாக புரிந்து கொள்ளும் மனநிலையை நீங்கள் அடைவீர்கள்.

  14. திருச்சிக் கார அண்ணே ‘உம்மை’ என்று அழைத்ததற்கு இவ்வளவு கோபப்பட தேவையில்லை. அது மரியாதை இல்லாத வார்த்தையும் அல்ல. உங்களை போன்றவர்கள் பல வடிவங்களில் வருவார்கள். ஒருவர் நேரடியாக தாக்குவார், ஒருவர் கிறிஸ்தவத்திலிருந்து நல்ல செய்திகள் சிலவற்றை சொல்லி பிறகு தன சுய ரூபத்தை காண்பிப்பார், சிலர் நாத்திகவாதிகள் போல வேடமிட்டுக் கொண்டு வருவார்கள். ஆனால் இவர்கள் அனைவருடைய நோக்கமும் ஒன்றுதான்; வேஷம் தான் வேறு.

    ஏதோ கிறிஸ்தவர்கள் எல்லாம் மோசமானவர்கள் போல சித்தரித்துள்ளீர்கள். இணைய தலங்களில் மேய்ந்து பாருங்கள் கிறிஸ்தவர்கள் மேல் எந்த அளவுக்கு வன்மையான தாக்குதல்கள் நடந்து வருகிறது என்பதை அறிந்து கொள்வீர்கள். (அல்லது அறிந்தும் அறியாததுபோல நடிக்கிறீரோ என்னவோ). வேண்டுமென்றால் rediff.com இல வரும் பின்னூட்டங்களை படித்து பாருங்கள் (பாரும் என்று சொல்லவில்லை; இனி குறை சொல்ல முடியாது 🙂 ) . ஏன் இந்த தமிழ் மணத்திலேயே கிறிஸ்தவர்களை தாக்கி பல பதிவுகள் வந்ததுண்டு. இப்போது கொஞ்சம் குறைவு.
    மதிமாறன் சொன்னது போல கிறிஸ்தவர்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் படித்துவிட்டு கிறிஸ்தவர்களை வெறுக்கும் நபர்களையும் நான் அறிவேன். என்னிடம் கிறிஸ்தவர்கள் எல்லாம் தேச துரோகிகள் என்று நேரடியாக சொன்னவர்களும் உண்டு. நியாயம் பேசினால் இரு பக்கமும் பேசவேண்டும். உங்களுக்கு ஏற்றார்போல கதை விடக் கூடாது. முதலில் இந்த பண்பை முதலில் கற்று கொள்ளுங்கள், பிறகு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லலாம்.

    //நீங்கள் இந்து மதத்தில் உள்ள கருத்துகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலே அணுகியிருந்தால் உங்களுக்கு எல்லோரும் இந்து மத்தைப் பற்றிக் கூறியிருப்பார்கள். // நான் சராசரி இந்துவை விட இந்து மதத்தை பற்றி ஓரளவுக்கு தெரிந்தவன்தான். மேலும் அறியவேண்டும் என்ற நோக்கில்தான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் என்னிடம் விளக்கி சொல்ல முடியாததற்கு காரணம் அவர்களுக்கு தெரியாது என்பதே; இதை அவர்களே என்னிடம் ஒத்துகொண்டார்கள்.

    //‘இந்தியாவைக் காக்க’ அல்லது ‘அமெரிக்காவைக் காக்க’ என்று எழுதினால் அந்த நாடுகள் அழியும் தருவாயில் இருக்கின்றன என்று அர்த்தமா? // இந்தியாவை காக்க என்றால் ஆபத்து இருக்கிறது என்று தானே அர்த்தம்? அப்படி காக்கவில்லைஎன்றால் அழிக்கப்படும் என்றுதானே அர்த்தம்? இதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்ன?

    //கண்டிப்பாக உங்களுக்கு இந்து மதத்தைப் பற்றி விளக்குவோம். ஆனால் பிற மதங்களை, ஏளனத்துடன் நோக்கும் போக்கை விடுத்து ஆக்க பூர்வமான சிந்தனையுடன் அணுகும் போக்கை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள்.// நான்
    ஏளனம் செய்கிறேனா?
    //இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொள்ள யாருமே இல்லையா? பேசாமல் சரியான கிறிஸ்தவ மதத்தை விளக்க நானே புதிய பிரிவை ஆரம்பிக்க வேண்டும் என்று கூட எனக்கு உணர்ச்சி தோன்றியது! // – இது ஏளனம் இல்லாமல் வேறென்ன?

    //இப்ப‌டியாக‌ பிற‌ ம‌த‌ங்க‌ளின் மீது வெறுப்பைத் தொட‌ர்ந்து உருவாக்கித் தான் முன்பு புனித‌ப் போர்க‌ள் என்ற‌ பெய‌ரில் இர‌த்த‌ ஆறு ஓட‌ விட‌ப் ப‌ட்ட‌து.//புனித
    போர் நடை பெற்றதற்கு காரணம் இஸ்லாமியர்கள் ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமிக்க தொடங்கியதுதான் காரணம். ஏன் இந்தியாவில் ரத்த ஆறு ஓடவில்லையா? அசோகர் ரத்த ஆறு ஓடியதை பார்த்தபின் புத்த மதத்திற்கு மாறினாரே, ஏன் வைணவ மதத்திற்கோ சைவ மதத்திற்கோ மாறவில்லை?

    // இப்போதும வேறு பெய‌ர்களில் அந்த‌ “புனித‌ப் ப‌ணி” புதிய‌ ஆயுத‌ங்க‌ளுட‌ன் ந‌டை பெறுகிற‌து. // இப்போது உமது உள்ளக் கிடக்கை நன்றாக புரிகிறது.

    கிறிஸ்தவர்களுக்கு நீர் கிறிஸ்தவத்தை பற்றி விளக்கவேண்டிய அவசியமில்லை. முதலில் ஒரிசாவிலும் குஜராத்திலும் கர்நாடகத்திலும் கொலை வெறி பிடித்து அலையும் இந்துக்களுக்கு உம்முடைய பிரசங்கத்தை நடத்தும். இந்து மதத்தை நன்றாக புரிந்து கொண்ட ஒருவன்தானே ஒரிசாவில் தொழு நோயாளிகளுக்கு சேவை செய்ய வந்த ஒரு மாமனிதரையும் அவருடைய குழந்தைகளையும் உயிரோடு கொளுத்தினான்? குஜராத்தில் கர்ப்ப்பிணி பெண்ணின் வயிற்றை கீறி சிசுவை கொன்றது யார் ஒரு இந்து தானே? ஏன் கணவன் இறந்ததும் மனைவியை பலவந்தமாக தீயில் தள்ளியது யார் இந்துக்கள் தானே? சில வருடங்களுக்கு முன்பு கூட ராஜஸ்தானில் அப்படி கொல்லப்பட்ட ஒரு பெண்ணுக்கு சதிமாதா கோயில் கட்டப்பட்டது நினைவில்லையா? ஒரு 40 வருடங்களுக்கு முன்பு கூட இந்து மதத்தை நன்றாக படித்திருந்த கூட்டத்தினர் மற்ற ஜனங்களை தாழ்ந்த ஜாதியினர் என்று சொல்லி எந்த அளவுக்கு கொடுமை படுத்தினர். இப்போது கூட இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே வரக்கூடாது என்று பல கோயில்களில் தடை செய்யப்பட்டுள்ளதே.

    இவ்வளவு குறைகளை வைத்துவிட்டு கிறிஸ்தவர்களை பற்றி குறை சொல்ல வந்துவிட்டீர்? இதில் பண்பாடு பற்றி வேறு பேசுகிறீர். முதலில் உம்முடைய மதத்தில் உள்ள குறைகளை களைந்துவிட்டு வாரும். பிறகு மற்ற மதங்களை பற்றி பேசலாம்.

  15. //இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொள்ள யாருமே இல்லையா? பேசாமல் சரியான கிறிஸ்தவ மதத்தை விளக்க நானே புதிய பிரிவை ஆரம்பிக்க வேண்டும் என்று கூட எனக்கு உணர்ச்சி தோன்றியது! // – இது ஏளனம் இல்லாமல் வேறென்ன?

    தம்பி ராபின் நாம் இதை ஏன் கூறினோம் என்று, சரியாகப் புரிந்து கொள்ளாமல் கூறுகிறார். நாம் கிருஸ்துவர்களின் நண்பன் எனற முறையிலே, அவர்களுடைய சகோதரன் என்ற முறையிலே தான் இதைக் கூறினேனே தவிர கிருஸ்துவர்களை ஏளனம் செய்ய வேண்டும் என்பது எனக்கு எள்ளின் முனையளவு கூட எண்ணம் கிடையாது. என்னுடைய பின்னூட்டத்தை நடுவு மனப்பான்மையுடன் படிக்கும் கிருத்துவரும் இதை அறிவர்.

    //புனிதபோர் நடை பெற்றதற்கு காரணம் இஸ்லாமியர்கள் ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமிக்க தொடங்கியதுதான் காரணம்//

    “வாளை உரையிலே போடு! வாளை எடுத்தவன், வாளால் அழிவான்!” என்று கூறிய இயேசு கிறிஸ்துவின் பேரைக் கூறி எத்தனை படையெடுப்புகள். இது சரியா ? இது ஏசுவுக்கு பிடித்தமான ஒன்றா? மனிதனின் ஆதிக்க ஆசைக்கு கடவுளின் பெயரை பயன்படுத்த வேண்டுமா?

    //ஏன் இந்தியாவில் ரத்த ஆறு ஓடவில்லையா? //

    மன்னர்கள் தங்களின் ஆதிக்க ஆசைக்கு போரை நடத்தி இரத்த ஆறு ஓட விடுகின்றனர்.
    அதற்க்கு காரணம் இந்தியாவில் இருந்த மக்களோ, அவர்கள் பின்பற்றிய மதத்தைக் காரணமாகக் காட்டியோ அல்ல!

    //அசோகர் ரத்த ஆறு ஓடியதை பார்த்தபின் புத்த மதத்திற்கு மாறினாரே, ஏன் வைணவ மதத்திற்கோ சைவ மதத்திற்கோ மாறவில்லை?//
    இந்து மதமும் புத்த மதமும் அடிப்படையில் ஒன்றுதான். நீங்கள் சராசரி இந்துவை விட இந்து மதத்தை பற்றி ஓரளவுக்கு தெரிந்தவர் என்று கூறுவதால், நீங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக இந்து மத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும்போது புத்த மதத்திற்கும், இந்து மதத்திற்குமான தத்துவ அடிப்படையை புரிந்து கொள்வீர்கள்.

    // இப்போதும வேறு பெய‌ர்களில் அந்த‌ “புனித‌ப் ப‌ணி” புதிய‌ ஆயுத‌ங்க‌ளுட‌ன் ந‌டை பெறுகிற‌து. // இப்போது உமது உள்ளக் கிடக்கை நன்றாக புரிகிறது.

    புரிகிறது அல்லவா, பாலஸ்தீனிலிரிந்து பாலஸ்தீனியர்களை விரட்டியட்டித்தது, ஈராக்கிலே புகுந்து அந்த இடத்தையே நரகமாக்கியாயது போன்ற புனிதப் பணிகளின் மூலம் இந்த உலகம் முழுவதையும் கல்லறையாக்கி விட வேண்டாம் என்பதுதான் என் உள்ளக் கிடக்கை.

    //முதலில் ஒரிசாவிலும் குஜராத்திலும் கர்நாடகத்திலும் கொலை வெறி பிடித்து அலையும் இந்துக்களுக்கு உம்முடைய பிரசங்கத்தை நடத்தும்.ஒரிசாவில் தொழு நோயாளிகளுக்கு சேவை செய்ய வந்த ஒரு மாமனிதரையும் அவருடைய குழந்தைகளையும் உயிரோடு கொளுத்தினான் //

    நாங்கள் அந்த கொடூர சம்பவங்களை வன்மையாக கண்டிக்கிறோம். எதிர்க்கிறோம். அவற்றை ஆதரிக்கவில்லை. நூறு கோடி இந்துக்களில் சிலர் காட்டுமிராண்டித் தனங்களைக் கற்றுக் கொள்கின்றனர். அவர்களை திருத்த வேண்டியது எங்களுடைய பொறுப்புதான்.

    //இணைய தலங்களில் மேய்ந்து பாருங்கள் கிறிஸ்தவர்கள் மேல் எந்த அளவுக்கு வன்மையான தாக்குதல்கள் நடந்து வருகிறது என்பதை அறிந்து கொள்வீர்கள்//

    இது உண்மைதான். அவ‌ற்றை நாங்க‌ள் அவ்வ‌ப் போது க‌ண்டித்து வ‌ருகிறொம். அவ‌ர்க‌ள் எண்ணிக்கையில் மிக‌வும் குறைவு. மேலும்- பிற‌ ம‌த‌ங்க‌ளை ம‌திப்ப‌து, அவைக‌ளில் உள்ள‌ ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ளை பாராட்டுவ‌து என்று யாராவ‌து இருந்தால்- இன்றைக்கு வேறு யாரும் அப்ப‌டி செய்வ‌து இல்லை.
    என‌வே இந்து ம‌த‌த்தை பிற‌ ம‌த‌த்தின‌ர் வேறு எங்காவ‌து இக‌ழ்வ‌தை நினைத்து இப்ப‌டி அவ‌ர்க‌ள் செய்ய‌லாம்.

    //ஒரு 40 வருடங்களுக்கு முன்பு கூட இந்து மதத்தை நன்றாக படித்திருந்த கூட்டத்தினர் மற்ற ஜனங்களை தாழ்ந்த ஜாதியினர் என்று சொல்லி எந்த அளவுக்கு கொடுமை படுத்தினர். இப்போது கூட இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே வரக்கூடாது என்று பல கோயில்களில் தடை செய்யப்பட்டுள்ளதே//

    இந்து மதம் அவ்வப்போது சீர் திருத்தப் பட்டு வருகிறது. குறைகளைக் கண்டறிந்து சீர் திருத்துவோம். நியாயம் வழங்குவோம்.

    //உங்களை போன்றவர்கள் பல வடிவங்களில் வருவார்கள். ஒருவர் நேரடியாக தாக்குவார், ஒருவர் கிறிஸ்தவத்திலிருந்து நல்ல செய்திகள் சிலவற்றை சொல்லி பிறகு தன சுய ரூபத்தை காண்பிப்பார், சிலர் நாத்திகவாதிகள் போல வேடமிட்டுக் கொண்டு வருவார்கள். ஆனால் இவர்கள் அனைவருடைய நோக்கமும் ஒன்றுதான்; வேஷம் தான் வேறு//

    இந்த‌ உல‌க‌த்திலே யார் யேசு கிரிஸ்துவை விட்டுக் கொடுத்தாலும், நான் விட்டுக் கொடுக்க‌ மாட்டேன். கிருஸ்த‌வ‌ர்க‌ளையும் விட்டுக் கொடுக்க‌ மாட்டேன்.

    காணாம‌லும் விச‌வ‌சிப்ப‌வ‌ர்கள் பாக்கிய‌வான்க‌ள்!

    //கிறிஸ்தவர்களுக்கு நீர் கிறிஸ்தவத்தை பற்றி விளக்கவேண்டிய அவசியமில்லை//

    அவசியம் இருக்கிறது.

    இயேசு கிறிஸ்து சகிப்புத் தன்மையை, விட்டுக் கொடுக்கும் தன்மையை வலியிருத்திக் கூறியுள்ளார்.

    8000 வருடங்களுக்கும் மேலான சரித்திரம் உடைய இந்திய சமுதாயம் சகிப்புத் தன்மையும், நல்ல கருத்துக்களை உணர்ந்து பின்பற்றும் தன்மையும் உடையது.

    மிக அடிப்படைவாத மதத்தைச் சேர்ந்த முகலாய மன்னர் அக்பர் கூட, சகிப்புத் தன்மையை இந்தியரிடம் கற்று சரியான இந்தியரானார்.

    அசோகர், அக்பர், காந்தி எல்லோரும் சகிப்புத் தன்மையும் , நல்லெண்ணமும் கொண்ட இந்திய சமுதாயத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு அதே பாதையிலே சென்றனர்.

    இப்போது இந்த அடிப்படைத் தத்துவங்களுக்கு ஆப்பு வைத்து விட்டு, என் மதம் மட்டும் தான் ஒரே உண்மையான மதம், நான் கூறும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள் என்று உலகெங்கும் வெறுப்பு பிரச்சாரம் செய்வதைப் போல, இங்கேயும் மக்களிடையே வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் கருத்துக்கள், இந்தியாவையும் பாழாக்க‌ அனும‌திக்க‌ முடியாது.

    நாம் கிறிஸ்தவத்தை பற்றி விளக்கவேண்டிய அவசியம் இருக்கிறது!

  16. //இந்தியாவிற்கு கலாச்சாரம் என்று ஒன்று இல்லை. ஆச்சாரம் தான் இருக்கிறது. சாதி ரீதியான ஏற்றதாழ்வுகளை கொண்ட ஆச்சாரம் தான் இருக்கிறதே ஒழிய சிறந்த பண்பாடு என்று ஒன்று இல்லை. இந்த மண்ணுக்கென்று ஒரு பண்பாடு இருந்ததில்லை.//

    //தமிழன் என்றும் தமிழர்களின் அடையாளம் என்றும் நீங்கள் எதை சொல்வீர்கள்? இன்றைய தமிழர்கள் யாருடைய வாழ்முறையை கடைபிடிப்பது? //

    திரு. குளோரியஸ் ஸ்டீவ் ச.ச என்ன‌ த‌மிழ் நாட்டு மக்க‌ளுட‌ன் க‌ல‌ந்து ப‌ழ‌காத‌வ‌ர் போல‌ பேட்டி கொடுத்து இருக்கிராரே?

    ஒருவ‌னுக்கு ஒருத்தி என்ப‌துதான் த‌மிழ் ப‌ண்பாடு, அதே தான் இந்திய‌க் க‌லாச்சார‌மும்.

    இப்போது கூட‌ எந்த‌ ஒரு த‌மிழ‌னும், த‌ன் அக்க‌வோ, த‌ங்கையோ யாரோ ஒரு ஆணிட‌ம் நெருக்க‌மாக‌ப் ப‌ழ‌குவ‌தை அனும‌திக்க‌ மாட்டான். த‌ன் த‌ங்கையைப் ப‌ற்றி எவ‌னாவ‌து ப‌ழித்துக் கூறினால் அட‌ங்காத‌ சின‌ம் கொள்வான்.

    இன்றைக்கும் பெரும்பாலான‌ தமிழ‌ர்கள், த‌ன் ம‌னைவியைத் த‌விர‌ பிற‌ரிட‌ம் உற‌வு வைக்க‌த் த‌யார் இல்லை.

    இப்படியாக‌ த‌மிழ் நாடும் அதை உள்ள‌ட‌க்கிய‌ இந்தியாவும் தான் உல‌கிலே அன்று முத‌ல் இன்று வ‌ரை குடும்ப‌ ப‌ண்பாட்டைக் க‌டைப் பிடித்து வ‌ருகின்ற‌ன‌.

    தமிழர்களின் பண்பாட்டுக்கு சான்றாக விளங்குகிறார் கண்ணகித் தாயார்.
    கற்பு என்பது கணவனோடு மட்டும் உறவு வைத்துக் கொள்வது மட்டும் அல்ல. கணவன் எவ்வளவு கீழான, கஷ்டமான நிலைக்குப் போனாலும், கணவனை விட்டு விலகாமல் அவன் மீண்டு வர உறுதுணையாக இருப்பதுதான் கற்பு என்பதை உலகுக்கே காட்டிச் சென்றார் கண்ணகித் தாயார்.

    சீதா அம்மையார், நளாயினி அம்மையார், சாவித்திரி அம்மையார் போன்ற எல்லோரும் இதையே நிலை நிறுத்தினர்.

    தமிழ் பண்பாட்டில் ஆர்வம் ஏற்ப்பட்ட வெள்ளைகார செர்மானிய மாணவர் ஒருவர், தமிழ் நாட்டுக்கு வந்து கண்ணகியும் கோவலனும் நடந்து போனதைப் போல தானும் பூம்புகாரிலிருந்து மதுரை வரை நடந்தே சென்று பார்த்து இருக்கிறார்.

    வெள்ளைக்காரருக்குத் புரிந்த பண்பாடு இங்கே இருப்பவருக்கு புரிய வில்லையா?

    வீர‌ விளையாட்டுக‌ள் என்று பார்த்தால் சில‌ம்ப‌ம், க‌ப‌டி, ம‌ஞ்சு விர‌ட்டு, பெண்க‌ளுக்கான‌ பாண்டி விளையாட்டு, உள்ள‌ர‌ங்க‌ விளையாட்டான‌ ஆடு புலி ஆட்ட‌ம் இவை எல்லாம் உள்ள‌ன‌.

    குடும்ப‌ நிக‌ழ்ச்சிக‌ள் என்று பார்த்தால் பெண்க‌ள் பூப்பு எய்துத‌ல், திரும‌ண‌ம், வ‌ளைகாப்பு, குழ‌ந்தைக்கு பேர் வைப்பு இப்ப‌டியாக‌ ப‌ல‌ சிற‌ப்பான‌ நிக‌ழ்ச்சிக‌ள்

    ப‌ண்டிகை என்று பார்த்தால் பொங்க‌ல் த‌மிழ‌ரின் த‌லையான‌
    ப‌ண்டிகை!

    இவையெல்லாம் எல்லா த‌மிழ‌ருக்கும் பொதுவான‌ விச‌ய‌ங்க‌ள்தான்.

    ஆனால் இதையெல்லாம் ப‌ண்பாடாக‌ ஒத்துக் கொள்ள ம‌ன‌ம் வ‌ர‌வில்லை திரு. குளோரியஸ் ஸ்டீவ் ச.ச அவ‌ர்களுக்கு!

    த‌மிழ‌னுக்கு ப‌ண்பாடு இல்லை என்றால் அப்ப‌ உல‌க‌த்தில் வேறு யாருக்கு இருக்கு? கிரேக்க‌ருக்கும் , ரோமானிய‌ருக்கும் ம‌ட்டும்தான் ப‌ண்பாடு இருக்கா?

    தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு இருக்கிற‌து. அந்த‌ப் ப‌ண்பாட்டில் தான் த‌மிழ் நாட்டில் வாழும் பெருவாரியான‌ ம‌க்க‌ள் வாழுகின்ற‌ன‌ர்.

    தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு இருக்கிற‌து. அந்த‌ப் ப‌ண்பாட்டில் தான் த‌மிழ் நாட்டில் வாழும் பெருவாரியான‌ ம‌க்க‌ள் வாழுகின்ற‌ன‌ர்.

    தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு இருக்கிற‌து. அந்த‌ப் ப‌ண்பாட்டில் தான் த‌மிழ் நாட்டில் வாழும் பெருவாரியான‌ ம‌க்க‌ள் வாழுகின்ற‌ன‌ர்.

    யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பெரும்பான்மையான‌ ம‌க்க‌ளால் பின‌ப‌ற்ற‌ப்ப‌டும் அந்த‌ப் ப‌ண்பாடு தொட‌ரும்.
    விரும்பினால் இண‌யுங்க‌ள். விரும்பாவிட்டால் வில‌கி இருப்ப‌து அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம். நாம் எல்லொரையும் ந‌ண்ப‌ராக‌வே எண்ணுவோம். ந‌ண்ப‌ர்க‌ள் தான்.

    ஆனால் நான்கு பேர் சேர்ந்து 4000 வ‌ருட ப‌ழ‌மை உடைய‌ த‌மிழ் ப‌ண்பாட்டை , 7 கோடி த‌மிழ‌ர் பின்ப‌ற்றும் த‌மிழ‌ர் ப‌ண்பாட்டு சூரிய‌னை காகித‌த்தால் ம‌றைக்க‌ முடியாது.

  17. மதத்திற்கு வால் பிடிக்கும் இப்பேட்டியை வெளியிட்டிருக்கும் கட்டுரையாளரை இனியும் யாரும் பகுத்தறிவாதி என்று விளித்தால் அது உண்மையான பகுத்தறிவாதிகளுக்குத் தான் கேவலம். பாரதியை இந்துத் துவக்கண்ணோட்டம் கொண்டவர் என்றால் இவரை என்னவென்று சொல்ல – பேட்டியே அதனை வெட்ட வெளிச்சமாக்குகிறது என நினைக்கிறேன்.

  18. //இப்போது இந்த அடிப்படைத் தத்துவங்களுக்கு ஆப்பு வைத்து விட்டு, என் மதம் மட்டும் தான் ஒரே உண்மையான மதம், நான் கூறும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள் என்று உலகெங்கும் வெறுப்பு பிரச்சாரம் செய்வதைப் போல, இங்கேயும் மக்களிடையே வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் கருத்துக்கள், இந்தியாவையும் பாழாக்க‌ அனும‌திக்க‌ முடியாது.// இயேசு நாதர் சொன்னதைத்தான் அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். நான் கூறும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள் என்பது பைபிளில் சொல்லப்பட்ட விஷயம். இதை யாரும் வேண்டுமென்றே கற்பனையாக சொல்லவில்லை. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. விருப்பமுள்ளவர்கள் ஏற்று கொள்ளட்டும் இல்லாதவர்கள் விட்டு விடலாம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பைபிளை மாற்ற முடியாது. இப்படி சொல்வதால் உங்களிடம் வெறுப்புணர்ச்சி தோன்றுகிறது என்றால் உங்களிடம் சகிப்பு தன்மை இல்லை என்றுதான் அர்த்தம். இன்று வரை கிறிஸ்தவர்கள் தமிழகத்தில் அனைவருடனும் சமாதானமாகத் தான் பழகி வருகிறார்கள். சொல்லப் போனால் கல்வி சேவை மற்றும் மருத்துவ சேவை செய்வதில் கிறிஸ்தவர்களுக்கு எந்த மதத்தினரும் ஈடு கொடுக்க முடியாது.

  19. //இந்து மதம் அவ்வப்போது சீர் திருத்தப் பட்டு வருகிறது. குறைகளைக் கண்டறிந்து சீர் திருத்துவோம். // கிறிஸ்தவ சமயத்தில் கூட மார்டின் லூதர் தலைமையில் ஒரு புரட்சியே நடத்தப்பட்டது. வரலாறு படித்தவர்களுக்கு தெரியும்.

    //“வாளை உரையிலே போடு! வாளை எடுத்தவன், வாளால் அழிவான்!” என்று கூறிய இயேசு கிறிஸ்துவின் பேரைக் கூறி எத்தனை படையெடுப்புகள். இது சரியா ?// இது தனிப்பட்ட நபர்களுக்கு கூறப்பட்டது. அரசாங்கத்திற்கு அல்ல. ஒவ்வொரு நாட்டுக்கு எதிரியிடமிருந்து காத்துக்கொள்ள உரிமை உண்டு. இது தவறு என்று இயேசு நாதர் எங்கும் சொன்னதில்லை. சிலுவை போர் நடை பெறவில்லையென்றால் இன்று ஓட்டு மொத்த ஐரோப்பாவும் இஸ்லாமியர் வசமாகியிருக்கும். அப்படி நடந்திருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருந்திருக்கும் என்று நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

    //மன்னர்கள் தங்களின் ஆதிக்க ஆசைக்கு போரை நடத்தி இரத்த ஆறு ஓட விடுகின்றனர்.// இது அமெரிக்காவுக்கு பொருந்தாதா?

    //இந்து மதமும் புத்த மதமும் அடிப்படையில் ஒன்றுதான். // இந்து மதமும் புத்த மதமும் அடிப்படையில் வேறுபட்டவை. ஒரிஜினல் புத்த மதத்தில் பல கட்டு கதைகள் சேர்க்கப்பட்டதால் உங்களுக்கு இரண்டும் ஓன்று போல தோன்றலாம்.

    //பாலஸ்தீனிலிரிந்து பாலஸ்தீனியர்களை விரட்டியட்டித்தது// முஸ்லீம்கள் செய்யும் பொய் பிரச்சாரத்தால் பலரும் இவ்வாறு தவறாக நினைத்து கொள்கிறார்கள். தற்போதைய பாலஸ்தீனர்களை விட யூதர்களின் தான் அந்த நாட்டின் மூத்த குடிகள்.
    பாலஸ்தீனியர்களை யாரும் விரட்டியடிக்கவில்லை. ஆனால் யூதர்களிடம் கொண்ட வெறுப்பின் காரணமாக அரபு நாடுகள் இஸ்ரேலில் குழப்பம் விழைவிக்கின்றன.

  20. //ஒருவ‌னுக்கு ஒருத்தி என்ப‌துதான் த‌மிழ் ப‌ண்பாடு, அதே தான் இந்திய‌க் க‌லாச்சார‌மும். // தவறான தகவல். ஒரு 30-40 ஆண்டுகளுக்கு முன்புகூட தமிழகத்தில் இரண்டு மனைவிகள் உடையவர்கள் பலர் உண்டு. தமிழர்களின் புராதன கடவுளாக கருதப்படும் முருகனுக்கு கூட இரண்டு மனைவிகள் உண்டே. இந்திய கலாசாரம் என்று ஒரு தனி கலாசாரம் கிடையாது. இந்தியாவில் பல கலாச்சாரங்கள் உண்டு. ஒருத்திக்கு பலர் என்ற வழக்கம் கூட இந்தியாவில் இருந்ததுண்டு. பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள் என்பது தொடக்கி கேரளாவில் நாயர்களிடம் காணப்பட்ட சம்பந்தம் என்ற முறையையும் இதற்கு உதாரணமாக கூறலாம்.

  21. //நான் கூறும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள் என்பது பைபிளில் சொல்லப்பட்ட விஷயம்//

    Can you please clarify as where this is mentioned in Bible?

    Which part?

  22. உபாகமம் 5 அதிகாரம்:

    6. உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

    7. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

    8. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.

    ஏசாயா – 45 அதிகாரம்:
    22. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.

  23. //நான் கூறும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள் என்பது பைபிளில் சொல்லப்பட்ட விஷயம். இதை யாரும் வேண்டுமென்றே கற்பனையாக சொல்லவில்லை. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. விருப்பமுள்ளவர்கள் ஏற்று கொள்ளட்டும் இல்லாதவர்கள் விட்டு விடலாம்//

    என்னுடைய கடவுள் மட்டும்தான் ஜீவனுள்ள கடவுள், பிறரின் கடவுள்கள் எல்லாம் ஜீவன் இல்லாத கடவுள்கள் என்று சத்தமாக சொல்லும் போதே, பிறரின் மனங்களில் வருத்தத்தையும், கோவத்தையும் உண்டாக்கி விட்டு- பிறகு விருப்பமுள்ளவர்கள் ஏற்று கொள்ளட்டும் இல்லாதவர்கள் விட்டு விடலாம்- என்று கூற, இது என்ன சீட்டு ஏலமா?

    நீங்கள் இப்படி சொல்லும்போது பங்காளிகளான இசுலாமியர் மட்டும் சும்மா இருப்பார்களா. எங்க கடவுள் தான் உண்மையான கடவுள், அது மட்டும் அல்ல, விண்ணுக்கும் மண்ணுக்கும் அதிபதி, சர்வ வல்லமை உடையவர் என்று அடித்து சொல்கிறார்கள்.

    உண்மையில் யாரும் எந்தக் கடவுளையும் பார்த்தது இல்லை. பிறர் கூறியதைக் கேட்டு அதற்க்கு சாட்சி கொடுக்கும் இவர்கள், தங்களில் யார் கடவுள் அதிக வல்லமை உடையவர் என்பதை தாங்கள் மோதிப் பார்த்து முடிவு செய்யலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர். உருவு வாளை, பார்க்கலாம் என்று செயல் பட ஆரம்பித்து, எங்கு எங்கெல்லாம் சண்டை போட முடியுமோ அங்கெங்கெல்லாம் சண்டை போட்டு கல்லறைகளின் பரப்பளவை அதிகமாக்குகின்றனர். இது காட்டுமிராண்டி தனமானது. நாகரிக சமுதாயத்துக்கு ஒவ்வாதது.

    // உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பைபிளை மாற்ற முடியாது//
    நாகரீக சமுதாயத்துக்கு வூறு விளைவிக்கும் காட்டுமிராண்டிக் கருத்துக்கள், எந்த நூலில் இருந்தாலும்- எந்த மார்க்கத்தில் இருந்தாலும் சரி- முடிந்தால் அவற்றை திருத்தி எடுத்துக் கொண்டு வாருங்கள்- அது பைபிளோ, குரானோ, கீதையோ, தம்ம பதமோ எதுவாக இருந்தாலும் அதை திருத்தி சரி செய்து எடுத்து வாருங்கள்!

    அப்படி திருத்தி கொண்டு வர மனமில்லை என்றால் வேறு எங்காவது சென்று அடித்துக் கொள்ளுங்கள். இங்கெ வந்து வெறுப்புக் கருத்துக்களை தூண்டி, காட்டுமிராண்டிக் காலத்துக்கு அழைத்துப் போவதை அனுமதிக்க முடியாது.

    இவ்வளவு படித்து பட்டங்களைப் பெற்றும் , எது நாகரீகம் என்று பார்த்து அதன்படி நடக்க வேண்டும் என்பதல்லாமல், வெறுப்புக் கருத்துக்களுக்கு வக்காலத்து வாங்கி எழுதுகின்றனர்.

  24. //இப்போது இந்த அடிப்படைத் தத்துவங்களுக்கு ஆப்பு வைத்து விட்டு, என் மதம் மட்டும் தான் ஒரே உண்மையான மதம், நான் கூறும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள் என்று உலகெங்கும் வெறுப்பு பிரச்சாரம் செய்வதைப் போல, இங்கேயும் மக்களிடையே வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் கருத்துக்கள், இந்தியாவையும் பாழாக்க‌ அனும‌திக்க‌ முடியாது.// இயேசு நாதர் சொன்னதைத்தான் அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.//

    இயேசு நாதர் தான் கூறும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், மற்றவை எல்லாம் ஜீவன் இல்லாதவை என்று எந்த இடத்த்தில் கூறினார் என்று விளக்க முடியுமா?

  25. //ஒருவ‌னுக்கு ஒருத்தி என்ப‌துதான் த‌மிழ் ப‌ண்பாடு, அதே தான் இந்திய‌க் க‌லாச்சார‌மும். // தவறான தகவல். ஒரு 30-40 ஆண்டுகளுக்கு முன்புகூட தமிழகத்தில் இரண்டு மனைவிகள் உடையவர்கள் பலர் உண்டு.//

    பலர் என்றால் எவ்வளவு பேர்? நூறு பேரா? இருநூறு பேரா?

    ஒரு இலட்சம் பேரில் ஒரு நூறு பேர்- இரண்டு பொண்டாட்டி க‌ட்டி இருப்பாரா? அதைப் “பலர் உண்டு” என்று கூறுகிரார்க‌ள்!

    ச‌ரி உங்க‌ள் வூரில் சுமாராக‌ எத்த‌னை குடும்ப‌ங்க‌ள்? அதில் எத்த‌னை பேர் ப‌ல‌ பெண்க‌ளைத் திரும‌ண‌ம் செய்த‌வ‌ர்க‌ள். இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்க‌ள். அப்போதுதான் “பலர் உண்டு”

    எந்த‌ப் ப‌ண்பாடு, ந‌ம‌க்கு, ந‌ம‌து ச‌கோதர‌ ச‌கொத‌ரிகளுக்கு இந்த‌ சிறந்த‌ குடும்ப‌ப் ப‌ண்பாட்டையும், அத‌னால் ம‌கிழ்ச்சியான‌ குடும்ப‌ வாழ்க்கையையும் த‌ந்த‌து என்ற‌ ந‌ன்றி கூட‌ இல்லாம‌ல் உண்மை‌யை ம‌றைக்க‌ப் பார்க்கிரார்க‌ள்.

    //தமிழர்களின் புராதன கடவுளாக கருதப்படும் முருகனுக்கு கூட இரண்டு மனைவிகள் உண்டே//
    -க‌ருத‌ப் ப‌டும் அல்ல‌, உல‌கெங்கும் உள்ள‌ த‌மிழ‌ர்க‌ளின் முக்கிய‌க் க‌ட‌வுள் முருக‌ர்தான்!‍ ‍ அவ‌ருக்கு இர‌ண்டு ம‌னைவிய‌ர்தான்!‍ ‍‍‍ ப‌ண்பாடு என்ப‌து பெரும்பாலான‌ ம‌க்க‌ள் பின்ப‌ற்றும், அங்கீக‌ரிக்கும் முறைதான். ஒரு சில‌ர் மாறி ந‌ட‌ந்தால் (அது க‌ட‌வுலாக‌ இருந்தாலும் ச‌ரி) அதை வைத்து ப‌ண்பாடு இல்லை என்று கூற‌ முடியாது!

    //இந்திய கலாசாரம் என்று ஒரு தனி கலாசாரம் கிடையாது. இந்தியாவில் பல கலாச்சாரங்கள் உண்டு. ஒருத்திக்கு பலர் என்ற வழக்கம் கூட இந்தியாவில் இருந்ததுண்டு. பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள் என்பது தொடக்கி கேரளாவில் நாயர்களிடம் காணப்பட்ட சம்பந்தம் என்ற முறையையும் இதற்கு உதாரணமாக கூறலாம்//
    ப‌ண்பாடு என்ப‌து பெரும்பாலான‌ ம‌க்க‌ள் பின்ப‌ற்றும், அங்கீக‌ரிக்கும் முறைதான். ஒரு சில‌ர் மாறி ந‌ட‌ந்தால் அதை வைத்து ப‌ண்பாடு இல்லை என்று கூற‌ முடியாது. உங்க‌ள் தெருவில் , வூரில் வாழூம் பெண்க‌ள் யார‌வ‌து ப‌ல‌ பேரைக் க‌ட்டி வாழுராங்க‌ளா?

  26. //6. உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

    7. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

    8. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.

    ஏசாயா – 45 அதிகாரம்:
    22. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை//

    இதெல்லாம் எகிப்து தேச‌த்தில் அடிமைக‌ளாக‌ இருந்த
    யூத‌ர்க‌ளுக்கு , அவ‌ர்க‌ளை மீட்டுக் கொண்டு வ‌ந்த ‌க‌ட‌வுள் கூறிய‌து. அடிமையாக‌ இருந்த‌வ‌ர்க‌ளை மீட்ட‌ க‌ட‌வுளுக்கு ந‌ன்றியாக‌ இருக்க‌ வேண்டிய‌துதான். நீ என்னைத் தான் கும்பிட‌ வேண்டும் என்று அந்த‌க் க‌ட‌வுள் யூத‌ர்க‌ள‌ப் பார்த்து கூறியிருக்க‌லாம்.

    அத‌ற்க்கும் த‌மிழ‌ர்க‌ளுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? நாங்க‌ எகிப்து போக‌வில்லையே?

    எங்க‌ளுக்கு க‌ஷ்ட‌ம் வ‌ந்த‌ போது உத‌விய‌து முருக‌ன் தானே? நாங்க‌ அவ‌ரைக் கும்பிட்டா உங்க‌ளுக்கு என்னா ஆற்றாமை?

    அடிமையாக‌ இருந்த‌ யூத‌ர்க‌ளைக் காத்த‌வ‌ர் என்ற‌ முறையிலே நாங்க‌ ஜெஹோவாவையும் வ‌ண‌ங்க‌ கூட‌ நாங்க‌ள் த‌யாராக‌ இருக்கிறோம். இந்த‌‌ அள‌வுக்கு ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப் பான்மை இல்லாவிட்டாலும், ஓர‌ள‌வுக்காவ‌து நாக‌ரீக‌மாக‌ ந‌ட‌க்கும் ப‌ழ‌க்க‌ம் வேண்டும்!

  27. //ஒருவ‌னுக்கு ஒருத்தி என்ப‌துதான் த‌மிழ் ப‌ண்பாடு, அதே தான் இந்திய‌க் க‌லாச்சார‌மும். // தவறான தகவல். ஒரு 30-40 ஆண்டுகளுக்கு முன்புகூட தமிழகத்தில் இரண்டு மனைவிகள் உடையவர்கள் பலர் உண்டு.//

    பலர் என்றால் எவ்வளவு பேர்? நூறு பேரா? இருநூறு பேரா?

    ஒரு இலட்சம் பேரில் ஒரு நூறு பேர்- இரண்டு பொண்டாட்டி க‌ட்டி இருப்பாரா? அதைப் “பலர் உண்டு” என்று கூறுகிரார்க‌ள்!

    ச‌ரி உங்க‌ள் வூரில் சுமாராக‌ எத்த‌னை குடும்ப‌ங்க‌ள்? அதில் எத்த‌னை பேர் ப‌ல‌ பெண்க‌ளைத் திரும‌ண‌ம் செய்த‌வ‌ர்க‌ள். இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்க‌ள். அப்போதுதான் “பலர் உண்டு” என்று கூறுவ‌து உண்மையா என்று தெரியும்.

  28. //பாலஸ்தீனிலிரிந்து பாலஸ்தீனியர்களை விரட்டியட்டித்தது// முஸ்லீம்கள் செய்யும் பொய் பிரச்சாரத்தால் பலரும் இவ்வாறு தவறாக நினைத்து கொள்கிறார்கள். தற்போதைய பாலஸ்தீனர்களை விட யூதர்களின் தான் அந்த நாட்டின் மூத்த குடிகள்.
    பாலஸ்தீனியர்களை யாரும் விரட்டியடிக்கவில்லை. ஆனால் களிடம் கொண்ட வெறுப்பின் காரணமாக அரபு நாடுகள் இஸ்ரேலில் குழப்பம் விழைவிக்கின்றன.

    ம‌ன‌ம‌றிந்து உண்மையை ம‌றைத்து எழுத‌க் கூடாது. யூதர் எகிப்திலிருந்து த‌ப்பி வ‌ரும் கால‌ம் வ‌ரை பால‌ஸ்தீனில் வ‌சித்த‌து பால‌ஸ்தீனிய‌ர் தானே?

  29. //என்னுடைய கடவுள் மட்டும்தான் ஜீவனுள்ள கடவுள், பிறரின் கடவுள்கள் எல்லாம் ஜீவன் இல்லாத கடவுள்கள் என்று சத்தமாக சொல்லும் போதே, பிறரின் மனங்களில் வருத்தத்தையும், கோவத்தையும் உண்டாக்கி விட்டு-// சதி என்று இந்து மதத்திலிருந்த கொடிய பழக்கத்தை ஒழிக்க சட்டம் கொண்டுவரப்பட்டபோது கூட பலரின் மனங்களில் வருத்தமும் கோபமும் ஏற்பட்டது. அதற்காக அந்த சட்டத்தை தவறு என்று சொல்ல முடியுமா? தீண்டாமை ஒழியவேண்டும் என்று சொன்னால் கூட பலரின் மனதில் வருத்தமும் கோபமும்தான் ஏற்படுகிறது. ஒருவர் வருத்தப்படுகிறார் என்பதற்காக என்னுடைய கருத்தை மாற்றி கொள்ள முடியாது. அதே சமயம் ஒருவருடைய முகத்திற்கு நேரே நீ வணங்கும் கடவுள் கல் தானே என்று சொல்வதை நானும் ஆதரிக்கவில்லை. அதை பக்குவமாகத்தான் எடுத்து சொல்லவேண்டும். ஒரு சிலர் இப்படி தவறாக நடக்கலாம். அதற்காக எல்லாரையும் குற்றப்படுத்த வேண்டியதில்லை. அதே நேரம் என்னுடைய நம்பிக்கையை நீங்கள் கேள்விக்குட்படுத்தும்போது உங்களுடைய நம்பிக்கையை கேள்வி கேட்கும் உரிமையை எனக்கு தந்து விடுகிறீர்கள்.

  30. //பலர் என்றால் எவ்வளவு பேர்? நூறு பேரா? இருநூறு பேரா?
    ஒரு இலட்சம் பேரில் ஒரு நூறு பேர்- இரண்டு பொண்டாட்டி க‌ட்டி இருப்பாரா? அதைப் “பலர் உண்டு” என்று கூறுகிரார்க‌ள்! //
    //உல‌கெங்கும் உள்ள‌ த‌மிழ‌ர்க‌ளின் முக்கிய‌க் க‌ட‌வுள் முருக‌ர்தான்!‍ ‍ அவ‌ருக்கு இர‌ண்டு ம‌னைவிய‌ர்தான்!‍ ‍‍‍ ப‌ண்பாடு என்ப‌து பெரும்பாலான‌ ம‌க்க‌ள் பின்ப‌ற்றும், அங்கீக‌ரிக்கும் முறைதான். ஒரு சில‌ர் மாறி ந‌ட‌ந்தால் (அது க‌ட‌வுலாக‌ இருந்தாலும் ச‌ரி) அதை வைத்து ப‌ண்பாடு இல்லை என்று கூற‌ முடியாது! // அப்படி இரண்டு
    மனைவியர் உடைய ஒருவரை பெரும்பாலான தமிழர்கள் முக்கிய கடவுளாக ஏற்றுக்கொண்டிருக்கும்போது அந்த காலத்தில் பலதார மணம் பரவலாக இருந்திருக்கிறது என்றால் மட்டும் ஒப்புக் கொள்ள மறுப்பது ஏன்? அப்படி ஒருவனுக்கு ஒருத்திதான் என்று வைராக்கியமாக இருந்திந்தால் இரண்டு மனைவி உடைய ஒருவரை கடவுள் அதிலும் முக்கிய கடவுளாக ஏன் வைத்திருக்கவேண்டும்?
    முருகன் என்பது ஒரு எடுத்துக்காட்டுக்காக கூறியதுதான். இன்னும் பல உதாரணங்களை கூற முடியும். கிருஷ்ணருக்கு எத்தனை மனைவிகள்? மனைவிகள் மட்டுமல்லாது பல ஆசை நாயகிகளும் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறதே? மற்றவர் மனைவியரை கவர்ந்ததாக கூறப்படும் இந்திரனும் பழங்காலத்தில் முக்கிய கடவுள்தானே. இந்திர விழா என்று தமிழகத்தில் கொண்டாடப்பட்டு இருக்கிறதே.

  31. //ப‌ண்பாடு என்ப‌து பெரும்பாலான‌ ம‌க்க‌ள் பின்ப‌ற்றும், அங்கீக‌ரிக்கும் முறைதான். ஒரு சில‌ர் மாறி ந‌ட‌ந்தால் அதை வைத்து ப‌ண்பாடு இல்லை என்று கூற‌ முடியாது. // – ஒரு சிலர் என்பது யார்? கேரளாவில் உள்ள நாயர்கள் நம்பூதிரிகள் எல்லாரும் ஒரு சிலரா?

    //உங்க‌ள் தெருவில் , வூரில் வாழூம் பெண்க‌ள் யார‌வ‌து ப‌ல‌ பேரைக் க‌ட்டி வாழுராங்க‌ளா?// நான் சொல்லும் காலம் வேறு நீங்கள் குறிப்பிடும் காலம் கிறிஸ்தவர்களால் கல்வி அறிவு புகட்டப்பட்டு நாகரீகம் அடைந்த இந்த காலம்.

  32. //எந்த‌ப் ப‌ண்பாடு, ந‌ம‌க்கு, ந‌ம‌து ச‌கோதர‌ ச‌கொத‌ரிகளுக்கு இந்த‌ சிறந்த‌ குடும்ப‌ப் ப‌ண்பாட்டையும், அத‌னால் ம‌கிழ்ச்சியான‌ குடும்ப‌ வாழ்க்கையையும் த‌ந்த‌து என்ற‌ ந‌ன்றி கூட‌ இல்லாம‌ல் உண்மை‌யை ம‌றைக்க‌ப் பார்க்கிரார்க‌ள். // நீங்கள் கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விடும் என்று நினைக்கவேண்டாம். நீங்கள் குறிப்பிடும் பண்பாட்டில்தான் குமரி மாவட்டத்திலும் கேரளாவிலும் தாழ்ந்த சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். பெண்கள் தங்கள் மார்பை மூடுவதற்குக் கூட அனுமத்திக்கபடவில்லை. இப்படி ஒரு கேடு கெட்ட பண்பாடுதான் ஒருவருக்கு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அளிக்குமா? கொஞ்சம் மனசாட்சியோடு பேசுங்கள்.

  33. //எங்க‌ளுக்கு க‌ஷ்ட‌ம் வ‌ந்த‌ போது உத‌விய‌து முருக‌ன் தானே? நாங்க‌ அவ‌ரைக் கும்பிட்டா உங்க‌ளுக்கு என்னா ஆற்றாமை?// ஒருவருக்கு தன்னுடைய நம்பிக்கைகள் சரி என்றுப்படும்போது மற்றவர்களிடம் சொல்வது இயல்பு. அதை ஏற்றுகொள்பவர்கள் ஏற்று கொள்ளட்டும். இல்லாதவர்கள் விட்டு விடலாம். உங்கள் மீது எனக்கு ஆற்றாமை அல்ல; பறிதாபம்தான் ஏற்படுகிறது.

    //அடிமையாக‌ இருந்த‌ யூத‌ர்க‌ளைக் காத்த‌வ‌ர் என்ற‌ முறையிலே நாங்க‌ ஜெஹோவாவையும் வ‌ண‌ங்க‌ கூட‌ நாங்க‌ள் த‌யாராக‌ இருக்கிறோம். இந்த‌‌ அள‌வுக்கு ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப் பான்மை இல்லாவிட்டாலும், ஓர‌ள‌வுக்காவ‌து நாக‌ரீக‌மாக‌ ந‌ட‌க்கும் ப‌ழ‌க்க‌ம் வேண்டும்!// கோடிக்கணக்கான கடவுள்களை கொண்ட உங்களுக்கு இன்னொரு கடவுளை ஏற்றுகொள்வதில் ஒரு சிரமும் இருக்கபோவதில்லை. ஆனால் நாங்கள் கூடும் கடவுளுக்கும் நீங்கள் சொல்லும் கடவுள்களுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. உங்களிடம் உள்ளது பரந்த மனப்பான்மை அல்ல; அறியாமை.
    நாகரீகம் என்பது மற்றவர்கள் என்ன சொன்னாலும் ஏற்றுகொல்வதல்ல.

  34. //இயேசு நாதர் தான் கூறும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், மற்றவை எல்லாம் ஜீவன் இல்லாதவை என்று எந்த இடத்த்தில் கூறினார் என்று விளக்க முடியுமா?// –

    யோவான் – 11 அதிகாரம்:
    25. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,

    யோவான் 17:3 (John 17:3)
    ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

    மத்தேயு :5 அதிகாரம்:

    17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

    அந்த நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டதை தான் நான் சுட்டிக்காட்டினேன். இயேசு கிறிஸ்துவும் இதையே ஆதரிக்கிறார் என்பது மேற்கண்ட வசனங்களிலிருந்து உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

  35. //ம‌ன‌ம‌றிந்து உண்மையை ம‌றைத்து எழுத‌க் கூடாது. யூதர் எகிப்திலிருந்து த‌ப்பி வ‌ரும் கால‌ம் வ‌ரை பால‌ஸ்தீனில் வ‌சித்த‌து பால‌ஸ்தீனிய‌ர் தானே?// யூதர்களின் மூதாதையர்கள் இஸ்ரவேலில் தான் குடியிருந்தனர். ஆபிரகாமும் கானானில் குடியிருந்தவர்தான். அப்போது அது கானான் தேசம் என்று அழைக்கப்பட்டது. அப்போது அங்கே குடியிருந்தவர்கள் கானானியர்கள், பாலஸ்தீனர்கள் அல்ல. பாலஸ்தீனா என்ற பெயர் பின்னர் ஏற்பட்டதே. யூதர்கள் எகிப்திற்கு செல்லும் முன்பு கானான் தேசத்தில்தான் குடியிருந்தனர். எனவே யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு அந்நியர்கள் என்று சொல்வது தவறு. உண்மையை மறைக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை.

  36. //உங்க‌ள் தெருவில் , வூரில் வாழூம் பெண்க‌ள் யார‌வ‌து ப‌ல‌ பேரைக் க‌ட்டி வாழுராங்க‌ளா?// நான் சொல்லும் காலம் வேறு நீங்கள் குறிப்பிடும் காலம் கிறிஸ்தவர்களால் கல்வி அறிவு புகட்டப்பட்டு நாகரீகம் அடைந்த இந்த காலம்.

    Before Christian missionaries taught education how many women in India lived with multiple husbands?

    How many women in tamil nadu were committing adultration before Christian missionaries taught education ?

    How many women in tamil nadu had more than one husband before Christian missionaries taught education ?

    We are thankful to Christian missionaries for providing education to us.

    But did we learn the family culture from Christian missionaries?

    But thankless people forget that they are living in family due to the family culture practised in India.

    Before writing here, People should think as how their ancestors lived in India, before Christian missionaries were set up in India.

    As for as Tamilnadu is concerned no women were forced to walk with bare chest on any part of time. No women in tamilnadu would accept that also at any period in the History!

    I have some friends from Andhra, Karnataka and other parts of india, from what I learnt from them no where that system is followed.

    Some gentleman from Kerala back ground had referred similar system in Kerala. I dont know I have to check it out and found whether women in Kerala were bare chested.

    I am sorry, I am a Tamilan, we follow tamil culture, we know well about tamil culture , women walking without covering their chest was not practised in Tamil nadu and India.

    People from Kerala background/ kerala border should not only try to learn tamil, but they should learn about tamil culture properly before they defame the virtuous tamil women as polygamists and adultrators.

  37. //அடிமையாக‌ இருந்த‌ யூத‌ர்க‌ளைக் காத்த‌வ‌ர் என்ற‌ முறையிலே நாங்க‌ ஜெஹோவாவையும் வ‌ண‌ங்க‌ கூட‌ நாங்க‌ள் த‌யாராக‌ இருக்கிறோம். இந்த‌‌ அள‌வுக்கு ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப் பான்மை இல்லாவிட்டாலும், ஓர‌ள‌வுக்காவ‌து நாக‌ரீக‌மாக‌ ந‌ட‌க்கும் ப‌ழ‌க்க‌ம் வேண்டும்!// கோடிக்கணக்கான கடவுள்களை கொண்ட உங்களுக்கு இன்னொரு கடவுளை ஏற்றுகொள்வதில் ஒரு சிரமும் இருக்கபோவதில்லை. ஆனால் நாங்கள் கூடும் கடவுளுக்கும் நீங்கள் சொல்லும் கடவுள்களுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. உங்களிடம் உள்ளது பரந்த மனப்பான்மை அல்ல; அறியாமை.
    நாகரீகம் என்பது மற்றவர்கள் என்ன சொன்னாலும் ஏற்றுகொல்வதல்ல.//

    We are not compelling any one to accept our philosophy.
    We only clearly that you cant create hatredness in the soceity, by claiming that “my god only is living god”, that automatically creates insult and angry all other people , including muslims, Hindus, Sikhs and create animosity within Soceity.

    நாகரீக சமுதாயத்துக்கு வூறு விளைவிக்கும் காட்டுமிராண்டிக் கருத்துக்கள், எந்த நூலில் இருந்தாலும்- எந்த மார்க்கத்தில் இருந்தாலும் சரி- முடிந்தால் அவற்றை திருத்தி எடுத்துக் கொண்டு வாருங்கள்- அது பைபிளோ, குரானோ, கீதையோ, தம்ம பதமோ எதுவாக இருந்தாலும் அதை திருத்தி சரி செய்து எடுத்து வாருங்கள்!

    அப்படி திருத்தி கொண்டு வர மனமில்லை என்றால் வேறு எங்காவது சென்று அடித்துக் கொள்ளுங்கள். இங்கெ வந்து வெறுப்புக் கருத்துக்களை தூண்டி, காட்டுமிராண்டிக் காலத்துக்கு அழைத்துப் போவதை அனுமதிக்க முடியாது.

  38. Untouchabilty is an unfair Crime. Nobody is accepting the untouchabilty.
    Every one are against the untouchabilty in the word and spirit.

    We found that untouchabilty was aheinous crime, and we are rectifying that.

    But some people considers that they have all the rights to condemn all other religions andGods and thus creating rift in the soceity- they have to rectify, they should become civilsed!

  39. //உங்களிடம் உள்ளது பரந்த மனப்பான்மை அல்ல; அறியாமை.
    நாகரீகம் என்பது மற்றவர்கள் என்ன சொன்னாலும் ஏற்றுகொல்வதல்ல//

    People talk about “அறியாமை”! What they know. They are telling only our God is the God with life. Did any one see that God. Some one told that he has seen that God or heard from that God, based on that these people are blindly probagating that.

    I am asking again, do any of the todays evangelists or followers has really any see any God. Then on what basis you can insist on others, that our God is the only true God?

    We also worship Murugan, Rama (ofcourse we worship Jesus also),mainly because they lives with us, took pains , suffered all along and fought against the evil forces (so also did Jesus). So we respect, worship them, so that we can take the spirit and good qualities from them.

    But we can not confirm confidently, to testify that they are still existing, unless we see them personally !

    The existense of God itself is not proved so far. Its only belief. Its not confirmed.

    The existense of God (any God) itself is not proved so far. Only based on the blind faith- repeat- mere blind faith, people are worshipping many Gods.

    Thus without any proof, personal verification, if some one tries to insist that “My God is the only God with Life”, then is it not அறியாமை?

    Ok, you can have your faith, blind faith or ordinary faith as long as it is not infuriating or provoking others.

    But if your அறியாமை, blind faith is creating blood shed in soceity, we can not allow it.

    People who have அறியாமை based on blind faith, pointing fingers at us , Ridiculous!

  40. //As for as Tamilnadu is concerned no women were forced to walk with bare chest on any part of time. No women in tamilnadu would accept that also at any period in the History!//
    குமரி மாவட்டம் என்பது தமிழ்நாட்டின் தென்கோடியிலுள்ள மாவட்டம். குமரி மாவட்டமும் தென் கேரளமும் இணைந்ததுதான் திருவிதாங்கூர் சமஸ்தானம். நான் சொன்ன மேற்கண்ட சம்பவங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட விஷயங்கள்.

    //Some gentleman from Kerala back ground had referred similar system in Kerala. I dont know I have to check it out and found whether women in Kerala were bare chested. //
    அப்படியென்றால் இதெல்லாம் தெரியாமல்தான் பண்பாடு, கலாசாரம் என்றெல்லாம் எழுதி தள்ளிநீர்களா?
    முதலில் அறிந்து கொண்டு வாருங்கள் பின்னர் விவாதத்தை தொடரலாம்.

    உங்களுக்கு உதவியாக சில சுட்டிகள்:
    http://en.wikipedia.org/wiki/Upper_cloth_revolt
    http://en.wikipedia.org/wiki/Sambandham
    http://www.kerala.cc/keralahistory/index14.htm
    http://en.wikipedia.org/wiki/Polyandry_in_India

  41. //As for as Tamilnadu is concerned no women were forced to walk with bare chest on any part of time. No women in tamilnadu would accept that also at any period in the History!//
    குமரி மாவட்டம் என்பது தமிழ்நாட்டின் தென்கோடியிலுள்ள மாவட்டம். குமரி மாவட்டமும் தென் கேரளமும் இணைந்ததுதான் திருவிதாங்கூர் சமஸ்தானம். நான் சொன்ன மேற்கண்ட சம்பவங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட விஷயங்கள்.

    //Some gentleman from Kerala back ground had referred similar system in Kerala. I dont know I have to check it out and found whether women in Kerala were bare chested. //
    அப்படியென்றால் இதெல்லாம் தெரியாமல்தான் பண்பாடு, கலாசாரம் என்றெல்லாம் எழுதி தள்ளிநீர்களா?
    முதலில் அறிந்து கொண்டு வாருங்கள் பின்னர் விவாதத்தை தொடரலாம்.

    உங்களுக்கு உதவியாக சில சுட்டிகள்:
    http://en.wikipedia.org/wiki/Upper_cloth_revolt
    http://en.wikipedia.org/wiki/Sambandham
    http://www.kerala.cc/keralahistory/index14.htm
    http://en.wikipedia.org/wiki/Polyandry_in_India

  42. கேளுங்கள் இந்திய நாட்டு மக்களே, 6000 வருடத்திற்கும் மேலாக உங்கள் பாட்டன், முப்பாட்டன் யாரும் குடும்ப வாழ்க்கையில் ஒழுங்காக கற்புடன் வாழ்வில்லையாம்.

    இந்தியாவில் இருந்த பெண்மணிகளில் பெரும்பாலோர் பல பேருடன் வாழ்ந்தவர்கலாம். ஆண்களும் அப்படித்தானாம். இதையெல்லாம், 50 வருடங்களுக்கு முன் கிருஸ்த்தவ மிசினரியார் நமக்கு பாடம் கற்ப்பித்து , ஒழுக்கங்கெட்டு வாழ்ந்து வந்த நம்மையெல்லாம் நல்ல ஒழுங்கான குடும்ப வாழ்க்கைக்கு திருப்பினார்களாம்.
    வெளி நாட்டில் இருப்பவர் கூட நம்ம மீது கூறத் தயங்கும் இந்த பழியை, அதுவும் நம்முடனே வாழ்ந்தும் இப்படி ஒரு அபவாத பழியை இந்திய சமூகத்தின் முன் வைக்கும் நபர் அப்படிப்படவராக இருப்பார்? அதை நீங்களே கூறுங்கள்!

  43. //உங்க‌ள் தெருவில் , வூரில் வாழூம் பெண்க‌ள் யார‌வ‌து ப‌ல‌ பேரைக் க‌ட்டி வாழுராங்க‌ளா?// நான் சொல்லும் காலம் வேறு நீங்கள் குறிப்பிடும் காலம் கிறிஸ்தவர்களால் கல்வி அறிவு புகட்டப்பட்டு நாகரீகம் அடைந்த இந்த காலம்.//

    இவர்கள் கூறுகிற இந்த மிசினரிகள் உருவான நாடுகள், இவர்கள் கிருஸ்தவ மதம் என்று கூறிப் பரப்பிய நாடுகளில் மக்கள் வாழ்க்கை முறை எப்படி உள்ளது?

    அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பிலிப்பைன்சிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள மக்கள் திருமணம் செய்தால் எத்தனை நாட்கள் சேர்ந்து வாழ்கிறார்கள்?

    திருமணம் செய்தாலும் செய்யாவிட்டாலும், ஐரோப்பியனும், அமெரிக்கனும் தங்கள் வாழ் நாளில் எத்தனை பேருடன் உறவு வைக்கிறார்கள்? இயேசு கூறிய வழி இதுதானா? ஏன் அந்த மிசினரிகள் அவர்களுக்கு இயேசுவின் போதனையை சரியாகக் கூறவில்லையா?

    புரிகிறதா தமிழ் மக்களே, இந்தியர்களே!

    உங்களின் பாட்டனும் முப்பாட்டனும்- ஒருவன் ஒருத்தியை திருமணம் செய்து, அவளுக்கு விசுவாசமாக இருந்து கடைசி வரையில் அவளுடனே வாழ்ந்து சாகவில்லையாம்!

    உங்களின் பாட்டனும் முப்பாட்டனும் மிருகங்களைப் போல வாழ்ந்தவர்கலாம்.

    உங்களின் பாட்டிக்கும் பாட்டி, குடிசையிலே கஞ்சி குடித்து வாழ்ந்தாலும் மானத்தோடு வாழ்ந்தள் என்று நினைக்கிறீர்கள் அல்லவா? அது இல்லை என்று மிகப் பெரிய ஆரய்ச்சியாளர் கூறுகிறார். அவள் பல பேருடன் வாழ்ந்தவர் என்று சாட்சி குடுக்கிறார் ஒரு அற்புதக் காரர்.

    எனவே இந்தியர்களாகிய உங்களுக்கு தனியாக கலாச்சாரம் கிடையாது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் (அதாவது கிறிஸ்தவ மதம் என்று இவர்கள் கற்பிக்கும் மதம் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப் படும் நாடுகளில்) எல்லாம் மக்கள் எப்படி வாரா வாரம் ஒரு துணையைத் தேர்ந்து எடுத்து தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்ச்யோடு சுதந்திரமாக அனுபவிக்கிறார்களோ, அதே கலாச்சாரத்துக்கு நீங்கள் மாறியே ஆக வேண்டும். இல்லை என்றால் நீங்கள் அறியாமை உடையவர்கள்.

    இதுதான் நம்ப அற்புதக் காரின் தீர்ப்பு.

    ஒரு நாட்டிலே பிற‌ந்து, அந்த‌ நாட்டிலே அது வ‌ரை பெரும்பான்மையான‌ ம‌க்க‌ளால் பின்ப‌ற்ற்ப் ப‌ட்ட‌ ந‌ல்ல‌ ப‌ண்பாட்டினால் உருவான‌ நல்ல‌ குடும்ப‌ வாழ்க்கையை அனுப‌வித்து, அந்த‌ ச‌முதாய‌த்தையெ, அவ‌ர்க‌ளின் உருவாக்கிய‌ அத்த‌னை முன்னொர்க‌ளையும் கொச்சைப் ப‌டுத்தும் க‌ன‌வானை திருத்தி மேம்ப‌டுத்தி ம‌னித‌னாக்கும் பொறுப்பும் ந‌ம‌க்கே உள்ளது.

  44. மதிமாறன்,

    எதற்க்காக இப்படி? இந்து மததை பற்றி தரக்குறைவாக எழுதி, மற்றவர்களை மற்ற மதங்களை ஆதரிக்க காரணம் என்னவோ??? ஒரு கடவுள் மறுப்பாளன் என்பவன், அனைத்து மதங்களையும் சமமாகவே பாதிக்க வேண்டும். இங்கு பேசிக்கொள்பவர்கள் எல்லாம் என்னமோ, எந்த மதமும் தவறு செய்ய்தவாறே பேசுகின்றனர். கடவுளை வழிபடுவேரை விட மததை வழிபடுவேறே அதிகம். யாருக்கு என்ன சொல்லி என்ன, எங்கு உறைக்க போகிறது??? ராபின் பேசுகிற கருத்துக்கள் எல்லாம் மிகவும் கண்டிக்க தக்கதாக இருக்கிறது. இந்தியர்கள் எல்லாம் என்ன காட்டு மிருகங்களா? இல்லை இவர் கூறுவது போல் நாகரீகம் கெட்டு திறிந்தோமா? உலகத்திற்கே நாகரீகம் பற்றி சொன்னது சிந்து சமவழி நாகரீகம். முதலில் வரலாறு படித்து விட்டு பதில் சொல்லவும் ராபின். கிருத்துவர்கள் போல் இந்தியர்கள் ஒன்றும் வரலாற்றை திருத்தி எழுதுபவர்கள் கிடையாது…

  45. //மத்தேயு :5 அதிகாரம்:

    17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

    அந்த நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டதை தான் நான் சுட்டிக்காட்டினேன். இயேசு கிறிஸ்துவும் இதையே ஆதரிக்கிறார் என்பது மேற்கண்ட வசனங்களிலிருந்து உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.//

    இயேசு கிறிஸ்து கூறிய‌ ஒரே ஒரு வ‌ச‌ன‌த்தை “பிளான்க் செக்” போல‌ ப‌ய‌ன்ப‌டுத்தி, இவ‌ர்க‌ளின் ஒட்டு மொத்த‌ காட்டுமிராண்டி த‌ன‌த்துக்கான‌, முர‌ட்டுத் த‌ன‌த்துக்கான, முட்டாள் த‌ன‌த்துக்கான ப‌ழியையும் யேசுவின் மீதே போட்டு அவ‌ரைத் துன்ப‌ப் ப‌டுதுகிறார்க‌ள்.

    ஆனால் “நியாய‌ப் பிர‌மாண‌ம், பைபிலில் கூறிய‌தை மாற்ற‌ முடியாது” என்று வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை ப‌ர‌ப்பும் க‌டின‌ இத‌ய‌முள்ளா கல் நெஞ்ச‌க்கார‌ரை திருத்துவ‌த‌ற்க்காகத்‌ தான் இயேசு கிறிஸ்து பிற‌ந்தார்.

    //உபாக‌ம‌ம்: அதிகார‌ம் 19, செய்யுள் 21

    உன் க‌ண் அவ‌னுக்கு இர‌ங்க‌ வேண்டாம். ஜீவ‌னுக்கு ஜீவ‌ன், க‌ண்ணுக்கு க‌ண், பல்லுக்குப் ப‌ல், கைக்கு கை, காலுக்கு கால் கொடுக்க‌ப் ப‌ட‌ வேண்டும். //

    நியாய‌ப் பிர‌மாண‌த்தை திருத்தி ச‌ரியாக்கி காட்டுமிராண்டி வ‌ழ‌க்க‌ங்க‌ளை திருத்த இயேசு கிறிஸ்து ‌ கூறிய‌து,

    மத்தேயூ: அதிகார‌ம் 5, செய்யுள் 38

    “க‌ண்ணுக்கு க‌ண், பல்லுக்குப் ப‌ல்” என்று உரைக்க‌ப் ப‌ட்ட‌தைக் கேல்விப்ப‌ட்டிருக்கிறீர்க‌ள். நான் உங்க‌ளுக்குச் சொல்லுகிரேன், தீமையோடு எதிர்த்து நிற்க்க‌ வேண்டாம், ஒருவ‌ன் உன்னை வ‌ல‌து க‌ன்ன‌த்தில் அறைந்தால், அவ‌னுக்கு ம‌று க‌ன்ன‌த்தையும் திருப்பிக் கொடு’

    இவ்வாறு வார்த்தைக்கு எடுத்துக் காட்டி பைபிலை திருத்தியுள்ளார். ப‌ல‌ முறை திருத்தியுள்ளார்!

    நீங்க‌ளும் ம‌ன‌ம் திரும்புங்க‌ள். சாத்தானை ம‌ன‌திலெ புக‌ விட்டு, உண்மையை ம‌றைத்து இக‌லும் இழி செய‌லை நிறுத்துங்க‌ள்.

  46. //உபாக‌ம‌ம்: அதிகார‌ம் 19, செய்யுள் 21

    உன் க‌ண் அவ‌னுக்கு இர‌ங்க‌ வேண்டாம். ஜீவ‌னுக்கு ஜீவ‌ன், க‌ண்ணுக்கு க‌ண், பல்லுக்குப் ப‌ல், கைக்கு கை, காலுக்கு கால் கொடுக்க‌ப் ப‌ட‌ வேண்டும். //

    நியாய‌ப் பிர‌மாண‌த்தை திருத்தி ச‌ரியாக்கி காட்டுமிராண்டி வ‌ழ‌க்க‌ங்க‌ளை திருத்த இயேசு கிறிஸ்து ‌ கூறிய‌து,

    மத்தேயூ: அதிகார‌ம் 5, செய்யுள் 38

    “க‌ண்ணுக்கு க‌ண், பல்லுக்குப் ப‌ல்” என்று உரைக்க‌ப் ப‌ட்ட‌தைக் கேல்விப்ப‌ட்டிருக்கிறீர்க‌ள். நான் உங்க‌ளுக்குச் சொல்லுகிரேன், தீமையோடு எதிர்த்து நிற்க்க‌ வேண்டாம், ஒருவ‌ன் உன்னை வ‌ல‌து க‌ன்ன‌த்தில் அறைந்தால், அவ‌னுக்கு ம‌று க‌ன்ன‌த்தையும் திருப்பிக் கொடு’

    இவ்வாறு இயேசு கிறிஸ்து வார்த்தைக்கு வார்த்தை எடுத்துக் காட்டி பைபிலை திருத்தியுள்ளார். ப‌ல‌ முறை திருத்தியுள்ளார்!

    நீங்க‌ளும் ம‌ன‌ம் திரும்புங்க‌ள். சாத்தானை ம‌ன‌திலெ புக‌ விட்டு, உண்மையை ம‌றைத்து இக‌லும் இழி செய‌லை நிறுத்துங்க‌ள்.

  47. நியாய‌ப் பிர‌மாண‌ம் யூத‌ர்க‌ளுக்கும் அவ‌ர்க‌ளுடைய‌ க‌ட‌வுளுக்கும் இடையில் உருவான‌து. அத‌ற்க்கும் த‌மிழ‌ர்களுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?

  48. //அப்படி இரண்டுமனைவியர் உடைய ஒருவரை பெரும்பாலான தமிழர்கள் முக்கிய கடவுளாக ஏற்றுக்கொண்டிருக்கும்போது அந்த காலத்தில் பலதார மணம் பரவலாக இருந்திருக்கிறது என்றால் மட்டும் ஒப்புக் கொள்ள மறுப்பது ஏன்?//

    வாய்க்கு வ‌ந்த‌தை எடுத்து விடுவ‌து என்று எழுதுகிறார்க‌ள்.

    த‌மிழ‌க ம‌க்களை ஆண்டவன், இன்றைக்கு ஆள்பவர் இர‌ண்டல்ல‌, மூன்று துணைவிய‌ரை உடைய‌வ‌ர். பெரும்பாலான‌ த‌மிழ‌ர்க‌ளால் தேர்ந்து எடுக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர் தானே?

    அத‌ற்க்காக இப்ப த‌மிழ் நாட்டில் இருக்கும் ம‌க்க‌ளில் அனேக‌ம் பேர் ப‌ல‌ தார ம‌ண‌ம் செய்த‌வ‌ர் என்று ஒப்புக் கொள்ள வேண்டுமா?

    த‌மிழ‌ரை, இந்திய‌ரை இழிவு ப‌டுத்த‌ வேண்டும் என்று திட்ட‌ம் போட்டு செய‌ல் ந‌ட‌க்கிற‌து.

  49. க‌ட்ட‌ பொம்ம‌ன் பிற‌ந்த‌ இதே நாட்டில் தான் எட்ட‌ப்ப‌ன்க‌ளும் பிற‌க்கிறார்க‌ள்!

    இயேசு கிறிஸ்து பிற‌ந்த‌ அதே நாட்டில் தான் யூதாசுக‌ளும் பிற‌க்கிறார்க‌ள்!

    ஒற்றுமையாக‌ உள்ளது என்று காட்ட‌வே இதை எழுதுகிறோம்!

  50. நல்ல அரசியல்வாதிமாதிரி பேசுகிறீர். முதலில் நல்ல பண்பாடே தமிழ்நாட்டில் இல்லை என்று மதிமாறன் சொன்னதை ஆட்செபித்ததே நான்தான். அதை விடுத்து இந்திய கலாச்சாரத்தையோ மோசமாக பேசிவிட்டான் என்று கூப்பாடு போடுகிறீர். நான் சொன்ன எந்த கருத்தையாவது உம்மால் ஆதாரத்தோடு மறுத்து பேச முடிந்திருக்கிறதா? திரும்ப திரும்ப இந்தக் காலம் இந்தக் காலம் என்று வடிவேலு மாதிரு காமெடி செய்கிறீர்.

  51. //த‌மிழ‌க ம‌க்களை ஆண்டவன், இன்றைக்கு ஆள்பவர் இர‌ண்டல்ல‌, மூன்று துணைவிய‌ரை உடைய‌வ‌ர். பெரும்பாலான‌ த‌மிழ‌ர்க‌ளால் தேர்ந்து எடுக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர் தானே?// அரசியல்வாதிக்கும் கடவுளுக்கும் உமக்கு வித்தியாசம் தெரியவில்லை. ராமனையே அரசியலுக்குள் இழுத்த கூட்டத்தை சேர்ந்தவர்தானே நீர், ஏதோ உலகத்தில் எங்கேயுமே ஜனங்கள் குடும்பம் நடத்தாது மாதிரியும் இங்குதான் எல்லாரும் குடும்பம் நடத்துவதுமாதிரியும் பீலா விடுகிறீர். ஆமா அமெரிக்காவிலுள்ள ஜனங்கள் ஒழுங்கா இல்லை, சரி, அப்புறம் எதுக்கு எல்லாரும் நாக்கை தொங்க போட்டுக்குட்டு அங்கெ ஓடுறீங்க. போனது தான் போறீங்க. போய் அங்கேயே செட்டிலாயி அவனை மாதிரியே மாறி விடுகிறீர்களே அது ஏன்? இந்தியாவில் நகரங்களில் எல்லாம் அரையும் குறையுமா டிரஸ் போட்டுக்கிட்டு பெண்ணுங்க திரியுறாங்களே அதெல்லாம் உம் கண்ணுக்கு தெரியலையா? உடனே அய்யகோ ராபின் இந்திய நாட்டு மக்களை தப்பா பேசிட்டானே என்று ஒப்பாரி வைக்காதீர்.

  52. வந்தவுடன் தாம் தூம் என்று குதித்தவுடன் ஏதோ இந்து மதத்தை பற்றி கரைத்து குடித்தவர் போலிருக்கிறது நாமும் பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் என்று தான் நினைத்தேன். கடைசியில் உரிக்க உரிக்க வெங்காயம் ஒன்றுமில்லாமல் போனதுபோல ஆகி விட்டது. பக்கத்து மாநிலமான கேரளத்தில் நடந்த சம்பவங்கள் ஏன் தமிழகத்தின் ஒரு பகுதியில் நடந்த கொடுமைகள்கூட உமக்கு தெரியவில்லை.
    கலாசாரம் பண்பாடு என்று பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் பற்றி பேசுகிறீர். இந்து மதத்திலிருந்து சில கருத்துகளை சொன்னேனே உம்மால் மறுக்க முடிந்ததா? வெறுமனே கூச்சல் போடுவதால் எந்த பயனும் இல்லை. நான் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவன். இந்த நாட்டை நேசிப்பவன். உம்முடைய சான்றிதழ் எனக்கு தேவையில்லை. இந்த நாட்டை நேசிப்பவன் என்பதால் இங்கு நடக்கும் அநியாயங்களை எல்லாம் நியாயப்படுத்தவேண்டும் என்றோ பழைய வரலாறுகளை மறைக்கவேண்டும் என்றோ நினைக்கமாட்டேன். அதுதான் உமக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். என்னுடைய கருத்துக்கள் அப்படியேதான் இருக்கின்றன. நான் கொடுத்த ஆதாரங்களும் இதுவரை மறுக்கப்படவில்லை. அப்படி நான் சொன்ன கருத்துக்கள் தவறு என்று உங்களால் நிரூபிக்க முடிந்தால் என் கருத்துக்களை மாற்றி கொள்கிறேன். அழுது புலம்பி சீன காட்டும் தந்திரம் என்னிடம் பலிக்காது. நான் என் மனதிற்கு சரி என்று பட்டத்தை வெளிப்படையாக சொல்லக் கூடியவன். அறிவுபூர்வமாக விவாதிக்க முடியுமென்றால் விவாதிக்கவும். இல்லையென்றால் நேரத்தை விரயம் செய்யாமல் நடையை கட்டவும்.
    எதற்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளையும் ஒரு முறை பார்க்கவும்.

    http://en.wikipedia.org/wiki/Upper_cloth_revolt
    http://en.wikipedia.org/wiki/Sambandham
    http://www.kerala.cc/keralahistory/index14.htm
    http://en.wikipedia.org/wiki/Polyandry_in_India

  53. வந்தவுடன் தாம் தூம் என்று குதித்தவுடன் ஏதோ இந்து மதத்தை பற்றி கரைத்து குடித்தவர் போலிருக்கிறது நாமும் பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் என்று தான் நினைத்தேன். கடைசியில் உரிக்க உரிக்க வெங்காயம் ஒன்றுமில்லாமல் போனதுபோல ஆகி விட்டது. பக்கத்து மாநிலமான கேரளத்தில் நடந்த சம்பவங்கள் ஏன் தமிழகத்தின் ஒரு பகுதியில் நடந்த கொடுமைகள்கூட உமக்கு தெரியவில்லை.
    கலாசாரம் பண்பாடு என்று பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் பற்றி பேசுகிறீர். இந்து மதத்திலிருந்து சில கருத்துகளை சொன்னேனே உம்மால் மறுக்க முடிந்ததா? வெறுமனே கூச்சல் போடுவதால் எந்த பயனும் இல்லை. நான் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவன். இந்த நாட்டை நேசிப்பவன். உம்முடைய சான்றிதழ் எனக்கு தேவையில்லை. இந்த நாட்டை நேசிப்பவன் என்பதால் இங்கு நடக்கும் அநியாயங்களை எல்லாம் நியாயப்படுத்தவேண்டும் என்றோ பழைய வரலாறுகளை மறைக்கவேண்டும் என்றோ நினைக்கமாட்டேன். அதுதான் உமக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். என்னுடைய கருத்துக்கள் அப்படியேதான் இருக்கின்றன. நான் கொடுத்த ஆதாரங்களும் இதுவரை மறுக்கப்படவில்லை. அப்படி நான் சொன்ன கருத்துக்கள் தவறு என்று உங்களால் நிரூபிக்க முடிந்தால் என் கருத்துக்களை மாற்றி கொள்கிறேன். அழுது புலம்பி சீன காட்டும் தந்திரம் என்னிடம் பலிக்காது. நான் என் மனதிற்கு சரி என்று பட்டத்தை வெளிப்படையாக சொல்லக் கூடியவன். அறிவுபூர்வமாக விவாதிக்க முடியுமென்றால் விவாதிக்கவும். இல்லையென்றால் நேரத்தை விரயம் செய்யாமல் நடையை கட்டவும்.
    எதற்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளையும் ஒரு முறை பார்க்கவும்.

    http://en.wikipedia.org/wiki/Upper_cloth_revolt
    http://en.wikipedia.org/wiki/Sambandham
    http://www.kerala.cc/keralahistory/index14.htm
    http://en.wikipedia.org/wiki/Polyandry_in_India

  54. The culture is the one which is followed by most of the people and at most part of the country – not the habit in a particular place by few people!

    India, FROM WHERE THE MAJORITYOF THE INDIAN FAMILIES GOT THE FAITHFULL FAMILY CULTURE ? From The missionaries?

    DID MAJORITY OF THE INDIAN FAMILIES FOLLOWED ADULTRATION AND POLYGAMY BEFORE THE MISSIONARIES CAME TO INDIA?

    GIVE ANSWER!

    WERE THERE NO MISSIONARIES IN EUROPE AND AMERICA?

    WHAT IS THE CULTURE OF THE PEOPLE IN EUROPE AND AMERICA?

    NOW SAME SEX MARRIAGE IS LAGALISED AND FOLLOWED WIDELY IN THESE COUNTRIES EUROPE AND AMERICA.

    PROMISCUOUS ADULTRATION, TOTAL COLLAPSE OF FAITHFUL FAMILY RELATION SHIP IS WHAT THEY PRODUCED IN THE PAST 2000 YEARS.

    THE PEOPLE OF THESE COUNTRIES ARE THUS SLAMING MORE NAILS ON LORD JESUS CHRIST, MAKING HIM TO BEAR MOUNTAINS OF SINS OF THESE PEOPLE!

    They know that they CANNOT bring those people back into the good faithful family culture, because the soceity had been rotten beyond core ONLY due to the pervert ways interpretated by these people.

    So their only reaction shall be to enter into false and villyfying campaign against that Indian soceity- that Indian soceity followed Adultration and polygamy.

    WE ARE NOT BLAMING THE MISSIONERIES, WE ARE THANKFUL TO THE MISSIONARIES FOR THEIR SERVICE ON EDUCATION AND HEALTH AND OFCOURSE FOR INTRODUCING JESUS CHRIST TO US!

    BUT ITS VERY CLAER THAT SOME INDIVIDULAS ARE INVOLVING THE MISSIONARIES HERE, AS A SHEILD FOR THEM IN THEIR VILLYFYING CAMPAIGN AGAINST INDIAN CULTURE!

    By this false & VILLYFYING CAMPAIGN they indirectly push the innocent Indian soceity into the pervert adultaration culture!

    They are bold and keen to make the innocent indian soceity into a possibly adultration soceity by claiming that the majority of the India soceity has all along been cultureLESS, so get in to culture- what other culture available? The culture followed by Europe and Americans, thats what these people can able to develop so far !

    BY THIS, THESE PEOPLE ARE SLAMING MORE AND MORE NAILS ON THE LORD JESUS AND MAKE HIM TO SPILL MORE OF HIS INNOCENT BLOOD!

    Thats why God Jesus Christ had told clearly that ” இவர்கள், பிறரை தங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு வானத்தையும், பூமியையும் சுற்றித் திரிகின்றனர். அவர்கள் மதம் மாறிய பின் தங்களை விட கொடிய பாவிகள் ஆக்குகின்றனர்” !

    But these people are in full throtle to sullify the God Jesus Christ also, by claiming that Jesus Christ has supported all the cruel tenets created in early days.

    But we will continue to calarify with more quotes, as how Lord Jesus Christ had categorically rejected the cruel tenets upheld by these people.

    Because Lord Jesus is definitely a God for us as how we worship our Gods like Rama, Muruga, Aiyyappa, we will worship Lord Jesus also.

    We will save our Lord Jesus from the dirt poured on him, we never let Jesus Christ down.

    And for those people who want to pervert our own good culture by villifying and scandalous campaign against good Indian culture, we will try to bring those perverted Prodigal Sons also into the flock of God!

    All the Prodigal sons shall have to return to the fold, but only as the rectified and enlightened one!

    MAY BE THEY DONT RECTIFY THEMSELVES, BUT THEIR TRICK WILL NOT WORK IN INDIAN SOCEITY, YOU CAN NOT CHEAT THESE PEOPLE, YOU CAN NOT TRAP THESE PEOPLE!

    THESE INNOCENT PEOPLE WOULD ALWAYS STICK TO THEIR ORIGINAL CULYURE- DEVELOPED AND PRACTICED BY THEIR ANCESTORS FOR MORE THAN 8000 YEARS.

    THE NICE PART OF THE THING IS THAT PEPOPLE ARE ALLOWED TO SULLIFY THE GOOD INDIAN CULTURE, BECAUSE INDIAN SOCIETY IS TOLERANT, IT ACCOMADATES EVEN THOSE WHO SULLIFY THEIR CULTURE, WHO SULLIFY THEIR ANCESTORS.

    SO NO PROBLEM WILL BE FOR ANY ONE IN THIS GOOD, TOLERANT SOCEITY, IN FACT THEY WILL BE COMFORTED!

    EVEN THOSE WHO SULLIFY INDIAN CULTURE, WE WISH ALL THE BEST FOR THEM, AND WE WORK FOR THEIR WELFARE AND PROTECTION ALSO!

    BUT WHEN THEY STAND BEFORE GOD, THEY WOULD SAY ” OH, LORD, WE DID MIRACLES WITH YOUR NAME, WE EXORCISE DEVILS WITH YOUR NAME. BUT GOD WILL GIVE REPLY TO THEM ” YOU LEAVE AWAY, YOU , I HAVE NEVER SEEN YOU”!

  55. சீன் காட்ட வரவில்லை. சீர் திருத்த வருகிறோம்.

    “முதலில் நல்ல பண்பாடே தமிழ்நாட்டில் இல்லை என்று சொன்னதை ஆட்செபித்ததே நான்தான்” கூருகிறீரே, பிறகு என்ன ஆயிற்று, சாத்தன் வந்து புகுந்து விட்டானா?

    பண்பாடு இல்லை என்று கூறியதைக் கண்டித்து நான் எழுதியவுடன், என் மேல் உள்ள கடுப்பினைக் காட்ட அந்தர் பல்டி அடித்து இந்தியப் பண்பாட்டை இகல வேண்டுமா?

    மலையாள நாட்டின் ஒரு பகுதியில் பெண்கள் அப்படி நடந்து கொண்டால் இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் அப்படி நடந்து கொள்வார்கள் என்று அர்த்தமா? அது இந்தியாவின் பொதுக் கலாச்சாரம் ஆகுமா?

    இந்தியாவில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் என்ன செய்கிறார்கள்?

    பெரிய பணக்காரன் ஆக வேண்டும், உல்லாசக் கப்பலில் மகிழ்வாக கோப்பையுடன் கும்மாளம் செய்ய வேண்டும் என்றா நினைத்து வாழ்கிறான்?

    சில பிள்ளைகளைப் பெத்துப் போடுகிறான். அதற்காக உயிரை விட்டு உழைக்கிறான். தான் சாப்பிடாவிட்டாலும், குழந்தைக்கு சாப்பாடு போட வேண்டும் என்று நினைக்கிறான். கடைசி வரையில் உழைத்து ஓடாகி சாகிறான்.

    அவ‌ன் வாழ்க்கையில் சொத்து சேர்க்க‌வில்லை. சுக‌ம் காண‌வில்லை. அவ‌னுடைய‌ ஒரே சாத‌னை, நோக்க‌ம் உயிர் மூச்சு எல்லாம் குடும்ப‌ம், குடும்ப‌ம் ம‌ட்டும்தானே? அவ‌னைப் ப‌ழிக்கிறீரே! இதுதான் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த, இந்த நாட்டை நேசிப்பவன் செய்யும் செய‌லா?

    இது உமக்குத் தெரியாதா? எங்கேயோ யாரோ சிலர் செய்ததை வைத்து அத்தனை பேரயும் பழிக்கிறீரே ?

    இந்து மதத்தில் உள்ள குறைகளைக் கூறுவதை யாரும் குறை சொல்லவில்லை. அது இந்து மதத்தின் குறை இல்லை. இந்து மதத்தை பின்பற்றி வந்த இந்த இந்திய சமுதாயத்தில் இருந்த குறை.

    இந்து மதம் போய், 800 வருடம் புத்த மதம் இந்தியாவில் இருந்ததே, அப்போது சாதி ஏன் அழியவில்லை?

    இருந்தாலும் சாதி முறையால் இழைக்கப் பட்ட குற்றங்களுக்கு தார்மீக பொறுப்பை ஏற்கிறோம். அதை சரி செய்ய முயன்று தான் வருகிறோம். இப்போது சாதி வேறுபாடுகள் குறைத்து வருகின்றன.

    ஆனால் எந்த சாதியில் இருந்தாலும் குடும்பம், கணவன், மனைவி, குழந்தை குட்டி என்னும் வாழ்க்கை முறைதான் பின்பற்றப் பட்டு வந்தது.

    ஏதோ ஒரு சில பகுதிகளில் நீர் குறிப்புட்டுள்ள தளத்தில் இருப்பது போல நடந்து இருக்கலாம். ஆனால் சிலருக்காக ஒரு சமுதாயம் முழுவதையும் பழிப்பது சரியா என்று எண்ணிப் பாரும்.

    //அய்யகோ ராபின் இந்திய நாட்டு மக்களை தப்பா பேசிட்டானே என்று ஒப்பாரி வைக்காதீர்//

    நீரும் இந்தியன் தானே, இதே சமுதாயம் தானே, தோல் கருப்பு தானே, என்னவோ எகிப்தில் இருந்து கடலுக்குள் புகுந்து கானான் தேசத்தில் புகுந்தவர் போன்ற மன நிலையில் பேசுவது ஏனையா?

    நாங்க‌ள் என்ன‌, பிற மார்க்க‌த்த‌வ‌ரை வெறுக்கிறோமா? பிற‌ ம‌ர்க்க‌த்த‌வ‌ர் பின்ப‌ற்றும் க‌ட‌வுள்களை இக‌ழ்கிறொமா?

    இங்கே அமேரிக்க‌ ஐரொப்பிய‌ ம‌க்க‌ளின் சீர் கெட்ட‌ க‌லாச்சார‌த்தைப் ப‌ற்றிக் குறிப்புடுவ‌து கூட‌ வ‌ருத்த‌த்துட‌ன் தானெ த‌விர‌, அதைப் பார்த்து ந‌கைக்கும் நோக்குட‌ன் அல்ல‌. அந்த‌க் க‌லாச்சார‌ம் இங்கு வ‌ர‌க் கூடாதே என்ற‌ அக்க‌றையில் தான்.

    //ஆமா அமெரிக்காவிலுள்ள ஜனங்கள் ஒழுங்கா இல்லை, சரி, அப்புறம் எதுக்கு எல்லாரும் நாக்கை தொங்க போட்டுக்குட்டு அங்கெ ஓடுறீங்க. போனது தான் போறீங்க. போய் அங்கேயே செட்டிலாயி அவனை மாதிரியே மாறி விடுகிறீர்களே அது ஏன்? //

    என்னுடைய‌ உற‌வு கார‌ ப‌ச‌ங்க‌ கூட‌ அங்கே இருக்கிறாங்க‌. அவ‌ர்க‌ள் நீர் சொல்வ‌து போல‌ செய்வ‌து இல்லையே? அங்கேயும் போயி பொண்டாட்டிக்கு சேவ‌க‌ம் செஞ்சு கிட்டு தானே இருக்கிறாங்க‌!

    //இந்தியாவில் நகரங்களில் எல்லாம் அரையும் குறையுமா டிரஸ் போட்டுக்கிட்டு பெண்ணுங்க திரியுறாங்களே அதெல்லாம் உம் கண்ணுக்கு தெரியலையா?//

    எந்த ந‌க‌ரத்துக்கு வ‌ர‌ வேண்டும்? சொல்லுமையா, வ‌ருகிரேன். எத்த‌னை பெண்க‌ள் அப்படி இருகிறார்க‌ள் என்று பார்ப்போம்!

    சினிமாவில் க‌ல்லூரி பெண்க‌ள் என்று காட்டுகிரானே! அது போல‌ உடை உடுத்தும் பெண்க‌ள் -அதிக‌ம் வேண்டாம், ஒரு ப‌த்து பேரை- சென்னையில் உம்மால் காட்ட‌ முடியுமா?

    //இந்த நாட்டை நேசிப்பவன் என்பதால் இங்கு நடக்கும் அநியாயங்களை எல்லாம் நியாயப்படுத்தவேண்டும் என்றோ பழைய வரலாறுகளை மறைக்கவேண்டும் என்றோ நினைக்கமாட்டேன்//
    மறைக்க‌ வேண்டாம். ந‌ன்றாக‌ எழுதுமையா! ஆனால் ஒருவ‌ன் செய்த‌ த‌வ‌றுக்காக‌ வூரையே கொளுத்துவேன் என்ப‌து ச‌ரி அல்ல‌.
    செய்தித் தாளில் எத்த‌னை க‌ள்ள‌ உற‌வு செய்தி வ‌ருகிற‌து? ஆனால் இந்தியாவில் எத்த‌னை பேர் திருட்டு வாழ்க்கை வாழ்கிரான், எத்த‌னை பேர் குடும்ப‌ வாழ்க்கை வாழ்கிரான் என‌ எண்ணிப் பாருமையா!

    யேசு இற்ந்த‌ போது எத்தனை பேர் அழுது புல‌ம்பினார், எத்த‌னை பேர் அக‌ங்கார‌த்துட‌ன் திமிராக‌ இருந்தார் என்று உம்மையே கேட்டுக் கொள்ளும்!

    ஒரு நாட்டிலே ந‌ம்முடைய‌ மார்க்க‌ம் பெருவாரியாக‌ இருந்தால் அத‌ற்க்கு வ‌க்கால‌த்து வாங்க‌ வேண்டூம், த‌ன் மார்க்க‌ம் பெருவாரியாக‌ இல்லை என்ப‌த‌ற்க்காக வ‌யிரு எரிந்து தாய் நாட்டையே இக‌ழ வேண்டும் என்ற‌ ம‌ன‌ப் போக்குள்ள கூட்ட‌த்தில் நீரும் இணைந்து விடாதீர் ஐயா!

    நான் ஒரு போதும் ந‌டையைக் க‌ட்டுப‌வ‌ன‌ல்ல‌. உறுதியாக‌ நிற்ப்ப‌வ‌ன்.

    //ஏதோ உலகத்தில் எங்கேயுமே ஜனங்கள் குடும்பம் நடத்தாது மாதிரியும் இங்குதான் எல்லாரும் குடும்பம் நடத்துவதுமாதிரியும் பீலா விடுகிறீர்//

    திபெத், நேபாளத்தில் ஆரம்பித்து மேற்க்கே எகிப்து வ‌ரை உள்ள பகுதிதான் இன்றைக்கு உண்மையான‌ குடும்ப‌ வாழ்க்கை வாழும் இட‌ம் என்று நேற்றுதான் ஒரு ம‌ல‌யாள‌க் கிருத்துவ‌ ந‌ண்ப‌ர் என்னிட‌ம் கூறினார்.

    உம‌க்கு என் மேல் காண்டு வெறி இருந்தால் என்னைத் திட்டுமையா! இந்த‌ ச‌மூக‌த்தை அசிங்க‌ப் ப‌டுத்துவ‌தாக‌ நினைத்து உம்மையே அசிங்க‌ப் ப‌டுத்திக் கொள்ளாதீர்க‌ள்!

    “நான் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவன். இந்த நாட்டை நேசிப்பவன்” – இந்த‌க் க‌ருத்தை உய‌ர்த்திப் பிடியுங்க‌‍‌ள், எல்லொரும் உங்களை வாழ்த்துவார்க‌ள்!

  56. முருக‌ன் இர‌ண்டு ம‌னைவிய‌ர் வைத்து இருந்தால் அவ‌ரைக் க‌ட‌வுளாக‌ ஏற்றுக் கொள்வதில் எங்க‌ளுக்கு என்ன‌ பிரச்சினை? அவ‌ர் ஒன்னும் எங்க‌ள் மனைவியை கூட்டிப் போக‌வில்லையே? ப‌ண்பாடு என்ப‌து பெருவாரியான ம‌க்க‌ளால்
    பின்ப‌ற்றப் ப‌டுவ‌து. அதை எல்லொரும் அனுச‌ரிக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌சிய‌ம் இல்லை.

    இந்தியாவின் மிக‌ மூக்கிய‌மான‌ ப‌ண்டிகை தீபாவ‌ளி. ஆனால் பெரும்பாலான‌ ம‌ல‌யாள‌ இந்துக்க‌ள் தீபாவ‌ளி கொண்டாடுவ‌து இல்லை. அத‌ற்க்காக தீபாவ‌ளி இந்தியாவின் மிக‌ மூக்கிய‌மான‌
    ப‌ண்டிகை இல்லை என்று ஆகி விடாது.

    க‌ட‌வுள் இப்ப‌டி இருக்க‌ வேண்டும், அப்ப‌டி இருக்க‌ வேண்டும் என்று நாங்க‌ள் கட்ட‌ள போடூவது இல்லை.

    க‌ட‌வுள் என்ப‌வ‌ர் ந‌ல்ல‌வ‌ராக இருக்க‌ வேண்டும், அநியாய‌ம் செய்ப‌வ‌ராக‌ இருக்க‌க் கூடாது. ந‌மக்கு உத‌வி செய்ப‌வ‌ராக‌ இருக்க‌ வேண்டும், தீமையை எதிர்ப்ப‌வ‌ராக‌ இருக்க‌ வேண்டும் -இவைதான் க‌ட‌வுளிட‌ம் ம‌க்க‌ள் எதிர்பார்ப்ப‌து!

    ‘நாங்க‌ பெரும்பாலான‌ பேர் ஒரு ம‌னைவியோடுதானே வாழ்கிரோம், அத‌னால் உன்னை க‌ட‌வுலாக‌ ஏற்க்க முடியாது, என்று கூற‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் க‌ட்டாய‌ம் எங்க‌ளுக்கு இல்லை.

    முருக‌ர் வ‌ள்ளியை காத‌லித்துத்தான் வ‌ள்ளியின் விருப்ப‌த்துட‌ன் தான் திரும‌ண‌ம் செய்து கொண்டார்! க‌ற்ப்ப‌ழித்து திரும‌ண‌ம் செய்ய‌வில்லை. முருக‌ன் கெட்ட‌வ‌னாக‌ இருந்த‌ சூர‌ ப‌த்ம‌னுட‌ன் தான் போரிட்டார்.

    தான் ஒரு இன‌த்தை ம‌ட்டும் தேர்ந்து எடுத்து, அந்த‌ இன‌த்தை, ”நீ ம‌ற்ற இன‌த்துட‌ன் போராடு, நான் உன்னை வெற்றி பெற‌ வைப்பேன், பிற இன‌ங்க‌ளை நீ அழித்துப் போடு”என்று ஹிட்ல‌ரைப் போல‌ ரேசிஸ்ட் ம‌ன‌ப்பான்மையுட‌ன் செய‌ல் ப‌ட்ட‌ ச‌க்திக‌ளையே க‌ட‌வுலாக‌ வ‌ழிப‌டும்போது, ஒரு இன‌த்தின் ந‌ன்மைக்கு ம‌ட்டுமே பாடுப‌ட்ட‌, பிற இன‌ங்க‌ளை அழிக்க‌ கூறிய‌ ச‌க்தியை உல‌க‌ம் முழுமைக்குமான‌ க‌ட‌வுளாக‌ நிலை நிறுத்த‌ முய‌லும் போது

    ந‌ல்ல‌ க‌ட‌வுளான‌ முருக‌ரை ம‌கிழ்ச்சியுட‌ன் வாயார‌ப் பாடி, ம‌ன‌மார‌ நினைந்து வ‌ண‌ங்குவ‌தில் த‌மிழ‌ருக்கு மிக்க‌ ம‌கிழ்ச்சியே!

  57. திருச்சிகார ஐயா,
    தொடர்ந்து உமது அறியாமையை வெளிப்படுத்தி வருகிறீர். இந்தியாவில் பொது கலாச்சாரம் என்று ஒருபோதும் இருந்ததில்லை. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமான கலாசாரம் இருந்துள்ளது. இந்தியாவில் நல்ல பண்பாடே இல்லை என்று சொல்லப்படுதை நான் ஏற்கவில்லை. அதே நேரம் இந்தியாவில் பல சீர்கேடுகளும் இருந்துள்ளன என்பதை தான் சுட்டி காட்டினேன். கிறிஸ்தவர்களை பற்றிய மதிமாறனின் விமர்சனத்தை “அருமையான பதில்கள்” என்று பாராட்டினேன். ஏனென்றால் அவருடைய விமர்சனத்தில் உண்மை இருந்தது அதே நேரம் கிறிஸ்தவர்களிடையேயும் சாதி உணர்வு இருக்கிறதே என்ற அவருடைய ஆதங்கமும் புரிந்தது. ஆனால் நீர் இது தான் வாய்ப்பு என்று கிறிஸ்தவர்களை குறை சொல்லி இந்துக்களை தூக்கி பிடிக்க முயன்றீர். ஒருவேளை இந்துக்களிடமும் குறை உண்டு கிறிஸ்தவர்களிடமும் இருக்கிறது என்று சொல்லியிருந்தால் உம்மை நியாயவாதி என்று ஒப்புக்கொள்ளலாம். அதை விடுத்து //இந்துக்களில் கணிசமானவர்கள் ஹிந்து மதத்தை சரியாகப் புரிந்து கொள்கின்றனர். // என்று காமெடி செய்தீர். இந்துக்களில் பெரும்பாலோருக்கு இந்து மதத்தை பற்றி சரியாக தெரியாது என்பதுதான் உண்மை. ஏனென்றால் இந்து மதம் என்பது தனிப்பட்ட மதம் அல்ல. அது பல மதங்களின் கலவை (collection) .

    கேரளாவை பற்றி குறிப்பிட்டது ஒரு உதாரணத்திற்காக மட்டுமே. இதை போல பல சீர்கேடுகள் ஒவ்வொரு இடத்திலும் இருந்துள்ளன. நரபலி கொடுக்கும் கூட்டம் இங்கு இருந்ததுண்டு. ஏன் தமிழகத்தில் இப்போது கூட இதுபோன்ற சம்பவங்கள் அங்காங்கே நடந்துவருகின்றன. பிணத்தை தின்னும் அகோரிகள் எனப்படும் ஒரு கூட்டம் இப்போதும் வடஇந்தியாவில் உண்டு. 1813 முதல் 1828 வரை 8,135 பெண்கள் சதி கொடுமையால் இறந்துள்ளனர்.
    Let these women, whose husbands are worthy and are living, enter the house with ghee (applied) as collyrium (to their eyes). Let these wives first step into the pyre, tearless without any affliction and well adorned.(RV 10.18.7)

    தேவதாசி முறை வழக்கில் இருந்துள்ளது.
    http://en.wikipedia.org/wiki/Devadasi

    “Indeed literary record and inscription give us the impression that they were regarded as a part of the normal establishment of temples, The number of these girls in the temples often reached high proportions. The temple of Somnatha at the time its destruction by Sultan Mahmud is stated to have been served by three hundred and fifty dancing girls. According to Chau Ju-Kua, Gujarat contained 4000 temples in which lived over 20,000 dancing girls whose function was to sing twice daily while offering food to the deities and while presenting flowers.

    இன்னும் பல சம்பவங்களை சுட்டி காட்டமுடியும். நீர் சொல்லுமளவுக்கு நல்ல பண்பாடுகள் கொண்ட சமூகத்தில் இத்தனை சீர்கேடுகள் ஏன்?
    பழங்காலத்தில் எல்லாரும் ஒழுக்க சீலர்கள். ஆகோ ஓகோ என்று போலி பெருமை பேசுவதில் எந்த பயனும் இல்லை.

  58. மேற்கத்திய கலாச்சாரம் கிறிஸ்தவத்திற்கு எதிரான கலாச்சாரம். கற்பு, தனி மனித ஒழுக்கம் போன்றவற்றை கிறிஸ்தவம் வலியுறுத்துகிறது. மேற்கத்திய நாடுகளின் இன்றைய நிலை படிப்படியாக ஏற்பட்ட மாற்றங்களினால் உருவானது. ஒரு 30 வருடங்களுக்கு முன்பு நடந்த டென்னிஸ் போட்டிகளில் பெண்கள் ஒழுங்காக உடை உடுத்திதான் ஆடியுள்ளார்கள். இப்போது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. இதற்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்பந்தமில்லை. வசதி வாய்ப்புகள் வரும்போது மனிதன் மதத்தை விட்டு சிற்றின்பத்திற்கு முதலிடம் கொடுக்க ஆரம்பித்து விடுகிறான். இந்தியாவிலும் அதே நிலைமை ஏற்பட தொடக்கி விட்டது. இன்னும் 10 20 வருடங்களில் இந்தியாவிலும் அதை போன்ற சீர்கேட்டினை காணலாம். அதற்குரிய அறிகுறிகள் ஏற்கனவே தெரிய தொடங்கி விட்டன. இந்தியாவில் பெரு நகரங்களில் இதை காண முடியும். சென்னையிலும் இதை காண முடியும். இல்லை என்று உதார் விடவேண்டாம்.

  59. //இந்து மதம் போய், 800 வருடம் புத்த மதம் இந்தியாவில் இருந்ததே, அப்போது சாதி ஏன் அழியவில்லை? // புத்த மதத்திற்கு முன்பு இந்து மதம் என்று ஒரு மதமே இருந்ததில்லை. புத்த மதத்திற்கு பின்னரும் அப்படி ஒரு மதம் கிடையாது. வெளி நாட்டினரால் கொடுக்கப்பட்ட பெயர்தான் இந்து என்பது. தங்கள் மதத்தினரிடமிருந்து மற்றவர்களை பிரித்து காட்டுவதற்காக இந்துக்கள் என்று அழைத்தனர். எனவே இந்து மதம் ஆதியிலேயே இருந்து வருகிற மதம் என்பது உங்களுடைய அறியாமை.

    மேலும் அறிய http://www.ambedkar.org/riddleinhinduism/

  60. மனிதர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் குடும்ப அமைப்பும் உண்டு. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். உங்களுடைய நண்பர்கள் சொல்வதையெல்லாம் ஒரு ஆதாரமாக கருந்த முடியாது. தன்னுடைய மனைவி குழந்தைகள் என்ற உணர்வு எல்லா ஆண்களுக்கும் இயற்கையிலேயே உள்ளது. இந்தியர்கள் மட்டும்தான் குடும்பமாக வசிக்கின்றனர் மற்றவர்களெல்லாம் தன்னந்தனியாக சுற்றி திரிகின்றனர் என்பது கிணற்றில் வசிக்கும் தவளை கிணறுதான் உலகம் என்று நினைப்பது போன்றது. அமெரிக்காவிலும் பெரும்பாலானவர்கள் குடும்பமாகதான் வசிக்கின்றனர். சீரழிந்தவர்கள் நம் நாட்டினரை காட்டிலும் சற்று அதிகமாக இருக்கலாம் அவ்வளவுதான்.

  61. கிறிஸ்தவத்தை பற்றிய உங்களுடைய புரிதல் தவறானது. இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டிலிருந்த கடுமையான சட்டங்களை மாற்றினார் என்பது உண்மை. ஆனால் பத்து கட்டளைகள் மாற்றப்படவில்லை. இயேசு பல இடங்களில் பத்துகட்டளைகளை குறிப்பிட்டு பேசியுள்ளார். புதிய ஏற்பாட்டை ஒருமுறை படித்து பார்க்கவும். ஒரே கடவுள் என்பதையும் பல முறை வலியுறுத்தியுள்ளார்.

    //Because Lord Jesus is definitely a God for us as how we worship our Gods like Rama, Muruga, Aiyyappa, we will worship Lord Jesus also.// – இது நீங்கள் கூறியது.

    இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (மாற்கு 12:29)

    மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
    – இது இயேசு கூறியது.

    இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை கவனிக்கவும். இதில் கற்பனைகள் என்று சொல்லப்படுவது பத்து கட்டளைகள். அதிலும் முக்கியமாக இறைவன் ஒருவரே என்று குறிப்பிடுகிறார். எனவே உங்களுடைய கருத்து அபத்தமானது.

    “ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்” (மத்தேயு 5:19)

    “போதிக்கிறவன்” என்ற வார்த்தையை கவனிக்கவும். அப்படி போதிக்கிறவர்களைத்தான் நீர் தவறாக பேசுகிறீர்.

    இயேசுநாதர் செய்த மாற்றங்களை போல நானோ நீரோ செய்யமுடியாது. எனென்றால்

    வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 5:18)

    வெளி :22 அதிகாரம்

    18. இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.

    19. ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.

    நான் முன்பே கூறியதுபோல உங்கள் விருப்பு வெறுப்பிற்கேற்ப பைபிளை மாற்ற முடியாது. அரை குறையாக படித்துவிட்டு உங்கள் விருப்பத்திற்கேற்ப பைபிளுக்கு விளக்கம் கொடுப்பதை தவிர்க்கவும்.

  62. தம்பி ராபின்,

    நியாயப் பிரமாணம் யூதர்களுக்கும் அவர்களை மீட்டு வந்த அவர்களுடைய கடவுளுக்கும் இடையிலே உருவானது.

    நியாயப் பிரமானத்துக்கும் இந்தியர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது.

    இயேசு கிறிஸ்து யூதர்களைத் திருத்த அனுப்பப் பட்டவர். அவர் உண்மையில் போதிக்க வந்தது யூதர்களுக்குத்தான்.

    “நீர் யூதர்க‌ளின் ராஜாவா”,

    “அதை நீரே சொன்னீர்”

    எனவே இயேசு கிறிஸ்து அவருடைய போதனையில் “இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (மாற்கு 12:29) “என்று சரியாகத் தான் கூறியுள்ளார். இயேசு கிருஸ்துவை அரை குறையாகத் தவறாகப் புரிந்து கொண்டு, அபத்தம் செய்வது நான் அல்ல தம்பி!

    நாங்கள் யூதர்கள் முருகனை வணங்க வேண்டும் என்றோ, யூதர்களிடம் சென்று ஈஸ்வரன் மட்டுமே ஜீவனுள்ள உண்மையான கடவுள் என்றோ பிரச்சாரம் செய்யவில்லையே!

    அதே நேரம் இயேசு கிருஸ்து நல்லவராக இருப்பதால், அவரும் கடவுளின் ஒரு அவதாரம் என்று நாங்கள் கருதுவதால் வை யும், அதோடு சேர்த்து கர்த்தரையும் வணங்குவது எங்களுக்கு ஒரு முறையாகும்.

    அதே நேர‌த்தில் எங்க‌ள் கட‌வுள் ம‌ட்டுமே ஜீவ‌னுள்ள க‌ட‌வுள் என்றும், இன்ன‌ பிறா வெறுப்புக் க‌ருத்துக்க‌ளையும் ப‌ர‌ப்பி உல‌கை சுடுகாடு ஆக்கும் ப‌ணியில் ஈடு ப‌ட‌ முடியாது, அனும‌திக்க‌வும் முடியாது.

    எழுத‌ப் ப‌ட்டுள்ளா எல்லாவ‌ற்றயும் க‌ண்ணை மூடி ஒத்துக் கொள்ளா வேண்டும் என்ற‌ அவ‌சிய‌மும் கிடையாது.

    நாகரீக சமுதாயத்துக்கு வூறு விளைவிக்கும் காட்டுமிராண்டிக் கருத்துக்கள், எந்த நூலில் இருந்தாலும்- எந்த மார்க்கத்தில் இருந்தாலும் சரி- முடிந்தால் அவற்றை திருத்தி எடுத்துக் கொண்டு வாருங்கள்- அது பைபிளோ, குரானோ, கீதையோ, தம்ம பதமோ எதுவாக இருந்தாலும் அதை திருத்தி சரி செய்து எடுத்து வாருங்கள்!

    அப்படி திருத்தி கொண்டு வர மனமில்லை என்றால் வேறு எங்காவது சென்று அடித்துக் கொள்ளுங்கள். இங்கெ வந்து வெறுப்புக் கருத்துக்களை தூண்டி, காட்டுமிராண்டிக் காலத்துக்கு அழைத்துப் போவதை அனுமதிக்க முடியாது.

  63. நியாயப் பிரமாணம் யூதர்களுக்கும் அவர்களை மீட்டு வந்த அவர்களுடைய கடவுளுக்கும் இடையிலே உருவானது.

    நியாயப் பிரமானத்துக்கும் இந்தியர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது

    எனவே ஆதாம் , ஏவாள் செய்த பாவம் முதல் எல்லாவற்றையும் எங்கள் தலையில் கட்ட பார்க்கதீர்கள்.

  64. அதே நேரம் இயேசு கிருஸ்து நல்லவராக இருப்பதால், அவரும் கடவுளின் ஒரு அவதாரம் என்று நாங்கள் கருதுவதால் இயேசு கிருஸ்துவையும், அதோடு சேர்த்து கர்த்தரையும் வணங்குவது எங்களுக்கு ஒரு முறையாகும்.

  65. திருச்சிகார அண்ணே,

    கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொன்ன கீதையை எல்லாரும் படிப்பதில்லையா? ஏசுநாதர் வாழ்ந்த பகுதியில் யூதர்கள் அதிகமாக இருந்தனர். யூதர்கள் மட்டும் ஒரு கூட்டத்தில் இருக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம்; உலக ஜனங்களே என்று சொல்ல முடியுமா? இதை புரிந்து கொள்ள முடியாமல் சிறுபிள்ளைதனமாக பேசுகிறீர்.

    யோவான்: 4 அதிகாரம்

    21. அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

    22. நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.

    23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.

    இது யூதரல்லாத இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சொல்லப்பட்டது. விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

  66. //அப்படி திருத்தி கொண்டு வர மனமில்லை என்றால் வேறு எங்காவது சென்று அடித்துக் கொள்ளுங்கள். இங்கெ வந்து வெறுப்புக் கருத்துக்களை தூண்டி, காட்டுமிராண்டிக் காலத்துக்கு அழைத்துப் போவதை அனுமதிக்க முடியாது.// அடித்துக் கொள்வது ஆளை எரிப்பது எல்லாம் உங்கள் காவி கூட்டத்தினரின் வேலை. உம்முடைய உபதேசத்தை அவர்களுக்கு போய் சொல்லும். இந்தியாவில் மதத்தின் பெயரால் ராமரின் பெயரால் கொலை செய்யும் காட்டுமிராண்டிகளை முதலில் திருத்த பாரும்.

  67. நான் கூறுவ‌து அவ‌ர்க‌ளுக்கும் சேர்த்துதான்.

    இந்து ம‌த‌த்தில் வ‌ன்மூறைக்கு, வெறுப்பு க‌ருத்துக்கு இட‌மில்லை.

    உங்க‌ள் பிர‌ச்சார‌க‌ர்க‌ள், காரிலே கீ குடுக்காம‌லே ”கிருஷ்ண‌ர் பேரை சொல்லீ வ‌ண்டியைத் த‌ள்ளு” என்கிறார்க‌ள்.

    பிறகு ”ஏசு சாமி பேரை சொல்லி வ‌ண்டியைத் த‌ள்ளு” என்று கூறி அப்போது கீ குடுத்து வ‌ண்டிய‌ ஸ்டார்ட் செய்கிறாற்கள்.

    ”பார்த்தியா, யேசுதான் உண்மையான‌ க‌ட‌வுள்” என்று கூறுகின்ற‌ன‌ர்.

    இப்ப‌டி செய்வ‌தால் சில‌ர் கோவ‌ம் அடைந்து வ‌ன்முறையில் ஈடுப‌டுகின்ற‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ள நாங்க‌ள் ஆத‌ரிப்ப‌தில்லை. அவ‌ர்க‌ளை திருத்தும் முயற்ச்சியில் ஈடுப‌டுவோம். வ‌க்கால‌த்து வாங்க‌ மாட்டோம்.

    குச‌ராத் க‌ல‌வ‌ர‌ங்க‌ளுக்கு கார‌ணாம் 66 பேர் ர‌யிலில் எரிக்க‌ப் ப‌ட்ட‌துதான். Still we dont justify the murders. We condemn them. We want all the culprits to be punished.

  68. தோழா ராபின் அவர்களே இந்த திருச்சிக்காரன் என்ற நபரோடு விவாதம் செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள். ஏனெனில் அவர் பொழுது போக்கிற்காக தன்னுடைய பூணலை மறைத்துவிட்டு தர்க்கம் செய்யும் நபர்.. எனக்கும் அனுபவம் உண்டு அவரோடு தந்தை பெரியாரின் கருத்துகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை காவிவடை (இட்லிவடை) இனையதளத்தில் விவாதம் செய்துள்ளேன்.அதன் சுட்டி கீழே:

    http://idlyvadai.blogspot.com/2009/07/blog-post_27.html

    கண்டிப்பாக படித்துவிட்டு விவாதத்தை தொடரலாமா வேணாமா என்று முடிவு எடுக்கவும் தோழா

    இதை படித்தால் தெரியும் இவரைப்பற்றி, தன் தவறை ஒத்துக்கொள்ளாமல் மற்றவரை கை காட்டி தப்பித்துவிடும் குணம் இவர்களிடம் இன்றுவரை உண்டு. சிறு உதாரணம் ஈழம்.

    ஆட்டு மூளை கூட நமக்காக சிந்திக்கும் ஆர்ய மூளை ஒருக்காலும் நமக்காக (மனித சமூகத்திற்கு) சிந்திக்காது என்ற மீண்டும் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. அதனால தான் தந்தை பெரியார் சொன்னார் ” பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை அடிக்காதே என்று!! இப்போதும் அவர்கள் திருந்தியபாடு இல்லை.

    தோழமையுடன்

    முகமது பாருக்

  69. அட‌டே வாங்க‌ முகமது பாருக் ஐயா,

    ஐயா ப‌குத்த‌றிவு ப‌ள்ளியிலே ப‌யின்ற‌வ‌ரு, அதுனால‌ குல‌ம், கோத்திர‌ம், நாள், ந‌ட்ச்ச‌த்திர‌ம், இட‌ம்…. இப்ப‌டி எல்லா விச‌யத்தையும் முன்னால‌ எழுதி விட்டு தான் க‌ருத்தை எழுத‌னும்னு ப‌குத்த‌றிவுக் க‌ட்ட‌ளை போடுறாரு!

    ஐயா, நாம எதையும் ம‌றைக்க வேண்டிய‌ அவ‌சிய‌மே இல்லை ஐயா!

    த‌ம்பி ராபின் நீங்க‌ள் குறிப்பிட்ட த‌ள‌த்தில் சென்று பார்க்க‌லாமே! ந‌ம‌க்கும் ம‌கிழ்ச்சிதான்.

    இன்னும் என்னென்ன‌ த‌ளங்க‌ளில் எழுதுகிறோம் என்றூ கூட‌ கூறுவோம் ஐயா.

    நீங்க‌ என‌க்காக‌ ஒரு சிலுவையைத் த‌யார் செய்தாலும் ச‌ரி, க‌ல‌ப்பையில் கையை வைத்து பின்னே திரும்பிப் பார்க்காதே என்ற அறிவுரைப் ப‌டி ப‌ணியைத் தொட‌ருவோம்.

    என் பேரில் இவ்வ‌ள‌வு ஆர்வ‌ம் காட்டுவ‌த‌ற்க்கு ந‌ன்றி ஐயா!

  70. யப்பா!! சிரிக்காம இருக்க முடியல…

    தோழர் மதிமாறனின் பதிவை குறித்து விவாதம் செய்வதை போல ஆரம்பித்து தோழர் ராபின் கூட தர்க்கம் செய்ஞ்சுகிட்டு இருக்கீங்க பாருங்க அதான், அங்க தான் இருக்கு அந்த மைய புள்ளி..

    இந்த பதிவை நன்கு புரிந்து கொண்டு விவாதம் செய்யும் தோழர் ராபினிடம் புத்தி ஜீவி போல படத்த போட்டுக்கிட்டு யப்பா முடியல!!

    திருச்சி என்ற ஊரை கலங்க படுத்தாதீங்க!!! போப்பா போய் போல பாருப்பா!!

  71. அண்ணே முகமது பாருக் அண்ணே , நீங்க‌ ஒரு உத்த‌ரவு போடுங்க‌ அண்ணே,

    இனிமே விவாத‌ஞ் செய்யிர‌வ‌ங்க‌ உங்க‌ கிட்ட‌ காட்டி ஒப்ப‌ம் வாங்கிக்கிட்டுதான் செய்ய‌னும்னு!

  72. Trichy karan avar oorukku perumai dhaan serkirar mohd Faruq. Robin ponra kinatru thavalaikalukum, ungalai ponra tharperumai vaathikalukkum ivar dhaan sariyaana aal. Robin. unakku periya puthisaali endru ninaippu. nee oru poli nadunilayaanan. mudhalil unnai thiruthhu piragu matrathai parpom. aayira kanakaana varudangal valarndha panpaatai , sila nooru varudangalukku mun thondriya madhathai pin ptrupavarkalaal purinthu kolla mudiyathu trichy sir. Jesus , budha vai pola oru vivekanandharai pola oru gnani mattume. avar kadavul illai. He is a Human only. Neengal ellam madhan endru thotruvikkum munnare, indhiyavil engal munoorgal panpattu irunthanar. Christian kalin pithalaatangal patri indha naadum ariyum naangalum arivom. But neenga jebakootathil seyyum settaikal enakku pidikkum… ennama koovuraanogo trichy sir. You continue sir. Nalla bathiladi.

  73. Robin avargaley… bible il oru vasanam ullathu.. ‘pandrigalin mun Muthai podathey , athu athai keeri parkum’ endru.. athai inga ninaivu koora virumbukiren… thiruchukaranum..andha panriyai pola thaan..

    Thiruchikaraney..ungalai neradiyaga pandri enndru koora villai. I have used it only as an reference.. thappa eduthuka venaam…..

  74. திராவிடம் என்ற சொல்லை உபயோகித்து அண்டைய மாநில மொழி பேசுபவர்களே அதிகம் பயனடைந்து, நம்மை புறம் தள்ளி முன்னேறியுள்ளனர் .ஆதலால் நெல்லுக்கும், புல்லுக்கும் வித்தியாசம் தெரியாத, பல முடத் தெங்குத் தமிழர்கள்/ வெகுளிகள் உருவாகி தமிழினம் முன்னேற தன்னை அறியாமலே, தமிழர் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். எனவே இனி தமிழகம்/தமிழர்/ தமிழ் என்று முழங்க வேண்டிய காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.வாழ்க தமிழ் உணர்வு. வாழ்க பகுத்தறிவு.

  75. அர்ச்சகர் பணி சாதரமானது என்றால் அதை பங்கு போட்டுக்கொள்ள உங்களுக்கு ஏன் கசக்கிறது?

    தம்புராசுக்கு சொல்லுங்கள் தடையை நீக்க.   சின்ன சின்ன கோயில்களில் உள்ள நடைமுறையை சொல்லி குழப்பவேண்டாம். அங்கேயும் வருமானம் கூடியவுடன் எப்படியும் நுழைந்து விடுகிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சாமி பக்தி இருப்பதாக காட்டி கொள்ளும் உங்களுக்கு சாமி பயமும் இல்லை; அதர்ம பயமும் இல்லை. ஆண்டவன் உங்களை கோயிலுக்குள் சேர்க்கக்கூடாது;முடியாவிட்டால் ஆண்டவன் வெளியேறி விடவேண்டும்.

    கோயில்களில் ஆண்டவனை பூஜை செய்வதற்கு பிராமணனுக்கு ஒரு நீதி- மற்றவர்களுக்கு ஒரு நீதியா??? வெட்கப்படவேண்டும் சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்பும் இந்நிலை தொடர்வதற்கு.

    பிராமணன், பிராமணன் என்று நினைப்பதை நிறுத்தி தமிழன்/தெலுங்கன்/கன்னடன்/மலையாளி/ குஜராத்தி/மராத்தி/….என நினைக்கவும். தமிழ் பிராமனுக்கென்றுதனி பாஷை, கலாச்சாரம், தனி அடையாளங்கள்- நாங்களா ஒதிக்கி வைக்கிறோம். சத்யம் பேசுங்கள்.

    அன்றைய கால கட்டத்தில் சாதி உயர்வு/ தாழ்வு மனப்பான்மையிளுருந்து வெளிவர ஒரு கூட்டணி பிராமணர் அல்லாத கீழ் சாதி மக்களை பயன்படுத்திக்கொண்டது.
    அன்று பிராமனரல்லாதவர்களிடமிருந்து, தண்ணீர் தெளித்த பின்னரே பொருளை பெற்றுக்கொண்டனர் பிராமணர்கள்.

    போராடி தனி ஒதுக்கீடு பெற்றபின்னரும் 27% கோட்டாவில் – 5% கூட எட்டவில்லை என ஒப்ச் தகவல் சொல்கின்றன. நல்லதை நினையுங்கள். நல்லது நடக்கும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஞாயமாக நடந்துகொள்ளுங்கள். முடிவில் தர்மம் தான் வெல்லும்.முடிவில் தர்மம் தான் வெல்லும்.முடிவில் தர்மம் தான் வெல்லும்.

  76. // இயேசுவை நம்புகின்ற இந்துவாகத்தான் கிறித்துவர்கள் இருக்கிறாகள். இந்து மதத்தில் இருக்கிற அத்தனை சமூக சீர்கேடுகளையும் கிறித்தவர்களும் பின்பற்றுகிறார்கள். //

    சரியான விமர்சனம்.

    பெரும்பான்மை இந்துக்கள் இயேசுவை வணங்குவதில் தயக்கம் காட்டுவதில்லை. ஆனால் இயேசுவை மட்டுமே வணங்கவேண்டும் என்ற நிபந்தனை அவர்களை விலகியிருக்கச் செய்கிறது.

    இதே நிபந்தனையை சாதியை தூக்கிப் போடும் விசயத்திலும் கிறித்துவர்களிடம் கட்டாயமாக்கினால் ஒன்று கிறித்துவத்தில் சாதி அழியும், இல்லையென்றால் சாதியால் கிறித்துவம் அழியும். பின்னது தங்களுக்கு ஆபத்தானபடியால் அப்படியே விட்டுவிடுகிறார்கள் திருச்சபையார்.

  77. nenkal solvathu thamilarkaluku panpadu enru onru ellai unka crthavrkaluku panpadu unda ?

    oru pirapin valimuraiya matri crsthva matha matram senthu rasikum unkaluku panpadu unda ?

    crsthavrkaluku panpadu kalacharm kadamai kurikol ellam indu thalith makkali matham matram panuvathu mattumey unkal valkaien kurikol .

    ethai thavira veru ethavathu unkalidam unda nekal thamil panpadai patri thari kuraivai solkirirkal enna seivathu thamilan than emali achey

  78. தாய்மொழியைக் காப்பாற்றும் பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உண்டு: கருணாநிதி.

    இனத்தின் அடையாளங்களை மறந்துவிடக் கூடாது- தினமணி ஆசிரியர்.

    தமிழர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் எழுத்துதான்: உதயச்சந்திரன்.

    நல்ல வேண்டுகோள்!!! இந்தியாவில் தாய் மொழியை மதிக்காத/ நேசிக்காத ஒரே இனம் தமிழினமாகத் தான் இருக்கின்றது- குறிப்பாக நம் இளைய தலைமுறை தமிழ் மக்கள். அவர்கள் இப்படி ஆனதிற்கு நாமே பொறுப்பு. குழந்தை யாருக்கு சொந்தம்
    என்ற போட்டியில் குழந்தை வஞ்சிக்கப்பட்டு/ கவனிக்கப்படாமல்/ வளராமல் இருக்கிறது என்பதை அனைவரும் உணரவேண்டும். சக்களத்திகள் சண்டை போட்டது போதும். தமிழ்க் குழந்தையை காப்பாற்றுங்கள்.ஊரு ரெண்டு பட்டதால் யாருக்கு லாபம்???? வாழ்க இன ஒற்றுமை!!!

  79. தமிழ்ப்பண்பாடு என்று ஒன்று இல்லை என்று கூறுவது சூரியன் என்று ஒன்று இல்லை என்று பிதற்றுவதற்கு ஒப்பாகும் மனிதனை அடையாளம் காட்டுவது அவனுடைய பண்பாடு அப்பண்பாட்டை தருவதும் காப்பதும் அவன் பேசும் மொழி மொழியும் பண்பாடும் ஒன்றுக்கொன்று பின்னிக்கிடக்கின்றன

  80. தாய் மொழியை தமிழாக கொண்ட திராவிடர்களுக்கு D.M.K வில் பொறுப்புகள்
    எத்தனை சதவிகிதம் ஒதுக்கப்பட்டுள்ளது?”

    “இளைஞர்களுக்குப் பொறுப்புகள் காத்திருக்கின்றன:”- ஸ்டாலின்

    “இளைஞர் அணியில் 30 வயது வரை உள்ளவர்கள் மட்டும்தான் இருக்க முடியும்.ஹி..ஹி..ஹி முதியவர் அணிக்கு வயது வரம்பு உண்டா??? தாய் மொழியை தமிழாக கொண்ட திராவிடர்களுக்கு அவைகளில் எத்தனை சதவிகிதம் ஒதுக்கப்பட்டுள்ளது?”

    Pl c link:
    http://www.dinamani.com/edition/story.aspx?artid=549863

  81. ஹி..ஹி இப்பவே நம்மை- நாமே ஆள அடித்துக் கொண்டுள்ளோம்???

    “தன்மதிப்பு தெரியாமல் வாழ்கிறான் தமிழன்: குமரி அனந்தன்”

    கருத்துக்கள்:” இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே …..இந்தி கத்துக்காம ,ஹைதராபாத், மும்பை பக்கம் போனா ரணகளமாயிடுது …. By கபிலன்”

    “தமிழ் நாட்டில் பிழைக்கும்/உழைக்கும்/ஆளும் மார்வாரி/ வட இந்திய மக்கள்/ அண்டை மாநில மக்கள்- தமிழ் கற்ற பின் தான் தமிழகம் வந்தார்களா??? ஹி.. ஹி..ஹி இப்பவே நம்மை நாமே ஆள அடித்துக் கொண்டுள்ளோம்??? மீதி இருப்பவர்களையும் அனுப்பிவிட்டால் கிழிஞ்சுடும் சோழ/பாண்டிய புரங்கள் ???-By கடலூர் சித்தன்.ஆர்”

    Pl c link:
    http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Trichy&artid=550825&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%A4%E0%AE%A9%

  82. திருச்சிகாரரே, உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என் வாழ்க்கையிலும் நடந்தது என் வாழ்க்கையில் மட்டுமல்ல பெரும்பாலோருக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் கிடைத்து இருக்கும்; அதாவது இந்த கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் (ரோமன் கத்தோலிக் அல்ல) தங்கள் மதம் தான் சிறந்தது மற்ற மத வழிபாடுகள் அது ரோமன் கத்தோலிக் மதமாக இருந்தாலும் சரி மோசமானது மட்டமானது என்று பேசுவார்கள். பிறகு மனிதர்களுக்கு இருக்க கூடிய பிரச்சனைகளை ஏசு தீர்த்து வைப்பார் வாருங்கள் எங்கள் கூட்டத்திற்கு நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்று அழைப்பார்கள் சில சமயம் நம்ப வீட்டிற்க்கே வந்து கெஞ்சுவார்கள். அவர்களை பார்த்தால், அவர்கள் பேசுவதை கேட்டால்…….. நம்ப ராமதாஸ் அன்புமணி பவர் ஸ்டார் சீனுவாசன், வே. மதிமாறன்…….. போன்றவர்கள் தான் என் ஞாபகத்துக்கு வருவார்கள். “என்னால…….. முடியல…… வேணாம்…… அழுதிடுவேன்……..பின் குறிப்பு: “இந்த மாதிரி ஆட்கள் தமிழர்களை சூழ்ச்சியாக பிரித்து தங்கள் சுயலாபத்துக்காக எதையும் செய்வார்கள்” . ஆனால், நிச்சயம் ஒரு நாள் இந்த மதம் சாதி கட்சி இவற்றை எல்லாம் கடந்து “தமிழன்” என்ற குடையின் கிழ் தமிழர்கள் ஒன்று கூடுவார்கள். நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்…….

  83. Madham maargindravanum,, petha thaayai kooitikoaduppavanum ondruthan…..

  84. //தமிழ் பண்பாடு என்றும் ஒன்று கிடையாது. தமிழர்களுக்கு அவர்களின் மொழியைத் தவிர பொதுவான பண்பாட்டு அடையாளம் ஒன்றை நான் இதுவரை கண்டதில்லை. மொழியில் கூட உடல்உழைப்பை மூலதனமாக கொண்ட மக்களை தாழ்த்தி பார்க்கின்ற சொல்லாடல்கள்தான் இருக்கிறது.///

    இந்த எழுத்தாளரின் அறிவு இந்தளவு தான். தமிழ்நாட்டில் தமிழ்ப்பண்பாடு என்ற ஒன்று கிடையாது என்று வேண்டுமானால் கூறலாம். தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும், எங்களின் வயதில் மூத்தவரகளை மட்டுமல்ல, முன்பின் தெரியாத இளையவர்களைக் கூட, நீ என்று ஒருமையில் ஈழத்தமிழர்கள் அழைப்பதில்லை. உதாரணமாக தமிழ்நாட்டில் அங்குள்ள ஹோட்டல்களில் வேலை செய்யும் தலித் சிறுவர்களைக் (Room boys) கூட நான் ‘நீ’ என்று அழைத்ததில்லை. அவர்களிடம் வேலை சொல்லும் போது நீங்கள் என்று மரியாதை கொடுத்தால் அவர்கள் மதிக்க மாட்டார்கள் என்று அங்கு தங்கியிருந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த தமிழ்நாட்டு “முதியவர் ஒருவர் “அறிவுரை” கூறியும் கூட, நான் அவர்களை ஒருமையிலோ அல்லது மரியாதைக் குறைவாகவோ நடத்தியதில்லை. எனக்கு அவர்களை நீ என்றழைக்க முடியவில்லை. ரோட்டில் இளநீர் விற்கிறவராக இருந்தாலென்ன, பிச்சைக் காரனாக இருந்தாலேனா, நீங்கள் தானே தவிர நீ அல்ல. என்னைப் போல் தான் அநேகமான எல்லா ஈழத் தமிழர்களும் நடந்து கொள்கின்றனர். அதனால் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் தமிழ்ப்பண்பாடு கிடையாது என்று கூறலாமே தவிர, தமிழ்ப்பண்பாடு என்று ஒன்று கிடையாதென்று கூறி, இவர் தனது அதிகப் பிரசங்கித்தனத்தைத் தான் காட்டுகிறார்.

  85. நீங்கள் அனைவரும் தர்கிப்பதைப்பார்த்து நகைப்பதா அல்லது உங்களின் அறியாமையைக்கண்டு வேதனைப்படுவதா என்று தெரியவில்லை. முதலில் அறியாமை என்ற இருளில் இருந்து வெளியே வாருங்கள். இன்றைய காலக்கட்டத்தில் முக்கியமானது இந்து மதமா அல்லது கிறிஸ்தவமா என்ற தர்க்கம் அவசியமற்றது. இது முட்டாள்களின் செயல். ஒரு காலத்தில் உலகையே ஆண்ட தமிழன் இன்று தனக்கென்று ஓரிடம் இன்றி வந்தேறிகளிடம் கையேந்தி நிற்கின்றான்; தனது அருமையான பண்பாடு, மதம், அறிவியல் என அனைத்தையும் இழந்து நிற்கின்றான். இந்நிலை தொடருமெனில் ஒரு கட்டத்தில் ஒட்டோமொத தமிழினமே முற்றாக அழிந்து விடும் என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு.
    இவ்வேளையில் எம்மதம் பெரிது என்கிற தர்க்கத்தை விட்டு நாம் அனைவரும் தமிழர்கள் என்ற அடையாளத்தில் ஒன்றுபட வேண்டும். நாம் இழந்த அனைத்தையும் மீந்தும் பெற வேண்டும்.

    பணத்துக்கும் , மதுவுக்கும் மயங்கி வாக்களித்த காலமெல்லாம் கப்பலேற வேண்டும். தமிழனை தமிழனே ஆழ வேண்டும். நாம் இதுவரை இழந்தது போதும். இனியும் இழந்துகொண்டே இருப்பதற்கு நாம் (தமிழர்கள்) மூடர்கள் அல்ல. விழித்தெழுங்கள் தோழர்களே.

  86. // சக மனிதனின் துயரங்களை புரிந்துகொள்ளுதலும் சகமனிதனை துன்புறத்தாமல் இருப்பதுதான் பண்பாட்டிற்கான அடையாளம். ஆனால் இவர்களின் பண்பாட்டில் இதற்கு நேர்மாறாக ஏற்றதாழ்வுகள் நிறைந்த, சகமனிதனை கீழ்ப்படுத்தி, அசிங்கபடுத்தி (திண்ணிய நிகழ்வுகள்) வாழ்கின்ற நிலைதான் இருக்கிறது. ஜாதி வேறுபாடுகள்அற்ற வர்க்க வேறுபாடுகள் அற்ற ஒரு புதிய பண்பாட்டை உருவாக்கவேண்டும். ….

    ஒரு மனிதன் சகமனிதனை கீழ்படுத்தி பார்ப்பது,அதை நியாயப்படுத்தி பல தத்துவங்களை எழுதி வைத்திருக்கிற மதம், இந்த மண்ணின் சொந்த மதம் என்றே வைத்துக்கொண்டாலும், அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? //
    ————————–

    நபி(ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை – நீடூர் ஃபைஜீர் ஹாதி

    எம்பெருமானார்(ஸல்) அவர்களின் முதல் மற்றும் இறுதி ஹஜ்ஜின் போது அராபாத் மைதானத்தில் லட்சக்கணக்கான உத்தம ஸஹாபாக்கள் மத்தியில் தன் மரணத்திற்க்கு முன்பு துல்ஹஜ்ஜின் 9வது நாள் ஹிஜ்ரி 10ம் வருடம் (கிபி 632) ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரைதான் நபி(ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை என்று அழைக்கப்படுகிறது. இவ்வுரையில் நபி(ஸல்) அவர்கள் தமது நபித்துவ பணியில் தான் போதித்த ஏறக்குறைய அனைத்து போதனைகளையும் இப்பேருரையில் குறிப்பிட்டார்கள். அவற்றினை அறிந்துக்கொள்வதும், கடைப்பிடிப்பதும் ஒவ்வொரு மனிதனுக்கும் கடமையாக இருக்கிறது. அவற்றினைக் காண்போம்.
    —————————-

    பேருரையின் துவக்கம்:

    இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)

    மேற்கூறியவாறு நபி(ஸல்) கூறிய போதே அடுத்த வருடம் பாசத்திற்குரிய இறைத்தூதர்(ஸல்) நம்மைவிட்டு பிரிந்துவிடுவார்களோ என்ற பயத்தினால் சஹாபாக்களின் கண்கள் கலங்க துவங்கின.
    —————————-

    பிறப்பால் வேறுபாடு காட்டாதீர்:

    மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான். (அல்பைஹகீ)

    பிறப்பால் யாரும் யாரையும்விட உயர்ந்தவர்களும் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை. உலக மக்கள் அனைவரும் ஆதம்(அலை) மற்றும் அன்னை ஹவ்வா(அலை) ஆகிய ஒரு தாய் தந்தையரின் பிள்ளைகளாவர். அனைவரும் சகோதர சகோதரிகளே என்ற இறைவசனத்தின் அடிப்படையில் உலகிற்கு உரக்கக்கூறினார்கள். நிறத்தாலோ, மொழியாலோ, இனத்தாலோ அனைவரும் சமமே என்று முழங்கினார்கள்.
    —————————-

    தலைமைக்கு கட்டுப்படுவீர்:

    தற்போதைய குழப்பம் நிறைந்த இவ்வுலகில் இவ்வறிவுரை மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. கருப்பு நிறத்தவரின் தலைமையை ஏற்க மேற்கத்திய உலகம் மறைமுகமாக மறுத்து வருவதற்கும், வேற்று மொழியைச் சார்ந்தவர் தம்மை வழிநடத்துவதற்கு மறுப்பதற்கும் நபி(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவுரையை கூறினார்கள்.

    மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
    —————————-

    அராஜகம் செய்யாதீர்கள்!

    அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)

    உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

    மிகவும் தெளிவான மற்றும் அவசியமான அறிவுரையாகும். உலகில் காணப்படும் அக்கிரமங்களுக்கும், அராஜகங்களுக்கும் முற்றுபுள்ளி வைப்பதற்கு இந்த அறிவுரையினை பின்பற்றினாலே போதுமானது.
    —————————-

    பணியாளர்களைப் பேணுவீர்!

    முதலாளித்துவ கொள்கையினை ஏறக்குறைய அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டதன் விளைவாக காணப்படும் முதலாளிகளின் ஆதிக்கத்தினால் தொழிலாளிகளின் உரிமைகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்கப்பட்டுவிட்டது. முதலாளிகளின் கை ஓங்கி இருப்பதன் விளைவு தொழிலாளிகள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராக போராடுவது நசுக்கப்படுகிறது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் இதுபற்றி தம் இறுதிப்பேருரையில் இவ்வாறு மிக தெளிவாக தெரிவித்துவிட்டார்கள்.

    மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது)
    —————————-

    அநீதம் அழிப்பீர்!

    உலகில் இன்று காணப்படும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியின் அடிப்படைக் காரணமான வட்டியின் கொடூர முகத்தினைக்கண்டு உலகம் மிகுந்த அச்சம் கொள்கிறது. வட்டியின் கொடூரத்தினால் தினம் தினம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையோ பல ஆயிரங்கள். லட்சக்கணக்கான குடும்பங்கள் இன்று தற்கொலை என்ற முடிவிற்கு செல்வதற்கு வட்டியின் கொடூரமே காரணமாக இருக்கிறது. இத்தகைய வட்டியினை இஸ்லாம் அடியோடு தடுத்துவிட்டது. இதை பற்றி நபி(ஸல்) அவர்கள் தம்முடைய இறுதிபேருரையில் இவ்வாறு கூறினார்கள்.

    அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)
    —————————-

    முறைதவறி நடக்காதீர்!

    அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமி,1789)

    உலகையே பல வருடங்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் எய்ட்ஸ் என்ற கொடிய நோயின் முதற்காரணமான விபச்சாரத்தினை பற்றி நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள். விபச்சாரத்தலிருந்து கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும் என்று அறிவுருத்தியிருக்கிறார்கள். விபச்சாரத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்ததின் விளைவினை மேற்கத்திய உலகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. விபச்சாரம் என்ற அருவருப்பான செயலினை இஸ்லாம் அறவே தடுத்துவிட்டது
    —————————-

    பெண்களை மதிப்பீர்!

    கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமி, 7880)

    இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது. இஸ்லாத்தில் பெண்களூக்கு சுதந்திரம் இல்லை என்ற மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் அரசுகளின் பொய் பிரச்சாரத்தினை முறியடிக்க நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவுரையானது போதுமானதாக இருக்கிறது. இஸ்லாம் வழங்கியது போன்று உலகில் வேறு எந்த மதமோ கொள்கையோ பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும், கெளரவத்தையும் வழங்கிடவில்லை. பெண்களை ஆடை இல்லாமல் பொது இடங்களூக்கு வருவதற்கு அனுமதிப்பதுதான் பெண்களூக்கு வழங்கும் சுதந்திரம் என்ற மேற்கத்திய ஊடகங்களின் கூற்றினை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாக கண்டித்தார்கள். பெண்களை பாதுகாத்து அவர்களுக்கு மதிப்பளிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தமது இறுதிப்பேருரையில் தெளிவாக கூறிவிட்டார்கள்
    —————————-

    இரண்டைப் பின்பற்றுவீர்!

    இஸ்லாத்தின் அடிப்படையான எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவதையும், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதித்தூதர் மற்றும் அல்லாஹ்வின் உண்மை அடியான் என்று முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு நபி(ஸல்) அவர்களை பின்பற்றுவதுமாகும். இவ்விஷயத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இதையே எம்பெருமானார்(ஸல்) அவர்கள் தமது இறுதிப்பேருரையிலும் குறிப்பிட்டார்கள்.

    மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரச்சாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)
    —————————-

    சொர்க்கம் செல்ல வழி!

    ஒவ்வொரு மனிதருக்கும் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே இருக்குமேயானால் பின்வரும் எம்பெருமானார்(ஸல்) அவர்களின் அறிவுரையினை மிகவும் எச்சரிக்கையுடன் பின்பற்றவேண்டும்.

    மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமளானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576,)
    —————————-

    இஸ்லாம் முழுமையாகி விட்டது!

    இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ”நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ”இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)

    இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டத்திட்டங்கள் இன்றோடு நிறைபெற்றுவிட்டது. இனிவரும் காலங்களின் இவற்றினை யாரும் எதற்காகவும் மாற்றவும் முடியாது, வளைத்துக் கொடுக்கவும் முடியாது. அத்தகைய உரிமை யாருக்கும் கிடையாது என்று முக்கியமான அறிவிப்பினை லட்சக்கணக்கான உத்தம ஸஹாபாக்களை சாட்சியாக வைத்து மிகவும் தெளிவாகவும், கண்டிப்பாகவும் அறிவித்தது இந்த வரலாற்று சிறப்புமிக்க பேருரையில் தான். இதற்கு சாட்சியாக எல்லாம் வல்ல அல்லாஹ்வின் தன்னுடைய திருமறையில் ஒரு வசனத்தினை இறக்கியருளினான்.

    இஸ்லாம் முழுமையாகி விட்டது! இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ்வருமாறு இறைவசனம் இறங்கியது:

    ”இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)

    மேலே நாம் பார்த்த நபிகள் கோமானின் பேருரையானது வரலாற்றில் மிகவும் சரியாக பதியப்பட்டுள்ளது. நாம் கூறிய விஷயங்கள் மிகவும் குறைவான அளவே. இவைகள் மட்டினின்றி இன்னும் பல அறிவுரைகளைக்கூறி தமது உரையை நிறைவு செய்தார்கள்…

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading