பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

https://i0.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2008/04/evr-with-periyar.jpg?resize=449%2C594


பெரியார் அல்லது பெரியாரியம் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகிறது. இந்த நெருக்கடி பார்ப்பனியத்தால், பார்ப்பனர்களால் ஏற்படுபவை அல்ல. அவர்களால் பெரியாரித்திற்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியாது. அப்படி நேரடியாக பெரியாரியத்தோடு மோதுகிற திராணி பார்ப்பனர்களுக்கும் கிடையாது.

இந்த நெருக்கடி பெரும்பாலும், ‘வளத்த கடா முட்ட வந்தா, வச்ச செடி முள்ளானா’ என்கிற பாணியில் அவரால் ஆளக்கப்பட்டவர்களாளேயே உண்டாக்கப்படுகிறது. பெரியார்  காலத்திலேயே இதுபோன்ற நெருக்கடிகளை அவர் சந்தித்திருக்கிறார்.

1936ல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தலைவர் பெரியாரை மேடையில் வைத்துக்கொண்டே ப.ஜீவானந்தம், ‘பெரியார் நீதிக்கட்சிகாரர்களிடம் கட்சியை அடகு வைத்துவிட்டார்’ என்று கடுமையாக விமர்சித்தார்.  ஜீவானந்ததி்ற்கு நன்றாக உரைப்பது போல், பெரியார் உரிய சாட்டையடி பதிலை தன் தலைமை உரையில் தந்தார்.

ஆனாலும், பின்னாளில் ஜீவா, பெரியாரிடம் இருந்து விலகி, கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கட்டினார். அதான் கம்பராமாயணத்திற்கு மார்க்சிய முலாம் பூசினார்.

அதற்குப் பிறகும் பார்ப்பனர்கள் மனம் குளிர வைக்கும் வகையில், பெரியாரை மிக கேவலமாக, ‘கைகூலி, சாக்கடை’ என்றெல்லாம் திட்டி எழுதினார். உண்மையில் அவரின் நோக்கம், பெரியாரிடம் இருந்தால் இந்து மதத்தை, பார்ப்பனர்களை, ஜாதி வெறியர்களை பகைத்துக்கொண்டு வாழ வேண்டும். பார்ப்பன ஆசிர்வாதம் இல்லாமல், நாம் தனி தலைவராக உருவாவது தடைபடும் என்பதுதான்.

சுருக்கமா சொல்லுனும்னா ‘கிளிக்கு இறக்கை முளைச்சிடுச்சி ஆத்தவிட்டு பறந்து போயிடுச்சி’

இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ஜீவா அறியப்படுகிறார். ஆனால், தமிழர்களின் வரலாற்றில் பெரியார்தான் தலைவராக போற்றப்படுகிறார்.

***

பெரியாரின் பிள்ளைகளாக இருந்த அண்ணாத்துரையும் அவரது கூட்டாளிகளும், 1949 ல் பெரியாருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். அவர்கள் பெரிய குற்றமாக சொன்னது பெரியாரின் இரண்டாவது் திருமணம். உண்மையில் அதுவல்ல காரணம். நடிகர் வடிவேல் பாணியில் சொல்வதாக இருந்தால் அது ச்சும்மா…’

அவர்கள் தனி வண்டி ஓட்ட ஆசைப்படடார்கள்.

பெரியார்-மணியம்மை திருமணம் 1949 ஆம் ஆண்டு சூலை மாதம் நடபெற்றது. அண்ணாத்துரை புதுகட்சி துவங்கியது அதே ஆண்டு செப்டம்பர் மாதம். அவ்வளவு வேகம்.

பெரியாரோடு இருந்தால், அது சாத்தியப்படாது. அதனால்தான், வெளியில் சென்றவுடன் பார்ப்பனியத்தை, இந்து மதத்தை, ஜாதியை விமர்சிப்பதை நிறுத்தி,  எல்லோரும் வந்து எறிக்கொள்ளும்படியான, ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ என்ற போர்டு மாட்டிய தமிழ் வண்டி ஓட்டினார்கள். பெரியாருடன் சேர்ந்து பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு என்று பேசி, போராடி மக்களிடம் செருப்படியும், கல்லடியும் வாங்குவதற்கு பதில் – தமிழ், தமிழன் என்று  பேசி தமிழர்களிடம் செல்வாக்கு பெருவது சுலபமாகவும், வசதியாகவும் இருந்ததால், இந்த தமிழ் வண்டி 100 மைல் வேகத்தில் பறந்தது.

‘தமிழன்’ என்ற சொல் கூட்டம் சேர்ப்பதற்கு வசதியாக இருந்தது. கூட்டம் சேர, சேர தமிழ் உணர்வும் பீறிட்டுக் கிளம்பியது. தமிழ் உணர்வு கட்சியாக மாறியது. கட்சி ஆட்சியாக மாறியது.

இன்றைக்கும் விஜயகாந்த் வரை, ‘தமிழ்-தமிழன்’ என்று கொஞசம் டென்சனாக சவுண்டு கொடுத்துப் பேசினால், கூட்டம் சேருகிறது. கூட்டத்தை பார்த்த உடனே அவர்களுக்கு ஆட்சி கனவு வருவதற்கு அண்ணாதுரையின் ‘பார்மெட்டே’ பிள்ளையார் சுழியாக பயன்படுகிறது.

இதில் வேடிக்கை, பெரியாரின் தலைமை பிடிக்காமல் தனியாகப் போய் கட்சி ஆரம்பித்த அண்ணாத்துரை, ‘திமுகவின் தலைவர் பதவி காலியாக இருக்கிறது. அது தந்தை பெரியாருக்காக காத்திருக்கிறது’ என்று பெரியாரை திராவிடர் கழகத்தை கலைத்துவிட்டு திமுகவில் சேர அழைப்பு விடுத்தார். அல்லது பெரியார் மீது செண்டிமென்டாக தாக்குதல் நடத்தினார். இத்தனைக்கும் பெரியார், மணியம்மையை விவாகரத்துகூட செய்துவிடவில்லை. அப்புறம் ஏன் இந்த அழைப்பு?

பெரியாரின் தலைமையை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பவர்கள் ஏன் பெரியாரை விட்டு விலக வேண்டும்? ஏன் புதுக் கட்சி துவங்கவேண்டும்? பெரியாரின் தலைமைதான் முக்கியம் என்றால் மீண்டும் திகவிற்கே திரும்பி  இருக்கலாம் அல்லது திகவைவிட்டு போகாமல் இருந்திருக்கலாம்.

பெரியாருக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பு, தொண்டர்கள் மத்தியில், ‘அண்ணாவிற்கு என்ன ஒரு பெருந்தன்மை? இவரல்லவா தலைவர்!’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கான யுக்தியல்லவா? இதை விடவா பெரியாரை கேவலப்பத்த முடியும்?

அண்ணாத்துரை மற்றும் கூட்டாளிகளின் இந்த செயல்களைப் பற்றி, சுருக்கமா சொல்லுனும்னா  ‘இந்தக் கிளிக்கும் இறக்கை முளைளச்சிடுச்சி ஆத்தவிட்டு பறந்து போயிடுச்சி’

இன்றைக்கும் ஆட்சியில், அதிகாரத்தில் அண்ணாவும் அவரின் திமுகவும் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், பெரியார் மட்டும்தான் வரலாற்றில் இருக்கிறார்.

***

பெரியாருக்கு பின் மிக சமீப காலங்களில் பெரியாரின் பேரன்களில் சிலர் திடீர் என்று ஒருநாள், ‘பெரியார் தலித்துகளுக்கு எதுவும் செய்யவில்லை. தலித்துகளுக்கு எதிராக இருந்தார்’ என்று அவதூறுகளை அள்ளி வீசி பெரியாரின் மார்பில் முட்டினார்கள்.

இன்னும் சில பிற்படுத்தபப்பட்ட குழந்தைகள், பெரியாரை நேரடியாக விமர்சிக்க தயங்கி, ’திராவிட இயக்கம் என்ன செஞ்சி கிழிச்சிது?’ என்று பெரியாரின் தாடி மயிரை பிடித்து இழுக்கிறார்கள்.

ப.ஜீவானந்ததிலிருந்து, இன்றைக்கு பெரியாரை விமர்சிப்பவர்கள் வரை, தங்கள் கொள்கை என்ன வென்று சொல்லாமல், பெரியாரை விமர்சிப்பதே தங்கள் கொள்கையாக அடையாளப்படுத்துகிறார்கள்.

பெரியாரை விமர்சிக்கக் கூடாதா? பெரியார் என்ன விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?”

இல்லை. தமி்ழ் நாடு கடவுளையே செருப்பால் அடித்த ஊரு. இங்கு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை.

ஆனாலும் பெரியாரை விமர்சிப்பவர்கள் அவரைத் தாண்டி சிந்தப்பவர்களாக இருக்க வேண்டும் அல்லது செயல்படவேண்டும். ஆனால், இவர்களோ வரலாற்றை பின்னோக்கி இழுத்து, பெரியாரிடம் சண்டையிட்டு, பார்ப்பனியத்திடமும், இந்து மதத்திடமும், ஜாதிய அபிமானிகளிடமும் சரணடைகிறார்கள்.

பெரியாரை விமர்சித்த ஜீவா, பெரியாரின் தாக்குதலால் சாய்ந்தபோன கம்பராமாயணத்திற்கு முட்டுக்கொடுத்தார். பெரியாருக்கு எதிராக பார்ப்பன பாரதிக்கு காவடி தூக்கினார்.

பெரியாரோடு முரண்பட்டு புதுக்கட்சி உருவாக்கிய அண்ணாத்துரை, பெரியாரின் அரசியல் எதிரியான பார்ப்பன ராஜாஜியோடு தேர்தலில் கூட்டு வைத்துக்கொண்டார்.

பெரியாரை தலித் வீரோதியாக சித்திரித்த குணா, ரவிக்குமார் போன்றவர்கள் அதற்கு மாற்றாக பார்ப்பனியத்தை பரிந்துரைத்தார்கள்.

‘திராவிட இயக்க எதிர்ப்பு’ என்ற பெயரில் சுற்றி வளைதது மூக்கை தொடுவதைப்போல், மறைமுகமாக பெரியாரை சீண்டுகிற நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியவாதிகளும், பார்ப்பனியத்தை ஆசையோடு கள்ளப் பார்வை பார்க்கிறார்கள்.

இப்படி பார்ப்பன ஆதரவு நிலைகொண்டு, பார்ப்பனரல்லாதவர்கள் கொடுக்கிற நெருக்கடியை பெரியார் மிகச்சாதரணமாக, பலமுறை தகர்த்திருக்கிறார். மாறாக, பெரியாரை தகர்க்க நினைத்தவர்கள்தான் தகர்ந்து போயிருக்கிறார்கள். மீண்டும் பெரியாரிடமே வந்து மண்டியி்ட்டு மன்னிப்பும் கேட்டு இருக்கிறார்கள்.

***

இதுபோன்ற பெரியார் எதிர்ப்பு-திராவிட இயக்க எதிர்ப்பு சூழல் 1992-93 ஆம் ஆண்டுகளில் தீவிரமாக இருந்தது.

பிரபஞ்சன், ராஜேந்திர சோழன் போன்ற எழுத்தாளர்கள், பார்ப்பன குடும்ப சூழலை பின்னணியாக கொண்டு, பார்ப்பன மொழி நடையில் எழுதப்பட்ட பார்ப்பன இலக்கியங்களை, ‘நவீன இலக்கியங்கள்’ என்று பெயர் சூட்டி, குறிப்பாக மவுனி, சுந்தர ராமசாமி,  மலையாள பிட்டு படத்து கதையான ‘மோகமுள்’ நாவலை எழுதிய தி. ஜானகிராமன் போன்ற பார்ப்பன எழுத்தாளர்களை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொண்டே –

இன்னொருபுரத்தில் தமிழ் மொழி உணர்வு, அரசியல் விழிப்பபுணர்ச்சி, யார் வேண்டுமானாலும் கவிதை, கதை எழுதலாம், எழுத்தாளராகலாம், பேச்சாளராகலாம், பத்திரிகை நடத்தலாம் அதற்கு பிறப்பின் அடிப்படையில் தகுதியோ,  மொழிப் புலமையோ தேவையில்லை. சமூக அக்கறையும், மொழி உணர்வும் இருந்தால் போதும் என்று இலக்கியத்தை ஜனநாயகப்படுத்திய திக, திமுகவைச் சேர்ந்த திராவிட இயக்க எழுத்தளார்களை கேவலப்படுத்தினார்கள். இதில் பார்ப்பனரல்லாத பிரபஞ்சன் போன்றவர்களின் பங்கும் இருந்தது. ஆனால், பிரபஞ்சனின் பங்கு மிகத் தீவராமாக இருந்தது. (அப்போது ரவிக்குமார் திராவிட இயக்க ஆதரவாளராக, தீவிர பெரியார் பற்றாளராக இருந்தார். எஸ்.வி. ராஜதுரை-வ.கீதாவின் பெரியார் சமதர்மம் நூலை (96ஆம் ஆண்டு) அவர்தான் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.)

‘பெரியார்-மணியம்மை திருமணம் தவறு. அது செல்லாது’ என்கிற பாணியில் மிக கடுமையாக பெரியாரின் இரண்டாவது திருமணத்தை கண்டித்து நக்கீரனில் எழுதினார் பிரபஞ்சன். அவர் எழுதியதை ‘நன்றி பிரபஞ்சன்’ என்று நோட்டிஸ் போட்டுக் கொடுத்தார்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்.

ஆக, பார்ப்பன ஆதரவு நிலைகொண்ட பார்ப்பனரல்லாதவர்களின் பெரியார் எதிர்ப்பு அல்லது திராவிட இயக்க எதிர்ப்பு காலபோக்கில் அவர்களாலேயெ கடைப்பிடிக்க முடியாமல் மீண்டும் பெரியாரிடமே வந்து சரணடைந்து விடுகிறார்கள்.  இதற்கு அடிப்படை காரணம், பெரியார் மீது இவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி என்பதைவிட, பார்ப்பனர்களால் இவர்களுககு காரியம் ஆகவேண்டும் என்பதுதான் முக்கியம்.

பெரியார் எதிர்ப்பாளராக இருந்தால் அந்தக் காரியம் சீக்கிரம் நடக்கும் என்பதுதான் பெரியார் எதிர்ப்பின் உள்ளர்த்தம். அப்படியும் காரியம் நடக்காமல் போனால்……? இருக்கவே இருக்கிறது மீண்டும் பார்ப்பன எதிர்ப்பு.

பெரியார் எதிர்ப்புக்கும், பாரதி அபிமானத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பெரியார் எதிர்ப்பையும் பெரியார் ஆதரவையும் மாறி மாறி செய்கிற இந்த அறிவாளிகள், பெரும்பாலும் பாரதி மீது் அபிமானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். காரணம், பெரியார் கருத்துக்களில் தன்னை ஈடுபாடு உள்ளவர்களாக காட்டிக் கொண்டாலும் பாரப்பனர்களோடு சுமுகமாக பழகுவதற்கு பாரதிதான் இவர்களுக்கு கைகொடுக்கிறார். பார்ப்பனர்களிடம் தன்னை முற்போக்காளனாகவும் காட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் உறவு முறியக்கூடாது. அப்படியானால் அங்கே பெரியார்-அம்பேத்கர் பற்றியா பேச முடியும்? பேசினால், கை குலுக்கலா நடக்கும்.? கை கலப்புதான் நடக்கும்.

இந்த இக்கட்டில் இருந்து பார்ப்பனரல்லாத அறிவாளிகளை காப்பதற்காகத்தானே,  அவதாரம் எடுத்திருக்கிறான் ஆபத்தாண்டவன் பாரதி. அந்தக் காலத்து ஜீவா முதல் இந்தக் காலத்து திராவிட இயக்க எதிர்ப்பு எழுத்தாளர்கள் வரை இவர்களுக்கு கைகொடுக்கிற ஒரே கடவுள் பாரதி அய்யர்தானே.

***

பெரியாரின் மார்பில் முரட்டுத்தனமாக முட்டி மோதி  பிறகு சறுக்கி, பெரியாரின் பாதத்தில் வந்து விழுந்துவிடுகிறார்கள், பரிதாபத்திற்குரிய பார்ப்பனரல்லாத, இந்த பெரியார், திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள்.

பார்ப்பனரல்லாத திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் பெரியார் மீது வீசிய கேள்விகளை குறித்து,  1993 ல் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நடத்திய ‘இனி’ இதழில் ஒரு கவிதை எழுதினேன்

பிரபஞ்சனின் திராவிட இயக்க எதிர்ப்பு மனோபாவமே, இந்த கவிதையை எழுதுவதற்கு எனக்கு உந்துதலாக அல்லது உள்ளடக்கமாக இருந்தது.

பெரியாரின் 131 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் அந்தக் கவிதையை இங்கு பிரசுரிக்கிறேன்.

இதை எழுதி 16 ஆண்டுகள் ஆகிறது. அப்போது பெரியாரின்-திராவிட இயக்கத்தின் எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள் இப்போது ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அப்போது ஆதரவாளராக இருந்தவர்கள் இப்போது எதிப்பாளராக மாறி இருக்கிறார்கள். இப்போதும் இந்தக் கவிதை பொறுத்தமாக இருக்கிறது. இந்தக் கவிதை எப்போது பொறுத்தமற்று போகிறதோ அப்பபோது் சமூகம் பல படி முன்னேறி இருக்கிறது என்று அர்த்தம். பார்ப்போம்.

***

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”

பனை ஏறும்

தந்தை தொழிலில்

இருந்து தப்பித்து

தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்.

***

“பெரியாரின்

முரட்டுத்தனமான அணுகுமுறை

அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”

இதுமுடி வெட்டும் தோழரின் மகனான

எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

***

“என்னங்கபெரியார் சொல்லிட்டா சரியா?

பிரமணனும் மனுசந்தாங்க.

திராவிட இயக்கம்

இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”

இப்படி ‘இந்தியா டுடே’

பாணியில்கேட்டவர்

அப்பன் இன்னும்

பிணம் எரித்துக் கொண்டிருக்க

இங்கே டெலிபோன் டிபார்மென்டில்

சுபமங்களாவை விரித்தபடி

சுஜாதா

சுந்தர ராமசாமிக்கு

இணையாக

இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்

அவருடைய மகன்.

ஆமாம்

அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

***

இனி மாத இதழுக்காக 1993 அக்டோபரில் எழுதுயது

தொடர்புடையவை:

பெரியாரின் ஊழல்

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு

158 thoughts on “பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

  1. //இன்றைக்கும் ஆட்சியில், அதிகாரத்தில் அண்ணாவும் அவரின் திமுகவும் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், பெரியார் மட்டும்தான் வரலாற்றில் இருக்கிறார்.// – True.

  2. மிக அருமையான கட்டுரை! பெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா? என்கிற கேள்வியோடு அவரை தர குறைவாக தரமற்றவர்களால் விமர்சனம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. இவர்களது இந்த விமர்சனம் பெரியாரின் கொள்கைகள் மீது அல்ல ,பெரியாரின் மீதான தனிப்பட்ட காழ்புனற்சியினால் வருவது மற்றும் அதனால் கிடைக்கும் ஆதாயத்திற்காக. பெரியாரை ஒதுக்கிவிட்டு எவரும் முற்போக்கு, சாதி கொடுமை ,சமத்துவம் போன்றவற்றை பேச முடியாது. அப்படி எவராவது பேசினால் ஊரை ஏமாற்றும் செயல்தான். பெரியார் எல்லாவற்றையும் வெளிப்படையாக நேரிடையாக பேசியதால் இவர்களுக்கு ஏற்றுக்கொள்ள இவர்களது சாதியோ, மற்ற கொள்கைகளோ தடுக்கிறது. பார்பானை திட்டுனா இவர்களுக்கு இனிக்கும் ,இவர்களது குறையை சாதி வெறியை சுட்டி காட்டினால் கசக்கும். பெரியாரை விமர்சிக்கும் தகுதி யாருக்கும் கிடையாது ,ஏன் என்றால் அவரால் செய்யப்பட்ட சீர்திருத்தங்களை அனுபவித்து கொண்டே பேசுவது , அதில் ஒரு 1% கூட இன்னும் ஒருவரும் செய்யவில்லை .

  3. பெரியாரை விமர்சிக்க எவருக்கு தகுதி வேண்டும் என்பதை உங்களின் இக்கட்டுரை மிகத்தெளிவாக இருக்கிறது.

    சதிஸ்
    சுவிஸ்

  4. ‘திமுகவின் தலைவர் பதவி காலியாக இருக்கிறது. அது தந்தை பெரியாருக்காக காத்திருக்கிறது’ என்று பெரியாரை திராவிடர் கழகத்தை கலைத்துவிட்டு திமுகவில் சேர அழைப்பு விடுத்தார். அல்லது பெரியார் மீது செண்டிமென்டாக தாக்குதல் நடத்தினார்.

    பெரியாரின் தலைமையை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பவர்கள் ஏன் பெரியாரை விட்டு விலக வேண்டும்? ஏன் புதுக் கட்சி துவங்கவேண்டும்? பெரியாரின் தலைமைதான் முக்கியம் என்றால் மீண்டும் திகவிற்கே திரும்பி இருக்கலாம் அல்லது திகவைவிட்டு போகாமல் இருந்திருக்கலாம்.///

    Seriyana kelvi…..

    indru Dhinamani news paper la vendi paarthen athil oru siru news kooda periyar b’day kku

    aanal Papa Bharathikku full page katturai pottu romba Pugalnthu yeluthinan…

    Ithu dhan Saathi Pasam…..

  5. “பெரியாரின் பிள்ளைகளாக இருந்த அண்ணாத்துரையும் அவரது கூட்டாளிகளும், 1949 ல் பெரியாருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். அவர்கள் பெரிய குற்றமாக சொன்னது பெரியாரின் இரண்டாவது் திருமணம். உண்மையில் அதுவல்ல காரணம். நடிகர் வடிவேல் பாணியில் சொல்வதாக இருந்தால் அது ‘ச்சும்மா…’

    அவர்கள் தனி வண்டி ஓட்ட ஆசைப்படடார்கள். பெரியார்-மணியம்மை திருமணம் 1949 ஆம் ஆண்டு சூலை மாதம் நடபெற்றது. அவர்கள் புதுகட்சி துவங்கியது அதே ஆண்டு செப்டம்பர் மாதம். அவ்வளவு வேகம்.”
    பெரியாரும்தான் காங்கிரஸ் கட்சி பின்னர் நீதிக்கட்சி இரண்டிலும் இருந்து விலகி “தனி வண்டி” ஓட்டினார்! பெரியார் செய்தால் சரி அண்ணா செய்தால் பிழையா? இதென்ன குருட்டுத்தனமான பகுத்தறிவு?

    “இன்றைக்கும் ஆட்சியில், அதிகாரத்தில் அண்ணாவும் அவரின் திமுகவும் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், பெரியார் மட்டும்தான் வரலாற்றில் இருக்கிறார்.

    இன்றைக்கும் ஆட்சியில், அதிகாரத்தில் அண்ணாவும் அவரின் திமுகவும் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், பெரியார் மட்டும்தான் வரலாற்றில் இருக்கிறார்.”

    அண்ணா வரலாற்றில் இல்லையா? பெரியார் மட்டும்தான் வரலாற்றில் இருக்கிறாரா? பெரியார் மீது இப்படியான ஒரு மூட பக்தியா? பெரியாரே இந்தப் புகழ்ச்சியை பெரியாரே விரும்பமாட்டார்.

    பெரியார் கூடத்ததான் இராசாசியோடு மிக நெருக்கமான உறவை வைத்துக் கொண்டிருந்தார். தனது இரண்டாவது திருமணம் பற்றி அவர் இராசாசியோடு கலந்தாலோசித்தார் என்று கூட அப்போது சொல்லப்பட்டது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அந்த இரண்டாவது திருமணத்தை யாரும் நியாயப்படுத்த முடியாது. அது பெரியார் வாழ்க்கையில் பெரிய சறுக்கல். எதிரிகள் மெல்லுவதற்குக் கொடுக்கப்பட்ட அவல்!

  6. நந்தன் மற்றும் இனி ஆகிய இதழ்களின் தொகுப்பை என் பாட்டனார் சேர்த்துவைத்த தொகுப்பில் இருந்து ஒரு மூன்று ஆண்டுகளுக்கு முன் படித்தேன் அப்போதும் இந்த கவிதையின் வரிகளை வேறு வார்த்தைகளில் பேசுபவர்களைக் கேட்டேன். இன்றும் இந்த வார்த்தைகளைக் கேட்கிறேன்.அன்று என் பாட்டன் எனக்கு படித்துக் காட்டிய போதும் இந்த வார்த்தைகளை பேசியவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். “வார்த்தைகளும் மாறவில்லை, சூழலும் மாறவில்லை ஆனால், பெரியார் இன்றும் பெரியார் அப்படியே இருக்கிறார்” இந்தச் சூழல் மாறினாலும் பெரியார் இருப்பார் ஏனென்றால் அவர் கட்டுடைத்த பழமை ஈராயிரமாண்டுகளாய் நெய் ஊற்றி வளர்க்கப்பட்டது, அதன் மிச்ச சொச்சங்களோ அல்லது அதன் எச்சமோ இருக்கும் வரை பெரியார் எனும் மருந்துவனும் அவர் தந்த மருந்துகளுக்குமான தேவை இருந்துகொண்டே இருக்கும்

  7. பெரியாரைப் புரிந்தார்
    பெரியாரைப் புகழ்ந்தார்!

    பெரியாரை இகழ்வார்
    பெரியாரால் வாழ்ந்தார்!

    புகழென்றே இகழ்வென்றோ
    வாழவுமில்லை வாடவுமில்லை.
    துணிவொன்றே துணையாய்
    அறிவொன்றே வழியாய்
    சரித்திரம் படைத்தார்
    மனிதனைக் கண்டார்!

    நன்றி எதிர்பார்த்தால்
    தொண்டல்ல தொழிலென்றார்!
    பிறந்தநாள் இன்றென்றே
    பெருமையுடன் வாழ்த்துகின்றோம்.

  8. கட்டுரை அருமை… குறிப்பாக அந்தக் கவிதையில் உள்ள நிஜம், இன்றைய இளம் சமூகத்தினரை தலை குனிய வைக்கும் நண்பரே!

  9. பெரியாரை புறக்கணிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் எல்லோரும் முகவரிஅற்று போயிருக்கிறார்கள். அந்த பட்டியலில் சேருவதற்கு புதிய தலைவர்கள் சிலரும் புறப்பட்டு விட்டார்கள் போலும்….

  10. தோழர் சுகுணா திவாகரின் பாரதி பரம்பரையா? அண்ணா பரம்பரையா? என்ற பதிவின் இணைப்பு, நீங்கள் எழுதிய இந்த கட்டுரைக்கு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருக்கும் என்று கருதுவதால்..

    http://thuroki.blogspot.com/2008/07/blog-post.html

    http://thuroki.blogspot.com/2008/07/2.html

    நன்றி

  11. Nakeeran, பெரியார் தனியாக சென்றதற்கு காரணம் சமுதாயத்தை நோக்கமாக கொண்டு, ஆனால் அண்ணாதுரை செய்தது பதவி வேண்டி .பெரியாரின் இரண்டாவது திருமணம் மீதான தவறான கண்ணோட்டம் இருக்கிறது ,இதற்கு பெயர்தான் நொண்டி சாக்கு. எப்படியாவது பெரியாரை மறுத்தாக வேண்டும் அல்லது குற்றம் கண்டுபிடித்தாக வேண்டும். பெரியாரை இதுவரை யாரும் எங்கும் புகழ்ந்ததில்லை. சாதாரண ஒரு விமர்சனம் தான் மதிமாறன் அவர்களுடையதும்.. தன்நலம் பாராமல் மக்களையே கருத்தை கொண்டு உழைத்த மனிதருக்கு செய்யும் மரியாதை ,பக்தி அல்ல!

  12. கட்டுரை அருமை… குறிப்பாக அந்தக் கவிதையில் உள்ள நிஜம்,
    இந்த கவிதை நேற்று எங்கள் பொதுநல மன்ற அலுவலக வாயிலில் எழுதி வைக்கப்பட்டது

  13. பகுத்தறிவு என்பது என்ன? பகுத்தறிவாளர் என்பவர் யார்?

    “The Belief that opinions and actions should be based on reason and knowledge rather than on religious belif or emotion”!

    “அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிக்கையின் அடிப்படையில் செயல் படாமல் அறிவை , யுக்தியை, தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து உண்மை என்ன என்று அறிய முயல்வதுதான் பகுத்தறிவாகும்.

    பகுத்தறிவாளர் என்பவர் யார்?

    இப்படி பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பு இன்றி தேடுவதும், அப்படித் தான் அறிந்த மட்டில், தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவன், அப்படி கூறும்போது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்ப்பவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி.

    சரிதானே ?

    பெரியார் சொன்னது போல கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம், இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான்.

    ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- புத்தரே அவ்வளவு தியானம், ஆரய்ச்ச்சி செய்து கடைசியில் உயிர் பல பிறவிகள் எடுத்து மேலும் மேலும் துன்ப சாகரத்தில் உழல்வதாக கூறுகிறார்.

    “மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா?

    மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”

    இந்தக் கேள்வியை ஆத்தீகவாதி, நாத்தீக அறிங்கரிடம் முன் வைத்தாரா?

    அப்படி முன் வைத்திருந்தால்- அதற்க்குத் தயக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்மையை வழங்க நாத்தீக வாதி தயாராக‌ இருந்தாரா?

    “மனித உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா?”- இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

    உடலோடு சேர்ந்து உயிரும் அழிந்து விட்டாதாக கொண்டால் பிரச்சினை சிறிது எளிதாக முடிந்து விடும். ஏதோ வந்தோம், ஓரளவு நியாயமாக வாழ்வோம், சாவோம் என்று முடிக்கலாம்.

    ஆனால் அப்போது கூட சில கேள்விகளுக்கு க‌ண்டிப்பாக‌ ‌ பதில் தேவை.

    இப்படி வெறும் நூறு ஆண்டு வாழ்க்கையில் கூட ஏன் பலர் ஏழையாக, சாமானியனாக, சிலர் குருடாக, முடமாக பிறக்க வேண்டும்?

    ஏன் சிலர் மட்டும் சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புகளோடு பிறக்க வேண்டும்? நான் ஏன் சூர்யாவாக (நடிகர் சூரியா, சிவகுமாரின் மகன்) பிறக்கவில்லை? நான் ஏன் முகேஷ் அம்பானியாகப் பிறக்கவில்லை? நான் அபிசேக் பச்சனாகவோ, ஹிரித்திக் ரோஷனாகவோ, ஸ்டாலினாகவோ, அழகிரியாகவோ பிறக்க முடியாமல் போனது ஏன்?

    நான் ஏன் உயரமாக, சிவப்பாக, அழகாக, நல்ல உடல் கட்டுடன் பிறக்கவில்லை?

    அதாவது “உடலோடு சேர்ந்துதான் உயிர், உடல் அழியும்போது உயிரும் அழியும் – உயிர் தொடர்ந்து வாழ்வதில்லை” என்ற ஒரு கோட்பாட்டின் படி கூட, நம்மால் நாம் விரும்பிய படியான வாழ்க்கையை எடுத்துக் கொள்ள முடியாமல் – கிடைத்தை எடுத்துக் கொள்ளும் அடிமை நிலையில் தான் இருக்கிறோம்- என்பதை மறுக்க முடியுமா?

    ஆனால் “உடல் அழியும் போது உயிர் அழிவதில்லை, அது (உயிர்) வேறு எங்கோ போகிறது, அல்லது உயிர் மீண்டும் பிறக்கிறது” என்றால் அது நமக்கு மிகவும் சீரியசான பிரச்சினை யாகும். ஏனெனில் இப்படி- கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட வேண்டிய அடிமை நிலை, தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது- என்ன வேதனையான அடிமை நிலை?

    மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியுடனோ, ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை!
    இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

    மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். மனித உயிர் அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்!

    எனவே வெறுமனே உண்டு விட்டு, உறங்கி விட்டு, காலையில் எழுந்து “கடவுள் எங்கே? காட்டு!” என்று கேட்பது, நுனிப்புல் மேயும் முறையாகும்!

    மெரீனா கடற் கரையில் நின்று கொண்டு “எங்கே இருக்கிறது ஆப்பிரிக்க கண்டம்? எனக்கு காட்டு பார்க்கலாம்!” என்று கேட்பது போல் உள்ளது!

    நான் கடவுளைப் பார்த்தது இல்லை! எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் தயார் இல்லை!!

    கடவுள் இல்லை என்பது ஃபாரடேயின் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

    கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

    ஆனால் எதுவானாலும் அதை ஆராயாம‌ல், உண‌ராம‌ல், குருட்டுத் த‌ன‌மாக‌ ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியுமா?

    ஆனால் ந‌ண்ப‌ர்க‌ளே நாம் அபாய‌த்தில் இருக்கிறோம், எந்த‌ நோயோ அல்ல‌து துன்ப‌மோ ந‌ம்மையோ, ந‌ம‌து நெருங்கிய‌ உற‌வின‌ரையோ தாக்கினால் ‍ அதைத் த‌டுத்து ந‌ம்மை காத்துக் கொள்ளும் திற‌ன் ந‌ம‌க்கு இருக்கிற‌தா?

    ந‌ண்ப‌ர்க‌ளே, மிக‌ச் சிக்க‌லான‌ நிலையிலிருந்து விடுப‌ட‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் இருக்கிறோம்.

    ஆனால் நாம் முழுவ‌தும் காமெடி பீசாக‌ ஆகி விட‌ நேர்ந்தால் அது இன்னும் அதிக‌ சிக்க‌லில் ந‌ம்மை சேர்க்கும்.

    என‌வே நான் ந‌ம்முடைய ஆத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள், நாத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள் இரு த‌ரப்பாரையும் கேட்டுக் கொள்வ‌து என்ன‌ வென்றால் நாம் அனைவ‌ரும் உண்மையான‌ ஆன்மீக‌ ஆராய்சச்சியில் ஈடுப‌டுவோம்!

    இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்!

    ஏன் எனில் உண்மை யாருக்காக‌வும் வ‌ளையாது. உண்மை அது மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப் ப‌டையில் தேர்ந்து எடுக்க‌ப் ப‌டுவ‌தில்லை.

    உல‌கில் எல்லொரும் உல‌க‌ம் த‌ட்டை என்று நினைத்தாலும், ஒருவ‌ன் ம‌ட்டும் உருண்டை என்று கூறினால், அது உண்மையாக இருக்கும் ப‌ட்ச‌த்தில் எல்லொரும் அதை ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்.

    Because Truth can never be defeated- it is the property of the truth!

    Truth shall prevail! No body can defeat the Truth.

    Hence let us all strive to find the truth.

  14. நான் ஆத்திகவாதியாக இருந்தாலும் பெரியாரின் மேல் மிகுந்த மரியாதை வைத்திருப்பவன். பெரியாரின் பெருமை அவர் நாத்திகம் பேசியதால் வந்ததல்ல. பெரியாருக்கு முன்பும் நாத்திகர்கள் உண்டு. மக்களில் ஒரு பிரிவினரை தாழ்ந்த ஜாதியினர் என்று இகழ்ந்து ஒடுக்குதல்கள் நடந்தபொது அதை துணிச்சலுடன் எதிர்த்தவர் பெரியார். அவர் அன்று நினைத்திருந்தால் தமிழக முதல்வராகி பதவி சுகத்தை அனுபவித்திருக்க முடியும். ஆனால் தியாக மனப்பான்மையோடு தாழ்த்தப்பட்டோருக்காக உழைத்ததோடு எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். தன்னுடைய கொள்கைகளை எல்லாரும் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும் என்று யாரையும் அவர் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் சிந்தித்து எது சரி என்று படுகிறதோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் சொன்னார். பெரியார் ஆத்திகத்தின் மீது நம்பிக்கை இழந்ததே ஆத்திகவாதிகள் செய்த அட்டூழியங்கள்தான். பெரூம்பாலான ஆத்திகர்களை விட பெரியார் எவ்வளவோ மேல்.

  15. Periar is the man of the 20th Century. Imagine, what would have happened, if Periar was not born, every non-brahmin would have been in the stone age.

  16. “கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” என்பது பெரியாரின் தைரியமான வாக்கியங்கள். பெரியார் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இந்த வாக்கியாயங்கள் தான்.

    கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம். ஆனால் அடுத்தவரைக் கட்டாயப் படுத்தும் அளவுக்கு அது போனால் அது மனித சமுதாயத்தையே அழிக்கும் ஆபத்தாக முடியும்.

    ஆனால் இந்தியாவில் என்றைக்கும் சிந்திக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும்.

    “கடவுள் இல்லை” என்று கூறும் உரிமை இந்தியாவில் என்றும் இருக்க வேண்டும்.

    “கடவுள் இல்லை என்று கூறினால் கழுத்தை வெட்டுவேன்” என்ற நிலயை எடுக்கும் காட்டு மிராண்டிக் கொள்கை உடைய மார்க்கங்கள்- அது எந்த தருமமோ மார்க்கமோ – அவர்கள் தங்களின் அறிவை செம்மைப் படுத்தி வர வேண்டும்.

    சாதி அழிய வேண்டும், சமத்துவம் வர வேண்டும் என்பதும் பெரியாரின் அடிப்படைக் கொள்கை. அதற்காக நாம் பாடு பட வேண்டும்.

    “கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” என்பதைக் கூறும் சுதந்திரம் இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் , உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

    உண்மையான பகுத்தறிவாளர் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். யாருக்கும் வளைய மாட்டார்கள். ஜால்ரா அடித்துப் பிழைக்கவும் மாட்டார்கள்.

    உண்மையான பகுத்தறிவாளர் ஒப்புக் கொள்வது உண்மையை மட்டுமே- உண்மை என்ற பெயரில் திணிக்கப் படும் காட்டு மிராண்டிக் கொடுமைகளை அல்ல.

    விட்டால் பெரியாருக்கும் நாத்தீகத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கதை கட்டுவார்கள் போல இருக்கிறது.

  17. உண்மையின் வெளிப்பாடு…
    சாதி அழிய வேண்டும், சமத்துவம் வர வேண்டும் —

  18. திராவிடர்களின் (தமிழர்களின்) தந்தையாக நம்மை என்றும் வழிநடத்துவார் நமது தந்தை பெரியார் ..

    இன்றும் நம்மை பிரித்து வைத்து தங்களை காத்துவருகிற பார்ப்பணீயம் (மனித நேயம் அற்ற மனிதர்கள்) சுற்றி சுற்றி வருகிறது..அதை அய்யாவின் வழியில் அவரின் தடி கொண்டே அடித்து துரத்துவோம்..(இதன் பொருள் இந்த பதிவை திட்டமிட்டு திசை திருப்ப ஒன்று திரியுதுங்க)

    இந்த கவிதையை ஒவ்வொரு சுயமரியாதை உள்ள திராவிடனின் (தமிழன் = மனிதன்) வீட்டிற்கு முன் எழுதி வைக்கப்படவேண்டிய ஒன்று..

    // பெரியாருக்கு பின் மிக சமீப காலங்களில் பெரியாரின் பேரன்களில் சிலர் திடீர் என்று ஒருநாள், ‘பெரியார் தலித்துகளுக்கு எதுவும் செய்யவில்லை. தலித்துகளுக்கு எதிராக இருந்தார்’ என்று அவதூறுகளை அள்ளி வீசி பெரியாரின் மார்பில் முட்டினார்கள்.

    இன்னும் சில பிற்படுத்தபப்பட்ட குழந்தைகள், பெரியாரை நேரடியாக விமர்சிக்க தயங்கி, ’திராவிட இயக்கம் என்ன செஞ்சி கிழிச்சிது?’ என்று பெரியாரின் தாடி மயிரை பிடித்து இழுக்கிறார்கள்.

    ப.ஜீவானந்ததிலிருந்து, இன்றைக்கு பெரியாரை விமர்சிப்பவர்கள் வரை, தங்கள் கொள்கை என்ன வென்று சொல்லாமல், பெரியாரை விமர்சிப்பதே தங்கள் கொள்கையாக அடையாளப்படுத்துகிறார்கள்//

    இது தொடர்ந்து நடத்து கொண்டே இருக்கிறதுங்க..சமீபத்தில் கூட..ஆனால் வருந்தி மீண்டும் திரும்புவார்கள் என்று நம்பிக்கை கொள்கிறேன்..

    வாழ்த்துகள் தோழரே

    தோழமையுடன்

    முகமது பாருக்

    (பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைபவன்)

  19. “கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” என்பது பெரியாரின் அடிப்படைக் கருத்து என்றால், பலருக்கு குளிர் சுரம் வருகிறது.

    ஒவ்வொருவரின் தனிப் பட்ட விருப்பதிக்கேற்ப, வசதிக்கேற்ப பெரியாரின் கருத்தை மாற்றி எழுத முடியுமா?

    பெரியாரின் கருத்தை மறைக்க முடியுமா?

    மனிதருக்கு மனிதர் உரிய மதிப்புக் குடுக்க வேண்டும் , பிறரை இகழும், தாழ்மையாக கருதும் கொடும் செயல் ஒழிய வேண்டும் என்பதும் பெரியாரின் சுய மரியாதை கருத்து.

    மனிதரை அறிணை போல கருதி எழுதும் மிருக குணம் உடைய நல்லவர்கள், பகுத்தறிவு பெற்று நாகரிக பாதைக்கு திரும்புவார்க‌ளா என்ப‌து ச‌ந்தேக‌ம் தான்.

    பெரியாரே ப‌ல மிர‌ட்ட‌ல‌க‌ளை, அவ‌ம‌திப்புக‌ளை ச‌ந்தித்த‌வ‌ர்தான்.

  20. ///அப்படி நேரடியாக பெரியாரியத்தோடு மோதுகிற திராணி பார்ப்பனர்களுக்கும் கிடையாது.///

    அப்போ இவ்வளவு நாள் செத்த பாம்பை தான் அடிச்சிக்கிட்டு இருந்தீங்களா! அடப்பாவிகளா இது தான் தமிழ் வீரமா? அதில இன்னமும் வீரியமா விரம் வேற பேசிக்கிட்டு இருக்கீங்களே? வெட்கமா இல்ல உங்களுக்கெல்லாம்?

  21. //பெரியாரைப் புரிந்தார்
    பெரியாரைப் புகழ்ந்தார்!

    பெரியாரை இகழ்வார்
    பெரியாரால் வாழ்ந்தார்!

    புகழென்றே இகழ்வென்றோ
    வாழவுமில்லை வாடவுமில்லை.
    துணிவொன்றே துணையாய்
    அறிவொன்றே வழியாய்
    சரித்திரம் படைத்தார்
    மனிதனைக் கண்டார்!

    நன்றி எதிர்பார்த்தால்
    தொண்டல்ல தொழிலென்றார்!
    பிறந்தநாள் இன்றென்றே
    பெருமையுடன் வாழ்த்துகின்றோம்.//

    தமிழரே இந்த வரிகளை என்னுடைய gtalk customs message -ல வைத்துள்ளேன்..உங்கள் பெயரை கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறன்..உங்கள் அனுமதி பெறாமல் வைத்துள்ளேன் மன்னிக்கவும்..

  22. No one can under estimate Periyaars influence in Tamil nadu during 1920 to 1960s. His main principles were aetheism, against paarpanneyam, against Bhramins, and Periyaar tried to improve the plight of the women as well.

    We respect him, I personally respect him as I learned the critical analysis, courage to rebel and questioning attitude from Periyaar.

    But what was the effect of Periyaars aggresive work?

    Was it help ful in acheiving casteless soceity in Tamilnadu or more specifically for Dhaliths?

    WHAT WAS THE EFFECT OF PERIYAARS WORK IN TAMILNADU, AND HOW IT TRANSFORMED TAMILNADU?

    பாப்பாப் ப‌ட்டி கீரிப்ப‌ட்டியிலே ப‌ஞ்சாய‌த்து த‌லைவ‌ர்க‌ள் த‌லை உருட்ட‌ப் ப‌ட்ட்து உங்க‌ளுக்கு கொடுமையாக‌த் தெரியாதா?

    திண்ணிய‌த்திலே வாயிலே பீயைத் திணித்த‌து கொடுமை இல்லையா?

    ப‌ல‌ வீடூக‌ள் கொளுத்த‌ப் ப‌ட்டு, பெண்க‌ள் வன்புணர‌ப்ப‌ட்டு, வ‌ன்முறை வெறித் தாண்ட‌வ‌ங்க‌ள் ந‌டை பெறுவ‌து கொடுமை இல்லையா?

    எத்த‌னை பேர்க‌ள் க‌ட்டி வைக்க‌ப் ப‌ட்டு தோலை உறித்திருக்கிறார்க‌ள்?

    சென்னை ச‌ட்ட‌க் க‌ல்லூரியிலே 40 பேர் செர்ந்து ஒரு மாண‌வ‌னை அவ‌ன் கீழே விழுந்த‌ நிலையிலும் அவ‌னுக்கு உயிர் இருக்கிற‌தா என்று கூட‌த் தெரியாத‌ நிலையிலும் விடாம‌ல் வீர‌த் தாக்குத‌ல் ந‌டை பெற்றது கொடுமை இல்லையா?

    இந்திய ச‌முதாய‌த்தின் பிர‌ச்சினைக‌ளை எப்ப‌டித் தீர்ப்ப‌து என்று ந‌டு நிலையாக‌ ஆராயாம‌ல், சொந்த‌ விருப்பு வெறுப்பின் அடிப்ப‌டையில் த‌ங்க‌ளை ச‌மூக‌ , அரசிய‌ல் ரீதியில் உய‌ர்த்திக் கொண்டு, பில்லிய‌ன் க‌ண‌க்கில் சொத்துக்க‌ளையும் சேர்த்துக் கொண்ட‌வ‌ர்க‌ள் காட்டிய‌ நீதியின் ந‌ற்ப‌ல‌ன்க‌ள் என்ன‌ தெரியுமா?

    தென்னிந்தியாவிலே இன்றைக்கு ம‌னித‌னின் வாயிலே பீ திணிப்ப‌து பெரியார் பிற‌ந்த‌ த‌மிழ் நாட்டில் ம‌ட்டும் தான்.

    இன்றைக்கு 40 மாண‌வர் சேர்ந்து ஒரு மாண‌வ‌னைக் கைமா செய்யும் செய‌ல் ந‌டை பெறும் இட‌ம் ப‌குத்த‌றிவு ப‌க‌ல‌வ‌ன் கொள்கை ப‌ர‌ப்பிய‌ த‌மிழ் நாட்டில் ம‌ட்டும் தான்!

    சாதியை ஒழிக்கிறோம் என்ற‌ பெய‌ரில் சாதிக் காழ்ப்புணர்ச்சியை, அப்ப‌ட்ட‌மான‌ சாதி வெறியைக் கொழுந்து விட்டு எரியும் ப‌டி வ‌ள‌ர்த்த‌துதான் இப்படிப் பாப்பாப் ப‌ட்டியிலும் , கீரிப் ப‌ட்டியிலும், ச‌ட்ட‌க் க‌ல்லூரியிலும், திண்ணிய‌த்திலும் வெடிக்கிற‌து.

    மதுரையில் ஒரு நசுக்கப் பாட்ட பிரிவை சேர்ந்த வழக்கறிங்கர் வாயிலும் ஒரு வருடம் முன்பு பீ திணிக்கப்பட்டு கொடுமைப் படுத்தப் பட்டார்.

    ஒரு ம‌னித‌னை பிற‌ ம‌னித‌ர் இழிவு செய்வ‌தும், வாயிலே பீ தினிப்ப‌தும், த‌லையை வெட்டி உருட்டுவ‌தும், வீடுக‌ளைக் கொளுத்துவ‌தும் நடைபெறுகிறது.

    எனவே எல்லோரும் சேர்ந்து வாழ‌ சிற‌ந்த‌ வ‌ழி, ம‌னித‌ன் ம‌ன‌தில் அன்பை வ‌ள‌ர்த்து, ஒவ்வொரு ம‌னித‌னையும் க‌ண்ணிய‌ம் மிக்க‌ க‌ன‌வான் ஆக்குவ‌துதான்.
    அப்போது தான் உண்மையான‌ நாக‌ரீக‌ ச‌முதாய‌ம் உருவாகும்.

    வாயில் பீ திணீப்பவரை வைத்து, த‌லையை வெட்டி ப‌ந்து போல‌ உருட்டுப‌வ‌ரைவைத்து ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் உருவாக்க‌ முடியாது.

    ஆனால் – சாதி வெறியை தூண்டி, வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை வ‌ளர்த்து க‌ற்கால‌ நிலைக்கு கொண்டு செல்கிறார்க‌ள்.

    அதுதான் இப்படிப் பாப்பாப் ப‌ட்டியிலும் , கீரிப் ப‌ட்டியிலும், ச‌ட்ட‌க் க‌ல்லூரியிலும்,திண்ணிய‌த்திலும் வெடிக்கிற‌து.

    தூங்குப‌வ‌ர எழுப்ப‌லாம். தூங்குவ‌து போல‌ ந‌டிப்ப‌வ‌ரை எழுப்ப‌ முடியுமா?

  23. பெரியார் பற்றிய கட்டுரையும், கவிதையும் சிறப்பு.

  24. திருச்சிக்காரான்,
    பாப்பாப் ப‌ட்டி , கீரிப் ப‌ட்டி, ,திண்ணிய‌ம்
    சரி இதை எல்லாம் எதிர்த்து நீங்களோ பார்ப்பன சமூகமோ என்ன செய்தீர்கள்?

  25. நல்ல கேள்வி. சகோதரர் முருகன் அவர்களுக்கு நன்றி,

    பீடிக்கு நெருப்புக் கேட்பதில் ஆரம்பித்த தகராறு மிக விரைவாக மிக எளிதில் கொலையில் முடிகிறது. அந்த அளவுக்கு கட்டுப்பாடு இல்லாத, கோவத்தை அடக்க முடியாத சமூகமாக இருக்கிறோம்.

    இப்போது பிரச்சினையின் காரணத்தையாவது புரிந்து இருக்கிறோம்.

    தீர்வு, மக்களின் மனதில் அன்பை, நாகரீகத்தை உருவாக்கி அவர்களை கனவான் (Gentle man) ஆக மாற்றுவதுதான். இது ஒரு நாளிலோ, ஒரு வருடத்திலோ முடிந்து விடாது.

    ஆனால் கல்வி அறிவு பெற்றவர்களே, மெத்தப் படித்தவர்களே காழ்ப்புணர்ச்சிக்கு, வெறுப்புணர்ச்சிக்கு அடிமை ஆகி விடுகிறார்கள்.
    எனவே நம்முடைய வேலை அதிகமாகிறது.

    இதை சட்டம் போட்டோ, ஆணையிட்டோ நிறைவேற்ற முடியாது. நாமே நடந்து காட்டியும், பிரச்சாரம் செய்தும் தான் நிறைவேற்ற முடியும்.

    உங்களுக்கு நான் கூறிய கருத்துக்கள் மேல் நம்பிக்கை இருந்தால் உங்களால் முயன்ற அளவு, வெறுப்புக் கருத்துக்களை குறைக்க, அன்பை வளர்க்க, உதவி செய்யுங்கள்.

    நான் பெரிய தலைவன் இல்லை. சாதரணமானவன். ஆனால் என்னால் முடிந்த அளவு இந்தப் பணியில் ஈடுபடுகிறேன்.
    நான் தனியாக எதையும் சாதிக்க முடியாது!

    நமது சந்ததிகளுக்கு சொத்து சேர்த்தால் போதும் என்று நினைக்கிறோம். ஆனால் அவர்கள் வாழப் போகும் இடம் எப்படி உள்ளது?

    பெரிய பங்களாக்களில் வாழும் பெரிய அதிகாரிகளின் வீட்டில் புகுந்து கொலை செய்வது சர்வ சாதாரணமாக நடக்கிறது (நான் எந்த அரசியல் கட்சியையோ, தலைவரையோ குறை சொல்ல வரவில்லை)!

    இப்படிப்பட்ட இடத்தில் நமது குழைந்தைகளுக்கு பெரிய பங்களா சொத்து வாங்கி வைத்தால் மட்டும் போதுமா?

    நாம் சிந்ததித்து செயல் பட்டே ஆக வேண்டிய நிலையில் உள்ளோம்.

    செயல் சக்கரத்தை உருட்ட உங்கள் தோள்களைக் குடுத்து உதவுங்கள்.

  26. திருச்சிகாரரே! உங்களுக்கு இப்போது பிரச்சனை என்ன?
    இங்கே உள்ள பதிப்புக்கும் நீங்கள் பேசுவதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்களே யோசித்தால் உங்களுக்கும் நலம் எங்களுக்கும் நலம். அதை விடுத்து ஆத்திகம் நாத்திகம், உயிர் உள்ளதா? இல்லையா? இதை பற்றியெல்லாம் இவ்வாறு இங்கே உணர்ச்சிவசப்பட்டு பேசும் போது (மன்னிக்கவும்) நீங்கள் புதுசு கண்ணா புதுசு கண்ணா மாதிரியே தோன்றுகிறது. ஏனெனில் சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி பிரச்சனையை பொது பார்வையில் நோக்கும் விதத்திலேயே தெரிகிறது. சில இடங்களில் உங்களுக்கு கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகளை நீங்களே திருப்பி கேட்கிறீர்கள். இருப்பினும் நீங்கள் இவ்வளவு ஆர்வமுடன் பெரியார் பற்றிய விவாதங்களையும், கடவுள் மறுப்பு பற்றி விவாதிங்கள் செய்து அதுவும் நேர்மையாக பகுத்தறிவுடன் ஆராய்வது வரவேற்கத்தக்கன. ஆனால் நீங்கள் முன் வைக்கும் வாதங்களை பார்த்தால் ஏதோ மாடர்ன் சாமியார் அதாங்க இந்த ஈஷா, யோகி அப்படி இப்படின்னு பலபேர் மாடனா தன்னை இந்துன்னு சொல்ல மாட்டாங்க. கடவுள் இருக்குன்னும் சொல்லமாட்டாங்க. இல்லைனு சொல்லமாட்டாங்க. அவரோட சிஷ்யர் மாதிர் தெரியுது. இவர்களால் தான் நீங்கள் கடவுள் ஒன்று உள்ளதா? இல்லையா என்னும் ஊசலாட்டத்தில் இருக்கிறீர்கள். ஆனால் ஒரு விடயம் தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு இம்மாதிரி கருத்தை பரப்பும் சாமியார்களும் உங்களை போன்று இதே கருத்தில்தான் உள்ளனரா? அல்லது அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா? நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவாளர் என்பதற்கு மிக சரியான விளக்கம் கொடுத்தியிருந்தீர்கள். அந்த பகுத்தறிவை கொண்டு தெரிந்துகொள்ளுங்கள். கடவுள் இருக்காரா என்று கேட்கும் உங்களை எங்கே கொண்டு போய் விடுகிறார்கள். நாங்கள் உறுதியார் சொல்கிறோம் உங்களை கடைசியில காவியில் தான் கொண்டுபோய் விடுவார்கள். அதற்கு தத்துவ விளக்கம் கொடுத்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

    //கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!! ஆனால் எதுவானாலும் அதை ஆராயாம‌ல், உண‌ராம‌ல், குருட்டுத் த‌ன‌மாக‌ ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியுமா?//

    கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று மட்டும் பொழுதுதோறும் விவாதிப்பதே வீண். பெரியார் கடவுள் இல்லை என்று தீவிர பிரசாரத்தை எதனால் மேற்கொண்டார். அவர் என்ன விஞ்ஞானியா? உங்களை போல் உயிர் என்றால் என்ன? நோய் எதனால் ஏற்படுகிறது என்று ஆராய்ந்தா கடவுள் இல்லையென்று சொன்னார்? கடவுள் இல்லையென்று கூறுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஒரு சமூகத்திற்கான தீர்வை நோக்குகிறவன், சமூகத்தின் பிரச்சனைகளை காணவேண்டும். புறவயத்திலிருந்தே யோசிக்க வேண்டும். பெரியாரும் அவ்வாறே யோசித்தார்.

    உலகெங்கிலும் இல்லாத சாதி இந்தியாவில் இருப்பதற்கு மூலகாரணம், உலகெங்கிலும் இல்லாத இந்து மதம் இந்தியாவில் இருப்பதே.

    இந்து மதத்தை ஒழிக்க கடவுள் ஒழிய வேண்டும். இது தான் பெரியாரின் சூத்திரம்.

    //என‌வே நான் ந‌ம்முடைய ஆத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள், நாத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள் இரு த‌ரப்பாரையும் கேட்டுக் கொள்வ‌து என்ன‌ வென்றால் நாம் அனைவ‌ரும் உண்மையான‌ ஆன்மீக‌ ஆராய்சச்சியில் ஈடுப‌டுவோம்! //

    இதை பலபேர் ஆராய்ந்துள்ளார்கள். ஆராய்ச்சியில் ஈடுபட்டும் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு வேண்டுமென்றால் பிக் பேங் ஆய்வுக்கு சென்று உங்கள் அறிவுக்கான தேடலில் ஈடுபடுங்கள். அதற்குள் இங்கே 40பேர் சாதி கொடுமைக்களுக்கு 40 பெண்கள் வன்புணர்ச்சி கொடுமைகளுக்கும் ஆளாகியிருப்பார்கள்.

    //இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்//

    சரி ஏதோ ஒன்றை ஏற்றுக்கொண்டாகிவிட்டது. அதற்கடுத்து என்ன செய்வது? இங்கே உழைக்கும் உழைப்பிற்கு ஊதியம் சரியாக கிடைக்கவில்லையே அதற்கென்ன தீர்வு?
    படித்த இளைஞனுக்கு வேளையில்லையே அதற்கென்ன தீர்வு? விலைவாசி உயர்வுக்கு என்ன தீர்வு?
    IT கம்பெனியில் ஆயிரம் தொழிலாளிகள் நீக்கப்பட்டனரே அதற்கென்ன தீர்வு?
    கடந்த மூன்று மாதங்களில் 60 மேற்பட்ட கூலி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்களே அதற்கென்ன தீர்வு? மகாராஷ்டிராவில் ஜூன் 2008 முதல் ஜனவரி 2009 வரை 600 மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள் ஊட்டசத்து குறைவினாலும், பட்டினியாலும் சாக நேர்ந்ததே இதற்கென்ன தீர்வு?

    இவைகளுக்கு பிறகும் நீங்கள் கடவுள் இருக்கிறா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய போகிறீரா?

    //Was it help ful in acheiving casteless soceity in Tamilnadu or more specifically for Dhaliths? //

    இந்த கேள்வியெல்லாம் பார்ப்பனர்களாலும் பார்ப்பன கைகூலிகளாலும் பெரியாரை தலித் மக்களுக்கு எதிராக திருப்பிவிட எழுப்பப்பட்ட கேள்விகள். நீங்களும் அதையே தான் கேட்கிறீர்கள். இருப்பினும் உங்களை பார்ப்பான் என்றோ, பார்ப்பன கைகூலி, அடிவருடி என்றோ ஏச போவதில்லை. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் மதிமாறனின் கவிதையிலேயே பதில் உள்ளது. பனை ஏறும் தொழிலாளி, பிணம் எரித்துக் கொண்டிருப்பவர் இவர்களெல்லாம் யார்?

    தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராய் சாதி ஒடுக்குமுறைகளை ஏவும் முத்துராமலிங்கம் மிகவும் கொடுமையானவர். அவருக்கு தூக்குதண்டனை கொடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பியவர் பெரியார். தன் சொந்த சொந்த சமூகத்தின் ஆதிக்க சாதிவெறியை கண்டித்து தினகரன் எழுதிய முதுகுளத்தூர் கலவரம் புத்தகம் வாய்ப்பிருந்தால் படித்து பாருங்கள். அதில் தமிழ்நாட்டில் சாதி கலவரத்தின் போது ஒடுக்கப்பட்ட மக்களுக்காய் ஆதரவாய் ஆறுதலாய் இருந்தது யாரென்று தெரியும். அப்புத்தகத்தை எழுதியதற்காக அவர் கொலையும் செய்யப்பட்டார்.

    //WHAT WAS THE EFFECT OF PERIYAARS WORK IN TAMILNADU, AND HOW IT TRANSFORMED TAMILNADU?//

    குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் போல் மத கலவரம் இங்கே இல்லாததற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

    பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ்,சேனா இயக்கங்கள் பெருமளவில் இங்கே இல்லாததற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

    வடமாநிலங்களிலும் தென் மாநிலங்களும், இன்றும் தன் பெயருக்கு பின்னால் சாதியை “Surname” என்று போட்டுகொள்ளும் பழக்கம் உள்ள போது இங்கு மட்டும் அப்பழக்கம் இல்லையே? இதற்கு காரணம் யார் என்று நினைக்கிறீர்கள்?

    பெரியாரை படியுங்கள்! பிறகு விவாதியுங்கள்!

  27. //செயல் சக்கரத்தை உருட்ட உங்கள் தோள்களைக் குடுத்து உதவுங்கள்//

    கண்டிப்பாய் உதவுவோம். நீங்களே கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்னும் மிக பெரிய ஆராய்சியை மேற்கொள்கிறீர்கள்? பிறகு எப்படி சக்கரத்தை சுற்றுவது? குழப்பதுடனா?

    தத்துவம் இல்லாத நடைமுறை வீண். அது குருட்டு பாதை போன்றது. உங்கள் திட்டம் என்ன என்பதை தெளிவு செய்துகொள்ளுங்கள்.

    செயல் திட்டத்துடன் உங்கள் சக்கரத்தை சுற்றி விடுங்கள். நன்றாய் சுற்றும். செயல் திட்டம் இல்லாத செயல் அச்சாணியில்லாத சக்கரம் போல் உப்யோகம் இல்லாமல் போய்விடும்.

  28. வணக்கம்,தோழர் கட்டுரை மிக அருமை.

  29. சகோதரர் வேந்தன் அவர்களே,

    கடவுள் பற்றிய ஆராய்ச்சிக்கு மட்டுமே நான் முக்கியத்துவம் கொடுப்பதாக நீங்கள் எண்ணக் கூடாது.

    நான் எல்லா வேலைகளையும் விட்டு விட்டு “கடவுள் இருக்கிறாரா, இல்லையா” என்று கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியை செய்யச் சொல்லவில்லை. அது பகுத்தறிவில் ஒரு பகுதி, முக்கிய பகுதி.

    கடவுளின் பெயரால் வெறுப்புக் கருத்துக்களையும், காட்டு மிராண்டிக் கருத்துக்களையும் பரப்புகிற சூழ்நிலையிலே,

    கடவுள் இருக்கிறார் என்று கூறிக் கொண்டு சிலர் கோடிகளை, பில்லியன்களை குவித்துக் கொண்டும்,

    கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டு சிலர் கோடிகளை, பில்லியன்களை குவித்துக் கொண்டும் இருக்கிற கால கட்டத்திலே

    உண்மையான ஆரய்ச்சி ஒரு புறம் நடப்பதில் தவறில்லை.

    அந்த ஆராய்ச்சியின் விளைவுகள் மக்களிடையே அமைதியை ஏற்ப்படுத்துமானல், ஆக்க பூர்வமான சிந்தனைகளை வளர்க்குமானால், அதில் தவறில்லையே.

    புத்தனின் சிந்தனை அசோகரின் வாழ்க்கையை மாற்றவில்லையா?

    அதனால் சாலைகளைக் கட்டுவித்தார், சாலையின் இரு மருங்கிலும் நிழல் தரும் மரங்களை நட்டு வைத்தார், குளங்களை வெட்டுவித்தர் என்று நாம் படித்தோமே? இதனால் மக்கள் பலன் அடையவில்லையா? குளங்களை வெட்டியதால் விவசாயம் பலன் பெற்று வேலை வாய்ப்பு பெருகவில்லையா?

    விவேகானந்தரின் கருத்துக்கள் பலருக்கு நல் எண்ணத்தையும் சமத்துவப் போக்கையும், புத்துணர்ச்சியையும் வழங்கவில்லையா?

    நானும் வாழ்க்கையில் கடினமான நேரங்களை சந்தித்தவன் தான். மக்கள் பிரச்சினைக்கு உடனடி நிவாரணம் என்றால் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற திட்டங்கள் உள்ளன. கஞ்சி காய்ச்சி குடிக்கலாம். (இந்த திட்டங்களை நான் குறை கூறுவதாக எண்ணாதீர்கள்!)

    ஆனால் மக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் திட்டங்கள், தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ளும் திட்டங்களைத் தீட்ட சுயநலம் கலக்காத பகுத்தறிவு சிந்தனை தேவை.

    கடவுள் ஆராய்ச்சியோ, கப்பல் ஆராய்ச்சியோ அது தனக்கு பலன் அளிப்பதாக, உதவி செய்வதாக இருந்தால்தான் மனிதன் அதற்கு மரியாதை கொடுப்பான், அந்த செயலில் ஈடுபடுவான். தனக்கு உபயோகம் இல்லாத எதையும் மனிதன் செய்ய மாட்டான்.

    நீராவி புகை வண்டி மக்கள் வாழ்க்கையையே மாற்றியது. ஆனால் இனி யாரும் நீராவி புகை வண்டியை உபயோகிக்கப் போவது இல்லை.

  30. சகோதரர் வேந்தன் அவர்களே,

    //தத்துவம் இல்லாத நடைமுறை வீண். அது குருட்டு பாதை போன்றது. உங்கள் திட்டம் என்ன என்பதை தெளிவு செய்துகொள்ளுங்கள்.

    செயல் திட்டத்துடன் உங்கள் சக்கரத்தை சுற்றி விடுங்கள். நன்றாய் சுற்றும். செயல் திட்டம் இல்லாத செயல் அச்சாணியில்லாத சக்கரம் போல் உப்யோகம் இல்லாமல் போய்விடும்.//

    நன்றி.

    திட்டம் என்ன என்பதைக் கூறித்தான் அழைத்து இருக்கிறேன்.

    //பீடிக்கு நெருப்புக் கேட்பதில் ஆரம்பித்த தகராறு மிக விரைவாக மிக எளிதில் கொலையில் முடிகிறது. அந்த அளவுக்கு கட்டுப்பாடு இல்லாத, கோவத்தை அடக்க முடியாத சமூகமாக இருக்கிறோம்.

    இப்போது பிரச்சினையின் காரணத்தையாவது புரிந்து இருக்கிறோம்.

    தீர்வு, மக்களின் மனதில் அன்பை, நாகரீகத்தை உருவாக்கி அவர்களை கனவான் (Gentle man) ஆக மாற்றுவதுதான். இது ஒரு நாளிலோ, ஒரு வருடத்திலோ முடிந்து விடாது. //

    //உங்களுக்கு நான் கூறிய கருத்துக்கள் மேல் நம்பிக்கை இருந்தால் உங்களால் முயன்ற அளவு, வெறுப்புக் கருத்துக்களை குறைக்க, அன்பை வளர்க்க, உதவி செய்யுங்கள்.//

    அன்பும், பிறரை மதிக்கும் பழக்கமும் , நிதானமும், கட்டுப்பாடும், நாகரீகமும் இல்லாத மக்கள் தொகுப்பை வைத்து சாதிகள் இல்லாத சமத்துவம் சமுதாயம் உருவாக்க முடியாது.

    வெறுப்புக் கருத்துக்களை வைத்து அல்ல, அன்பை வைத்துதான் சமத்துவ சமுதாயம் உருவாக்க முடியும்.
    எனவே நம்முடைய திட்டம் மக்களை செம்மைப் படுத்துவது.

    சாலையின் குறுக்கே கட்டப்பட்ட சாதி வெறி சுவரை உடைப்பது அரசின் கையில் உள்ளது.

    மக்களின் மனங்களில் உள்ள சாதி வெறி சுவரை உடைப்பதே நம் பணி!
    மக்கள் மனதில் உள்ள சுவர் உடையாத வரை செங்கல் சுவர்கள் உடைந்தும் நிலையான பலன் இருக்காது.

    அரசாங்கத்தின் கையிலே சட்டமும், ஆட்சியும், அதிகாரிகளும், புல்டோசரும் உள்ளன.

    நம்மிடம் அன்பும், நாகரீகமும் தான் உள்ளன. நீங்களும் நானும் தான் இருக்கிறோம்.

    அரசாங்கத்தை நாம் குறை கூறவில்லை. நாம் நம் பங்கை செய்கிறோம்.

    ஆனால் சாதிகளை அழிக்க இங்கெ யாருக்குமே மனம் இல்லை. எல்லோரும் சாதியை தங்களுக்குப் பாதுகாப்பாக கருதுகின்றனர்.

    நாளைக்கு நமக்கு ஏதாவது ஒன்று என்றால் சாதி சனம் வரும் என்று எண்ணுகின்றனர். சட்டம் , ஒழுங்கு, நீதி இவை நம்மைக் காக்கும் என்று எண்ணவில்லை. சட்டத்துக்கும் நீதிக்கும் வலிமை இல்லாத சூழல் உள்ளது.

    தமிழ் நாட்டிலே யாரும் தான் பெயருக்குப் பின்னால் தங்கள் சாதியைப் போடவில்லை. ஆனால் தக்க நேரத்திலே அதை வெளிப்படுத்தி, தன்னுடைய பெயரோடு சேர்த்து போஸ்டர் அடிப்பார்கள். நசுக்கப் பட்ட பிரிவை சேர்ந்தவர்களும் இதற்க்கு விதி விலக்கல்ல.

    தமிழ் நாட்டிலே எந்த அரசியல் வாதியும் சாதி அழிவதை அனுமதிக்கப் போவது இல்லை.

    உங்களுக்கும் எனக்கும் வேறு வேலை உண்டு. இங்கெ எழுதுகிறோம். எழுதுவதோடு செய்யவும் செய்கிறோம். சாதி அமைப்பு அழிவதால், உங்களுக்கோ எனக்கோ பைசா நஷ்டமில்லை.

    ஆனால் அரசியலின் ஆணி வேறாக சாதி மத வேறுபாடு ஆக்கப் பட்டு விட்டது. தேர்தலில் தோற்றால் பல கோடிகள் நஷ்டம். வென்றால் பலப் பல கோடிகள் லாபம்!

    எனவே நமக்கு முன்னே உள்ள பணி எவ்வளவு சிக்கலானது என்று எண்ணுங்கள். ஆனால் நம்பிக்கையை விடாதீர்கள்.

  31. தோழா பாரதியின் உண்மை முகத்தை போல ஜீவாவின் உண்மை முகத்தை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்களேன்.

  32. நான் பெரியாரிடமிருந்து பல விசயங்களைக் கற்றவன் என்ற வகையிலே , அவருக்கு ஒரு soft corner வைத்திருக்கிறேன்.

    அதே நேரம் பெரியாரை விமர்சிக்கக் கூடாது என்பது இல்லை. பகுத்தறிவு என்பதே விமரிசனமும் உள்ளதுதான். அது ஆசிரியராக இருந்தாலும் சரி.

    //நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் மதிமாறனின் கவிதையிலேயே பதில் உள்ளது. பனை ஏறும் தொழிலாளி, பிணம் எரித்துக் கொண்டிருப்பவர் இவர்களெல்லாம் யார்?//

    //அப்பன் இன்னும்

    பிணம் எரித்துக் கொண்டிருக்க

    இங்கே டெலிபோன் டிபார்மென்டில்

    சுபமங்களாவை விரித்தபடி

    சுஜாதா

    சுந்தர ராமசாமிக்கு

    இணையாக

    இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்

    அவருடைய மகன்//

    ஆந்திராவிலே , கர்நாடகாவிலே , மத்தியப் பிரதேசத்திலே பிணம் எரித்தவர் மகன் அதிகாரி ஆகவில்லையா?

    அவையெல்லாமும் பெரியாரினால் தானா?

    அங்கே பெரியார் இல்லையே?

    இந்திய நாட்டிலே நசுக்கப்பட்ட ஒதுக்கப் பட்ட மக்கள் முன்னேற திட்டங்கள் தீட்டப் பட்டு , இந்தியா முழுவதிலும் படிப் படியாக செயல் திட்டங்கள் அமுல் செய்யப் பட்டன.

    இந்த திட்டங்களை அப்படியே பெரியார் பேருக்கு பட்டா போட்டு, அதை தங்களின் பெயருக்கு பட்டாவாக மாற்றி “நமக்கு நாமே கோடீஸ்வரன்” திட்டமாக்கி விட்டார்கள்.

    வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    திராவிட‌ர் க‌ழ‌க‌ம் ஆர‌ம்பித்த‌து முத‌ல் இன்று வ‌ரை ஒரு த‌லித் கூட‌ க‌ழ‌கத்தின் த‌லைவ‌ராக‌வில்லையே?

    பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பை தன்னுடைய வகுப்பு வாரி பிரதிநித்துவக் கொள்கையின் படி, தலித் இனத்தை சேர்ந்த ஒருவரைடம் சில வருடங்களாவது, சில மாதங்களாவது, சில வாரங்களாவது, ஒரு நாளாவது ஒப்படைத்தாரா?

    அப்படி ஒப்படைத்திருந்தால் அதை முன் உதாரணமாக்கி முதல்வர் பொறுப்புக்கும் தலித் இனத்தை சேர்ந்த ஒருவரை சில காலமாவது அமர்த்த வேண்டிய தார்மீக பொறுப்பு, அவர் வழி வந்த திராவிட தலைவர்களுக்கும் இருக்கும் அல்லவா?

    பார்ப்பனர்கள் 20௦ விழுக்காடு உள்ள உத்தர பிரதேசத்திலே, அவர்களின் ஆதரவோடே தலித் இனத்தை சேர்ந்தவர் முதல்வர் ஆகி விட்டார்!

    கேராளாவைச் சேர்ந்த தாழ்த்தப் பட்ட பிரிவை சேர்ந்தவர் நாட்டின் தலைமை நீதிபதி ஆகி விட்டார்.

    பகுத்தறிவுப் பகலவன் சுடர் விட்டு பிரகாசித்த தமிழ் நாட்டிலே நிலைமை என்ன?

    தலித் இன மக்களுக்கு , தலித் மக்களின் நன்மைக்காக நேர்மையாக , சுயநலமின்றி பாடுபடும் தலித் தலைமை தமிழ் நாட்டில் உள்ளதா?

    வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    ஒரு த‌லித் ஒருவ‌ரை, ஒரே ஒரு வ‌ருட‌மாவ‌து முத‌ல்வ‌ர் ப‌த‌வியில் அம‌ர‌ வைக்க‌ த‌மிழின‌த் த‌லைவ‌ர் த‌யாரா? செய்வாரா?

    இதைக் கேட்டால் என்ன தவறு? தெய்வக் குத்தமா? பகுத்தறிவுக் குத்தமா?

    அப்ப‌ கொள்கை எல்லாம் பிற‌ருக்கு அறிவுரை கூற‌ ம‌ட்டும் தானா?

    கொள்கையை நாமே பின்ப‌ற்ற வேண்டிய‌து அவ‌சிய‌ம் இல்லையா?

    60 வ‌ருட‌த்துக்கு மேலான‌ க‌ழ‌க‌ வ‌ர‌லாற்றில் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அதை தாங்கிப் பிடிக்க‌வில்லையா?அவ‌ர்க‌ளுக்கு வ‌குப்பு வாரி பிர‌தி நிதித்துவ‌ம் த‌ர‌ப் ப‌ட்ட‌தா?

    தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை த‌ல‌மைப் பொறுப்புக்கு கொண்டு வ‌ர‌ நேர‌ம், கால‌ம், நாள், ந‌ட்ச்ச‌த்திர‌ம் பார்க்க‌ வேண்டுமா?

    த‌லித் ஒருவ‌ரின் கையில் திராவிட‌ர் க‌ழ‌க‌த்தின் அனைத்து பொறூப்புக்க‌ளையும் ஒப்ப‌டைத்து விட்டு ஓய்வு எடுக்க‌ மான‌மிகு வீரமணியார் த‌யாரா?

    பார்ப்பன எதிர்ப்பு அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்து, அந்த பார்ப்பன எதிர்ப்பு தேரின் அழுத்தத்திலே , அறிந்தோ அறியாமலோ தலித் இனத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் முன்னுக்கு வர முடியாமல் அமுக்கப் பட்டு விட்டனர் என்கிற உண்மையை நீங்கள்
    புரிந்து கொள்ளாமல், ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் சிந்த்தித்தால் உங்களுக்கப் புரியும்.

    பந்தி பரிமாறுபவன் ஒருவன், பாயசம் சாப்பிடுபவன் ஒருவன் என்ற நிலைதானே?

    “இந்திய விடுதலை என்பது தலித்துகளுக்கு எஜமான மாற்றமேயன்றி வேறென்ன” என்று அம்பேத்கர் கூறியதாகப் படித்திருக்கிறோம்.

    “என்னைத் தொடாதே , என்னைத் தொட்டால் தீட்டு” என்ற அநியாயமான இழிவை செய்த பார்ப்பனர்களின் கையிலே இருந்து அதிகாரத்தை மாற்றித்,

    தலையை வெட்டித் தெருவில் உருட்டும் கொடுமையை, வாயிலே பீ திணிக்கும் கொடுமையை செய்பவர்களின் கையிலே அதிகாரம் மாறும் நிலைமையைக் கொண்டு வந்துதானே பகுத்தறிவுப் பகலவனால் உண்டான விளைவு?

    இன்றைக்கு தமிழ் நாட்டிலே நசுக்கப் பட்ட மக்களில் சிந்திக்கக் கூடியவர்கள் செய்யக் கூடியது என்ன? பிலாகுகளை (blogs) அமைப்பது, பத்திரிக்கைகளை உருவாக்குவது, அதிலே எழுதுவது, தன்னுடைய சிந்தனைக்கு அங்கீகாரம் கிடத்ததாகத் திருப்தி அடைவது- இதுதானே? கோட்டையிலே கோலோச்ச முடியுமா/ கோட்டையின் அதிகாரக் கதவுகளின் அருகேயாவது செல்ல முடியுமா?

    சாதிகளுக்கு இடையில் பிரிவினையை உருவாக்கி குளிர் காய்வது எனக்கு ஒருக்காலும் ஒப்பில்லை. ஆனால் உண்மைகளை பல கோணத்தில் இருந்தும் எடுத்து வைக்கிறோம். உண்மையை யாராலும் மறைக்க முடியாது.

    என் வழி இணைப்பதுதான் பிரிப்பது இல்லை என்று தெளிவாகக் கூறியிருக்கிறேன்.

    நசுக்கப் பட்ட, பிற்படுத்தப் பட்ட, முற்படுத்தப் பட்ட என்ற எல்லா பிரிவு மக்களும், ஒன்றாக , கனவானாக, நாகரிக மனிதராக, அன்பின் அடிப்படையில் நல்லெண்ணத்தில், எல்லாப் “பட்ட”ங்களும் நீங்கி ஒரே பொதுப் பிரிவில் இணைய வேண்டும் என்பதுதான் என் கருத்து. (இதை சொல்வதினால் இட ஒதுக்கீடு நீக்கப் பட வேண்டும் என்ற கருத்துக்காக அல்ல. இட ஒதுக்கீடு தேவைப் படும் வரைக்கும், அவசியம் உள்ள வரைக்கும், யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அமுல் படுத்தப் படலாம்.
    நான் பொதுவாக இணைவது என்பது மன இணைப்பை, சமூக இணைப்பைக் கூறினேன்.)

    எனவே சாதிகளுக்கு இடையில் பிரிவினையை உருவாக்கி குளிர் காய்வது எனக்கு ஒருக்காலும் ஒப்பில்லை. ஆனால் உண்மைகளை பல கோணத்தில் இருந்தும் எடுத்து வைக்கிறோம். உண்மையை யாராலும் மறைக்க முடியாது.

  33. சகோதரர் வேந்தன் அவர்களே,

    //நீங்கள் புதுசு கண்ணா புதுசு கண்ணா மாதிரியே தோன்றுகிறது. ஏனெனில் சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி பிரச்சனையை பொது பார்வையில் நோக்கும் விதத்திலேயே தெரிகிறது.//

    அம்பேத்கர் என்றவுடன் முதலில் எனக்கு நினைவு வருவது என்னுடைய மாணவப் பருவம்தான்! சென்னை கன்னிமரா நூலகத்தில், சில நாட்கள், மாலை நேரம் படித்துக் கொண்டிருக்கும் போது, நூலகர் “நேரம் ஆகி விட்டது” என்று நினைவு படுத்துவார். ‘ஒரு நாளைக்காவது, அம்பத்கரைப் போல படித்தோம்’ என்று மன நிறைவுடன் செல்வேன்.

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனும், முன் மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டிய சிறந்த அறிங்கர் அம்பேத்கர் என்று நான் மனப் பூர்வமாகச் சொல்வேன்.

    அம்பேத்காரின் வாழ்க்கையின் லட்சியம், இந்தியாவில் உள்ள தலித் மக்களின் விடுதலை, முன்னேற்றம் அதோடு அவர் எல்லா இந்தியர்களையும் நேசித்தவர், இந்தியாவை நேசித்தவர்.

    அப்படிப்பட்ட அறிங்கர் அம்பேத்கர், இன்றைக்கு தமிழ் நாட்டில் சாதி வெறியர்கள் கையில் சிக்கிய பதுமை ஆகி விட்டார்.

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனும், முன் மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டிய சிறந்த அறிங்கர் அம்பேத்கர்.

    ஆனால் அவர் பெயரை ஒரு சில மாணவர்கள் இருட்டடிப்பு செய்து விட்டனர். அதற்குக் காரணம் சாதிக் காழ்ப்புணர்ச்சி என்பது சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அதை எதிர் கொள்ள வேண்டிய முறை என்ன?

    வேண்டுமென்றே அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்ததே ஒரு வன் கொடுமை குற்றமாக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கலாம் அல்லவா?

    ஆனால் அவர்கள் நடந்து கொண்ட விதம் அவர்கள சட்டம் படிக்கும் மாணவர்கள் போலவா இருந்தது?

    இது அம்பேத்கர் வழியா? இதை அம்பேத்கார் ரசித்திருப்பாரா?

    நெடுங்காலமாக நசுக்கப் பட்ட மக்கள் முன்னுக்கு வரவது அவசியம், வரவேற்கிறோம்.

    ஆனால் நசுக்கப் பட்டவர் முன்னேற்றம் என்பது, அவர்களை இன்னொரு அரிவாள் தூக்கும் சாதியாக, பிறர் வாயில் பீ திணிக்கும் சாதியாக மாற்றுவதா?
    அல்லது
    அம்பேத்கரைப் போல கண்ணியமும் , நேர்மையும், திறமையும் அதே நேரம் அஞ்சாமையும் உடைய கனவானாக மாற்றுவதா?

    நிதானத்தைக் கைவிட்டு, வன்முறையைக் கையில் எடுத்த மாணவர்களின் எதிர்காலம் என்ன?

    சாதி ஒழிப்பு என்ற போர்வையில் சாதி வெறியை தூண்டி, வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை வ‌ளர்த்து க‌ற்கால‌ நிலைக்கு கொண்டு செல்கிறார்க‌ள்.

    அதுதான் இப்படிப் பாப்பாப் ப‌ட்டியிலும் , கீரிப் ப‌ட்டியிலும், ச‌ட்ட‌க் க‌ல்லூரியிலும்,திண்ணிய‌த்திலும் வெடிக்கிற‌து.

    வேண்டுமென்றே அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்ததே ஒரு வன் கொடுமை குற்றமாக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கலாம் அல்லவா?

    அவர்களுக்கு உண்மையான பகுத்தறிவு அளிக்கப் பட்டிருந்தால் அவர்கள் அதைத்தானே செய்திருப்பார்கள். ஆனால் பகுத்தறிவு என்ற பெயரில் அவர்களுக்கு வழங்கப் பட்டது கற்கால கலாச்சாரம்.

    அந்த மாணவர்களின் எதிர்காலம் என்ன?

  34. //ஈஷா, யோகி அப்படி இப்படின்னு பலபேர் மாடனா தன்னை இந்துன்னு சொல்ல மாட்டாங்க. கடவுள் இருக்குன்னும் சொல்லமாட்டாங்க. இல்லைனு சொல்லமாட்டாங்க. அவரோட சிஷ்யர் மாதிர் தெரியுது. இவர்களால் தான் நீங்கள் கடவுள் ஒன்று உள்ளதா? இல்லையா என்னும் ஊசலாட்டத்தில் இருக்கிறீர்கள். ஆனால் ஒரு விடயம் தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு இம்மாதிரி கருத்தை பரப்பும் சாமியார்களும் உங்களை போன்று இதே கருத்தில்தான் உள்ளனரா? அல்லது அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா? நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவாளர் என்பதற்கு மிக சரியான விளக்கம் கொடுத்தியிருந்தீர்கள். அந்த பகுத்தறிவை கொண்டு தெரிந்துகொள்ளுங்கள். கடவுள் இருக்காரா என்று கேட்கும் உங்களை எங்கே கொண்டு போய் விடுகிறார்கள். நாங்கள் உறுதியார் சொல்கிறோம் உங்களை கடைசியில காவியில் தான் கொண்டுபோய் விடுவார்கள். அதற்கு தத்துவ விளக்கம் கொடுத்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை//

    நான் பாடம் படித்தது இவர்களிடம் இருந்து இருந்து –

    வள்ளுவர், கிருட்டினர், புத்தர், சாக்ரடீஸ், இயேசு, பட்டினத்தார், அப்பர், ஆதி சங்கரர், முஹமது நபி,தியாகராசர், விவேகானந்தர், மார்க்ஸ், பாரதி, அம்பேத்கர், காந்தி, பெரியார்.

    இனிமேலும் சிலரது கருத்துக்கள் எனக்கு படிப்பினை வூட்டுபனவாக இருக்கலாம்.

    ஆனால் ஈஷா, யோகி ….போன்றவர் யாரும் இல்லை.

    //கடைசியில காவியில் தான் கொண்டுபோய் விடுவார்கள்//

    நாம் அறிவை பயன்படுத்தும் வரையில் , உண்மை தான் நம்முடைய ஒரே குறிக்கோளாக உள்ளவரையில், நாம் போகும் இடம் , சேரும் இடம் உண்மை யாக‌த் தான் இருக்கும் – காவியாக‌வோ, க‌ருப்ப‌க‌வோ, சிவ‌ப்பாக‌வோ இருக்காது!~

  35. ////ஆந்திராவிலே , கர்நாடகாவிலே , மத்தியப் பிரதேசத்திலே பிணம் எரித்தவர் மகன் அதிகாரி ஆகவில்லையா?

    அவையெல்லாமும் பெரியாரினால் தானா?

    அங்கே பெரியார் இல்லையே?////

    திருச்சிக்காரன் என்கிற பெயரில் எழுதுகிற இன்னொரு திருச்சி, அதற்கான விதையை நட்டேதே தமிழ்நாடுதான். அம்பேத்கரும்-பெரியாரும் இல்லை என்றால் இங்கு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் யாரும் நல்ல நிலைக்கு வந்துவிட முடியாது.

    நீங்கள், பார்ப்பான் புத்தியில் இருக்கிற இந்து வெறிகொண்ட சூத்திரன்போல் தெரிகிறது. தலித் மக்கள் மீது வெறுப்பு,பெரியார் இயக்கதின் மீது வெறுப்பு இவை இரண்டும் கலந்து நன்றாக தந்திரமாக எழுதுகிறீர்கள்.

  36. ////ஆந்திராவிலே , கர்நாடகாவிலே , மத்தியப் பிரதேசத்திலே பிணம் எரித்தவர் மகன் அதிகாரி ஆகவில்லையா?

    அவையெல்லாமும் பெரியாரினால் தானா?

    அங்கே பெரியார் இல்லையே?////

    திருச்சிக்காரன் என்கிற பெயரில் எழுதுகிற இன்னொரு திருச்சி, அதற்கான விதையை நட்டேதே தமிழ்நாடுதான். அம்பேத்கரும்-பெரியாரும் இல்லை என்றால் இங்கு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் யாரும் நல்ல நிலைக்கு வந்துவிட முடியாது.

    நீங்கள், பார்ப்பான் புத்தியில் இருக்கிற இந்து வெறிகொண்ட சூத்திரன்போல் தெரிகிறது. தலித் மக்கள் மீது வெறுப்பு,பெரியார் இயக்கதின் மீது வெறுப்பு இவை இரண்டும் கலந்து நன்றாக தந்திரமாக எழுதுகிறீர்கள்.

    நம்முடைய பதில்:
    சகோதரர் கலை அவர்களே,

    கீழே கொடுக்கப் பட்டுள்ளதைப் படியுங்கள்.

    //1882 – Hunter Commission appointed. Mahatma Jyotirao PhuleMahatma Jyotirao Phule
    Jotiba Govindrao Phule , also known as Mahatma Jotiba Phule was an activist, thinker, social reformer and revolutionary from Maharashtra in the nineteenth century….
    made a demand of free and compulsory education for all along with proportionate reservation/representation in government jobs.

    1891-The demand for reservation of government jobs was made as early as 1891 with an agitation in the princely State of Travancore against the recruitment of non-natives into public service overlooking qualified native people.

    1901-Reservations were introduced in Maharashtra in the Princely State of Kolhapur by Shahu MaharajShahu Maharaj
    Shahu IV was the first Maharaja of the Indian princely state of Kolhapur between 1884 and 1922….

    . Reservations in the princely states of Baroda and Mysore were already in force.

    1908-Reservations were introduced in favour of a number of castes and communities that had little share in the administration by the British.

    1909- Provisions were made in the Government of India Act

    1909Government of India Act 1909

    Indian Councils Act of 1909, commonly known as the Morley-Minto Reforms, began when John Morley, the Liberal Secretary of State for India, and the Conservative Governor-General of India, Gilbert Elliot-Murray-Kynynmound, 4th Earl of Minto, believed that cracking down on terrorism in Bengal was necessary but not sufficient for restoring…

    1919- Montagu-Chelmsford ReformsMontagu-Chelmsford Reforms
    The Montagu-Chelmsford Reforms were reforms introduced by the Ayush Kumar to introduce self-governing institutions gradually to India. The reforms take their name from Edwin Samuel Montagu, the Secretary of State for India during the latter parts of World War I and Frederic John Napier Thesiger, 3rd Baron Chelmsford, Viceroy of India between…
    introduced.

    1919 – Provisions were made in the Government of India Act

    1919Government of India Act 1919
    The Government of India Act 1919 was an Act of Parliament of the Parliament of the United Kingdom. It was passed to expand participation of the natives in the government of British Indian Empire….

    1921-Madras PresidencyMadras Presidency
    Madras Presidency , also known as Madras Province and known officially as Presidency of Fort St. George, was a province of British India….
    introduces Communal G O in which reservation of 44 per cent for non-Brahmins, 16 per cent for Brahmins, 16 per cent for Muslims, 16 per cent for Anglo-Indians/ Christians and eight per cent for Scheduled Castes.

    1935-Indian national congressIndian National Congress
    Indian National Congress-I is a major political party in India. Founded in 1885 by Dadabhai Naoroji, Dinshaw Edulji Wacha, Womesh Chandra Bonerjee, Surendranath Banerjee, Monomohun Ghose, Allan Octavian Hume, and William Wedderburn, the Indian National Congress became the leader of the Indian Independence Movement, with over 15 million memb…
    passes resolution called Poona PactPoona Pact
    The Poona Pact refers to an agreement between the lower caste Untouchables of India led by B. R. Ambedkar and the upper caste Hindus of India that took place on 24 September 1932 at Yerawada Jail in Pune , India….
    to allocate separate electoral constituencies for depressed classes.

    1935 – Provisions in Government of India Act 1935Government of India Act 1935
    The Government of India Act 1935 was passes during the Interwar period and was the last pre-independence constitution of British Raj. The significant aspects of the act were:…
    .
    1942-B.R.Ambedkar established the All India Depressed Classes federation to support the advancement of the scheduled castes. He also demanded reservations for the Scheduled castes in government services and education.
    1946- 1946 Cabinet Mission to India1946 Cabinet Mission to India
    The United Kingdom Cabinet Mission of 1946 to India aimed to discuss and finalize plans for the transfer of power from the British Raj to Indian leadership, providing India with independence under Dominion status in the Commonwealth of Nations….
    proposes proportionate representation with several other recommendations.
    1947-India obtained Independence. Dr. Ambedkar was appointed chairman of the drafting committee for Indian Constitution. The Indian constitution prohibits discrimination on the grounds only of religionReligion
    A religion is an organized approach to human spirituality which usually encompasses a set of myth, symbols, beliefs and practices, often with a supernatural or transcendence quality, that give meaning to the practitioner’s experiences of life through reference to a higher power or truth….
    , race, casteCaste
    Castes are hereditary systems of wikt:occupation, endogamy, culture, social class, and political power, the assignment of individuals to places in the social hierarchy is determined by social group and culture….
    , sexSex
    In biology, sex is a process of combining and mixing genetics traits, often resulting in the specialization of organisms into male and female types ….
    and place of birth . While providing equality of opportunityEqual opportunity
    Equal opportunity is a term which has differing definitions and there is no consensus as to the precise meaning. Some use it as a descriptive term for an approach intended to provide a certain social environment in which people are not excluded from the activities of society, such as education, employment, or health care, on the basis of immu…
    for all citizens, the constitution contains special clauses “for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and the Scheduled Tribes”. Separate constituencies allocated to Scheduled Castes and TribesScheduled Castes and Tribes
    Scheduled Castes and Scheduled Tribes are Indian population groupings that are explicitly recognized by the Constitution of India, previously called the “depressed classes” by the British India, and otherwise known as untouchable ….
    to ensure their political representationRepresentation (politics)
    In politics, representation describes how political power is alienated from most of the members of a group and vested, for a certain time period, in the hands of a small subset of the members….
    for 10 years.(These were subsequently extended for every 10 years through constitutional amendmentConstitutional amendment
    An amendment is a change to the Constitution of a nation or a state. In jurisdictions with “rigid” or “entrenched” constitutions, amendments require a special procedure different from that used for enacting ordinary laws….
    s).
    1947-1950- Debates of the Constituent Assembly.//

    எனவே தான் மீண்டும் கேட்கிறோம், தெளிவாகக் கேட்கிறோம்,

    //ஆந்திராவிலே , கர்நாடகாவிலே , மத்தியப் பிரதேசத்திலே பிணம் எரித்தவர் மகன் அதிகாரி ஆகவில்லையா?

    அவையெல்லாமும் பெரியாரினால் தானா?

    அங்கே பெரியார் இல்லையே?//

    என்கிற உண்மையை எடுத்து வைக்கிறோம்.

    //அதற்கான விதையை நட்டேதே தமிழ்நாடுதான்//- இதைக் கேட்டால் எல்லோரும் புன்முறுவல் கொள்வார்கள்.

    நானும் பெரியாரிடம் சில விடயங்களைக் கற்றவன் தான். பெரியாரை இகழ வேண்டும் என்பது என்னுடைய நோக்கமோ, விருப்பமோ கிடையாது.

    ஆனால் உண்மை என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.

    அம்பேத்கார் ஆக்க பூர்வமானவர். பெரியார் எதிர்மறை சிந்தனைகளை உடையவர்.

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனும், முன் மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டிய சிறந்த அறிங்கர் அம்பேத்கர் என்று நான் மனப் பூர்வமாகச் சொல்வேன்.

    அப்படிப்பட்ட ஒரு அறிங்கரை, பெரியாருடன் ஒப்பு வைக்க முடியுமா?

    அம்பேத்காரின் வாழ்க்கையின் லட்சியம், இந்தியாவில் உள்ள தலித் மக்களின் விடுதலை, முன்னேற்றம் அதோடு அவர் எல்லா இந்தியர்களையும் நேசித்தவர், இந்தியாவை நேசித்தவர்.

    பெரியாரின் முக்கிய குறிக்கோள் பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனருக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டு தன்னை அரசியல், பொருளாதார, சமூக அரசியலில் உயர்த்திக் கொள்வது இவைதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!

    பெரியாரிடம் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது, புரிந்து கொள்ள வேண்டியது , திருத்திக் கொள்ள வேண்டியது உள்ளது என்றே நான் எழுதி வருகிறேன்.

    ஆனால் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க
    1) அம்பேத்கர் ஆக்க பூர்வமான சிந்தனைகளை உடைய, ஆக்க பூர்வமான மனிதர்.
    பெரியார் வெறும் எதிர் மறைக் கருத்துகளை மட்டுமே சுமந்து இருந்தார்.

    2)அம்பேத்கர் தலித் மக்களின் விடுதலைக்கு போராடியவர்.
    பெரியார் பார்ப்பனர்களை எப்படியாவது கீழிறக்கி விட வேண்டும் என்ற குறிக்கோளையே பிரதானமாக வைத்து இருந்தார்.

    3)அம்பேத்கர் சிறந்த மாணவர், பேரறிங்கர், வெளிநாடுகளில் படித்தவர்.
    ஆனால் பெரியாருக்கு வசதி வாய்ப்பு இருந்தும் கல்வியில் ஈடுபாடு இல்லை.
    (இந்தக் கருத்தை எழுவது அம்பேத்கரின் சிறப்பை சுட்டிக் காட்ட, பெரியாரை குறை கூற அல்ல)

    4) இந்தியா என்னும் மாபெரும் தேசம் இன்றைக்கு உறுதியாக இருக்கிறது என்றால், அதற்க்கு முக்கியக் காரணிகளில் அம்பேத்கர் ஒருவர். அவர் நாடுகளை உருவாக்கும் சக்தி படைத்தவர்.
    ஆனால் பெரியார் “நானும் வ‌ருவேன், ஆட்ட‌த்தை க‌லைப்பேன்” என்ற‌ பாணியிலே இந்தியாவை உடைக்க‌ நினைத்து செய‌ல் ப‌ட்ட‌வ‌ர்.

    5) அம்பேத்க‌ர் காங்கிர‌சை எதிர்த்த‌வ‌ர். ஆனால் அத‌ற்க்காக‌ இந்தியாவையோ, இந்திய‌ ம‌க்க‌ளையோ விட்டுக் கொடுக்க‌வில்லை. பெரியாரும் காங்கிர‌சை எதிர்த்தார். ஆனால் த‌ன் சொந்த‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ எதிர்த்தார்.

    அம்பேத்கர் முக்கியமாக தாழ்த்தப் பட்ட மக்களின் விடுதலை, முன்னேற்றத்திறக்காகவும் , ஒட்டு மொத்த இந்திய மக்களின் நன்மைக்காகவும் பாடுபட்வர்.

    பெரியார் பார்ப்பானர்களை எப்படி கீழிறக்குவது, தனிமைப் படுத்துவது எப்படி, தன்னுடைய கட்சியை தன கட்டுப்பட்டே எப்படி வைத்துக் கொள்வது, தன்னுடைய சொத்துக்களை எப்படி அதிகமாக்குவது என்ற சிந்தனைக்கே அதிக இடம் கொடுத்தவர், தலித்கள் முன்னேற்றம் பற்றிய வகையில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவு.

    பெரியாரை எப்படியாவது அம்பேத்கார் ரேஞ்சுக்கு கொண்டு வர வேண்டும் என்று, என்ன என்னவோ முயற்சி செய்து பார்க்கிறார்கள்!

    ஆனால் அம்பேத்கரோடு பெரியாரை ஒப்பிடுவே முடியாது. அம்பேத்கரின் வழிகளும், நோக்கமும் சிறந்தவை.

  37. இதுபோன்ற கோமாளித்தனங்களை கே.ஆர். அதியமான் என்று ஒருவர் உளறி கொண்டிருப்பார். திருச்சிகாரன் அவராகாத்தான் இருப்பார்.
    பெரியாரை விமர்சிப்பதுபோல், சொல்லி அம்பேத்கரை பார்ப்பன ஆதரவாளராக சித்தரித்து கேவலப்படுத்துகிறார். இந்த அதியமான்.
    இதுபோன்ற நயவஞ்சகமான ஆட்களைதான் அம்பேத்கர் கடுமையாக விமரிசிக்கிறார்.
    காந்தியை அப்படித்தான் விமர்சித்தார்அம்பேத்கர்.
    மதிமாறன் இதுபோன்ற தவறான தவகல்களை தருகிற இந்த திருச்சிக்காரரின் பின்னூட்டத்தை நீக்குங்கள்.

  38. // இந்த அதியமான்.
    இதுபோன்ற நயவஞ்சகமான ஆட்களைதான் அம்பேத்கர் கடுமையாக விமரிசிக்கிறார்.
    காந்தியை அப்படித்தான் விமர்சித்தார்அம்பேத்கர்.
    மதிமாறன் இதுபோன்ற தவறான தவகல்களை தருகிற இந்த திருச்சிக்காரரின் பின்னூட்டத்தை நீக்குங்கள்.//

    ஈரோட்டு ரெள்டியின் தீவிரவாத தாடியை இழுத்தே ஆர்கஸம் அடையும் மதிமாறன்,கலை போன்ற மதி கெட்ட முண்டங்களுக்கோ அல்லது தீவிரவாத திராவிட தாடியை வைத்து அரசியல் வியாபாரம் செய்து கோடி கோடியாய் கொள்ளை அடிக்கும் மஞ்ச துண்டுக்கோ,சூரமணிக்கோ அல்லது அந்த ஜந்துக்களின் அடிவருடிகளுக்கோ திருச்சிக்காரன் சொல்வது விளங்கவா போகிறது?ஒரு காலும் இல்லை.போங்கடா வெங்காய முண்டங்களா.

    வீரபாண்டியன்

  39. சகோதரர் கலை அவர்களே,

    ஏன் இவ்வளவு ஆவேசம்?

    நாம் பெரியாரின் தனிப் பட்ட வாழ்க்கையைப் பற்றி ஒன்றும் விமரிசித்து எழுதவில்லையே?

    பெரியாரிடம் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது, புரிந்து கொள்ள வேண்டியது, திருத்திக் கொள்ள வேண்டியது உள்ளது என்றும் எழுதியிருக்கிறோமே!

    “நம் முன் வைக்கப் பட்ட ஒவ்வொரு வாக்கியமும் , வார்த்தையும் கேள்விக்கு உள்ளாக்கப் படும், உண்மையின் சோதனைக் களத்தில் பரிசோதிக்கப் பட வேண்டும்” என்பதே பகுத்தறிவு. கடவுளேயானாலும் அவர் கூறியதை மறுக்கவும், எதிர்க்கவும் அவரை விமரிசிக்கவும் உரிமை உள்ளது.

    ஆனால் நீங்களோ “பெரியார் சொன்னது அத்தனையும் வேதம். பெரியாரை விமர்சித்து எழுதினால் தேவ தூசனம் செய்தது போன்றது” என்ற ரேஞ்சுக்கே போய் விட்டீர்கள் போல உள்ளதே.

    பெரியாரை இப்படி விமரினங்களுக்கு அப்பாற்ப்பட்ட ஸ்தானத்தில் வைத்தே ஆக வேண்டும் என்று கூறும் அளவுக்கு உணர்ச்சி வசப் பட்ட நிலையிலே இருக்கிறீர்கள்.

    தொலைக் காட்சியிலே ஒளி பரப்பப் படும் ஒரு படத்தைப் பார்க்கும் ஒரு சிறுவனோ, சிறுமியோ கூட “இது என்னாயா படம், ஒரே போரா இருக்கே , எவன் எடுத்தான் இந்தப் படத்தை” என்று விமரிசிக்கும் உரிமை உள்ளவர்கள்.

    பெரியார் எல்லாவற்றையும் விமரிசனம் செய்துள்ளார். எதையும் விட்டு வைக்கவில்லை. நாமும் எதையும் விமரிசிக்கலாம்- பெரியாரையும் விமரிசிக்கலாம்.

    உண்மைகளை உலகுக்கு உணர்த்தலாம்.

    நீங்கள் அஞ்சாமல் உண்மைகளை எதிர் கொள்ளத் தயாராகுங்கள்.

  40. திருச்சிகாரன் அதியமான அவர்களே, கலை என்பவர் நீங்கள் அம்பேத்ரை கேவலப்படுத்துகிறீர்கள். அவரை பார்ப்பன ஆதரவாளராக காட்டி அவதூறு செய்கிறீர்கள் என்று சொல்லியிருக்கிறார்.

    அதை மறைத்து மீண்டும் நீங்கள் பெரியார் குறித்து பேசுவது கலை சொல்லியிருப்பதுபோல் நீங்கள் நயவஞ்சகமான ஆளாகத்தான் தெரிகிறீர்கள்.

  41. இந்த திருச்சிக்காரன் என்கிற பெயரில் எழுதுகிற இந்த அதியமானின் அவதுறூன பின்னூட்டத்தை நீக்க வேண்டும் என்று நானும் கேட்டுக்கொள்கிறேன்.

  42. சகோதரர் வீரபாண்டியன் அவர்களே,

    நீங்கள் சொல்ல வரும் கருத்துக்கள் உங்களின் தவறான வார்த்தைப் பிரயோகத்தால் வலிமை இழக்கும் படிக்கு செய்து விடாதீர்கள்.

    மதிமாறன், கலை எல்லோருமே நமது சகோதரர்கள் தான்.

    சிந்திக்கும் திறன் உடையவராய் இருந்தும் அவர்கள், சாதிக் காழ்ப்புணர்ச்சியை வைத்தே சமரச சமுதாயத்தைச் சாதிக்க முடியும் என்ற தவாறான சித்தாந்தத்தை வைத்துள்ளனர்.

    நீங்கள் எழுதுங்கள், ஆனால் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று, என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  43. சகோதரர் முரளி அவர்களே,

    நான் எந்த இடத்திலும் அம்பேத்கார் பார்ப்பனீயத்திற்கோ, சாதி வெறி கொண்ட பார்ப்பனர்களுக்கோ ஆதரவு அளித்தார் என்று எழுதவில்லை.

    நான் அம்பேத்கரைப் பாராட்டுவதும்,

    அம்பேத்கார் மிகச் சிறந்த அறிங்கர்,

    உலகின் மிகப் பெரிய, மிக நுட்பமான அரசியல் சட்டத்தை வகுத்தவர்,

    தலித் மக்களின் விடுதலைக்காக , முன்னேற்றத்திற்காக தன் வாழ் நாள் முழுவதும் உழைத்ததோடு,

    அவர் இந்தியாவின் மிகப் பெரிய தலைவர், ஒட்டு மொத்த இந்திய மக்களின் நன்மைக்காகவும் பாடுபட்டவர்”

    என்றெல்லாம் நான் கூறுவதும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதற்காக நான் என் எழுத்துகளை மாற்றிக் கொள்ள வேண்டுமா?

    உண்மையைக் கண்டு ஏன் இப்படி பதறுகிறீர்கள்?

    பெரியாரின் பேருக்கு மேலும் மேலும் அதிக பில்டப் குடுத்து அதில் கோடிகளைக் குவிக்க நீங்கள் விரும்பவில்லையே?

    நீங்கள் பெரியாரின் அபிமானி என்றே நினைக்கிறேன்.

    நானும் பெரியாரிடம் அபிமானம் உடையவன்தான்.

    ஆனாலும் அவர் கூறியதை அப்படியே வேதமாகப் பின்பற்றுவதும்,

    அவர் செய்தது எல்லாம் சரி என்றும்,

    அவர் செய்தது எல்லாம் சரி என்பதாக நிலை நிறுத்த ஏதாவது செய்ய வேண்டும் என்றும்,

    அவர் காட்டிய வழியில் தவறு இருந்தால் அதை சுட்டிக் காட்டாமல் மறைக்க வேண்டும் என்றும் நினைப்பவன் நான் அல்ல!

    இன்னும் ஒரு விடயம், என்னுடைய பெயர் அதியமான் அல்ல.

  44. சகோதரர் முரளி அவர்களே,

    நான் எழுதியதில் ஒரு அவதூறும் இல்லை, எந்த நயவஞ்சகமும் இல்லை.

  45. திட்டம் என்ன என்பதைக் கூறித்தான் அழைத்து இருக்கிறேன்//

    சரி. திட்டம் என்ன என்பதை இப்போதாவது சொல்லுங்கள்.

    //நான் பெரியாரிடமிருந்து பல விசயங்களைக் கற்றவன் என்ற வகையிலே, அவருக்கு ஒரு soft corner வைத்திருக்கிறேன். அதே நேரம் பெரியாரை விமர்சிக்கக் கூடாது என்பது இல்லை. பகுத்தறிவு என்பதே விமரிசனமும் உள்ளதுதான். அது ஆசிரியராக இருந்தாலும் சரி//

    பெரியாருக்கு soft கார்னரோ hard கார்னரோ வைத்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. ஆனால் அவரை கார்னர் செய்து தாக்க முயல்கிறீர்கள் என்பது மட்டும் தெளிவு. ஆனால் இதற்கு பார்பனியத்திற்கு துப்பில்லை. அதனால் அம்பேத்கரை பயன்படுத்துகிறீர்கள்.

    //திராவிட‌ர் க‌ழ‌க‌ம் ஆர‌ம்பித்த‌து முத‌ல் இன்று வ‌ரை ஒரு த‌லித் கூட‌ க‌ழ‌கத்தின் த‌லைவ‌ராக‌வில்லையே?

    தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை த‌ல‌மைப் பொறுப்புக்கு கொண்டு வ‌ர‌ நேர‌ம், கால‌ம், நாள், ந‌ட்ச்ச‌த்திர‌ம் பார்க்க‌ வேண்டுமா?
    த‌லித் ஒருவ‌ரின் கையில் திராவிட‌ர் க‌ழ‌க‌த்தின் அனைத்து பொறூப்புக்க‌ளையும் ஒப்ப‌டைத்து விட்டு ஓய்வு எடுக்க‌ மான‌மிகு வீரமணியார் த‌யாரா? //

    இவையெல்லாம் நீங்கள் வீரமணியிடமும் அவர் ஆதரவாளர்களுடன் கேட்க வேண்டிய கேள்விகள். பெரியார் பற்றி பேசும் போது பெரியாரையும் பெரியார் கொள்கையையும் தூற்ற, அதற்கு கருவியாக வீரமணியின் பஜனையை பாடுவது சாக்‌ஷாத் பார்பனர்களுடைய வேலை. ஆனால் நீங்களும் ஏன் இதே வேலையை செய்கிறீர்கள் என்று தெரியவில்லை.

    //பார்ப்பன எதிர்ப்பு அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்து, அந்த பார்ப்பன எதிர்ப்பு தேரின் அழுத்தத்திலே , அறிந்தோ அறியாமலோ தலித் இனத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் முன்னுக்கு வர முடியாமல் அமுக்கப் பட்டு விட்டனர் என்கிற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளாமல், ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் சிந்த்தித்தால் உங்களுக்கப் புரியும். //

    தலித் அரசியலை நீங்கள் உண்மையிலேயே தான் நீங்கள் ஆதரிக்கிறீர்களா? முத்துராமலிங்கம் தான் சாதிவெறியை தூண்டினார் என்று உங்களுக்கு தெரியாதா? அல்லது சொல்வதற்கு தயக்கமா? ஏன் இப்பழியை பெரியாரின் மீது சுமத்துகிறீர்கள்? ஆதிக்க சாதி வெறிக்கு நீங்கள் பெரியாரை காரணம் என்று காட்ட முடியாது. தாழ்த்தபட்ட மக்களை அடிமையாய் நடத்தும் பிற்படுத்தப்பட்டவர்களால் நேர்ந்த கேடு இது. ஆனால் நீங்கள் பெரியாரை அவதூறு சாடும் அளவுக்கு எள்ளளவு கூட தீண்டாமையை திணிக்கும் பார்ப்பனியத்தை பற்றியோ மூலகாரணமான இந்து மதத்தை பற்றியோ அல்லது முத்துராமலிங்கத்தை பற்றியோ சாடவில்லையே ஏன்?

    // “இந்திய விடுதலை என்பது தலித்துகளுக்கு எஜமான மாற்றமேயன்றி வேறென்ன” என்று அம்பேத்கர் கூறியதாகப் படித்திருக்கிறோம். //

    உண்மைதான். இதையே தான் பெரியாரும் கூறினார். இதனால் தான் அவ்விடுதலை நாளை என்று கருஞ்சட்டை அணிந்து துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் பெரியார் கூறினார்.

    //“என்னைத் தொடாதே , என்னைத் தொட்டால் தீட்டு” என்ற அநியாயமான இழிவை செய்த பார்ப்பனர்களின் கையிலே இருந்து அதிகாரத்தை மாற்றித்,
    தலையை வெட்டித் தெருவில் உருட்டும் கொடுமையை, வாயிலே பீ திணிக்கும் கொடுமையை செய்பவர்களின் கையிலே அதிகாரம் மாறும் நிலைமையைக் கொண்டு வந்துதானே பகுத்தறிவுப் பகலவனால் உண்டான விளைவு?//

    உங்கள் தந்திரம் புரிகிறது. பெரியாரை சாட நீங்கள் கையிலெடுக்கும் ஆயுதம் அம்பேத்கர். ஏனெனில் அவரை தவிர வேறு எந்த ஆயுதத்தையும் கையில் எடுக்க நேர்ந்தால் வேட்டி அவிழ்ந்துவிடும்.
    தலித் மக்களின் ஒடுக்குமுறை என்கிற ஒரே நோக்கத்திற்காக மட்டும் நீங்கள் பேசவில்லை. மாறாக தலித் முதுகில் ஒளிந்து கொண்டு பெரியார் மீது கல் எறிய நினைக்கிறீர்கள். ஆனால் தலித் மக்களுக்கு ஆதரவாக பேசுவது போல் பெரியாரை விமர்சிப்பதிலேயே உங்கள் கவனம் முழுதும் உள்ளது கவனிக்கதக்கது. ஆனால் அது நடக்காது. அம்பேத்கரையும் பெரியாரையும் பிரித்து அம்பேத்கரை துதிபாடுவது போல் பாடி தலித்களை ஆர்.எஸ்.எஸ் கையில் ஒப்படைக்கும் பல பேரை கண்டிருக்கிறோம். இப்போது நீங்கள். பெரியாரே தன் தலைவர் என்று ஒப்புகொண்ட தலைவர் அம்பேத்கர் அவர்கள். அதனால் அம்பேத்கருக்கு எதிராக பெரியாரை முடிந்துவிடும் வேலையை நீங்கள் பார்க்காதீர்கள். பார்க்கவேண்டுமென்றால் ஆர்.எஸ்.எஸ் உடன் சேர்ந்து செய்யுங்கள். உங்கள் வேலை பலு குறையும்.

    //அம்பேத்கர் என்றவுடன் முதலில் எனக்கு நினைவு வருவது என்னுடைய மாணவப் பருவம்தான்! சென்னை கன்னிமரா நூலகத்தில், சில நாட்கள், மாலை நேரம் படித்துக் கொண்டிருக்கும் போது, நூலகர் “நேரம் ஆகி விட்டது” என்று நினைவு படுத்துவார். ‘ஒரு நாளைக்காவது, அம்பத்கரைப் போல படித்தோம்’ என்று மன நிறைவுடன் செல்வேன். //

    உங்களையே நீங்கள் அம்பேத்கருடன் ஒப்பிட்டு சினிமா நடிகன் போல் சுய திருப்தியும் மனதிருப்தியும் அடைகிறீர்கள். ஆனால் களப்பணியாற்றிய பெரியாரை அம்பேத்கருடன் ஒப்பிடுவது தவறு என்று கூற முதலில் உங்களுக்கு தகுதியில்லை.

    //இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனும், முன் மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டிய சிறந்த அறிங்கர் அம்பேத்கர் என்று நான் மனப் பூர்வமாகச் சொல்வேன்.
    அம்பேத்காரின் வாழ்க்கையின் லட்சியம், இந்தியாவில் உள்ள தலித் மக்களின் விடுதலை, முன்னேற்றம் அதோடு அவர் எல்லா இந்தியர்களையும் நேசித்தவர், இந்தியாவை நேசித்தவர்.
    அப்படிப்பட்ட அறிங்கர் அம்பேத்கர், இன்றைக்கு தமிழ் நாட்டில் சாதி வெறியர்கள் கையில் சிக்கிய பதுமை ஆகி விட்டார்.
    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனும், முன் மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டிய சிறந்த அறிங்கர் அம்பேத்கர்.//

    இதைதான் நாங்களும் சொல்கிறோம். என்னமோ நாங்களெல்லாம் தாழ்த்தபட்ட மக்களுக்கு எதிரி போல நீங்கள் சொல்கிறீர்கள். நேரம் இருப்பின் மதிமாறனின் மற்ற பக்கங்களையும் படித்து பாருங்கள். தமிழ் தேசியவாதிகளுடன் தாழ்த்தபட்ட மக்களுக்கான ஆதரவு கருத்துக்களை. தாழ்த்தபட்ட மக்களின் பிரச்சனையை ஏற்கனவே தமிழ் தேசியவாதிகளுடன் மதிமாறன் அவர்கள் பேசித்தான் பலர் சிண்டு முடியும் வேளையை செய்கின்றனர். இங்கேயே வந்து எங்களுக்கெதிராக தாழ்த்தபட்ட மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசாதீர்கள்.
    அம்பேத்கரின் தொகுப்பையும் நேரம் இருப்பின் இத்தளத்தில் படித்து பாருங்கள்.

    //வேண்டுமென்றே அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்ததே ஒரு வன் கொடுமை குற்றமாக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கலாம் அல்லவா?
    ஆனால் அவர்கள் நடந்து கொண்ட விதம் அவர்கள சட்டம் படிக்கும் மாணவர்கள் போலவா இருந்தது? //

    இதைதான் பார்ப்பானும், பார்பன கைகூலிகளும் நடுத்தர வர்க்கமும் சொல்கிறார்கள்.

    ஒவ்வொரு சொல்லிற்கும் செயலிற்கும் பின்னால் ஒரு வர்க்கமும் வர்க்கமும் வர்க்க நலனும் ஒளிந்துள்ளது – காரல் மார்க்ஸ்

    நீங்கள் முன் வைக்கும் வாதங்கள் அனைத்தும் பார்ப்பானின், பார்பானின் அடிவருடி கேளிவிகளாகவே வருகின்றன. போன பதிலில் இதே சந்தேகம் எனக்கு வலுத்தது. இப்போதும் இதே சந்தேகம் வலுக்கிறது.

    அங்கே அம்மாணவர்களின் பிரச்சனை என்ன என்று உங்களுக்கு தெரியுமா? சும்மானா தொலைகாட்சியில் பார்த்தோ பத்திரிக்கையில் படித்தோ பேச கூடாது. அதற்கு இத்தளத்திலேயே ஒரு பதிவு உள்ளது. நேரம் இருப்பின் அதையும் படிக்கவும்.

    //நிதானத்தைக் கைவிட்டு, வன்முறையைக் கையில் எடுத்த மாணவர்களின் எதிர்காலம் என்ன? //

    போகும் போதும் வரும் போதும் சாதி பெயரை சொல்லி இழிவு செய்தால் நிதானமாகத்தான் இருப்பீர்களா?
    உங்களை தேர்வு எழுத உங்களை மறுத்து வம்பிக்கிழுத்தால் நிதானமாகத்தான் இருப்பீர்களா?
    உங்கள் வாயில் ஆதிக்க சாதிவெறியன் ஆண் குறியை வைத்து இழிவுபடுத்தினால் நிதானமாகத்தான் இருப்பீர்களா? இருந்தாலும் எப்படி? அவன் ஆண்குறியை வாயில் வைத்து எடுக்கும் வரையா?
    நீங்களெல்லாம் பெரியாரை விமர்சிக்கிறீர்கள்; சாதிய எதிர்ப்பு போராட்டங்களையும் எதிர்க்கிறீர்கள்.
    காலையில பெட்காபி குடிதோமா ஹிந்து பேப்பர படிச்சோமான்னு இருந்துட்டு எவனாச்சும் மறியல் ஆர்பாட்டம் பண்ணா “இவனுங்களுக்கு வேற வேலையே இல்ல எப்ப பார்த்தாலும் மறியல் அது இதுன்னு” என்று சொல்ல கூடிய மேட்டுகுடிமையின் பார்வையே உங்கள் பார்வை..

    //வேண்டுமென்றே அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்ததே ஒரு வன் கொடுமை குற்றமாக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கலாம் அல்லவா? //

    வாயில் மலத்தை திணித்தவனே எந்த தண்டனையும் இன்றி நிரபராதி என்று வெளியே உலவிக்கொண்டிருக்கிறான். பெயரை போடாததற்கு வன் கொடுமை சட்டம் அது இதுன்னு. யதார்த்த வாழ்க்கைக்கு வாங்க. இன்னும் நிறைய தெரிஞ்சிப்பீங்க.

    //அவர்களுக்கு உண்மையான பகுத்தறிவு அளிக்கப் பட்டிருந்தால் அவர்கள் அதைத்தானே செய்திருப்பார்கள். ஆனால் பகுத்தறிவு என்ற பெயரில் அவர்களுக்கு வழங்கப் பட்டது கற்கால கலாச்சாரம். //

    அப்ப கூட ஆதிக்க சாதிகாரன் ஏன் தாக்கப்பட்டான்? ஆதிக்க சாதிகாரனின் போக்கு தவறானது என்று ஆதிக்க சாதி வெறியை கண்டித்து ஒரு வரிகூட இல்லையே. இது தான் உங்கள் பகுத்தறிவா? இல்லையேல் ஒரு தலித் திருபி அடித்துவிட்டானே எனும் ஓலமா?

    //நான் பாடம் படித்தது இவர்களிடம் இருந்து இருந்து –
    வள்ளுவர், கிருட்டினர், புத்தர், சாக்ரடீஸ், இயேசு, பட்டினத்தார், அப்பர், ஆதி சங்கரர், முஹமது நபி,தியாகராசர், விவேகானந்தர், மார்க்ஸ், பாரதி, அம்பேத்கர், காந்தி, பெரியார். //

    இதற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏனெனில் நீங்கள் நல்லவரா? கெட்டவரா எனும் சினிமா வசனம் தான் நினைவிற்கு வருகிறது.
    இந்து மதத்தில் நால்வர்ணத்தை படைத்தானே கிருஷ்ணன் அவன் உங்களுக்கு நல்லவனா? இவன் போதனைதான் உங்களுக்கு சாதியொழிய தேவையா?
    தன் ஒவ்வொரு பாடலில் தன் பார்பனிய கருத்தை திணித்தானே பார்ப்பன கவி பாரதி அவன் உங்களுக்கு முற்போக்காளனா? இதற்கும் ஒரு பதிவு இத்தளத்தில் உண்டு அதையும் படித்துபாருங்கள்.
    காந்தி, பெயரை கேட்டாலே நம் வாந்தியை அவன் முகத்தில் எடுக்கவேண்டும் என்னும் அளவுக்கு தாழ்த்தபட்ட மக்களுக்கும் புரட்சிகர சக்திகளுக்கும் துரோகம் இழைத்தானே இவனையா நீங்கள் ஆதரிக்கிறீர்கள்? அம்பேத்கரை அறிஞர் என்று நீங்கள் ஒப்பு கொண்டிருப்பீர்களேயானால் காந்தியை துரோகி என்று அம்பேத்கர் இகழ்ந்தது சரியா? சரி என்றால் துரோகியை எப்படி நீங்கள் ஆதரிக்கிறீர்கள்? இல்லையெனில் நீங்கள் அம்பேத்கரை உங்களுக்கு ஆயுதமாக மட்டும் பயன்படுத்துகிறீர்கள் என்பது தெளிவு.

    //அம்பேத்க‌ர் காங்கிர‌சை எதிர்த்த‌வ‌ர். ஆனால் அத‌ற்க்காக‌ இந்தியாவையோ, இந்திய‌ ம‌க்க‌ளையோ விட்டுக் கொடுக்க‌வில்லை. பெரியாரும் காங்கிர‌சை எதிர்த்தார். ஆனால் த‌ன் சொந்த‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ எதிர்த்தார். //

    காங்கிரஸை என்று ஏன் பொத்தாம் பொதுவாக சொல்கிறீர்?
    காந்தியை எதிர்த்தார்.

    //“நம் முன் வைக்கப் பட்ட ஒவ்வொரு வாக்கியமும் , வார்த்தையும் கேள்விக்கு உள்ளாக்கப் படும், உண்மையின் சோதனைக் களத்தில் பரிசோதிக்கப் பட வேண்டும்” என்பதே பகுத்தறிவு. கடவுளேயானாலும் அவர் கூறியதை மறுக்கவும், எதிர்க்கவும் அவரை விமரிசிக்கவும் உரிமை உள்ளது. //

    சரி இந்து மதத்தை பற்றி உங்கள் கருத்தென்ன?

    //பெரியார் எல்லாவற்றையும் விமரிசனம் செய்துள்ளார். எதையும் விட்டு வைக்கவில்லை. நாமும் எதையும் விமரிசிக்கலாம்- பெரியாரையும் விமரிசிக்கலாம். //

    ஆனால் நீங்கள் பெரியாரை மட்டும் விமர்சிப்பதாக உள்ளது. பார்ப்பனரையோ, ஆதிக்க சாதியையோ, இந்துமதத்தையோ விமர்சித்தால் உங்கள் போக்கு சரி. ஆனால் விதிவிலக்கு அளிக்கிறீர்களே. அது ஏன்? உங்களை சுடுகிறதா?

    சாதியொழிக்க போராடிய பெரியாரை அம்பேத்கருடன் ஒப்பிட்டால் உங்களுக்கு மனம் கொதிக்கிறது. ஆனால் ஆதிக்க சாதியை கட்டழித்த ஆதிக்க சாதிவெறியன் முத்துராமலிங்கத்தை ஆதிக்க சாதியர்கள் அம்பேத்கருக்கு நிகராக நிறுத்துகிறார்களே இதற்கென்ன சொல்லபோகிறீர்? உங்களுக்கு ஆர்ட் அட்டாக்கே வந்திருக்க வேண்டுமே? வந்ததா?

    உண்மைகளை உலகுக்கு உணர்த்தலாம்.
    நீங்களும் அஞ்சாமல் உண்மைகளை எதிர் கொள்ளத் தயாராகுங்கள்.

  46. ‘திருச்சிக் காரன்’ என்ற பெயர பேசாம ‘திரிச்சி காரன்’ என்று மாற்றி கொள்ளுங்கள். பெரியார பற்றி ஒரு வெங்கையாமும் தெரியலை அம்பேத்கர் பற்றி ஒரு வெண்ணையும் தெரியலை சும்மா எதோ கிஷ்னர், ஆதி சங்கர், காந்தி வாந்தின்னு தேவையில்லாத பேச்சை பேசி தானும் கொழம்பி மத்த வனையும் கொழப்ப என்னும் சோ, சுஜாதா போன்ற அறிவுஜீவி பார்பனர் போலும் நீர்.

  47. திருச்சி,
    நீங்கள் பக்கா பார்ப்பன சதி நிறைந்தவராக இருக்கிறீர்கள். நீங்கள் சூத்திரனாக இருந்தாலும் பார்ப்பனராகத்தான் இருக்கிறீர்கள்.

    அம்பேத்கரை ஏன் அவமானப்படுத்துகீறீர்கள் என்றால், அதற்கு பதிலை காணொம்.

    //நான் பாடம் படித்தது இவர்களிடம் இருந்து இருந்து –
    வள்ளுவர், கிருட்டினர், புத்தர், சாக்ரடீஸ், இயேசு, பட்டினத்தார், அப்பர், ஆதி சங்கரர், முஹமது நபி,தியாகராசர், விவேகானந்தர், மார்க்ஸ், பாரதி, அம்பேத்கர், காந்தி, பெரியார். // என்கிறீர்களே,

    லூசா நீங்க…?

    //நிதானத்தைக் கைவிட்டு, வன்முறையைக் கையில் எடுத்த மாணவர்களின் எதிர்காலம் என்ன? //
    என்று சட்டக் கல்லூரி விவகாரத்தை பற்றி கேட்டு இருக்கறீர்கள்.
    இதற்கு வேந்தன் , சரியாக கேட்டு இருக்கிறார். தாழ்த்தப்படட மக்களை ஆதிக்க சாதியினர் எப்படி கேவலமாக நடத்துகிறார்கள்….. வாயில் மலத்தை தினித்து, பாலியல் வன்முறை செய்து…. உயிரோடு கொளுத்தி… இதை சரியாக புரியவைப்பதுபோல் கேட்டிருக்கிறார் வேந்தன்….

    ///போகும் போதும் வரும் போதும் சாதி பெயரை சொல்லி இழிவு செய்தால் நிதானமாகத்தான் இருப்பீர்களா?
    உங்களை தேர்வு எழுத உங்களை மறுத்து வம்பிக்கிழுத்தால் நிதானமாகத்தான் இருப்பீர்களா?
    உங்கள் வாயில் ஆதிக்க சாதிவெறியன் ஆண் குறியை வைத்து இழிவுபடுத்தினால் நிதானமாகத்தான் இருப்பீர்களா? இருந்தாலும் எப்படி? அவன் ஆண்குறியை வாயில் வைத்து எடுக்கும் வரையா?

    நீங்களெல்லாம் பெரியாரை விமர்சிக்கிறீர்கள்; சாதிய எதிர்ப்பு போராட்டங்களையும் எதிர்க்கிறீர்கள்.
    காலையில பெட்காபி குடிதோமா ஹிந்து பேப்பர படிச்சோமான்னு இருந்துட்டு எவனாச்சும் மறியல் ஆர்பாட்டம் பண்ணா “இவனுங்களுக்கு வேற வேலையே இல்ல எப்ப பார்த்தாலும் மறியல் அது இதுன்னு” என்று சொல்ல கூடிய மேட்டுகுடிமையின் பார்வையே உங்கள் பார்வை..////

    இவரின் இந்தக் கேள்வி ஆதிக்க சாதி உணர்வோடு, தலித் மக்களுக்கு அறிவுரை சொல்லுகி எல்லோருக்கும் பொருந்தும்.

  48. சகோதரர்கள் கலை, வேந்தன், பென் அனைவருக்கும் நன்றி,

    இவ்வளவு விமர்சனங்களுக்கு நடுவிலே சாதி அழிப்புக்கும், சமத்துவ சமுதாயத்துக்குமான நம்முடைய திட்டம் பற்றி, யாரும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது வருத்தமே.

    இங்கெ நாம் அனைவரும்- தலித்துகளோ, பிற்படுத்தப் பட்டவரோ, முற்படுத்தப் பட்டவரோ, கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ எல்லோரும் ஒன்றாகவே வாழாப் போகிறோம்.

    முதலியாருக்கோ, இசுலாமியருக்கோ, பார்ப்பனுருக்கோ என்று தனித் தனி மேம்பாலங்கள் , சந்தைகள் இருக்க முடியாது.

    தலித்துகளோ, தேவர்களோ, தாங்களே எல்லாப் பொருள்களையும் தங்களுக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும், சேவைகளையும் தாங்களே உருவாக்கி, தங்களின் இயல்பு வாழ்க்கையை அமைக்க முடியுமா?

    தாங்கள் உருவாகிய பொருள்களை தங்கள் சமுதாயத்தினரிடம் மட்டுமே விற்ப்பனை செய்வோம் என்ற நிலையை எடுத்தால் வியாபாரம் நடக்குமா?

    என் வழி இணைப்பதுதான், பிரிப்பது இல்லை என்று தெளிவாகக் கூறியிருக்கிறேன்.

    நசுக்கப் பட்ட, பிற்படுத்தப் பட்ட, முற்படுத்தப் பட்ட என்ற எல்லா பிரிவு மக்களும், ஒன்றாக, கனவானாக, நாகரிக மனிதராக, அன்பின் அடிப்படையில் நல்லெண்ணத்தில், எல்லாப் “பட்ட”ங்களும் நீங்கி ஒரே பொது மக்களாக இணைய வேண்டும் என்பதுதான் என் கருத்து.

    தீர்வு, மக்களின் மனதில் அன்பை, நாகரீகத்தை உருவாக்கி அவர்களை கனவான் (Gentle man) ஆக மாற்றுவதுதான். இது ஒரு நாளிலோ, ஒரு வருடத்திலோ முடிந்து விடாது.

    அன்பும், பிறரை மதிக்கும் பழக்கமும் , நிதானமும், கட்டுப்பாடும், நாகரீகமும் இல்லாத மக்கள் தொகுப்பை வைத்து சாதிகள் இல்லாத சமத்துவம் சமுதாயம் உருவாக்க முடியாது.

    வெறுப்புக் கருத்துக்களை வைத்து அல்ல, அன்பை வைத்துதான் சமத்துவ சமுதாயம் உருவாக்க முடியும்.எனவே நம்முடைய திட்டம் மக்களை செம்மைப் படுத்துவது.

    சாலையின் குறுக்கே கட்டப்பட்ட சாதி வெறி சுவரை உடைப்பது அரசின் கையில் உள்ளது.

    மக்களின் மனங்களில் உள்ள சாதி வெறி சுவரை உடைப்பதே நம் பணி!
    மக்கள் மனதில் உள்ள சுவர் உடையாத வரை செங்கல் சுவர்கள் உடைந்தும் நிலையான பலன் இருக்காது.

    அரசாங்கத்தின் கையிலே சட்டமும், ஆட்சியும், அதிகாரிகளும், புல்டோசரும் உள்ளன.

    நம்மிடம் அன்பும், நாகரீகமும் தான் உள்ளன. நீங்களும் நானும் தான் இருக்கிறோம்.

    அரசாங்கத்தை நாம் குறை கூறவில்லை. நாம் நம் பங்கை செய்கிறோம்.

    உங்களுக்கு நான் கூறிய கருத்துக்கள் மேல் நம்பிக்கை இருந்தால் உங்களால் முயன்ற அளவு, வெறுப்புக் கருத்துக்களை குறைக்க, அன்பை வளர்க்க, உதவி செய்யுங்கள்.

    நான் முதலில் பகுத்தறிவுக் கருத்துக்களை எழுதினேன். “கடவுள் இல்லை” என்று கூற உரிமை உண்டு என்றால், அதற்க்கு சிலர் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு நம்மை விரட்டுவோம் என்று எழுதினார்கள்.

    ஆனால் உண்மையான பகுத்தறிவாளன் எதற்கும் அஞ்ச மாட்டான். மக்களின் நலனுக்காக செயல்களை செய்வான்.

    பெரியாரிடம் நாம் கற்க வேண்டிய விஷயம் பல உள்ளது. நாம் எப்போதெல்லாம் பெரியாரின் கருத்துக்கள் தேவையோ, அப்போதெல்லாம் அதை எடுத்துக் கொள்வோம்.

    ஆனால் சாதிக் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் சாதிகளற்ற சமத்துவ சமுதாயத்தைச் உருவாக்க முடியாது.

    பெரியார் பார்ப்பனர்களிடம் இருந்து அதிகாரத்தைக் கைப் பற்றுவதற்கும், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை உடைப்பதிலுமே முழுக் கவனம் செலுத்தினார்,

    எனவே பெரியாரின் கொள்கையும், செயல் பாடும் சமுதாய ஒருங்கிணைப்பிற்க்கோ, சமத்துவ சமுதாயம் அமைப்பதற்க்கோ எந்த வகையிலும் உதவியாக இல்லை என்பதோடு, சமத்துவ சமுதாயத்திற்கு எதிரான வகையில் அப்பட்டமான சாதிக் காழ்ப்புணர்ச்சியை, சாதி வெறியை தூண்டுபவையாகவே அமைந்து விட்டன.

    இத்தை மக்களுக்கு விளக்க வேண்டிய நிலையிலே தான் உள்ளோம். இது மக்களுக்கு பெருமளவு புரிந்தும் விட்டது.

    அதே நேர‌ம், பெரியாரின் க‌ட‌வுள் மறுப்பு சித்தாந்த‌ங்க‌ள் , சிந்த‌னையாள‌ர்க‌ளுக்கு பெரும் உத‌வியாக‌ இருக்கும்.

    காவி அமைப்போ, வேறு எந்த‌ அமைப்புக‌ளொ, இங்கெ க‌ட‌வுளின் பெய‌ரைக் கூறி, இதுதான் க‌ட‌வுள், இதை நீ வ‌ண‌ங்காவிட்டால் ந‌ர‌க‌த்துக்குப் போவாய்‍ என்று கூறி ந‌ம்முடைய‌ க‌ழுத்தில் க‌த்தியை வைக்கும் காட்டு மிராண்டித் த‌ன‌த்துக்கு எதிராக‌ பெரியாரின் க‌ட‌வுள் மறுப்பு சித்தாந்த‌ங்க‌ள் ந‌ம‌க்கு உத‌வியாக‌ இருக்கும்.

  49. Ecah and every point raised by Brothers venthan, Kalai will be clarified.

    முத்து ராம‌ல‌ங்க‌ம் அவர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, வேறு யாராக‌ இருந்தாலும்,

    அவ‌ர் பிற‌ரை இழிவாக‌க் க‌ருதினாலொ,

    பிற‌ரின் மான‌த்துக்கும் உயிருக்கும் , உட‌மைக்கும் சேத‌ம் விளைவிக்கும் க‌ருத்துக்க‌ளைக் கூறியிருந்தாலொ,

    சாதிக் காழ்ப்புண‌ர்ச்சியை தூண்டும் எவ‌ரையும்,

    அவ‌ரின் அந்த‌க் க‌ருத்துக்க‌ளை, செய‌ல்க‌ளை முழுமையாக‌ எதிர்க்கிரோம், கண்டிக்கிறொம்.

  50. திருச்சிகாரரே, சில கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லையே ஏன்?
    1.தலித் மக்களின் மீதான ஒடுக்குமுறையை உண்மையிலேயே தான் நீங்கள் எதிர்க்கிறீர்களா? முத்துராமலிங்கம் தான் சாதிவெறியை தூண்டினார் என்று உங்களுக்கு தெரியாதா? அல்லது சொல்வதற்கு தயக்கமா?
    2. இந்து மதத்தில் நால்வர்ணத்தை படைத்தானே கிருஷ்ணன் அவன் உங்களுக்கு நல்லவனா? இவன் போதனைதான் உங்களுக்கு சாதியொழிய தேவையா? தன் ஒவ்வொரு பாடலில் தன் பார்பனிய கருத்தை திணித்தானே பார்ப்பன கவி பாரதி அவன் உங்களுக்கு முற்போக்காளனா? காந்தி, பெயரை கேட்டாலே நம் வாந்தியை அவன் முகத்தில் எடுக்கவேண்டும் என்னும் அளவுக்கு தாழ்த்தபட்ட மக்களுக்கும் புரட்சிகர சக்திகளுக்கும் துரோகம் இழைத்தானே இவனையா நீங்கள் ஆதரிக்கிறீர்கள்?

    3.இந்து மதத்தை பற்றி உங்கள் கருத்தென்ன?

    4. சாதியொழிக்க போராடிய பெரியாரை அம்பேத்கருடன் ஒப்பிட்டால் உங்களுக்கு மனம் கொதிக்கிறது. ஆனால் ஆதிக்க சாதியை கட்டழித்த ஆதிக்க சாதிவெறியன் முத்துராமலிங்கத்தை ஆதிக்க சாதியர்கள் அம்பேத்கருக்கு நிகராக நிறுத்துகிறார்களே இதற்கென்ன சொல்லபோகிறீர்?

    5.இந்துமதம் தான் சாதிக்கு காரணம் என்று அம்பேத்கர் ஆராய்ந்து கூறினார். நீங்கள் ஏற்றுக்கொண்ட அம்பேத்கர் கூறிய “இந்து மதம் ஒழிப்பே சாதிவிடுதலை” என்பதை ஏற்று கொள்கிறீர்களா?

    தோழர்களே! இவரின் பதிலை வைத்துதான் தாழ்த்தபட்ட மக்களுக்கான திருச்சிகாரரின் கண்ணீர் இந்து மதத்தின் ஆர்.எஸ்.எஸ் என்னும் முதலையின் கண்ணீரா? இல்லையா? என்பதை நமக்கு நிரூபிக்கும்.

    திருச்சிகாரரே பதில் கூறவும்..

  51. //சாதிக் காழ்ப்புண‌ர்ச்சியை தூண்டும் எவ‌ரையும்,

    அவ‌ரின் அந்த‌க் க‌ருத்துக்க‌ளை, செய‌ல்க‌ளை முழுமையாக‌ எதிர்க்கிரோம், கண்டிக்கிறொம்//

    சாதியை வர்ணமாய் விதைத்த கிருஷ்ணன், வர்ணாஸ்ரமத்தையும் ராம ராஜ்ஜியத்தை கொள்கையாக கொண்ட காந்தி போன்றோரையும் கூட கண்டிக்கிறீர்களா திருச்சிகாரரே???????

    கிருஷ்ணனை பற்றியும் ராமனை பற்றியும், காந்தியை பற்றியும் உலகுக்கு இவ்வாறு வெளிச்சம் போட்டு காட்டியதும் அம்பேத்கர் அவர்கள் தான்.

    இன்னும் ஏன் இந்த கள்ள மௌனம்?
    பார்ப்பன இந்து மதம் என்னும் இஞ்சியை தின்றார் போல் ஏன் திகைக்கிறீர்கள்???

    நீங்கள் இந்துமதத்தை ஆதரிக்கிறீர்களா என்ன??????

    திருச்சிகாரரே பதில் கூறவும்..

  52. சகோதரர் வேந்தன் அவர்களே,

    பணியின் நிமித்தமாக சிறிது நேரம் வெளியில் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் தான் நான் Ecah and every point raised by Brothers venthan, Kalai will be clarified, என்று எழுதி விட்டுச் சென்றேன்.
    இதில் கள்ள மவுனம் ஒன்றும் இல்லை.

    I will be back within 3 – 4 hours!

  53. திருச்சிகாரரே, சில கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லையே ஏன்?

    1.தலித் மக்களின் மீதான ஒடுக்குமுறையை உண்மையிலேயே தான் நீங்கள் எதிர்க்கிறீர்களா?-

    நான் தலித் மக்களின் மீதான ஒடுக்குமுறையை நூற்றுக்கு நூறு எதிர்க்கிறேன்!

    உண்மையிலேயே, அந்த மக்களின் நிலையிலே நான் வைக்கப் பட்டால், நான் அவமானப் படுத்தப் பட்டால், அசிங்கப் படுத்தப் பட்டால் எப்படியான மன நிலையில் இருப்பேனோ அந்த மன நிலையிலே நான் தலித் மக்களின் மீதான ஒடுக்குமுறையை எதிர்க்கிறேன்!

  54. //முத்துராமலிங்கம் தான் சாதிவெறியை தூண்டினார் என்று உங்களுக்கு தெரியாதா? அல்லது சொல்வதற்கு தயக்கமா?//

    முத்துராமலிங்கம் அவர்களைப் பற்றிய செய்திகளை wikipediaவில் இருந்து எடுத்து இங்கெ தந்து இருக்கிறேன்.

    A by-election was held in the Mudukulathur assembly constituency on July 1, 1957, as Thevar had resigned from his assembly seat. The election was won by D.V. Sasivarna Thevar of the Forward Bloc. The situation in the area was tense on the day that the results were released, and there was a sizeable presence of police forces in place. Clashes between Maravars, who largely supported the Forward Bloc, and pro-Congress Dalits began in a few villages soon after the election result was acknowledged. Gradually the violence spread to more and more villages, and by August the riots had spread throughout the entire district. Several persons were killed and thousands of houses were torched.[16]

    Thevar himself travelled to Delhi on July 17 to attend the session of the Lok Sabha. He returned on September 9. On September 10 he took part in a ‘Peace Conference’ together with T. V. Sasivarna Thevar and Velu (a Dalit legislative assembly member of the Forward Bloc). From the Congress side six Dalits took part. There was also a delegate from the Nadar caste. The conference concluded that the three castes should live in harmony.

    Emmanuel, the leader of the Congress Dalits at the Peace Conference was killed the following day. On September 28, a few days after the clashes had ceased, Thevar was arrested by the police under the Preventive Detention Act. Thevar’s was apprehended directly after holding a speech at the conference of the Indian National Democratic Congress (the new name taken by the Congress Reform Committee). Thevar was taken to the Jail. Pudukkottai court was hearing that case. He was later accused of having masterminded the murder of Emmanuel.

    The Forward Bloc and its allies condemned Thevar’s arrest as a political vendetta, engineered by the Congress. A ‘Thevar Committee’ was step up by the INDC. Thevar was acquitted of all charges and released in January 1959.[17]

    முத்துராமலிங்கம் சாதிக் கலவரத்தை தூண்டினாரா என்பது பற்றிய மேலதிக செய்திகளை, உண்மை என்ன என்பதை விளக்கும் செய்திகள் உங்களிடம் இருந்தால் தயவு செய்து தெரியப் படுத்தவும். (ஆனால் சிலர் எழுதுவதைப் போல “எல்லாப் பார்ப்பானும் எத்திப் பிழைப்வன், எல்லா இஸ்லாமியரும் தீவிர வாதிகள்” என்பது போல வாய்க்கு வந்ததை எழுத மாட்டீர்கள் என்று நம்புகிறேன்)

    ஏன் எனில் சாதி, மத, இன அடிப்படையில் யாரும் தாக்கப் படக் கூடாது, இழிவு படுத்தப்படக் கூடாது, உலகின் எல்லா மனிதர்களுக்கும் சம உரிமை, பாதுகாப்பு, வழங்கப்பட வேண்டும் என்பது என் உறுதியான, மனப் பூர்வமான கொள்கை.

    இதற்க்கு எதிரான வகையில் செயல் பட்டவர் என்னுடைய அண்ணன் ஆனாலும், தந்தை ஆனாலும் எதிர்க்கிறேன். கண்டிக்கிறேன்.

    யாரயும் காக்க வேண்டிய அவசியம், சப்பைக் கட்டு கட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

  55. //இந்து மதத்தில் நால்வர்ணத்தை படைத்தானே கிருஷ்ணன் அவன் உங்களுக்கு நல்லவனா? இவன் போதனைதான் உங்களுக்கு சாதியொழிய தேவையா?//

    இந்து மதத்தின் அத்தனை கருத்துக்களையும் அப்படியே ஏற்றுக் கொண்டு, அவற்றை பிறர் மேல் திணிப்பதோ, அதற்க்கு நியாயம் கற்பிக்க வேண்டிய நிலையிலோ நான் இல்லை.

  56. //இந்து மதத்தில் நால்வர்ணத்தை படைத்தானே கிருஷ்ணன் அவன் உங்களுக்கு நல்லவனா? இவன் போதனைதான் உங்களுக்கு சாதியொழிய தேவையா?//

    முதலில் படைத்தது கிருட்டினரா, கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்பதை நான் உங்களுக்கு அறுதியிட்டுக் கூற முடியாத நிலையில் இருக்கிறேன்.

    எனவே படைத்தது கிருட்டினர் தான் என்பதை நாம் நம்பிக்கை அடிப்படையில் தான் ஏற்றுக் கொள்ள முடியுமே தவிர, படைத்தது கிருட்டிணரா, அல்லது ஜெஹொவாவா, அல்லது கர்த்தரா அல்லது அல்லாவா – இந்த ஆர்ய்ச்சியை நாம் தொடர்ந்து செய்வோம், அதைப் பிறகு வைத்துக் கொள்வோம்.

    என்னுடைய அடுத்த பின்னூட்டத்தில் கிருட்டிணரிடம் நான் கற்றது என்ன? அது சமத்துவத்துக்கு எதிரானதா என்பதை பற்றி விவாதிப்போம்.

  57. //இந்து மதத்தில் நால்வர்ணத்தை படைத்தானே கிருஷ்ணன் அவன் உங்களுக்கு நல்லவனா? இவன் போதனைதான் உங்களுக்கு சாதியொழிய தேவையா?//

    அத்தியாயம் 15 , செய்யுள் (13-14)

    “அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),

    சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),

    கருண ஏவ ச (கருணையுடன் )”

    நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)

    ய மத் பக்த: ஸ மே ப்ரிய (எவன் என்னிடம் பக்தி உள்ளவனாக இருக்கிறானோ அவனே எனக்கு விருப்பமானவன்)

    இந்தக் கருத்து மிகச் சிறந்த கருத்து. இதை ஏற்றுக் கொள்வதில் நமக்குத் தயக்கம் இல்லை. யாரிடமும் வெறுப்பில்லாமல் எல்லோரிடமும் அன்புடனும், நட்புடனும் திமிர் தனம் இல்லாமல் வாழ்வது சிறந்த, அவசியமான வாழ்க்கை முறை என்பதே நம் கருத்து.

    இந்தக் கருத்தை நாம் சமரசத்தை உருவாக்க ஒரு கருவியாகப் பயன் படுத்துவோம்.

    முக்கியமான ஆராய்ச்சி இனிமேல்தான் உள்ளது.

    கிருட்டினர் மீதான விமரிசனம் தொடரும்.

  58. //…
    அத்தியாயம் 15 , செய்யுள் (13-14)

    “அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),

    சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),

    கருண ஏவ ச (கருணையுடன் )”

    நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)

    ய மத் பக்த: ஸ மே ப்ரிய (எவன் என்னிடம் பக்தி உள்ளவனாக இருக்கிறானோ அவனே எனக்கு விருப்பமானவன்)

    …//

    பூனைக்குட்டி திருச்சியிலிருந்து வெளியே வந்துவிட்டிருக்கிறது.

  59. சகோதரர் தமிழினியன் சுபா அவர்களே,

    //…
    அத்தியாயம் 15 , செய்யுள் (13-14)

    “அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),

    சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),

    கருண ஏவ ச (கருணையுடன் )”

    நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)

    ய மத் பக்த: ஸ மே ப்ரிய (எவன் என்னிடம் பக்தி உள்ளவனாக இருக்கிறானோ அவனே எனக்கு விருப்பமானவன்)

    …//

    பூனைக்குட்டி திருச்சியிலிருந்து வெளியே வந்துவிட்டிருக்கிறது.//

    இவ்வளவுதானா?
    வேறு எதுவும் எழுதவில்லையா?

    யாரையும் வெறுக்காமல்,

    சினேக பாவத்துடன் செயல் பட வேண்டும் போன்ற

    நாகரீகக் கருத்துக்களை, மக்கள் இணைப்புக் கருத்துக்களை,

    இன்னும் பலமாக எதிர்ப்பீர்கள் என்று எதிர் பார்த்தேன்!

  60. //இந்து மதத்தில் நால்வர்ணத்தை படைத்தானே கிருஷ்ணன் அவன் உங்களுக்கு நல்லவனா? இவன் போதனைதான் உங்களுக்கு சாதியொழிய தேவையா?//

    அத்தியாயம் 4 , செய்யுள் (13)

    ” சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண – கர்ம விபாகச ”

    கடவுளே ஒரு மனிதனைப் பிறக்கும் போதே தாழ்மையானவன், கீழானவன் , அடிமையானவன் என்ற நிலையிலே படைப்பதாகக் கூறினால் அதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும். எனவே சகோதரர் வேந்தனுக்கு சினம் வருவது புரிந்து கொள்ளக் கூடியதே!

    ஆனால் கிருட்டினர் கூறியதை எல்லோரும் தங்களின் சுயனலத்திற்கக்காக திரித்துக் கூறிய நிலையில் கிருட்டினர் என்ன செய்ய முடியும்?

    குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப நான்கு வகையான பிரிவுகள் , வர்ணங்கள் உள்ளன என்று கிருட்டினர் கூறியே உள்ளார்.

    ஆனால் அவை குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப என்பது தெளிவாக, அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது.

    குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப என்றுதான் கூறப் பட்டுள்ளதே தவிர பிறப்பின் அடிப்படையில் வர்ணம் என்று கூறப்படவில்லை.

    இதையே வள்ளுவர்

    “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமையான்”

    “பெருமைக்கும் எனைச் சிறுமைக்கும் அவரவர்
    கருமமே கட்டளைக் கல்”

    கூறியுள்ளார்.

    கிருட்டினரும், வள்ளுவரும் கூறினால் என்ன? அதையும் நாம் சோதனைக்கு உள்ளாக்குவோம்.

    கர்மா – செயல்களில் பல வகையான செயல்கள் உண்டு. அதில் முக்கியமாக சில வகை- மக்களுக்கு அவசியமானவை- மக்களுக்கு அவசியம் இல்லாதவை- ஆனால் கெடுதல் விளைவிக்கக் கூடியவை- மக்களுக்கு கெடுதல் விளைவிக்கக் கூடியவை.

    மக்களுக்கு அவசியமான கர்மாக்களை கூட இழிவான கர்மாவாக கருதுவது தவறு.

    பிணம் எரிப்பது இழிவான செயலா? பிணம் எரிப்பது எவ்வளவு முக்கியமான செயல்.

    இன்ஜினீயர் தன் வேலையை ஒரு வாரம் தாமதப் படுத்த முடியும். பிணம் எரிப்பவர் ஒரு நாள் தன் வேலையை தாமதப் படுத்த முடியுமா?

    அதே பிணத்துக்கு அருகில் நின்று மணிக் கணக்கில் பார்ப்பன் ஓதுகிறான். மறுநாள் காலையில் வந்து சாம்பலை வைத்து இன்னும் பலத்தை ஓதி, அந்த சாம்பலையும் எடுத்திக் கொண்டு நதியில் கரைக்கும் போதும் இன்னும் ஓதுகிறான்.

    இருவரும் அதே பிணத்துக்கு அருகில் நின்றுதான் தங்கள் தொழிலை செய்கின்றனர். ஆனால் பார்ப்பனர் தொழிலை உயர்வாகவும், சுடலைக் காப்பாளர் தொழிலை மட்டமாகவும் கருதும் பகுத்தறிவற்ற சமூகம் நம் சமூகம்.

    பார்ப்பனர் மகன் தான் வேதம் ஓத வேண்டும், சுடலைக் காப்பாளர் மகன் எரிக்க வேண்டும் என்று கூறுவது தான் பார்ப்பனீயம் எனக் கூறப் படுகிறது. அதை நாம் எதிர்க்கிறோம்.

    பார்ப்பன் ஓதாவிட்டால் ஒன்றும் கேடு இல்லை. ஆனால் சுடலைக் காப்பாளர் வேலை செய்யாவிட்டால் வூர் நிலைமை மோசம்.

    இன்றைய உலகச் சூழலில் மென்பொருள் பணியாளர் வேலை வாய்ப்பு இல்லை. பணிப் பாதுகாப்பு உள்ள தொழில்கள் சுடலைக் காப்பாளரும், முடி திருத்துபவரும்தான். அடிப்படை சம்பளம் ரூபாய் 20,000 என நிர்ணயித்தால் பல பார்ப்பனர் சுடலைக் காப்பான் வேலைக்கு மனுப் போடுவார்கள்.

    கிருட்டினர் எந்த இடத்திலும் தச்சனின் மகன் தச்சனாகவும், அரசனின் மகன் அரசனாகவும் , பார்ப்பானின் மகன் பார்ப்பனாகவும் இருக்கவேண்டும் என்று கூறவேயில்லை.

    ஆனால் பிரதமர் தம் மகனை பிரதமராக்குவது போல,
    முதல்வர் தம் மகனை முதல்வராக்குவது போல,
    நடிகர் தம் மகனை நடிகராக்குவது போல,
    எல்லோரும் சுயநலமில்லாமல் “மக்களின் விருப்பத்தின்” பேரில், இப்படிப் பரம்பரை பாத்தியதை கொண்டாடி விட்டனர்.

    ஆனால் நாம் ஆனால் நாம் கூற‌ வ‌ருவ‌து இந்தையெல்ல‌ம் விட‌ முக்கிய‌மான‌ விட‌ய‌ம்.
    எந்த‌ செய‌லை செய்தாலும் அவ‌ர் அந்த‌ தொழிலை எவ்வ‌ள‌வு திற‌மையுட‌னும், நாண‌ய‌த்துட‌னும் செய்கிறார்க‌ள் என‌ப‌தைப் பொருத்தே ச‌மூக‌ம் அவ‌ரை ம‌திக்கும்.

    ஒரு த‌ச்ச‌ர் ந‌ன்றாக‌ மேசை த‌யாரித்துக் குடுத்தால் அவ‌ரைப் பார்ர‌ட்டுகிறோம். ஒரு க‌ண‌க்க‌ர் திற‌மையுட‌ன் செய‌ல் ப‌டாவிட்டால் எந்த‌ ம‌திப்பும் குடுப்ப‌து இல்லை.

    ஒரு பொறியாள‌ர் அவ‌ர் கையூட்டு பெற்றுக் கொண்டு, பால‌த்தை இடிந்து விழும்ப‌டிக் க‌ட்டினால் அவ‌ர் பார்ப்ப‌ன‌ராக‌ இருந்தாலும், வேறு எந்த‌ சாதியின‌ராக‌ இருந்தாலும் அவ‌ர் இழிவான‌வ‌ராக‌வே, கீழ்மையான‌வ‌ராக‌வே நான் க‌ருதுவேன்.

    ஒரு காவ‌ல் துறை அதிகாரி, அவ‌ர் க‌ற்ப்ப‌ழிப்புக் கேசை மூடி அனியாய‌ம் செய்தால் அவ‌ர் பார்ப்ப‌ன‌ராக‌ இருந்தாலும், வேறு எந்த‌ சாதியின‌ராக‌ இருந்தாலும் அவ‌ர் இழிவான‌வ‌ராக‌வே, கீழ்மையான‌வ‌ராக‌வே நான் க‌ருதுவேன்.

    என‌வே குணத்தின், தொழிலை செய்யும் வித‌த்தின் அடிப்ப‌டையில் வேறுபாடுக‌ள் என்பது இய‌ற்க்கையாக‌ உருவாவ‌து. ஆனால் அதை சுய‌ன‌ல‌முடையோர், பிற‌ப்பின் அடிப்ப‌டையில் என்று மாற்றி விட்ட‌ன‌ர்.

    ஆனால் குணத்தின், தொழிலை செய்யும் வித‌த்தின் அடிப்ப‌டையில் கூட‌ வேறுபாடுக‌ள் வேண்டாம்- வேண்ட‌வே, வேண்டாம்- என்பத‌ற்க்காக‌த்தான் நான், எல்லொரும்
    க‌ன‌வானாக மாறும் வ‌கையில், ந‌ல்லொழுக்க‌த்தில், ந‌ல்லெண்ண‌தில், அன்பின் அடிப்ப‌டையில் ஒன்றாக‌ இணைவொம் என்று கூறுகிறென்.

    நான்தான் உய‌ர்ந்த‌ சாதி, என்னைத் தொடாதெ என்று கூறுப‌வ‌ன் மிக‌ இழிந்த‌வ‌ன்,

    பிற‌ர் வாயில் பீ தினிப்ப‌வ‌ன் மிக‌ இழிந்த‌வ‌ன்,

    நிதான‌த்தை இழ‌ந்து காட்டுமிரான்டித் தாகுத‌லில் ஈடுப‌டுப‌வ‌னும் ம‌ன‌ முதிற்ச்சி அடைய‌ வேண்டியுள்ளது.

    அர‌சாங்க‌ வேலையில் இருந்து ம‌க்க‌ளிட‌ம் ல‌ஞ்ச‌ம் வாங்கி சொத்து சேர்ப்ப‌வ‌ன் மிக‌ இழிந்த‌ திருட‌ன்,

    இவ‌ர் போன்ற‌ ப‌ல‌ரையும், எல்லோரையும் ப‌குத்த‌றிவின் அடிப்ப‌டையில் க‌னாவானாக்கி, வ‌ள்ளுவ‌ர் பாராட்டும் ப‌டியான‌ ம‌னித‌ராக்கி ஒன்றினைப்போம்.

    உல‌கின் ப‌ல‌ ப‌குதிக‌ளிலும் அடிமை- முறை‍ மிக‌ மோச‌மான‌ அடிமை முறை‍ இருந்துல்ல‌து. அமெரிக்காவில் அடிமைக‌ளுக்கு பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ள் எஜ‌மானுக்கு சொந்த‌ம்‍ எஜ‌மானிட‌ம் ப‌ணம் இல்லை என்றால், அடிமை ம‌னைவியை த‌னியாக‌ விற்று விடுவான்.

    இஸ்லாத்தில் அடிமையாக‌ கிடைத்த‌ பெண்ணை ” எப்ப‌டி” வெண்டுமானாலும் உப‌யொக‌ப் ப‌டுத்திக் கொள்ளாலாம்.

    அவ‌ர்கள் திருந்தி விட்டார்க‌ள்.

    நாம் இன்னும் திருந்த‌ வேண்டியுள்ளது.

    இந்து ம‌த‌மோ, எந்த‌ ம‌த‌மோ, இனி சாதி வேறுபாடு இல்லை.

    இருக்க‌ முடியாது.

  61. திருச்சிக்காரன் அவர்களே, பெரிய அளவில் ஆழம் இல்லாவிட்டாலும், சளைக்காமல் எழுதிகிறீர்கள். ந்ன்று.

    //அதே பிணத்துக்கு அருகில் நின்று மணிக் கணக்கில் பார்ப்பன் ஓதுகிறான். மறுநாள் காலையில் வந்து சாம்பலை வைத்து இன்னும் பலத்தை ஓதி, அந்த சாம்பலையும் எடுத்திக் கொண்டு நதியில் கரைக்கும் போதும் இன்னும் ஓதுகிறான்.

    இருவரும் அதே பிணத்துக்கு அருகில் நின்றுதான் தங்கள் தொழிலை செய்கின்றனர். ஆனால் பார்ப்பனர் தொழிலை உயர்வாகவும், சுடலைக் காப்பாளர் தொழிலை மட்டமாகவும் கருதும் பகுத்தறிவற்ற சமூகம் நம் சமூகம். //

    1) பார்ப்பணர் வந்து மந்திரம் ஓதாவிட்டால், பிணம் திரும்பி வந்து ஊர் நாசமாகிவிடுமோ ? எந்த பகுத்தறிவிற்கு இது உட்பட்டது ?

    2) மந்திரம் ஓதும் பார்ப்பணர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடங்கள் ஏதும் இல்லை. சுடலைக் காப்பாளர்களின் நிலைமை?

    3) சுடலைக் காப்பாளர்கள் தங்கும் இடம் மட்டும் ஏன் இடுகாட்டினை ஒட்டியே இருக்கிறது ?

    4) பிணம் எரிக்கும் பணியை ஒரு தொழில்முறையாய் மாற்றிய கோமான்கள் யார்.

    இவ்வாறு பல கேள்விகள் முளைக்கின்றன உங்களது சில வார்த்தைகளை படித்தபோது. இவை எல்லாம் ஏதோ நான் யேதோ நான் புதிதாக கேட்பதாக எண்ண வேண்டாம். பெரியார் உள்பட பல பெரியவர்கள் ஏற்கனவே தெளிவு படுத்தியும், இன்னும் நிலை மாறாமல் இருப்பவையே. இது போன்ற கேள்விகளில் உள்ள பகுத்தறிவு புலனாகும் வரை, பெரியார் சிறியாராகத் தான் தெரிவார். இது பெரியாரின் குற்றம் அல்ல.

  62. //காந்தி, பெயரை கேட்டாலே நம் வாந்தியை அவன் முகத்தில் எடுக்கவேண்டும் என்னும் அளவுக்கு தாழ்த்தபட்ட மக்களுக்கும் புரட்சிகர சக்திகளுக்கும் துரோகம் இழைத்தானே இவனையா நீங்கள் ஆதரிக்கிறீர்கள்//

    சகோதர்களே,

    என்னுடைய நோக்கம் மதப் பிரச்சாரம் அல்ல. நாம் அனைவரும் இணைவதுதான் என் நோக்கம்.

    நெடுங்காலமாக தாழ்த்தப் பட்ட மக்கள் ஒதுக்கப் பட்ட நிலையிலே இருந்தார்கள் என்பது உண்மை.
    ஆகவே அவர்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப் பட வேண்டும் என்பது கடைப் பிடிக்கப் பட்டு வருகிறது.

    சாதி வேறுபாடு கூடாது எனபதையும், எல்லோரும் சமம் எனபதற்க்குமான சமத்துவ சமுதாயம் அமைப்பதிலே நான் நேர்மையாக இருக்கிறேன்.

    சமுதாயத்தின் பொது நீரோட்டத்திலே த‌லித் ம‌க்க‌ள் இணைய வேண்டும் என்பதுதான் எல்லோரின் விருப்பமும்!

    ஆனால் சமுதாயத்தின் பொது நீரோட்டத்திலே இணைவதற்கு, நீங்கள் போடும் கண்டிஷன்கள் வியப்பை அளிக்கிறது!

    உங்களின் கருத்துக்கள் எல்லாமே எதிர் மறையாகவும், வெறுப்பின் அடிப்படையிலுமே உள்ளது.

    //காந்தி, பெயரை கேட்டாலே நம் வாந்தியை அவன் முகத்தில் எடுக்கவேண்டும் என்னும் அளவுக்கு தாழ்த்தபட்ட மக்களுக்கும் புரட்சிகர சக்திகளுக்கும் துரோகம் இழைத்தானே இவனையா நீங்கள் ஆதரிக்கிறீர்கள்?//

    அடேயப்பா, காந்தி அப்படி உங்களுக்கு என்ன துரோகம் செய்தார்?

    அம்பேத்கர் தனக்கு ஏற்ப்பட்ட கசப்பான அனுபவங்களினால், ஜாதி வித்யாசம் குறையுமா, பிற சாதியினர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்வார்களா, என்ற எண்ணத்தினால் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த மக்கள் தனியாக வாக்களிக்க வேண்டும் என்று நிலைப்பாட்டை எடுத்தார்.

    ஆனால் காந்தியோ அது சாதிப் பிரிவினைகளை என்றைக்கும் நிரந்தரம் ஆக்கி விடும் என்ற கவலையில் இருந்தார்.

    நான் அம்பேத்கர் அவர்களைக் குறை கூற வில்லை.

    ஆனால் காந்தி எதிர்பார்த்தது போலவே இன்று மாயாவதி அம்மையார் பிற சாதி மக்களின், பார்ப்பனர்களின் வாக்குகளையும் பெற்று எல்லா பிரிவு மக்களுக்குமான ராணியாக அமர்ந்து விட்டார்.

    தாழ்த்தப் பட்டவர்கள் மட்டும் தனியாக ஓட்டுப் போட்டு, தாழ்த்தப் பட்ட உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப் பட்டு அவர்கள் தங்களுக்கு என்று தனி பாராளுமன்றம் போகப் போகிறார்களா? பக்கத்து பக்கத்து தெருவிலே இருக்கிறோம். இணைவதற்கான வழிகளை ஆராயுங்கள்.

    அம்பேத்கார் கேட்டதும் அக்கறையுடன் தான். மகாத்மா காந்தி எல்லாப் பிரிவு மக்களும் ஒன்றாக வாக்களிக்கலாம் என்று சொன்னதும் சரியானதுதான்.

    இந்தியாவில் எந்தப் பதவியையும் எதிர்பார்க்காத, தனக்கு சொத்து சேர்க்காத, எளிய வாழ்க்கை வாழ்ந்த, தன் வாரிசுகளை பதவிக்கு வைக்காத, இந்தியாவின் எல்லா மக்களையும் நேசித்த, அவர்களுக்காக உயிர் வாழ்ந்த – உலக மக்கள் எல்லோரும் இப்படி ஒருவர் இந்த நூற்றாண்டில் இருந்தாரா என்று அதிசயிக்கத் தக்க வண்ணம் வாழ்ந்தவர் மகாத்மா காந்தி.

    மார்ட்டின் லூதர் கிங், மண்டேலா ஆகியோர் காந்தியை த‌ங்க‌ளின் உதார‌ண‌த் த‌லைவ‌ராக‌ ஏற்று, அவ‌ர் வ‌ழி சென்று வெற்றியும் பெற்று உள்ள‌ன‌ர்.

    சென்ற‌ வார‌ம் அமெரிக்க‌ அதிப‌ர் ஒபாமா, ஒரு க‌ல்லூரி விழாவிலே காந்தியை மிக‌வும் புக‌ழ்ந்து பேசியுள்ளார்.

    அஹிம்சை வ‌ழியிலே‍- அது தான் இந்தியாவின் வ‌ழி‍ -‍ போராடி வெற்றி பெற்ற‌ காந்தி இந்தியாவின் தேச‌த் த‌ந்தையாக‌ உள்ளார்.

    இப்போது சில‌ர் ம‌ட்டும்- ‍ நீங்க‌ள் காந்தியை
    புக‌ழ‌ வேண்டும் என்று நான் க‌ட்டாய‌ப் ப‌டுத்த‌வில்லை‍ – ஆனால் எல்லா இந்திய‌ர்க‌ளும், பெரும்பாலான‌ இந்திய‌ர்க‌ள், பல‌ வெளி நாட்டின‌ர் கூட‌ சிற‌ப்பாக‌க் க‌ருதும் காந்தியைப் ப‌ற்றி-

    சில‌ர் ம‌ட்டும் சில‌ குழ‌ந்தைக‌ளிட‌ம் – உங்க‌ளுக்கு த‌னிப்ப‌ட்ட‌ அளவில் மீதான‌ காந்தி வெறுப்பை- பொதுக் க‌ருத்து போல‌க் காட்டினால்‍, அவ‌ர்க‌ள் ப‌ள்ளி சென்று ப‌யிலும்போது அவ‌ர்க‌ள் பிற‌ குழந்தைக‌ளிட‌ம் இருந்து க‌ருத்திய‌ல் அள‌வில் ஒதுக்க‌ப் ப‌ட்ட‌ நிலையில் இருப்பார்க‌ள்.

    என‌வே உங்களை அறியாம‌லேயே, நீங்க‌ளே, இந்தியாவின் பொது நீரோட்ட‌த்தில் இருந்து ஒதுங்கி செல்கிறீர்க‌ள் என்ப‌தை த‌ய‌வு செய்து உணருங்க‌ள்.

    த‌லித் ம‌க்க‌ளை பொது நீரோட்ட‌த்தில் இணைப்ப‌தில் எல்லொருக்கும் எவ்வ‌ள‌வு அக்க‌றை உண்டோ, அதே போல‌ பொது நீரோட்ட‌த்தில் இணைய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் த‌லித் ம‌க்க‌ளுக்கும் உண்டு.

    நான் உங்க‌ளைக் க‌ட்டாய‌ப் ப‌டுத்துவ‌தாக‌ த‌ய‌வு செய்து எண்ணாதீர்க‌ள். ஆனால் வெறுப்புக் க‌ருத்துக்க‌ள் ஆக்க‌ பூர்வ‌மான‌வை அல்ல‌.

  63. சகோதரர் வேந்தன் அவர்களே,

    //இந்து மதத்தை பற்றி உங்கள் கருத்தென்ன?

    நீங்கள் ஏற்றுக்கொண்ட அம்பேத்கர் கூறிய “இந்து மதம் ஒழிப்பே சாதிவிடுதலை” என்பதை ஏற்று கொள்கிறீர்களா?//

    சகோதரர் வேந்தன் அவர்களே,

    நீங்கள் உண்மையிலேயே சாதி ஒழிப்பில், ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் அமைப்ப‌தில் தீவிர‌மான‌வ‌ரா?

    ஏனெனில் இந்து ம‌த‌த்தை ஒழித்து, அத‌ன் பின் சாதி விடுத‌லை என்றால் – அது அலை ஓய்ந்த‌ பின் நீராடிய‌ க‌தைதான்.

    ஏனெனில் இந்து ம‌தத்தின் அடிப்ப‌டைக‌ள் வலிமையான‌வை.

    நீங்க‌ள் இந்து ம‌தத்தைப் பின்ப‌ற்றும் ச‌முதாய‌த்தில் உள்ள‌ சாதிப் பாகுபாடுக‌ள், மூட ந‌ம்பிக்கைக‌ள் ஆகிய‌வ‌ற்றை உண்ணீப்பாக‌க் க‌வ‌னித்த‌ அளவீல், அதன் எல்லா கூறுக‌ளையும் ஆராய்ந்தீர்க‌ளா என்ப‌து ச‌ந்தெக‌மே!

    அதோடு இந்து ம‌த‌ம் அவ்வ‌ப் போது த‌ன் அடிப்ப‌டைக‌ள் மாறாத‌ வ‌கையில் த‌ன் செய‌ல் பாட்டை, இய‌ல்புக‌ளைப் புதுப்பித்துக் கொண்டு வ‌ருகிற‌து.

    புத்த‌ரின் சீட‌ர்க‌ள் அதை அசைத்துப் பார்த்தும், 8 நூற்றான்டுக‌ள் அத‌ன் செய‌ல் பாட்டை நிறுத்தியும் அது மீண்டு விட்ட‌து.

    8000 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ உயிரொட்ட‌த்துட‌ன் உள்ள‌ ஒரே ம‌த‌மாக‌ அது உள்ள‌து. அத‌ன் அடிப்ப‌டைக‌ள் என்ன‌, அத‌ன் வ‌லிமை என்ன‌ என்று புரியாம‌லேயே இந்து ம‌த‌ம் என்ப‌து ஏதொ ஒரு cult போன்றது போல‌ “அழித்து விட்டு” என்று நினைக்கிறீர்க‌ள்.

    இந்து ம‌த‌ம் ப‌ல‌ ப‌ட்டைக‌ளை உடைய‌து.

    ச‌ம‌ர‌ச‌ ச‌மூக‌த்தை அமைக்கும் முயற்ச்சியில் இந்து ம‌த‌த்தையும் ‌ஒரு க‌ருவியாக‌ உப‌யொக‌ப் ப‌டுத்த‌ முடியும்.

    இராமானுஜ‌ர் அதில் வெற்றியும் பெற்றிருக்கிரார்.

  64. சகோதரர் கொம்பன் அவர்களே,

    1) பார்ப்பணர் வந்து மந்திரம் ஓதாவிட்டால், பிணம் திரும்பி வந்து ஊர் நாசமாகிவிடுமோ ? எந்த பகுத்தறிவிற்கு இது உட்பட்டது ?

    For this question, I already answered as follows:

    //இருவரும் அதே பிணத்துக்கு அருகில் நின்றுதான் தங்கள் தொழிலை செய்கின்றனர். ஆனால் பார்ப்பனர் தொழிலை உயர்வாகவும், சுடலைக் காப்பாளர் தொழிலை மட்டமாகவும் கருதும் பகுத்தறிவற்ற சமூகம் நம் சமூகம்.

    பார்ப்பனர் மகன் தான் வேதம் ஓத வேண்டும், சுடலைக் காப்பாளர் மகன் எரிக்க வேண்டும் என்று கூறுவது தான் பார்ப்பனீயம் எனக் கூறப் படுகிறது. அதை நாம் எதிர்க்கிறோம்.

    பார்ப்பன் ஓதாவிட்டால் ஒன்றும் கேடு இல்லை. ஆனால் சுடலைக் காப்பாளர் வேலை செய்யாவிட்டால் வூர் நிலைமை மோசம்.//

    For the below questions
    //2) மந்திரம் ஓதும் பார்ப்பணர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடங்கள் ஏதும் இல்லை. சுடலைக் காப்பாளர்களின் நிலைமை?

    3) சுடலைக் காப்பாளர்கள் தங்கும் இடம் மட்டும் ஏன் இடுகாட்டினை ஒட்டியே இருக்கிறது ?

    4) பிணம் எரிக்கும் பணியை ஒரு தொழில்முறையாய் மாற்றிய கோமான்கள் யார்.

    I neither arranged the above nor accep the above!

  65. இந்து மதத்தை ஒழித்தால் தான் சாதி முறை ஒழியும் ,இந்து மதத்தின் அடிப்படையே தவறு ! வேதங்களில் சிறு தெய்வ வழிபாடும் ,மாந்த்ரீக தந்திரங்களும் இருக்கிறது, உபநிடதங்களில் இறைவன் என்று ஒன்று தனியே இல்லை என்று அத்வைதத்தை போதிக்கிறது! பகவத் கீதையில் கிருஷ்ணன் தானே கடவுள் என்கிறான் ! பாகவதம் முழுமையான அருவருக்க தக்க செக்ஸ் புத்தகம் ,பாலசந்தர் படம் போல ! இதில் எது இந்து மதம் ! இந்து மதம் மீளவில்லை அது பார்பனரை தன வசம் கொண்டு மற்றவர்களை ஏமாற்றி கொண்டு வருகிறது! அதன் ஆதிக்கம் குறைந்து வருகிறது ,அதற்கு ஆதாரமே மிக பழமையானது என்று சொல்லி கொள்கிற மதம் ஒரு நாட்டில் மற்றுமே பின்பற்றபடுகிறது.அதன் மொழியான வடமொழி பேச்சு வழக்கு ஒழிந்து போனது.சொல்லபோனால் பார்பனர்கள்தான் பெரியாரை போற்ற வேண்டும் ,பெரியார் இல்லையென்றால் பார்பன பெண்கள் இனும் மூலையில் மொட்டை அடித்து உட்கார வேண்டியதுதான் . ஒவொரு மக்களையும் மீட்க்க சமுதாயத்தை சீர் திருத்த ஒருவர் தேவை .அந்த இடத்தை தமிழ்நாட்டில் பெரியார் நிரப்பினார் , வடக்கில் அம்பேத்கர் செய்தார். இந்திய முழுதும் மாறியதற்கு பெரியார் தான் காரணமா என்று கேள்வி கேட்பது குழந்தை தனமாக தெரிகிறது.ராமானுஜர் வெற்றிபெற்று இருந்தால் இப்போது ஒரு தலித்தை ஐயங்காராக ஏற்றுகொள்வார்களா !

  66. அன்புள்ள திருச்சிக்காரன் அவார்களே,

    நான் எழுப்பிய சில கேள்விகளுக்கு ஏதோ பதில் எதிர்பார்த்ததைப் போல், சாமர்த்தியத்தின் துணை கொண்டு எழுதியிருக்கிறீர்கள். எனது பதிவின் சாராம்சம் இது தான்:

    //… பெரியார் உள்பட பல பெரியவர்கள் ஏற்கனவே தெளிவு படுத்தியும், இன்னும் நிலை மாறாமல் இருப்பவையே. இது போன்ற கேள்விகளில் உள்ள பகுத்தறிவு புலனாகும் வரை, பெரியார் சிறியாராகத் தான் தெரிவார். இது பெரியாரின் குற்றம் அல்ல.//

    I didn’t accept the above என்று கூறியதன் மூலம், அந்த நிலைமைகள் மாறவில்லை என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்கள். நன்று. பெரியார், இந்த வேற்றுமையின் ஆணிவேரை அசைக்க முற்பட்டாரே ஒழிய, நீங்கள் பிரசங்கம் செய்வது போல், சாதி துவேஷத்தை பரப்பவில்லை. நுனிபுல்லாக பெரியாரை மேய்பவர்களுக்கு, இந்த உண்மைகள் என்றுமே விளங்குவதில்லை. Again, அது பெரியாரின் குற்றம் அல்ல.

  67. சகோதரர் Matt அவர்களே,

    //இந்திய முழுதும் மாறியதற்கு பெரியார் தான் காரணமா என்று கேள்வி கேட்பது குழந்தை தனமாக தெரிகிறது//

    எனக்கு பெரியாரின் பேரில் எந்தக் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.

    ஆனால் தமிழ் நாட்டுக்கு வெளியே பெரியாருக்கு எந்த தாக்கமும் கிடையாது.

    எனவே இந்தியா முழுவதும் தாழ்த்தப் பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் உருவாக்கப் பட்டு செயல் படுத்தப் பட்டு வரும் போது, தமிழ் நாட்டிலும் அது நடை பெறுகிறது என்பதே உண்மை.

    பெரியார் வரும் முன்பே தமிழ் நாட்டில் பார்ப்பன எதிர்ப்பு இருந்தது, இட ஒதுக்கீடும் இருந்தது.. பெரியாரும் அந்த வண்டியில் ஏறினார். தமிழ் நாட்டில் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் இடையில் நடந்த போட்டியை, மோதலைப் பற்றி விவேகானந்தர் 1897 ம் வருடம் அவர் சென்னையில் பேசியபோதே குறிப்பிட்டு உள்ளார்.

    பெரியார் விரும்பியதும், உழைத்ததும், செய்ததும் பார்ப்பனர்களைக் கீழே இறக்கத்தான். தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றம் என்ற வகையிலே தனியாக பெரியார் எதையும் செய்யவில்லை.

    “என்னைத் தொடாதே , என்னைத் தொட்டால் தீட்டு” என்ற அநியாயமான இழிவை செய்த பார்ப்பனர்களின் கையிலே இருந்து அதிகாரத்தை மாற்றித்,

    தலையை வெட்டித் தெருவில் உருட்டும் கொடுமையை, வாயிலே பீ திணிக்கும் கொடுமையை செய்பவர்களின் கீழே அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் வாழும்படிக்காக தலித்துகளை எப்போதைக்குமாகக் கொண்டு வந்துதான பகுத்தறிவுப் பகலவனால் உண்டான விளைவு!

    தலித்துகளின் பேரில் அக்கறை இருந்தால் ஏன் ஒரு தலித்தை தன கழகத்திற்கு தலைவர் ஆக்க வில்லை?

    இதை நாம் மீண்டும், மீண்டும் எழுதக் காரணம் இதன் உண்மைகளை அறிந்தோ, அறியாமலோ அதை ஒத்துக் கொள்ள மனமில்லாமல் உள்ளனர். எனவே தெளிவு படுத்த வேண்டியதாக உள்ளது.

  68. பொய்யை திரும்ப திரும்ப சத்தமாக சொன்னால் உண்மையாகிவிடாது.ஒருத்தன் உங்க கிட்ட ஒரு பொருளை திருட பார்க்கிறான்.அவன்கிட்ட இருந்து உங்கள காப்பாத்துறேன், திரும்ப வேறொருத்தன் உங்ககிட்ட இருந்து திருடிடான். இதுக்கு காரணம் நானா ! திருடனை ஏசுவதை விட்டுவிட்டு என்னை ஏசுவது எந்த விதத்தில் நியாயம் இப்படிதான் இருக்கு உங்கள் வாதம். பெரியாரை பழிக்க வேண்டும் அதற்கு தானே இதனை பாடு. சாக்கடைக்கு உள்ளேயே உக்கார்ந்துகொண்டு ஊரு சுத்தம் இல்லாம இருக்கு என்று சொல்வது போல் இருக்கிறது இந்து மதத்தில் இருந்து கொண்டு சாதி கொடுமையை பற்றி பேசுவது! ஜெயேந்திரனை போன்ற பொறுக்கிகளை பற்றி எவளவுதான் நிரூபித்தாலும் அவனை ஆதரிப்பது , போன்ற நிலைகளில் இருந்துகொண்டு சமுதாயத்தை பற்றி சிந்தித்தால் இப்படிதான் பேச தோணும். பெரியாரின் பதிலே இங்கு பொருத்தமாக இருக்கும் “என்னை வையரதுனால ஒனும் ஆகிவிடாது ,கையில என்ன சரக்கு இருக்கு அத காட்டு”

  69. //இந்து மதத்தை ஒழித்தால் தான் சாதி முறை ஒழியும் ,இந்து மதத்தின் அடிப்படையே தவறு ! //

    நான் முன்பே கூறியபடி இந்து மதத்தின் அடிப்படைகளை அந்த மதத்தில் புலமை பெற்றவர்கள் என்று கூறுபவர்களே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

    சகோதரர் Matt இன்னும் சிறிது ஆழமாக ஆராய்ந்தால் அவருக்கு இந்து மதத்தின் அடிப்படை புலப்படும்.

    இந்து மதத்தின் அடிப்படை உண்மை தான்.

    “உண்மை எப்போதுமே வெல்லும்” என்பதே இந்து மதத்தின் அடிப்படை.

    யார் ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் உண்மையை வெல்ல முடியாது.

    “”உலகம் உருண்டை”” என்று கூறிய அறிங்கரை நெருப்பில் போட்டு எரித்தனர் ஐரோப்பிய மத வெறியர்கள்.

    ஆனால் உலகம் உருண்டை என்ற உண்மையை அவர்களால் எரிக்க முடியாது.

    எனவே “சத்யம் ஏவ ஜெயதே” என்ற மிகச் சிறந்த உண்மையை, முண்டக உபநிஷத் கூறியுள்ளது.

    அதுவே இந்து மதத்தின் அடிப் படை.

    எனவே கடவுள் என்று ஒருவர் இல்லை என்பது மிகச் சரியான, சந்தேகத்திற்கு அப்பாற்ப்பட்ட வகையில் உண்மை என்று நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ள கூட இந்து மதத்திற்கு பிரச்சினை இல்லை.

    Hinduism gives comprehensive and complete authority to Truth.

    Hinduism gives unqualified authority to Truth.

    Nothing is above Truth in Hinduism!

    எனவே உண்மை வலிமையானதும் வெல்லப்பட முடியாததும் ஆக இருப்பதால், அதற்கு -உண்மைக்கு- முழு அதிகாரம் குடுத்துள்ள இந்து மதமும் அதே அளவுக்கு உறுதியாகி விட்டது.

    எனவே உண்மையைத் தேடுவதே அதன் குறிக்கோள் ஆக உள்ளது.

    “அசத்தோமா சத் கமய””-
    (“உண்மையல்லாத நிலையிலிருந்து உண்மைக்கு”)

    – பிருஹத் ஆரண்ய உபநிஷத்

    இந்த அடிப் படையில் என்ன தவறு? எப்படித் தவறாக முடியும்?

    உண்மையை எதிர்த்து அழிக்க முடியுமா?

    //வேதங்களில் சிறு தெய்வ வழிபாடும் ,மாந்த்ரீக தந்திரங்களும் இருக்கிறது, உபநிடதங்களில் இறைவன் என்று ஒன்று தனியே இல்லை என்று அத்வைதத்தை போதிக்கிறது! பகவத் கீதையில் கிருஷ்ணன் தானே கடவுள் என்கிறான்//- இதை அடுத்த பின்னூட்டத்தில் பார்ப்போம்.

  70. //இந்து மதத்தில் இருந்து கொண்டு சாதி கொடுமையை பற்றி பேசுவது! ஜெயேந்திரனை போன்ற பொறுக்கிகளை பற்றி எவளவுதான் நிரூபித்தாலும் அவனை ஆதரிப்பது , போன்ற நிலைகளில் இருந்துகொண்டு சமுதாயத்தை பற்றி சிந்தித்தால் இப்படிதான் பேச தோணும்//

    நான் பெரியாரை ஆதரிக்கிறேன் , ஜெயேந்திரரை எதிர்க்கிறேன் – நண்பர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் முன்பு பிற தளங்களில் எழுதியவை இதோ,

    //Thiruchchi kaaran
    3 August 2009 at 5:47 pm
    இந்து மதத்தை காக்க பெரியாரைத் திட்டினால் போதும் என்று நினைபவர்களுக்கு, ஒரு சக இந்து என்ற முறையில் நான் சொல்லிக் கொள்வது என்ன என்றால், நீங்கள் மலையைக் கிள்ளி எலியை அடிக்கப் பார்க்கிறீர்கள் என்பது தான். பெரியாரை பற்றி அவர் இப்படி, அப்படி என்று இப்போது விலாவாரியாக ஆராய்ந்து எழுதி நீங்கள் சாதிக்கப் போவது என்ன?

    “கடவுள் இருக்கிறாரா?” என்று கேட்பதில் தவறில்லை. “கடவுள் இல்லை” என்று கூறுவதிலும் தவறு இல்லை.

    கடவுள் இல்லை என்ற அடிப்படையில் இருந்து கொண்டு, அப்படி கடவுள் என்று ஒருவர் இருக்கக் கூடுமோ என்று ஆராய்வதுதான், மிகச் சிறந்த கடவுள் ஆரய்ச்சி. விவேகானந்தர் நாத்தீகராக இருந்து ஆராய்ந்து ஆத்தீகர் ஆனவர்.

    பெரியாரிடம் பகுத்தறிவும் இருந்தது. அடாவடியும் இருந்தது. பெரியார் கூறியதைப் படித்தவர்கள் அவரிடம் இருந்து அடாவடித் தனத்தை மட்டும் கற்றுக் கொண்டார்களே தவிர பகுத்தறிவைக் கற்கவில்லை.

    பெரியாரிப் பாராட்டுவது என்றால் அவருடைய எதிர்த்து கேள்வி கேட்கும் Method is appreciable.

    Tamil nadu politics was controlled by Bhramins, hence the fight to wrestle the power from Bhramins was started much before Periyaar by Justice Party leaders.

    But we dont want to under estimate Periyaars effect on Tamil nadu soceity from the period 1920 to 1970.

    But the effect of Periyaars writings can not make the same chemical reaction in tamil nadu hereafter.

    Because Periyaars strong points were

    1)Bhramins were not mingling with non- Bhramins.
    Bhramins were considering themselves as higher class people during Periyaars days

    2) Bhramins were high in numbers in Governmet Jobs and in Politics.

    3) Hindu Religion was eclipsed with Superstition and Rigid caste system.

    Now the above three points are nullified as follows,

    1) Bhramins are mingling with non Bhramins freely. Many Bhramins eat at their friends home, including the friends from suppressed once.

    2) Bhramins presence in Government offices are negligible

    3) Hinduism is cleared of Superstition to a great extent. caste system is fostered by political leaders/ Caste leaders for their own benefit. now even suppressed people depict their caste tag proudly. Its only in tamil nadu the caste feeling is very high than in any other part of India. Hence in that way Periyaars camapaign in fact resulted increase in caste pride rather making a homogenious soceity.

    Hence we can use Periyaars life as a mile stone, But its effect on future generations will be negligible.

    The Congress fought against British from 1885 to 1947. But is there any meaning if congress started fighting against British now?

    Similaraly Periyaar camapaigned against Hinduism, Caste proud Bhramins during 1920 to 1970. Now the caste feeling Bhramins are not there. They are gone.

    I request the todays Hindutvaists as not to waste their time in debasing Periyaar, but use their energy to unite all Indians and to improve India.

    Also Hinduism has povision for atheism in it. Hinduism allows rebellion against God.Infact the Periyaars history shows that Hinduism allows unbridled experiments on religion, while there is no scope or room for experimenters in many other religions! Hence please try to interpret Periyar in the right context, for the betterment of Hinduism!

    We need not altogether reject Periyaar’s observation.

    We have to understand and accept the following facts.

    1) Bhramins were maintaining more distance from the other sections of the soceity

    2) We failed to take the core principles of Hinduism to all sections of the Hindu Soceity.

    3) We did not remove superstition from Hinduism fully.

    On the above back ground , let us grasp Periyaar’s preachings in the right context and shall work for the Betterment of all Indians, not Just only other Hindus, but also Muslims, Christians as well- though they keep on abusing us!

    Another part of the matter is that we dont have Bhramins- good,kind brilliant and gentleman Bhramins now.

    Because I think that we, the so called ” Bhramins ” of today are very weak in Spirtualism and religion, which was exposed by Jeyanthiraa episode.We paid little or no attention to Hinduism to that extent that we could not identify whether a person is fit to be a Guru or not!

    So we have to learn, modify little!

    And we have lot of work left before us.

    If we read what Swami Vivekanatha said, it can shed more light!//

  71. //இந்து மதத்தில் இருந்து கொண்டு சாதி கொடுமையை பற்றி பேசுவது! ஜெயேந்திரனை போன்ற பொறுக்கிகளை பற்றி எவளவுதான் நிரூபித்தாலும் அவனை ஆதரிப்பது , போன்ற நிலைகளில் இருந்துகொண்டு சமுதாயத்தை பற்றி சிந்தித்தால் இப்படிதான் பேச தோணும்//

    திருச்சிக் காரன்
    19 August 2009 at 12:22 am

    “முட்டாள் தனத்துக்கு ஏதாவது எல்லை இருக்கிறதா? எல்லை இல்லை என்றால் உதாரணம் காட்டு பார்க்கலாம்!” என்று யாரவது கேட்டால், அதற்கு எளிய உதாரணமாக, இன்னமும் சந்திரசெகேந்திர சரஸ்வதி, ஜெயேந்திர சரஸ்வதி புராணம் பாடிக் கொண்டிருக்கும் பத்தாம் பசலிகளைக் காட்டலாம்.

    இவர்களின் செயல் முறை என்னவென்றால் வரலாற்றில் சிறந்து விளங்கிய ஏதாவ‌து ஒரு புகழ் பெற்ற இந்து மத அறிங்கரை தேர்ந்து எடுப்பது,

    அவருக்கு நாங்க தான் ஏஜென்ட்டு என்று பட்டா, பத்திரம் இருப்பது போல அடித்து சொல்வது,

    கூட சில அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் சேர்ப்பது,

    அவர்களை வைத்து அரசாங்கத்திலும், சமூகத்திலும் சில வேலைகளை செய்து முடிப்பது,

    சரி, இவரிடம் போனால் வேலை எளிதாக முடியும் என்று இன்னும் அதிக அளவில் அராசாங்க அதிகாரி, பணக்கார முதலாளி, அரசியல் வாதி, தனியார் நிறுவன் அதிகாரி என்று அதிக பேர் வர, போக இருப்பது,

    இத‌னால் பிரும்மாண்ட‌மாக ப‌ண‌க் குவிய‌ல், சொத்து, ம‌ருத்துவ‌ம‌னை, க‌ல்லூரிகள் சேர்க்க‌ப் ப‌டுத‌ல் சேர்க்க‌ப் ப‌டுத‌ல்,

    இத‌னால் மேலும் அதிக‌ அர‌சிய‌ல் செல்வாக்கு, ச‌மூக‌ செல்வாக்கு, இன்னும் அதிக‌
    ப‌ண‌க் குவிய‌ல், சொத்து,

    அசைக்க‌ முடியாத‌ நிலையை அடைத‌ல்!

    இப்போது சொல்லுங்க‌ள், இந்து ம‌த‌ம் எங்கே இருக்கிற‌து? புதைகுழியில் இருக்கிற‌து! இந்து ம‌த்தைப் புதைத்து அத‌ன் மேல் இப்ப‌டிக் க‌ட்டுகிறார்க‌ள்!

    நாம‌ என்ன‌ இடைக்கால‌ ஐரோப்பாவிலா இருக்கிறோம்?

    இத்த‌னையும் மீறி எவ‌னாவ‌து அசைக்க‌ப் பார்த்தால், அசைக்க‌ முடியாத‌ ப‌டிக்கு அணை க‌ட்டுகிறார்க‌ள்.

    துற‌வி என்றால் யார்? எல்லாவ‌ற்றையும் துற‌ந்த‌வ‌ன் தானே?

    இவ்வ‌ள‌வு காசு இவ‌ர்க‌ளுக்கு எத‌ற்க்கு?

    புத்த‌ர், ச‌ங்க‌ர‌ர், அப்ப‌ர், விவேகான‌ந்த‌ர் ஆகியோர் த‌ங்க‌ள் ஆன்மீக‌ப் ப‌ணியைத் துவ‌க்கிய‌ போது அவ‌ர்க‌ளிட‌ம் ப‌ண‌ம், அர‌சிய‌ல் செல்வாக்கு இருந்த‌தா?

    அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையில் ப‌ணத்தையோ, செல்வாக்கையோ ந‌ம்பிய‌து உண்டா? ப‌ணமோ, த‌ங்க‌மோ, செல்வாக்கோ, ப‌த‌வியோ-‍இந்த‌ உல‌கத்தில் ம‌க்க‌ள் அடைய‌ விரும்பும் எந்த‌ பொருளும்- அவ‌ர்க‌ளைக் காக்க‌ முடியாது என்ப‌து தானே ஆன்மீக‌த்தின் அடிப்ப‌டை?

    மார்க்கண்டேயன், பிரகாலாதன், துருவன், புத்தர்,சங்கரர், தியாகராசர், பட்டினத்தார், அப்பர், விவேகானந்தர்…..இவ‌ர்க‌ளை எல்லாம் உதைத்து கீழே த‌ள்ளி விட்டு அந்த‌ இட‌த்திலே ப‌ண்ணையார்க‌ள வைக்கீறார்க‌ள்!

    கேட்டால் “ப‌ண‌த்தை வ‌ச்சு ச‌மூக‌ சேவை செய்தொம்” அப்ப‌டீன்கீறார்க‌ள்!

    அப்ப‌ த‌ன்னார்வ‌ தொண்டு நிருவ‌ன‌ங்க‌ளுக்கும் , உன‌க்கும் இன்னா வித்யாச‌ம்?

    Wall Mart அதிப‌தி த‌ன் சொத்துல‌ பாதியை ச‌மூக‌ சேவைக்கு குடுக்கிறார். அப்ப‌ அவ‌ரு க‌ட‌வுளின் பிர‌திநிதி என்று அவ‌ரை காலில் விழுந்து வ‌ண‌ங்க‌ப் போறோமா? இத்த‌னைக்கும், அவ‌ரு த‌ருவ‌து அவ‌ர் ச‌ம்‌பாரித்த‌ ப‌ண‌ம்! இவ‌ர்க‌ளிட‌ம் உள்ளது பிற‌ர் குடுத்த‌ ப‌ண‌ம்! ந‌ல்ல‌து செய்ய‌ நாலு பேர் குடுத்த‌ ப‌ண‌த்துல‌ (இல்ல‌ அன்ப‌ளிப்பு என்ற‌ பெய‌ரில் வ‌ந்த‌ க‌மிச‌னோ)கொஞ்ச‌ம் ச‌மூக‌ சேவைக்கு குடுத்து விட்டு, க‌ட‌வுள் பிர‌திநிதி ப‌ட்ட‌மா?

    ஜால்ராவைப் போட்டு, கொள்ளையில் ப‌ங்கு கிடைக்குமா என‌க் காத்திருக்கும் க‌ன‌வான்க‌ளுக்கும், மூளையை அட‌கு வைத்த‌ மூட‌ர் கூட்டத்‌துக்குமே இவ்வ‌ளவு உண‌ர்ச்சி இருக்கும் போது,

    புன்னாக‌வ‌ராளியா பாடிக் கொண்டு இருப்போம்?

  72. நண்பர்களே நான் ஜெயேந்திரரை விமரிசித்த அளவில் பத்தில் ஒரு பங்கு கூட பெரியாரை விமரிசிக்கவில்லை.

    என்னுடைய பதிவீடுகளில் ஒன்றை இங்கெ இப்போது உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

    திருச்சிக் காரன்
    20 August 2009 at 1:33 am

    எனக்குத் தெரிந்தவகையில் ஜெயெந்திர‌ர் சிறந்த‌ நிர்வாகி, க‌டுமையான‌ உழைப்பாளி, ஆர்வ‌மும் , சுறுசுறுப்பும் உள்ள‌வ‌ர், எல்லாவ‌ற்றுக்கும் மேலாக த‌லைமை தாங்கி ந‌ட‌த்தும் ஆற்ற‌ல் (leadership capacity) உள்ள‌வ‌ர்.

    ஆர்.எஸ்.எஸ். அல்ல‌து வி.ஹெ. பி போன்ற‌ அமைப்புக‌ளுக்கு த‌லைமை தாங்கி ந‌ட‌த்த‌ த‌குதியான‌வ‌ர். அவ‌ர் அரசிய‌ல் க‌ட்சியில் இருந்தால் பிர‌த‌ம‌ராக‌வே வ‌ந்திருப்பார். நாம் கேலிக்காக கூற‌வில்லை. உண்மையைத் தான் கூருகிறொம்.

    ஆனால் அவ‌ருக்கு பொருத்த‌மில்லாத‌ ஒரு ஸ்லாட்டில் அவ‌ர் மாட்டிக் கொண்டார்.ஆன்மீக‌த்தில், துற‌வில் அவ‌ருக்கு சிறப்பு திற‌மை இல்ல‌, அது அவ‌ருக்கு இய‌ல்பாக‌ வ‌ர‌வில்லை. அவ‌ர் எதில் வீக்கோ, அந்த‌ ச‌ப்ஜெக்டில் அவ‌ர் பொருத்த‌ப் ப‌ட்டார்.

    என‌வே அவ‌ர் பில்டிங்க் ரொம்ப‌ ஸ்டிராங்கு, பேஸ்மென்ட் ரொம்ப‌ வீக்கு என்ற‌ நிலைக்கு போனார். அவ‌ரை ச‌ரியாக‌ மோல்டு செய்யது இருக்க‌லாம். ஆனால் அவ‌ரை உஷார் ப‌டுத்தும் அளவுக்கு ச‌ந்திரசெகேந்திர சரஸ்வதியிட‌ம் ஆன்மீக‌ம் இல்லை என்றே முடிவுக்கு வ‌ர‌ வேண்டியுள்ளது!

    என்வே துறவிக்கு , ஆன்மீக‌ வாதிக்கு எது முக்கிய‌மோ அதிலே இட‌றி விட்டார். எங்களைத் திட்டி என்ன‌ ப‌ல‌ன்?

    துற‌வி, ஆன்மீக‌ வாதி க‌ட‌வுளிட‌ம் இருந்தே ச‌க்தியைப் பெறுவான். அதை வைத்து எந்த‌ வேலையையும் செய்து முடிப்பான்.

    ஆனால் ஜெயெந்திர‌ர் ப‌ண‌க்கார‌ர், அர்சிய‌ல் வாதி, அதிகாரி இவ‌ர்க‌ளுட‌ன் ப‌ழ‌கிப் ப‌ழ‌கி அவ‌ர்க‌ளைப் போல‌வே ப‌ணத்தை, செல்வாக்கை, ம‌க்க‌ளிட‌ம் உள்ள‌ புக‌ழை ந‌ம்ப ஆர‌ம்பித்து விட்டார்.

    உண்மையில் ஜெயெந்திர‌ர், ச‌ந்திரசெகேந்திர‌ர், காஞ்சி அமைப்பு இவைக‌ள் இல்லாம‌ல் போயிருந்தால், த‌மிழ் நாட்டில் , இந்தியாவில் இந்து ம‌த‌ம் ஒன்றும் ஆடிப் போயிருக்காது. ஜ‌ன‌ங்க‌ பெரியார் கூறுவ‌தைக் கேட்டுக் கொண்டே, வ‌ழ‌க்க‌ம் போல‌ ப‌ழ‌னி, திருச்செந்தூர், திருப்ப‌தி என்று அதிக‌ அள‌வில் குறைவில்லாம‌ல் போய்க் கொண்டுதான் இருந்தார்க‌ள்.

    என‌வே தேவைக்கு மேல் ஹைப் குடுத்து ஒன்றைத் தூக்கி விட்டு, அதில் ஆப‌த்து என்று தெரிந்தும் ந‌ம்ப‌ த‌ல‌யில‌ க‌ட்ட‌ப் பார்க்கும் இவ‌ர்க‌ளுக்கு, ஆமாம் சாமி போட்டால் ஓநாயை ந‌ம்பிய‌ ஆட்டின் நிலையை அடைவோம்.

  73. உங்களுக்கான பதில் உங்களிடமே இருக்கிறது ! ஏன் எல்லோரையும் குழப்ப வேண்டும் ! அதுதான் ஏன் கேள்வி ! பெரியாரை பற்றி பேசும் முன் அதற்கான அருகதை நமக்கு இருகிறதா என்று பார்க்க வேண்டும் உங்களது பெரியார் மீதான குற்றச்சாட்டுக்கு காரணம் உங்களையே அறியாமல் பார்ப்பனியம் உங்களுக்குள் செயல்படுகிறது .ஏன் வேண்டுகோள் கடவுளை மறுக்க சொல்லவில்லை , மற்றவர்களுடன் கலந்து கொள்ளுங்கள் அதற்கு தடையான பார்பனீயத்தை அறுத்து எறியுங்கள் ,அதை விட்டுவிட்டு இந்து மதம் அப்படி சொன்னது இப்படி சொன்னது என்கிற இந்த கதைகள் தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் உதவாது .

  74. //கிருட்டினர் எந்த இடத்திலும் தச்சனின் மகன் தச்சனாகவும், அரசனின் மகன் அரசனாகவும் , பார்ப்பானின் மகன் பார்ப்பனாகவும் இருக்கவேண்டும் என்று கூறவேயில்லை//

    திருச்சிகாரரே வரலாறு தெரியாமல் பேசவேண்டாம்.
    இந்து மத வர்ணாஸ்ரம தர்மத்தை ஒட்டிதான் குலகல்வி முறை காந்தியாலும், தமிழ் நாட்டில் ராஜாஜியாலும் கோரப்பட்டது.

    குலகல்விமுறை என்பதை பற்றியாவது தெரியுமா?

    //இந்து ம‌த‌மோ, எந்த‌ ம‌த‌மோ, இனி சாதி வேறுபாடு இல்லை//

    சாதியின் மூலமே இந்துமதம்னு சொல்கிறோம்.

    சாதி வேறுபாடு இல்லை. அப்ப மதம் வேறுபாடு இருக்கலாமா?
    இதன் மூலம் தெரிகிறது நீங்கள் இந்துமத்ததை விட்டுகொடுக்காத இந்துமதபற்றாளர்.
    இதை தான் நாங்கள் இந்துமத வெறி என்று கூறுகிறோம்.
    ஆர்.எஸ்.எஸ் காரன் ஒரிஸ்ஸாவில் கிறித்தவர்களை படுகொலை செய்த்து, குஜராத்தில் இஸ்லாமியர்களை கொன்று குவித்தது இவையெல்லாம் உங்க மதம் செய்த்து தான்.

    அம்பேத்கர் இந்து மதத்தை, கிருஷ்ணனை, ராமனனை ராம பக்தர் காந்தியையும் கடுமையாக சாடினார்.
    ஆதாரம் கேட்பீர்கள் என்று தெரியும். எனவே அம்பேத்கரின் “THE RIDDLE OF RAMA AND KRISHNA” என்ற புத்தகத்தை படித்து பார்க்கவும்.

    உண்மையாகவே அம்பேத்கரை ஏற்று கொள்பவன் இந்துமதத்தை ஏற்றுக் கொள்ளமாட்டான். இந்து மத்த்தை ஏற்றுக் கொள்பவன் அம்பேத்கரை ஏற்றுகொள்ளமாட்டான். அப்படியிருந்தால் அது போலிதனமானது ஆர்.எஸ்.எஸ் மாதிரி.
    நீங்கள் எப்படி? நீங்களும் போலியா?

    Dr Ambedkar says the cardinal principles of Brahminism are six:

    1. Graded inequality between the different classes.

    2. The complete disarmament of the Shudras and Untouchables.

    3. The complete prohibition of education to the Shudras and Untouchables.

    4. Ban on the Shudras and the Untouchables in occupying places of power and
    authority.

    5. Ban on the Shudras and the Untouchables in acquiring property.

    6. The complete subjugation and suppression of women.

    “Inequality is therefore the official doctrine of BRAHMINISM” (IBID – 204).

    “Devadhinam jagat sarvarm
    Mantradhinam ta devata
    Tam Mantram Brahmandhinam
    Brahmana nam devata”

    Meaning:

    The Universe is under the power of gods,
    The gods are under the power of the mantras,
    The mantras are under the power of the Brahmins,
    Therefore the Brahmins are our gods.

    Abbe J.A. Dubois’s “Hindu Manners, Customs and Ceremonies” Oxford, Third
    Edition 1906, Page 139. See also page 93.

    மனுதர்ம்ம் எவ்வாறு பார்பனரல்லாதவரை மட்டுபடுத்தி பார்ப்பனரை மட்டும் உயர்தியது என்பதற்கு, சான்று. வேதங்களை கேட்பவன் காதில் உலோகத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும், அப்படியே அவன் நெஞ்சில் வேதம் பதிந்திருந்தால் உடல் இரண்டாக பிளக்கவேண்டும் என்று கூறுகிறது. பார்ப்பான் என்னதான் குற்றங்களை இழைத்தாலும் அவனை தண்டிக்க்கூடாது. இதுதான் மனுதர்ம்ம்.

    கல்வி மறுப்பு,

    Here is the aphorism of the Brahma-Sutras:

    “shravana, adhyana, arthapratishedhat smriteh ca” (Brahma-Sutras 1.3.9.38)

    Meaning:

    “The smrithi orders that shudras must be prohibited from hearing, studying and understanding the Vedas.”
    —-
    MANU 162-272 says:

    If a Shudra arrogantly teaches Brahmins, Dharma, the king shall cause hot oil to
    be poured into his mouth and ears.

    —-

    The tongue of a Shudra, who spoke evil about a BRAHMIN should be cut off A
    Shudra who dared to assume a position of equality with the first three castes was to be flogged.
    (Apastambha Dharma Sutra III, 10-26)

    If a Shudra overheard a recitation of the Vedas, molten tin was to be poured into his ears; if he repeated the Vedas his tongue should be cut and if he remembered Vedic hymns, his body was to be torn into pieces.

    MANU 167-272 says:

    If a Shudra arrogantly teaches Brahmins Dharma, the king shall cause hot oil to be
    poured into his mouth and ears.

    Again MANU 167-272 says:

    Let the king never slay even a Brahmin though he may have committed all possible
    crimes.

    அடிமை புத்தியை மனிதனின் மனத்தில் ஆழமாய் விதைத்து இந்த வீணாய்போன வேதங்களே.

    On Low Caste Hindus! Have a look and see what the MANU says (Chapter VIII
    Sloka 4,14).
    “Slavery is inborn among the Shudras and no one can free them from it”.

    The Brahmin originated MANU again says in Chapter 19, Sloka 413:

    //இஸ்லாத்தில் அடிமையாக‌ கிடைத்த‌ பெண்ணை ” எப்ப‌டி” வெண்டுமானாலும் உப‌யொக‌ப் ப‌டுத்திக் கொள்ளாலாம். அவ‌ர்கள் திருந்தி விட்டார்க‌ள்.//

    அவர்கள் மட்டும் தான் அப்படி என்று லாவகமாக நழுவாதீர்கள்.
    நீங்கள் ஆதரிக்கும் இந்துமதமும் அவ்வாறே கூறியது. இன்னும் சொல்லபோனால் இன்னும் இழிவாக,

    WOMEN IN HINDUISM

    Manu Smriti says:

    Never trust a woman.
    Never sit alone with a woman even if it may be your mother, she may tempt you.
    Do not sit alone with your daughter, she may tempt you.
    Do not sit alone with your sister, she may tempt you.

    Again the same Manu Smriti continues:
    “Na stree swadantriya marhathi”.
    “No liberty for women in society”.

    இந்துமத்த்திற்கு வக்காலத்து வாங்கும் இந்துமத பிரியரே!

    கிறித்தவம்,இஸ்லாம், மாதிரி இந்து மதம் ஒன்று இல்லவே இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

    இதற்கும் நீங்கள் ஆதாரம் வேண்டுமென்றால் சொல்லுங்கள் தருகிறேன்.

    //அம்பேத்கர் தனக்கு ஏற்ப்பட்ட கசப்பான அனுபவங்களினால், ஜாதி வித்யாசம் குறையுமா, பிற சாதியினர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்வார்களா, என்ற எண்ணத்தினால் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த மக்கள் தனியாக வாக்களிக்க வேண்டும் என்று நிலைப்பாட்டை எடுத்தார். //

    அம்பேதகர் மக்களின் வாழ்வு சமூகத்தில் உயர தனக்கான நபரை தாழ்த்தபட்ட மக்கள் தேர்ந்தெடுக்கவே அந்த நிலைபாட்டை எடுத்தார். சும்மா வாய்க்கு வந்தார் போல் உளராதீங்க.

    //ஆனால் காந்தியோ அது சாதிப் பிரிவினைகளை என்றைக்கும் நிரந்தரம் ஆக்கி விடும் என்ற கவலையில் இருந்தார்.//

    சரி. பிரிவினை ஏற்படுத்த கூடாது என்ற நல்ல எண்ணத்தில் காந்தி கூறி இருப்பாரெனில் தாழ்த்தபட்ட மக்கள் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க போராடிய போது, “ஏன் பிரச்சனை செய்கிறீர்கள், வேண்டுமென்றால் உங்களுக்கான கிணற்றை நீங்களே தனியாக தோண்டிக்கொள்ளலாமே” என்று சொன்னாரே.
    இதன் அர்த்தம் என்ன?
    பிரிவினையை ஆதரித்தவர் காந்தி. மக்களின் உரிமைகளுக்காக போராடியவர் அம்பேத்கர்.

    //அஹிம்சை வ‌ழியிலே‍- அது தான் இந்தியாவின் வ‌ழி‍ -‍ போராடி வெற்றி பெற்ற‌ காந்தி இந்தியாவின் தேச‌த் த‌ந்தையாக‌ உள்ளார்.//

    இதை நீங்கள் நம்பலாம். அதை நம்ப நாங்கள் மாக்கான்கள் அல்ல!

    உங்கள் வீட்டில் ஒரு திருடன் நுழைந்து எல்லாவற்றையும் கண்ணுகெதிராக கொள்ளையடித்து கொண்டு எடுத்து செல்கிறான். அவனுக்கெதிராக சாதியாகிரகம் செய்வீர்களா?

    உங்கள் வீட்டில் எதிர்க்கும் சிலரை கொலை செய்கிறான். அப்போது ஒத்துழையாமை போராட்டம் நட்த்துவீர்களா?

    இந்தியா காந்தியால் சுதந்திரம் அடையவும் இல்லை!

    காந்தி தேச தந்தையும் இல்லை!

    மக்களின் போராட்டங்களை மழுங்கடித்த தேச சனியன்!

  75. திருச்சிக் காரன்,

    நிழல், பொய் முகம் இன்னும் எத்தனை பெயர்களில் நீர் உலா வருகிறீர் என்று எனக்கு தெரியவில்லை. இந்து மதத்தை நம்புவது என்பது உமது தனிப்பட்ட சுதந்திரம்; அதில் எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. ஆனால் மற்ற மதங்களை விட இந்து மதம்தான் சிறந்தது, எனவே இந்தியாவில் வாழும் மாற்று மதத்தினரெல்லாம் இந்துவாக மாறுங்கள் என்றால் இந்து மதம் மற்ற மதங்களைவிட எப்படி சிறந்தது என்பதை நீர் விளக்கவேண்டும். அதை விடுத்து உம்முடைய தந்திரங்களாலும் பொய்களாலும் உம்முடைய இலட்சியத்தை அடைய முயற்சி செய்தால் அது வலையுலகில் பலனளிக்காது. இது படித்தவர்கள் நடமாடும் இடம்; இங்கே நீர் சொல்லும் ஒவ்வொரு பொய்க்கும் தகுந்த ஆதாரத்துடன் பதிலளிக்க ஆட்கள் உண்டு. மறக்கவேண்டாம்.

  76. சகோதரர் ராபின் அவர்களே,

    ஒரு அநியாயமான பொய்யை நீங்கள் எடுத்து வைக்கிறீர்கள்!

    //ஆனால் மற்ற மதங்களை விட இந்து மதம்தான் சிறந்தது, எனவே இந்தியாவில் வாழும் மாற்று மதத்தினரெல்லாம் இந்துவாக மாறுங்கள் //

    இப்படி நான் எங்கே எழுதியிருக்கிறேன்?

    மறுபடியும் கேட்கிறேன்.

    “மற்ற மதங்களை விட இந்து மதம்தான் சிறந்தது, எனவே இந்தியாவில் வாழும் மாற்று மதத்தினரெல்லாம் இந்துவாக மாறுங்கள்” நான் எங்கே என்று எழுதியிருக்கிறேன்?

    உங்களின் எண்ணம் போல பிறரின் எண்ணமும் இருக்கும் என்று நினைக்காதீர்கள்.

    நான் அன்பையும் அமைதியையும் உருவாக்கும் கருத்துக்கள் உலகில் எந்த மத்தில் இருந்தாலும் அதை தெரிந்தெடுத்து பின்பற்றுவேன்.

    கடவுள் ஆராய்ச்சி பற்றி உதவக் கூடிய கருத்துக்கள் எந்த மதத்தில் இருந்தாலும் அதை நான் வரவேற்ப்பவன்.

    உலகில் உள்ள எந்த மதமும் அழிக்கப் பட வேண்டியதில்லை – பிற மதங்களை வெறுக்கும் செயல்களை , பிற மக்களை வெறுக்கும் செயல்களை நிறுத்தினாலே போதும்- உலக அமைதிக்கு – நாகரிக சமூகத்துக்கு அது அவசியம் என்பதும் என் கருத்து.

    நான் மதங்களைப் பற்றி எழுதுவதை தவிர்த்தே வந்தேன்.

    இந்து மதத்தில் நான் அறிந்தது என்ன என்ற கேள்விக்கு நான் அறிந்தவற்றை சொன்னேன்.

    இப்போது நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன், கடின எண்ணமுடையவர்கள் திருந்தும் வகையில் தன்னை சிலுவையில் அறையக் கொடுத்த இயேசு கிறிஸ்துவின் முன், மண்டியிட்டு மரியாதை செலுத்த நான் தயார்.

    நீங்கள் பெரியார் சிலையின் முன் நின்று

    “கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று கூறும்படியான கடவுள் மறுப்புக் கருத்துக்களை கூறும் சிந்தனை சுதந்திரம், எல்லோருக்கும் உண்டு” என்றும்,

    “என் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், பிற கடவுள்கள் ஜீவனில்லாத கடவுள்கள் என்றும் (எந்தக் கடவுளையும் பார்க்காமலேயே) அலப்பறை செய்யும் அமைதிக் கெடுப்பாளர்களைக் கண்டிப்பேன் என்றும் உறுதி மொழி எடுக்கத் தயாரா?

    எல்லோரும் என் மதத்திற்கு வந்தேயாக வேண்டும்- என் மதம் மட்டுமே உண்மையான மதம்- என்று நான் ஒரு போதும் கூறியதோ, கட்டாயப் படுத்தியதோ இல்லை. பிறரைக் கட்டாயப்படுத்தும் காட்டு மிராண்டித் தனத்துக்கு நான் எதிரானவன்.

    அப்படி செய்பவன் இந்து மதத்தவனாக இருந்தால் அவனை நான் முழுமையாக எதிர்ப்பேன்.

    நான் உங்களை இந்து மதத்திற்கு வரும் படிக கட்டாயப் படுத்தவில்லை. நான் உங்களுடன் சேர்ந்து இயேசு கிறிஸ்துவை வணங்கத் தயார் – அவர் நல்ல கொள்கைகளுக்காக வாழ்ந்தவர் , மரித்தவர் என்ற வகையிலே, வணங்கத் தயார்.

    நான் வழி பட சிலுவையைத் தயார் செய்தால், நான் உங்களுடன் சேர்ந்து வழிபாட்டில் கலந்து கொள்வேன்.

    ஆனால் நீங்கள் என்னை அறைவதற்க்காக சிலுவையைத் தயார் செய்வது போலவே உள்ளது.

  77. திருச்சிக் காரன்,

    உம்முடைய தந்திரம் என்னிடம் பலிக்காது. உம்முடைய உண்மையான முகம் என்ன என்பதை உமது பொய் முகம் ப்ளாக்கில் தெரிந்து கொண்டேன்.

    http://poimugam.blogspot.com/2009/09/blog-post_19.html

  78. சகோதரர் ராபின் அவர்களே,

    நான் ஒரு தந்திரமும் செய்யவில்லை.

    சித்தன் என்கிறார்கள் சிலர், பித்தன் என்கிறார்கள் சிலர்.

    அதியமான் என்கிறார்கள் சிலர். பொய் முகம் என்கிறார்கள் சிலர்.

    சகோதரர் ராபின் அவர்களே, எனக்கும் இந்த பொய் முகம் என்கிற வலைத் தளத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.

    இப்போது நீங்கள் அனுப்பிய சுட்டியைப் பார்த்தே நான் அப்படி ஒரு blogspot இருப்பதை அறிந்து கொண்டேன்.

    நான் உங்களை இந்து மதத்திற்கு வரும் படிக கட்டாயப் படுத்தவில்லை. நான் உங்களுடன் சேர்ந்து இயேசு கிறிஸ்துவை வணங்கத் தயார் – அவர் நல்ல கொள்கைகளுக்காக வாழ்ந்தவர் , மரித்தவர் என்ற வகையிலே, வணங்கத் தயார்.

    எல்லோரும் என் மதத்திற்கு வந்தேயாக வேண்டும்- என் மதம் மட்டுமே உண்மையான மதம்- என்று நான் ஒரு போதும் கூறியதோ, கட்டாயப் படுத்தியதோ இல்லை. பிறரைக் கட்டாயப்படுத்தும் காட்டு மிராண்டித் தனத்துக்கு நான் எதிரானவன்.

    அப்படி செய்பவன் இந்து மதத்தவனாக இருந்தால் அவனை நான் முழுமையாக எதிர்ப்பேன்.

  79. சகோதரர் வேந்தன் அவர்களே,

    //திருச்சிகாரரே வரலாறு தெரியாமல் பேசவேண்டாம்.
    இந்து மத வர்ணாஸ்ரம தர்மத்தை ஒட்டிதான் குலகல்வி முறை காந்தியாலும், தமிழ் நாட்டில் ராஜாஜியாலும் கோரப்பட்டது.

    குலகல்விமுறை என்பதை பற்றியாவது தெரியுமா?//

    //”இந்து மத வர்ணாஸ்ரம தர்மத்தை ஒட்டிதான் குலகல்வி முறை காந்தியாலும்”//

    நீங்கள் தயவு செய்து காந்திக்கும் குலகல்வி திட்டத்துக்கும் என்ன தொடர்பு என்று விளக்க முடியுமா?

    இராசாசி குலக் கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது 1952 ல்.

    அப்போது காந்தி உயிருடன் இல்லை.

    அதற்கு முன் குலக் கல்வி என்ற ஒரு திட்டம் இருந்ததாக எனக்குத் தெரிந்த அளவில் இல்லை.

    காந்தி இறப்பதற்கு பல வருடங்கள் முன்னரே அவருக்கும் இராசாசிக்கும் கொள்கை அளவில் விரிசல் இருந்தது.

    நீங்கள் காந்திக்கும் குலகல்வி திட்டத்துக்கும் என்ன தொடர்பு என்று விளக்க முடியுமா?

  80. Dear Brother Matt,
    //பெரியாரை பற்றி பேசும் முன் அதற்கான அருகதை நமக்கு இருகிறதா என்று பார்க்க வேண்டும் உங்களது பெரியார் மீதான குற்றச்சாட்டுக்கு காரணம் உங்களையே அறியாமல் பார்ப்பனியம் உங்களுக்குள் செயல்படுகிறது //

    அருகதை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும், தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டு, உனக்கு தகுதி இல்லை, உனக்கு அருகதை இல்லை, இந்த ரேஞ்சில போனால் அடுத்து வருவது, நீ பேசக் கூடாது, நீ கீழானவன் ….. என்று வந்து நீங்கள் தான் பார்ப்பநீயத்திற்கு வந்து விட்டீர்கள் Matt!

    தைரியமாக இரு தலைவா.

    இங்கெ யாரும் கடவுள் இல்லை.

  81. சகோதரர் வேந்தன் அவர்களே,

    இந்த மனு என்பவர் ஒரு அரசன். இது உங்களுக்குத் தெரியும்.

    மனு இந்து மதத்தை ஸ்தாபித்தவரோ, அல்லது இந்து மதக் கடவுளோ அல்லது வியாசர், ஆதி சங்கரர், விவேகானந்தர் போல ஒரு குருவோ அல்ல. மனு ஒரு அரசர், இந்த நாட்டை ஆண்டவர்.

    மனு வகுத்த விதிகளைத் தான் நீங்கள் வேதங்களாக லாவகமாக கூறுகிறீர்கள்.

    வேதங்களில் எந்த ஒரு இடத்திலாவது தாழ்த்தப் பட்டவர்கள் வேதம் படிக்கக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறதா? இதற்கான சான்றை வேதத்தில் இருந்தே காட்ட முடியுமா?

    மனுவிற்கு முன்னும் இந்து மதம் இருந்தது.
    மனுவிர்க்குப் பின்னும் இந்து மதம் இருக்கிறது.

    புத்தருக்கு முன்னும் இந்து மதம் இருந்தது,
    புத்தருக்கு பின்னும் இந்து மதம் இருக்கிறது.

    சங்கரருக்கு முன்னும் இந்து மதம் இருந்தது,
    சங்கரருக்கு பின்னும் இந்து மதம் இருக்கிறது .

    ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையில் இந்து மதம் பின்பற்றப் பட்டு வந்துள்ளது.

    நான் இங்கெ வந்தது இந்து மதப் பிரச்சாரத்தை செய்ய அல்ல. அதனால் தான் இந்து மதம் பற்றி நாம் எழுதாமல் இருந்தோம்.

    ஆனால் நீங்கள் கூறியதால், வலியுறுத்தியதால் இந்து மதத்தின் மீதான எங்களுடைய கருத்தை தெளிவாகக் கூறுகிறோம்.
    இதில் நழுவலோ, தழுவலோ ஒன்றும் இல்லை.

    இப்போதுள்ள இந்து மதம் எங்கள் கையில் உள்ளது. இதை எங்கள் விருப்படி பின்பற்றுவோம்.

    இப்போது இந்து மதம் மனுவின் கையில் இல்லை. ஜெயேந்திரர் கையிலும் இல்லை.

    இப்போதுள்ள இந்து மதம் எங்கள் கையில் உள்ளது.

    சாதி, மத, இன அடிப்படையில் யாரும் தாக்கப் படக் கூடாது, இழிவு படுத்தப்படக் கூடாது, உலகின் எல்லா மனிதர்களுக்கும் சம உரிமை, பாதுகாப்பு, வழங்கப்பட வேண்டும் என்பது என் உறுதியான, மனப் பூர்வமான கொள்கை.

    இந்து மதத்தை பரிவார் அமைப்புகள் தவறான வழியிலே இட்டுச் செல்லாலாம். ஆனால் நாங்கள் அதை மீண்டும் அஹிம்சை வழிக்கு கொண்டு வந்து விடுவோம்.

    “அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),கருண ஏவ ச (கருணையுடன் )”நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)ய மத் பக்த: ஸ மே ப்ரிய (எவன் என்னிடம் பக்தி உள்ளவனாக இருக்கிறானோ அவனே எனக்கு விருப்பமானவன்) ”

    என்பதுதான் இந்து மதத்தின் மிக அடிப்படையான வழிமுறை என்பதை எந்த பரிவாரக் காரரும் மறுக்க முடியாது.

    எனவே எங்களின் செயல் பாடு , வழி, அமைப்பு எல்லாமே சமத்துவ முறையில் தான் இருக்கும்- இதில் மாற்றம் இல்லை. இதுதான் நாங்கள் தெரிவிப்பது.

    நீங்கள் நான்காயிரம் வருடம் முன்பு மனு எழுதியதை வைத்து
    இன்னும் அந்த நினைப்பிலேயே இருந்தால் என்ன செய்ய முடியும்.

    இனி மேலும் மேலும் சமத்துவம் அதிகமாகி வேறுபாடுகள் குறையும். இனி யாரவது தானாக நான் கீழான நிலையில் இருக்கிறேன் என்று அவர்களாகவே எண்ணிக் கொண்டால்தான் உண்டு. நாம் யாரையும் கீழாக விடப் போவதில்லை.

    நீங்கள் இந்து மதத்தை ஆதர்ப்பீர்களோ, அல்லது வெறுப்புடன் இருப்பீர்களோ, அது உங்கள் விருப்பம்.

    அம்பேத்கரின் கருத்துக்களில் எங்களுக்கு உடன் பாடு உண்டு. ஆனால் அம்பேத்கரின் காலத்தில் இருந்த இந்து மதம் வேறு. இப்போதைய காலத்தில் உள்ள இந்து மதம் வேறு.

    எனவே நாங்கள் அம்பேத்கரிடம் உள்ள சிறந்த கருத்துக்களையும் எடுத்துக் கொள்வோம். இந்து மதத்தையும் சரியாகக் கையாள்வோம். இந்த விவாதத்தில் நான் பெரியாரை விமரிசித்து எழுதி இருக்கிறேன். அவரை வெறுத்து எழுதவில்லை.

    நாங்கள் இந்து மதத்தையும் ஒரு கருவியாக வைத்தே சமத்துவ சமூகத்தை சிறப்பாக நிறுவுவோம். அது முடியாது என்று யாராலும் சொல்ல முடியாது.

    பல்லாயிரம் வருடங்களாக உள்ள மார்க்கத்தை, நூறு கோடிப் பேர் பின்பற்றும் மார்கத்தை, சில இலட்சக் கணக்கானவர் வெறுப்புக் கருத்துக்களின் அடிப்படையில் அழித்து விட்டு சமத்துவ சமூகத்தை நிலை நாட்ட முடியும் என்று நம்பும் போது,

    அதை விட சாத்தியமானது, அந்த நூறு கோடிப் பேர் அன்பின் அடிப்படையில் சமத்துவ சமூகத்தை நிலை நாட்டுவது! எந்த நிலையிலும் நாங்கள் வெறுப்பை பின்பற்றப் போவதில்லை, அன்பையே பின்பற்றுவோம் எனற வகையிலே, எப்போதும்
    உங்களுக்கு சகோதரனாகவே இருப்பேன்.

    இங்கெ சகோதரர்கள் வேந்தன், Matt, முருகன், கொம்பன், கலை, முரளி, ராபின், தமிழினியன் சுபா உட்பட பலரையும், பலமுறை சகோதரர் என்றே அழைத்து எழுதியுள்ளேன். சாதி மறுப்பு, சமரச சமூக கருத்துக்களில் யார் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    ஆனால் இது வரை ஒருவர் கூட என்னை சகோதரர் என்று அழைத்து எழுதவில்லை. வெறுப்புக் கருத்துக்கள் எந்த நிலையில் நம்மை வைக்கும் என்பதயும் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

  82. I thank Brother Ve. Mathimaaran, for having let all my comments in his blogspot without any omission or deletion.

    My comments may confront the views of Brother Ve. Mathimaaran, but I hope he might have found my comments as genuine.

  83. //வேதங்களில் எந்த ஒரு இடத்திலாவது தாழ்த்தப் பட்டவர்கள் வேதம் படிக்கக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறதா? இதற்கான சான்றை வேதத்தில் இருந்தே காட்ட முடியுமா? //

    வேதங்களில் சூத்திரர் தான் கடைசி. அவர்களுக்கே அக்கதி என்றால், அவர்ணம் என்று கணக்கிலே சேர்த்துக்கொள்ளாத தாழ்த்தபட்டவர்களுக்கு என்ன கதி என்று எண்ணிபாருங்கள்.
    அவர்களை தான் பஞ்சமன் என்றும், சண்டாளம் என்று வேதம் கூறுகிறதே! கணக்கிலேயே எடுத்துகொள்ள கூட முடியாதவன் தான் தாழ்த்தபட்டவனா?

    //மனுவிற்கு முன்னும் இந்து மதம் இருந்தது.
    மனுவிர்க்குப் பின்னும் இந்து மதம் இருக்கிறது.
    புத்தருக்கு முன்னும் இந்து மதம் இருந்தது,
    புத்தருக்கு பின்னும் இந்து மதம் இருக்கிறது.
    சங்கரருக்கு முன்னும் இந்து மதம் இருந்தது,
    சங்கரருக்கு பின்னும் இந்து மதம் இருக்கிறது .
    ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையில் இந்து மதம் பின்பற்றப் பட்டு வந்துள்ளது. //

    திருச்சிகாரரே! காமெடி செய்யாதீர்கள்.
    ஆங்கிலேயன் வரும் வரையில் இந்து மதம் என்று இங்கு இருந்திருக்கவே இல்லை. ஆங்கிலேயர்கள் இங்குள்ள மக்களை மொத்தமாக ஆள, இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமிய மதசட்டமும், கிறித்தவர்களுக்கு கிறித்தவ மதசட்டமும் இயற்றினர். ஆனால் மீதமுள்ளவர்களின் பிரிவுகள் பெருவாரியாக இருந்தன. சைவ சமயத்தார், வைணவ சமயத்தார், சீக்கியர்கள், சமணர்கள், புத்த நெறியை ஏற்றவர்கள் என்று இருந்த பல பிரிவு மக்களை ஒரு நூலால் கட்டி சட்டம் இயற்றினார்கள்.அந்த நூலுக்கு பெயர் இந்துக்கள். பார்பனர்களால் அது இந்துமதம் என்றே ஆயிற்று.

    //நான் இங்கெ வந்தது இந்து மதப் பிரச்சாரத்தை செய்ய அல்ல. அதனால் தான் இந்து மதம் பற்றி நாம் எழுதாமல் இருந்தோம்.
    ஆனால் நீங்கள் கூறியதால், வலியுறுத்தியதால் இந்து மதத்தின் மீதான எங்களுடைய கருத்தை தெளிவாகக் கூறுகிறோம்.
    இதில் நழுவலோ, தழுவலோ ஒன்றும் இல்லை. //

    உங்க வாதத்தின் ஆரம்பம் முதலே இந்து மத பிரசாரம் இருந்ததை நாங்கள் அறிவோம்.

    //இப்போதுள்ள இந்து மதம் எங்கள் கையில் உள்ளது. இதை எங்கள் விருப்படி பின்பற்றுவோம்.
    இப்போது இந்து மதம் மனுவின் கையில் இல்லை. ஜெயேந்திரர் கையிலும் இல்லை.
    இப்போதுள்ள இந்து மதம் எங்கள் கையில் உள்ளது.//

    சபாஷ் சாமியாரே……
    இதைதான் நான் உங்களுக்கு ஏற்கனவே பதிலளிக்கையில் சொன்னேன். அதே வார்த்தைகளும் வாக்கியங்களும் மறுபடியும் உங்களுக்காக..
    {நீங்கள் முன் வைக்கும் வாதங்களை பார்த்தால் ஏதோ மாடர்ன் சாமியார் அதாங்க இந்த ஈஷா, யோகி அப்படி இப்படின்னு பலபேர் மாடனா தன்னை இந்துன்னு சொல்ல மாட்டாங்க. கடவுள் இருக்குன்னும் சொல்லமாட்டாங்க. இல்லைனு சொல்லமாட்டாங்க. அவரோட சிஷ்யர் மாதிர் தெரியுது. இவர்களால் தான் நீங்கள் கடவுள் ஒன்று உள்ளதா? இல்லையா என்னும் ஊசலாட்டத்தில் இருக்கிறீர்கள். ஆனால் ஒரு விடயம் தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு இம்மாதிரி கருத்தை பரப்பும் சாமியார்களும் உங்களை போன்று இதே கருத்தில்தான் உள்ளனரா? அல்லது அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா? நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவாளர் என்பதற்கு மிக சரியான விளக்கம் கொடுத்தியிருந்தீர்கள். அந்த பகுத்தறிவை கொண்டு தெரிந்துகொள்ளுங்கள். கடவுள் இருக்காரா என்று கேட்கும் உங்களை எங்கே கொண்டு போய் விடுகிறார்கள். நாங்கள் உறுதியார் சொல்கிறோம் உங்களை கடைசியில காவியில் தான் கொண்டுபோய் விடுவார்கள்}

    முன்னே கூறியதுபோல் நீங்களும் காவியிலே தான் சங்கமிக்கிறீர்கள். உங்க மாடர்ன் சாமியாரின் வேடம் கலைந்து விட்டது. ஆனால் முற்போக்காக தன்னை காட்டுவதற்கு அம்பேத்கர் மீது மட்டும் பாசம்.

    திருச்சிகாரரே! அந்த ஆர்.எஸ்.எஸ் காரன் தான் அப்படின்னா? நீங்களுமா??????

    இனிமேலும் நடிக்க வேண்டாம். நீங்கள் இந்துமதவாதி என்று ஒப்புக்கொள்ளுங்கள். அது தான் பகுத்தறிவுக்கு அழகு.

    ”ஆமாம். இது ஒன்னு தான் குறைச்சல். அது இருந்தா தான் திருச்சிகாரர் இப்படி பேச மாட்டாரே” என்று படிக்கும் தோழர்கள் எண்ணலாம். இருந்தாலும் திருச்சிகாரர் தன் பகுத்தறிவுக்கு வேலை கொடுப்பார் என்று எண்ணுவோம். அவர்தான் பகுத்தறிவுக்கு விளக்கம் கொடுத்தவராச்சே..

    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது..

  84. //அருகதை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும், தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டு, உனக்கு தகுதி இல்லை, உனக்கு அருகதை இல்லை, இந்த ரேஞ்சில போனால் அடுத்து வருவது, நீ பேசக் கூடாது, நீ கீழானவன் ….. என்று வந்து நீங்கள் தான் பார்ப்பநீயத்திற்கு வந்து விட்டீர்கள் Matt!//

    ஒருவரை விமர்சிக்கும் முன்பு அவரை நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும். அவரது செய்கையை பற்றி பேசும்போது நமது செய்கையையும் நாம் தலைவராக ஏற்று கொண்டவரின் செய்கையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இந்த அடிப்படை புரியாமல் பேசுவதுதான் அருகதை அற்ற செயல். இதற்கு கீழானவன் ,அடுத்து இப்படிதான் என்று உளறுவது குழந்தை தனமாக இருக்கிறது.

    வேதத்துக்கு எவ்வளவு சப்பகட்டு கட்டினாலும் அதை தூக்கி நிறுத்த முடியாது. நடக்கிற விடயத்தை பேசவேண்டும். வேதம் படிச்சவன் எல்லாம் யாரு ஏன் பார்பனர்களை தவிர வேறு ஒருவரும் இல்லை.மனுவுக்கு முன்னமே இருக்கிற உங்கள் மதத்தில் ஒரு குறிபிட்ட சாதிக்காரன் மட்டுமே உங்கள் வேதத்தை வைத்து கொண்டுள்ளான்.ஏன் ? இஸ்லாமை எடுத்து கொண்டீர்கள் என்றால் முதல் பாங்கு(வழிபாட்டுக்கு அழைத்தல்) சொல்லியவர் யூதர்களிடம் அடிமையாக இருந்தவர்.அதனால்தான் அது உலகம் முழுதும் ஏற்று கொள்ளப்பட்டது.
    இதை நான் இங்கு சொல்வது இஸ்லாமை தூக்கி நிறுத்த அல்ல. இந்து மதத்தின் அடிப்படை தவறை சுட்டி காட்ட.

  85. திருச்சி காரன்,

    அம்பேத்கார் தெளிவாக சொல்லியிருக்கிறார்:

    A study of the Chaturvarnya must in its turn start with a study of the ninetieth Hymn of the Tenth Mandala of the Rig Veda— a Hymn, which is known by the famous name of Purusha Sukta.

    11. When (the gods) divided Purusha, into how many parts did they cut him up? What was his mouth? What arms (had he)? What (two objects) are said (to have been) his thighs and feet?
    12. The Brahmana was his mouth, the Rajanya was made his arms; the being called the Vaishya, he was his thighs; the Shudra sprang from his feet.

    The constitution of society prescribed by the Purusha Sukta is known as Chaturvarnya. As a divine injunction, it naturally became the ideal of the Indo-Aryan society. This ideal of Chaturvarnya was the mould in which the life of the Indo-Aryan community in its early or liquid state was cast. It is this mould, which gave the Indo-Aryan community its peculiar shape and structure.

    This reverence, which the Indo-Aryan society had for this ideal mould of Chaturvarnya, is not only beyond question, but it is also beyond description. Its influence on the Indo-Aryan society has been profound and indelible. The social order prescribed by the Purusha Sukta has never been questioned by anyone except Buddha. Even Buddha was not able to shake it, for the simple reason that both after the fall of Buddhism and even during the period of Buddhism there were enough law-givers, who made it their business not only to defend the ideal of the Purusha Sukta but to propagate it and to elaborate it.

    To take a few illustrations of this propaganda in support of the Purusha Sukta, reference may be made to the Apastamba Dharma Sutra and the Vasishtha Dharma Sutra. The Apastamba Dharma Sutra states:

    “There are four castes—Brahmins, Kshatriyas, Vaishyas and Shudras.

    Among these, each preceding (caste) is superior by birth to the one following. [f3] For all these excepting Shudras and those who have committed bad actions are ordained (1) the initiation (Upanayan or the wearing of the sacred thread), (2) the study of the Veda and (3) the kindling of the sacred fire (i.e., the right to perform sacrifice) [f4]

    தவமிருந்ததற்காக சம்புகன் என்ற சூத்திரனை உங்கள் (அரசியல்) கடவுள் ராமன் கொன்றாரே அந்த கதையாவது உமக்கு தெரியுமா?

  86. //உலகில் உள்ள எந்த மதமும் அழிக்கப் பட வேண்டியதில்லை – பிற மதங்களை வெறுக்கும் செயல்களை , பிற மக்களை வெறுக்கும் செயல்களை நிறுத்தினாலே போதும்- உலக அமைதிக்கு – நாகரிக சமூகத்துக்கு அது அவசியம் என்பதும் என் கருத்து. // – இங்கு பிற மக்களை வெறுப்பது இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றும் காவி கூட்டம்தான். என்னால் இந்து மதத்துடன் உடன்பட முடியவில்லை, எனென்றால் அது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கிறது. இன்னும் பல காரணங்கள் சொல்ல முடியும். இந்தியாவில் அமைதி சீர்குலைய காரணம் யார் இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றும் காவி கூட்டத்தினர்தானே. மதக் கலவரங்களுக்கு காரணம் யார்? சிந்தித்து பாரும். தமிழகத்தில்கூட உங்கள் பிள்ளையார் கடவுளை கடலில் வீசி எறிய நடக்கும் ஊர்வலத்தை முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் தெரு வழியாகத்தான் போவேன் என்று அடம் பிடித்து கலவரம் உண்டு பண்ணுவது யார்? ராம கோபாலன் என்ற பார்ப்பனர் தானே.

  87. //ஆனால் நீங்கள் கூறியதால், வலியுறுத்தியதால் இந்து மதத்தின் மீதான எங்களுடைய கருத்தை தெளிவாகக் கூறுகிறோம்.
    இதில் நழுவலோ, தழுவலோ ஒன்றும் இல்லை. // உம்முடைய கருத்தில் ஒரு தெளிவும் இல்லை; பொய்யை தவிர எதுவும் இல்லை. முதலில் இந்து மதத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள், கோட்பாடுகள், புத்தகங்கள் என்ன? அப்படி எதுவும் இல்லாவிட்டால், நீர் எந்த கொள்கைகள் அல்லது புத்தகங்களை இந்து மத சார்புடையதாக கூறுகிறீர், தெளிவாக சொல்ல முடியுமா?

  88. “Robin (05:02:10) :
    முதலில் இந்து மதத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள், கோட்பாடுகள், புத்தகங்கள் என்ன? ”

    ஹா ஹா…ஆறாம் வகுப்பு வாய்ப்பாடு கொடுக்கிறோம், போய் மனப்பாடம் செய்து, ஆண்டவரை வணங்குங்கள்!
    படிக்காதவன், கண் இல்லாதவன், குருடன், காது கேட்காதவன், கோமா நிலையில் இருப்பவன் எல்லாம் எந்த கொள்கையை எந்த புத்தகத்தை வைத்துக் கொண்டு கடவுளை வழி படுகிறான் நண்பரே !

    இந்துவுக்கு ஆப்பு அடிக்கும் கும்பலுடன் சேர்ந்து கொண்டு, திராவிடன் என போலி முத்திரை குத்திக் கொண்டு ஜால்ரா அடிப்பதே பல சிறுபாண்மையினரின் தொழிலாக மாறி வருகிறது !

    நடத்துங்க,,,

    : )

  89. தலைவா திருச்சி, பெரியார் அது இதுன்னு சொல்லிட்டு இப்ப கீத உபதேசம் ஆயிடிச்சு உங்க பேச்சு. இப்ப இங்க ஹிந்து மதத்தை ‘reform’ பண்ணனுமுன்னு யாரும் பேசலை அத ஒழித்து கட்ட வேண்டும் என்று தான் பேசுறோம். முன்னாலே இந்த மாத்ரி பல பேரு செஞ்சானுங்க ஒன்னும் வேளைக்கு ஆகால. அதுனால உண்மையிலே சாதிய ஒழிக்க வேண்டுமுன்ன முதல நீங்க குறைஞ்ச பட்சம் மதிமாறன் பதிவகளை ஒரு திறந்த மனதோடு படித்துபாருங்கள். அப்புறம் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் அப்பிடி எப்பிடி போலாம். விவாதத்திற்கு நன்றி ஆனால் சற்று நிதானமா யோசித்து பாருங்கள்.

  90. // ஹா ஹா…ஆறாம் வகுப்பு வாய்ப்பாடு கொடுக்கிறோம், போய் மனப்பாடம் செய்து, ஆண்டவரை வணங்குங்கள்!
    படிக்காதவன், கண் இல்லாதவன், குருடன், காது கேட்காதவன், கோமா நிலையில் இருப்பவன் எல்லாம் எந்த கொள்கையை எந்த புத்தகத்தை வைத்துக் கொண்டு கடவுளை வழி படுகிறான் நண்பரே ! //

    பார்ப்பனிய இந்து மதத்தை பின்பற்றினால் இப்படிதான் முட்டாள்தனமாக பேச தோணும். உடல் ஊனமுற்றவர்களை எவளவு இழிவாக கருதினால் இப்படி பேசுவீர்கள்! அப்போ அவர்களுக்கெல்லாம் கொள்கைகள் இருக்காதா இருக்க கூடாதா? மத நூல் இதெலாம் ஏடுகளில் தான் இருக்கும் என்று யார்சொன்னது? உங்கள் பார்ப்பனிய வேதமே ஏடுகளில் இருந்ததில்லை ,இந்த அடிப்படை உண்மை கூட தெரியாதா , மற்றவர்களை இழிவாக கருதும் இந்த எண்ணத்தை வளர்க்கும் பார்பநியமே இந்து மதம் என்று நாம் சாடுகின்றோம்.

  91. “Matt (06:12:30) :
    பார்ப்பனிய இந்து மதத்தை பின்பற்றினால் இப்படிதான் முட்டாள்தனமாக பேச தோணும். உடல் ஊனமுற்றவர்களை எவளவு இழிவாக கருதினால் இப்படி பேசுவீர்கள்! ”

    ராபின் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தோம். உடல் குறைபாடுள்ளவர்களை என்னாலும் பழிப்பதில்லை. அந்த அநாகரிகம் எங்களுக்கு கிடையாது. வார்த்தை விளையாட்டில் நீங்கள் கலந்து கொள்ளலாம் : )

    “மத நூல் இதெலாம் ஏடுகளில் தான் இருக்கும் என்று யார்சொன்னது?”

    இதைத் தான் நானும் சொல்லி இருக்கேன். வழக்கம்போல பெரியார் தொண்டர்கள், பதில் தெரியாத கேள்விகளுக்கு இப்படி மழுப்புவது தான் வழக்கம். இது எங்களுக்கு புதிதல்ல.

    இப்பொழுதெல்லாம், அனைவரையும் விட, சாதி வெறி பிடித்தவன் பெரியார் திராவிட கொள்கைக்காரன் தான். பாரதியாரைத் தூக்கி எறிந்துவிட்டு, பாரதி அடிமை, பாரதிதாசனை தலையில் தூக்கி வைத்துக் கொள்கிறீர்களே…எதற்கு நண்பரே !

    பார்ப்பனீயம், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி பேசி இந்துக்களைப் பிரித்து ஆண்ட போலி திராவிடக் கூட்டத்தின் முகத்திரைகள் கிழிய ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்கதே!

    : )

  92. சகோதரர் ராபின் அவர்களே,

    //உம்முடைய கருத்தில் ஒரு தெளிவும் இல்லை; பொய்யை தவிர எதுவும் இல்லை.//

    பொய்யை எழுதுவது, என்னைப் பற்றிய பொய்யான தகவல்களை கொடுத்து வருவது நீங்கள்தான்.

    நீங்கள் விவரம் அறியாமல், அவசரம் அவசரமாக நான் பொய் முகம் என்ற blog ஐ நடத்தி வருவதாகவும், அதோடு நிஜம் என்ற பெயரில் எழுதி வருவதாகவும், “ஆனால் மற்ற மதங்களை விட இந்து மதம்தான் சிறந்தது, எனவே இந்தியாவில் வாழும் மாற்று மதத்தினரெல்லாம் இந்துவாக மாறுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினீர்கள், பச்சை பொய்யை பழியாக என் மேல் சுமத்திநீர்கள். மறு கன்னத்தையும் காட்டினேன்.

    ஒருவரின் மீது வெறுப்பு அதிகமாக இருக்கும் போது, அவரை எப்படியாவது குறை சொல்லத் தோன்றும் என்பது நான் அறிந்ததே.

    ஆனால் நீங்கள் தொடர்ந்து நான் பொய்யைக் கூறி வருவதாக அதட்டியும் மிரட்டியும் பார்க்கிறீர்கள் சகோதரரே, இது முறையல்ல.

    //என்னால் இந்து மதத்துடன் உடன்பட முடியவில்லை//

    நீங்கள் இந்து மதத்துடனோ, இசுலாமிய மதத்துடனோ, வேறு எந்த மதத்துடனோ ஒத்துப் போங்கள் என்று நான் கூறவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை. வெறுப்புக் கருத்துக்கள் மனதில் நிறைந்துள்ள நிலையிலே பிற மார்க்கங்களில் நல்ல கருத்துக்கள் உள்ளனவா என்பதை சிந்திக்கும் மன நிலை தோன்றாது என்பது எனக்குத் தெரியும்.

    ஆனால் நீங்கள் பெரியாருடனாவது ஒத்துப் போகத் தயாரா என்று தெரியப் படுத்துங்கள்.

    நான் முதலிலே உங்களிடம் கேட்டதை நான் மீண்டும் இப்போது வைக்கிறேன்.

    //இப்போது நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன், கடின எண்ணமுடையவர்கள் திருந்தும் வகையில் தன்னை சிலுவையில் அறையக் கொடுத்த இயேசு கிறிஸ்துவின் முன், மண்டியிட்டு மரியாதை செலுத்த நான் தயார்.

    நீங்கள் பெரியார் சிலையின் முன் நின்று

    “கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” என்று கூறும்படியான கடவுள் மறுப்புக் கருத்துக்களை கூறும் சிந்தனை சுதந்திரம், எல்லோருக்கும் உண்டு ‘

    என்றும்,

    “என் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், பிற கடவுள்கள் ஜீவனில்லாத கடவுள்கள் என்றும் (எந்தக் கடவுளையும் பார்க்காமலேயே) அலப்பறை செய்யும் அமைதிக் கெடுப்பாளர்களைக் கண்டிப்பேன் என்றும் உறுதி மொழி எடுக்கத் தயாரா?

    எல்லோரும் என் மதத்திற்கு வந்தேயாக வேண்டும்- என் மதம் மட்டுமே உண்மையான மதம்- என்று நான் ஒரு போதும் கூறியதோ, கட்டாயப் படுத்தியதோ இல்லை. பிறரைக் கட்டாயப்படுத்தும் காட்டு மிராண்டித் தனத்துக்கு நான் எதிரானவன்.

    அப்படி செய்பவன் இந்து மதத்தவனாக இருந்தால் அவனை நான் முழுமையாக எதிர்ப்பேன். //

    இதோடு நான் அம்பேத்கரின் சிலைக்கு முன்பாக பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்ப்பிக்கும் முறையையும், அப்படிக் கற்பிப் பவரையும் கண்டிக்கிறேன், அவர்களைத் திருத்தி சமரச சமூகப் பார்வைக்கு திருப்புவேன் என்றும்,

    பிற மார்க்கத்தவரை வெறுக்க மாட்டேன்,

    சாதி, மத, இன அடிப்படையில் யாரும் தாக்கப் படக் கூடாது, இழிவு படுத்தப்படக் கூடாது, உலகின் எல்லா மனிதர்களுக்கும் சம உரிமை, பாதுகாப்பு, வழங்கப்பட வேண்டும் என்பது என் உறுதியான, மனப் பூர்வமான கொள்கை, என்றும்

    நான் அம்பேத்கரின் சிலைக்கு முன்னாலோ பெரியாரின் சிலைக்கு முன்னாலோ நின்று உறுதி எடுக்கத் தயார்.

    உலகின் எந்த இடத்தில் எவர் முன்னாலும் இந்தக் கருத்துக்களைக் கூறத் தயார் என்பதையும் தெரிவிக்கிறேன்.

    உறுதி எடுப்பதோடு அதன் அடிப்படியில் நான் செயல்பட்டும் காட்டுவேன்- இது மிக முக்கியம்.

    நீங்கள் “என் மதம் மட்டுமே உண்மையான மதம், நான் சாட்சி குடுக்கும் கடவுள், மட்டுமே உண்மையான ஜீவனுள்ள கடவுள்,

    உலகின் பிற மதங்கள் அனைத்தும் பொய்யானவை, பிற கடவுள்கள் எல்லாம் பொய்யான, ஜீவன் இல்லாத கடவுள்கள் என்ற வகையில் மக்க்ளுக்கிடையிலே வெறுப்பையும் பகைமையையும் உருவாக்கும் கருத்துக்களிக் கண்டிப்பேன்,

    அவ்வாறு கூறுபவரைக் கண்டிப்பேன், நான் எப்போதும் அப்படிப்பட்ட கற்காலக் கருத்துக்களை கூற மாட்டேன்,

    இந்தக் காட்டு மிராண்டிக் கருத்துக்களுக்கு எதிராக, நாகரீக சமூக கருத்துக்களுக்காக பாடுபடுவேன் என்று நீங்கள் கூறத் தயாரா? அதன் படி செயல் படத் தயாரா?

    இதை முதலில் தெளிவு படுத்துங்கள், அப்போது தெரியும் எது உண்மை, எது பொய் என்று!

  93. Dear Brothers Venthan, Matt,

    I will clarify on your points, I need some time, you know I have to answer to all of you, besides i have my work. No need to rush to brand as கள்ள மவுனம் and all, brothers.

  94. தலைவா !

    பொய் முகம் அவர்களே,

    நீங்க யார் அண்ணா? நீங்கதான் நானுனு நினைச்சி என்னைப் போட்டு குமுறுறாங்கையா, குமுறுறாங்க !

  95. மத நூல் ஏடுகளில் தான் இருக்கவேண்டியதே ஒழிய இல்லாமல் இருக்க முடியாதல்லவா !அது எது எதை ஆதாரமாக சொல்வீர்கள் என்று கேட்டால் பதிலை காணும் ! வாய்சவடால் தான் இருக்கு ! பார்பான எப்படியாவது காப்பாத்தி ஆகணும் அதுதானே உங்கள் ஆசை! அதுக்கு மீண்டும் மற்றவர்களை பலி கொடுக்க வேண்டும் ! அதெலாம் இப்போது செல்லாது, நாய் வால நிமித்த முடியுமா? அப்படித்தான் பார்பானுக்கும்,கண்மூடி தனமாக இந்து மதத்திற்கு சப்பைக்கட்டு கட்டுபவனுகும் சொல்லி திருத்த முடியாது! புரியவைக்கவும் முடியாது! சவால் விடுவதற்கு முன்பு பூணுலை அறுத்துவிட்டு சவால் விடனும் !

  96. Matt,

    I told that I am answering to every ones question, so I need some time, i have my other works also, and i will answer yours also, why do you rush up?

  97. “திருச்சிக் காரன் (06:36:48) :

    தலைவா !

    பொய் முகம் அவர்களே,

    நீங்க யார் அண்ணா? நீங்கதான் நானுனு நினைச்சி என்னைப் போட்டு குமுறுறாங்கையா, குமுறுறாங்க ! ”

    நண்பரே…திருச்சிக்காரன் வேற பொய் முகம் வேறன்னு சொன்னாலும் இவங்க நம்ப மாட்டாங்க….ஏன்னா….பெரியார் எதை 40 வருஷத்துக்கு முன்னாடி சொன்னாரோ அதையே தேய்ஞ்ச ரிக்கார்டு மாதிரி சொல்ற கூட்டம் இதுங்க. சுயமா சொல்லத் தெரியாத கூட்டம்.

    உங்களைப் போல பல பேர் வந்து புத்தி சொல்லி தான் திருத்தணும். விடாம அவங்கள வறுத்து எடுக்குறதுக்கு பாராட்டுக்கள் திருச்சிக்காரன்!

  98. Our Brother Mr. Ve. Mathimaaran might have known defonitely whether me and Mr. Poi mukam are different persons or not!

    As the blog spot administrator he can clarify that. I request him to clarify the same!

  99. “Matt (06:39:56) :

    மத நூல் ஏடுகளில் தான் இருக்கவேண்டியதே ஒழிய இல்லாமல் இருக்க முடியாதல்லவா !அது எது எதை ஆதாரமாக சொல்வீர்கள் என்று கேட்டால் பதிலை காணும் ! வாய்சவடால் தான் இருக்கு ! பார்பான எப்படியாவது காப்பாத்தி ஆகணும் அதுதானே உங்கள் ஆசை! அதுக்கு மீண்டும் மற்றவர்களை பலி கொடுக்க வேண்டும் ! அதெலாம் இப்போது செல்லாது, நாய் வால நிமித்த முடியுமா? அப்படித்தான் பார்பானுக்கும்,கண்மூடி தனமாக இந்து மதத்திற்கு சப்பைக்கட்டு கட்டுபவனுகும் சொல்லி திருத்த முடியாது! புரியவைக்கவும் முடியாது! சவால் விடுவதற்கு முன்பு பூணுலை அறுத்துவிட்டு சவால் விடனும் ! ”

    ஹாஹா…எடிட்டிங்க் கட்டிங்க் பேஸ்டிங்க் செய்து நூல் வெளியிடுவது நமது வழக்கமல்ல. நம்மில் கலந்து இருக்கும் வாழ்க்கை முறை அது. எங்களின் நம்பிக்கை அது.

    மூக்கு சலிக்கு மூக்கை வெட்டி எறிவது எவ்வளவு மூடத் தனமோ அதே போலத் தான் நீங்கள் சொல்வது. சாதியை ஒழிக்க வேண்டும், சமத்துவம் மலர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

    ஹா ஹா…நண்பரே…பூநூலா எனக்கா…உங்கள் போலிக் கொள்கைகளை கண்டு கொண்ட அக்மார்க் முத்திரைக் கொண்ட திராவிடன் நான்.(பெரியார் திராவிடன் இல்லை). சிறுபாண்மையினரின் உதவியோடு, இந்துக்களை எதிர்க்கும் கூட்டம் தானே நீங்கள்.

    பார்திதாசன் பாரதியார் பற்றி நான் கேட்டதுக்கு எதுவுமே சொல்லலியே…மறந்துட்டீங்களா?

  100. “பொய் முகம் (07:00:20) :

    நச்…நச்….பஞ்ச்…
    துணிச்சலா எழுதுறதுக்கு வாழ்த்துக்கள்!


    மன்னிக்கவும். வேறு பதிவுக்கு போட வேண்டிய கமெண்டை தவறுதலாக இங்கே கொடுத்துவிட்டேன்.

    http://veerantamil.wordpress.com/wp-comments-post.php

  101. உங்கள நீங்களே மாறி மாறி பாராட்டிக்க வேண்டியதான்.நீங்க ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனு சொன்னதையும் ,200 ஆண்டுக்கு முன் சங்கரன் சொன்னதையும் நம்பிக்கிட்டு ,நாங்க 40 ஆண்டுக்கு முன் பெரியார் சொன்னத நாங்க சொல்றம்மா ? தேஞ்ச ரெகார்ட் யாருன்னு உங்களுக்கே தெரியும்,

    சிறுபான்மையினரின் உதவி கொண்டா இந்துக்கள்? யார் இந்துக்கள் ?இங்கு யாரும் எந்த மதத்துக்கும் வக்காலத்து வாங்கவில்லை! உங்க ஆதிக்க சாதி வெறி தொல்ல தாங்க முடியாம மதம் மாறினவர்கள் தான் இந்த சிறுபான்மை மதத்தவர்கள். பாரதிதாசன ஆதரிபதற்கு காரணம் அவர் சமுதாய ஏற்ற தாழ்வுகளை கண்டித்தவர் என்பதுதான் , உங்களை போன்றவர்கள் எதிர்பதற்கும் அதுதான் காரணம்.

    உங்கள் மதத்திற்கு ஆதாரமாக எதை சொல்வீர்கள் ? உங்கள் கடவுள் கோட்பாடு என்ன ?

  102. திருச்சி காரன்,

    இதுவரை உம்மால் இந்து மதம் எவ்வாறு சிறந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் கொடுக்க முடியவில்லை. இங்கு இந்து மதத்தை பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் உம்மிடம் எந்த பதிலும் இல்லை. உம்முடைய கருத்துகளுக்கும் பொய் முகத்தின் ப்லாக்கிலுள்ள கருத்துகளுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு; இப்போதும் அது நீர்தானா என்ற சந்தேகம் எனக்குண்டு. கீற்று என்ற இணைய தளத்திலும் உம்மை போல எழுதும் ஒருவர் உண்டு. அவரும் நீரும் ஒருவராக இருக்கும் வாய்ப்பும் உண்டு. நீர் எத்தனை பெயர்களில் வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளும்; எனக்கு அதை பற்றி கவலையில்லை. நீர் என்ன சொல்ல வருகிறீர் என்பதுதான் முக்கியம்.

    //என் மதம் மட்டுமே உண்மையான மதம், நான் சாட்சி குடுக்கும் கடவுள், மட்டுமே உண்மையான ஜீவனுள்ள கடவுள்// – நான் வணங்கும் கடவுள்தான் உண்மையான கடவுள் என்று நம்புவதற்கு எனக்கு முழு உரிமை உண்டு; இல்லை மற்ற மதங்கள் சொல்லும் கடவுள்களும் உண்மையான கடவுள்தான் என்று நினைக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதுதான் காட்டுமிராண்டித்தனம். கடவுளுக்குரிய குணாதிசயங்கள் உள்ள ஒருவரை தான் நான் உண்மையான கடவுளாக மதிக்க முடியும்.

  103. //எல்லோரும் என் மதத்திற்கு வந்தேயாக வேண்டும்- என் மதம் மட்டுமே உண்மையான மதம்- என்று நான் ஒரு போதும் கூறியதோ, கட்டாயப் படுத்தியதோ இல்லை. பிறரைக் கட்டாயப்படுத்தும் காட்டு மிராண்டித் தனத்துக்கு நான் எதிரானவன்.// – இந்தியாவில் இந்த வேலையை செய்து கொண்டிருப்பவர்கள் காவி கூட்டத்தினர்; அவர்களை தான் நீர் எதிர்க்கவேண்டும்; மற்றவர்களுக்கு இந்த உபதேசம் தேவையில்லை. வேறு எந்த மதத்தினரும் இங்கு கட்டாயப்படுத்துவதில்லை.

  104. //படிக்காதவன், கண் இல்லாதவன், குருடன், காது கேட்காதவன், கோமா நிலையில் இருப்பவன் எல்லாம் எந்த கொள்கையை எந்த புத்தகத்தை வைத்துக் கொண்டு கடவுளை வழி படுகிறான் நண்பரே !// – நீர் சொல்வதில் கோமா நிலையில் உள்ளவனை தவிர எல்லாருக்கும் மத கருத்துகளை தெரிவிக்க முடியும். கோமா நிலையில் உள்ளவன் கடவுளை வழி பட முடியாது; எனவே நீங்கள் செய்வது விதண்டாவாதம். இந்து மதம் என்றால் என்ன, இந்து மதத்தின் கோட்பாடுகள் என்ன என்பது உங்களுக்கே தெரியவில்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. எந்த மதமானாலும் அதற்கென்று சில கோட்பாடுகள் இருக்கவேண்டும்; அப்படி இல்லையென்றால் யார் என்ன உளறினாலும் அதுவும் மதத்தின் ஒரு பகுதியாகிவிடும். இப்போது இந்து மதம் எனப்படுவது பல முரண்பட்ட கோட்பாடுகளை உடையது. முதலில் இந்து மதத்தை பற்றிய ஒரு தெளிவுக்கு வாருங்கள்; அதன் பிறகு மற்ற விஷயங்களை பற்றி பேசலாம்.

  105. உங்கள் மதத்திற்கு ஆதாரமாக எதை சொல்வீர்கள் ? உங்கள் கடவுள் கோட்பாடு என்ன ?

    இந்தியர்களிடம் இருக்கும் நல்லொழுக்கம்னும், பண்பாடும், கலாச்சாரமே நம் சமயத்திற்கு உள்ள ஆதாரங்கள். கிபி க்கு முன்பே எத்தனையோ நூல்கள், இதிகாசங்கள், கவிகள், பாடல்கள் என சமயத்தில் வரலாறுகள் பல.

    “உங்க ஆதிக்க சாதி வெறி தொல்ல தாங்க முடியாம மதம் மாறினவர்கள் தான் இந்த சிறுபான்மை மதத்தவர்கள். ”

    ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம் தான். அதை மாற்றத் தான் முயற்சி மேற்கொண்டுள்ளோம். பெரியாரின் கொள்கைகள் விவாதத்தை வளர்க்கும், பகையை மூட்டும் விதமாகவே இருக்கிறது. உங்கள் கொள்கைகள் சாதியை வேரூன்றச் செய்வதில் குறியாய் இருக்கின்றன. நாங்கள் அதனைக் களைய பாடுபடுகிறோம். அவ்வளவே.

    பாரதிதாசன ஆதரிபதற்கு காரணம் அவர் சமுதாய ஏற்ற தாழ்வுகளை கண்டித்தவர் என்பதுதான் , உங்களை போன்றவர்கள் எதிர்பதற்கும் அதுதான் காரணம்.

    பாரதிதாசனை எதிர்க்கவில்லை. பாரதியை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? நீங்களெல்லாம் சாதியைப் பற்றி அறிவுரை கூறுகிறீர்களே…என்று சொல்ல வந்தேன்..!

    காசியில் ராமசாமிக்கு ஒரு வேலை சோறு போட்டிருந்தால் இந்தப் பிரச்சினையே இருந்திருக்காது : )

  106. Dear Brother Robin,

    சரியாகத் தெரிந்து கொள்ளாமல் மீண்டும் ,மீண்டும் தவறாக பழி சுமத்துகிறீர்கள்.

    எனக்கும் பொய் முகம் என்பவருக்கும் எந்த சம்பந்தமும் தொடர்பும் கிடையாது. இந்த தளத்தை நிர்மாணித்து நடத்து சகோதரர் வே. மதி மாறனிடம் தொடர்பு கொண்டு நீங்கள் இதை உறுதிப் படுத்திக் கொள்ளலாம்.

    உங்களை எல்லோருக்கும் அறியும் வகையில் வெளிப் படுத்தியதற்கு நன்றி.

    நான் உங்களை, பிற மதங்களின் உள்ள கடவுள்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றோ, அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றோ ஒரு இடத்திலும் கூறவுமில்லை.

    உங்களைக் ‘கடவுள் இல்லை’ என்று கூறும்படிக் கூட நான் கட்டாயப் படுத்தவில்லை.

    பகுத்தறிவுக்கு தடை விதிக்காத வகையிலே, பகுத்தறிவு வாதிகளின் சுதந்திர சிந்தனைக்கு தண்டனை கொடுக்காத வகையிலே – “கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” என்று கூறும்படியான கடவுள் மறுப்புக் கருத்துக்களை கூறும் சிந்தனை சுதந்திரம், எல்லோருக்கும் உண்டு “என்று கூறத் தயாரா என்றுதான் கேட்டேன் – நீங்கள் கூறத் தயாராக இல்லை.

    பகுத்தறிவுக்கு, சுதந்திர சிந்தனைக்கு நீங்கள் அனுமதி அளிக்கவில்லை.

    நீங்கள் உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் வணங்குவதை நான் குறை கூறவில்லை.

    கடவுளை எங்களுக்கு காட்ட முடியாத பட்சத்திலே , நிரூபிக்க முடியாத பட்சத்திலே,

    என்னவோ கடவுளை நேரில் சந்தித்து விட்டு வந்தது போல

    // “என் மதம் மட்டுமே உண்மையான மதம், நான் சாட்சி குடுக்கும் கடவுள், மட்டுமே உண்மையான ஜீவனுள்ள கடவுள்,

    உலகின் பிற மதங்கள் அனைத்தும் பொய்யானவை, பிற கடவுள்கள் எல்லாம் பொய்யான, ஜீவன் இல்லாத கடவுள்கள்”

    என்ற வகையில் மக்க்ளுக்கிடையிலே வெறுப்பையும் பகைமையையும் உருவாக்கும் கருத்துக்களைக் கண்டிப்பேன்,

    அவ்வாறு கூறுபவரைக் கண்டிப்பேன், நான் எப்போதும் அப்படிப்பட்ட கற்காலக் கருத்துக்களை கூற மாட்டேன்,

    இந்தக் காட்டுமிராண்டிக் கருத்துக்களுக்கு எதிராக, நாகரீக சமூக கருத்துக்களுக்காக பாடுபடுவேன்”//

    என்று கூறத் தயாரா என்றுதான் கேட்டேன் – நீங்கள் கூறத் தயாராக இல்லை.

    பெரியாரைக் கேடயமாக வைத்து,
    கிருத்துவ மதம் என்ற பெயரிலே யூத மதத்தை உலகம் எங்கும் பரப்பும் நல்லெண்ணம் உங்களிடம் இருக்கிறது என்பதையும், அந்த யூத மதம் மட்டுமே இந்த உலகில் இருக்க வேண்டும் என்கிற ஆவேசத்தையும், உங்களின் அந்தக் கருத்தை வெட்ட வெளிச்சமாக்கும் வகையிலே நான் இங்கெ எழுதுவதால் என் மீது பழி சுமத்துவதையும்
    எல்லோருக்கும் அறியும் வண்ணம் தெரியப் படுத்தி விட்டீர்கள்.

    நீங்கள் யூத மதம் பற்றி இங்கெ வெளிப்படையாக எதையும்
    எழுதவில்லை.

    ஆனால் எவர் ஒருவர் “என் மதம் மட்டுமே உண்மையான மதம், நான் சாட்சி (!) குடுக்கும் கடவுள் மட்டுமே உண்மையான ஜீவனுள்ள கடவுள்,
    உலகின் பிற மதங்கள் அனைத்தும் பொய்யானவை, பிற கடவுள்கள் எல்லாம் பொய்யான, ஜீவன் இல்லாத கடவுள்கள் என்கிற கொள்கையை சோதனை செய்து பார்க்க விருப்பமில்லாமல் இருக்கிறார்களோ,

    எவர் ஒருவர்
    “கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” என்று கூறும்படியான கடவுள் மறுப்புக் கருத்துக்களை கூறும் சிந்தனை சுதந்திரம், எல்லோருக்கும் உண்டு ”

    என்கிற சுதந்திரத்திற்கு அனுமதி மறுக்கிறார்களோ -அவர்கள் யூத மதத்தின் கொள்கைகளை திணிப்பவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.

    இரண்டு உலகப் போர்களில் இறந்தவர்களை விட அதிகமான பேர்களைக் கடவுளின் பெயரால் (சிலுவைப் போர்கள் என்று)
    கொன்று குவித்தது, பாலஸ்தீனியர்களை சிதற அடித்து அவர்களின் இடங்களை ஆக்கிரமித்த காட்டு மிராண்டிக் கொள்கைகளுக்கு தான் ஒரு போதும் கைப் பாவை ஆகி விடக் கூடாது என்பதற்குத் தான் கடைசி வரை பெரியார் தன் நிலையிலேயே உறுதியாக இருந்து விட்டார்.

    பெரியார் இந்து மதத்தின் பல மூட நம்பிக்கைகளைக் கண்டித்தார். இந்து மதத்தை முற்றாகக் கண்டித்தார். உண்மையில் நாங்கள் அவரிடம் நன்றி உடையவராக, அவரை எங்கள் ஆசிரியராகவே கருதுகிறோம். அதனால்தான் அவரின் செய்கைகளை விமரிசித்தேனே தவிர, அவரை சிறுமைப் படுத்தி எந்த இடத்திலும் எழுதவில்லை.

    ஆனால் நீங்கள் பெரியாரின் பெயரை உபயோகப் படுத்தி,

    இந்து மதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரிலே,

    உலகெங்கும் ஒரே மதம், உண்மையான எங்கள் மதம் என்று கூறி-

    அதே போல யூத மதத்தின் இன்னொரு பிரிவினரான இசுலாமியரும் அதே கருத்தைக் கூறி – ஆனால் அது எங்கள் கடவுள் தான் என்று

    இருவருமே பார்க்காத கடவுளை காரணமாகக் காட்டி இந்தியாவை பாலஸ்தீன் போல ஆக்கக் கூடாது என்ற காரணத்தால் தான் பெரியார் பகுத்தறிவுக்கு எங்கு இடம் இல்லையோ, அங்கெ போகாமல் இருந்து விட்டார்.

    அவரவர் நம்பிக்கையை நாங்கள் இகழவில்லை- ஆனால் பகுத்தறிவுக்கு தடை போட்டு – எங்கள் நம்பிக்கை மட்டுமே உண்மை என்று கட்டாயப் படுத்தி பிறரை போட்டிக்கு, சண்டைக்கு இழுப்பதை அனுமதிக்க முடியாது.

    காவி கூட்டத்தினர் பிற மதத்தினரை இழிவு படுத்துவதை, அவமானப் படுத்துவதை, தாக்குவதை, வன்முறையில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன், அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை தர வேண்டும் என்று சொல்கிறேன்.

    அதே நேரம் “மற்றவர்கள்” என்ற போர்வையில் நீங்கள் இங்கெ பகுத்தறிவுக்கு சமாதி கட்டும் வகையிலே,

    “நான் சொல்வதுதான் ஒரே கடவுள் , ஜீவனுள்ள கடவுள், பிற கடவுள்களைக் கண்டியுங்கள், பிற மார்ரக்கங்களை எல்லாம் வெறுத்து ஒதுக்குங்கள்” என்னும் SLOW POISON வெறுப்பு கருத்துக்களை இந்தியாவிலே நைசாக இந்த அப்பாவி மக்களிடம், சந்து முனையிலே சிந்து பாடுவதை கண்டு கொள்ளாமல் இருக்க மாட்டேன் என்பதையும் உறுதியாகக் கூறுகிறேன்.

  107. //இந்தியர்களிடம் இருக்கும் நல்லொழுக்கம்னும், பண்பாடும், கலாச்சாரமே நம் சமயத்திற்கு உள்ள ஆதாரங்கள். கிபி க்கு முன்பே எத்தனையோ நூல்கள், இதிகாசங்கள், கவிகள், பாடல்கள் என சமயத்தில் வரலாறுகள் பல.// – எத்தனையோ என்றால் கி.பி.க்கு முன்பு எழுதப்பட்ட எல்லா நூல்களுமா? கி.பி.க்கு பின்பு எழுதப்பட்ட நூல்கள் என்னவாயிற்று? இதில் பல நூல்களில் தீய நெறிகளும் சொல்லப்பட்டுள்ளனவையே அதை பற்றி என்ன சொல்கிறீர்கள்? இந்தியாவில் ஒரு கலாசாரம் இல்லை; பல கலாச்சாரங்கள் இருந்துள்ளன; இப்போதும் அப்படிதான். இந்த எல்லா கலாசாரங்களையும் சேர்த்துதான் சொல்கிறீர்களா?

  108. காசியில் ராமசாமிக்கு ஒரு வேலை சோறு போட்டிருந்தால் இந்தப் பிரச்சினையே இருந்திருக்காது : )

    ஆமாம் ! நாங்கள் விழிபடைந்திருக்கமாட்டோம் , உங்களுக்கு அடிமையாக இருந்திருப்போம் ! மக்கள் கலாச்சாரம், இதிகாசம் ,புராணம் ,குப்பை , புண்ணாக்கு இதெலாம் எப்படி கோட்பாடுகள் ஆகும் ? இந்து மதத்தில் உங்களுக்கே தெளிவு இல்லை என்றே நினைக்க தோன்றுகிறது. இந்த கலாச்சாரம் எல்லாம் எல்லா நாடுகளிலும் இருக்கிறது.வெட்டி பெருமை பேசும் இந்தியாவில் தான் இன்னும் மலத்தை அள்ள ஒரு சாதியே இருக்கிறது , இன்னும் அவர்கள் அதைத்தான் செய்து கொண்டு இருகிறார்கள் . முதலில் அதை மாற்றுங்கள் . அப்புறம் பெரியாரையும் ,பெரியாரை பின்பற்றுபவர்களையும் விமர்சிக்கலாம் !

  109. “Robin (09:33:50) :

    கி.பி.க்கு பின்பு எழுதப்பட்ட நூல்கள் என்னவாயிற்று? இதில் பல நூல்களில் தீய நெறிகளும் சொல்லப்பட்டுள்ளனவையே அதை பற்றி என்ன சொல்கிறீர்கள்? இந்தியாவில் ஒரு கலாசாரம் இல்லை; பல கலாச்சாரங்கள் இருந்துள்ளன; இப்போதும் அப்படிதான். இந்த எல்லா கலாசாரங்களையும் சேர்த்துதான் சொல்கிறீர்களா? ”

    உங்கள் காமெடிக் கேள்விகளுக்கு பெரிய பதில் சொல்ல வேண்டும். கொஞ்சம் சரித்திரத்தைப் புரட்டிவிட்டு வரவும். அதுவுமில்லாமல், பெரியார் திராவிட கொள்கைக்கும், எங்களுக்கும் உள்ள விஷயங்களைப் பற்றி தான் விவாதிக்கிறோம்.

    இதில் கிறித்துவத்தை இழுக்க விரும்பவில்லை!

    இருந்தாலும் சொல்கிறேன்..

    முகலாய ஆட்சிக்கு பிறகு இந்தியா வந்தது தான் இஸ்லாம், ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு இந்தியா வந்தது தான் கிறித்துவம். ஆனால் இந்தியாவிலேயே இருந்தது தான் இந்து சமயம். அப்படியென்றால் அந்த கலாச்சாரம் என்ன கலாச்சாரம் நண்பரே ?

  110. “Matt (09:34:42) :

    காசியில் ராமசாமிக்கு ஒரு வேலை சோறு போட்டிருந்தால் இந்தப் பிரச்சினையே இருந்திருக்காது : )

    ஆமாம் ! நாங்கள் விழிபடைந்திருக்கமாட்டோம் , உங்களுக்கு அடிமையாக இருந்திருப்போம் ! மக்கள் கலாச்சாரம், இதிகாசம் ,புராணம் ,குப்பை , புண்ணாக்கு இதெலாம் எப்படி கோட்பாடுகள் ஆகும் ? இந்து மதத்தில் உங்களுக்கே தெளிவு இல்லை என்றே நினைக்க தோன்றுகிறது. இந்த கலாச்சாரம் எல்லாம் எல்லா நாடுகளிலும் இருக்கிறது.வெட்டி பெருமை பேசும் இந்தியாவில் தான் இன்னும் மலத்தை அள்ள ஒரு சாதியே இருக்கிறது , இன்னும் அவர்கள் அதைத்தான் செய்து கொண்டு இருகிறார்கள் . முதலில் அதை மாற்றுங்கள் . அப்புறம் பெரியாரையும் ,பெரியாரை பின்பற்றுபவர்களையும் விமர்சிக்கலாம் ! ”

    சாதிய வேற்றுமைகளை களைய வேண்டும். சாதிக் கொடுமைகளை அனைவரும் தான் எதிர்க்கிறோம். எதிர்ப்பு அரசியல் விதண்டாவாதம் பேசுவதற்கும், விளம்பரம் தேடிக் கொள்வதற்கும் உதவுமே தவிர பிரச்சினையை தீர்க்க உதவாது. ஈழ விவகாரத்தில் பெரியார் திராவிடன் யார் என்று திராவிடர்கள் அடையாளம் கண்டுவிட்டனர்.

    சாதியை மையமாக்கி தமிழனைப் பிளவுபடுத்தி, அரசியல் லாபம் காணும் முயற்சிக்கு, நாங்கள் முற்றுப் புள்ளி வைப்போம். மேற்கத்திய சமயங்களின் துணையோடு இந்துக்களை பழிக்கும் பெரியார் திராவிட கூட்டத்தின் எண்ணத்தை மக்களிடம் எடுத்துரைப்போம்.

    நீங்கள் உங்கள் கொள்கையில் போராடுங்கள். நாங்கள் எங்கள் கொள்கையில் போராடுகிறோம். கடவுள் ஒழிந்தால் சாதி ஒழியும் என்று நீங்கள் சொல்வது போல, பெரியார் திராவிட இயக்கங்கள் ஒழிந்தால் நிச்சயம் சாதி ஒழியும் என்பது எங்களின் கருத்து.

    நன்றி!

  111. திருச்சி காரன்,

    //உங்களை எல்லோருக்கும் அறியும் வகையில் வெளிப் படுத்தியதற்கு நன்றி. // நான் உங்களைபோல போலி பெயர்களில் வரவில்லை, என் அடையாளத்தை என்றும் மறைத்ததும் இல்லை. எனவே நீர் சொல்வதை வெறும் காமெடியாகத்தான் எடுத்து கொள்ள முடியும்.

    வெட்டிபேச்சு பேசி நேரத்தை வீணடிக்கவேண்டாம். இங்கும் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்ட வரர்லாறு உண்டு. இந்து மதத்தின் பெயரால் சக மனிதர்கள் அடிமைகளாக நடத்தப்பட்ட வரலாறும் உண்டு.

    // கிறிஸ்துவை வணங்கத் தயார் – அவர் நல்ல கொள்கைகளுக்காக வாழ்ந்தவர் , மரித்தவர் என்ற வகையிலே, வணங்கத் தயார்.

    நான் வழி பட சிலுவையைத் தயார் செய்தால், நான் உங்களுடன் சேர்ந்து வழிபாட்டில் கலந்து கொள்வேன். // – இதை தான் தந்திரமான பேச்சு என்கிறேன். கிறிஸ்து மரித்தவர் என்பதோடு நிறுத்தி விட்டீர். அவர் மீண்டும் உயிர்த்தவர் என்பதால்தான் அவரை வணங்குகிறோம்; இல்லையென்றால் அவரை கடவுளென வணங்க தேவையில்லை. இதில் உமக்காக சிலுவையை வேறு தயார் செய்யவேண்டும். உருவமில்லாமல் உம்மால் வழிபட முடியாதா? அல்லது இந்து மதக் கருத்துகளை திணிக்கும் தந்திரமா? ஏற்கனவே புத்த மதம் இந்து மதத்துடன் சமரசம் செய்து கொண்டதால்தான் அழிந்து போனது. புத்தர் இந்து மதக் கடவுள்களில் ஒருவராக்கப்பட்டு அவருக்கு சில புராண கதைகளும் எழுதப்பட்டன. இந்தத் தந்திரம் இனிமேல் பலிக்காது. கிறிஸ்தவ மதத்திற்கென்று தனித்துவம் உண்டு. இந்து மதத்திலுள்ளவற்றையும் ஏற்றுக்கொள்ள அது ஒன்றும் குப்பை தொட்டி அல்ல.

    கடவுள் கிடையாது என்று சொல்ல ஒருவருக்கு எந்த அளவு உரிமை உண்டோ அதே அளவு உரிமை கடவுள் உண்டு என்று சொல்ல எனக்கும் உண்டு. இதை இங்கு சொல்ல வேண்டிய அவசியமில்லாததால் எழுதவில்லை.

  112. //உங்கள் காமெடிக் கேள்விகளுக்கு பெரிய பதில் சொல்ல வேண்டும். கொஞ்சம் சரித்திரத்தைப் புரட்டிவிட்டு வரவும். // – நைசாக நழுவுகிறீர். பதில் தெரியுமென்றால் சொல்லும்; இல்லையென்றால் தெரியவில்லை என்று வெளிப்படையாக சொல்லவேண்டியதுதானே. சரித்திரத்தை புரட்டிவிட்டு தான் வந்திருக்கிறேன். நீர் தான் தெரியாமல் தடுமாறுகிறீர்.

    //ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு இந்தியா வந்தது தான் கிறித்துவம். // – உம்முடைய சரித்திர அறிவு மெய் என்னை சிலிர்க்க வைத்துவிட்டது. இந்தியாவில் கிறிஸ்தவத்தை முதலில் பரப்பியது தோமா என்ற இயேசுவின் சீடர். அதன் பிறகு சிரியா, பெர்சியா நாடுகளிலிருந்து வந்த கிறிஸ்தவர்களால் கிறிஸ்தவம் போதிக்கப்பட்டது. அப்போது இந்து மதம் என்று ஓன்று இல்லை என்பதை நினைவூட்டுகிறேன்.

    //ஆனால் இந்தியாவிலேயே இருந்தது தான் இந்து சமயம். அப்படியென்றால் அந்த கலாச்சாரம் என்ன கலாச்சாரம் நண்பரே ?// இந்தியாவில் சமணம், புத்தம், சைவம், வைணவம் என்று பல சமயங்கள் இருந்தன. இதில் எதை இந்து மதம் என்று சொல்கிறீர்? தமிழர்களின் கலாச்சாரமும் வட இந்தியர்களின் கலாச்சாரமும் ஒன்றாகவா இருந்தது? வட கிழக்கு இந்தியர்களின் கலாச்சாரத்திற்கும் மற்ற கலாச்சாரங்களுக்கும் உள்ள வித்தியாசம் உமக்கு தெரியவில்லையா?

  113. அடடே….விடமாட்டீங்க போல இருக்கே…
    கிமு கிபி என்றால் என்ன ?
    கிமு வில் என்ன நடந்தது என்பதை கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.

    திருவள்ளுவர் எந்த காலத்தில் வாழ்ந்தார், அவர் ஆதி பகவன் எனக் குறிப்பிடுவது யாரை ?
    பைபிளில் புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு என்பது என்ன? எதுக்காக ஒரு வெர்ஷன் அப்டேட் என ஆராய்ந்து பாருங்கள்?
    கலிலியோவை போப்பாண்டவர் எதற்கு மிரட்டினார் என்பதையும் போய் பாருங்கள்.

    “அப்போது இந்து மதம் என்று ஓன்று இல்லை என்பதை நினைவூட்டுகிறேன்.”

    ஹாஹா…இந்து என்ற வார்த்தை மட்டும் தான் நீங்கள் சொல்லும் காலத்தில் இல்லை. அது ஆங்கிலேயருக்கு பிறகு வந்தது. சிவனை வழிபடுதல், விஷ்ணுவை வழிபடுதல் என்பது கிமுவில் எழுதப்பட்ட இலக்கியங்ககளிலே காணலாம்.

    “இந்தியாவில் சமணம், புத்தம், சைவம், வைணவம் என்று பல சமயங்கள் இருந்தன. இதில் எதை இந்து மதம் என்று சொல்கிறீர்?”
    உலகில் இரு சமயங்கள் தான் மூதாதையர்கள். ஒன்று இந்துயிசம், மற்றொன்று ஜூடாயிசம். இந்துயிசத்திலுருந்து தோன்றியவை தான் நீங்கள் சொல்லும் சமயங்கள். ஜூடாயிசத்திலிருந்து தோன்றியவை தான் கிறித்துவமும், இஸ்லாமும்.
    கிறித்துவத்தை விமர்சிப்பது எங்களின் வேலை இல்லை. அது தேவையில்லாத ஒன்று. உங்களின் விருப்பப்படி நீங்கள் வழிபடலாம். யாரும் எதிர்க்கவில்லை.

    இந்து சமயத்தைப் பழித்து பேசும் பெரியார் திராவிடர்களுடன் தான் கொள்கை முரண்பாடு.

  114. //சிவனை வழிபடுதல், விஷ்ணுவை வழிபடுதல்// – வேதங்களில் முக்கியமான கடவுள்கள் இந்திரன், அக்னி, வாயு, போன்றவர்கள். சிவன், விஷ்ணு எல்லாம் சிறு கடவுள்கள்; பின்னர் பல கதைகள் புனையப்பட்டு பெரும் கடவுள்கள் ஆக்கப்பட்டனர். பாவப்பட்ட இந்திரன், அக்னி, வாய் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டனர்.

    //உலகில் இரு சமயங்கள் தான் மூதாதையர்கள். ஒன்று இந்துயிசம், மற்றொன்று ஜூடாயிசம். // – இந்துயிசம் அல்ல பாகனிசம்: இவர்கள் இயற்கையை வழிபட்டனர். வேத கால கடவுள்களுக்கும் கிரேக்க புராதன கடவுள்களுக்கும் ஒற்றுமை உண்டு. கடவுளிடமிருந்து விலகிய மக்கள் இயற்கையை கடவுள் என்று வழிபட ஆரம்பித்தனர். அக்னி, மழை, சூரியன் என்று எல்லாவற்றையும் கடவுள் என்று அறியாமல் வழிபட்டனர். பின்னர் ஒவ்வொன்றுக்கும் கதைகள் எழுதினர். புதிய கடவுள்களும் உண்டாக்கப்பட்டனர். இப்படிதான் சிவா, விஷ்ணு போன்ற கடவுள்களும் உருவாக்கப்பட்டு அவர்களை வழிபட்டோர் தனி மதபிரிவுகலானர்கள். இப்படி பாகநிசத்திலிருந்து உருவானதுதான் இந்து மதம். இதனால் தான் இந்து மதத்தின் கோட்பாடுகள் என்ன என்று யாராலும் சொல்ல முடியவில்லை.

    //இந்துயிசத்திலுருந்து தோன்றியவை தான் நீங்கள் சொல்லும் சமயங்கள். // தவறு. அன்றிருந்த பாகநிசத்தை எதிர்த்து உருவானதுதான் புத்த மதம். ஒரிஜினல் புத்த மதம் கடவுள் கொள்கையை வலியுறுத்தவில்லை; எனவே புத்த மதம் இந்து மதத்திலிருந்து உருவானது என்பது தவறு.

  115. //இந்து சமயத்தைப் பழித்து பேசும் பெரியார் திராவிடர்களுடன் தான் கொள்கை முரண்பாடு.// – இங்கு கிறிஸ்தவம் விமர்சிக்கபட்டதால்தான் நான் வர நேர்ந்தது. எந்த மதத்தையும் நான் தேவையில்லாமல் விமர்சிப்பதில்லை.

  116. // கிறிஸ்துவை வணங்கத் தயார் – அவர் நல்ல கொள்கைகளுக்காக வாழ்ந்தவர் , மரித்தவர் என்ற வகையிலே, வணங்கத் தயார்.

    //நான் வழி பட சிலுவையைத் தயார் செய்தால், நான் உங்களுடன் சேர்ந்து வழிபாட்டில் கலந்து கொள்வேன். // – இதை தான் தந்திரமான பேச்சு என்கிறேன். கிறிஸ்து மரித்தவர் என்பதோடு நிறுத்தி விட்டீர். அவர் மீண்டும் உயிர்த்தவர் என்பதால்தான் அவரை வணங்குகிறோம்; இல்லையென்றால் அவரை கடவுளென வணங்க தேவையில்லை. இதில் உமக்காக சிலுவையை வேறு தயார் செய்யவேண்டும். உருவமில்லாமல் உம்மால் வழிபட முடியாதா? அல்லது இந்து மதக் கருத்துகளை திணிக்கும் தந்திரமா?

    //கிறிஸ்து மரித்தவர் என்பதோடு நிறுத்தி விட்டீர். அவர் மீண்டும் உயிர்த்தவர் என்பதால்தான் அவரை வணங்குகிறோம். இல்லையென்றால் அவரை கடவுளென வணங்க தேவையில்லை.//

    நான் இயேசுவை மதிக்கிறேன், அவரை வணங்கவும் தயார். ஆனால் இப்படி நான் சொல்லுவதில் நேர்மை இருக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லை. அதையும் இந்து மதக் கருத்துக்களை திணிக்கும் தந்திரமாகவே உங்களால் எண்ண முடிகிறது என்றால்,

    எந்த அளவுக்கு வெறுப்புக் கருத்துக்கள் , அவ நம்பிக்கைக் கருத்துக்கள் உங்கள் உள்ளத்தில் இருக்கின்றன என்பதையே இது காட்டுகிறது.

    இயேசுவை நாங்கள் அவரின் கொள்கைகளுக்காக மதிக்கிறோம், வணங்குகிறோம்.
    வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவரை வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற வள்ளுவனின் கருத்துப் படி, அவரின் வாழ்க்கைக்காக அவரை மதிக்கிறோம்.

    அவர் மரித்த பின் மீண்டும் உயிர்த்து எழுந்தாரா, இல்லையா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை.

    மரித்த பின் மீண்டும் உயிர்த்து எழுந்தால்தான் அவர் கடவுள் என்றும், இல்லாவிட்டால் அவர் சாதாரணமானவர் என்றும் கருதும் வகையானவன் நான் இல்லை.

    இயேசுவை மரியாதை செய்ய, வணங்க வேண்டுமானால், அவர் அற்புதங்களை செய்தவராக இருக்க வேண்டும் என்று கண்டிசன் போடுபவன் நான் அல்ல.

    அமைதிக் கருத்துக்கள், அன்புக் கருத்துக்கள் எங்கு இருந்தாலும் அதை நான் வரவேற்ப்பேன். மரியாதை செலுத்துவேன்.

    இயேசுவின் கருத்துக்களில் உள்ள அமைதி தத்துவங்களை, அன்பு தத்துவங்களை, பகுத்தறிவுக்கு ஒப்ப உள்ள கருத்துக்களை ஏற்றுக் கொள்வோம்.

    நீ உயிர்த்து எழுந்தாயா, அப்ப நீ பெரிய ஆள், உன்னைக் கடவுளாக வணங்குவேன்- நீ உயிர்த்து எழவில்லையா அப்ப நீ ஒன்னும் பெரிய ஆள் இல்லை, சாதரண ஆள், என்னும் கருத்து உடையவன் அல்ல நான்.

    பகுத்தறிவு தியாக வாழ்க்கைக்கு மதிப்பு குடுக்கிறது.

    மத வெறி கடவுள் ஸ்தானத்தில் வைக்கப் படும் அளவுக்கு உயர்ந்தவர்களைக் கூட, உயிர்த்து எழும் சக்தி இல்லாதவருக்கு கடவுள் ஸ்தானம் ஒரு கேடா என்று கேட்க வைக்கிறது.

    இயேசுவுக்கே இந்த கதி!

    இயேசுவின் பெயரால் இன்னும் எத்தனை காட்டுமிராண்டிக் கருத்துக்கள் புகுத்தப் படப் போகின்றன,

    இயேசுவின் பெயரால் அன்பின் அடிப்படியிலான நாகரீக சமூகத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும், பகுத்தறிவுக்கும் இன்னும் எத்தனை ஆணிகளோ, ஆப்புகளோ…..

    இயேசு உயிரோடு இருந்த போது, அவர் மீது சிலர் ஆணிகளை அடித்தனர், என்று கூறியுள்ளனர்!

    அவர் போன பிறகும் பலர் இன்னும் ஆணிகளை அடித்துக் கொண்டு இருக்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது.

    சகோதரர் ராபின் அவர்களே,

    நீங்கள் இயேசு உயிர்த்து எழுந்திருக்கவிட்டால் அவரை வணங்க வேண்டியதில்லை என்னும் கருத்து உடையவர். அதாவது நீங்கள் இயேசுவை வாங்குவது அந்த கண்டிசனின் அடிப் படையில் தான்.

    நான் இயேசுவை அவருக்கு எந்தக் கண்டிசனும் போடாமலே, அவர் உயிர்த்து எழுந்தாரா, இல்லையா என்பதை பொருட்படுத்தாமல் அவரை வணங்குவேன். இது நூற்றுக்கு நூறு உண்மை.

    அய்யோ, இவன் இப்படி எழுதி விட்டானோ என்று ஆத்திரப் பட்டு,
    இதையும் பொய் என்று கூறி,

    எங்கள் இருவரையும் இன்னும் கொச்சைப் படுத்த வேண்டாம், அடித்த ஆணிகள் போதும்!

  117. “சிவன், விஷ்ணு எல்லாம் சிறு கடவுள்கள்; பின்னர் பல கதைகள் புனையப்பட்டு பெரும் கடவுள்கள் ஆக்கப்பட்டனர். பாவப்பட்ட இந்திரன், அக்னி, வாய் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டனர்.”

    ஹா ஹா..இந்த மாதிரி பெரிய பெரிய கருத்தெல்லாம், பெரியார் கூட சொல்லலியே…நீங்க சொல்லி இருக்கீங்க…எங்க இருந்து எடுத்தீங்க…புதிய ஏற்பாடா…பழைய ஏற்பாடா அல்லது தோரா விலிருந்தான்னு சொன்னீங்கன்னா….வசதியா இருக்கும்..

    எப்போ நீங்க இந்து சமயத்தை விமர்சிக்க ட்ரை பண்றீங்களோ…அப்பவே…நாங்களும் கொஞ்சமாவது விஷயம் தெரிஞ்சவங்கன்னு காட்டணுமில்லை….வாங்க சார்…கிறித்துவத்தைப் பற்றி பேசுவோம்..

    கன்னித்தாயின் மகனா இயேசு….ஹாஹா…நல்ல அறிவியல்…

    : )

  118. நண்பர் பொய் முகம் அவர்களே,

    அவர்களுக்கும் உங்களுக்கும் வித்யாசம் இல்லையா?

    அவர்கள் அப்படித் தான் பிற கடவுள்களைப் பழிப்பர்கள். வெறுப்புதான், காட்டு மிராண்டித் தனம் தான் அவர்களின் வழி முறை கொள்கை எல்லாம்.

    நீங்கள் ஏன் அவர்கள் அளவிற்கு இறங்கி செல்கிறீர்கள்?

    இயேசு கன்னித் தாய்க்கு பிறந்தால் தான் தான் அவர்கள் கடவுளாக வழி படுவார்கள்.

    நாம் அப்படி அல்ல, இயேசு கூறியதில் நல்ல கருத்துக்கள் உள்ளனவா, என்பதை நாம் பார்த்தால் போதுமானது.

    மேரி அவர்களை இழிவு படுத்தி நாம் அடையப் போவது என்ன?

    நம்மைப் பொறுத்தவரையில் உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் (அவரவர் மனைவியைத் தவிர பிற பெண்கள் எல்லோரும்) கண்ணகி அம்மாவைப் போல, சீதா அம்மாவைப் போல, சாவித்திரி அம்மாவைப் போல , நளாயினி அம்மாவைப் போல, தமயந்தி அம்மாவைப் போல வணங்கப் பட வேண்டியவர்கள் அல்லவா?

    நண்பர் என்ற வகையிலே சொல்கிறேன். உங்களுக்கு நான் எடுத்து சொல்வது தவறு என்றால் என்னை மன்னித்து விடுங்கள்.

  119. Is God willing to prevent evil, but not able? Then he is not omnipotent. Is he able, but not willing? Then he is malevolent. Is he both able and willing? Then whence cometh evil? Is he neither able nor willing? Then why call him God? – Epicurus

    And if there were a God, I think it very unlikely that He would have such an uneasy vanity as to be offended by those who doubt His existence. – Bertrand Russell

  120. பார்ப்பனிய இந்து மதத்தின் கடவுள் கொள்கைகளையோ ,கோட்பாடுகளையோ கேட்டால் சொல்வதற்கு வக்கில்லை. பேச்சை திசை திருப்புவதில் தான் உங்கள் இரண்டு பேரின் கவனம் இருக்கிறது. மேரியை பற்றி பேசும் முன் உங்கள் பாஞ்சாலி கதையை யோசிக்க வேண்டும், பெண் பொறுக்கி கிருஷ்ணனை பற்றி யோசிக்க வேண்டும்.இதை எல்லாம் உங்கள் இந்து கலாச்சாரம் ஏற்று கொள்கிறதா?

  121. ஒருவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை அவரது குணமும் செயல் செய்யும் வைக்கும் தான் தீர்மானிக்கிறது. இதை நாம் தெளிவாகக் கூறி விட்டோம். இதைத்தான் கிருட்டினரும், வள்ளுவரும் கூறியுள்ளனர்.

    க‌ள்ள‌ச் சாராயம் காச்சி விற்று பலர் சாகக் காரணமாய் இருப்பவர் கீழானவராகவே கருதப் பட முடியும்.

    நண்பனை நம்பிக்கை துரோகம் செய்து ஏமாற்றி அவன் மனைவியோடு தொடர்பு வைப்பவர் கீழானவராகவே கருதப் பட முடியும்.

    நான்தான் உய‌ர்ந்த‌ சாதி, என்னைத் தொடாதெ என்று கூறுப‌வ‌ன் கீழானவராகவே கருதப் பட முடியும்.

    பிற‌ர் வாயில் பீ தினிப்ப‌வ‌ன் கீழானவராகவே கருதப் பட முடியும்.

    துறவி போல வேடமிட்டு துஷ்டத்தனம் செய்பவர் பார்ப்பனர்களின் தலைவர் போல செயல் பட்டாலும் கீழானவராகவே கருதப் பட முடியும்!

    எனவே ஒருவர் உயருவது தாழ்வதும் அவரவர் குணத்திலும் , செய்கையிலுமே இருக்கிறது – அது கடவுளின் கையில் இல்லை.
    அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்.

    ஆனால் எல்லோரயும் நற்குணம் உடையவரக்கி உயர்த்துவது அவசியம்.

    ஆனால் பிறப்பின் அடிப்படையில் ஒருவர் கீழானவர் என்று இந்து மதத்தின் எந்த வேத‌ நூல்களிலும் இல்லை.

    கீழான மனநிலையை உடையவருக்கு பிறந்த மக்கள் மேலான நிலயை அடைவதும், நல்லவருக்குப் பிறந்த ஒருவர் நாற்றமெடுக்கும் செயல்களை செய்வதும் நடந்து வருகிறது.

    சகோதரர்கள் வேந்தன், Matt ஆகியோர் எங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    அர‌சிய‌ல் வாதிக‌ள், “மான‌மிகு” வாதிக‌ள் சிலர் சாதியை ஒழிக்க விடக் கூடாது என்றே நினைக்கிறார்கள். ஏன் எனில் இப்போது சாதி ஒழிந்து விட்டால், அவர்கள் வேறு எதை வைத்து பிழைப்ப‌து?

    பெரியாரின் பெயரை வைத்து பில்லியன்களைக் குவித்த பலர், இன்னும் இன்னும் அதிக சொத்து சேர்க்க நம்பி இருப்பது சாதிகளைத் தான். சாதிகள் அழிக்கப் பட்டு விட்டது என்றால் அவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விடும். மேலும் இந்து மதத்தையும் அவர்கள் எதிர்க்க உபயோகப் படுவது சாதியே.

    தமிழ் நாட்டிலே எந்த அரசியல் வாதியும் சாதி அழிவதை அனுமதிக்கப் போவது இல்லை.

    உங்களுக்கும் எனக்கும் வேறு வேலை உண்டு. இங்கெ எழுதுகிறோம். எழுதுவதோடு செய்யவும் செய்கிறோம். சாதி அமைப்பு அழிவதால், உங்களுக்கோ எனக்கோ பைசா நஷ்டமில்லை.

    ஆனால் அரசியலின் ஆணி வேறாக சாதி மத வேறுபாடு ஆக்கப் பட்டு விட்டது. தேர்தலில் தோற்றால் பல கோடிகள் நஷ்டம். வென்றால் பலப் பல கோடிகள் லாபம்!

    நாங்கள் இப்போது இந்து மதத்தை எப்படி கையாளப் போகிறோம் என்று கூறினால், 4000 வருடம் முன் மனு என்னும் அரசன் எழுதிய நூலைக் குடுக்கிறார்கள். நான் மனுவைப் பின்பற்ற போவது இல்லை என்றால், இல்லை நீ மனுவைத் தான் பின் பற்றியாக வேண்டும் என்று வ‌ற்புறுத்துவ‌து போல‌ உள்ளது.

    எனவே சாதி அமைப்பு முறை இல்லாத வகையில் இந்து மதத்தை சீர் திருத்துவோம் என்றால்- இல்லை , இல்லை அது முடியாது என்கிறார்கள்- இல்லை நீ சாதி அமைப்பை வைத்துக் கொண்டுதான் ஆக‌ வேண்டும் என்று ந‌ம்மிட‌ம் திணிப்பார்க‌ள் போல‌ தோன்றுகிற‌து.

    ஆனால் என் வாழ்க்கை என் கையில். நாங்க‌ள் இந்துதான். நாங்க‌ள் அமைக்க‌ இருக்கும் ச‌மூக‌ம் இதுதான்.

    அத்வ‌தைம், அ துவைத‌ம், இர‌ன்டு அல்ல‌, ஒன்றுதான் என்ற‌ கொள்கையின் அடிப்ப‌டையில் நாங்க‌ள் சிற‌ப்பான‌ ச‌மத்துவ‌ ச‌மூக‌த்தை அமைத்தே தீருவொம்‍- யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்‍ -‍ யார் த‌டுத்தாலும் த‌டுக்க‌விட்டாலும், நாங்க‌ள் சிற‌ப்பான‌ ச‌மத்துவ‌ ச‌மூக‌த்தை அமைத்தே தீருவொம்!

    எங்க‌ள் வழி ப‌குத்த‌றிவு வ‌ழியே. கூற‌ப் ப‌ட்ட‌, கேட்க்க‌ப் ப‌ட்ட‌ ஒவ்வொரு க‌ருத்தும் உண்மை என்னும் உரை க‌ல்லில் சோத‌னை செய்ய‌ப் ப‌ட்டே அங்கீக‌ரிக்க‌ப் ப‌டும்!
    க‌ட‌வுள் இல்லை என்ப‌து நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌ , ச‌ந்தேக‌த்திற்க்கு அப்பாற்ப‌ட்ட‌ உண்மையானால், அதுவும் ஏற்றூக் கொள்ள‌ப் ப‌டும். வேத‌மோ, கீத‌மோ, ஒவ்வொரு க‌ருத்தும் உண்மை என்னும் உரை க‌ல்லில் சோத‌னை செய்ய‌ப் ப‌ட்டே அங்கீக‌ரிக்க‌ப் ப‌டும்- உண்மை அல்லாத‌து வில‌க்க‌ப் ப‌டும்.
    ச‌த்ய‌ம் ஏவ‌ ஜ‌ய‌தெ, உண்மையே வெல்லும் என்கிற‌ ப‌குத்த‌ரிவு கொள்கை அடிப் ப‌டைக் கொள்கையாகும்.
    எங்க‌ள் நிலைப் பாடு, செய‌ல் பாடு இதுதான்.

    இந்து ம‌தத்தை எதிர்ப்ப‌தோ, “அழிப்ப‌”தோ அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம்.

    ம‌த‌ம் எதிர்ப்பையே உர‌மாக்கி வ‌ளர்கிற‌து!

    8000 வ‌ருட‌மாக‌ அழியாத‌ ஒன்றை இப்பொது நீங்க‌ள் சில‌ர் செர் ந் து அழிக்க‌ முடியும் என்று நினைத்தால் முய‌ற்ச்சி செய்து பாருங்க‌ள். வெளீ நாட்டில் இந்து ம‌த‌ம் இல்லை என்றால் , வெளி நாட்டில் யார் ம‌த‌ங்க‌ளை ஒரு பொருட்டாக‌ நினைக்கிறாற்காள்?

    என‌து கிருத்துவ‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் ஸ்பெயின் நாட்ட்ற்க்கு சுற்றுப் ப‌ய‌ண‌ம் சென்றார். அன்று ச‌ர்ச் சென்றால் , அங்கெ இவ‌ர், ம‌னைவி இரண்டு குழ‌ந்தைக‌ள், உட்ப‌ட‌ மொத்த‌ம் நாலெ பேர்தான். பூச‌னை ந‌ட‌த்த‌ பாதிரியார்க‌ள் 7 பேர் இருந்த‌ன‌ராம். ‌

    இந்து ம‌த‌ம் வ‌ளர்ந்து வ‌ருகிற‌து. அதை விட‌ முக்கிய‌ம் அது செம்மைப் ப‌ட்டு வ‌ருகிர‌து. இன்னும் செம்மை ஆக்குவொம்.

    வேந்தன், Matt ஆகியோரை புண்ப‌டுத்துவ‌து என் நோக்க‌ம் அல்ல‌.

  122. Matt,

    எல்லா வ‌க்கும் இருக்கிர‌து. சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு அதிக‌ விள‌க்க‌ம் கொடுக்க‌ வேண்டியுள்ளது. எல்லாவ‌ற்றுக்கும் ச‌ரியான‌ விளக்கம் த‌ர‌ப் ப‌டும்!

  123. இந்து ம‌தத்தை எதிர்ப்ப‌தோ, “அழிப்ப‌”தோ அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம்.

    ம‌த‌ம் எதிர்ப்பையே உர‌மாக்கி வ‌ளர்கிற‌து!

    8000 வ‌ருட‌மாக‌ அழியாத‌ ஒன்றை இப்பொது நீங்க‌ள் சில‌ர் செர் ந் து அழிக்க‌ முடியும் என்று நினைத்தால் முய‌ற்ச்சி செய்து பாருங்க‌ள். வெளீ நாட்டில் இந்து ம‌த‌ம் இல்லை என்றால் , வெளி நாட்டில் யார் ம‌த‌ங்க‌ளை ஒரு பொருட்டாக‌ நினைக்கிறாற்காள்?

    என‌து கிருத்துவ‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் ஸ்பெயின் நாட்ட்ற்க்கு சுற்றுப் ப‌ய‌ண‌ம் சென்றார். Sunday அன்று ச‌ர்ச் சென்றால் , அங்கெ இவ‌ர், ம‌னைவி இரண்டு குழ‌ந்தைக‌ள், உட்ப‌ட‌ மொத்த‌ம் நாலெ பேர்தான். பூச‌னை ந‌ட‌த்த‌ பாதிரியார்க‌ள் 7 பேர் இருந்த‌ன‌ராம். ‌ This is is the importance they give for religions and spirituality ! They just keep their religion for name sake!

    இந்து ம‌த‌ம் வ‌ளர்ந்து வ‌ருகிற‌து. அதை விட‌ முக்கிய‌ம் அது செம்மைப் ப‌ட்டு வ‌ருகிர‌து. இன்னும் செம்மை ஆக்குவொம்.

    வேந்தன், Matt ஆகியோரை புண்ப‌டுத்துவ‌து என் நோக்க‌ம் அல்ல‌.

  124. அரசியல்வாதிகள் சாதியை அழிய விடமாட்டர்கள் சரி, மக்கள் சாதியை விட்டு விலக தயாரா? மக்கள் விட்டு விட்டால் அரசியல்வாதி விட்டுத்தானே ஆகவேண்டும். மக்களை சாதியை விட்டு வெளியே வரவிடாமல் தடுப்பது தான் இந்து மதம். கருணாநிதி, வீரமணி போன்றவர்கள் பெரியார் பெயரை சொல்லி ஊரை ஏமாற்றியதற்கு பெரியார் எப்படி பொறுப்பாவார். நீங்கள் பெரியாரை மறுபதற்கு இவர்களை காரணமாக சொல்லி ,திராவிடம் பேசுபவர்களே இப்படிதான் என்று முத்திரை குத்துகிறீர்கள். நீங்கள் மனுவை தான் பின்பற்றுகிறீர்கள் அதற்கு உதாரணமே இனும் “Bramihn’s only” போர்டு ,வைப்பது யார் முஸ்லிமா ? எல்லா பார்ப்பாரும் தீட்சிதர்களை ஆதறிகிரீர்களே ? தமிழ் வழிபாட்டை எதிர்கிறீர்களே? ஏன்? உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சாதி உணர்வில்லை என்றால் கண்டிப்பாக வரவேற்போம். முதலில் பார்பனர்களை திருத்துங்கள். பார்பன சங்கத்தை கலையுங்கள்.ஏனெனில் சாதியை உருவாகியவன் அவனே ! பிறகு மற்றவரர்கள் தானாக திருந்துவார்கள்.

  125. //
    அரசியல்வாதிகள் சாதியை அழிய விடமாட்டர்கள் சரி, மக்கள் சாதியை விட்டு விலக தயாரா? மக்கள் விட்டு விட்டால் அரசியல்வாதி விட்டுத்தானே ஆகவேண்டும்.
    நீங்கள் மனுவை தான் பின்பற்றுகிறீர்கள் அதற்கு உதாரணமே இனும் “Bramihn’s only” போர்டு ,வைப்பது யார் முஸ்லிமா ? //

    இப்போது இந்துகளிடை சாதி வேறுபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டுதான் வருகிறது.அரசியல் வாதிகளும்,சிலரும்தான் சாதி வளர்க்க நினைக்கிறார்கள்.உங்கள் வட்டத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள்.

    நன்பரே முஸ்லிம் புனித தலமான மெக்காவில் சில இடங்களில் பிறமதத்தினர் செல்ல அனுமதியில்லை தெரியுமா?
    என்னவே முஸ்லீம்கள்,கிறிஸ்துவர்கள் புணிதர்கள் மாதிரி பேசுகிறிரே..
    உங்கள் புரிதலில் தவறு இருக்கிறது.

  126. ராபின், உங்களைப் புன்படுத்தும்படி விமர்சித்ததுக்கு மன்னிக்கவும். கிறித்துவத்தை விமர்சிப்பது நம் நோக்கமல்ல. போலி திராவிடர்களை மக்களுக்கு தோலுறித்து காட்டுவதே எங்கள் நோக்கம்.

  127. ஐயா, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெரியார் செய்த நல்ல விஷயங்களை யாராலும் மறுக்க முடியாது என்பது வேறு.ஆனால், பேச்சு வடிவில் இருந்த சாதிக்கு எழுத்து வடிவம் கொடுத்து அதை நிலைத்திருக்கச் செய்தவர் பெரியார்.

    “கருணாநிதி, வீரமணி போன்றவர்கள் பெரியார் பெயரை சொல்லி ஊரை ஏமாற்றியதற்கு பெரியார் எப்படி பொறுப்பாவார். ”

    இது பயங்கர காமெடி ஐயா. பெரியாரின் கூடவே இருந்தவர்கள் இவர்கள். பெரியாரின் கொள்கைகள் தான் இவர்களுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், இவர்கள் ஜகஜாலக் கில்லாடிகளாக உள்ளனரே? இப்ப இருக்க ஈழ நிலைமையில், கோவையில் உலகத் தமிழ் மாநாடாம். பச்சொந்திக் கொள்கை !

  128. உங்களுக்கு வேண்டிய கருத்துக்கு பதில் சொல்வது , மற்றவற்றுக்கு பார்க்காதது போல் இருந்து விடுவது. செம காமெடிதான் உங்க கூட !

    சங்கரரை பின்பற்றிய ஜெயந்திரன் பெண் பித்தனாக இருக்கானே அது எப்படி,? சங்கரரும் அப்படியோ? அந்த கொள்கைதான வந்திருக்க வேண்டும் ஏன் வரவில்லை?

  129. சங்கரரை பின்பற்றிய ஜெயேந்திரர் என்பது தவறு. சங்கரரின் பெயரை வைத்து ஜெயேந்திரர் தன் செல்வாக்கை உயர்த்திக் கொண்டார் என்பதுதான் சரி.

    ஆதி சங்கரரின் கொள்கையும் செயல்பாடும் வேறு. ஆதி சங்கரர் ஒரு சரியான துறவிக்கு இலக்கணமாக கடைசி வரையில் கையிலே காசு எதுவும் வைத்துக் கொள்ளாமலும், பிட்சை எடுத்து உண்டும், இருக்க இடம் என்று எதுவும் இல்லாமலும் வாழ்ந்தவர்.

    ஜெயேந்திரர் கிட்டத் தட்ட ஜெயா, கலைங்கர் ஸ்டைலிலேயே வாழ்ந்தவர் (I mean in terms of wealth accumalation and using political influence). பார்ப்பனர்கள் கொஞ்சம் மூளையை உபயோகித்து இருந்தால் ஜெயேந்திரரை , திருத்தி இருக்கலாம். உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டே என்ற நிலையில் தான் அவர்கள் உள்ளனர்.

    ஜெயேந்திரருக்கும் ஆதி சங்கரருக்கும் உண்மையில் எந்த தொடர்பும் இல்லை. சிம்பிளா சொன்னால் ஜெயேந்திரர் ஒரு ஆன்மிக வாதி இல்லை.

  130. இது அவராதில்ல… இப்ப எவன் கேட்டவன் எவன் நல்லவன் என்று ‘conduct certificate’ ரெடி செய்றத விட்டுட்டு அவனால என்ன பயன் என்பதை பார்போம். பெரியார் சொன்னது மாத்ரி தான் ‘இந்த ஊர்ல தான் அவாவன் மகாத்மா ரிஷி கடவுள் என்று சொல்றான் ஆனா இவனால சமூகத்துக்கு என்ன பயன்னுனு பார்த்த ஒன்னு இல்லை.. சரி பயன் இருந்தது என்றால் இப்ப இப்படி ஏன் இருக்கோம். பழங்காலத்திலே இருக்கோம் நாம். இப்போ என்ன பண்ண முடியும் என்று பாப்போம். அத விட்டுட்டு கண்ட கதை அளந்துட்டு இருக்கீங்க இங்க சில பேர்.

  131. இப்போ புரியுதா திருசிகாரரே! பெரியாரை பின்பற்றிய கருணாநிதி என்பதும் தவறு..உங்க சங்கரர இழுதவுடனே விளக்கம் வேகமா வருது..! அவருக்கும் இவருக்கும் தொடர்பு இல்லன்னு ..!ஆனா பெரியாருக்கு இந்த நியாயம் பொருந்தாது அப்படிதானே !

    சைடு கேப்ல சங்கரர நல்லவனாக ஆகிவிடீர்கள் ! ஆரம்பத்தில் இருந்தே சங்கரரை விடுகொடுக்காமல் திருவளுவர், புத்தர் போன்றவர்களோடு சேர்த்து பேசும்போதே தெரியும் ! பிறப்பால் பிரமனானாக இருபவனால் தான் பிரமத்தை உணர வேண்டும் என்று சொன்ன ஆதி சங்கரரை விவேகந்தரே கண்டிகிறாரே ! ஒரு வேலை அதான் விவேகானந்தரை பார்ப்பார்கள் ஏற்றுக்கொள்ள வில்லையோ ? !

  132. //Dear Brothers Venthan, Matt,

    I will clarify on your points, I need some time, you know I have to answer to all of you, besides i have my work. No need to rush to brand as கள்ள மவுனம் and all, brothers//

    பரவாயில்லை திருச்சிகாரரே, இன்னும் கால அவகாசம் எடுத்து கொண்டு பதில் சொல்லுங்கள்.

    கடைசியாக இன்னொரு விடய.

    அம்பேத்கரை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் இந்து மதத்தையும் ஏற்றுகொள்கிறீர்கள்.

    நான் இந்துவாக பிறந்ததற்கு நான் பொருப்பல்ல. ஆனால் இறக்கும் போது ஒரு போதும் ஒரு இந்துவாக சாகமாட்டேன் – அம்பேத்கர்.

    அம்பேத்கரையும், இந்துமதத்தையும் ஒருவர் ஏற்றுக் கொள்ளமுடியாது என்பதை உங்களுக்கு உணர்த்தவே அவரின் வார்த்தைகள்.

  133. Dear Brothers Matt/ Venthan

    நான் கலைங்கருக்காக , வீரமணிக்காக பெரியாரைக் கண்டிக்கவில்லை. நான் பெரியாரை இகழவில்லை- என் ஆசிரியர் என்பதையும் கூறி விட்டேன்.

    நான் கலைங்கருக்காக , வீரமணி க் காக பெரியாரைக் கண்டிக்கவில்லை. நீங்கள் எதற்காக கேட்டீர்ர்கள் எப்படி வருவீர்கள் என்று எதிர் பார்த்தேன். நான் பெரியாரை என் ஆசிரியர் என்பதையும் கூறி விட்டேன். இகழவில்லை. ஆனால் அவர் தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றத்தை விட ஆனால் அவருடைய செயல் பாடும், அம்பேத்கரின் செயல் பாடும் வேறு. அதை ஏற்கனவே விவரித்து விட்டேன். பெரியாரை விமரிசிக்கலாம். அவருடைய கொள்கைகளை விமரிசிக்கலாம். பரிசீலிக்கலாம் தவறு இல்லை.

    அதைப் போல ஆதி சங்கரரை விமரிசிக்கலாம். அவருடைய கொள்கைகளை பரிசீலிக்கலாம். ஆதி சங்ககரரும் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல.

    ஆனால் எனக்குத் தெரிந்த வரையில், ஆதி சங்கரர் எந்த ஒரு இடத்திலும் “பிறப்பால் பிரமனானாக இருபவனால் தான் பிரமத்தை உணர வேண்டும் என்று சொன்ன” தாக எனக்குத் தெரிந்த வரையில் இல்லை. அவருடைய தத்துவத்திலும் அதற்கு இடம் இல்லை. இந்த விசயத்தில் ஆதி சங்கரர் பிராமணர்கள் மட்டுமே ப்ரம்மத்தை அறிய முடியும் என்று எந்த இடத்தில் அவர் கூறினார் என்று விளக்கினால் நான் தெரிந்து கொள்ளுவேன்.

    சுவாமி விவேகானதர் இராமானுஜரோடு ஒப்பிட்டு, சங்கரர் அந்த அளவுக்கு அவரின் கொள்கை எல்லாப் பிரிவினரிடமும் போகவில்லை என்று கூறியிருந்தார். சங்கரரின் அறிவு கூர்மையாக இருந்த அளவுக்கு அவருடைய இதயம் விசாலமாக இல்லையோ என்று அஞ்சுகிறேன் என்பது விவேகானந்தரின் வார்த்தைகளின் தமிழ் மொழி பெயர்ப்பாக வெளியிட்டுள்ளனர். அதே இடத்திலேயே, அப்படிப் பட்ட கருத்து ஏற்ப்படும் நிலையை வுருவாக்கியது சங்கரரின் சீடர்களே என்றே கூறியுள்ளார்.

    சங்கரரன் கருத்துக்களை அவருடைய சீடர்கள் பிராமண வகுப்பிற்கு குள்ளேயே முடக்கி விட்டனர் என்று விளக்கியுள்ளார்.

    ஆதி சங்கரரின் முன் இருந்த பணி மிகப் பெரியது. அவரின் கொள்கைகளை அவரின் சீடர்கள் சிதைத்து விட்டனர். அவர் யாகங்கல்லால் பலன் இல்லை. வெறுமனே சமஸ்கிருத ஸ்லோகங்களை சொல்லுவதால் பலன் இல்லை என்று தெளிவாகக் கூறியும், திரும்பவும் தர்ப்பையை எடுத்துக் கொண்டு அலைய ஆரம்பித்து விட்டனர்.

    பல விசயங்களை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. Matt, வேந்தன், ஆகியோர் தொடர்ந்து விவாதிப்பதற்கு நன்றி.

  134. ஒரு பெரிய பண்ணை எஸ்டேட் – மாளிகை, தோட்டங்கள், விளை நிலங்கள், அடுக்கு மாடிக் கட்டிடங்கள், குளிர் சாதன வசதிகள், மின்னேற்றி, என்று எல்லா வசதியும் உள்ளது.

    இந்த பண்ணையின் எஜமானியாக ஒரு பெண்மணி இருந்தார்.
    அந்த இடத்தின் எந்தப் பகுதியையும் இயங்கவும், நிறுத்தவும் எந்த செயலையும் செய்யும் வசதி அந்த எஜமானிக்கு இருந்தது.

    அந்த பண்ணையின் எல்லா இடங்களிலும் சக்தி வாய்ந்த காமிராக்களும் பொருத்தப் பட்டு, அந்த மாளிகையின், தோட்டத்தின், கட்டிடங்களில் எந்த இடத்தில் நடப்பதையும் தான் எப்போதும் அறியும் வசதியையும் அந்த எஜமானியார் செய்து வைத்து இருந்தார்.

    அந்த எஜமானியம்மாள் ரொம்ப நல்லவர், தங்கமானவர், யார் கஷ்டப் பட்டாலும் உதவி செய்பவர் என்று பேச்சாக இருந்தது.

    அவரிடம் பல பணியாட்கள் இட்ட வேலையை செய்யக் காத்து இருந்தனர். அந்த மாளிகையில் பலர் தங்கி வாழ்ந்து வந்தனர். ஆனால் அந்த எஜமானியை அங்கே வாழும் யாரும் பார்த்ததும் இல்லை.

    அங்கே உள்ள பிரும்மாண்டமான கட்டிடங்களில் ஒன்றில் ஒரு பிளாட்டில் அந்த எஜமானியின் மூணு வயதுக் குழந்தை ஒன்றும் வளர்ந்து வந்தது. எல்லா பெரிய வீட்டுக் குழ்ந்தைகளையும் போல அந்தக் குழந்தையையும் பல ஆயாக்களும், வேலைக்காரர்களும் வளர்த்து வந்தனர்.

    அந்தக் குழந்தையும் தன் அம்மாவாகிய அந்த எஜமானியைப் பார்த்தது இல்லை. அந்த எஜமானியார் ஏன் தன் சொந்தக் குழந்தையை நேரிலே கவனிக்காமல் இருக்கிறார் என்றே பலரும் வியந்தனர்.

    அந்தக் குழந்தைக்கு நேரத்திற்கு உணவு கொடுக்கவும், குளிப்பாட்டவும், ஆடை அலங்காரங்கள் செய்யவும் ஆயாக்களும், பணியாளர்களும் இருந்தனர்.

    இப்படிப் பட்ட நிலையிலே திடீரென்று ஒரு நாள், அந்தக் குழந்தையை கவனிக்க யாருமே வரவில்லை. காலையில் தூங்கி எழுந்தது முதல், அது தனியாகவே இருக்கிறது. குளிக்கவும் இல்லை. முகம் கழுவும் இல்லை. அதற்க்கு தாகமும் பசியும் ஏற்பட அது அழ ஆரம்பித்தது. அழுததால் மேலும் தாகமும் பசியும் அதிகமாக அந்தக் குழந்தை மெதுவே தான் வசிக்கும் இடத்தை சுற்றும் முற்றும் பார்த்தது.

    அந்த அறையின் மூலையில் ஒரு அழகிய பெண்ணின் சிலை இருப்பதைக் கண்டு, அதன் அருகில் சென்று, அம்மா எனக்கு பசிக்குது அம்மா, எனக்கு சாப்பிட ஏதாவது குடு அம்மா என்று கேட்கிறது.

    தன் எஸ்டேட்டின் எல்லா இடங்களிலும் நடை பெறுவதை வீடியோ காமிரா மூலம் காணும் வசதி இருப்பதால், தன்னுடைய குழந்தை பசியால் அழுவதையும், உதவி தேவைப் படுவதையும் அறிந்த தாய் என்ன செய்வாள்?

    Option: 1
    1) தானே உணவுப் பொருட்களையும் , பாலையும் கொண்டு வந்து அந்தக் குழ்ந்தையை தேற்றி உணவு வூட்டுவாளா?

    Option: 2
    2) உடனே குழந்தைக்கு பாலும், உணவும் அளிக்க அந்தக் குழந்தை இருக்கும் இடத்திற்கு அருகில் பணி செய்பவர்களிடம், கட்டளை இடுவாளா?

    Option 3:
    3) என்னிடம் உதவி கேட்காமல் ஏதோ ஒரு சிலையிடம் போய் உதவி கேட்டாய். நான் உன்னை வெறுக்கிறேன், உனக்கு உதவி செய்ய முடியாது என்று கூறுவாளா?

    நண்பர்களே நான் ஏன் இந்தக் கதையைக் கூறுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும்.

    கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று என்னால் உறுதியாகக் கூற முடியாது.

    ஆனால் கடவுள் என்று ஒருவர் இருப்பது உண்மையானால், அவர் நல்ல உள்ளம் படைத்தவர் , கருணை நிறைந்தவர் என்பது உண்மையானால் அவர் நிச்சயம் முதல் இரண்டு Optionகளில் ஏதாவது ஒன்றையோ செய்வார் என்றே உறுதியாக கூற முடியும்!

    மூன்றாவது Optionஐயும் தேர்ந்து எடுக்க கடவுளால் முடியும். ஆனால் அப்போது அவர் நல்ல உள்ளம் படைத்தவர், கருணைக் கடலாக இருப்பவர் என்ற தகுதிக்கு உரியவராக இருக்க மாட்டார்.
    சர்வ வல்லமை படைத்த சர்வாதிகாரக் கடவுள் என்ற அடைமொழியை வேண்டுமானால் தரலாம்.

    கடவுள் உருவம் உள்ளவரா, இல்லாதவரா என்று நம்மிடம் அவர் காண்பிக்கவில்லை.

    எனவே நான் பாடிகாட் முனீஸ்வரனை வணங்கினாலும், சுடலை மாடனை வணங்கினாலும், முருகனை வணங்கினாலும், சிவனை வணங்கினாலும், இயேசுவை வணங்கினாலும், முப்பாத்தம்மனை வணங்கினாலும், உருவம் இல்லாத நிலையை வணங்கினாலும் அதை தன்னை வணங்கியதாகக் கருதப் பட வேண்டிய பொறுப்பு கடவுளுக்கு உண்டு.

    Benefit of doubt is even given to the accused- I am not an accused, I am naive!

    கடவுளுக்கு உருவம் இருக்கிறதா, இல்லையா என்பதை எல்லாம் கடவுளை நேரில் பார்க்கும் போது தேர்ந்து கொள்வேன்.

    உருவ‌ம் இல்லாத‌ நிலை என்ப‌து இந்து ம‌த‌த்தில் கூற‌ப் ப‌ட்டு உள்ள‌து, உருவ‌ம் இல்லாத நிலையை வ‌ணங்க‌லாம் என்றும் கூறியாகி விட்ட‌து.

    அதே நேர‌ம் உருவ‌ம் உள்ள நிலையை வ‌ண‌ங்கலாம், அது எளிமையான‌ வ‌ழி, சிற‌ந்த‌ வ‌ழி என்ப‌தும் உள்ள‌து!

    உருவ‌ வ‌ழிபாடு கூடாது என்று எந்த‌ இட‌த்திலும் கூற‌ப் ப‌ட‌வேயில்லை‍‍, இந்து ம‌த‌த்தில்!

    கடவுள் எல்லாம் வல்லவராக இருக்கும் பட்சத்தில் தேவைப்படும் போது, அவர் விருப்பப்படும் உருவத்தை எடுத்துக் கொள்ள அவரால் முடியாதா?

    “ஏ கடவுளே, நீ உருவம் இல்லாமல் தான் இருக்க வேண்டும், உருவத்தை எடுத்துக் கொள்ள உனக்கு அனுமதி இல்லை” என கடவுளுக்கே கட்டளையிடும் அளவுக்கு வலிமை உள்ள நபர்கள் யாராவது இருக்கிறார்களா?

    விண்ணுக்கும் மண்ணுக்கும் அதிபதியானவர் ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு இந்த மண்ணுக்கு வர அவருக்கு ஏதாவது தடை இருக்கிறதா?

    “அட கடவுளே, நீ இனிமேல் வாய் திறந்து எதுவும் பேசக் கூடாது” என்று கடவுளின் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டி மூடும் வலிமை யாருக்காவது இருக்கிறதா?

    தேவைப் படும் போது, தேவையான உருவங்களை எடுத்துக் கொண்டு இந்த மண்ணில் அவதரிக்கவும், தேவைப்படும் போது அவர் விருப்பப் படும் நேரத்தில் எந்த ஒரு செய்தியையும் வெளிப்படுத்த, பிறர் அனுமதியைக் கேட்க கடவுளுக்கு கட்டாயம் இருக்கிறதா?

    கடவுள், அவ‌ர் விருப்ப‌ம் போல‌ அவ‌தார‌ம் எடுக்க‌வோ, இன்னும் பல‌ தூதுவ‌ரை
    அனுப்ப‌வோ அவ‌ருக்கு சுத‌ந்திர‌மோ, வ‌லிமையோ இல்லையா?

    அப்படிக் க‌ட‌வுள் உருவ‌ம் எடுத்து வ‌ந்து, ம‌க்க‌ளொடு ம‌க்க‌ளாக‌ வாழ்ந்து, ம‌க்க‌ளுட‌ன் விலையாடீ, மக்களுக்கு எடுத்துக் காட்டாக‌ வாழ்ந்து, ம‌க்க‌ளுக்காக‌ப் போராடிய போது, அதே வ‌டிவிலே , அதே உருவ‌த்திலே க‌ட‌வுளை வ‌ண‌ங்குவ‌துதானே, பொருத்த‌மான‌தும், பிடித்த‌மான‌தும் ஆகும்?

    எனவே கடவுள் உருவம் இல்லாத நிலையில் பெரும் சக்தியாக இருக்கிறார். அதே சக்தியுடனும் அவர் எத்தனை உருவங்களை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் அவருக்கு இருக்கிறது.

    எந்த உருவத்திலும் கடவுளை வணங்கும் சுதந்திரம் மனிதனுக்கு இருக்கிறது. கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று தேடி பார்க்கும் சுதந்திரமும் மனிதனுக்கு இருக்கிறது.

    இதுதான் இந்து அமைத்ததில் நான் அறிந்த கடவுள் தத்துவத்தின் ஒரு கோணம். இன்னும் சில கோணங்களில் கடவுள் தத்துவத்தை இந்து மதத்தில் அணுகியுள்ளனர்.

    Hope சகோதரர் Matt அவர்கள் would give his comments about my observations on this angle. Then I can move to next angle!

  135. நண்பரே, இங்கு நாம் கேட்பது கடவுள் உருவம் உள்ளவரா இல்லையா என்பதல்ல.உங்கள் கோட்பாட்டையும் அல்ல , உங்கள் இந்து மதத்தின் கோட்பாடு என்ன?.அதற்கான ஆதாரம் என்ன ?மற்ற மதங்களை ஒப்பிட வேண்டியதில்லை. நான் பாடிகாட் முநீஸ்வரனையும் ,முருகனையும் வணகுவன் ,ஏசுவையும் வணங்குவேன் என்று சொல்வது ஒரு தந்திரம். நீங்க யாரை வேண்டும் என்றாலும் வணங்கிகொள்ளுங்கள்,அது இங்கு தேவை இல்லாத ஒரு விடயம்.

    ஆதி சங்கரர் பிராமணர்கள் மட்டுமே ப்ரம்மத்தை அறிய முடியும் என்று கூறியதை விவேகானந்தர் தனது ராஜயோகம் பற்றிய நூலில் வெளிப்படையாக கண்டிக்கிறார்.

    1) இனும் “Bramihn’s only” போர்டு ,வைப்பது யார் முஸ்லிமா ? இதில் உங்கள் கருத்து என்ன?

    2) எல்லா பார்ப்பாரும் தீட்சிதர்களை ஆதறிகிரீர்களே ? தமிழ் வழிபாட்டை எதிர்கிறீர்களே? ஏன்? நீங்கள் எதை ஆதரிகிறீர்கள் ?

    3) ஈழ பிரச்சினையில் விடுதலை புலிகளை எல்லா பிராமணர்களும் எதிர்ப்பதற்கு என்ன காரணம் ? இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

    4) குஜராத் படுகொலையில் ஈடுபட்ட சங்பரிவார், மோடி கும்பல்களை தெஹெல்க அம்பலபடுத்திய பிறகும் , அவர் நல்ல நிர்வாகி ,எதிர் கட்சிகளின் சதி,கோத்ரா சம்பவம் தான் காரணம் என்று சப்பைக்கட்டு கட்டுவது பார்ப்பார்கள் தானே ? அதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

    5) சேது திட்டத்தை எந்தவித ஆதாரமும் இல்லாமல் ராமர் பாலம் என்று சொல்லி தடுக்க நினைகிறார்களே ? இதில் உங்கள் கருத்து என்ன?

  136. சகோதரர் Matt அவர்களே,

    //நண்பரே, இங்கு நாம் கேட்பது கடவுள் உருவம் உள்ளவரா இல்லையா என்பதல்ல.உங்கள் கோட்பாட்டையும் அல்ல , உங்கள் இந்து மதத்தின் கோட்பாடு என்ன?.அதற்கான ஆதாரம் என்ன..//

    இந்து மதத்தில் கடவுள் தத்துவம் பல கோணங்களில் விளக்கப் பட்டுள்ளது. நான் விளக்கியது ஒரு பார்வையில் இந்து மதத்தில் என்னுடைய புரிதலாகவே அதை விளக்கியுள்ளேன்.

    இந்து மதத்தில் கடவுளை பல வடிவங்களில் வணங்கலாம் என்றும், எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வணங்கும் உரிமை உள்ளது என்றும், வடிவம் இல்லாமல் அவனக்கும் உரிமையும் உண்டு என்றும் அறிகிறோம்.

    இது கடவுள் வழிபாட்டின், கடவுள் புரிதலின் ஆரம்ப நிலை.

    நான் கூறியது இந்து மதம் கடவுள் தத்துவத்தை அணுகும் பார்வைகளில் ஒன்றுதான்.

    ஆதாரம்:

    யோ யோ யாம் யாம் தனும் பக்த: சிர்த்த்யார்ச்சிது – மிச்சதிI
    தஸ்ய, தஸ்யாசலாம், தாமேவ வித்தாம்- யஹம் II

    செய்யுள் 21, அத்தியாயம் 7 , கீதை

    யோ யோ (எவர் எவர்) யாம் யாம் (எந்தெந்த) தனும் (மூர்த்தியை) பக்த (பூஜிக்க ): சிர்த்த்யார்ச்சிது (சிரத்தையுடன்) – மிச்சதி(விரும்புகிறானோ)I
    தஸ்ய, தஸ்யாசலாம் (அவரவருக்கு உறுதியாக), சிரத்தாம் தாமேவ (அந்த சிரத்தையை) வித்தாம் (செய்கிறேன்)- யஹம் (நான்)II

    எவர் எவர் எந்தெந்த மூர்த்தியை சிரத்தையுடன் பூஜிக்க விரும்புகிறானோ, அவரவருக்கு அந்த சிரத்தையை நான் உறுதியாக செய்கிறேன்.

    இது கடவுள் வழிபாட்டின், கடவுள் புரிதலின் ஆரம்ப நிலை.

    மற்ற மதங்களை ஒப்பிடவில்லை. இதில் ஒரு தந்திரமும் இல்லை. யுக்தியை (Logic) உபயோகித்து இது சரியா என்று ஆராய்ந்து இருக்கிறோம்.

    இது என் சொந்தக் கருத்து அல்ல. இந்து மதக் கருத்துதான். விளக்கம் கொடுக்க நாம் கூறியது மட்டுமே நம்முடைய விளக்கம்.

    இங்கெ “நான் வணங்குவேன்” என்று கூறியது எல்லா இந்துக்களின் நிலைப் பாட்டையும் விளக்கத்தான்.

    எந்த நிலையில் வேண்டுமானாலும் வணங்கலாம் , அதற்கு பலனை கடவுள் தருவார் என்பது இந்து மதக் கோட்பாடுகளில் ஒன்று.

    இது கடவுள் வழிபாட்டின், கடவுள் புரிதலின் ஆரம்ப நிலைதான்.

  137. //இந்து மதத்தில் கடவுளை பல வடிவங்களில் வணங்கலாம் என்றும், எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வணங்கும் உரிமை உள்ளது என்றும், வடிவம் இல்லாமல் அவனக்கும் உரிமையும் உண்டு என்றும் அறிகிறோம்.//

    அப்போ ஒரே கடவுள் ,பலபல உருவம் என்கிறீர்கள், சரி சிவன்,விஷ்ணு, விநாயகர் இவர்கள் எல்லாம் ஒரே கடவுளா ?

    //எவர் எவர் எந்தெந்த மூர்த்தியை சிரத்தையுடன் பூஜிக்க விரும்புகிறானோ, அவரவருக்கு அந்த சிரத்தையை நான் உறுதியாக செய்கிறேன். //

    பகவத் கீதைதான் இந்து மதத்தின் ஆதாரமா? இதில் ‘நான்’ என்று சொல்வது யார் ?கடவுளா , கிருஷ்ணனா?

    //நான் விளக்கியது ஒரு பார்வையில் இந்து மதத்தில் என்னுடைய புரிதலாகவே அதை விளக்கியுள்ளேன்.//

    //இது என் சொந்தக் கருத்து அல்ல. இந்து மதக் கருத்துதான்.//

    முதலில் எது உங்கள் கருத்து ,எது உங்கள் மத கருத்து என்று முடிவுசெயுங்கள்.

    மற்ற கேள்விகளுக்கு பதிலை காணோமே ..!?

  138. //அம்பேத்கரை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் இந்து மதத்தையும் ஏற்றுகொள்கிறீர்கள்.

    நான் இந்துவாக பிறந்ததற்கு நான் பொருப்பல்ல. ஆனால் இறக்கும் போது ஒரு போதும் ஒரு இந்துவாக சாகமாட்டேன் – அம்பேத்கர்.

    அம்பேத்கரையும், இந்துமதத்தையும் ஒருவர் ஏற்றுக் கொள்ளமுடியாது என்பதை உங்களுக்கு உணர்த்தவே அவரின் வார்த்தைகள்//

    அம்பேத்கரை நான் முழுமையாக மதிக்கிறேன். மரியாதை செலுத்துகிறேன்.
    கடின உழைப்பிலும், கல்வியிலும், போராட்டக் குணத்திலும் அவரை நான் ரோல் மடல் ஆக கருதுகிறேன்.

    அவர் இந்து மதத்தைப் பற்றிக் கூறிய கருத்துக்களை நம்மால் அவருடைய சூழ்நிலையில், கால கட்டத்தில் அவர் கூறிய கருத்துக்களை புரிந்து கொள்ள முடிகிறது.

    ஆனால் அவருக்குப் பிந்தைய கால கட்டத்தில் கிட்டத் தட்ட 60 ஆண்டுகள் கழிந்த சூழ்நிலையிலே நான் இருக்கிறேன்.

    இந்து மதம் மாற்றங்களை அனுசரிக்கக் கூடியது என்பதை புரிந்து கொள்ளும் கால கட்டத்தில் நான் இருக்கிறேன்.

    ஒவ்வொரு காலத்திலும் சிந்தனைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டியது பகுத்தறிவாளருக்கு, சிந்தனையாளருக்கு அவசியம்.

    பெரியார் சிந்திப்பவன் தேவையில்லை, நான் கூறுவதைக் கேட்டால் போதும் என்கிற நிலைப் பாட்டை எடுத்தார்.

    ஆனால் நாம் சிந்திக்கிரவராக இருக்கிறோம்.

    பெரியார் கூறியதை மறுத்து கேள்விகள் கேட்போம்.

    ஆதி சங்கரர் கூறியதை மறுத்து கேள்விகள் கேட்போம்.

    புத்தர் கூறியதை மறுத்து கேள்விகள் கேட்போம்!

    இயேசு , காந்தி கூறியதை மறுத்து கேள்விகள் கேட்போம்!

    கிருட்டினர் , கீதை கூறியதை மறுத்து கேள்விகள் கேட்போம்!

    ஒவ்வொரு க‌ருத்தும் உண்மை என்னும் உரை க‌ல்லில் சோத‌னை செய்ய‌ப் ப‌ட்டே அங்கீக‌ரிக்க‌ப் ப‌டும்- உண்மை அல்லாத‌து வில‌க்க‌ப் ப‌டும்.

    ச‌த்ய‌ம் ஏவ‌ ஜ‌ய‌தெ, உண்மையே வெல்லும் என்கிற‌ ப‌குத்த‌ றிவு கொள்கை அடிப் ப‌டைக் கொள்கையாகும்.
    எங்க‌ள் நிலைப் பாடு, செய‌ல் பாடு இதுதான்.

    என்னால் அம்பேத்கரையும் மதித்து ஏற்றுக் கொள்ள முடியும். இந்து மதத்தில் உள்ள சிறந்த கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ள முடியும். இதில் எந்த முரண்பாடும் இல்லை.

    ஒருவரை மதிப்பது, ஏற்றுக் கொள்வது என்றால், அவர் ஒரு காலத்தில் , ஒரு சூழ்நிலையில் கூறிய கருத்துக்கள் எல்லா சூழ்நிலையிலும் எல்லா கால கட்டத்திலும் பொருந்தும், பொருந்தியே ஆக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

    காந்தியை மதிக்கிறோம் என்பதற்காக இந்தியாவில் உள்ள எல்லா டெக்ஸ்டைல் ஆலைகளையும் மூடி விட்டு, எல்லோரும் ராட்டையை சுழற்றி நாளும் நூல் நூற்று
    உடை உடுத்தத் வேண்டும் என்று கூறவில்லை.

    ஒரு பகுத்தறிவு வாதி யாருடைய கருத்துடனும் தன் சிந்தனையை நிறுத்த மாட்டான். அவன் தொடர்ந்து சிந்தனையை முன்னெடுப்பான்.

    என்னுடைய நிலையை விளக்கவே நான் இதைக் கூறினேன். உங்களைக் கட்டாயப் படத்தவில்லை. நான் கூறியதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அது சரியா என்று சிந்திக்கலாம்.

  139. Matt Sir,

    //அப்போ ஒரே கடவுள் ,பலபல உருவம் என்கிறீர்கள், சரி சிவன்,விஷ்ணு, விநாயகர் இவர்கள் எல்லாம் ஒரே கடவுளா ?//

    ஆம். ஒரே க‌ட‌வுள், ப‌ல்வேறு குண‌ங்க‌ளுட‌ன் வ‌டிவ‌ங்க‌ளில் வ‌ந்த‌ நிலை. இதை ஒரு உதார‌ண‌ம் மூல‌ம் விள‌க்குவொம்.

    அத‌ற்க்கு ந‌டிக‌ர் ர‌ஜினியை உப‌யொக‌ப் ப‌டுத்துகிரேன்.

    (நான் ர‌ஜினியின் விசிறியோ, ர‌சிக‌னோ அல்ல‌)

    பாஷா ப‌ட‌த்தில் பாஷாவாக‌ இருந்த‌ ர‌ஜினி,
    முத்து ப‌ட‌த்தில் முத்துவாக‌ இருந்த‌ ர‌ஜினி,
    ப‌டைய‌ப்பா ப‌ட‌த்தில் ப‌டைய‌ப்பாவாக‌ இருந்த‌ ர‌ஜினி,
    சிவாஜி ப‌ட‌த்தில் சிவாஜியாக‌ இருந்த‌ ர‌ஜினி,
    எல்லா ர‌ஜினியும் ஒரே ர‌ஜினி தான்.

    ர‌ஜினி ர‌சிக‌ன் த‌ன் வீட்டில் பாஷா ப‌ட‌த்தை மாட்டியிருந்தாலும், முத்து ப‌ட‌த்தை மாட்டியிருந்தாலும், ப‌டைய‌ப்பா ப‌ட‌த்தை மாட்டியிருந்தாலும், சிவாஜி ப‌ட‌த்தை மாட்டியிருந்தாலும், எல்லாமே ர‌ஜினிதான்.

    அது எப்ப‌டி ஒரெ க‌ட‌வுள் த‌ந்தையாக‌வும், ம‌க‌னாக‌வும் இருக்க‌ முடியும் என்று கெட்டால் அத‌ற்க்கு நான் ந‌டிக‌ர் தில‌க‌ம் சிவாஜியின் திரிசூல‌ம் ப‌ட‌த்தை உதார‌ண்ம் காட்ட‌ வெண்டியிருக்கும். (நான் ந‌டிக‌ர் தில‌க‌ம் சிவாஜியின் ர‌சிக‌ன் தான்)

    //பகவத் கீதைதான் இந்து மதத்தின் ஆதாரமா? //

    bagavath keethai is one of the prominent book in Hinduism or even we can say that probably most prominent book in Hinduism.
    At the same time Hinduisim is not limited to Bagavath keethai only.

    இதில் ‘நான்’ என்று சொல்வது யார்? கடவுளா , கிருஷ்ணனா?

    ‘நான்’ Thats is Krishna and thats God!
    that concept, I will detail you later.
    This is another angle of explaining the concept of God. As I told you alreday , I will detail the other angles as well, but give me some time!

    //முதலில் எது உங்கள் கருத்து ,எது உங்கள் மத கருத்து என்று முடிவுசெயுங்கள்//

    Concept is of Hindism.
    only the examples and description is mine. You can differentiate.
    The concept is authenticated by versus- thats is Hinduism.

    The examples are mine.

    //மற்ற கேள்விகளுக்கு பதிலை காணோமே ..!?//

    Matt sir,

    I will answer to all your questions, please bear with me for taking some more time, but you will get reply!

  140. Dear Brother Venthan,

    //அம்பேத்கரை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் இந்து மதத்தையும் ஏற்றுகொள்கிறீர்கள்.

    நான் இந்துவாக பிறந்ததற்கு நான் பொருப்பல்ல. ஆனால் இறக்கும் போது ஒரு போதும் ஒரு இந்துவாக சாகமாட்டேன் – அம்பேத்கர்.

    அம்பேத்கரையும், இந்துமதத்தையும் ஒருவர் ஏற்றுக் கொள்ளமுடியாது என்பதை உங்களுக்கு உணர்த்தவே அவரின் வார்த்தைகள்//

    அம்பேத்கரை நான் முழுமையாக மதிக்கிறேன். மரியாதை செலுத்துகிறேன்.
    கடின உழைப்பிலும், கல்வியிலும், போராட்டக் குணத்திலும் அவரை நான் ரோல் மடல் ஆக கருதுகிறேன்.

    அவர் இந்து மதத்தைப் பற்றிக் கூறிய கருத்துக்களை நம்மால் அவருடைய சூழ்நிலையில், கால கட்டத்தில் அவர் கூறிய கருத்துக்களை புரிந்து கொள்ள முடிகிறது.

    ஆனால் அவருக்குப் பிந்தைய கால கட்டத்தில் கிட்டத் தட்ட 60 ஆண்டுகள் கழிந்த சூழ்நிலையிலே நான் இருக்கிறேன்.

    இந்து மதம் மாற்றங்களை அனுசரிக்கக் கூடியது என்பதை புரிந்து கொள்ளும் கால கட்டத்தில் நான் இருக்கிறேன்.

    ஒவ்வொரு காலத்திலும் சிந்தனைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டியது பகுத்தறிவாளருக்கு, சிந்தனையாளருக்கு அவசியம்.

    பெரியார் சிந்திப்பவன் தேவையில்லை, நான் கூறுவதைக் கேட்டால் போதும் என்கிற நிலைப் பாட்டை எடுத்தார்.

    ஆனால் நாம் சிந்திக்கிரவராக இருக்கிறோம்.

    பெரியார் கூறியதை மறுத்து கேள்விகள் கேட்போம்.

    ஆதி சங்கரர் கூறியதை மறுத்து கேள்விகள் கேட்போம்.

    புத்தர் கூறியதை மறுத்து கேள்விகள் கேட்போம்!

    இயேசு , காந்தி கூறியதை மறுத்து கேள்விகள் கேட்போம்!

    கிருட்டினர் , கீதை கூறியதை மறுத்து கேள்விகள் கேட்போம்!

    ஒவ்வொரு க‌ருத்தும் உண்மை என்னும் உரை க‌ல்லில் சோத‌னை செய்ய‌ப் ப‌ட்டே அங்கீக‌ரிக்க‌ப் ப‌டும்- உண்மை அல்லாத‌து வில‌க்க‌ப் ப‌டும்.

    ச‌த்ய‌ம் ஏவ‌ ஜ‌ய‌தெ, உண்மையே வெல்லும் என்கிற‌ ப‌குத்த‌ றிவு கொள்கை அடிப் ப‌டைக் கொள்கையாகும்.
    எங்க‌ள் நிலைப் பாடு, செய‌ல் பாடு இதுதான்.

    என்னால் அம்பேத்கரையும் மதித்து ஏற்றுக் கொள்ள முடியும். இந்து மதத்தில் உள்ள சிறந்த கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ள முடியும். இதில் எந்த முரண்பாடும் இல்லை.

    ஒருவரை மதிப்பது, ஏற்றுக் கொள்வது என்றால், அவர் ஒரு காலத்தில் , ஒரு சூழ்நிலையில் கூறிய கருத்துக்கள் எல்லா சூழ்நிலையிலும் எல்லா கால கட்டத்திலும் பொருந்தும், பொருந்தியே ஆக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

    காந்தியை மதிக்கிறோம் என்பதற்காக இந்தியாவில் உள்ள எல்லா டெக்ஸ்டைல் ஆலைகளையும் மூடி விட்டு, எல்லோரும் ராட்டையை சுழற்றி நாளும் நூல் நூற்று
    உடை உடுத்தத் வேண்டும் என்று கூறவில்லை.

    ஒரு பகுத்தறிவு வாதி யாருடைய கருத்துடனும் தன் சிந்தனையை நிறுத்த மாட்டான். அவன் தொடர்ந்து சிந்தனையை முன்னெடுப்பான்.

    என்னுடைய நிலையை விளக்கவே நான் இதைக் கூறினேன். உங்களைக் கட்டாயப் படத்தவில்லை. நான் கூறியதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அது சரியா என்று சிந்திக்கலாம்

  141. //1) இனும் “Bramihn’s only” போர்டு ,வைப்பது யார் முஸ்லிமா ? இதில் உங்கள் கருத்து என்ன?//

    For the past 20 years , I have never seen any of the “Bramihn’s only” board any where, honestly.

    There is no requirement to keep any such board any where!

    If at all any such boards kept any where, I will ask them, what is the necessity or peculiarity for the so called ” Bhramins”.

    If at all any “Bramihn’s only” boards kept any where, I will protest against those who kept those boards, explaining that these boards are ridiculous and suggest them to reform quickly!

    If any one wants to specify about Vegetarian food eaters, they can depict boards “Vegetarians only”- not “Bhramin’s only”.

  142. //2) எல்லா பார்ப்பாரும் தீட்சிதர்களை ஆதறிகிரீர்களே ? தமிழ் வழிபாட்டை எதிர்கிறீர்களே? ஏன்? நீங்கள் எதை ஆதரிகிறீர்கள் ?//

    நான், தீட்சிதர்கள் முர‌ட்டுத் த‌ன‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ள‌க் கூடாது, அவ‌ர்கள் ஆறுமுக‌ சாமியாரை பாட‌ ம‌ன‌ப் பூர்வ‌மாக‌ அனும‌திக்க‌ வேண்டும் என்று நிலைப் பாட்டை வைத்து உள்ளேன்.

    இதே க‌ருத்தை ஒரு தீட்சித‌ரை ச‌ந்தித்த‌ போது (அவ‌ர்‌ சித‌ம்ப‌ர‌ம் கோவில் தீட்சிதர் அல்ல‌ ) அவ‌ரிட‌ம் கூறினேன்.

    உட‌னே அவ‌ர் என்னிட‌ம்,

    “நீங்க‌ ஆபீஸீல் வேலை பார்க்க‌ர‌லே, திடீர்னு ஒரு நாள் ஒருத்த‌ர் ஒங்க‌ டேபிள் முன்னால‌ இன்னொரு டேபிளை போட்டுண்டு, நீங்க‌ பார்க்க‌ வேண்டிய‌ வேலையில‌ கொஞ் ‌த்தை அவ‌ர் பாக்க‌ ஆரம்பிச்சா சும்மா இருப்பேளா, ஃபைட் ப‌ண்ண மாட்டேளா? நாளைக்கு உங்களுக்கு கோவில்ல‌ வேலை இல்லை, வெளில‌ போங்கோனு சொன்னா அவா சோத்துக்கு என்ன‌ ப‌ண்ணுவா? தெருவில‌ நிப்பாளா? நீங்க‌ வைச்சு காப்பாத்துவேளா ? ”
    என்று கேட்டார்.

    த‌மிழின‌ உணர்வாளர்க‌ளுக்கு இது உணர்வுப் பிர‌ச்சினை, உரிமைப் பிர‌ச்சினை.

    தீட்சிதர்க‍ளுக்கு இது உணவுப் பிர‌ச்சினை, வாழ்க்கைப் பிர‌ச்சினை!

    அவ‌ர்க‌ள் ப‌ணி பாதுகாப்பு தங்க‌ளுக்கு இல்லாம‌ல் போய் விடுமோ என்று அச்ச‌த்தில் உள்ளானர்.

    நான் “சீக்கிர‌மா எல்லாருக்கும் க‌த்து குடுங்கோ, நீங்க‌ ரிட‌ய‌ர் ஆன‌ உட‌ன் எல்லா த‌மிழாலும் தீக்ஷிதாளா வர‌ட்டும். உங்க‌ குழ‌ந்தைக‌ள் செய்ய‌ எத்த‌னையோ வேலைக‌ள் இருக்கே”‌ என்றேன்.

    “குழந்தேள் என்ன‌ ப‌டிக்க‌னும்னு இஷ்ட‌ப் ப‌ட‌ர‌தோ அதையே ப‌டிக்க‌ட்டும்” என்றார் அவ‌ர்.

    நூற்றில் தொண்ணுற்றெட்டு “குழ‌ந்தேளு”க்கு பூஜை தொழிலில் பெரிய ஈடுபாடு ஒன்றும் இருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை.

    இன்னும் இருப‌து முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளில் ப‌ல‌ கோவில்க‌ளில் பூஜை செய்யும் தீக்ஷித‌ர்க‌ள், பார்ப்ப‌ன‌ர் அல்லாத‌ வ‌குப்பில் இருந்தே வ‌ருவார்க‌ள் என‌ நினைக்கிறேன். அது என‌க்கு ம‌கிழ்ச்சியை அளிக்கும் விட‌ய‌ம் ஆகும்.

    //தமிழ் வழிபாட்டை எதிர்கிறீர்களே? ஏன்? நீங்கள் எதை ஆதரிகிறீர்கள் ?// will be answered In next comment

  143. சகோதரர் வேந்தன் அவர்களே,

    //திருச்சிகாரரே வரலாறு தெரியாமல் பேசவேண்டாம்.
    இந்து மத வர்ணாஸ்ரம தர்மத்தை ஒட்டிதான் குலகல்வி முறை காந்தியாலும், தமிழ் நாட்டில் ராஜாஜியாலும் கோரப்பட்டது.

    குலகல்விமுறை என்பதை பற்றியாவது தெரியுமா?//

    //”இந்து மத வர்ணாஸ்ரம தர்மத்தை ஒட்டிதான் குலகல்வி முறை காந்தியாலும்”//

    நீங்கள் தயவு செய்து காந்திக்கும் குலகல்வி திட்டத்துக்கும் என்ன தொடர்பு என்று விளக்க முடியுமா?

    இராசாசி குலக் கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது 1952 ல்.

    அப்போது காந்தி உயிருடன் இல்லை.

    அதற்கு முன் குலக் கல்வி என்ற ஒரு திட்டம் இருந்ததாக எனக்குத் தெரிந்த அளவில் இல்லை.

    காந்தி இறப்பதற்கு பல வருடங்கள் முன்னரே அவருக்கும் இராசாசிக்கும் கொள்கை அளவில் விரிசல் இருந்தது.

    நீங்கள் காந்திக்கும் குலகல்வி திட்டத்துக்கும் என்ன தொடர்பு என்று விளக்க முடியுமா?

    நமக்கு காந்தியையோ , பெரியாரையோ தாங்கிப் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கும் காந்தியுடன் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் அவர் தியாக வாழ்க்கை வாழ்ந்தவர் , பதவிக்காக, பைசாவிர்க்காக, பையனை பதவிக்கு கொண்டு வருவதற்க்காக அரசியல் செய்யவில்லை என்றே நினைக்கிறேன்.

  144. தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களில் இந்து சமய இலக்கியங்கள் கணிசமானவை.

    என்னவோ ஒரு சில இயக்கங்களுக்கு மட்டும் தான் தமிழ் மொழி பட்டா போட்டுக் குடுக்கப் பட்டது போலவும், இந்து மதத்தவர்கள் தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் போலவும் ஒரு பம்மாத்து நடக்கிறது.

    யார் தமிழ் மொழியை விட்டுக் கொடுத்தாலும், நாங்கள் தமிழ் மொழியை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

    தமிழ் மொழியை விற்றுப் பிழைப்பவர்கள் யார், என்பது உலகிற்குத் தெரியும்.

    வட மொழியில் பூசனை செய்ய வேண்டும் என்பதோ அல்லது தமிழ் மொழியில் பூசனை செய்ய வேண்டுமா என்பது அந்த அந்த பக்தனின் விருப்பம்.

    பக்தன் தமிழில் பூசை செய்ய விரும்பினால் அழாகாக தமிழில் பூசை செய்து, அர்ச்சனை செய்யலாம்.

    அதே பக்தன் சம்ஸ்கிருதத்தில் பூசை செய்ய விரும்பினால் அர்ச்சனை வட மொழியில் நடை பெரும்.

    இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

    இது தனிப் பட்ட மனிதனின் சுதந்திரம்!

    இதில் அரசாங்கமோ, வேறு இயக்கங்களோ தலையிட முடியாது, இந்தியாவில் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், வழிபாட்டு சுதந்திரம் உள்ளது!

    இந்து மதம் வட மொழி என்று கூறப்படும் சமஸ்கிருதத்தையோ, அல்லது வேறு எந்த மொழியையோ நம்பி இல்லை. இந்து மதம் உண்மையைத் தன் அடித்தளமாகக் கொண்டுள்ளது.

    “உண்மையே வெல்லும்” என்ற உண்மையின் அடிப்படையிலேயே உண்மையைத் தேடும் வழியே இந்து மதம்.

    உண்மையை உயிருக்கு புரிய வைப்பதன் மூலம், அந்த உயிரை இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்து சென்று, உயிரை அடிமை நிலையில் இருந்து விடுதலை நிலைக்கு உயர்த்துவதே இந்து மதத்தின் நோக்கம்.

    தமிழில் இந்து மதத்தின் எல்லா உண்மைகளும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால், சமஸ்கிருதத்தையும் மிஞ்சிய வகையில் இந்து மதத்தின் உண்மைகள், தமிழிலும், பிற திராவிட மொழியிலும் உண்டு!

    இந்தியாவைப் பொருத்த அளவில் ஆன்மீகம் என்பது, மனிதனின் அறிவை உயர்த்தி, அவன் உயிரை விடுதலை அடையச் செய்வது என்பதுதான்!
    உண்மை – அதை எந்த மொழியில் சொன்னாலும் அது (உண்மை) ஒன்றாகத்தான் இருக்க முடியும்!

    “உலகம் உருண்டையானாது” என்று சொன்னாலும், “EARTH IS ROUND” என்று
    சொன்னாலும், பொருள் ஒன்றுதான்!

    மனித உயிர் பற்றீய ஆராய்ச்சியில் கிருட்டிணர்,

    ” கதாஸூன், அகதாஸூன், ந அனுசோசந்தி பண்டிதா” -என்று கூறியுள்ளார்.
    “சான்றோர் இங்கே இருப்பவர்களைப் பற்றீயோ, இறந்தவர்களைப் பற்றீயோ எண்ணிக் கலங்குவதில்லை” என்று பொருள்!

    அதையே பட்டினத்தார்,

    ” செத்த பிணத் தருகே இனிச் சாம்பிணம் கத்துதையோ ” என்று பாடியுள்ளார்!

    “காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
    தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தணித்துச் செத்துப்
    போம்பிணம் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டினிமேற்
    சாம்பிணம் கத்துதையோ ? என்செய்வேன் தில்லைச்சங்ககரனே”.

    மேலும் கிருட்டிணர்,

    “நத்வே வாஹம், ஜாது நாசம், ந த்வம் னேமே ஜனாதிபா” என்றும்,

    “வாசாம்சி ஜீர்ணானி யதா விஹாய

    நவானி க்ருஹ்ணாதி நரோபராணி

    ததா சரீராணி விஹாய ஜீர்ணான்

    யன்யானி ஸ‌ம்யாதி நவாணி தேஹீ ” என்றும்,

    கூறியுள்ளதையே பட்டினத்தார்,

    “அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?

    அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?

    பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?

    பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?

    முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?

    மூடனாயடி யேனும றிந்திலேன்,

    இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?

    என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே? ”

    என்று பாடியுள்ளார்!

    எனவே எந்த மொழியில் சொன்னாலும், உண்மை ஒன்றுதான்.

    எந்த மொழியில் சொன்னாலும் உண்மை ஒன்றுதானே- பின்ன என்னதுக்கு சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று கேட்கலாம். சில விஷயங்கள் ஒவ்வொரு மொழியில் தெளிவாக சொல்லப் பட்டு உள்ளன!

    உதாரணமாக, “எழுமின், விழிமின் குறி சேரும் வரை நில்லாது செல்மின்” என்ற வாக்கியம் சம்ஸ்கிருத வாக்கியமான, “உத்திஸ்டத, ஜாக்ரத, ப்ராப்யவரான் நிபோதித” என்ற வட மொழி வாக்கியத்தின் மொழி பெயர்ப்பு.

    இதில் குறிப்பிடப்பட்டுள்ள, ” ஜாக்கிரத” என்ற வார்த்தையை தமிழில் “விழிமின்” என்று எழுதியுள்ளனர். ஆனால், இந்த வார்த்தை “ஜாக்கிரத” மிக முக்கியமானது. “ஜாக்கிரத” என்ற வார்த்தையால் உணரப்படும் ஜாக்கிரதை, “விழிமின்” “என்ற வார்த்தையால் உணரப்படுமா- என்பது சந்தேகம்! ”ஜாக்கிரதை”யை கைவிட்டு விட்டதால் தான், இன்றைக்கு தமிழ்நாட்டில் மக்கள், ஏமாந்து நிற்கின்றனர்!

    எனவே பிற மொழியில் சிறிது புலமை பெறுவது தவறு இல்லை.

    “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்

    திண்ணியர் ஆகப் பெறின்”

    இதை மூல மொழியான தமிழ் மொழியில் பயிலும் போது கிடைக்கும் “திண்ணியம்” மொழி பெயர்ப்பில் கிடைக்காது என்பது அறிந்ததே.

    ஆனால் யாரையும் வட மொழி பயிலச் சொல்லி கட்டாயப் படுத்தவில்லை. கட்டாயப் படுத்துவது என்பது இந்து மதத்தில் இல்லை. வடமொழி அறியாமலேயே இந்து மதத்தைப் நன்கு புரிந்து கொள்ளவும், சிறப்பாக பின்பற்றவும் முடியும்

    எனவே ஒரு சிலருக்குத் தான் தமிழ் மொழியில் பற்று இருப்பது போலவும், தமிழ் நாட்டில் உள்ள இந்துக்கள் தமிழ் மொழியில் பற்று இல்லாதவர் போலும் எழுதுவது பசப்பே.

    எனக்குத் தாய் மொழி தமிழ் தான். நான் என்னை அன்னையுடன் பேசிய ஒரே மொழி தமிழ் மொழிதான்.

    கடவுளைப் பாட நான் தமிழ் மொழியையும் உபயோகப் படுத்துவேன். தேவைப் பட்டால் ஸ்பானிஷ் மொழியையும் உபயோகப் படுத்துவேன். இதில் யாரும் யாரையும் வற்புறுத்த முடியாது.

    “டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா? ”

    “கண்கள் சிரித்தாள் கிராபிக்ஸ்,

    நீ வந்தாலே ஜாமாகும் ட்ராபிக்”

    என்று வரிக்கு வரி மொழிக் கலப்பு செய்பவரிடம் முதலில் உங்கள் உபதேசத்தை செய்து விட்டு வாருங்கள்.

    தமிழ் மொழி வழிபாட்டை நாங்கள் எப்போது எங்களுக்கு விருப்பமோ மனப் பூர்வமாக செய்வோம். உங்களின் கட்டாயத்துக்காக , பயந்து போய் செய்ய மாட்டோம்.

  145. ‘நகரேஷு காஞ்சி’ என்பார்கள். ஆன்மிகத்தின் ஆணிவேர் காலங்களைக் கடந்து அழுந்தப் பதிந்து கிடக்கும் பூமி இது. கோயில்களுக்கும், பக்திப் பெருக்கெடுக்கும் திருவிழாக்களுக்கும், மனதை வலுவாக்கும் நல்ல பல அறிஞர்களின் கருத்துக்களுக்கும் பஞ்சமில்லாத நகரம் காஞ்சிபுரம்!

    விநோதமான ஒற்றுமையாக, பகுத்தறிவுச் சிந்தனை மூலம் விழிப்பு உணர்வு உண்டாக்கி, அதோடு அரசியலிலும் புதிய சாதனைகள் படைத்த அறிஞர் அண்ணா பிறந்த நகரமும் இதுவே!

    ஆன்மிகத்தின் மீது நம்பிக்கையோ, நாட்டமோ இல்லாத வர்கள்கூட… கோயில் என்றால் மரியாதையோடு பார்த்துத் தாண்டிப் போகிற வழக்கம் இங்கே உண்டு. ஆத்திக அன்பர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

    இங்கேதான், இங்கிருந்துதான் ஜூ.வி. ஆக்ஷன் செல் 044-42890005 எண்ணில்

    அந்தக் குரல் வந்து பதிவாகி இருந்தது. ”என் பெயர் முக்கியமில்லை. ஆனால், என்னிடம் இருக்கும் ஒரு வீடியோ சி.டி. முக்கிய மானது. அதை ஜூ.வி. முகவரிக்கு தபாலில் அனுப்பி வைத்திருக்கிறேன். பார்த்துவிட்டு, இந்த எண்ணுக்குக் கூப்பிடுங்கள். மிச்சத்தைச் சொல்கிறேன்…” என்றது அந்தக் குரல்!

    சொன்னபடியே அந்த சி.டி-யும் வந்தது. எத்தனையோ ஊழல் விவகாரங்கள் குறித்த, ஆவணம்போலத்தான் இதுவும் என்று எண்ணி அதை ஓடவிட்டோம். அந்த சி.டி. ஓட ஓட… நம் இதயம் நின்றுவிடும் போலானது! என்னவொரு பாதகம் அது..!

    அது ஒரு கோயிலின் கருவறை என்பது புரிகிறது; கம்பீரமான கருவறையின் கதவுகள் பாதி திறந்தே கிடக்க, அந்தக் கதவுக்குப் பின்னால் உள்ள மறைவைக் குறிவைக்கிறது கேமரா. அந்தக் கருவறையில் பிரதானமாக தரிசனம் கொடுக்கும் சிவலிங்கத்துக்கும் முன்னால், படமெடுத்தாடும் நாக தெய்வத்தின் சிறிய விக்கிரகம். அதை அமைத்துள்ள கான்க்ரீட் திண்டின்மேல் அமர்ந் திருக்கிறார் அந்த மனிதர். கோயில் குருக்களுக்குரிய எல்லா லட்சணங்களையும் அவருடைய பின்புற தோற்றத்திலிருந்தே நம்மால் அறிய முடிகிறது.

    சேலை உடுத்தியபடி இவரோடு காஷுவலாக நிற்கிறார், நடுத்தர வயதில் ஒரு பெண்மணி. சுவற்றை ஒட்டினாற்போல் நிற்கும் அந்தப் பெண்மணியை ஆலிங்கனம் செய்துகொண்டு… அப்பப்பா… இடம் – பொருள் – ஏவல் தெரியாமல், ஒரு மிருகமாகவே செயல்படும் அந்த மனிதரும் பெண்மணியும் துளிகூட அச்சமோ, கூச்சமோ, தெய்வகுத்தமோ பார்க்கிற வகையாகத் தெரியவில்லை.

    இடையிடையே, கதவுக்கு வெளியே இடுப்பை மட்டும் வளைத்துப் பார்த்து, பக்தர்கள் யாராவது அர்ச் சனைக்கோ ஆராதனைக்கோ வருகிறார்களா என்று செக் பண்ணிக் கொள்கிறார் அந்த குருக்கள். பிறகு, தன் பாவத்தைத் தொடர்கிறார். மனதைக் கல்லாக்கிக்கொண்டு அதை தொடர்ந்து பார்த்தால், இறுதியில் இடுப்பு வேட்டி மடிப்பிலிருந்து ரூபாய் நோட்டுகளை உருவி அந்தப் பெண்மணிக்குக் கொடுத்து அனுப்பிவைப்பது வரையில் பதிவாகியிருக்கிறது!

    சி.டி-யின் அடுத்ததொரு காட்சி… அடுத்த தொரு பெண். குங்குமம், விபூதி என மங்கலம் துலங்கக் காட்சி தரும் இந்தப் பெண்ணுக்கு வயது – இருபத்தைந்துக்குள் இருக்கும். கழுத்தில் தாலி மின்னுகிறது! இடம் – இதே கருவறையின் கதவு மறைப்புதான். முந்தைய காட்சி போலவே பட்டப்பகலில்தான் இதுவும் அரங்கேறுகிறது.

    இந்தப் பெண்ணோடு இருந்த படியே எட்டிப் பார்க்கும் அர்ச்சகர், சட்டென்று ஷார்ப்பாகி… நகருகிறார். இளம்பெண்ணை சுவற்றோடு சுவறாக ஒட்டி நிறுத்திவிட்டு… கருவறைக்கு வெளியே காஷுவலாக செல்கிறார். வந்துவிட்ட பக்தர் களிடமிருந்து அர்ச்சனைத் தட்டு வாங்கிக்கொண்டு, எந்தவித சலனமும் முகத்தில் காட்டாமல் சிவலிங்கத்துக்குப் பூஜைகள் செய்கிறார். மிகச் சுருக்கமாக தன் அர்ச்சனையை முடித்துவிட்டு, தீபாராதனைத் தட்டு சகிதம் மறுபடி வெளியே போகிறார் (பக்தர்களுக்கு கற்பூர ஜோதி காட்டுகிறார் என்றே யூகிக்க வேண்டியிருக்கிறது!). வந்த வர்கள் இறைவனிடம் தங்கள் வேண்டுதலைச் சொல்லிவிட்டுக் கிளம்பியதும், மறுபடி கதவை லேசாக சாத்தி வைத்து, அதன்பின்னால் கேமராவின் ஆளுகைக்குள் வந்து அந்த இளம்பெண்ணோடு ஐக்கியமாகிறார்!

    மூன்றாம் காட்சி கோயிலில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அது ஒரு லாட்ஜ் அறையாகவே தெரிகிறது. தலைக்கு மேல் போர்ட்டபிள் டி.வி. ஓடிக்கொண்டிருக்க… இதே மனிதரும் முற்றிலும் புதியதொரு பெண்மணியும்! இறுதியில் அந்தப் பெண் மணிக்கும் பணம் அளிக்கப்படுகிறது… எந்த பக்தர், என்ன பிரார்த் தனையோடு இறைவனின் பெயரால் தீபாராதனைத் தட்டில் போட்ட பணமோ..?!

    – இவை அனைத்துமே அந்த குருக்களின் சொந்த செல்போனில், வாகாக இடம் பார்த்து வைக்கப்பட்டு, அவருக்குத் தெரிந்தே பதிவாகியிருக்கிறது என்பது இந்தக் காட்சிகளைக் காணும்போதே உறுதியாகிறது. தவறான செய்கை, தவறான இடம்… அதை தாண்டி அதையெல்லாம் பதிவு செய்து வைத்துக்கொள்ளும் உச்சகட்ட வக்கிரம்!

    இதுபோல் மொத்தம் ஆறு பெண்கள் தொடர்பான காட்சிகள் இந்த சி.டி-யில் இடம் பெற்றிருக்க… அதையெல்லாம் முழுதாகப் பார்ப்பதற்கு மனதில் திடமில்லாமல், சி.டி-யை அனுப்பி வைத்த வாசகரின் எண்ணுக்கே போன் போட்டோம்.

    ”உங்கள், பெயரும் அடையாளங்களும் ரகசியமாக வைக்கப்படும். சி.டி-யின் பின்னணியைச் சொல்லுங்கள்…” என்றோம். அவர் சொன்னதெல்லாமே, ”இது என் கைக்கு வந்து சில மாதங்கள் ஓடிவிட்டது. ஜூ.வி-யின் பார்வைக்கு வைப்பதா வேண்டாமா என்ற மனப்போராட்டத்திலே நாட்கள் ஓடிவிட்டன. தவறு செய்பவர்களை மக்கள் மன்றத்தின்முன் நிறுத்தினால்தான், இனியருத்தர் இப்படிப்பட்ட பாவத்தில் இறங்க மாட்டார்கள் என்று தோன்றியது!” என்று நிறுத்தியவர்,

    ”இந்த குருக்களை நான் காஞ்சி நகரத்துக்குள்ளேயே பார்த்திருக்கிறேன். சின்னச் சின்ன கோயில்களுக்கு அவரே அர்ச்சனை செய்ய வருவார். இப்போது எந்த கோயிலில் இருக்கிறார் என்று தெரியாது…” என்றார்.

    காஞ்சிபுரத்தில் அத்தனை கோயில்களிலும் சுற்றித் திரிந்து எப்படிக் கண்டு பிடிக்க? சிவ லிங்கமும், கதவுக்கு அருகே நாகதேவதையும் அமைந்துள்ள கோயில்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முகமாக, நமது நிருபர் படை புறப்பட்டது.

    காஞ்சியில் கால்பட்டதுமே, கண் திரும்பிய திசையெல்லாம் சுற்றுலாப் பயணிகள். ஏராளமான நம்பிக்கைகளோடு பஸ்ஸிலும், காரிலுமாகக் குவிந்து கிடந்தார்கள். ஆபாசக் காட்சிகளைத் தவிர்த்துவிட்டு, அந்தக் கருவறையின் பல்வேறு தோற்றங்களையும், அர்ச்சகரின் க்ளோஸ்-அப் முகத்தையும் எல்லா நிருபர்களிடமும் பிரின்ட் போட்டுக் கொடுத்திருந்தோம். சிறியது, பெரியது என்று வரிசையாகக் கோயில்களுக்கு நீண்டது அந்தப் பயணம். பூக்கடை, பூஜைப் பொருட்கள் விற்பனைக் கடை, டீக்கடை என்று விசாரித்துக் கொண்டே சென்றோம். எங்கும் அப்படி ஓர் இடமும், நாம் தேடும் குருக்களும் கிடைக்கவேயில்லை..!

    மூன்று நாள் தேடலுக்குப் பின் ஓர் அர்ச்சகர், ”அட, ……….. குருக்களாச்சே இது..! மச்சேச பெருமான் கோயிலில்தான் இருக்கிறார்..!” என்று அடையாளம் காட்டினார்.

    பஸ் ஸ்டாண்ட் அருகில், ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள கீழ ராஜவீதியில், அமைதியின் உருவமாக மச்சேசப் பெருமான் திருக்கோயில் காட்சியளிக்கிறது. அந்த மாலை நேரத்தில் நாம் உள்ளே போய்ப் பார்த்தபோது வீடியோ ‘க்ளிப்’பில் நாம் பார்த்த இடங்கள் அப்படியே இருந்தன! அங்கிருந்த கோயில் ஊழியர் ஒருவரிடம்,

    ”திருத்தலங்கள் பற்றிய ஒரு பயணக் கட்டுரைக்கான தகவல் சேகரிக்க வந்திருக்கிறோம். கோயிலைப் பற்றியும், பணியாற்றும் குருக்களைப் பற்றியும் சொல்லுங்கள்…” என்று கேட்டோம். ………. குருக்கள் பற்றியும் அப்போது சொன்ன அவர், நல்ல விதமாகவே கூறினார். அடுத்தடுத்து நாம் விசாரித்த ஊழியர்கள் சிலரும் அப்படியே சொன்னார்கள்.

    ஒரு மணி நேரம் காத்திருந்த நிலையில், சுமார் 6 மணிக்கு நாம் தேடிய குருக்கள் கோயிலுக்குள் வந்தார். முப்பதுகளில் இருக்கும் அவரின் நெற்றியில் திருநீறும் குங்குமமும் மின்னிக்கொண்டிருந்தன. பளிச்சென்று வெளுத்துக் கட்டிய பஞ்சகச்ச வேட்டி… ‘வீடியோ காட்சியில் பார்த்தவரேதான்’ என்பதில் சந்தேகமில்லை. ஒதுங்கி நின்று கவனித்தோம்… கருவறையினுள் சென்றவர் சுத்தமாக தண்ணீர் விட்டு அலம்பியதோடு, மளமளவென அர்ச்சனையும் தொடங்கினார். கணீர் குரலில் மந்திரங்கள் வந்து விழுந்தன.

    அத்தனை பக்தர்களும் இருக்கின்றபோதே, திடீரென்று ஒரு பெண்மணியின் வருகை. கையில் ஒரு பையோடு வந்து அதை குருக்களிடம் அளிக்கிறார் அந்தப் பெண்மணி. ‘எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே’ என்று யோசித்தால்… வீடியோவில் உள்ள முதல் காட்சியில் இடம்பெறும் அதே பெண்மணி. குருக்கள் அவரை நிமிர்ந்து பார்க்கிறார். ஒரே ஒரு கணம்தான். எதுவுமே பேசாமல் அந்தப் பையை வாங்கி வைத்துக்கொண்டு, ”அப்புறம் வா! பணம் கொடுத்துட

    றேன்…” என்று சொல்லி அனுப்புகிறார். அந்தப் பெண்மணியும் எந்தவித சலனமும் இன்றி வந்த வழியே திரும்பிப் போகிறார்!

    பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து, குருக்கள் சற்று ஓய்வானதும் அவரிடம் நாம் பேச ஆரம்பிக்கிறோம். ”உங்களோட நடவடிக்கைகள் பற்றி நாலு பேர் நாலுவிதமா பேசுவது உங்களுக்குத் தெரியுமா?” என்று ஆரம்பித்து, மெதுவாகக் கேள்விகள் போட்டோம். தன் தரப்பில் எந்த அப்பழுக்கும் இல்லையென்றும், பொறாமை காரணமாக நாலு பேர் நாலுவிதமாகப் பேசத்தான் செய்வார்கள் என்றும், அதையெல்லாம் நம்பிவிடக்கூடாது என்றும் பொறுமை யாகச் சொல்லிக்கொண்டே வந்தார்.

    கடைசியாகத்தான் சி.டி. நகலில் பார்த்த காட்சிகளைப் பற்றிக் கேட்டோம். அந்த சி.டி.யிலிருந்து எடுத்த பிரின்ட்அவுட்கள் சிலவற்றை காட்டினோம். இப்போது அவரது பேச்சு நின்றது. சிவந்துபோன முகத்தோடு வெகுநேரம் மௌனமாக இருந்தவர், பிறகு மெள்ள பேச ஆரம்பித்தார்.

    ”நான் கொஞ்ச வருஷத்துக்கு முந்தி தெரியாம செஞ்ச தப்பு இது. யாரையும் வற்புறுத்தியோ, மிரட்டியோ இப்படியெல்லாம் செய்யலை. என் வீட்டுக்காரிக்குக் கொஞ்சம் உடம்பு சுகமில்லாம போச்சு. அந்த நேரத்துல சபலப்பட்டுட்டேன்…” என்றவரிடம்…

    ”எப்போது நடந்திருந்தால்தான் என்ன… நம்பிக்கையோடு ஒப்படைத்த ஒரு புனிதப் பணியை செய்யும் இடத்தில், அதிலும் தெய்வ சந்நிதானத்திலேயே செய்யக்கூடிய செயலா இது! அதிலும் சி.டி-யில் இடம்பெறும் காலண்டர் ஒன்று, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தைக் காட்டுகிறதே..?” என்றோம் அவரிடம்.

    மறுபடி சிறு மௌனம். ”இந்தக் கோயில் தவிர இந்தப் பகுதியில் இன்னும் சில கோயில்களிலும் நான்தான் பூஜை பண்ணுவேன். பத்து வருஷத்துக்கும் மேலா இங்கே பூஜை பண்றேன். என் மேல் எந்த புகாரோ, பழிச்சொல்லோ வந்தது கிடையாது. அந்த சி.டி-யில் இருக்கிறதும்கூட நடத்தை சரியில்லாத பெண்கள்தான். தொழில்முறையே அப்படி!” என்று அப்போதும் நியாயம் கற்பிக்கவே முயன்றார்.

    ”இந்த கோயிலுக்கு பகவானைப் பார்க்க வர்ற யாரையும் நான் ஏறெடுத்தும் பார்த்தது கிடையாது…” என்று சொன்னதோடு, தன் பூர்வீகம், குடும்பத்தின் பாரம்பரியம் என்றெல்லாம் மிக விளக்கமாக சில விஷயங்களை எடுத்து வைத்துக்கொண்டே போனார்.
    ”எனக்கும் ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கு. அதை நினைச்சு நான் அப்பவே திருந்திட்டேன். ஆனாலும், கோயிலுக்குள் ஏதோ தப்பா நடக்கறதா மோப்பம் பிடிச்சு இங்கே கண்காணிப்பு கெடுபிடியை அதிகம் பண்ணியாச்சு. இப்போ நான் இன்னொரு பெரிய கோயிலிலும் முக்கிய பொறுப்புகளைப் பார்த்துக்கறேன். நான் பழைய ஆளில்லை!’ என்று கீழிறங்கிய குரலில் சொல்லிவிட்டுத் தலையைத் தாழ்த்திக்கொண்டார் அவர்.

    நாம் அதற்குமேல் எதுவும் பேசாமல் மௌனமாக வெளியே நடந்தோம்!

    இந்த சி.டி. பதிவின் நகலை காவல்துறையின் பொறுப்பில் ஒப்படைத்துள்ளோம். நடந்த குற்றத்துக்கு சட்டத்தின் நடவடிக்கையும் தேவைதான் என்ற எங்கள் கருத்து, மதங்களைத் தாண்டி நியாயங்களை உணர்ந்த ஜூ.வி. வாசகர்களுக்கும் ஏற்புடை யதாகவே இருக்கும் என உறுதியாக நம்புகிறோம்..!
    – ஜூ.வி. பறக்கும் படை

  146. திருச்சிக்காரன், உங்களுடைய வார்த்தைகள் பார்பனியத்தை பல் இளிக்க செய்துவிட்டது.
    எல்லோரையும் இந்துகளாக சிதரிபதிலும், தீட்சிதர்களை அப்பாவிகளாக காட்டுவதிலும் ,20 ஆண்டுகளாக நான் “brahmins only board” பார்க்கவில்லை என்று பொய் பேசுவதிலும்(go & see in W.Mambalam) ,தமிழ் வழிபாட்டை பயந்து போய் செய்யமாட்டோம், உங்கள் கட்டாயத்துக்காக செய்யமாட்டோம் என்று திமிர் கொண்டு பேசுவதிலும் பார்ப்பனியம் இனும் அடங்கவில்லை என்பதையே காட்டுகிறது. நீங்கள் பேசவில்லை பார்ப்பனியம் பேசுகிறது. பார்ப்பார்கள் எந்த யுகத்திலும் திருந்த மாட்டார்கள் என்பதற்கு உங்கள் வார்த்தைகளே உதாரணம். நீங்கள் எல்லோரும் திருந்த வேண்டிய காலம் வந்து விட்டது.திருந்தி கொள்ளுங்கள், இல்லையேல் திருத்த படுவீர்கள். இனும் பார்பனியத்தை தீவிரமாக எதிர்க்க அழிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்த்தியதற்கு நன்றி.

    மதிமாறன் அவர்களுக்கு,
    என்னுடைய எல்லா கருத்துகளையும் அனுமதித்தற்கு நன்றிகள்.பார்பனியத்தை அழிப்போம் எல்லோரும் ஒன்று கூடி.

  147. Dear Brother Matt

    நல்லது, ஏதாவது காரணம் கூறி கட்ட பொம்மனுக்கு தண்டனையை வழங்கு என்று வெள்ளையர்கள் பேசிக் கொண்டார்களாம்.

    நீங்கள் பார்ப்பனீயத்தை நன்றாக அழித்துக் கொள்ளுங்கள். நானே பார்ப்பனீயத்தை எதிர்ப்பவன் தான். உலகில் உள்ள யாரையும் தாழ்வாகக் கருதாத வரை நான் “பார்ப்பனீயத்தை” பின்பற்றுவதாகக் கருதவில்லை.

    இது வரையில் அந்த வகையான “brahmins only board” நான் பார்க்கவில்லை. இதில் எந்தப் பொய்யும் இல்லை.
    இனிமேல் மாம்பலம் செல்லும்போது எந்த வீட்டிலாவது அப்படி இருக்கிறதா என்று உன்னிப்பாக கவனித்து, அப்படி இருந்தால் அவர்களிடம் நியாயமாக சமத்துவ முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுவேன்.

    தீக்ஷிதர்கள் அப்பாவி என்று சொல்லவில்லை. எல்லா தரப்பு மக்களும் தீக்ஷிதர்கள் ஆக வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திக் கூறி உள்ளேன்.

    என் குடும்பத்தினர் கோவிலுக்கு செல்லும்போது, சந்நிதியில் அர்ச்சனை தட்டை வாங்கி “யார் பேருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்” என்று கேட்பவர் முன்பு ஒதுக்கப் பட்ட பிரிவை சேர்ந்தவர் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்!

    ஆனால் என் கருத்தை நீங்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. “அய்யகோ, இனி இந்து மதத்தில் சாதி இருக்காது போல இருக்கிறதே. நீங்கள் சாதியை விடக் கூடாதையா , அதைக் கூறித்தானே நாங்கள் இந்து மதத்தை எதிர்க்க வேண்டும்” என்ற நோக்கில் இருப்பதாகவே தெரிகிறது.

    சரியான தமிழன் அஞ்சுவதில்லை. நான் யாருக்காகவும் பயந்து தமிழில் வழிபாடு செய்ய மாட்டேன் என்று கூறியது சரியே. அதை மீண்டும் கூறுகிறேன்.

    நேற்று நவராத்திரி விழாவிற்கு நண்பர் ஒருவர் அழைத்து இருந்தார், அவர் பாடும் படிக் கூறினார், நான் முருகன் மேல் மூன்று பாடல்கள் அழகுத் தமிழில் பாடினேன்.

    அவர்கள் அழகான முருகன் சிலை வைத்து இருந்தனர். எனவே முருகனைப் பற்றி பாட வேண்டும் என்ற எண்ணம் உருவாகி தமிழில் பாடினேன்- அது தானாக அடி மனதில் இருந்து வர வேண்டும்.

    அடித்து வரவதில்லை பக்தியும், அன்பும். அடிக்கு அஞ்சுபவனல்ல தமிழன்.

    தமிழை விற்றுப் பிழைப்பவன் அல்ல நான்.

    தமிழருக்கு உதவுவதாகக் கூறி பல வசதிகளைப் பெற்றுக் கொண்டு, கடைசியில் காலை வாரி விட்டு, வளங்களைப் பெருக்கிக் கொள்பவன் அல்ல நான். காசுக்காக நான் செயல் ப‌டுவ‌தில்லை.

    யார் த‌மிழை விட்டுக் கொடுத்தாலும், நான் த‌மிழையொ த‌மிழ‌ரையொ விட்டுக் கொடுக்க‌ மாட்டென்!

  148. ///அப்படி நேரடியாக பெரியாரியத்தோடு மோதுகிற திராணி பார்ப்பனர்களுக்கும் கிடையாது.///

    அப்போ இவ்வளவு நாள் செத்த பாம்பை தான் அடிச்சிக்கிட்டு இருந்தீங்களா! அடப்பாவிகளா இது தான் தமிழ் வீரமா? அதில இன்னமும் வீரியமா விரம் வேற பேசிக்கிட்டு இருக்கீங்களே? வெட்கமா இல்ல உங்களுக்கெல்லாம்?

  149. ராமு::
    இல்லை. ஆனா அவாள செத்த பாம்புன்னு ஒப்புகொண்டைமைக்கு நன்றி(பார்ப்பான் ஒரு பாம்பு என்பது இப்பொது அவாளே சொல்றா).

  150. வீட்டில் தெலுங்கு பேசுபவன்கூட வெளியில் தன்னய் தமிழனென்றே சொல்லிக் கொள்கிறான், அதேபோன்றுதான் பார்ப்பனர்கள் தன்னய் தமிழனென்பதும்.. முதலில் ஒன்றய் பார்ப்பனர்கள் உணர்ந்து கொள்ள வெண்டும். பார்ப்பனர்களே, நீங்கள் தமிழ் நாட்டில் வாழ வேண்டியிருப்பதால் தமிழய் கற்றுக் கொண்டு தமிழ் பேசுகிறீர்கள்.. நீங்கள் தமிழர்கள்ல்ல, தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் பேசி வளரும் மார்வாடி எப்படி எங்களுக்கு அன்னியனோ அப்படியே நீங்களும் அன்னியர்களே எங்கள் தமிழ் மண்ணுக்கு, உங்கள் ஆதரவு எங்கள் மொழிக்கு தேவய்யில்லய், பார்ப்பனர்களே நீங்கள் எங்கள் தமிழ் மொழியய் எதிர்க்கத்தான் செய்ய வேண்டும், அதுதான் சரியான நிலய்ப்பாடு உங்களுக்கு, எங்கள் தமிழ் மொழியய் நீங்கள் ஆதரித்து பேசினால்தான் நாங்கள் அச்சப்பட வேண்டும் எங்கள் தமிழ் மொழி என்னவாகுமோ என்று.

    என் மதிப்பிற்குரிய நண்பன் மதிமாறனுக்கு வாழ்த்துக்கள், நன்றியுடன்.

  151. You have really great taste on catch article titles, even when you are not interested in this topic you push to read it

  152. Здраствуйте!Оформить заказ выгодный для Вас! Тогда читайте новость – кредит справок и поручителей – Одобрение кредита за секунды , кредит он-лайн – мини кредит , кредит без посещения банка – займ онлайн мгновенно … Хороших Вам покупок!
    —————————–
    http://cavertakamagraca.blog.hr/ – online Kamagra prescriptions – http://discounted-kamagra.blog.hr/ – Kamagra Oral Jelly review new york ,

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading