அமெரிக்காவின் அப்துல்கலாமே…வெள்ளை மாளிகையின் கறுப்பு புஷ்ஷே… வருக வருக
ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 7-11-2008 அன்று விமலின் கேள்விக்கு எழுதிய பதில்; ஒபாமாவின் இந்திய வருகையொட்டி மீண்டும் பிரசுரிக்கிறேன்.
கறுப்பர் இனத்தில் இருந்து முதல் முறையாக அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பு மனிதன். இது புரட்சிகர மாற்றம்தானே?
–விமல்
இதற்கு முன்பு பலம் பொருந்திய பதவி ஒரு கறுப்பினத்தவருக்கு தரப்பட்டது. அது உலகம் முழுக்க அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அய்நா சபையின் தலைவர் பதவி. அந்தக் கறுப்பரின் பெயர் கோபி அன்னான்.
அவர் காலத்தில்தான் அமெரிக்கா உலகம் முழுக்க மிக மோசமான பொருளாதார வன்முறைகளை செய்தது. அத்துமீறி ஈராக்கில் நுழைந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று, சதாம் உசைனையும் தூக்கிலிட்டது.
அப்போது, அய்நாவின் தலைவர் கறுப்பர் கோபி அன்னான், புஷ் ரசிகர் மன்றத் தலைவர் போல்தான் நடந்து கொண்டார்.
அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறையையும் , அமெரிக்க அதிபரின் பிரிதிநிதியாகவும், அவரின் குரலாகவே பேசுகிற கண்டலிசா ரைஸ் ஓர் கறுப்பர்தான், அதுவும் பெண். அவர் என்ன சோமாலியா மாதிரி சோத்துக்கே சாகிற கறுப்பின மக்களின் வாழ்க்கையை முன்னேத்திட்டாரா?
எந்த நாட்டை போய் சுரண்டலாம்? இன்னும் எந்த எந்ந நாட்டில் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்றவர்கள் இருக்கிறார்கள், அந்த மாதிரி ஆட்களைப் புடிச்சி அணு ஒப்பந்தம் மாதிரி ஒண்றை போட்டு எப்படி அந்த நாட்டு மக்களின் தலையை தடவுலாம்ன்னு அய்டியா கொடுக்கிறதுதான் அந்தம்மா வேலை.
ஆக, ஒட்டு மொத்த சமூக மாற்றம் இல்லாமல், அதே அரசியல் அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவ ஒருவர் தலைமைக்கு வந்தால், ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேறி விடாது. அந்த ஒரு நபர் வேண்டுமானல் ‘நன்றாக‘ முன்னேறலாம்.
‘எங்க சமூகத்தை எவன் எவனோ ஏமாத்துன்னான். நான் ஏமாத்தக் கூடாதா?’ என்கிற பாணியில்தான் அது இருக்கும். சமூக அமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் ஆளை மாற்றுவதால், மாற்றம் நிகழாது. ஏமாற்று வேலைதான் நிகழும்.
ரஷ்யாவில் ஜார் மன்னன் ஆட்சியை வீழ்த்திவிட்டு, அதே மன்னனின் அரியணையில் அடுத்த மன்னராக லெனின் மூடி சூட்டிக் கொள்ளவில்லை. அப்படி மூடிசூட்டிக் கொண்டிருந்தால், ஜார் மன்னனை விட மிக மோசமான மன்னனாகத்தான் லெனின் இருந்திருப்பார்.
ஆனால், தலைவர் லெனின் தலைமையிலான உழைக்கும் மக்கள், மன்னராட்சியை தூக்கியெறிந்து, அதுவரை இருந்த அடிமை ரஷ்யாவை தலைகீழாகப் புரட்டி, புதிய சோசலிசக் குடியரசை உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவினார்கள். மாற்றம் அல்லது புரட்சி என்பது அதுதான்.
***
அமெரிக்கா என்பது ஒரு அரசல்ல. அது மிகப் பெரிய முதலாளிகள், பெட்ரோலிய எண்ணெய் அதிபர்களின் பாதுகாவலன். அந்த முதலாளிகள் உலகம் முழுவதும் சென்று வர்த்தகத்தின் பேரில் சுரண்டுவதற்கு, வழி செய்து கொடுப்பதுதான் அமெரிக்க அதிபர் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் வேலை. அந்த வேலைக்கு சமீபகாலமாக மிகப் பெரிய வில்லங்கம் வந்திருக்கிறது.
புஷ்ஷின் முரட்டுத்தனமான அணுகுமுறையால் அமெரிக்கா, உலகம் முழுக்க குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் மத்தியிலும், ஆப்பரிக்க மற்றும் அரபு நாடுகளின் மக்கள் மத்தியிலும் மிக மோசமான பெயரை சம்பாதித்திருக்கிறது. அமெரிக்க மக்களிடமும் அதே நிலைதான். இந்த அவப் பெயர் வர்த்தக சூதாட்டத்திற்கு பெரியத் தடை.
வர்த்தகத்தின் அடிப்படை, முதலில் நற்பெயர். நற்பெயர் எடுத்தால்தான் எந்த பொருளையும் விற்கவே முடியும். அதன் பிறகுதான் சூதாட்டம். லாபம். கொள்ளை லாபம்.
உலகம் முழுக்க அப்பொடியொரு நற்பெயரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், அமெரிக்கப் பெறும் முதலாளிகளின் ஆதரவுப் பெற்ற கறுப்பர் ஒபாமா அதிபராகி இருக்கிறார். அதனால்தான் அவரின் வெற்றி தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.
அப்புறம் என்ன லாபாம், கொள்ளை லாபம்தான்.
இந்தத் தந்திரத்தை இன்னும் எளிதாக புரிந்து கொள்வதற்கு இந்திய உதாரணம் ஒன்று சொல்கிறேன்.
பாஜக ஆட்சியில் இருக்கும் போது, ‘அது இந்து மதவாதக் கட்சி. சிறுபான்மை மக்களின் விரோதி‘ என்கிற கருத்து பெருவாரியான மக்கள் மத்தியில் இருந்தது. அந்தக் கருத்து பாஜகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ‘நமக்கு நற்பெயர் வேண்டும்’ என்ற தந்திரத்தில் அது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக நிறுத்தி ‘எல்லோரும் அவரை ஆதரிக்க வேண்டும்‘ என்று ஒரு பொதுக்கருத்தை உருவாக்கியது.
அந்த தந்திரத்தை எதிர்கொள்ள முடியாமல், எதிர்த்தால் சிறுபான்மை மக்களின் எதிரியாக புரிந்து கொள்ளப்படுவோமோ என்கிற எண்ணத்தில் பிரதான எதிர்கட்சியான காங்கிரசும், பாஜக வேட்பாளரான அப்துல்கலாமையே ஆதரித்தது.
அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்ந்தது. குஜராத்திலும் பல மாநிலங்கிலும் இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்துல்கலாமால் என்ன செய்ய முடிந்தது?
வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றாலாதான் செல்ல முடிந்தது.
ஆக, அதுபோல் ஒபாமா அமெரிக்காவின் அப்துல்கலாம், அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்.
-வே. மதிமாறன்
7-11-2008
ஒடுக்கப் பட்ட கருப்பு இனத்தில் இருந்து
ஓபாமா அதிபர் ஆனபோது மனம் மகிழ்ந்தோம்
ஆனால் ஓபாமாவின் செயல்பாடு ஒடுக்கப் பட்ட
மக்களுக்காக இல்லை .குறிப்பாக இலங்கையின்
போர்க் குற்றவாளி ராஜபட்ஷே மீது
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .
ஓபாமா நினைத்து இருந்தால்
இலங்கையில் நடந்த படுகொலைகளை
தடுத்து இருக்கலாம் .தடுக்க வில்லை .
இதற்கு முன் இருந்த அதிபர்கள் போலவே
முதலாளித்துவ மனப் பான்மையில் உள்ளார் .
ஆதனால்தான் தொழில் அதிபர்களை சந்திக்கிறார் .
இந்திய வருகைக்கு ஆகும் செலவே அவரது
ஆடம்பரத்தை பறை சாற்றுகின்றது. .
எளிமையின் சின்னமான காந்தியடிகளை
உதட்டளவில் மட்டுமே உச்சரிக்கிறார் .
உள்ளத்தளவில் கடைப் பிடிக்க வில்லை
இரா .இரவி
கிறித்தவ சிந்தனையின் மொத்த அடையாளமாகக் கொண்ட அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள், கிறித்தவத்தின் எதிர் நிலையில் வைத்துப் பார்க்கப்படுகின்ற இசுலாமிலிருந்து புறப்பட்ட ஒருவர் அதன் தலையில் அமர்ந்து, அமெரிக்காவுக்கே இசுலாமை தலையாக்கியதை வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம், கிறித்தவ அதிகாரத்தை மண்ணைக் கவ்வ வைத்ததற்காக…! பெரிய பெரிய தலைகளெல்லாம் கிறித்தவத்தைவிட்டு, துண்டைக் காணோம், துணியைக் கணோமென்று, முட்டாள்தனத்திலிருந்து அடிமுட்டாள்தனமான இசுலாமுக்குத் தாவும் அறிவற்ற தன்மை ஒருபுறமிருந்தாலும், ஒபாமாவை ஒடுக்கப் பட்டவரின் அடையாளமாகக் கொள்வதற்குரிய பின்னணி எதையும் அவரின் நடவடிக்கைகள் நமக்குச் சொல்லவில்லை. அவரின் எண்ணங்களூம், பேச்சுக்களூம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ஏகாதிபத்தியத்தின் முதலும் மொத்தமுமான அடையாளங்களிலொன்றாகவே அவரும் தன்னை வெளிப்படுத்துகிறார், உலத்த்துக்கு!
//ரஷ்யாவில் ஜார் மன்னன் ஆட்சியை வீழ்த்திவிட்டு, அதே மன்னனின் அரியணையில் அடுத்த மன்னராக லெனின் மூடி சூட்டிக் கொள்ளவில்லை. அப்படி மூடிசூட்டிக் கொண்டிருந்தால், ஜார் மன்னனை விட மிக மோசமான மன்னனாகத்தான் லெனின் இருந்திருப்பார்.//
நண்பர் மதிமாறனின் இந்த மேற்கோள் மிகவும் அருமையான ஒரு மேற்கோள், அப்துல் கலாமை மேற்கோள் காட்டியதும் மிகவும் பொருத்தம். வாழ்த்துக்கள்! அருமையான கருத்துக்களூடன் அமைந்த சிறப்பான பதில். மதிமாறனுக்கு மிகவும் நன்றி! காசிமேடு மன்னாரு.
கடவுள்கள் கந்தலாக்கப் படுகிறார்கள் : kasimedumannaru789.wordpress.com
என்ன ஆச்சு சார்…புதுப்பதிவுகளை எழுத மாட்ரிங்க.
பழய பதிவுகளையே ரிபீட் பண்ணுரிங்க…..
புதுசா போட்டு எங்களை தெம்பேத்துவீர்களாக….
இவண்
அண்ணாநகர் அல்டாப்பு 🙂