உலகத் தமிழ் மக்கள் அரங்கம் நடத்தும் கருத்தரங்கம்

ஆர்குட்டில் உலகதமிழ் மக்கள் அரங்கம் என்ற பெயரில் நண்பர்கள் இணைந்து நடத்தும் கருத்தரங்கத்திற்கு அதன் தலைவர் சசிகுமார் அழைப்பு விடுத்துள்ளார். ஆர்குட்டில் அவர் வெளிட்டதை இங்கு வெளியீடுகிறேன்.

*

உலகத் தமிழ் மக்கள் அரங்க தோழர்களுக்கு வணக்கம்!

நம் அரங்கம் வெறும் வெற்று பேச்சுக்களிலும் வெற்று விவாதங்களிலும் பங்கேற்கும் அரங்கமாக இல்லாமல், நடைமுறையில் சமூக அநீதிகளுக்கெதிராக முற்போக்கு கருத்துக்களுடன் களப்பணியாற்றும் அரங்கம் என்பதை அனைவரும் அறிவோம்.

இது நாள் வரையில் நம் தோழர்கள் மட்டும் தனியாகவே நம் அரங்கத்தின் சமூக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளனர். ஆனால் இதன் அடுத்த கட்டமாக நம் தோழர்கள் தங்கள் குடும்பத்தாரிடமும் முற்போக்கான கருத்துக்களை கொண்டு செல்கின்றனர் என்பதின் தொடக்கமாக நம் அரங்கத் தோழர்கள் குடும்பத்துடன் தோழர் இராஜ சிங்கம் அவர்களின் இல்லத்தில் நாளை மதியம் கலந்துக்கொள்கிறோம்.

தோழர் ராஜசிங்கம் அவர்களின் ‘திருமண நாள்’ விருந்திற்காக மதிய உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால் இது வெறும் உணவு விருந்து நிகழ்ச்சி மட்டும் அல்ல! குடும்பத்துடன் பங்கேற்கும் ஒரு கருத்தரங்க நிகழ்வாக நடக்கவிருக்கின்றது.

பொதுவாக ஆண்களுக்கு பரவலாக வெளி இடங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் பல அரசியல் கருத்தரங்குகளிலும் அரசியல் கூட்டங்களிலும் பங்கேற்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் பெண்களுக்கு அவ்வாறு இல்லை. எனவே தோழர்கள் தங்கள் குடும்பத்துடன் வருவதால் இந்நிகழ்ச்சியில் கருத்தரங்கமும் நடைபெறுகின்றது.

கருத்தரங்கம் என்பது அறிவுக்கும் நல்ல விருந்தை அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. கருத்தரங்கம் என்னும் அறிவுக்கான விருந்தை தோழர் இராஜசிங்கம் இல்லத்தில் நமக்கு தருகிறார் எழுத்தாளர் மதிமாறன் அவர்கள்.

எனவே தோழர்கள் அனைவரும் மதிய விருந்துடன் நடக்கும் கருத்தரங்கத்திற்கு வருமாறு அன்போடு அழைக்கின்றோம்.

நாள்:26-02-2011 (நாளை – சனிக்கிழமை)

நேரம்: மதியம் 1.30

முகவரி : கோல்டன் பிளாட்ஸ்,முகப்பேர் கிழக்கு,சென்னை

தொடர்புக்கு :9500103378

-உலகத்தமிழ் மக்கள் அரங்கம்.

தொடர்புடையவை:

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி கருத்தரங்கம்

இன்றைய சூழலில் அண்ணல் அம்பேத்கரின் அதிமுக்கியத் தேவை – பெரியாரியல் பார்வை..

டாக்டர் அம்பேத்கர் ஏன் சிறப்பானவர்?

அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?
*
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
*
டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?

3 thoughts on “உலகத் தமிழ் மக்கள் அரங்கம் நடத்தும் கருத்தரங்கம்

  1. நல்ல முயற்ச்சி….
    காலம் கடந்தே செய்தியை பார்த்தேன்…..அலைபேசியிலாவது க்ருத்த்ரக்கத்தில் கலந்து கொண்டிருப்பேன்…

Leave a Reply

%d bloggers like this: