கடவுளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கா?

கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள். கடவுள் உங்கள் முன்பு வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?

-கே. தாமரை, விழுப்புரம்.

ஓ… கடவுளுக்கு அந்த அளவுக்கு தைரியம் இருக்கா?

அதுவும் பெரியார் தொண்டன் முன்னால வர அளவுக்கு…

காலம் கெட்டு போச்சுங்க.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூன் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:
 
 ‘நமக்கு மேல் ஒருவன்‘ – ச்சீ அசிங்கம்
 
பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

தசாவதாரம்

கடவுள் நம்பிக்கையும் முற்போக்கானதுதான்…

97 thoughts on “கடவுளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கா?

  1. தனியா குந்திகிட்டு புருடா பதிவுகளை போடுவது பெரிய விஷயமில்லை. யாருமே எதிர்த்து கேள்வியே கேட்கப் போவதில்லை என்று இஷ்டத்துக்கு எதையாவது எழுதி புத்தகம் போடுவதும் பெரிய விஷயமில்லை. தகுதியான விஷயமறிந்தவர்களுடன் தர்க்க ரீதியில் பேசி கடவுள் இல்லை என்று நிரூபித்தால் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம், நீர் சிறந்த கடவுள் மறுப்பாளர் என்று. உதாரணத்துக்கு, உமது ஆட்கள் தவிடு தின்னுவதைப் பார்க்கவும்.

    http://www.tntj.net/?p=7001

    [இதில் இறை நம்பிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உம்மாலும் பதில் கூற முடியாது என்பது வேறு விடயம்]. இந்த மாதிரி நீர், தர்க்க ரீதியாக கடவுள் இருக்கிறாரா/இல்லையா என்று நிரூபித்த நிகழ்வுகள் உள்ளதானால் link கொடுக்கவும். பார்ப்பான் மோசமானவன் என்றால், அவன் செய்வதற்கெல்லாம் நேர் எதிராகச் செய்வது நல்லது என்ற மூர்க்கத் தனமான சிந்தனை உம்மைப் போன்றோர்கள் மத்தியில் வந்திருப்பது வேதனையிலும் வேதனை. ஜாதி வெறியை எதிர்க்கும் உம்மிடம், மொழி வெறி, மாநில வெறி, இன வெறி ஊறிப்போயுள்ளது கண்கூடு. இதெல்லாம் எந்த பகுத்தறிவில் சேர்த்தி என்று சொல்ல முடியுமா? தனக்கப்புறம் இயக்கத்தின் சொத்துக்கள் தன் மகனே ஆள வேண்டுமென்ற வீரமணியின் செயல் பகுத்தறிவா? பெரியார் சிலைக்கு மாலை போடுவது பகுத்தறிவா? அண்ணா சமாதியில் மலர் வளையம் வைப்பது பகுத்தறிவா? அங்கே அண்ணா உட்கார்ந்து கொண்டு உங்கள் மாலை மரியாதையை ஏற்றுக் கொள்கிறாரா? மஞ்சள் துண்டு போட்டுக் கொள்வது பகுத்தறிவா? உங்கள் வீட்டில் யாரவது செத்தால் 150 ரூபாய் [மருத்துவ ரீதியான உடலின் மதிப்பு] உங்களிடம் கொடுத்து, சந்தோஷமாய் இரு என்றால் நீர் மகிழ்வீரா? மூட நம்பிக்கையாளர் என்று நீங்கள் சொல்பவர்களைவிட பெரிய மூட நம்பிக்கையாளர்கள் பெரியார் கட்சிக் காரர்கள்தான் என்பதே தெளிவு.

  2. K. Jayadev Das,

    இங்கு விவாதம் எனும் தலைப்பை பார்க்கவும்.

    http://senkodi.wordpress.com/library/

    இறைவன் இருக்கிறானா?

    பாலியல் பிரச்சனைகள்: இஸ்லாமா? கம்யூனிசமா?

    ஏழ்மையும் அதன் காரணமும்

    பிரபஞ்சம் தோன்றியது எப்படி?

  3. என்னவோ நீங்கள் கடவுளைக் காட்டி விட்ட மாதிரியும் பார்த்துட்டு, நாங்க பார்த்துட்டு ஆனாலும் இல்லை என்று சொல்லி விட்டது போல, சும்மா இத்தனை ஆவேசம் எதற்கு?

    கடவுளை நேராக காட்டுங்கள் ஒத்துக் கொள்கிறோம்.

    இல்லை என்றால் கடவுள் இருப்பதற்கு verifiable proof கொடுங்கள்.

    வானத்தில் தொடர்ச்சியாக எல்லா நாட்களும் முழு நிலவு காட்சி தரும்படி ஒரு ஆறு மாதம் எல்லா நாட்களும் பவுர்ணமி போல ஒளிரும்படி செய்து கட்டுங்கள். அப்போது ஒத்துக் கொண்டு நீங்கள் சொல்லும் கடவுளை, சொல்லும் விதத்தில் வழிபடுவோம்!.

    பெரியார் சிலைக்கு மாலை போடுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

    சாதாரண தொண்டன் மாலை போடும் போது, பெரியாரின் கேள்வி கேட்கும் துணிவை, கடவுள் மறுப்பு கோட்பாட்டை, பார்ப்பன எதிர்ப்பை நினைவு கொள்வான்.

    மற்றபடி பலருக்கு பெரியார் பேரை சொல்லுவதால் பல உபயோகங்கள் உண்டு, பல லாபங்கள் உண்டு.

  4. \\என்னவோ நீங்கள் கடவுளைக் காட்டி விட்ட மாதிரியும் பார்த்துட்டு, நாங்க பார்த்துட்டு ஆனாலும் இல்லை என்று சொல்லி விட்டது போல, சும்மா இத்தனை ஆவேசம் எதற்கு? கடவுளை நேராக காட்டுங்கள் ஒத்துக் கொள்கிறோம்.\\ அண்டத்தில் 96% matter எந்த அறிவியல் உபகரணத்தைக் கொண்டும் detect செய்யவே முடியாத Dark energy ஆக உள்ளது என்று விஞ்ஞானம் சொல்கிறதே, [அதாவது அது இருக்கிறது ஆனால் என்னவென்று தெரியாது], அதெப்படி, அதை மட்டும் ஒப்புக் கொள்வீரா? அனுமானத்தின் மீது ஒரு வஸ்து இருப்பதாய் ஒப்புக் கொள்வதும் அறிவியல்தான் அன்பரே. மேலும் அறிவியல் எல்லாவற்றையும் நிரூபித்து விட்டது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தாள், ஐ யாம் வெரி சாரி, நீங்க நினைப்பது தப்பு. -1 X -1 = +1 என்று சொல்லித் தராங்களே இதை நிரூபித்துள்ளார்களா என்று உங்கள் வாத்தியாரை எப்போதாவது கேட்டதுண்டா? அல்லது i= SQRT(-1), அதாவது இரண்டு சமமான எங்களை பெருக்கினால் அது -1 ஆக வர வேண்டும், அதன் பெயர் i. அந்த i ஐக் காட்டுங்க சார் என்று கணக்கு வாத்தியாரிடம் எப்போதாவது கேட்டிருப்பீர்களா? அப்பவெல்லாம் கண்ணில காட்டினாதான் நம்புவேன் என்று சொல்லாமல், மார்க்கு மட்டும் வந்தால் போதும்னு டப்பா அடிச்சிட்டு பாஸ் பண்ணிட்டு வந்ததால் தான், இன்றைக்கு கடவுளைக் கண்ணில் காட்டுங்கள் என்று மக்கு மாதிரி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள், உங்க வாத்திகளை அப்பவே இந்தக் கேள்விகளை கேட்டிருந்தா இந்நேரம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் இறைவன் இருக்கிறான் என்று!!

  5. \\வானத்தில் தொடர்ச்சியாக எல்லா நாட்களும் முழு நிலவு காட்சி தரும்படி ஒரு ஆறு மாதம் எல்லா நாட்களும் பவுர்ணமி போல ஒளிரும்படி செய்து கட்டுங்கள். அப்போது ஒத்துக் கொண்டு நீங்கள் சொல்லும் கடவுளை, சொல்லும் விதத்தில் வழிபடுவோம்!.\\ பவுர்ணமியும் அமாவாசையும் குறிப்பிட்ட இடைவெளியில் மாறி மாறி காலந்தவறாமல் நடக்கிறதே, அதைப் பார்த்து இதை இவ்வளவு சரியாக நடக்கக் காரணம் என்ன என்று யோசித்தாலே போதும் இறைவன் இருக்கிறான் என்பது விளங்கும், ஆனால், நீங்க எதையும் நேர பார்ப்பவர் கிடையாதே, அதை குளறுபடி பண்ணிக் காட்டுங்க பார்க்கலாம் என்று கோக்கு மாக்கான சிந்தனை தானே வருகிறது.

  6. திருச்சிக்காரனா இது? ஆகா, என்ன மாற்றம், நல்ல விளக்கம். நீண்டநாட்களுக்கு பிறகு திருச்சிக்காரனின் வருகை வித்தியாசமாகவும் வரவேற்க கூடியதாகவும் இருக்கிறது.
    திருச்சிக்காரரின் கேள்விகளுக்கு உரிய பதிலை கொடுங்கள் K. Jayadev Das. உளறி கொட்டதிர்கள்.வாழத்துக்கள் திருச்சி.

  7. \\பெரியார் சிலைக்கு மாலை போடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சாதாரண தொண்டன் மாலை போடும் போது, பெரியாரின் கேள்வி கேட்கும் துணிவை, கடவுள் மறுப்பு கோட்பாட்டை, பார்ப்பன எதிர்ப்பை நினைவு கொள்வான். \\ இந்த டகால்டி வேலையெல்லாம் வேண்டாம் அன்பரே. உங்க கிட்ட தவறை ஒப்புக் கொள்ளும் நேர்மை இல்லை, அதை எதிர்பார்க்கவும் முடியாதே!! கல்லு சிலைக்கு மாலை போடறான், காட்டு மிராண்டி, முட்டாள் என்று இறை வழிபாடு செய்பவர்களைச் சொல்லும் நீங்கள் இந்த பதிலைச் சொல்லக் கூடாது. பெரியார் சிலையும் கல்லுதானே, அந்தக் கல்லுக்கு போடும் மாலை பெரியாருக்குப் போகுமா? atharkkuch செயும்மரியாதை பெரியாருக்குச் செய்ததாகுமா ? அதற்க்கு சப்பைக்கட்டு கட்டி ஒரு பதிலைச் சொன்னால், அதே மாதிரி ஒரு காரணத்தை சாமி சிலைக்கு மாலை போடுபவனும் சொல்வான், அப்புறம் அவனை முட்டாள் அது இது என்று சொல்லும் அருகதை உங்களுக்கு எங்கே இருக்கிறது? பெரியார் கொள்கைகள் அவரது புத்தகங்களில் உள்ளன , அதை பல மேடைகளில் சொற்பொழிவாகவும் செய்கிறீர்கள் , அப்போதெல்லாம் அதை நினைவு கொள்ளாதவன் , பெரியார் சிலைக்கு மாலை போட்டதும் Switch போட்ட மாதிரி நினைவு கொள்வானா ? இதுதான் பகுத்தறிவா ? உங்களுக்கும் ஊரை ஏமாற்றும் பார்ப்பானுக்கும் என்ன வேறுபாடு ?

  8. நாம் பதில் கொடுக்க முடியும் அன்பரே, ஆனால் அதைப் புரிந்து கொள்ள கொஞ்சம் மண்டைக்குள் மசாலா வேண்டும், தான் முட்டாள் என்பதைப் புரிந்து கொள்ளவே கொஞ்சம் புத்திசாலித் தனம் வேண்டும், அவ்வளவு கூட தலையில் களிமண் இல்லையென்றால் நாம் எழுதுவது உமக்கு உளறலாகத்தான் தெரியும், I can’t just help it, Sorry!!

  9. பெரியார் தொண்டனுக்கு இவ்வளவு தகிரியமா ?

  10. கடவுள் இருப்பதற்கான verifiable proof இருக்கிறதா என்று கேட்கிறோம். நம்பிக்கையாளர்களால் அதைக் குடுக்க முடியவில்லை.

    அப்படியே பேச்சை மாற்றி உனக்கு அறிவு இருக்கா , நீ டப்பா அடிச்ச அப்படி இப்படி என இவர்கள் எல்லாம் அப்படியே
    நோபெல் பிரைஸ் வாங்கிய அறிஞர் போலவும், நாம டப்பா அடிச்சு பாஸ் பண்ண மாறியும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி மிரட்டிப் பார்க்கிறார்கள் .

    -1 x -1 = +1 என்பது எப்படி என்று தெரியாமல் படித்து விட்டு இங்கே வந்து நம்மிடம் விளக்கம் கேட்கிறார்கள்.

    இது ஆறாம் வகுப்பிலேயே இருக்கிறது. Number linesஎன்ற கணித முறையில் இதற்க்கு மிக சிறப்பான எளிதான விளக்கம், proof இருக்கிறது.

    இதை மிக எளிதான படத்தின் மூலம் விளக்கலாம்.ஆனால் பின்னூட்டத்தில் படம் வரைய முடியாது. நண்பர்களுக்கு Number lines chapter நினைவு இருக்க கூடும்.

    இதை இன்னொரு வகையில் லாஜிக் மூலமும் விளக்கலாம்.ஒருவருக்கு இரண்டு ரூபாய் வர வேண்டியது இருந்தால் அதை + 2என்கிறோம். அவர் இன்னொருவரிடம் இரண்டு ரூபாய் கடன் வாங்கி, திருப்பிக் கொடுக்க வேண்டியது இருந்தால் அதை – 2என்கிறோம்.

    -2 போல மூன்று மடங்கு அவரிடம் இருக்கிறது என்றால் அவர் கொடுக்க வேண்டிய மொத்த கடன் ஆறு ரூபாய் (-6) என்று அர்த்தம்.

    -2போல -3மடங்கு அவரிடம் இருக்கிறது என்றால் அவருக்கு வர வேண்டியது ஆறு ரூபாய் (+6) என்று அர்த்தம்.

    அதைப் போல அறிவியல் எல்லாவற்றையும் ஆதாரத்துடன் நிரூபிக்கிறது. இவர்களுக்கு வரிசையாக natural numbers, whole numbers, real numbers, rational numbers…. என்று பாடம் எடுக்க வேண்டும் போல இருக்கிறது.

    மொத்தத்தில் யாருமே பார்க்காத ஒன்றை, அப்படி ஒன்று இருப்பதற்கான சிறு தடயம் கூட இல்லாத ஒன்றை நிச்சயம் இருக்கிறது என்று அடித்து சொல்வது எதற்காக?

    எப்படியாவது மிரட்டி கடவுள் இருக்கிறார் என்று ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும்.

    அப்படி ஒத்துக் கொண்டு விட்டால், வெறி குட், இதுதான் கடவுளின் கட்டளைகள், இதை அப்படியே ஒத்துக் கொண்டு பின்பற்றாதவர் மீது தாக்குதலை நடத்தத் வேண்டும் … அவர்களை அடிமைப் படுத்தி வரி வாங்க வேண்டும்… என உலகம் முழுவதும் இரத்த ஆறு ஓட விட்டதுதான் இவர்களின் “கடவுளா”ல் மனிதத்துக்கு கிடைத்த பலன் என்பதை வரலாற்றின் பக்கங்கள் சொல்லுகின்றன.

  11. \\வானத்தில் தொடர்ச்சியாக எல்லா நாட்களும் முழு நிலவு காட்சி தரும்படி ஒரு ஆறு மாதம் எல்லா நாட்களும் பவுர்ணமி போல ஒளிரும்படி செய்து கட்டுங்கள். அப்போது ஒத்துக் கொண்டு நீங்கள் சொல்லும் கடவுளை, சொல்லும் விதத்தில் வழிபடுவோம்!.\\

    //பவுர்ணமியும் அமாவாசையும் குறிப்பிட்ட இடைவெளியில் மாறி மாறி காலந்தவறாமல் நடக்கிறதே, அதைப் பார்த்து இதை இவ்வளவு சரியாக நடக்கக் காரணம் என்ன என்று யோசித்தாலே போதும் இறைவன் இருக்கிறான் என்பது விளங்கும், ஆனால், நீங்க எதையும் நேர பார்ப்பவர் கிடையாதே, அதை குளறுபடி பண்ணிக் காட்டுங்க பார்க்கலாம் என்று கோக்கு மாக்கான சிந்தனை தானே வருகிறது.//

    இதிலே குளறு படி எதுவுமில்லை. டப்பா அடிச்சவராக குற்றம் சட்டப் படும் நாம் மாபெரும் அறிவாளிகள் , நம்பிக்கையாளர்களுக்கு விளக்கத்தை தருவோம்.

    நம்பிக்கையாளர்கள் பலரும் நிலவு எல்லா நாளும் முழு நிலவாக, பவுர்ணமி போல ஒளி விட முடியுமா என்றால் உடனே ஆ அதுக்கு கோள் எல்லாம் மாறி மாறி சுத்தணும்… பெரிய குழப்படி ஆகிடும், அது நியாயத் தீர்ப்பு நாளில் தான் நடக்கும்… அப்ப பூமி முழுவது அக்கினி… என்று முழு பில்ட் அப்பையும் எடுத்து விடுவார்கள்.

    சந்திரன் எல்லா நாளும் முழு நிலவாக ஒளிர வேண்டுமென்றால் ஒரு குழப்பமும் இல்லாமலே அதை செய்யலாம். சந்திரனிடம் எந்த ஒளியும் இல்லை. சூரியனின் வெளிச்சம் அதன் மீது படுவதை செய்வதே சந்திரனின் ஒளியாக நமக்கு கிடைக்கிறது.

    சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்கும் போது நமக்கு ஒளி கிடைக்கிறது. அதே சந்திரன் பூமியை சுற்றிக் கொண்டே பூமிக்கு மறுபுறம் சென்று விடுவதால் சூரியனின் ஒளி அதற்க்கு கிடைக்காமல் போய் விடுகிறது.

    எல்லாம் வல்ல கடவுள் சந்திரனிலும் ஹைட்ரஜன் அணுக்களை அதிக அளவில் படைத்து, அங்கும் Fusionஐ ஸ்டார்ட் பண்ணினால், ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் அணுக்களாக மாறி ஒளியை வழங்க ஆரம்பிக்கும் சந்திரன் தானாகவே தன்னுடைய ஒளியையே பூமிக்கு வழங்க முடியும், எல்லா நாளும் முழு நிலவாக இருக்கும்.

    இதிலே ஒரு குழப்பமும் இல்லை. ஒரு பிரச்சினையும் வராது. சந்திரன் , பூமி எல்லாம் அப்படியே வழக்கம் போலவே சுற்றிக் கொண்டு இருக்கலாம்.

    இன்னும் தெளிவா சொன்னால் பெட்ரோமாக்ஸ் விளக்கில் எரிபொருள் வூத்தினால் அது எறிவது போல, சந்திரனுக்கும் ஹைட்ரஜன் அணுக்களை அதிக அளவில் குடுத்து, ஸ்டார்ட் செய்தால் போதும்.

    கடவுளிடம் (அப்படி ஒருவர் இருந்தால்) சொல்லி செய்யச் சொல்லலாமே.

    அவருக்காக பலர் தாலியை நம்பிக்கியாள பெருமக்கள் அறுத்து விட்டார்களே (குருசெடு போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு உலகப் போரிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்) , அவர்களின் நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் வண்ணம் இதை அவர் (இருந்தால்) செய்ய மாட்டாரா?

  12. அன்புக்குரிய சகோதரர் தமிழன் அவர்களே,

    நன்றி.

    பகுத்தறிவு ஆராய்ச்சி, சமத்துவம், சமரசம், நல்லிணக்கம், மனித நேயம் இவற்றை நாம் தொடர்ந்து கடைப் பிடிப்போம்.

  13. நீங்க ஒழுங்கா பாடம் படிக்கவில்லை என்பதை சந்தேகத்திற்க்கிடமின்றி நிரூபிக்கிறீர்கள். -1 X -1 = +1 என்பது வெறும் Axiom மட்டுமே, நிரூபிக்கத் தேவையில்லை, நிரூபிக்கவும் முடியாது. மற்றபடி உதாரணங்களை எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம். சிலது ஒத்துவரும், பலது ஒத்துவராது. இதற்க்கு பதில் போட்ட நீங்க, i பத்தி ஏன் வாயைத் திறக்கவில்லை? அதற்கும் எதாச்சும் அவிழ்த்து விடலாமே? நோபல் பரிசு அது இதுன்னு சொல்லி அடுத்தவனை ஏளனம் செய்து விட்டோம் என்று அக மகிழ்ந்து விட வேண்டாம் அன்பரே, உம்மைப் போல பலரைப் பார்த்தாயிற்று. நீர் நாத்தீகராய் இருப்பதில் எமக்கு எந்த வருத்தமும் இல்லை, ஆனால் நாத்தீகன் என்று சொல்லி விட்டு, கோவிலுக்குச் செல்பவனை விட அதிக மூட நம்பிக்கைகளைக் கொண்டது உங்க நாத்தீகக் கூட்டம்தான் என்பது தான் உண்மை. திராவிடர் கழகத்தில் கி.வீரமனிக்கப்புரம் அதை வழி நடத்திச் செல்ல அவரது மகனைத் தவிர வேறு யாருமே தகுதியானவர்கள் இல்லையா? ஏன் நியாயமான தேர்தல் நடத்தி அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கக் கூடாது? கோவில் பெயரைச் சொல்லி கொள்ளையடிப்பவனுக்கும் வீரமணிக்கும் என்ன வித்தியாசம்? மற்றவர்களைத் தட்டிக் கேட்பதாகச் சொல்லும் உங்களுக்கு இதைத் தட்டிக் கேட்கும் தைரியம் உண்டா? கூனன் எப்போதும் மற்றவர்கள் முதுகைத் தான் பார்ப்பான், தன் முதுகைப் பார்ப்பதில்லை என்பது போல, பெரியார்க் கட்சியில் ஊருபட்ட அயோக்கியத் தனத்தையும், மூட நம்பிக்கைகளையும் வைத்துக் கொண்டு அடுத்தவர்களை ஏளனம் செய்து கொண்டிருபவர்கள் நீங்கள். அங்கேயே பத்திரமாக இருங்கள்.

  14. கடவுளை அழைத்துக் கொண்டு வந்து கண்ணில் காண்பித்தால் மட்டுமே நம்புவேன் என்று சொல்லிவிட்டு, தற்போது ஆறுமாதத்திற்கு பவுர்ணமியாக இருந்தால் நம்புறேன் சொல்வது எந்த பகுத்தறிவில் சேர்த்தி என்று தெரியவில்லை. இது இறைவன் படைத்த உலகம், அதற்க்கு என்னென்ன வேண்டும் என்பது அவருக்குத் தெரியும் அதன் படி வடிவமைத்துள்ளார். அதன்படிதான் அது இயங்கும், நீங்க சொல்வது போலெல்லாம் இயக்க அவர் உங்க வீட்டு வேலைக் காரன் அல்ல. [எவனோ ஒரு பைத்தியக் காரன், பிரதமர் என்று ஒருத்தர் இருந்தால் இங்க வந்து என்னைப் பார்க்கச் சொல்லு நம்புகிறேன் என்றானாம், அவன் நம்ப வேண்டும் என்ற அவசியம் பிரமருக்கென்ன? அதற்காக அவரது வேலைகளைப் போட்டு விட்டு விமானம் ஏறி முன் வந்து நிற்கவேண்டுமா என்ன?]

  15. //பெரியார் சிலையும் கல்லுதானே, அந்தக் கல்லுக்கு போடும் மாலை பெரியாருக்குப் போகுமா? atharkkuch செயும்மரியாதை பெரியாருக்குச் செய்ததாகுமா ? அதற்க்கு சப்பைக்கட்டு கட்டி ஒரு பதிலைச் சொன்னால், அதே மாதிரி ஒரு காரணத்தை சாமி சிலைக்கு மாலை போடுபவனும் சொல்வான், அப்புறம் அவனை முட்டாள் அது இது என்று சொல்லும் அருகதை உங்களுக்கு எங்கே இருக்கிறது? பெரியார் கொள்கைகள் அவரது புத்தகங்களில் உள்ளன , அதை பல மேடைகளில் சொற்பொழிவாகவும் செய்கிறீர்கள் , அப்போதெல்லாம் அதை நினைவு கொள்ளாதவன் , பெரியார் சிலைக்கு மாலை போட்டதும் Switch போட்ட மாதிரி நினைவு கொள்வானா ? இதுதான் பகுத்தறிவா ? //

    நீங்கள் மனிதரின் மனங்களை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    சிலை என்பது ஒருவரை நினைவு படுத்துகிறது.

    அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது அவரின் தியாகம், நேர்மை, போராட்டம், அறிவு, உழைப்பு … இவை நிச்சயம் நினைவுக்கு வரும். பகத் சிங் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது அவரின் மனவுறுதியை எண்ணாமல் இருக்க முடியாது. ஓட்டுக்காக மாலை போடும் அரசியல்வாதி டி. வி. காரன் விடியோ எடுக்கிறானா என்பதை எல்லாம் நினைத்துக் கொள்ளக் கூடும். ஆனால் கொள்கைக்காக , தலைவன் மேல் கொண்ட மரியாதைக்காக மாலை போடுபவன் அவரின் கொள்கைகளை நிச்சயம் நினைவு கூர்வான்.

    கடவுளுக்கு மாலை போடுவது நம்பிக்கையின் அடிப்படையில், அதையும் கொள்கை ரீதியில் செய்தால்
    அது குறித்து நாம் கண்டிக்க ஒன்றுமில்லை.

    இயேசு என் பாவத்தை மன்னித்து என்னை சொர்க்கத்துக்கு அனுப்புவர் என்று நினைத்து மெழுகுவர்த்தி ஏற்றினால் அது நம்பிக்கை, verifiable proof இல்லாதது.

    இயேசு தான் கொண்ட கொள்கைகளை கடைசி வரை மறுதலிக்காமல், அதற்காக சிலுவையில் அறிவதை கூட பொருட்படுத்தவில்லை என எண்ணி மெழுகுவர்த்தி ஏற்றினால் அது பகுத்தறிவு அடிப்படையில் அவரது கொள்கை உறுதியை நினைவு கூறுவதாகும், இயேசு மேலே இருந்து தன்னைப் பார்க்கிறார் என அவன் நினைக்காத பட்சத்தில் அது பகுத்தறிவே.

  16. \\எல்லாம் வல்ல கடவுள் சந்திரனிலும் ஹைட்ரஜன் அணுக்களை அதிக அளவில் படைத்து, அங்கும் Fusionஐ ஸ்டார்ட் பண்ணினால், ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் அணுக்களாக மாறி ஒளியை வழங்க ஆரம்பிக்கும் சந்திரன் தானாகவே தன்னுடைய ஒளியையே பூமிக்கு வழங்க முடியும், எல்லா நாளும் முழு நிலவாக இருக்கும்.

    இதிலே ஒரு குழப்பமும் இல்லை. ஒரு பிரச்சினையும் வராது. சந்திரன் , பூமி எல்லாம் அப்படியே வழக்கம் போலவே சுற்றிக் கொண்டு இருக்கலாம்.

    இன்னும் தெளிவா சொன்னால் பெட்ரோமாக்ஸ் விளக்கில் எரிபொருள் வூத்தினால் அது எறிவது போல, சந்திரனுக்கும் ஹைட்ரஜன் அணுக்களை அதிக அளவில் குடுத்து, ஸ்டார்ட் செய்தால் போதும். \\ சரி இதையெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? 24 மணி நேரமும் தூங்காமல் பதிவுகளுக்கு வெறும் பின்னூட்டம் எழுதிதள்ளப் போகிறீர்களா? எதற்கு இந்த விஷப் பரீக்ஷை?

  17. \\அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது அவரின் தியாகம், நேர்மை, போராட்டம், அறிவு, உழைப்பு … இவை நிச்சயம் நினைவுக்கு வரும். பகத் சிங் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது அவரின் மனவுறுதியை எண்ணாமல் இருக்க முடியாது. ஓட்டுக்காக மாலை போடும் அரசியல்வாதி டி. வி. காரன் விடியோ எடுக்கிறானா என்பதை எல்லாம் நினைத்துக் கொள்ளக் கூடும். ஆனால் கொள்கைக்காக , தலைவன் மேல் கொண்ட மரியாதைக்காக மாலை போடுபவன் அவரின் கொள்கைகளை நிச்சயம் நினைவு கூர்வான். \\ இதையெல்லாம் நியூட்டனின் மூன்றாம் விதியில் இருந்து derive செய்யப்பட்ட உண்மைகளா? புருடா விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? நீங்க அள்ளி விடும் நரிக்கதை புலிக் கதைக்கு அம்பேத்கர் , பகத் சிங், ஜீசஸ் கிறிஸ்து என்று அப்பாவிகளை சாட்சிக்கு இழுப்பது தகுமா?

  18. கடவுளை யாரும் பார்க்காததாலும், அப்படி ஒருவர் இருப்பதற்கு எந்த வித சிறு தடயம் கூட இல்லாததாலும் நீங்கள் சமாளிப்பு வேலைகளை செய்ய வேண்டியுள்ளது. சாக்குப் போக்கு சொல்வதை செய்கிறீர்கள்.

    பிரதமர் என்றால் அவர் அவ்வப் போது மக்களை சந்திக்கிறார். பெரிய விபத்து நடந்தால் பிளைட் பிடித்து ஆஸ்பத்திரி வந்து தடவிக் கொடுத்து விட்டு , 2 லட்சம் பண உதவி அறிவித்து விட்டுப் போகிறாரே.

    கடவுள் இருப்பதற்கு ஒரு சிறு தடயம் கூட இல்லையே!

    தம்பி, நூல்களில் எழுதியுள்ளதையோ, யாரோ சொன்னதையோ வெகுளித்தனமாக அப்படியே நம்பாமல், ஆராய்ச்சிகளை மேற்கொள்வது ஆதாரத்தோடு நிரூபிக்கப் பட்டால், சரி பார்த்து நாமே அறிவதுதான் பகுத்தறிவு.

  19. உன் நண்பனைப் பற்றிச் சொல் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பார்கள். ஒருத்தரை எடுத்த எடுப்பிலேயே நீ உளறக்கூடும் என்ற அர்த்தத்தில் தரக்குறைவாகப் பேசும், ஒரு குப்பைக் கோழி உமக்கு நண்பர்??!! விளங்கிடும்.

  20. ஐயா,

    ஒவ்வொரு படமும் சிலையும் மக்களின் மன நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இது பகுத்தறிவு முறையிலே சிந்தித்து அறியக் கூடியது. மனோதத்துவ நிபுணர்கள் இதை அறிவு பூர்வமாக ஏற்றுக் கொள்வார்கள்.

    தமன்னா, நமீதா படத்தைப் (picture) பார்த்தல் ஒரு வகையான தாக்கம் மனதில் உண்டாகிறது, அன்னை தெரசா, தில்லையாடி வள்ளியம்மை … ஆகியோர் படங்களை பார்த்தல் மனதில் உருவாகும் தாக்கம் வேறானது.

    சிலைகளும் அது போல் சிந்தனையில் தாக்கத்தை உருவாக்கக் கூடியதே.

  21. \\கடவுள் இருப்பதற்கு ஒரு சிறு தடயம் கூட இல்லையே!\\ கண்ணைக் கொஞ்சம் திறந்து பாருங்கண்ணே, இந்த முழு அண்டமும் அவர் இருப்பதற்கான ஆதாரமும், தடயமும்தான்.
    \\ஆராய்ச்சிகளை மேற்கொள்வது ஆதாரத்தோடு நிரூபிக்கப் பட்டால், சரி பார்த்து நாமே அறிவதுதான் பகுத்தறிவு.\\ எத்தனை அறிவியல் விதிகளை நீங்க இப்படி ஆராய்ந்து அறிந்துள்ளீர்கள் என்று லிஸ்டு குடுங்கண்ணே. [ஆனாலும், பெரியார் கொள்கையை மட்டும் படிக்காமலேயே ஏத்துகிட்டு இருக்கீங்களே, அது ஏண்ணே?]

  22. ஐயா,

    ஐயா, உண்மையான பகுத்தறிவாளன் இகழ்ச்சியை பொருட்படுத்துவதில்லை, மிரட்டலுக்கு அஞ்சுவதும் இல்லை, துட்டுக்கு கெஞ்சுவதும் இல்லை!

  23. \\சிலைகளும் அது போல் சிந்தனையில் தாக்கத்தை உருவாக்கக் கூடியதே.\\ எது வேண்டுமானாலும் தாக்கத்தை ஏற்ப்படுத்தும், ஆனால், சிலைக்கு செய்யும் மரியாதை அந்த மனிதருக்குச் செய்ததாகுமா என்பதே கேள்வி, அதுவும் இதை ஒரு பகுத்தறிவு வாதி செய்யலாமா? செய்துவிட்டு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டு சரிதான் என்று வாதிடலாமா?

  24. பூமி, சந்திரன், கோள்கள், சூரியன் இவற்றை ஆராய்ந்தது போல அண்டம் உருவானது எப்படி என்றும் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நம்பிக்கை என்றால் எதை வேண்டுமானாலும் சொல்லி, நம்பு ஏன் சொல்லி விடலாம். ஆராச்சி என்றால் கால அவகாசம் தேவை. ஆராய்ந்து அறிவிப்பார்கள், அப்போது தெரிந்து கொள்வோம்.

    பெரியாரின் கருத்துக்களை படிக்காமலே ஏற்றுக் கொள்ளவில்லை. படித்து சிந்தித்து தான் ஏற்றுக் கொள்கிறார்கள்.

  25. \\உண்மையான பகுத்தறிவாளன் இகழ்ச்சியை பொருட்படுத்துவதில்லை, மிரட்டலுக்கு அஞ்சுவதும் இல்லை, துட்டுக்கு கெஞ்சுவதும் இல்லை!\\ அப்போ வீரமணி ஜெ. கருணாநிதி இருவரில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஜால்ராவை எடுத்துக் கொண்டு போய் அடிப்பது எதற்கு? உங்க தலையே இப்படின்னா மத்தவங்க எப்படியோ? ஜெ. கோவில்களுக்குப் போவது, ஜோதிடர்களின் பேச்சைக் கேட்டு கண்ணகி சிலையை அகற்றுதல், பெயரில் ஒரு எழுத்தைக் கூட்டுதல், நல்ல நேரம் தேதியைப் பார்த்துக் கொண்டு காலங் கடத்துதல் போன்றவற்றை தட்டிக் கேட்க வீரமணிக்கு வாயில்லையா? கருணாநிதி மஞ்சள் துண்டை போட்டுக் கொண்டது, கடவுள் இல்லை என்று சொல்லி விட்டு மசூதிக்குப் போய் கஞ்சி குடிப்பது மட்டும் சரியா? அங்கு மட்டும் கடவுள் வந்து விடுவாரா? இதையெல்லாம் கேட்க வீர்மனியின் வாயில் இருந்த கொழுக்கட்டையா தடுத்தது?

  26. //எது வேண்டுமானாலும் தாக்கத்தை ஏற்ப்படுத்தும், ஆனால், சிலைக்கு செய்யும் மரியாதை அந்த மனிதருக்குச் செய்ததாகுமா என்பதே கேள்வி, அதுவும் இதை ஒரு பகுத்தறிவு வாதி செய்யலாமா? செய்துவிட்டு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டு சரிதான் என்று வாதிடலாமா?//

    அது அந்த மனிதரின் தியாகத்துக்கு, உழைப்புக்கு, கொள்கைக்கு செய்யும் மரியாதை. It is a posthumus honor.

    அப்படி செய்வது அவரது கொள்கைகளை வருங்கால மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் உள்ளது.

    பெரியார் மேலே இருந்து நம்மை பார்க்கிறார், இங்கே நான் போடும் மாலை அங்கே அவர் தோளில் விழும் என்று நினைத்தால் தான் அது பகுத்தறிவுக்கு முரணானது.

    அப்படியான நம்பிக்கை எதுவும் இல்லாமல் கொள்கைகளை நினவு கூர்வது பகுத்தறிவுக்கு முரணானது அல்ல.

  27. \\பூமி, சந்திரன், கோள்கள், சூரியன் இவற்றை ஆராய்ந்தது போல அண்டம் உருவானது எப்படி என்றும் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நம்பிக்கை என்றால் எதை வேண்டுமானாலும் சொல்லி, நம்பு ஏன் சொல்லி விடலாம். ஆராச்சி என்றால் கால அவகாசம் தேவை. ஆராய்ந்து அறிவிப்பார்கள், அப்போது தெரிந்து கொள்வோம். \\ அறிவியல் எப்படி செயல்படுகிறது என்று அடிப்படையையாவது நீங்கள் தெளிந்து கற்றிருந்தால் இப்படி பேசமாட்டீர்கள். “ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது, ஒரு வித ஆற்றல் மறைந்தால் அது இன்னொரு விதமாக வெளிப்படும்” -என்று ஆற்றல் அழிவின்மை விதி கூறுகிறது. இதை தெளிவாகக் கூறவேண்டுமானால், சாய்பாபா கையை ஆட்டி மோதிரமோ, வாட்சோ எடுத்தால் அது ஏதாவது ஒரு நகைக் கடையோ, கடிகாரக் கடையிலோ இருந்து வாங்கப் பட்டிருக்கும், அவருடைய வெறும் கையிலிருந்து வந்திருக்காது என்பதாகும். இப்போ அண்ணே, உங்க பதிலுக்கு வாறன், உஷாரா கேளுங்க. நீங்க சொன்னீங்களே \\பூமி, சந்திரன், கோள்கள், சூரியன் \\ லொட்டு லொசுக்கு எல்லாம், [அப்புறம் மொத்த பேரண்டமும், அதிலுள்ள matter+Energy] இதுங்க எங்கேயிருந்து வந்துச்சு என்பது தான் கேள்வி, இதற்க்கு யாரும் இதுவரையில் பதில் சொல்லவில்லை. [முடிஞ்சா நீங்க சொல்லுங்க.] மத்தபடி இதையும் அதையும் கலந்தா இன்னொன்னு வரும் என்பதெல்லாம் ஜுஜுபி. அதைத்தான் இப்போ இருக்கிறவங்க செய்துகிட்டு இருக்காங்க. மற்றபடி அறிவியல் எல்லாத்தையும் நிரூபிச்சிடுச்சி என்று பகல் கனவு வேண்டாம், அவங்ககிட்ட போய், ஏன் எலக்டிரானின் எடை இவ்வளவு, charge இவ்வளவு, ஏன் புவி ஈர்ப்புவிசை இவ்வளவு என்று கேட்டுப் பாருங்க, உதட்டை பிதுக்குவார்கள் [தெரியாதுன்னு அர்த்தமாம்!!]

  28. \\அது அந்த மனிதரின் தியாகத்துக்கு, உழைப்புக்கு, கொள்கைக்கு செய்யும் மரியாதை. It is a posthumus honor.

    அப்படி செய்வது அவரது கொள்கைகளை வருங்கால மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் உள்ளது. \\

    மூடநம்பிக்கைஎன்பது இப்படித்தான் ஆரம்பிக்குது, வேறொன்னுமில்ல!! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஒருத்தன் தேங்காய் வாழைப் பழம் எடுத்துகிட்டு வருவான், இன்னொருத்தன் சூடம் காண்பிப்பான். அவனும் உங்களை மாதிரி காரணம் சொல்லிட்டு பெரியார் சாமிகிட்ட வேண்டிகிட்டு கும்பிட்டுவிட்டுப் போவான். [இதுவும் ஒரு பொழப்பு…]

  29. //\பூமி, சந்திரன், கோள்கள், சூரியன் \\ லொட்டு லொசுக்கு எல்லாம், [அப்புறம் மொத்த பேரண்டமும், அதிலுள்ள matter+Energy] இதுங்க எங்கேயிருந்து வந்துச்சு என்பது தான் கேள்வி, இதற்க்கு யாரும் இதுவரையில் பதில் சொல்லவில்லை. //

    பூமி, சந்திரன், கோள்கள், சூரியன் இவற்றை ஆராய்ந்தது போல அண்டம் உருவானது எப்படி என்றும் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நம்பிக்கை என்றால் எதை வேண்டுமானாலும் சொல்லி, நம்பு என சொல்லி விடலாம். ஆராச்சி என்றால் கால அவகாசம் தேவை. ஆராய்ந்து அறிவிப்பார்கள், அப்போது தெரிந்து கொள்வோம்.

  30. எந்த மத நூலிலாவது எந்த ஒரு நோய் தீர்க்கும் மருந்து ஒன்றாவது சொல்லப் பட்டு இருக்கிறதா?

    உயிர் காக்கும் மருந்துகள் பென்சிலின் இன்சுலின்,அம்மை நோய்க்கு தடுப்பு டயாலிசிஸ் சிகிச்சை முறை… இவை போன்றவைஎதையாவது எந்த மத நூலிலாவது சொல்லி இருக்கா?

    MRI Scan, CT scan இப்படியான டயக்னாஸ்டிக் முறைகள் ஏதா வது எந்த மத நூலிலாவது சொல்லப் பட்டு இருக்கிறதா?

    இருப்பது எல்லாம் நம் மதக் கடவுளை எல்லோரயும் ஒத்துக் கொள்ள சொல், நிராகரிப்போர் மீது தாக்குதல் நடத்துங்கள், பிடரிகளை வெட்டுங்கள், இனப் படுகொலை செய்யுங்கள்… இப்படிக் கற்கால கொடூரங்களே உள்ளன.

    அவற்றை எடுத்துக் கொண்டு வந்து எங்கள் தலையில் கட்டி, இது புனிதம் , நீ நம்பு, இல்லை என்றால் நீ முட்டாள், மர மண்டை என சொல்கிறார்கள்.

    மனிதனுக்கு நிவாரணம் தருவது எதுவும் இந்த நூல்களில் இல்லை, மனிதனுக்கு ஆபத்து தருவதுதான் உள்ளது.

  31. //மூடநம்பிக்கைஎன்பது இப்படித்தான் ஆரம்பிக்குது, வேறொன்னுமில்ல!! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஒருத்தன் தேங்காய் வாழைப் பழம் எடுத்துகிட்டு வருவான், இன்னொருத்தன் சூடம் காண்பிப்பான். அவனும் உங்களை மாதிரி காரணம் சொல்லிட்டு பெரியார் சாமிகிட்ட வேண்டிகிட்டு கும்பிட்டுவிட்டுப் போவான். [இதுவும் ஒரு பொழப்பு…]//

    ஐயா

    நம்பிக்கை என்பது வேறு. கொள்கைகளை நினைவு கூர்வது என்பது வேறு. இதைப் பலமுறை தெளிவாக விளக்கி விட்டோம்.

    நாம் கொள்கைகளை விற்று பிழைப்பதும் இல்லை, யாரிடமும் பணம் வாங்குவதும் இல்லை.

  32. \\எந்த மத நூலிலாவது எந்த ஒரு நோய் தீர்க்கும் மருந்து ஒன்றாவது சொல்லப் பட்டு இருக்கிறதா? \\ ஆயுர் வேதம் என்ற நூலில் எல்லா மருந்துகளும், மூலிகை பற்றிய விவரங்களும் உள்ளன.

  33. \\உயிர் காக்கும் மருந்துகள் பென்சிலின் இன்சுலின்,அம்மை நோய்க்கு தடுப்பு டயாலிசிஸ் சிகிச்சை முறை… \\ உயிர் ஒரு நாள் கண்டிப்பா போய்த் தான் தீரும், உயிர் காக்கும் மருந்து என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லை. மருந்து இல்லாம முன்பு செத்தார்கள், ஆனாலும் குடும்பத்துக்கு பத்து பிள்ளைகள் சுகப் பிரசவத்தில் பெற்றார்கள், கவலையே இல்லை. தற்போது மருந்து இருக்கிறது, ஆனால் குடும்பக் கட்டுப்பாடு செய்து ஒரே குழந்தையோடு நிறுத்துகிறார்கள், மருத்துவம் முன்னேறியிருக்கிறது, ஆனாலும் 40% மேலான எங்களுக்கு சிசேரியன் தான் இந்தியாவில் நடக்கிறது, இது ஒன்றும் மெச்சத் தகுந்ததல்ல. அப்படியும் மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப் படுத்த முடியவில்லையே என்ற விசனமே மிஞ்சியுள்ளது. முன்பு நல்ல இயற்க்கை முறை விளைவிக்கப் பட்ட காய்கறி, பால், பழங்கள் உண்டார்கள், சர்க்கரை வியாதி லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் வந்தது. தற்போது செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் [எல்லாம் உங்க அறிவியலோட உபயம்தான்!!] அவை உடல் உறுப்புகளைப் பாதிக்கின்றன 25% மக்களுக்கு சர்க்கரை வியாதி வருகிறது, இது இன்னமும் அதிகரிக்கும், ஆண்கள் ஆண்மையை இழக்கிறார்கள், பெண்கள் மலடுகளாகிரார்கள், விவாசாய நிலங்கள் தரிசாகின்றன, இது அத்தனைக்கும் காரணம் உங்க அறிவியல் கண்டுபிடிச்ச உரம் , பூச்சி மருந்தோட உபயம். எல்லாத்துக்கும் மேல, அணு குண்டு [போட்டா உலகமே காலி]. இந்த மாதிரியான விஷமி விஞ்ஞானிகளுக்கு கொடி பிடிக்கிறோமேன்னு நீங்க எப்பவாவது வெட்கப் பட்டதுண்டா?

  34. \இவை போன்றவைஎதையாவது எந்த மத நூலிலாவது சொல்லி இருக்கா?
    MRI Scan, CT scan இப்படியான டயக்னாஸ்டிக் முறைகள் ஏதா வது எந்த மத நூலிலாவது சொல்லப் பட்டு இருக்கிறதா? \\ இயற்கையின் வழியில் வாழ்ந்தால் இவையெல்லாம் தேவையே இல்லையே? மேலும் இவற்றால் என்ன சேவையா நடக்கிறது? தனியார் மருத்துவமனைக் காரன் இவற்றை வைத்துக் கொண்டு பணம் பிடுங்குகிறார்கள். அப்படியே வசதிகள் வந்தாலும், நோய்கள் குறைந்த பாடில்லையே, ஆசுபத்திரிகள் நூற்றுக் கணக்கில் கட்டித் தள்ளுகிறார்களே, அப்படியென்றால் வியாதி அதிகமாவதாகத் தானே அர்த்தம், இது முன்னேற்றமா?

  35. //நீங்க ஒழுங்கா பாடம் படிக்கவில்லை என்பதை சந்தேகத்திற்க்கிடமின்றி நிரூபிக்கிறீர்கள். -1 X -1 = +1 என்பது வெறும் Axiom மட்டுமே, நிரூபிக்கத் தேவையில்லை, நிரூபிக்கவும் முடியாது. மற்றபடி உதாரணங்களை எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம்.//

    -1 x -1=1 எப்படி என்பதை நாம் அறிந்து கொள்ள இயலும்.

    அதை நிரூபணம் என்கிறீர்களோ, உதாரணம் என்பீர்களோ, உங்கள் விருப்பம் !

    -1 x -1= 1 என்பது வெறும் நம்பிக்கையின் அடிப்படையில், நீங்க சொல்லுங்க டீச்சர், நான் கேட்டுக்கறேன் என்று ஏற்கப்பட்ட கோட்பாடு அல்ல.

    Number lines முறையில் இதை தெளிவாக அறிந்து, இது எப்படி என்று புரிந்து கொள்ளலாம்.

  36. \\இருப்பது எல்லாம் நம் மதக் கடவுளை எல்லோரயும் ஒத்துக் கொள்ள சொல், நிராகரிப்போர் மீது தாக்குதல் நடத்துங்கள், பிடரிகளை வெட்டுங்கள், இனப் படுகொலை செய்யுங்கள்… இப்படிக் கற்கால கொடூரங்களே உள்ளன. \\ அது மதத்தை பின்பற்றுபவனின் தவறு, மதத்தை சரியாக போதிக்கவில்லை என்று அர்த்தம். உங்கள் ஊரில் வாத்தியார் சரியில்லை என்றால் வேறு ஆசிரியரைப் போட்டு பள்ளியை நடத்த வேண்டும், பள்ளியை இழுத்து மூட வேண்டுமென்று அர்த்தமல்ல.

  37. \\அவற்றை எடுத்துக் கொண்டு வந்து எங்கள் தலையில் கட்டி, இது புனிதம் , நீ நம்பு, இல்லை என்றால் நீ முட்டாள், மர மண்டை என சொல்கிறார்கள். மனிதனுக்கு நிவாரணம் தருவது எதுவும் இந்த நூல்களில் இல்லை, மனிதனுக்கு ஆபத்து தருவதுதான் உள்ளது.\\ அப்போ வீரமணி நிவாரணம் கொடுக்கிறாரா? அந்த ஆளே கட்சி சொத்துகளை தான் அனுபவிப்பது எப்படி என்று யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டுள்ளார், தனக்கடுத்து தன் மகன் எப்படி தி.க அரியணை ஏறுவான் என்ற ஒரு கவலைதான் அவருக்கு, கொள்கையாவது புண்ணாக்காவது. இவர்கிட்ட போனா என்ன நிவாரணம் கிடைக்கும்?

  38. \\-1 x -1= 1 என்பது வெறும் நம்பிக்கையின் அடிப்படையில், நீங்க சொல்லுங்க டீச்சர், நான் கேட்டுக்கறேன் என்று ஏற்கப்பட்ட கோட்பாடு அல்ல. \\ நீங்க இதுக்கு ஒரு விளக்கம் கொடுத்தீங்களே, \\-2போல -3மடங்கு அவரிடம் இருக்கிறது என்றால் அவருக்கு வர வேண்டியது ஆறு ரூபாய் (+6) என்று அர்த்தம். \\ யங்கப்பா!! அண்டப் புளுகு ஆகாசப் புளுகை விட மோசமாக இருக்கிறது. கொஞ்சம் ஏமாந்த சமயத்தில் இப்படி ஒரு பிட்டை போட்டு விட்டீரே!! இந்த அர்த்தத்தை என்கியிருந்தையா புடிச்சிகிட்டு வந்தீங்க? நானும் நீங்க ஏதோ அர்த்ததோடத்தான் எழுதியிருக்கீங்கன்னு நினைச்சேன், இப்படி இஷ்டத்துக்கும் அடிச்சு விடறீங்களே நியாயமா? [இந்த விளக்கம் எங்கும் இல்லை நண்பரே, வேண்டாம் இது].

  39. //MRI Scan, CT scan இப்படியான டயக்னாஸ்டிக் முறைகள் ஏதா வது எந்த மத நூலிலாவது சொல்லப் பட்டு இருக்கிறதா? \\ இயற்கையின் வழியில் வாழ்ந்தால் இவையெல்லாம் தேவையே இல்லையே? மேலும் இவற்றால் என்ன சேவையா நடக்கிறது? தனியார் மருத்துவமனைக் காரன் இவற்றை வைத்துக் கொண்டு பணம் பிடுங்குகிறார்கள். அப்படியே வசதிகள் வந்தாலும், நோய்கள் குறைந்த பாடில்லையே, ஆசுபத்திரிகள் நூற்றுக் கணக்கில் கட்டித் தள்ளுகிறார்களே, அப்படியென்றால் வியாதி அதிகமாவதாகத் தானே அர்த்தம், இது முன்னேற்றமா?//

    அதாவது எந்த மத நூலிலும் எந்த நோய்க்குமான மருந்து பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கிறது.

    இவ்வளவு மருந்தும் சிகிச்சை முறையும், மனிதன் உழைத்து , ஆராய்ந்து உருவாக்கியதே.

    எல்லாம் அறிந்த “கடவுள்” இது பற்றி எதுவும் சொல்லவில்லை, கடவுளின் ஏஜன்டுகளாக தங்களை சொல்லிக் கொண்டோருக்கு கடவுள் என்கிற கோட்ப்பட்டை உருவாக்கி மக்களை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க தான் தெரிந்தது.

    இயற்கையோடு வாழ்ந்தாலும், செயற்கையோடு வாழ்ந்தாலும் மனிதனுக்கு சிறுநீரக கோளாறு, நீரிழிவு வியாதி…. இப்படி எண்ணற்ற வியாதிகள் வரத் தான் செய்கிறது. முன்பெல்லாம் நிவாரணம் இன்றி இருந்தனர். இப்போது மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்து இருக்கிறது.

    குறிப்பாக இப்படியான அறிவியல் நன்மைகள் எதுவும் மத நூல்களில் இல்லை. இது தெளிவு!

    அம்மா , அப்பா சிறு வயதில் நமக்கு துணை வந்தது போல, வயதான பிறகும் யாரோ துணை வருவார்கள் என்ற நம்பிக்கையில் கடவுள் எனும் கோட்பாட்டை உருவாக்கி விட்டான் அந்தக் கால மனிதன். அதோடு நிற்காமல் அந்த கடவுளுக்காக வெட்டு, குத்து என்று இரத்தத் ஆறையும் ஓட விட்டனர். எந்த வித தடயமோ, ஆதாரமோ இல்லாத இந்த வன்முறைக் கோட்பாடுகளுக்கு வக்காலத்து வாங்கி எழுத பலர் உண்டு.

  40. எப்படியாவது எம்மை திட்டி , கேலி செய்து எழுதி னால் படிப்பவர்களுக்கு நான் கூறியது விளங்காது என்று அர்த்தம் இல்லை. படிப்பவருக்கு எளிதாகப் புரியும்.

    Number line multiplication னும் அவர்களுக்கு நினைவிருக்கக் கூடும். சிறுவர்களின் கணித நூல்களை வாங்கிப் புரட்டினால் அதில் இருக்கும்.

  41. \\அதாவது எந்த மத நூலிலும் எந்த நோய்க்குமான மருந்து பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கிறது. \\ஆயுர்வேதம்- இதில் எல்லா வியாதிகளுக்கும் தீர்வு இருக்கிறது, ஆனால், அதை முறைப் படி கற்றுத் தெளிய வேண்டும்.

  42. \\எல்லாம் அறிந்த “கடவுள்” இது பற்றி எதுவும் சொல்லவில்லை\\ அவரால் படைக்கப் பட்ட மனிதன் தானே நீங்கள் சொன்ன வைத்தியங்களைச் செய்கிறான், அப்புறமென்ன?

  43. \\இருப்பது எல்லாம் நம் மதக் கடவுளை எல்லோரயும் ஒத்துக் கொள்ள சொல், நிராகரிப்போர் மீது தாக்குதல் நடத்துங்கள், பிடரிகளை வெட்டுங்கள், இனப் படுகொலை செய்யுங்கள்… இப்படிக் கற்கால கொடூரங்களே உள்ளன. \\ அது மதத்தை பின்பற்றுபவனின் தவறு, மதத்தை சரியாக போதிக்கவில்லை என்று அர்த்தம். உங்கள் ஊரில் வாத்தியார் சரியில்லை என்றால் வேறு ஆசிரியரைப் போட்டு பள்ளியை நடத்த வேண்டும், பள்ளியை இழுத்து மூட வேண்டுமென்று அர்த்தமல்ல.//

    புத்தகத்தில் உள்ளதை தான் வாத்தியார் நடத்துகிறார். அவரை வைது என்ன பலன்?

  44. \\இயற்கையோடு வாழ்ந்தாலும், செயற்கையோடு வாழ்ந்தாலும் மனிதனுக்கு சிறுநீரக கோளாறு, நீரிழிவு வியாதி…. இப்படி எண்ணற்ற வியாதிகள் வரத் தான் செய்கிறது. முன்பெல்லாம் நிவாரணம் இன்றி இருந்தனர். இப்போது மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்து இருக்கிறது.// இது தற்போதைய நிலை, எல்லோருக்கும் எல்லா வியாதியும் வரும், ஏனெனில் உணவு நஞ்சாகிக் போனதால். போன தலைமுறையில் பலர் நூறு வயது வாழ்ந்தார்கள், அவர்களுக்கென்ன இந்த வியாதிகலேல்லாமா வந்தது? [அட சாகப் போகும் போது எதாச்சும் வரும் அதை விடுங்க]. மற்றபடி நலமுடந்தான் வாழ்ந்தார்கள். தற்போது பலர் வாழ்கிறார்கள் ஆனால், 60 வயதைத் தாண்டினாலே போதும் என்ற நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டோம், இது துரதிர்ஷ்ட வசமானது.

  45. \\எல்லாம் அறிந்த “கடவுள்” இது பற்றி எதுவும் சொல்லவில்லை\\ அவரால் படைக்கப் பட்ட மனிதன் தானே நீங்கள் சொன்ன வைத்தியங்களைச் செய்கிறான், அப்புறமென்ன?//

    மனிதன் கஷ்டப் பட்டு கண்டு பிடிப்பதையும் சேர்த்து கடவுள் பேருக்கு பட்டா போடுகிறீர்கள். கடவுளுக்கு தெரிந்து இருந்தால் மத நூலிலேயே சொல்லி இருக்கலாம் அல்லவா?

    முதலில் கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கே ஆதாரத்தைக் காணோம். நம்புங்க, நம்பிக்கை வேணும் என சும்மா பில்ட் அப் கொடுத்து ஒப்பேற்றுகின்றனர். அதோடு இன்னொரு சொருகலாக அவர்தான் படைத்தான் என்பது… இதற்கெல்லாம் ஆதாரம் இல்லை.

  46. \\குறிப்பாக இப்படியான அறிவியல் நன்மைகள் எதுவும் மத நூல்களில் இல்லை. இது தெளிவு!\\ அறிவியலுக்கு நல்லபிள்ளை சான்று கொடுக்கும் அப்பாவியாக இருக்கிறீர்களே!! அது போல ஒரு கொடூர அரக்கன் யாருமில்லை, அறிவியல் இல்லாதிருந்திருந்தால் இன்னும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு உயிரினம் புவியில் நிலைத்திருந்திருக்கும், ஆனால் தற்போது நிலை என்ன தெரியுமா? நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம் அன்பரே!!

  47. \\மனிதன் கஷ்டப் பட்டு கண்டு பிடிப்பதையும் சேர்த்து கடவுள் பேருக்கு பட்டா போடுகிறீர்கள். கடவுளுக்கு தெரிந்து இருந்தால் மத நூலிலேயே சொல்லி இருக்கலாம் அல்லவா? \\
    மனிதன் கண்டு பிடித்தான், ஆனால் எதையும் படைக்கவில்லை. படைத்தவன் இறைவன், அதை இவன் பயன்படுத்துகிறான், அவ்வளவே. [முடிந்தால், ஒரு தூசியை உங்கள் விஞ்ஞானிகள் சொந்தமாக படைக்கட்டுமே, பார்ப்போம்].

  48. \\முதலில் கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கே ஆதாரத்தைக் காணோம். நம்புங்க, நம்பிக்கை வேணும் என சும்மா பில்ட் அப் கொடுத்து ஒப்பேற்றுகின்றனர். அதோடு இன்னொரு சொருகலாக அவர்தான் படைத்தான் என்பது… இதற்கெல்லாம் ஆதாரம் இல்லை.\\ அதைதான் நீங்க ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கணும். இந்த உலகம் வரக் காரணம் யாருன்னு கேளுங்க, சூரியனுக்குள் அவ்வளவு எரிபொருள் வச்சது யாருன்னு கேளுங்க, எல்லா எலக்டிரான், புரோட்டான், நியூட்ரான்களும் ஒரே மாதிரி வித்தியாசமே இல்லாம இருக்கே இதுக்கெல்லாம் உள்ள பண்பு யார் கொடுத்ததுன்னு கேளுங்க. கண்டுபிடிங்க, ஆனா தானா வந்துச்சுன்னு மட்டும் சொல்லாதீங்க, ஏன்னா தானா எதுவும் வராது.

  49. ஐயா,

    அறிவியலினால் மனிதன் தன் வசதிக்காக உருவக்கியவறினால் சீர் கேடு உண்டானதை மறுப்பதற்கில்லை. அதையும் சரி செய்கின்றனர். பல இடங்களில் பிளாஸ்டிக் தடை செய்யப் பட்டு வருகிறது.

    அறிவியலினால் கிடைத்த உண்மைகளில் நன்மயை எடுத்துக் கொண்டு, தீயதை தவிர்த்து நிதானமாக செயல் பட வேண்டிய பொறுப்பு மனிதனுக்கு உண்டு.

    அறிவியல் என்பது பகுத்தறிவு அடிப்படையில் காரண காரியங்களோடு உண்மையை விவரிக்கிறது என்பதையோ சொல்லுகிறோம்.

    நம்பிக்கை என்பது நம்பிக்கை மாத்திரமே, நம்பிக்கை என்பது உண்மை யாக கருதப் பட வேண்டுமானால் நிரூபணம் வேண்டும்.

    இந்த பதிவின் முக்கிய கருத்து கடவுள் இருக்கிறாரா என்பதுதான். கடவுள்க்கு ஆதாரம் இல்லை , தடயமும் இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

    உலகப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் இந்தப் பதிவில் விவாதிக்க இயலாது.

  50. //அதைதான் நீங்க ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கணும். இந்த உலகம் வரக் காரணம் யாருன்னு கேளுங்க, சூரியனுக்குள் அவ்வளவு எரிபொருள் வச்சது யாருன்னு கேளுங்க, எல்லா எலக்டிரான், புரோட்டான், நியூட்ரான்களும் ஒரே மாதிரி வித்தியாசமே இல்லாம இருக்கே இதுக்கெல்லாம் உள்ள பண்பு யார் கொடுத்ததுன்னு கேளுங்க. கண்டுபிடிங்க, ஆனா தானா வந்துச்சுன்னு மட்டும் சொல்லாதீங்க, ஏன்னா தானா எதுவும் வராது.//

    தானா எதுவும் வர முடியாது என்று அறுதியிட்டு சொல்ல முடியாது.

    அந்தக் காலத்தில் குயவன் பொம்மை செய்வதைப் பார்த்து, இதைப் போல கடவுள் மண்ணில் செய்து மூக்கில் வூதினார் என்று நினைத்துக் கொண்டார்கள். காடுகளில் இத்தனை தாவரங்கள், மரங்கள் வளர்கின்றன, அவற்றை யாராவது நட்டார்களா?

    //அதைதான் நீங்க ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கணும்//

    ஆராய்ச்சி எல்லாம் நடக்குது , பொறுமையா இருங்க.

    யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது நமது நோக்கம் அல்ல

    உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தா அமைதியா கும்பிடுங்க. அடுத்தவர்கள் மேல் திணிக்காதீர்கள். கட்டாயப் படுத்தியதால் பலர் கொல்லப் பட்டு விட்டனர் என்பதை மறக்க வேண்டாம்

  51. \\அறிவியலினால் மனிதன் தன் வசதிக்காக உருவக்கியவறினால் சீர் கேடு உண்டானதை மறுப்பதற்கில்லை. அதையும் சரி செய்கின்றனர். பல இடங்களில் பிளாஸ்டிக் தடை செய்யப் பட்டு வருகிறது. \\
    ரொம்ப அப்பாவியாய் இருக்கீங்க, அப்பப்போ Environmental செய்திகளையும் படிங்க அன்பரே.

    \\அறிவியலினால் கிடைத்த உண்மைகளில் நன்மயை எடுத்துக் கொண்டு, தீயதை தவிர்த்து நிதானமாக செயல் பட வேண்டிய பொறுப்பு மனிதனுக்கு உண்டு. \\
    அதெப்படி காரை கண்டு பிடித்தால் எல்லோரும் தான் ஒட்டுவான், காற்று மாசடையும், ஓசோன் ஓட்டை விழும், மக்களுக்கு தோல் கேன்சர் வரும், அமில மழை பொழியும், யாரைக் குற்றம் சொல்வீர்கள்? இதாவது பரவாயில்லை, அணுகுண்டை எதுக்கு செய்தார்கள்? பாப்பாக்கள் விளையாடவா?

    \\அறிவியல் என்பது பகுத்தறிவு அடிப்படையில் காரண காரியங்களோடு உண்மையை விவரிக்கிறது என்பதையோ சொல்லுகிறோம்.\\
    சரி ஐயா, ஐன்ஸ்டீன் சொல்றாரு, ஒளியின் வேகம் எல்லோருக்கும் ஒன்றேதான் மாறாதுன்னு சொல்றார். [speed of light is a constant for all inertial observers] அதற்க்கு அவர் புரூப் என்ன கொடுத்தார்னு கேட்டு சொல்லுங்களேன்.

  52. \\தானா எதுவும் வர முடியாது என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. \\ ஆமாம் நீங்க என்ன அறியல் படி பேசறீங்களா, இல்லை சாமியார்கள் மாதிரி இஷ்டத்துக்கும் அள்ளி விடறீங்களா? ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஒருவித ஆற்றல் மறைந்தால் அது இன்னொரு ஆற்றலாக வெளிப்படும் [Energy can neither be created, nor be destroyed, but can be transformed from one form to another] என்பது அறிவியலால் ஏற்றுக் கொள்ளப் பட்ட விதி. எத்தனை வருஷம் கஷ்டப் பட்டு கண்டு புடிச்ச விதி இது, சும்மா நீங்க பாட்டுக்கு வந்து, நான் அறிதியிட்டு கூரமாட்டேன்னு சொல்லி, இந்த விதியை பொய்யாக்க நினைக்கிறீர்களா? [எதாச்சும் ஒரு பக்கம் நின்னு பேசுங்க அன்பரே, இஷ்டத்துக்கும் பேச வேண்டாம்].

  53. \\உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தா அமைதியா கும்பிடுங்க. அடுத்தவர்கள் மேல் திணிக்காதீர்கள். \\ நான் எப்போ திணிச்சேன்? நீங்க சரியா பதில் குடுங்க, நானும் பெரியார் கட்சிக்கே வந்துடறேன். [வீரமணி எல்லாத்தையும் தின்னு தீர்த்துடுவாரு, ஒன்னும் மிஞ்சாது அங்கே என்பது வேறு விஷயம்].

  54. திருச்சிக்காரரே , இந்த வீடியோக்களைப் பார்க்கவும், [முடிந்தால் எல்லா வீடியோக்களையும் பார்க்கவும்]கொஞ்சம் திருந்தவும். தி.க கட்சி பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க உதவியது, ஆனால் இன்றைக்கு பெரியார் சொன்னபடி யாரும் இல்லை. வீரமணி ஜெ வுக்கு சொம்பு தூக்குறாரு, கருணாநிதி மஞ்சள் துண்டைப் போட்டுக் கொண்டு சாராயம் வித்தாரு. மதியிழந்த மாறன்களால் உங்களைக் காப்பாற்ற முடியாது, திருந்துங்கள், உங்கள் ஊரில் அரங்கநாதனின் ஆலயம் உள்ளது, ராமானுஜர் வாழ்ந்த இடம், ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடிய இடம், அங்கிருந்து கொண்டு நீங்கள் இப்படி குட்டிச் சுவராய்ப் போவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வாழ்த்துக்கள், இறைவன் உங்களை நல்வழிப் படுத்துவானாக.

    http://www.youtube.com/watch?v=Y5cYO4H2GOk
    http://www.youtube.com/watch?v=VBmzX252gSM&feature=related
    http://www.youtube.com/watch?v=pSoGCt28tMM&feature=related

  55. கடவுள் என்று ஒருவர் இருந்தால் அதற்க்கான verifiable proofஐ கொடுக்கவேண்டியது, கடவுள் இருக்கிறார் என்று சொல்லுபவர்கள தான்.

    நீங்கள் பெரியார் கட்சிக்கு வருவது அப்புறம் இருக்கட்டும். முதலில் சிந்திக்க ஆரம்பியுங்கள்.

    யாருமே காணாத ஒன்றை, அது இருப்பதக்கான தடயம் கூட இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்கிறீர்கள். அதன் பெயரால் பல கட்டளைகளைப் போட்டு, பய முறுத்தி பல கோடிக் கணக்கானவரைக் கொன்று விட்டனர் என்பதை நினைவு கூறுங்கள். இறந்தவர்களின் மனைவியும், குழந்தைகளும் அல்லற்பட்டு ஆற்றாது அலுத்து புலம்பியதை எண்ணிப் பாருங்கள்.

    மனிதாபிமானத்தையும், இரகத்தையும் மனதில் கொண்டு வாருங்கள்.

    கடவுள் நம்பிக்கை என்ற பெயரில், பிற மதங்களின் மீது வெறுப்புணர்ச்சியைக் கக்கி,வன்முறையைத் தூண்டும் வெறித் தனத்தை விட்டு விடுமாறு நம்பிக்கையாளரிடம் சொல்லுங்கள்.

  56. //கடவுள் நம்பிக்கை என்ற பெயரில், பிற மதங்களின் மீது வெறுப்புணர்ச்சியைக் கக்கி,வன்முறையைத் தூண்டும் வெறித் தனத்தை விட்டு விடுமாறு நம்பிக்கையாளரிடம் சொல்லுங்கள்.//

    தான் வாழ ஒரு சாராரை (நம்பிக்கையாளர்களில் ஒரு சாராரை !) புண்படுத்தி குளிர் காயும் அவ நம்பிக்கையாளர்களிம் மூட தனத்தை விட்டால் நிச்சயம் வன்முறை குறையும்.

    எப்படி நம்புவது என்று கேட்டால், திரும்ப முதலில் இருந்து வருவோம், நீங்கள், குடிக்கும் தண்ணீர் எப்படி வந்தது என்று சொன்னால் தான் குடிப்பேன் என்று சொல்லவில்லை, மாறாக என்றாவது ஒரு நாள் எப்படி வந்தது என்று கண்டுபிடிப்பார்கள் என்று நம்புவதால் தான் உங்களால் இந்த வாதம் செய்ய முடிகிறது.

    தயவு செய்து எனக்கு பதில் சொல்லி அதற்க்கு பதில் வரும் என்று நம்பாதீர்கள் 🙂

  57. தண்ணீர் இருக்கிறது குடிக்கிறேன். அது எப்படி வந்தது என ஆராய முடியும். தண்ணீரை எவ்வளவு சூடாக்கினாலும், திரவ நிலையில் அதன் வெப்ப நிலை டிகிரி செண்டிக்க்ரேடுக்கு மேல் போகாது என்று ஒருவர் சொன்னால் , தண்ணீரை சூடாக்கி அது உண்மையா என்று ஆராய முடியும்.

    ஆனால் கடவுள் என்ற ஒன்று இல்லையே இல்லாத ஒன்றை எப்படி ஆராய்வது.

    கடவுள் இருக்கிறார் என்று சொல்லுபவன் தான், ஆவேசப் பட்டு அடுத்தவனை வெட்டுகிறான்.

    கடவுள் இல்லை என சொல்லுபவன் அதிக பட்சம் போனால் நீங்க கும்பிடும் கடவுளை திட்டி விட்டுப் போவான்.

    அதில் உங்க மனசு புண்ணாகலாம். ஆனால் கடவுள் இருக்கிறது என்று நம்பி மத வெறியில் சிக்கியவர், பல பேரின் உடலை புண்ணாக்கி உள்ளனர் ,
    கோடிக் கணக்கானோரை கொன்று குவித்து உள்ளனர்.

  58. தண்ணீர் இருக்கிறது குடிக்கிறேன். அது எப்படி வந்தது என ஆராய முடியும். தண்ணீரை எவ்வளவு சூடாக்கினாலும், திரவ நிலையில் அதன் வெப்ப நிலை 100 டிகிரி செண்டிக்க்ரேடுக்கு மேல் போகாது என்று ஒருவர் சொன்னால் , தண்ணீரை சூடாக்கி அது உண்மையா என்று ஆராய முடியும்.

    ஆனால் கடவுள் என்ற ஒன்று இல்லையே இல்லாத ஒன்றை எப்படி ஆராய்வது.

    கடவுள் இருக்கிறார் என்று சொல்லுபவன் தான், ஆவேசப் பட்டு அடுத்தவனை வெட்டுகிறான்.

    கடவுள் இல்லை என சொல்லுபவன் அதிக பட்சம் போனால் நீங்க கும்பிடும் கடவுளை திட்டி விட்டுப் போவான்.

    அதில் உங்க மனசு புண்ணாகலாம். ஆனால் கடவுள் இருக்கிறது என்று நம்பி மத வெறியில் சிக்கியவர், பல பேரின் உடலை புண்ணாக்கி உள்ளனர் ,
    கோடிக் கணக்கானோரை கொன்று குவித்து உள்ளனர்.

  59. மதத்தின் பெயாரால் நடக்கும் சண்டைகள், கலவரங்கள் அதனால் ஏற்ப்படும் இழப்புகள் இவையெல்லாம் இறைவன் இல்லை என்பதற்கான ஆதாரமாக எடுத்துக் கொள்ள இயலாது. ஒரு வீட்டில் அண்ணன் தம்பிகளுக்குள்ளே தகராறுகள் வரலாம் அடித்து உதைத்துக் கொள்ளலாம், அதை வைத்து அவர்களைப் பெற்ற அப்பனே இல்லைஎன்றாகிவிடாது. இவர்கள், ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் அவ்வளவே. நாட்டில் சாலை விபத்துகளில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர், பலருக்கு உடல் உறுப்புகள் சேதமாகின்றன, அதற்காக வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து விடுகிறோமா? எத்தனையோ ரயில் விபத்துகள், விமான விபத்துகள் நடந்தனவே, நூற்றுக் கணக்கில் மாண்டார்களே, அதற்காக இனி ரயிலோ, விமானமோ வேண்டாமென்றா முடிவெடுத்தார்கள்? உறவினர்கள், சடலங்களைப் பெற்றுக் கொள்ள விமான விபத்து நடந்த இடத்துக்கு வருவதற்கே இன்னொரு விமானத்தில்தானே வந்தார்கள்?

  60. கண்ணால் காட்டு, காண இயலாத போன்ற பதங்களை ஏன் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. முதலில், இந்த பேரண்டம் ஒன்றுமில்லாதிளிருந்து வருமா என்று யோசியுங்கள், அப்படியே வந்தாலும், சூரியன் பூமி இவை எதற்கும் பகுத்தறிவு கிடையாது, அதிலிருந்து அறிவுள்ள நாம் எப்படி தோன்றியிருக்க முடியும், நமது உடலில் உறுப்புகள் ஒவ்வொன்றும் அற்புதமாக வடிவமைக்கப் பட்டுள்ளதே, புத்தியில்லாத ஒன்றிலிருந்து புத்தியுள்ள இந்த வடிவமைப்பு எப்படி வந்தது…. இப்படியெல்லாம் யோசித்தால் இறைவன் இருக்கிறானா இல்லையா என்று தெரிய வரும். அப்படி இருக்கிறான் என்றால், அவன் யார், எதற்காகப் படைத்தான், படைப்பின் நோக்கமென்ன , அவனை அறிவது எப்படி என்றெல்லாம் அதற்க்கப்புரமாக வரும். அப்படி இல்லை என்றால், உங்க த்ரதிர்ஷ்டம் ஆண்டவன் உங்க மண்டையில மூளைக்குப் பதிலை களிமண்ணை வச்சிட்டான்னு அர்த்தம், ஒன்னும் பண்ண முடியாது.

  61. \\தண்ணீரை எவ்வளவு சூடாக்கினாலும், திரவ நிலையில் அதன் வெப்ப நிலை 100 டிகிரி செண்டிக்க்ரேடுக்கு மேல் போகாது என்று ஒருவர் சொன்னால் , தண்ணீரை சூடாக்கி அது உண்மையா என்று ஆராய முடியும்.\\ முதலில் தண்ணீர் எப்படி வந்தது என்று ஆர்யுங்களேன்? உங்களுக்கு ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் ரெடிமேடாக கிடைத்து விட்டது, தண்ணீர் என்கிறீர்கள், சூடாக்குவேன் என்கிறீர்கள். அதனை அணுக்கள் ஒரே மாதிரியாக செய்து வைத்தது யார், எப்படி என்ற காரண காரியங்களுக்கு விடையென்ன? இறைவன் உருவாகவில்லை, அப்படி ஒருத்தனே இல்லை என்பது உங்கள் வாதமென்றாலும், அதற்க்கு விடைதான் என்ன? [கேட்டா ஆராய்ச்சி பண்றேன் சீக்கிரம் விடை கிடைக்கும் என்பீர்கள், அது எங்கே நடக்கப் போகுதோ, யாருக்குத் தெரியும்? இன்னும் கோடி வருடம் கசித்தாலும் இதே பதில் தான் உங்ககிட்ட இருந்து வரும், என்ன பிரயோஜனம்?]

  62. கடவுள் கோட்பாட்டை நிராகரிக்கும் நம் எந்த அளவுக்கு கண்ணியத்துடன் எழுதுகிறோம், கடவுள் நம்பிக்கையாளர்கள் எழுதும் நடை எப்படி இருக்கிறது என்பதை படிப்பவர்கள் உணர முடியும். இதில் இருந்தே இவர்களின் கடவுள் கோட்பாடு மனிதர்களை அமைதியற்ற ஆவேச வெறித் தனத்துக்கு கொண்டு செல்வதை அறிந்து கொள்ளலாம்.

  63. Jayadev DAs உங்களின் வாதத்த்தில் சவடால்தான் இருக்கிறது. இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி எழுதுகிறீர்கள். ஆனாலும் ஒன்றும் சரக்கு இல்லை.

    ///கடவுள் கோட்பாடு மனிதர்களை அமைதியற்ற ஆவேச வெறித் தனத்துக்கு கொண்டு செல்வதை அறிந்து கொள்ளலாம்.//

    என்று திருச்சியார் குறிப்பிடுவதற்கு பொறுத்தமாக இருக்கிறீர்கள்.

  64. \\Jayadev DAs உங்களின் வாதத்த்தில் சவடால்தான் இருக்கிறது.\\
    கொஞ்சமாச்சும் அடிப்படை அறிவியல் தெரிந்திருந்தால் மாட்டுமே புரியும் அன்பரே. அதுக்கும் மேல கொஞ்சம் புத்திசாலித் தனமும் வேண்டும், சுத்தமா மக்கா இருந்தால் நாம் எழுதுவது உமக்கு ஒன்றும் விளங்காது. ஆனபோதிலும், இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ள கல்வி ஒரு தடையும் அல்ல, அது அதற்க்கு உதவப் போவதும் இல்லை. உண்மையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம், மனதில் நேர்மை இருந்தால் போதும், அது உம்மிடம் சுத்தமாக இல்லை, therefore, உமக்கு எப்படி விளங்கும்?

    \\இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி எழுதுகிறீர்கள். \\ சாக்கடையை விட கேவலமான மொழியைப் பிரயோகிக்கும் நீர் இதைச் சொல்கிறீரா? உம்மைப் போல மட்டரகமான வகையில் யாராலும் பேச முடியுமா? எடுத்த எடுப்பிலேயே கீழ்த் தரமான வார்த்தைகளை உபயோகிக்கும் நீர் இழிவைப் பற்றி பேசி காமடி பண்ணாதீங்க அன்பரே.

    \\ஆனாலும் ஒன்றும் சரக்கு இல்லை.\\ குருடன் முன்னர் வைக்கப் பட்ட ஓவியத்தைப் பற்றி அவனால் என்ன சொல்ல முடியும்? உமக்கு புரிந்துகொள்ளத் தேவையான அடிப்படை விவரமில்லை என்றால் அதற்க்கு நான் பொறுப்பல்ல அன்பரே. மேலும், உமக்கு இனி பதில் எழுத எனக்கு விடுப்பமில்லை, சாக்கடையில் கல் வீசினால் என்னவாகும் என்பது எனக்குத் தெரியும், இத்தோடு நிறுத்திக் கொள்வோம், விவாதம் வேண்டாம்.

  65. K. Jayadev Das
    அறிவிருந்ததால்தான் புரிந்து கொள்ள முடியும் என்றால், கடவுள் பக்தி உள்ளவர்கள் எல்லாம் அறிவாளியா?
    கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிலு்ம் முட்டாள்கள் இல்லையா? என்ன?
    உங்களை சொல்வதாக நினைத்துக் கொண்டு என்னையும் திட்டாதீர்கள்

  66. @ திமுக

    நீங்கள் வேறு நபரா, இல்லை ஒரே நபரே பல பெயரில் எழுதுகிறீர்களா என்று சந்தேகமாக உள்ளது. ஏனெனில், போலிச் சாமியார்களிடம் உள்ள அத்தனை குறுக்கு புத்தியும், செய்யும் தவறை ஒப்புக் கொள்ளக் கூட நேர்மையற்ற தன்மையும் மேற்கண்ட இரண்டு நாத்தீகர்களிடம் இருப்பதை பார்க்கிறேன். அதையெல்லாம் படித்துவிட்டு அவர்களுடைய முட்டாள் தனத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லாதது, நீரும் அதே நபர் அல்லது இன்னொரு போலி நாத்தீகர்தான் என்பதையே காட்டுகிறது. என்னிடம் மட்டும் கேள்வி கேட்கும் நீங்கள், மேற்கண்ட இரண்டு டுபாக்கூர்களிடமும் என்னுடைய இந்த கேள்விகளுக்கு ஏன் பதில் சொல்லவில்லை என்று கேளுங்கள்:

    1. பெரியார் சிலைக்கு மாலை போடுவது பகுத்தறிவா? பெரியார் சிலைக்கு மாலை போடும்போதுதான் அவருடைய சிந்தனைகள் என் நினைவுக்கும் வரும் என்றாரே, அது பகுத்தறிவா?

    2.திராவிடர் கழகத்தில் கி.வீரமணிக்கப்புரம் அதை வழி நடத்திச் செல்ல அவரது மகனைத் தவிர வேறு யாருமே தகுதியானவர்கள் இல்லையா? ஏன் நியாயமான தேர்தல் நடத்தி அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கக் கூடாது? கோவில் பெயரைச் சொல்லி கொள்ளையடிப்பவனுக்கும் வீரமணிக்கும் என்ன வித்தியாசம்? மற்றவர்களைத் தட்டிக் கேட்பதாகச் சொல்லும் உங்களுக்கு இதைத் தட்டிக் கேட்கும் தைரியம் உண்டா?

    3. பெரியார் சொன்ன பகுத்தறிவு கொள்கைகள் அத்தனைக்கும் எதிராக செயல்பட்டு வரும் ஜெயலலிதாவுக்கு [அவர் ஆட்சிக்கு வரும்போதெல்லாம்] ஜால்ரா தட்டும் வீரமணியை கேள்வி கேட்கும் தைரியம் உங்களுக்கு உண்டா?

    4. மஞ்சள் துண்டு போட்டுக் கொள்வது பகுத்தறிவா? அண்ணா சமாதியில் மலர் வளையம் வைப்பது பகுத்தறிவா? அங்கே அண்ணா உட்கார்ந்து கொண்டு உங்கள் மாலை மரியாதையை ஏற்றுக் கொள்கிறாரா? இறைவனே இல்லை என்று சொல்லிவிட்டு, மசூதிகளில் போய் நோன்புக் கஞ்சி குடிக்கும் ஓட்டுப் பொருக்கி வேலை தேவைதானா? பெரியார் சாராயம் விற்கச் சொன்னாறாரா? – இதையெல்லாம் செய்யும் ஒரு தலைவரை பார்த்து கேள்வி கேட்காமல் சொம்புதூக்கும் வேலையை வீரமணி செய்கிறாரே, அதை கேள்வி கேட்பீர்களா?

    5. \\தானா எதுவும் வர முடியாது என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. \\ என்று உலகில் உள்ள விஞ்ஞானிகள் எல்லோரும் ஒப்புக் கொண்டிருக்கும் ஆற்றல் அழிவின்மை விதியை புறந்தள்ளிவிட்டு நண்பர் எதிராகப் பேசுகிறாரே, இதுதான் இவர் அறிவியலை மதிக்கும் லட்சணமா?

    இதையெல்லாம் பற்றி ஒன்றுமே கேட்காமல் என்னை மட்டும் கேள்வி கேட்கும் Mr. திமுக உமக்கு நேர்மை என்பது எள் அளவாயினும் இருக்கிறதா? இல்லை நேரத்துக்கு ஒரு புளுகை அவிழ்த்து விட்டு சுயலாபம் பண்ணும் திமுக மாதிரியேதான் நீருமா?

  67. பசிக்கும் போது உண்ணுதல், உறங்குதல், புணருதல், ஆபத்துன்னு வந்தால் உயிரைக் காத்துக் கொள்ளல- இந்த அறிவு எல்லா உயிரினத்துக்கும் உண்டு. இதை அறிவு என்ற லிஸ்டில் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த பிரமாண்டத்தின் படைப்பின் ரகசியம் என்ன, இதைப் படைத்தவர் இருக்கிறாரா, இருந்தால் எதற்காகப் படைத்தார், இதில் எனது கடமை என்ன என்றெல்லாம் சிந்திப்பவன் தான் உண்மையான பகுத்தறிவு வாதி. மற்றபடி, எல்லோரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு, தூங்கி, கிடைக்கும் பெட்டைகளோடு கும்மாலமடித்துவிட்டு செத்துமடி என்பது பகுத்தறிவு அல்ல, இதையெல்லாம் நாய் கூட செய்யும், மலத்தையே உண்ணும் பண்ணி கூட செய்யும்.

  68. பெட்டைகளோடு கும்மாலமடித்துவிட்டு செத்துமடி என்பது பகுத்தறிவு அல்ல, ///
    ஒருவன் பல பெண்களை மத ரீதியாக திருமணம் செய்து கொண்டு கும்மாளம் அடிப்பவன் உன்னை போன்ற மானங்கெட்ட மதவெறியனா இல்லை, பகுத்தறிவாதியா?

    பெண்களை பெட்டைகள் என்று எழுதுகிறவன் உன்னை போன்ற மத வெறி புடிச்ச மானங்கெட்டவனாதான் இருப்பான். நீ முதல் உன்னுடைய உண்மையர்ன பெயர்ல வா மதவெறி புடுச்சவனே.

  69. \\நீ முதல் உன்னுடைய உண்மையர்ன பெயர்ல வா மதவெறி புடுச்சவனே.\\ அதுசரி, திமுக என்ற பெயர் என்ன உங்க அப்பனும் ஆத்தாளும் சேர்ந்து ஆயிரம் பேரை அழைத்து விருந்து வச்சு பெயர் சூட்டு விழா நடத்தி உமக்கு சூட்டிய பெயரா? என்னை சொந்தப் பெயரில் வரச் சொல்லும் நீர் முதலில் உமது சொந்தப் பெயரில் அல்லவா வந்திருக்க வேண்டும்? நானாவது ஒரே பெயரில் எழுதுகிறேன், நீர் தினமும் ஒரு பெயரில் எழுதுகிறீரே, இதை எங்கே போய்ச் சொல்வது? மேலும் எனக்கு ஏன் ஆன்மீக ஆசான் சூட்டிய பெயரைத்தான் நான் பயன்படுத்தியுள்ளேன், இந்தப் பெயரில்தான் என்னை என் நண்பர்கள் அழைக்கிறார்கள். மற்றவர்கள் போல கிழிஞ்ச டவுசர், நரி, புலி என்று இல்லாத பெயரைப் பயபடுத்தவில்லை. இங்கே நடப்பது கருத்து பரிமாற்றம், நியாயமான கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன, ஒன்றுக்குக் கூட பதில் தரக் கூடிய யோக்கியதை உம்மில் யாருக்கும் இல்லை, அதை மறைக்க சில்லறைத் தனமான வேலைகளில் நீர் ஈடுபட்டுள்ளீர். இறைநம்பிக்கையாளர்களை வெறியர்கள் என்று அழைக்கும் உம்மிடத்தில் நீதி, நேர்மை கொஞ்சமாவது உள்ளதா? கல்லுக்கு மாலை போடும் மூட நம்பிக்கை உம்மிடத்தில் இல்லையா? கட்சி சொத்துக்களை தன்னுடைய மகன் அனுபவிக்க வேண்டுமென்பது யோக்கியன் செய்யும் வேலையா? கறுப்புச் சட்டை போட்டுக் கொள்வது பகுத்தறிவா? நாத்தீகர்கள் செய்யும் அயோக்கியத் தனத்தையும், மூட நம்பிக்கைகள் என்று மற்றவர்களை அவர்கள் விமர்சனம் செய்து விட்டு அதையே தாங்கள் செய்தால் அது அறிவுப் பூர்வமானது என்று சொல்லித் திரிவது ஏன் என்று சாதாரண மனிதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க வக்கில்லை, உங்க மூஞ்சிக்கு கடவுள் உங்க முன்னே வந்து நிற்க வேண்டுமா?

  70. \\ஒருவன் பல பெண்களை மத ரீதியாக திருமணம் செய்து கொண்டு கும்மாளம் அடிப்பவன் உன்னை போன்ற மானங்கெட்ட மதவெறியனா இல்லை, பகுத்தறிவாதியா?\\ பகுத்தறிவாதி என்ற பெயர் உங்க கோஷ்டிக்கு சற்றும் பொருத்தமற்றது. ஏனெனில் அறிவே சுத்தமாக இல்லாத கூட்டத்திடம் பகுத்தறிவை எங்கே எதிர் பார்ப்பது? நாத்திக வெறியர் கூட்டம் என்பதே உங்களுக்கு சரியான பெயராக இருக்கும். பல பெண்களை மத ரீதியாக திருமணம் செய்து கொண்டு கும்மாளம் அடித்தவன் உங்கள் கூட்டத்தைச் சார்ந்தவன் தான். ஊருக்கு தெரிந்து மூணு பெண்டாட்டி, அப்புறம் கணக்கில் வராதது எத்தனை என்று யாருக்கும் தெரியாது. கவியரசு கண்ணதாசன் இவருடன் கோடம்பாக்கத்தில் [நடு ராத்திரி 12 மணிக்கு] கதவைத் தட்டாத விபச்சாரி வீடுகளே இல்லை என்று சொல்கிறார். ஒருமுறை ஒரு விபச்சாரியிடம் சுகத்தை அனுபவித்து விட்டு திருப்தியில்லை என்று சொல்லி அவளிடம் கொடுத்த பணத்தை பிடுங்கிக் கொண்டு வந்த யோக்கியன் உங்கள் கட்சிக்காரன். இன்னும் சொன்னால் நாறிப் போகும் உங்கள் பிழைப்பு. மானக்கேட்டவர்கள் உங்கள் கூட்டம்தான், ஆத்தீகர்களாகிய நாங்கள் அல்ல.

  71. பெட்டைகள் என்பது தமிழ் வார்த்தைதான், அதை ஏன் தமிழ் மொழியில் வைத்தார்கள் என்று போய் மூதாதையரைக் கேளும்.

  72. ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். என்று ஒரு மதம் சொல்கிறது என்றால் அது அது மானம் கெட்ட தனமா இல்லையா?
    என்பதை நீங்கள் விளக்க வேண்டும். அதற்கு பிறகு அடுத்தவர்களை பற்றி பேசலாம்.

  73. பெண்களுகளை அடிமையாக போக பொருளாக நினைக்ககிர மானங்கெட்ட மதவெறியனே, நீ உன்னுடைய உண்மையான அடையாத்தை காட்டு ஏன் வேறு பெயரில் ஒளிந்து இருக்கிறாய்

    ஆன்மீக ஆசான் சூட்டிய பெயரைத்தான் நான் பயன்படுத்தியுள்ளேன்//
    உன்னைய மாதிரி மதவெறி புடிச்ச முட்டாளோட குரு எவன் அவன் பெயரை சொல்லு?

  74. Jayadev Das
    //இங்கு விவாதம் எனும் தலைப்பை பார்க்கவும்.

    http://senkodi.wordpress.com/library/

    இறைவன் இருக்கிறானா?

    பாலியல் பிரச்சனைகள்: இஸ்லாமா? கம்யூனிசமா?///

    உன் குருநாதனையும் கூட்டி கொண்டு இங்கு போய் விவாதிக்க போக வேண்டியதுதானே?
    ஏன் அங்கு போய் விவாதிக்க மறுக்கிறாய்?
    உன் டவுசரை கழட்டுவாங்கனு பயமா?

  75. //1. பெரியார் சிலைக்கு மாலை போடுவது பகுத்தறிவா? பெரியார் சிலைக்கு மாலை போடும்போதுதான் அவருடைய சிந்தனைகள் என் நினைவுக்கும் வரும் என்றாரே, அது பகுத்தறிவா?//

    பல வேளைகளில் ஆழ்ந்து இருக்கிறோம், எப்போதும் ஐயாவை நினைத்துக் கொண்டு இருக்க வாய்ப்பில்லை. பெரியாரின் சிலைக்கு மாலை போடும் போது நிச்சயம் அவரது வாழ்க்கை, கொள்கைகள் , போராட்டங்கள் நினைவுக்கு வரும்.

    பெரியாரின் சிலைக்கு மாலை போட செல்லும் போதும், மாலை இடும் போதும் நமக்கு அவரது கொள்கை நினைவுக்கு வராமல், டெண்டுல்கர் எத்தனை ரன் அடித்தார்…. தங்கம் விலை இன்னும் ஏறுமா… வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற நிலம் என்ன விலைக்கு கிடைக்கும் ….. என்றெல்லாமா எண்ணிக் கொண்டு இருப்போம்?

    சிலைக்கு மாலை போட்டால் எல்லாம் வல்ல இறைவனுக்கு எக்கச்சக்க கோவம் வந்து விடும் என்கிற மூட நம்பிக்கைக்காக, அந்த மூட நம்பிக்கைக்கு ஒத்து வூதி , பெரியார் சிலைக்கு மாலை போடாமால் இருக்க வேண்டுமா?

  76. // \\தானா எதுவும் வர முடியாது என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. \\ என்று உலகில் உள்ள விஞ்ஞானிகள் எல்லோரும் ஒப்புக் கொண்டிருக்கும் ஆற்றல் அழிவின்மை விதியை புறந்தள்ளிவிட்டு நண்பர் எதிராகப் பேசுகிறாரே, இதுதான் இவர் அறிவியலை மதிக்கும் லட்சணமா?//

    ஆற்றல் மாறாக் கோட்பாடு என்பது மேலே ஆண்டவர் என்று ஒருவர் உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றையும் படைத்துக் கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம் இல்லை.

    அறிவியல் கோட்பாடு எதுவும் ஆண்டவன் என்று ஒருவன் இருப்பதாக சொல்லவில்லை.

  77. \\ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். என்று ஒரு மதம் சொல்கிறது என்றால் அது அது மானம் கெட்ட தனமா இல்லையா?\\ வாய்யா… வா… இவ்வளவு நாளு எங்கே போயிருந்தீரு ? [அல்லது பேரை திரும்ப மாற்றிக் கொண்டீரா?]. இன்னொரு கேனத் தனமான கேள்வியைக் கேட்டுள்ளீர். பகுத்தறிவுக்கும் உமக்கும் சம்பந்தமில்லை என்பதை சந்தேகத்திற்க்கிடமின்றி மீண்டும் ஒரு முறை இந்தக் கேள்வி மூலம் நிரூபித்துள்ளீர்!! ஒரு ஆணோ பெண்ணோ எத்தனை முறை திருமணம் செய்து கொள்ளளாம் என்பதை அவர்கள் இருக்கும் நாட்டின் சட்டம் தான் முடிவு செய்யும். அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் இரண்டு ஆண்கள் திருமணம் செய்து கொள்ளலாமாம். இந்தியாவில் இரண்டு பெண்கள் திருமணம் செய்துலத்தை சட்டம் அனுமதித்துள்ளது. ஆப்பிரிக்க காடுகளில் யார் யாரை வேண்டுமானாலும் புணரலாம், யாரும் கேட்கப் போவதில்லை.
    இந்தியாவில் இந்துக்கள் ஒருத்தருக்கு ஒரு கணவன்/மனைவி தான் என்று சொல்கிறது. ஆணோ பெண்ணோ இரண்டாம் முறை திருமணம் செய்தால் அது செல்லாது, அது குற்றம் என்கிறது சட்டம். ஆனால், முதல் மனைவி தன்னால் தன் கணவனுக்கு சுகம் தர இயலாது என்று ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அந்தக் கணவன் இன்னொரு மனம் புரிந்து கொள்ள தடையில்லை என்கிறது அதே சட்டம். [இதையெல்லாம் மீறி உங்க ஆள் எப்படி மூணு பெண்டாட்டி கட்டினான் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்]. முஸ்லீம்கள் சமுதாயத்தில் ஒரு ஆண் ஐந்து மனைவிகள் வரை மனம் புரியலாம் என்றும் சொல்கிறது. ஆக இடத்துக்கு இடம் இது மாறுகிறது. இது மானமுள்ள செயலா, மானங்கெட்ட செயலா என்பது இங்கே கேள்வியே இல்லை. சட்டம் அனுமதிக்கிறதா இல்லையா என்பதே கேள்வி. சட்டம் அனுமதிக்கிறது, அதை அது மானம் கெட்ட தனம் என்று கருதுவது உமது சொந்தக் கருத்து, ஆனால் இந்தியாவில் முஸ்லீம் ஒருத்தர் ஐந்து முறை வரை மணம் செய்தால் சட்டப் படி அது சரியே. கொஞ்சம் புத்திசாலித் தனமாக எதையாவது விவாதியுங்கள் நண்பரே, இந்த மாதிரி கூமுட்டைத் தனமாக எதையோ உளற வேண்டாம்?

  78. //பசிக்கும் போது உண்ணுதல், உறங்குதல், புணருதல், ஆபத்துன்னு வந்தால் உயிரைக் காத்துக் கொள்ளல- இந்த அறிவு எல்லா உயிரினத்துக்கும் உண்டு. இதை அறிவு என்ற லிஸ்டில் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த பிரமாண்டத்தின் படைப்பின் ரகசியம் என்ன, என்றெல்லாம் சிந்திப்பவன் தான் உண்மையான பகுத்தறிவு வாதி.//

    அந்த ஆராய்ச்சியை தான் செய்கிறோம், பூமி, சூரியன் , கோள்கள் … இதை எல்லாம் ஆராய்ந்தோம், அதைப் போல இந்த அண்டம் உருவான விதம் பற்றியும் ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த படைத்தவன் …. இப்படி எல்லாம் யாரும் இருப்பதற்கான ஆதாரமோ, தடயமோ இல்லையே தம்பி.

  79. \\ஆற்றல் மாறாக் கோட்பாடு என்பது மேலே ஆண்டவர் என்று ஒருவர் உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றையும் படைத்துக் கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம் இல்லை. அறிவியல் கோட்பாடு எதுவும் ஆண்டவன் என்று ஒருவன் இருப்பதாக சொல்லவில்லை.\\ என்னமோ பெரியார் கட்சிக்காரன் தான் எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக் காரன் என்பது போலவும், விஞ்ஞானிகள் அத்தனை பேரும் நாத்தீகர்கள் போலவும், அறிவியல் முறைப் படி தான் எதையுமே ஏற்றுக் கொள்வோம் என்று மூச்சுக்கு மூச்சு பேசிவிட்டு, அடிப்படை அறிவியலுக்கே புறம்பான ஒன்றை கூறியுள்ளது ஏன் என்பதே உம்மிடம் வைக்கப் பட்டுள்ள கேள்வி. உமது கருத்து படி ஆற்றல் மாறாக் கோட்பாடு என்பது மேலே ஆண்டவர் செய்து வைக்கவில்லை என்றாலும், அதுவும் ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்புதானே? அதற்க்கு முரணாக \\தானா எதுவும் வர முடியாது என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. \\என்று உம்மா இஷ்டத்துக்கும் கப்சா விடுவீரா? இதுதான் பகுத்தறிவா? அறிவியலுக்கும் உமக்கும் என்னய்யா சம்பந்தம்? அறிவியலை நீர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

  80. @ மனிதன் (22:10:25) :

    நீர் கொடுத்த லிங்கைப் பார்த்தேன், ஒரே விளகெண்ணை போல இருக்கிறது. சுவராஸ்யமாக இல்லை. மூடி வைத்துவிட்டேன். நீர் தைரியசாலியாக இருந்தால், TNTJ நண்பர்களுடன் நேருக்கு நேர் விவாதித்து அதை வீடியோவாகப் போடு உன் டவுசர் என்னவாகிறது என்று நான் பார்க்கிறேன்.

    http://www.tntj.net/?p=7001

  81. \\பல வேளைகளில் ஆழ்ந்து இருக்கிறோம், எப்போதும் ஐயாவை நினைத்துக் கொண்டு இருக்க வாய்ப்பில்லை. பெரியாரின் சிலைக்கு மாலை போடும் போது நிச்சயம் அவரது வாழ்க்கை, கொள்கைகள் , போராட்டங்கள் நினைவுக்கு வரும்.\\ இதற்குப் பெயர்தான் மூட நம்பிக்கை. பெரியார் அவர்களின் புத்தகங்களைப் படிக்கும் போதோ, மற்றவர் படிக்கக் கேட்கும் போதோ வராத \\அவரது வாழ்க்கை, கொள்கைகள் , போராட்டங்கள்\\ அவரது சிலைக்கு மாலை போடும் போது வருமா? மூட நம்பிக்கையின் மொத்த உருவம் இந்த நாத்தீகக் கூட்டம்.

  82. \\அந்த ஆராய்ச்சியை தான் செய்கிறோம், பூமி, சூரியன் , கோள்கள் … இதை எல்லாம் ஆராய்ந்தோம், அதைப் போல இந்த அண்டம் உருவான விதம் பற்றியும் ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த படைத்தவன் …. இப்படி எல்லாம் யாரும் இருப்பதற்கான ஆதாரமோ, தடயமோ இல்லையே தம்பி.\\ இந்த எல்லா ஈர வெங்காயத்தையும் நாங்க படிச்சிட்டு தான் வந்திருக்கோம் அண்ணா, அதனால அதுக்குள்ள இருக்கும் ஓட்டைகள் என்னன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும், உம்மைப் போல எதையுமே புரிந்துகொள்ளாமல் நாத்தீகக் கூட்டத்தில் சேர்ந்து விட்டு, அறிவியலைப் பற்றி எல்லாம் தெரிந்தது போல வெத்து வேட்டு விடும் கூமுட்டை நானல்ல.

  83. \\பெண்களுகளை அடிமையாக போக பொருளாக நினைக்ககிர மானங்கெட்ட மதவெறியனே, \\ பெரியார் மணியம்மையை கை கால் அமுக்கி விடுதல், மருந்து கொடுத்தல் சமைத்துப் போடுதல் போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தினாரே அது மட்டும் என்ன பெண்ணடிமை இல்லையா? பெண்ணை ஒரு வேலை செய்யும் எந்திரமாகப் பயன்படுத்துவது இல்லையா? பெண் சுதந்திரத்தைப் பற்றி பேசிய அவர் ஒரு பெண்ணை வேலைக்காரியாய் பாவித்தது ஏன்?
    \\நீ உன்னுடைய உண்மையான அடையாத்தை காட்டு ஏன் வேறு பெயரில் ஒளிந்து இருக்கிறாய்.\\ நீர் என்னமோ உமது சொந்தப் பெயர், புகைப் படம், ரே ஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், போன் நம்பர், மொபைல் நம்பர், அட்ரஸ் புரூப், பாஸ்போர்ட்டு லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் போட்டுவிட்டா மாதிரியும், நான் என்னமோ அனானியாகப் பதில் போடுவது போலவும் பேசுகிறீரே, முதலில் நீர் பல பெயர்களில் பதில் போடும் பேடித் தனத்தை நிறுத்துமைய்யா.

  84. பெரியாரின் புத்தகம் படிக்கும் போது அவரின் கொள்கை நினைவுக்கு வரும்.

    அதைப் போல அவரது படத்தை பார்க்கும் போதும், சிலைக்கு அருகில் செல்லும் போதும் அவரது நினைவு வரும்.

    அவருக்கு மாலை போடுவது அவரது கொள்கைக்கு, வாழ்க்கைக்கு தரப்படும posthumous honour என்பதை முன்பே சொல்லி இருக்கிறோம்.

    ஒருவரின் தந்தையின் போட்டோவை பார்த்தால் அவருக்கு அவர் தந்தையின் நினைவு வருகிறதல்லவா ?

    சிலைக்கு மரியாதை செய்யக் கூடாது என்று சில மார்க்கங்களில் கடவுளின் கட்டளையாக சொல்லப் பட்டு இருப்பதால், ஐயோ இவனுங்க சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்யுரானுகளே, என சகித்துக் கொள்ள முடியாமல் பலர் ஆவேசப் படுகிறார்கள்.

    மத வெறி சகிப்புத் தன்மையை அழிக்கிறது என்பது மக்கள் அறிந்ததே. இந்தளவுக்கு சகிப்புத் தன்மையை இழந்தவர்கள் தங்களிடம் அதிகாரம் , வலிமை கிடைக்குமானால் எல்லா சிலைகளையும் உடைத்து எறிந்து தங்கள் வெறியைத் தீர்த்துக் கொள்ளும் நிகழ்வையும் வரலாறு கண்டிருக்கிறது. அப்படி சிலைகளை உடைக்கவேண்டாம் என்று யாரவது தடுக்க, எதிர்க்க முயன்றால் அவன் கதியும் அதோகதி ஆகும் அளவுக்கு மத வெறி தீராத ஸ்டாக்காக பலரிடம் உள்ளது.

  85. \\அதைப் போல அவரது படத்தை பார்க்கும் போதும், சிலைக்கு அருகில் செல்லும் போதும் அவரது நினைவு வரும். அவருக்கு மாலை போடுவது அவரது கொள்கைக்கு, வாழ்க்கைக்கு தரப்படும posthumous honour என்பதை முன்பே சொல்லி இருக்கிறோம். ஒருவரின் தந்தையின் போட்டோவை பார்த்தால் அவருக்கு அவர் தந்தையின் நினைவு வருகிறதல்லவா ?\\ இது உணர்வுப் பூர்வமான பதில், விஞ்ஞானப் பூர்வமான பதில் இல்லை. இந்த மாதிரி காரணமெல்லாம் சாதாரணமானவர்கள் கூறுபவை. நீங்கள் பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்பவர்கள். ஒரு கற்சிலையை பார்த்தால், அது வெறும் கல்லுதான் என்பதை பகுத்தறிந்தவர்கள். ஒரு மனிதர் வந்தால் அவருக்கு மாலை போட்டால், அது அவருக்குச் செய்த மரியாதையாகும். அவர் செத்த பின்பு, மாலையைத் தூகிக் கொண்டுபோய் சிலையின் மேல் போட்டால் அதெப்படி அவரை மரியாதை செய்ததாகும்? அடுத்தபடியாக, பெரியாரின் கொள்கைகள் வெறும் நினைப்பதற்கு மட்டும்தானா என்று உங்களைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது. பெரியாரின் முக்கிய கொள்கைகளில் ஒன்று மது விலக்கு. கள் இறக்குவதை கடுமையாக எதிர்த்து தனது தோட்டத்தில் இருந்த ஐநூறு தென்னை மரங்களை வெட்டிப் போட்டார். அவரது வழியில் நடந்த உமது நாத்திக ஆட்சியில் மது விற்றீர்களே இதுதான் நீங்கள் பெரியாரின் கொள்கைகளை மதித்த லட்சணமா? குடி குடியைக் கெடுக்கும் என்று தெரிந்திருந்தும் குடியை விற்றீர்களே, இதுதான் உங்களது சமூக சிந்தனையா? அந்த ஆட்சிக்கு வீரமணி சொம்படித்தது நியாயமா? பெரியாருக்கு ஒரு போதும் பதவி ஆசை இருந்ததில்லை, தனக்குப் பின்னர் தனது சொந்தக் காரனே கழகத்தை நடத்த நினைத்ததில்லை. அவர் வாரிசுகள் என்று சொல்லும் வீரமணி இன்றைக்கு தனது மகனை அந்த இயக்கத்தின் தலைவனாக்கி அதன் சொத்துக்களை அனுபவிக்க வேண்டும் என்று கருனாநித்டி மாதிரியே வாரிசு அரசியல் பண்ணத் துடிக்கிறாரே, இதுதான் நீங்கள் பெரியார் கொள்கையை நினைத்துக் கொள்ளும் லட்சணமா? கொள்கை கொள்கை என்று வாயளவில் சொன்னால் மட்டும் போதாது, அதைப் பின்பற்றவும் வேண்டும், அது உங்கள் யாரிடமும் இல்லை, போலிச் சாமியார்கள் பணம் பண்ண காவி உடை போட்டுக் கொண்டு மதத்தின் போதனைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு பெண்களுடன் கூத்தடிப்பது போன்ற தில்லுமுல்லு செய்வான், அதையே நீங்கள் பெரியார் சாமியை வைத்துக் கொண்டு, கருப்பு உடை போட்டுக் கொண்டு, அவரது கொள்கைகள் எல்லாவற்றையும் பறக்க விட்டு விட்டு பணம் ஒன்றையே குறிக்கோளாக அலைகிறீர்கள். என்ன வித்தியாசம்?

  86. \\சிலைக்கு மரியாதை செய்யக் கூடாது என்று சில மார்க்கங்களில் கடவுளின் கட்டளையாக சொல்லப் பட்டு இருப்பதால், ஐயோ இவனுங்க சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்யுரானுகளே, என சகித்துக் கொள்ள முடியாமல் பலர் ஆவேசப் படுகிறார்கள். \\ இந்த மாதிரி சொல்லும் நீர் நாத்தீகன் என்று சொல்லிக் கொள்ள லாயக்கற்றவர், பேசாமல் ஏதாவது ஒரு மடத்தில் சேர்ந்துகொண்டு பஜனை செய்யும்.

  87. பகுத்தறிவு எது, நாத்தீகம் எது என்பது எல்லாம் எங்களுக்கு தெரியும், எங்களிடம் வந்து ஜல்லி அடிக்க வேண்டாம், பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது பகுத்தறிவுக்கு மாறானதல்ல என்பதை பல பின்னூட்டங்களில் தெளிவாக விளக்கி இருக்கிறோம்.

    பெரியார் சிலைக்கு மரியாதை செய்யக் கூடாது என்று நீங்கள் துடிக்கும் துடிப்பும் , குமறும் ஆவேசமும், அடேயப்பா….. கொஞ்சம் அசந்தால் பெரியார் சிலைக்கு மாலை போடுபவனுக்கு தண்டனை தருவீர்கள் போல் இருக்கிறதே! இது தமிழ் நாடா … இல்லை ஜெருசலேம் என நினைத்தீர்களா?

    பகுத்தறிவுவாதி என்றால், எல்லா மூட நம்பிக்கைகளையும் எதிர்ப்பவன் என்றுதான் அர்த்தம்- சிலைக்கு மரியாதை போட்டால் அது கடவுளுக்கு எதிரானது என்று நினைக்கும் மூட நம்பிக்கை உட்பட.

    பகுத்தறிவு வாதி என்றால், நாத்தீகன் என்றால் இந்து மதத்தின் மூட நம்பிக்கைகளை மட்டும் கண்டித்து விட்டு, பிற மார்க்களின் மூட நம்பிக்கைகளுக்கு வால் பிடிப்பவன் என நினைத்தீர்களா?

    சிலை வணக்கம் செய்யாதே என்று கட்டளை போட்டு அடாவடி செய்யும் மத வெறி அராஜகத்தை எதிர்க்கும் விதமாக, எனது வீட்டுக்கு அருகில் உள்ள சிறுவர்களையும் இந்த முறை பெரியார் சிலைக்கு மாலை இட அழைத்து சென்று அவர் கையில் ஒரு மாலையைக் கொடுத்து மாலையிட வைப்பேன்.

    தெருவுக்கு தெரு, பெரியார் சிலைகள் வைப்போம், மரியாதையும் செய்வோம். நீங்கள் சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். பிறர் உங்கள் மதக் கட்டளைகளுக்கு எதிராக செயல் படுகிறார்களே என ஆவேசப் படக் கூடாது.

  88. \\பகுத்தறிவு வாதி என்றால், நாத்தீகன் என்றால் இந்து மதத்தின் மூட நம்பிக்கைகளை மட்டும் கண்டித்து விட்டு, பிற மார்க்களின் மூட நம்பிக்கைகளுக்கு வால் பிடிப்பவன் என நினைத்தீர்களா?\\ அதோடு நாத்தீகர்களிடம் உள்ள மூட நம்பிக்கைகளையும் கண்டிக்கலாமே? ஊர்ல ஒருத்தன் சிலை வச்சி கும்பிட்டா அது மூட நம்பிக்கை அதையே நீங்க செஞ்சா அது பகுத்தறிவு- எந்த ஊரு நியாயம் இது? முட்டாள்தனம், மூட நம்பிக்கை என்று மற்றவர்களைச் சாடும் அதே செயல்களை, பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்ளும் கோஷ்டியும் செய்கிறதே என்பது தான் இங்கு கேள்வி.

    \\சிலை வணக்கம் செய்யாதே என்று கட்டளை போட்டு அடாவடி செய்யும் மத வெறி அராஜகத்தை எதிர்க்கும் விதமாக, எனது வீட்டுக்கு அருகில் உள்ள சிறுவர்களையும் இந்த முறை பெரியார் சிலைக்கு மாலை இட அழைத்து சென்று அவர் கையில் ஒரு மாலையைக் கொடுத்து மாலையிட வைப்பேன்.\\

    விளங்கிடும்.

    \\தெருவுக்கு தெரு, பெரியார் சிலைகள் வைப்போம், மரியாதையும் செய்வோம். நீங்கள் சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். பிறர் உங்கள் மதக் கட்டளைகளுக்கு எதிராக செயல் படுகிறார்களே என ஆவேசப் படக் கூடாது.\\

    பிற மத கட்டளைகள் இங்கே எங்கே வந்தது, நீர் எதை மூட நம்பிக்கை என்று எதைச் சொல்கிறீரோ அதனை நீரே செய்கிறீர், அதற்க்கு நியாயம் கர்ப்பிக்கிறீர். கற்சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்கிறாயே, நீ முட்டாள் என்று சொல்லும் போது, நீர் வைக்கும் கர்ச்சிலையில் அந்த ஆள் வந்து உட்கார்ந்து கொண்டு நீர் செய்யும் மாலை மரியாதையை ஏற்றுக் கொள்வாரா? இது பகுத்தறிவா? இதற்க்கு உமக்கு காரணம் இருக்கிறதென்றால் கோவிலில் சிலையை வழிபடுவதில் என்ன தப்பு? பெரியாரின் சிலைக்கு மாலை போட்ட நீங்கள் அவரது கொள்கைகளை வாழ்க்கையில் தப்பாமல் பின்பற்றுகிறோம் என்று சொல்ல முடியுமா? சிலைக்கு மாலை போட்டு விட்டு அவர் கொள்கைகளை குழி தோண்டி புதைத்துவிட்டு அதற்க்கு மலர் வளையம் அல்லவா வைக்கிறீர்?

  89. திருச்சிக்காரரே K.Jayadev Das இவன் ஒரு முஸ்லீம் மதவெறியன் . வேண்டுமென்றெ கிருத்துவ பெயரில் வந்து எழுதுகிறான். அவனிடம் எதற்கு தேவையில்லாமல் விவாதிக்கிறீர்கள். எதற்கும் அவனிடம் பதில் கிடையாது. அதற்க்கு பதல் எல்லோரையும் கேவலமாக திட்டுவான். இந்த முட்டாளிடம் எதற்கு விவாதம்.

  90. ஒரு இயக்கத்தில் சேருவது, கொடி பிடிப்பது, அந்த இயக்கத்தின் தலைவனுக்கு பல்லக்கு தூக்குவது இதற்கெல்லாம் முன்பாக, அந்த இயக்கத்தின் கொள்கைகள் என்ன, அவை சரியானவையா, அதைத்தான் அதன் தலைவர்கள் பின்பற்றுகிறார்களா என்றெல்லாம் கொஞ்சம் கூட சிந்திக்காமல், முட்டாள் தனமாகச் சேர்ந்துவிட்டு, உங்கள் ஏமாளித்தனத்தை சுட்டிக் காட்டுபவரை ஒருமையில் பேசுவது, திட்டுவது போன்ற கீழ்த் தரமான வேலைகளில் ஈடுபடுவது சரிதானா என்று நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். உண்மையின் பக்கம் இருந்தால் உங்களால் எளிதில் யாரையும் வெல்ல முடியும், நீங்கள் அநியாயத்தின் பக்கம் இருக்கிறீர்கள், உங்களால் சாதாரண கேள்விக்குக் கூட பதில் சொல்ல முடியாது. இது உங்கள் இளிச்சவாய்த் தனமாகஇருக்கலாம் அல்லது நீங்கள் கூமுட்டைகள் ஆக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏன் என்று தீர விசாரித்து, கண்ணால் பார்த்துதான் ஒப்புக் கொள்வோம் என்று இப்படி போலிச் சாமியாருக்கு நிகரான பிராடுகள் கையில் உங்களை மாதிரி பலியாடுகள் சிக்கியிருப்பது துரதிர்ஷ்டம்.

  91. இரு தரப்பாரும் உணர்ச்சி வசப்படாமல், தலைப்பை ஒட்டியே விவாதித்திருந்தால் நல்ல பயன் கிடைட்த்திருக்கும்.
    தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதும், விவாதப் பொருளைப் புறக்கணித்ததும் விரும்பத் தகாதவை.

  92. Does God Exist? Proof of the Existence of God
    Posted on September 12, 2008 by A Nizami
    Believe in God is the most important thing in faith. If someone does not believe that God exists then he is in deep astray.
    Does God exist? We have never seen God. We have never talked with God. That is why the Atheists believe God does not exist. It is just a fantasy or a made up thing!
    The Story of a Scholar and an Atheist
    There is one story of a Scholar and an Atheist. Long ago an Atheist did not believe the existence of God. He asked a scholar for a debate about the existence of God. Among the questions are: “Does God exist?” and “If God exists then where is God?”
    Then they decided when and where the debate takes place.
    The Atheist and the villagers were waiting for the scholar, but the scholar did not come right on time. When the Atheist and the villagers thought that the scholar will not come for the debate, then the scholar showed up.
    “I am sorry to keep you waiting for so long. But the rain is so heavy so the river floods. The bridge drifted away so I could not cross it. Thank God suddenly there was a big tree fell down. Then the branches cut out by themselves so the trunk was branchless. After that the trunk was cut and a hole was created so it became a boat. So I used the boat and crossed the river,” said the scholar.
    The Atheist and the villagers were laughing. The Atheist said to the villagers, “This scholar is mad. How can a tree became a boat by itself with no one made it? How can a boat exist with no maker who made it?”
    The villagers were laughing out loud.
    After the people calmed down, the scholar said, “If you believe that the boat could not exist without its maker, then how could you believe the earth, sky, and its contents exist without its creator? Which is the most difficult to make? Making a boat or creating the earth, sky, and its contents?
    Hearing that, they realized that they trapped with their own statement.
    “Then answer my second question,” said the Atheist. “If God exists, why can’t He be seen? Where is God?” The Atheist thought since he cannot see God then God does not exist.
    The scholar slapped the Atheist’s cheek hardly so the Atheist felt so much pain.
    “Why did you slap me? It’s very painful”
    The scholar asked, “There is no pain. I cannot see pain. Where is pain?”
    “The pain is here,” the Atheist pointed his cheek.
    “No, I cannot see pain. Do you see the pain?” asked the scholar to the villagers.
    The villagers said, “No!”
    “So, though we cannot see the pain does not mean that the pain does not exist. So is the God. Just because we cannot see the God does not mean that God does not exist. Though we cannot see Him, but we can see His creations.” Said the scholar.
    The argument of the scholar is very simple. Yet, the argument that God does not exist just because human’s sense could not sense the existence of God is very wrong.
    How many things that could not be seen or heard by people but exist?
    We cannot see the Wind but the Wind exists. We cannot see electricity (what you can see is wire) but electricity exist.
    How many things in the sky that billions light years away, even trillions light years away that could not be seen by people yet the things exist?
    How many molecular things even nucleus (hair divided in millions) that cannot be seen by people yet exist? People could only see those things by using a very powerful microscope.
    How many waves (radio, electromagnetic, electricity, etc) that cannot be seen yet exist?
    Those things exist, yet the human sense is very limited so it cannot sense their existence.
    The human ability to see colors limited to certain frequencies. People only could hear limited frequencies. Sometimes the light not only very dazzling but also could make people blind. So is the sound. Certain sound could not be heard by human sense while other sound which is very loud could destroy human‘s hearing.
    If to sense the creatures of God, sometimes people could not do it, even more to sense the Creator: God!
    The Universe, Who is its Creator?
    It is hard to proof that God exists. But if we take a look to the planes, cars, TVs, etc, it would be irrational if we say that all exist by themselves. There must be people who make them!
    If the simple thing such as the match has its makers, then the universe that far more complex than that must be has its creator.
    The Earth where 8 billion people live has circumference 40,000 km. The circumference of the Sun is 4.3 million km. The Sun and its 8 planets along with 100 billion stars are in the Milky Way galaxy whose length is 100,000 light years away.
    Milky Way is only a galaxy among thousands galaxies that form a Cluster. This cluster with thousands clusters form 1 Super Cluster. And thousands of Super Clusters form the Universe whose length is 30 billion light years away! Remember, the number 30 billion light years away only current estimation since the strongest telescope today only could reach 15 billion light years away.
    Imagine if the distance between Earth and the Sun is 150 million km and passed by the light in just 8 minute, then the whole Universe passed by the light in 30 billion years. That is equal to 285 billion trillion km away. If a man could run 40 km/hour without stopping, he would pass the distance in 810,000 trillion years!
    That is the greatness of Allah’s creation! If we believe in the magnificence of Allah’s creation, then we should believe in the magnificence of Allah.
    In the Quran Allah explains that He is the creator of Heaven, Star, Sun, Moon, and others:
    “Blessed be He Who hath placed in the heaven mansions of the stars, and hath placed therein a great lamp and a moon giving light!” [Quran 25:61]
    Is there a Controller of the Universe?
    There are millions of people controlling the traffic on road, sea, and air. Beacons are built. People also build traffic light and radar. Air Traffic Control is built to prevent accident. All vehicles have drivers. Even on airplane there are pilot and co-pilot to make the flight safer. On the ships there are Captain, navigator, and engineers. Yet thousands of accidents happen every year on land, sea, and air. Even though there are many controllers, the accidents still happen.
    On the contrary, the Earth, Sun, Moon, Stars, and others always revolve for billions of years without single crash. Most scientists believe that the Earth, Sun, and all of the other planets and moons in the solar system formed about 4.6 billion years ago. For billions of years until now the Earth never bump into the Sun, and the Sun never collides with the Moon. There is no mark, police, nor pilots to drive them. Without God, the Controller of the Universe, none of these would happen. Everything is in order because there is God who controls everything. Allah has put orbit for each of those things. If we really think about it then we will know that God exist.
    “He it is who appointed the sun a splendor and the moon stages, that ye might know the number of the years, and the reckoning. Allah created not (all) that save in truth. He detaileth the revelations for people who have knowledge” [Quran 10:5]
    “It is not for the sun to overtake the moon, nor doth the night outstrip the day. They float each in an orbit” [Quran:40]
    .
    People who think a lot about universe insha Allah will believe that there is a God!
    “Allah it is who raised up the heavens without visible supports, then mounted the Throne, and compelled the sun and the moon to be of service, each runneth unto an appointed term; He ordereth the course; He detaileth the revelations, that haply ye may be certain of the meeting with your Lord.” [Quran 13:2]
    “Such as remember Allah, standing, sitting, and reclining, and consider the creation of the heavens and the earth, (and say): Our Lord! Thou createdst not this in vain. Glory be to Thee! Preserve us from the doom of Fire” [Quran 3:191]
    Who is the Creator of People and Plants?
    To those arrogant people who deny the existence of God, Allah questions them about His creatures. Who is the creator of sperm and plant? People or God the All Wise Creator?
    “Have ye seen that which ye emit?
    Do ye create it or are We the creator?” [Quran 56:58-59]
    “Have ye seen that which ye cultivate?
    Is it ye who foster it, or are We the Fosterer?” [Quran 56:63-64]
    “Was it ye who made the tree thereof to grow, or were We the grower?” [Quran 56:72]
    Can Men Create a Fly?
    In another verse, Allah challenges others to create a fly if they could do it. Men may be could make robots from things that created by Allah. Yet, none could make a fly from nothing nor thing that could reproduce except Allah:
    “…Lo! Those on whom ye call beside Allah will never create a fly though they combine together for the purpose. And if the fly took something from them, they could not rescue it from him. So weak are (both) the seeker and the sought!” [Quran 22:73]
    There are many other Quran verses that describe the existence of God and God is the All Wise Creator.

  93. //கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள். கடவுள் உங்கள் முன்பு வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?//

    “இருக்கிறார் என்று ஒத்துக்கொண்டு என் வேலைய பார்த்துட்டு போறேன்” – பெரியாரின் பதிலாக திரு.சு.ப.வீ சொன்னது…..

    🙂 இதைவிட ஒரு தலைவர் practicala-ஆக இருக்க முடியுமா என்று வியப்பாக இருக்கிறது…..

  94. கடவுள் ஒத்து கொண்டு விட்டாராம் பெரியாரிஸ்ட் முன்னால் எப்போதும் வரமாட்டாராம் அவருக்கு நஷ்டமில்லை

Leave a Reply

%d bloggers like this: