அணு உலை பாதுகாப்பானது; அந்த அய்யப்பனே நம்ப மாட்டான்!

‘கரண்ட்’ என்றால் ‘ஷாக்’கடிக்கும்; அணுமின் நிலையம் ஏன் மூச்சடைக்குது?

கூடங்குளம் அணுமின் நிலைத்திற்கு எதிரான போராட்டம் தேவையா? இப்போதே நம் நாடு மின்சார பற்றாக்குறையால் தவிக்கிறது. அணுமின் நிலையங்களையும் மூடி விட்டால் நம் நாட்டின் வளர்ச்சி அதோ கதியாகிவிடாதா?

 -விஜய ராஜன், சென்னை.

அரசு மக்களுக்கான மின்சாரத்தை பிடிங்கி மல்டி நேஷன் கம்பெனிகளுக்கு தரை வார்ப்பதினால்தான் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

அணு மின்நிலையங்களில் கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்தாலும் அது மக்களின் பயன்பாட்டுக்கு பெரிய அளவில் வரப்போவதில்லை. மல்டி நேஷன் கம்பெனிகளுக்கதான்.

நீர், நிலக்கரி போன்றவைகளில் இருந்து தயாரிக்கப்படுகிற மின்சாரமே பாதுகாப்பானது. நமக்கு போதுமானது. அந்த மினசாரத்தை தனியாருக்கு தாரை வார்க்காமல், மக்களின் பயன்பாட்டுக்கு பயன்படுத்தினாலே மின்சார பாற்றக்குறை நீங்கும்.

இந்திய விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்து, அன்னிய கம்பெனிகளுக்கு மலிவு விலையில் மின்சாரத்தை தருகிறது தேசப்பற்று மிக்க இந்த அரசு.

அணுமின் நிலையங்களால் மக்களுக்கு மிக கொடுமையான கதிர்வீச்சையும், அன்னிய கம்பெனிகளுக்கு மினசாரத்தையும் தருவதுதான் அரசின் நோக்கம்.

அது மட்டுமல்லாமல், அறிவியலில் வளர்ந்த, அணுமின் நிலையங்களால் ஆபத்து இல்லை என்று நீட்டிய முழங்கிய பல நாடுகள், அணுமின் நிலையங்களின் ஆபத்தை அனுபவித்து, உணர்ந்து பாதுகாப்பு கருதி மூடிவிட்டன.

ஆபத்து என்றால், அய்யப்ப சாமிக்கு மாலை போடுகிற நம்ம நாட்ல, அணு உலை விபத்தை தடுக்க என்ன பாதுகாப்பு வழி முறைகள் இருக்கு?

அவ்வளவு ஏன்? அய்யப்பன் கோயில் நெரிசலில் சிக்கி சாவுகிற மக்களை பாதுக்காக்க முடியாத இந்த அரசுகள், அணு உலை ஆபத்திலிருந்து நம்மை பாதுகாக்கும் என்பதை அந்த அய்யப்பனே நம்ப மாட்டான்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் அக்டோபர் மாத இதழ்களுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.


16 thoughts on “அணு உலை பாதுகாப்பானது; அந்த அய்யப்பனே நம்ப மாட்டான்!

  1. வண்ணகம் நண்பர் வே . மதிமாறன்,

    அணு உலை விஷயம் அரசு வேலை இந்த விஷயத்தில் ஏன் ஐயப்பன்? (அல்லாவும் / ஏசுபிரான் தடுத்துவிட வேண்டியதுதானே)

    அரசு விஷயத்திலும் மற்றவரது நம்பிக்கை இழுக்காமல் உங்களால் ஒரு விஷயம் எழுத முடியாத?

    என்ன மற்ற மதத்தினர் அவ்வளவு கவனிப்பா? தேவை என்றல் காசு குடுத்தவர்கள் நாட்டில் சென்று பிழைத்ததுகொள்ளவேண்டியது தானே

    உங்கள் குறிகிய பார்வை பார்த்தல் நீங்களும் வருநாள் கருணாநிதி ஆகி 70 தலைமுறைக்கு பணம் சேர்க்க பாடுபடுவது நன்றாக தெரிகிறது.

    (ஏன் உங்கள் உயிர் தலைவர் கருணாநிதி காலத்தில் தடை செய்யவில்லை)

  2. ஷேக் மொய்தீன் மிக காசுகுடுத்து வாழும் மதி(இல்லா)மாறன்

  3. Paathukaappaana Anu Ulai entru ethuvum kidaiyaathu.Miga sariyaana pathil, thoduram ungal panikku mikka nantry.

  4. “ஆபத்து என்றால், அய்யப்ப சாமிக்கு மாலை போடுகிற நம்ம நாட்ல, அணு உலை விபத்தை தடுக்க என்ன பாதுகாப்பு வழி முறைகள் இருக்கு?” …எல்லா நாடுகளிலும் கடவுளை நம்புகிறவர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். குறிப்பிட்டவர்களை சாடுவது நியாயமில்லை.

  5. அய்யப்பன் ஹோமோ செக்சுல பொறந்தான்னு சொல்ற கதைய அப்படியே நம்புற அறிவு ஆஃப் ஆனவங்ககிட்ட எதைச் சொல்லி என்னத்த புரிய வைக்க முடியும்!

  6. Dear Mathimaran,
    Are you a nuclear scientist, do you know anything about nuclear reactor.Search about countries using nuclear reactors for producing energy.
    you have stated that all energy is supplied to MNC without these factory no one will get jobs.
    Stop writing this kind of bullshit blog.

    Thanks and regards
    Thamizh

  7. tamizhaga minavan kollapadum pothuthum, bhopal sampavathillum than indiavin pathukappu narukkirethe. piragu yen pathukappu yene vai kizhi pesukirargal endre puriyavillai thozhar.

  8. uakkal karurtthu uanmai yanavai makkalin pathukappai parri pesinal athilum mathanthaiyum saathiyaiuam kontuvarum mutarkal irukkum nattil pirathathirku varuttha patukiren

  9. என்ன சொல்ல வரீங்க. MNC-க்கள் மின்சாரத்தை என்ன பண்ண போகிறார்கள். எண்ணற்ற தமிழ் மக்கள் இப்போது காஞ்சி குடிப்பது இப்போது MNC -க்களால் தான். அங்கே எல்லாம் தோழர்கள் யூனியன் இல்லையா. 100 பேருக்கு வேலை கொடுப்பவன் யாராக இருந்தாலும், நூறு குடும்பத்தை வாழ வைப்பவன். அவர்கள் ஒன்றும் பக்கெட்டில் போட்டு கரண்டை அவர்கள் நாட்டுக்கு கொண்டு போவது இல்லை. அணு மின்சாரம் நிச்சயமாக இந்தியாவுக்கு நல்லது தான் செய்யும். சுனாமி வந்து போனது. கல்பாக்கம் என்ன கரைந்து பொய் விட்டதா. உங்கள் வாதப்படி, இப்போது கல்பாக்கமும் மூட பட வேண்டியது தான். அதோடு சென்னை மாநகரத்தையும் மூட வேண்டியது தான். வெட்டி பேச்சுக்கு ஒரு வெப்சைட்.

  10. MNC-க்களில் வேலை செய்யும் அனைவரையும் வேலையே விட சொல்லுங்கள். விவசாயம் பார்க்க சொல்லுங்கள். உணவு பண்ட விலையாவது குறையட்டும். எத்தனை பேர் உங்கள் வாக்கை ஏற்பார்கள். அணு உலை ஆபத்தானதா ! அதனால் தான் பிரான்ஸ் நாட்டில் 80 % மின்சாரம் அணு மின்சாரத்தால் உற்பத்தி ஆகிறதா. சர்ச் சொல்கிற வாதத்தை முன் வைப்பவர் தான் நீங்கள் என்று மக்கள் இப்போது புரிந்து கொள்வார்கள். எப்போது கல்பாக்கதையும், சென்னைக்கும் சீல் வைக்க கிளம்புவீர்கள். வெட்டி பயலே.

  11. சர்ச்சுக்கு நீ ஒரு ஜிங்குச்சா, உனக்கு ஒரு பத்து பேரு ஜிங்குச்சா. நல்ல இருக்குதுங்க. நாட்டை ஒழிக்க திட்டம் போடுவீங்களோ

  12. Ram avarkale mathimaran ezhuthum ellaa katuraikalai padithu vitu athai bedipathey ungal miga periya pozhupu aagivitathu polum..endha katuraiyai padithalum ungal bathil irukurathu..pidikavillai endral moodi kongu poga vendiyathu thaana…
    mathimaaram avargaley…. ungal pathivil enaku therintha karuthu’ anu ulayal baathipu yerpadathu endru namma arusum sollump pothu nambugiravargalum ayyapanai nambigiravaralum mooda nambikai udayavargal’ endru purigirathu….
    matrum oru nambar sonnaar…pidikavillai endru vera ooruku poga vendiyathu thaaney endru…indha ooril irundhu kaasukaga pancham pizhaika pogum matha elaarum thamizhaiyum indha mathangalaiyum vaazha veikiraargala enna.. angu indhiya peyarai kedukum moorkargal neengal kutram saatum andha saamigalai vazhipadubavargal thaan…andha avalathai poi paarka sollum….
    vidumaiya..neengal enna azhuthinaalum..indha ooril jaathi veri matham veri pidithu alaiyum indha moorkargal ipadi thaam pesuvaargal..
    ungalin oru nermai enaku pidithathu..ungaluku ethiraka karuthu solbavargal comment yum serthu poduvathu….

  13. anu ulai aabatthu than anal athu abatthu erpadutthakkoodiyathu endru ippoluthan therihiratha…….?14 ayiram kodi selavu seithu athai kattiya pirahu poradum nam makkal aalai katta arambikkum pothe ithu vendam ithu aabatthanathu endru poradi irukkalame…!panamavathu minchi irukkum…….koodangulatthil kattiyahu mattum than anu ulai ya …?kalpakkatthil iruppathu enne arisi alaya…!ithu abatthanathu endral athvum abatthanathu thane………..think it………

  14. mr.ram sir unga veetukuku pakkathula anu ulai open pannuna ungaluku epdi irukkum? konjam think panni parunga sir… valarntha naadukale close panna pora nerathula namma naatula open panna porangalam….. super…

Leave a Reply

%d