மலையாள விஜயும் தமிழ் மோகன்லாலும்
தமிழ் திரைப்படங்களில் வெற்றி பெற்று பெரிய நடிகராக ஆகி இருந்தால், மோகன்லால் மலையாள சினிமாவில் தமிழர்களுக்கு எதிரான காட்சி வைத்திருக்க மாட்டார் என்ற உங்கள் கூற்று எப்படி சரி?
-தமிழன், சென்னை.
தமிழ் உணர்வு பொங்கி வழியும் நமது பச்சைத் தமிழன் விஜய், கேரளாவில் மலையாளிகளிடம் செல்வாக்கு பெற்றவர் என்பதினால் முல்லை பெரியாறில் அமைதி காத்தாரே அதுபோல்.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
மோகன்லாலும் முல்லைப் பெரியாறும் தமிழ் சினிமா வீரர்களும் ராஜபக்சேவும்
ஆர்யாவின் திறமையான இன உணர்வும் – சரத்குமார், குகநாதனின் சலசலப்பும்
‘தமிழனா? மலையாளியா?’; சி.பி.எம் இனவாதம்
முல்லைப் பெரியாறு, காவிரி: ஜாதி தமிழன் பிரச்சினையா? (எழுத்தாளர் சுஜாதா பாதுகாப்பாகத்தான் இருந்தார்)
சரியாக சொன்னீர்கள் மதிமாறன் அவர்களே அதாவது மலையாள நகை கடை விளம்பரங்களில் இப்போது தலை காட்டி வரும் திரு இளையராஜாவை போல. அதனால் தான் அவரும் முல்லை பெரியார் விஷயத்தில் அமைதி காத்தாரோ? உங்கள் இளையராஜா செய்தால் அதை விமர்சிக்க மனம் வராது. இத்தனைக்கும் விஜயை விட இளையாராஜா பல விதங்களில் ‘உயர்ந்தவர்’. மனசாட்சி யோடு பேசுங்கள்.
Periyar fight for dalits also, this Ilayaraja not accept to compose music for “Periyar’ flim,now he did a music for flim “Ramarajiyam”…..why?
“மித வாதியாக செயல்பட்டு – இசை உலகின் உச்சிக்கு சென்றதில் மகிழ்ச்சியடையும் மக்கள் வாழ்க்கையில் முன்னேற ஏதேனும் செய்தால் சரி தானே!” ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும் அதானே அவர் என்ன தீவிர கொள்கை பிடிப்பு கொண்ட பெரியாரா/அண்ணாதுரையா/ காமராசரா/ கருணாநிதியா../ நாவலரா..?