செல்போனில் பெண்கள்….

சாலைகளில் அலுவலகங்களில் இதுபோன்ற பொது இடங்களில் செல்போனில் பேசிக் கொண்டு இருப்பதில் பெண்களே அதிகமாக இருக்கிறார்களே ஏன்?

-க. முத்து, சென்னை.

மிகப் பெரும்பாலும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு செல்போன்,

வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது போட்டுக் கொண்டு போவதும், வீட்டுக்குள் வரும்போது வாசலிலேயே கழட்டி விடுவதுமாக இருக்கிற காலணியை போல்தான் பயன்படுகிறது.

வெளியில் செல்லுமபோது, செல்போனை சுவிட்ச் ஆன் செய்து கொள்வதும், வீட்டுக்குள் வந்த பிறகு சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிட வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு நேருகிறது.

வீட்டுக்குள் அதிக நேரம் செல்போனில் பேசுவதற்கு பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதே அதற்குக் காரணம்.

அலுகவலகம் சார்ந்தோ, நண்பர்களிடமிருந்தோ அடிக்கடி போன் வந்தாலோ, பேசினாலோ – கணவனோ, தந்தையோ, சகோதரனோ அவர்களை சந்தேகிப்பார்கள். கண்டிப்பார்கள் என்பதும் ஒரு முக்கிய காரணம்.

அதனால்தான் பெண்கள் அதிகமாக பொது இடங்களில் செல்போனில் பேசுகிறார்கள்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 அக்டோபர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

சானிடரி நாப்கின்; நமது கருத்தும், அதிமுக அரசின் திட்டமும்

இலவச சானிடரி நாப்கின் திட்டம்: இந்தியாவிலேயே முதன்முறையாக

பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

ஈவ்டீசிங்

பாலியல் தொழிலா? விபச்சாரமா?

பாலியல் முதலாளி

கடலை மன்னர்களின் உருவ வழிபாடு

பொண்டாட்டிய நம்பறவனுக்கு பேர்தான் புருசன்..

பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

..அப்போ அத ‘நீங்க’ செய்ய வேண்டியதுதானே?

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

ஜொள்ளு காழ்ப்புணர்ச்சி-தகுதி திறமை

6 thoughts on “செல்போனில் பெண்கள்….

Leave a Reply

%d bloggers like this: