‘ஜனாதிபதி முன்பு, துணைவேந்தரை செருப்பாலடித்த மாணவர்கள்..’ வரலாற்று நிகழ்வு

1525670_10202217936422721_1433482175_n

“சர் சி.பி.இராமசாமி அய்யர், அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தராக வந்த உடனேயே அவரது அணுகுமுறை, பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதர் என்ற வித்தியாசம் எல்லா மட்டத்திலேயும் அதிகமாக வந்துவிட்டது. அப்போது அங்கே தி.க மாணவர் யூனியன் இருந்தது. அந்தச் சூழலில் அதிலேயே பதினாலு பேர் ஒரு செட் சேர்ந்தோம்.

அந்த சமயத்திலே கான்வகேஷன் – பட்டமளிப்பு வந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி பாபு ராஜேந்திரப்பிரசாத் வருகிறார். அப்போது நல்ல கூட்டம் வரும். அந்த கான்வகேஷன் அன்னிக்கு சர் சி.பி. இராமசாமியை செருப்பாலடிப்பது என்று எங்கள் செட்டில் முடிவுசெய்கிறோம்.

பட்டமளிப்பு விழா நடக்கப்போவது சாஸ்திரிஹாலில், பார்வையாளர்களுக்கான பட்டியல் உண்டு. அதிலும் ஜனாதிபதி வருகின்றார். எல்லோரையும் உள்ளே விடமாட்டான். ஆகவே, நாங்கள் பின்பக்கத்து தண்ணீர் குழுாய் வழியாக மேலே மாடிக்குப்போய் அங்கிருந்து கீழே இறங்கினால் நேரே நிகழ்ச்சி நடக்கிற மேடைக்கு வந்திடலாம். நாங்கள் பதினாலு பேரும் அப்படிப் பொவதுன்னு பிளான் பண்ணி நிகழ்ச்சி அன்று அதுபோலவே மேடையில் இறங்கிட்டோம்.

ஜனாதிபதி உட்பட எல்லோரும் மேடையில் இருக்கிறார்கள். சர் சி.பி. வரவேற்பு நடத்திக் கொண்டு இருக்கிறார். அவரை சுற்றி வளைச்சோம். செருப்பால் அடித்தோம். திரும்பிப்போக வழியில்லை. அதனால் பார்வையாளர்கள் மத்தியிலே நடந்து வந்தோம். அவர்…”

‘ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் நினைவுகளும் நிகழ்வுகளும்’ என்ற நூலிலிருந்து…
தொகுப்பும் பதிவும் : பசு. கவுதமன்.

சென்னை புத்தகக் காட்சியில்…
இராஜேஸ்வரி புத்தக நிலையம்  : 1 – 2 – கருப்புப் பிரதிகள்  எண் : 287 – புதுப்புனல் 666 கடைகளில் கிடைக்கும்.

வெளியீடு : ரிவோல்ட் பதிப்பகம், சாக்கோட்டை, கும்பகோணம் – தொடர்புக்கு : 9884991001

தொடர்புடையவை:

இந்திய வரலாற்றை திருத்தி எழுதிய திரைப்படம்

தமிழர் திருநாள் விழா-புத்தக வெளியீட்டு விழா-விருதுகள் வழங்கும் விழா

சென்னை புத்தகக் காட்சியில்..

இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்

சுப்பிரமணிய சுவாமியும் ‘நவீன’ இலக்கிய சு. சுவாமிகளும்

4 thoughts on “‘ஜனாதிபதி முன்பு, துணைவேந்தரை செருப்பாலடித்த மாணவர்கள்..’ வரலாற்று நிகழ்வு

  1. “அந்த சமயத்திலே கான்வகேஷன் – பட்டமளிப்பு வந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி பாபு ராஜேந்திரப்பிரசாத் வருகிறார். அப்போது நல்ல கூட்டம் வரும். அந்த கான்வகேஷன் அன்னிக்கு சர் சி.பி. இராமசாமியை செருப்பாலடிப்பது என்று எங்கள் செட்டில் முடிவுசெய்கிறோம்.” —

    I’m surprised that these kind of cheap acts have been written as book with a matter of pride….I feeling like saying “Only God should save this country” ,,but cannot say so as I’m an atheist…

  2. மதியண்ணே ஆத்துல இன்னிக்கி பால்பாயச விருந்துதான் போங்கோ….

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading