சுரா: பெரியவங்க சொன்னா.. பெருமாள் சொன்னா மாதிரி..
omasundaram Rajabather //சுந்தர ராமசாமியினஅ சிறுகதை வரி ஒன்று: திருப்பிய பக்கங்களில் எல்லாம் பிழைகளின் அவமானம்//
‘பிழை’ அவமானமா?
குற்றம்தான் அவமானம்.
‘பிழை’ யை குழந்தைகள்தான் அதிகம் செய்வார்கள். அதற்காக குழந்தைகள் அவமானப்பட முடியுமா?
திட்டமிட்டு செய்யப் படுவதுதான் குற்றம். குற்றத்தை கிரிமனல்கள்தான் செய்வார்கள்.
‘திருப்பிய பக்கங்களில் எல்லாம் பிழைகளின் அவமானம்’ என்பதுதான் ‘பிழை’
‘திருப்பிய பக்கங்களில் எல்லாம் குற்றங்களின் அவமானம்’ என்பதே சரி.
ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்
face book ல் நடந்த விவாதம்
Ganeshan Ramachandran · 13 mutual friends
ஒரு பத்திரிக்கையாளனாக “இந்தப் பத்தியில் இவ்வளவு குற்றங்கள் செய்திருக்கிறாய்?” என்று உங்கள் உதவியாசிரியரிடம் நீங்கள் உரையாடுவதை கற்பனை செய்து பார்த்தேன், சிரிப்பை அடக்கமுடியவில்லை!
March 4 at 9:08am · Like · 1
வே மதிமாறன் இதை சாதாரணமாக ஒரு செய்தியளவில் மதிப்பிட வேண்டாம்.
தமிழின் மாபெரும் இலக்கியவாதி, தத்துவவாதி, சிந்தனையாளர் என்று போற்றப்படுகிற சுந்தர ராமசாமி‘யே’ இப்படி அபத்தமாக எழுதியது என்பதற்காக சுட்டிக் காட்டியுள்ளேன்.
March 4 at 9:35am · Edited · Like · 4
வே மதிமாறன் ‘திருப்பிய பக்கங்களில் எல்லாம் பிழைகளின் அவமானம்’ என்பதுதான் ‘பிழை’
March 4 at 9:39am · Like · 3
Ganeshan Ramachandran · 13 mutual friends
ஒரு விஷயத்தை புத்தகப் பக்கங்களோடு ஒப்பிடும் போது பிழை என்று தான் வரும் குற்றம் என்று எழுதினால் கத்துக்குட்டி என்று பொருள்
March 4 at 9:44am · Like
Ganeshan Ramachandran · 13 mutual friends
ஆங்கிலத்தில் எழுதினால் every page there was shame of mistakes என்றா அல்லது every page there was shame of sins என்றா எழுதுவீர்கள்?
March 4 at 9:55am · Like · 1
Ganeshan Ramachandran · 13 mutual friends
தங்களது புரிதலில் தவறு இருக்கலாம் என்பதை சுட்டிக் காட்டுவது தான் நோக்கமே தவிர இது திறமையின் மதிப்பீடோ அல்லது ஏளனமோ அல்ல. (சுந்தர ராமசாமி தவறே செய்திருக்க மாட்டார் என்பதும் கருத்தல்ல). தங்களது இலக்கிய மற்றும் அனைத்த்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள்
March 4 at 11:23am · Like
வே மதிமாறன் //ஒரு விஷயத்தை புத்தகப் பக்கங்களோடு ஒப்பிடும் போது பிழை என்று தான் வரும் குற்றம் என்று எழுதினால் கத்துக்குட்டி என்று பொருள்// இந்த விளக்கம்தான் கத்துக்குட்டித்தனமாக இருக்கிறது.
March 4 at 11:55am · Like · 1
வே மதிமாறன் Ganeshan Ramachandra வழக்கமாக நான் எழுதுகிற விசயங்களுக்கு மறுப்பாக நீங்கள் யாரை பாதுகாக்க நியாயப்படுத்த முற்சிக்கிறீ்கள் என்பதிலேயே உங்கள் ‘அரசியலை’ அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்.
பாரதி குறித்த விவாதங்களிலும் இதையேதான் செய்தீர்கள்.
மற்றபடி நீங்கள் நடுநிலைதான்…!
March 4 at 12:33pm · Edited · Like · 1
Ganeshan Ramachandran · 13 mutual friends
சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகளும் மற்றும் புளியமரத்தின் கதை இரண்டையும் எப்போதோ படித்திருக்கின்றேன். இன்னமும் ஒரு இலக்கியவாதியாகத் தான் அவரைப் பார்க்கின்றேன். (அது பாரதியாகட்டும் அல்லது சுந்தர ராமசாமியாகட்டும் உங்களது கருத்தின் நோக்கம் சரியாக இருந்தால் எனக்கும் உடன்பாடு தான் இல்லாவிட்டால் கருத்து மோதல்களின் இடர்ப்பாடு இருக்கத்தான் செய்யும்)
March 4 at 11:58am · Like
வே மதிமாறன் பாரதியை விமர்சித்தால்… உங்களைப் போல் பெரியார் மீது பற்று கொண்ட சில முற்போக்காளர்கள், ‘பெரியார் மட்டும் யோக்கியமா?’ என்று கேட்கிறார்கள்.
அதுபோல் பெரியாரை இழிவாக விமர்சிக்கிற இந்து பார்ப்பன அறிவாளிகளிடம்போய் ‘பாரதி மட்டும் யோக்கியமா?’ என்று கேட்பதில்லை.
March 4 at 12:04pm · Like · 3
Ganeshan Ramachandran · 13 mutual friends
பாரதியை பற்றியோ அல்லது பெரியாரைப் பற்றியோ தொடர்ந்து ஒரு நோக்கத்துடன் எழுத வேண்டிய செயல் திட்டம் எனக்கு எப்போதும் இல்லை. (ஊடக விவாதங்களில் என் அளவிற்கு நரேந்திர மோடியை வேறு யாரும் விமர்சித்திருக்கின்றார்களா என்று பா.ஜ.க நண்பர்கள் இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்,)
March 4 at 12:09pm · Like
வே மதிமாறன் நான் கேட்டதற்கு இதுவா பதில்?
March 4 at 12:09pm · Like · 1
Ganeshan Ramachandran · 13 mutual friends
செயல் திட்டம் இல்லாததால் எவரிடமும் போய் நீங்கள் சொல்லும் விஷயங்களை கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை
March 4 at 12:10pm · Like
வே மதிமாறன் பாரதியை பற்றி எழுதினால் மட்டும் கேட்கிறீர்கள்?
March 4 at 12:11pm · Like · 3
Ganeshan Ramachandran · 13 mutual friends
நான் விமர்சகன் மட்டுமே. அரசியல்வாதியோ அல்லது இயக்கவாதியோ அல்ல
March 4 at 12:12pm · Like
வே மதிமாறன் பெரியார் பற்றி அவதூறு எழுதினால்.. அதை கேட்பது விமர்சகனின் வேலையில்லையோ?
March 4 at 12:14pm · Edited · Like · 3
Ganeshan Ramachandran · 13 mutual friends
பெரியாரைப் பற்றிய உங்களது பதிவுகளிலேயே என் கருத்துக்களை தெளிவாக பதிந்திருக்கின்றேன். (விதண்டாவாதத்திற்கு விவேகானந்தரையும், பாரதியையும் நீங்கள் இழுக்கும் போது மன வலியுடன் தான் பெரியாரின் சில நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பியிருக்கின்றேன்) என்ன செய்வது வலிக்கிற இடத்த்தில் அடித்தால் தானே அடங்குகிறீர்கள்!
March 4 at 12:14pm · Like
வே மதிமாறன் இந்து வௌக்கெண்ண விளக்கமெல்லாம்… பாரதியை விமரித்தால்தான் வருகிறது. ஆனால் பெரியார்ஸ்ட் பொல் பேசிகிற நீங்கள் பெரயார் பற்றி பார்ப்பன ஜாதிவெறியன் இழிவாக பேசினால் உங்களைப் போன்றவர்களிடம் இருந்து காத்துதான் வருது.
March 4 at 12:17pm · Like · 6
வே மதிமாறன் //வலிக்கிற இடத்த்தில் அடித்தால் தானே அடங்குகிறீர்கள்!//
அது எ்னன வலிக்கிற இடம்?
March 4 at 12:17pm · Like · 8
வே மதிமாறன் பாரதியை பற்றி நான் எழுதினால் நீங்கள் அய்யோ என்று அலறுகிறீர்களே அதுவா?
March 4 at 12:18pm · Like · 13
Ganbaatar Nergüi
March 4 at 1:53pm · Like