‘வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா..’
‘குத்துப் பாட்டு’ என்று இரைச்சலும், வேகமும் மட்டுமே கொண்டு கேட்பவனைக் குத்து குத்து ன்னு குத்துறப் பாட்டா வருது. இசை வெளியீட்டு விழாவில் ஆரம்பித்துப் படம் வெளியாவதற்குள் அதன் ஆயுள் முடிந்து விடுகிறது.
குத்துப்பாட்டு போன்ற சூழலில் கூட மெல்லிசை மன்னர், சுலோ ரிதத்தல்.. குறைவான வாத்திய கருவிகள் கொண்டு, எவ்வளவு இனிமையான மெல்லிசையைத் தந்திருக்கிறார். 1971 ல் வெளியான பாபு படத்தில், ‘வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா..’ பாடலில்.
மெட்டு ரொம்ப நவீனமா இருக்கு. கோரஸ் என்ன ஸ்டைல்.. மெல்லிசை மன்னரின் நவீனத்திற்கும் ஸ்டைலுக்கும் இணையா சிவாஜி கணேசன் தன்னுடைய மூமெண்டை அழகா சிங்க் பண்றார். (‘பத்மநாப அய்யர்..’ என்கிறபோது பூணூல் செய்கை தவறாகக் காட்டுகிற ஒரு இடத்தைத் தவிர)
இந்தப் பாடலில் முதல் மெல்லிசை மன்னர். இரண்டாவது சிவாஜி. மூன்றாவது நடன இயக்குர்.
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ கலையின் உன்னதம்
பாட்டை பார்த்த பிறகுதான் புரிந்தது..இன்றைய குத்துபாட்டின் ஆயுள்….பற்றி