‘வீரமணி அவர்களைக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன்’


பெரியார் இயக்கத் தலைவர்கள் அய்யா ஆனைமுத்து, தோழர் கொளத்தூர் மணி, விடுதலை ராசேந்திரன் சார், அண்ணன் கோவை ராமகிருஷணன் இவர்களை ஒரு வார்த்தைக்கூட நான் இதுவரை பெயர் சொல்லி விமர்சித்ததில்லை.

ஆனால், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களைப் பலமுறை விமர்சித்திருக்கிறேன். அதுவும் தோழர் கொளத்தூர் மணி, அண்ணன் கோவை ராமகிருஷ்ணன் இவர்களுக்கு ஆதரவு நிலையிலிருந்து ஆசிரியரை கடுமையாக விமர்சித்திருக்கிறேன்.

என்னைப் பற்றிச் சிலர், ‘உங்களை மதிமாறன் இப்படிப் பேசினார்’ என்று அவதூறாகக் கிசு, கிசு சொன்னாலே, தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களே நம்பி விடுகிற சூழலில்;
என்னுடைய நேரடி விமர்சனங்களைகூட எதிர்நிலையில் பார்க்காமல், என் பெரியார் பணியை அங்கீகரித்து என்னைப் பெரியார் திடலில் பேச வைத்தார் ஆசிரியர்.
என்னுடைய பேச்சு பெரியார் வலைக்காட்சியில் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பானது.

இன்னும் சிறப்பாக எனக்கு ‘பெரியார் விருது’ கொடுத்தார். அதை விடக் கூடுதலாக என் பெரியாரியல் பணிக்கு மகுடம் வைத்ததுபோல் பெரியார் திடலில் அவருடன் நான் மட்டும் சிறப்புரை என்று கவுரவித்தார். அவர் தலைமையில் நடந்த திராவிடர் கழகத் திருமணங்களில் என்னை மட்டும் சிறப்பழைப்பாளராக அழைத்துச் சிறப்புச் செய்தார்.

விடுதலையில் என்னுடைய பேச்சை முக்கியத்துவம் கொடுத்து, பல முறை பல பக்கங்கள் வெளியிட்டார்.
என்னை விடச் சிறந்த பேச்சாளர்களும், மூத்த தலைவர்களும் திராவிடர் கழகத்தில் இருந்தபோதும் திராவிடர் கழகம் அல்லாத எனக்கு ஆசிரியர் தந்த முக்கியத்துவம் என் பெரியாரியல் பணியைப் பாய்ச்சலோடு செய்வதற்குப் பெரும் உந்துதல் தந்தது.

அதுமட்டுமல்ல, ஆசிரியர் பேசும்போது நான் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தால், ‘சிந்தனையாளர்மதிமாறன்’ என்று என் பெயர் குறிப்பிடுவார். வேறு விழாக்களில் நிகழ்ச்சி முடிந்து அவர் செல்லும் போது நான் வழியல் நின்று வணக்கம் சொன்னால், சட்டென்று நின்று வாய் திறந்த முழு மகிழ்ச்சியான சிரிப்போடு (இந்தப் படத்தில் உள்ளது போல்) நலன் விசாரித்துச் செல்வார்.

‘எனக்குக் கிடைத்த முக்கியத்துவம்’ என்பதால் மட்டும் நான் அவரைக் கொண்டாடவில்லை. அவர் பேச்சையும் எழுத்தையும் கேட்க்கும்போதும் படிக்கும்போதும் ‘எப்போதும் நான் பெரியாரியல் மாணவன்தான்’ என்பதை உணர வைக்கும்.
ஆம், அவர் ஆசிரியர்தான்.

‘பெரியாரிஸ்ட் யாரோடு தோழமையாக இருப்பது, யாரை எதிரியாகப் பார்ப்பது, யாரை முற்றிலும் தவிர்ப்பது’ என்கிற முறையை எப்போதும் அவர் சிறப்பாகச் செய்வார்.

தன்னை விமர்சிப்பவராக அல்லது தேர்தல் கட்சியில் பக்திமானக பெரியார் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தாலும் பெரியாரை மதிப்பவராக இருந்தால் அவர்களைத் திடலுக்கு அழைப்பதும் தோழமை வட்டத்திற்குள் வைப்பதும்;

இந்து மதவாதம், தலித் விரோத ஜாதி கட்சிகளை முற்றிலும் எதிர்நிலையில் வைப்பதும்;

தமிழ்தேசியம், தலித் அரசியல் என்று தீவிரமாக இயங்கினாலும் அவர்கள் திராவிட இயக்க எதிர்ப்பாளர்களாக, பெரியாரை துரோகியாக, விரோதியாக அவதூறு செய்கிறவர்களாக இருந்தால்;

அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் பெரியார் திடலிலும், கட்சியின் எந்த நிகழ்ச்சிகளிலும் முற்றிலுமாக அவர்களை முற்றிலுமாக புறக்கணிப்பதில் தீவிர பெரியாரிஸ்ட்டின் கோபம் வெளிப்படும்.

ஒரு அம்பேத்கரிஸ்ட்டாக ஆசிரியரை நினைத்து நான் எப்போதும் பெருமைபடுவது, அருண்ஷோரி அண்ணல் அம்பேத்கரை மிக மோசமாக அவதூறு செய்தபோது, பல முற்போக்காளர்கள் அமைதி காத்தார்கள். பெரியாரை இழிவாக விமர்சித்த தலித் அறிஞர்கள்கூட அருண்ஷோரியின் அவதூறுக்கு மவுனத்தைதான் பதிலாகத் தந்தார்கள்.

மிகச் சிறந்த அம்பேத்கரிய பார்வையோடு அருண்ஷோரியின் அவதூறுகளை அம்பலப்படுத்திய அம்பேத்கரிய அறிஞர் ஆசிரியர் வீரமணி அவர்கள்தான்.

அவரின் பிறந்தநாள் வாழத்துகளாக, பெரியாரின் ஆயுளைத் தாண்டி அவர் நீடுழி வாழவேண்டும் என்பது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல.
2 December

2 thoughts on “‘வீரமணி அவர்களைக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன்’

  1. ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக வாழ்நாளை அர்ப்பணித்த தந்தை பெரியாரின் பகுத்தறிவு ஜோதியை தமிழகத்தில் அணையா விளக்காக ஒளிர வைத்த மாமனிதர் ஆசிரியர் வீரமணி என்றால் மிகையாகாது. பிறப்பும் இறப்பும் அல்லாஹ்வின் முடிவு. ஆகையால் பிறந்த நாள் வாழ்த்து சொல்வதும், இறந்த நாளை நினைத்து துக்கம் அனுசரிப்பதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது.

    ஆசிரியர் வீரமணிக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட வாழ்நாட்களையும் அல்லாஹ் அருள்வானாக.

  2. மதிமாறன் அவர்கள் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யும் வழக்கத்தைத் துவங்க வேண்டும். இல்லையெனில், இந்த வலை தளம் ஜனாப் முஹம்மத் அலி ஜின்னா அவர்களின் “பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா ” சொல்லாடலே மிஞ்சும். சில காலமாகப் பார்த்து வருகிறேன்: இப்போது பின்னூட்டங்கள் யாரும் இடுவது இல்லை: இரண்டு பேர்களைத் தவிர: 1.ஜின்னா மற்றும் 2. லூசோடு பேசும் பிராமணன் . சமூக விஷயங்களை தலித்தின் கோணத்தில் அலசி உரையாடும் வலை தளத்தை பாழ் படுத்த வேண்டா

Leave a Reply

%d bloggers like this: