padmavat (தி); முஸ்லிம்களின் பெருந்தன்மையும் பார்ப்பனிய சதியும்

அலாவுதின் கில்ஜி யை கொடூர கோமாளிப் பெண் பித்தனாக சித்தரித்திருக்கிறார்கள். சில காட்சிகளில் இஸ்லாமிய அடையாளம் வில்லனுக்கான பின்புலமாகக் காட்டப்பட்டிருக்கிறது.

ஆனால், தன் வீட்டுப் பெண்களைப் புனிதத்தின் பெயரில் உயிரோடு கொளுத்தியும் பிறகு வெள்ளைக்காரனுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு வெள்ளையனோடு கிரிக்கெட விளையாடிய ராஜபுத்திரர்களைத் தியாகிகளாக, மாவீரர்களாகக் காட்டுகிறார்கள்.

இலங்கை புத்த மன்னனின் மகளான பத்மாவதி, ராஜபுத்திர மருமகளாக வந்தவுடனேயே இந்துமதப் புனிதம், ராமாயணப் பெருமிதம், ராமனை உயர்த்தி, தன் மண்ணின் மன்னன் ராவணனை இழிவாகவும் பேசுவது போன்ற வசனங்கள் திட்டமிடப்பட்டவை. கேலிக்குரியவை.

அதை விட மோசம், மிக திட்டமிட்டு இலங்கை என்று சொல்வதைத் தவிர்த்து, ‘சிங்கள தேசம்’ என்றே மொழி பெயர்த்திருக்கிறார்கள். யாரோ பாரதியின் ஞானப் பேரன் பார்த்த வேலை.
‘உடன் கட்டை’ பெண்களே விரும்பி ஏற்றுக் கொண்டது என்று அந்த ‘சதி’ யை புனிதப்படுத்திகிற மோசடியுடனே படம் முடிகிறது.

ஆனால், இவ்வளவு இந்து பெருமிதமும், இஸ்லாமிய மன்னனை இழிவாகவும் காட்டிய போதும் எதிர்ப்பு தெரிவிப்பதோ இந்து அமைப்புகள். காரணம்? இந்த எதிர்ப்பு ராஜபுத்திரர்கள் மீது பார்ப்பனியம் செய்கிற சவாரி.

அலாவுதின் கில்ஜியுடன் பகை ஏற்படக் காரணம், ‘ராஜபுத்திர மன்னர் – அரசி’யின் உடல் உறவை மறைந்திருந்து பார்க்கிற ஒற்றைப் பார்ப்பன ராஜகுருவின் ஒழுக்கக் கேட்டை தண்டித்ததால் அவர் செய்கிற சதி.
இவ்வளவு இழப்பிற்கும் அவலத்திற்கும் காரணம் அந்தப் பார்ப்பனரே என்று படம் உறுதியாகச் சொல்கிறது.

இன்று பார்ப்பனியம் இஸ்லாமியர்களுக்கு எதிரான கண்ணோட்டோம் கொண்டதாக இருந்தாலும், இந்தியாவில் இஸ்லாமிய மன்னர்கள் ஆண்டபோது எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர்களிடம் உயர் பதவிகள் வகித்தவர்கள் பார்ப்பனர்கள்தான் என்பதையும் படம் குறிப்பால் உணர்த்துகிறது.

‘பத்மாவதி’ எதிர்ப்புக்கு இன்னொரு முக்கியக் காரணம், படுக்கையறையை ஓட்டையில் பார்த்த ராஜகுருவை, நாடு கடத்தும் படி தன் கணவருக்குப் பரிந்துரைப்பதும், பிறகு அலாவுதின் கில்ஜியுடனான பிரச்சினையின்போது,
முதல் நிபந்தனையாக, கில்ஜியுடன் ஒத்துஊதி சொந்த மக்களுக்கு எதிராகச் சதி செய்யும் அந்தப் பார்ப்பனரின் தலையைத் தனக்குப் பரிசாகத் தரவேண்டும் என்று கேட்டதும், அதை அலாவுதின் உடனடியாக நிறைவேற்றியதும் தான்.

முற்போக்கு பார்ப்பனர்களும் இந்தப் படத்திற்கு எதிரான கண்ணோட்டம் கொள்வார்கள். புறக்கணிப்பார்கள். அல்லது மிக, மிக நேர்த்தியாகச் சிறந்த சினிமா மொழியோடு பிரம்மாண்டாமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை ‘தரமற்றது’ என்று சினிமா விமர்சகனை போல் மாறுவேடம் செய்வார்கள்.

நாம் இந்தப் படத்தைப் பரிந்துரைப்பதே அதே காரணங்களுக்காகத்தான். கண்டிப்பா பாருங்க.

3 thoughts on “padmavat (தி); முஸ்லிம்களின் பெருந்தன்மையும் பார்ப்பனிய சதியும்

  1. http://sillyconfusion.com/wp-content/uploads/2017/10/alauddin-khilji-picture-1-570×437.png

    ஆணழகன், பேரரசர் அலாவுத்தீன் கில்ஜியின் அழகில் மயங்கி பாப்பாத்தி பத்மாவதி ஓடிப்போயிட்டா என்பதுதான் உண்மை வரலாறு. கூட்டிக்கொடுப்பது பாப்பானின் குலத்தொழில். ஆட்சியாளருக்கு அந்தப்புரத்தில் காமசூத்திர கலைகளை கற்றுத்தருவது பாப்பாத்திக்களின் குலத்தொழில் என்பது ஊரறிந்த ரகசியம். சந்தேகமிருந்தால் ஆண்டாளிடம் கேள்…

  2. 1960 களுக்கு முன் இலங்கையில் 80% MP க்கள் சிங்களவர்கள். ஆயினும் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் ‘கல்லூரி ஆசிரியர்கள் 90% தமிழர்கள். அதிலும் பெரும்பான்மை இந்துக்கள். அயல்நாட்டு மிஷினரிகள் அல்லர் லூயா பரப்ப எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றது. உள்நாட்டு குடிப்பத்தை உண்டாக்கி சிங்கள தமிழ் நல்லுறவை உடைத்தனர். அதிலும் அரசியலை புகுத்தி இந்து தமிழ் தலைவர் களை போட்டுத் தள்ளினர். வன்முறை போராட்ட முன்னணியாக LTTE உருவானது. அதற்கு இந்து பெயர்கள் கொண்ட குருக்குசால் ஏஜண்டுகளை நியமித்து இந்து தமிழர்களை கேடயமாக்கி பலி கொடுத்தனர். அனுதாய ஆதரவுக்கு ஐநா சபையில் மனித உரிமை மீறல் __ அரசியல் ஆதரவுக்கு தமிழ்நாட்டில் தொப்புள் கொடி உறவு உண்டாக்கினர். ஆனாலும் LTTE அழித்தது. CROSS CONVERSION- project கனவு கனவோடு நின்றது. அதன் தொடர்ச்சி தற்போது தமிழ்நாட்டில் சைமன்கள் , குஞ்சு குட்டி பாரி, விரைவீங்கி வைகோ, திருட்டு முழிகாந்தி போன்ற பாவாடை பண்டாரங்களின் ஏஜண்டுகள் மூலமாக தமிழகத்தில் ஊமைப் பெருச்சாளி வேல பாத்து கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முயலுகின்றனர். இந்த அல்லா லூயா Combination” .. உணர்ச்சி கொண்ட தமிழன் இவர்களை நம்புவது — மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல் ஆகிறது. மாயை கண்ண கட்டிட்டா கடவுளே வந்து வழிகாட்டினாலும் நம்ப மாட்டாங்க ,
    இந்த கூமுட்ட . பாவாடை பண்டாரMissinaries தமிழகத்தையும் இலங்கை போல சுடுகாடு ஆக்காம விட மாட்டாங்க.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading