தெலி கோயில்

கிருஷ்ணன் பிறந்ததாக நம்பப்படுகிற மதுரா அவர் வளர்ந்தாக கருதப்படுகிற கோகுல்;
விநாயகர் சதுர்த்திக்கு முதல்நாள் அங்குதான் இருந்தேன். எங்கேயும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளைப் பார்க்கவில்லை.
ஆக்ராவிலும் அதே.
சரியாக விநாயகர் சதுர்த்தி அன்று மத்திய பிரதேசத்திலுள்ள குவாலியர் நகரம் முழுவதும் சுற்றினேன். அங்கேயும் சாலைகளில் விநாயகர் இல்லை.
சங்கிகள் செல்வாக்குப் பெற்ற உ.பி ம.பி யைவிட தமிழ்நாட்டில்தான் தெருவிற்குத் தெரு ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது விநாயகர் சதுர்த்தி சிலைகள்.
*
இது குவாலியர் கோட்டையில், தெலி கோயில் வளாகத்தில் இருக்கும் மகாவீர் சிலை.