
‘சொப்பன ஸ்கலிதமா? விந்து விரைதலா? இரவில் வீடு செல்ல தயக்கமா? கை, கால் நடுக்கமா?’ என்கிற பாணியில் ஆண்களின் பலான உணர்வுகளுக்காக மட்டும் பத்தரிகை நடத்துக்கிற, தமிழர்களின் ‘ஹார்ட் அட்டாக்கான‘ குமுதம் வார இதழ் மனிதர்களை வெறும் ஆண்&பெண் உறுப்புகளாக சித்தரித்து வருவது, அனைவரும் அறிந்ததே.
மனிதர்களின் அந்தரங்க உறுப்புக்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட, நடிகைகளின் இடுக்குகளின் மீதும், சதைகளின் மீதும் பேரார்வம் கொண்ட, நடிகைகளின் உருவங்களை கொண்டு ‘பிழைப்பு‘ நடத்துகிற அது, திடீர் என்று ‘நான் தமிழன்‘ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு வருகிறது.
நடிகர், நடிகைகளின் விபச்சாரங்களை ‘துப்பறிந்து‘ கிசுகிசுக்களாக எழுதி, அதை தனது வாசகர்களுக்கு செய்திகளாக வெளியிடடு ‘மாமா‘ வேலை பார்த்துக் கொண்டிருந்த குமுதத்திற்கு, ‘பாலுணர்வையும் தாண்டி இப்படி தமிழ் உணர்வு பீறிட்டிக் கிளம்பிவிட்டதே, பரவாயில்லையே‘ என்று நினைத்துவிடாதீர்கள். அதன் தமிழ் உணர்வு, அதன் வர்த்தக நோக்கம் கொண்ட பாலுணர்வை விட கேவலமாக இருக்கிறது.
ஆம், தமிழர்களை ஜாதிரீதியாக அடையாளப்படுத்துகிறது.
ஜாதி வெறியை தூண்டுகிற குமுதத்தின் அந்த கட்டுரைகளை விட அதன் பாலுணர்வு கட்டுரைகள் எவ்வளவோ முற்போக்கானவை என்று சொல்லுக்கிற அளவிற்கு, மிக மோசமானதாக இருக்கிறது, அதன் ‘தமிழன் உணர்வு‘.
அதனால் குமுதம் இப்படி ‘தமிழ் உணர்வு‘ கட்டுரைகளை வெளியிட்டு ஜாதி வெறியை தூண்டாமல், வழக்கம் போல் ‘பலான‘ செய்திகளை வெளியிடுவதே, அதன் சிட்டுக்குருவி லேகிய வாசகர்களுககு அது செய்கிற பெரிய உதவியாக இருக்கும்.
குமுதத்தின் ‘நான் தமிழன்‘ என்ற ஜாதி வெறி கட்டுரையை கண்டித்து, நிறுத்தச் சொல்லி, மன்னிப்புக் கேட்கச் சொல்லி கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசந்தர் என்றகிற பாலா அவர்களின் முயற்சியில், சமூக அக்கறை கொண்ட 14 வழக்கிறஞர்கள் ஒன்று சேர்ந்து, பத்து நாட்களுக்குமுன் குமுத்திற்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்கள்.
அதன் பிரதியை நமக்கும் அனுப்பி இருக்கிறார்கள். அதன் விவரம் நாளை மறுநாள்.
–தொடரும்
