Site icon வே. மதிமாறன்

அவர்களுடனான பேச்சுவார்த்தை இனிமையாகப் போகிறது

சிறுவயதிலிருந்து கற்பிக்கப்பட்ட பிரம்மாண்டம் தாஜ்மஹாலை நேரில் பார்க்கும் போது தகர்ந்து போனதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், உண்மை அதுதான்.

தூரத்திலிருந்து பார்ப்பதில் உள்ள பேரழகு நெருக்கத்தில் இல்லை. சங்கி அரசின் அலட்சியம் பராமரிப்பில் தெரிகிறது.

ஆக்ராவில் எனக்குப் பிடித்தது ஆட்டோ ஓட்டுனர், குதிரை வண்டிக்காரர்கள். நம்மை ஏமாற்றும் நோக்கம் அவர்களிடமில்லை. ஒரு விலை சொல்கிறார்கள், நாம் ஒரு விலை சொன்னால் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் சவாரிக்கு அழைத்து தொந்தரவு செய்கிறார்கள். அதிகம் முஸ்லிகளாக இருக்கிறார்கள்.
பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள்

முக்கியமான விசயம் எனக்கு இந்தியும் தெரியாது இங்கிலிசும் தெரியாது.

ஆனால் அவர்களுடனான பேச்சுவார்த்தை இனிமையாகப் போகிறது

28 ஆகஸ்ட் இரவு 10. 38 மணி.

Exit mobile version