Site icon வே. மதிமாறன்

ஜாதி வெறிக்கு ‘நான் தமிழன்’ என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம்

victory-boy

குமுதத்திற்கு அனுப்பிய வக்கீல் நோட்டிஸ் விவிரம்:

எம். பாலச்சந்தர்

வழக்கறிஞர்

காட்டூர்

கோவை-9


1.சம்பத் பிஏ பிஎல்., 2. ஈ.மு. சாஜித் பிஎஸ்சி எல்எல்பி.,

3. அ. பார்த்தசாரதி பிஏ பிஎல்., 4. வெண்மணி எம்ஏ பிஎல் 5. லெனின் பிஎஸ்சி பிஎல்., 6. ஜோதிக்குமார் பிஏ பிஎல்., 7. ஷிலா ராஜ் பிஏ பிஎல்., 8. மதுசூதனன் பி.ஏ பிஎல்.,

9. கலையரசன் பிஏ பிஎல்., 10. விஜயராகவன் பி.ஏ பிஎல்., 11. எஸ். கணேசன் பிஏ பிஎல்., 12. ஆனந்தராஜ் பிஏ பிஎல்., 13. ஜெயந்திநாதன் பிஏ பிஎல்., 14. ஆன்ந்திஈஸ்வரன் பிஏ பிஎல் ஆகிய வழக்கிறஞர்கள் சார்பாகவும், என் சார்பாகவும் தங்களுக்கு அனுப்பப்படும் வழக்கறிஞர் நோட்டீஸ்.


‘1. நான் தமிழன்என்ற தலைப்பில் ஒவ்வொரு ஜாதியைப் பற்றி நீங்கள் குமுதம்இதழில் வெளியிட்டுவருகிற கட்டுரை, மக்கள் மனதில் ஜாதி உணர்வுகளை தூண்டுகிறது. தமிழ் சமுதாயத்திற்காக பாடுப்பட்டத் தலைவர்களை, தியாகிகளை நீங்கள் வெறும் ஜாதிக்காரராக சுருக்கி வெளியிடுவது அவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கிறது.


2. வீரன் அழகு முத்துக்கோன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன் போன்ற பல தலைவர்களை, நீங்கள் ஜாதிரீதியாக அடையாளப்படுத்துவது அவர்களின் தியாகங்களை கேவலப்படுத்துவதாக இருக்கிறது. அவர்கள் வெள்ளையனை எதிர்த்து தங்கள் ஜாதிக்காரர்களுக்காக போராடவில்லை. ஒட்டுமொத்த தமிழர்களுக்காத்தான் போராடினார்கள்.


3. ஜாதி ரீதியாக பிளவுப்பட்டு இருக்கும் சமூகத்தில், ஒருவரையொருவர் வீரோதமாக பார்க்கும் சமூகத்தில், ஜாதி கலவரங்கள் நடக்கும் சமூகத்தில் & பிரபலங்களை ஜாதி ரீதியாக அடையாளப்படுத்துகிற உங்கள் வேலை சமூக விரோத நடவடிக்கையாகவே இருக்கிறது. பல பிரபலங்கள், கலைஞர்கள் என்ன ஜாதி என்று தெரிந்து கொள்ளவிரும்பாமலேதான், மக்கள் அவர்களை தமிழர்கள்என்ற பொது அடையாளத்தோடுதான் ஆதரித்து இருக்கிறார்கள்.


4. மக்களின் உணர்வு இப்படி இருக்கையில் நீங்கள் அந்தப் பிரபலங்களை, கலைஞர்களை, தியாகிகளை ஜாதி ரீதியாக அடையாளப்படுத்துவது, அந்தப் பிரபலங்கள், கலைஞர்கள், தியாகிகள் சார்ந்த ஜாதிக்காரர்களைத் தவிர மற்றவர்களிடம் அந்நியமாக்குகிற வேலையாகத்தான் இருக்கிறது. இந்த கேவலமான ஜாதி வெறி செய்கைக்கு நான் தமிழன்என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலமாக இருக்கிறது.


5, என் ஜாதியில் நிறைய பிரபலங்கள் இருக்கிறார்கள்.‘ ‘என் ஜாதியில்தான் நாட்டுக்கு போராடியவர்கள் அதிகம் இருக்கிறார்கள்என்பது போன்ற தேவையற்ற விவாதங்களை, சண்டைகளை உங்கள் குமுதம் இதழில் வருகிற, ‘நான் தமிழன்கட்டுரை தூண்டுறது. அது மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தனிப்பட்ட முறையில் அல்லாமல் அந்த மக்களே, தங்கள் வாழ்க்கையை சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகியும், அதை எதிர்த்தும் போராடி வருகிறார்கள்.


6, நீங்கள் பெருமையாக குறிப்பிடுகிற பல ஆதிக்க ஜாதிகளில் இருக்கிற, ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பல கொடுமைகளைச் செய்திருக்கிறார்கள். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? நீங்கள் அந்த ஆதிக்க ஜாதிகளின் பெருமை பேசினால், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளை ஆதரிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தப்படுகிறது.


7. ஆகவே, நீங்கள், ‘நான் தமிழன்என்ற பெயரில் ஜாதி உணர்வை தூண்டுகிற கட்டுரையை உடனடியாக நிறுத்தவேண்டும். இதுவரை ஜாதி ரீதியாக அடையாளப்படுத்தி வெளியிட்டு தியாகிகளை கேவலப்படுத்திய செயலுக்காக, நீங்கள் உங்கள் குமுதம்இதழில் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்கவேண்டும்.

8. அப்படி செய்யாத பட்சத்தில் உங்கள் மீது சமூகத்தில் ஜாதி கலவரங்களை தூண்டிய முறையிலும், தியாகிகளை ஜாதிரீதியாக அவமானப்படுத்திய வகையிலும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடருவோம்.


எம். பாலச்சந்தர்

வழக்கறிஞர்

26.03.2009


மேற்கண்ட வழக்கறிஞர்களுக்கு நம் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் சமூக பொறுப்புக்கு மரியாதைக்குரிய வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Exit mobile version