
இஸ்லாம் மதத்தை கேவலமாக சித்தரித்த திரைப்படத்தை கண்டித்து, அமெரிக்க தூதரகத்திற்கு எதிரான முஸ்லிம்களின் போராட்டம் சரியானதுதானா?
-மகேஸ்வரன், தூத்துக்குடி.
கிறித்துவ மத கண்ணோட்டம் உள்ள ஒருவர், இன்னொரு மதத்தை விமர்சிப்பது மிக தவறானது. இதுபோன்ற மத வெறி சம்பவங்களே மத கலவரங்களுக்கு காரணமாக அமைகிறது.
இதில் முஸ்லிம்களின் எதிர்வினை மிக வேகமானதாக, ஆக்ரோஷமானதாக இருந்தது.
இஸ்லாம் மதத்தின் மீது அவதூறு மற்றும் விமர்சனம் வரும்போது, பொங்கி எழுகிற இஸ்லாமியர்கள்,
இஸ்லாமியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும்போது இப்படி பொங்கி எழுவதில்லை.
குறிப்பாக, குஜராத்தில் மோடியும். ஈராக்கில் அமெரிக்காவும், இஸ்லாமியர்களை கொன்று குவித்தபோது இந்த கோபம் இஸ்லாமியர்களுக்கு வரவில்லை. மாறாக அச்ச உணர்வே அவர்களிடம் மேலோங்கி நின்றது.
இதுதான் முற்போக்காளர்களுக்கும் மதவாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்.
பகுத்தறிவாளர்கள், கம்யுனிஸ்டுகள் இஸ்லாம் மதத்தை ஆதரிப்பதில்லை. இஸ்லாமியர்களை ஆதரிக்கிறோம்.
அதனால்தான் பெரியார் கடவுளை மற, மனிதனை நினை என்றார்.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 அக்டோபர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்
இந்து மதத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட கிறித்துவம்
சோசலிச ரஷ்யாவின் வீழ்ச்சியும் கடாபி படுகொலையும்
அமெரிக்காவின் ராஜகுரு போப்பும், கிறிஸ்துவ தமிழ்த் தேசியவாதிகளின் மதவெறியும், ஈழமக்களின் துயரமும்
