நம்ம ஊரில் வசதியான நாடார்கள் பெருமளவில் இந்து அமைப்பில் இருப்பதைபோல். இதில் சில கிறிஸ்த்துவ நாடார்களும்.
ஒரே குடும்பத்தில் கணவர் இந்து, மனைவி கிறிஸ்த்துவர்; அண்ணன் இந்து, தம்பி கிறிஸ்த்துவர் இது போன்ற முறைகளை நாடார் சமுகத்தில் அதிகம் பார்க்க முடியும்.
மதம் வேறாக இருந்தாலும் ஜாதி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் உள்ள ‘உறுதி’யே இதை தீர்மானிக்கிறது.
இந்த முறையோடே.. இந்து அமைப்பில தீவிர ஈடுபாடு வேற.
அது மட்டுமல்ல… தமிழ்த் தேசியம் பேசுகிற கிறிஸ்த்துவர்கள்; பால்தாக்ரே, மோடி போன்ற தலைவர்களை ஆதரித்துப் பேசுவதற்குக் காரணம் அவர்களிடம் தீவிரமாக இருக்கிற ‘ஜாதி உணர்வே’
தன்னைப்போலேவே கிறிஸ்த்துவராக இருந்தாலும், ஜாதி வேறாக இருந்தால் நிச்சயம் கிறிஸ்த்துவர் கிறித்துவருக்கு பெண் தருவில்லை.
இந்துவாக இருந்தாலும் தனது ஜாதியாக இருந்தால் ஒரு கிறிஸ்த்துவர் இந்துவிற்கு பெண் தர தயங்குவதில்லை என்பதைவிட; அந்த சம்மந்தத்தை அவர்களே முன்னின்று பேசி முடிக்கிறார்கள்.
இயேசு கிறிஸ்த்துவிற்கே தெரியாது இப்படி ஒரு கிறிஸ்த்துவ முறை இருப்பது.
‘நாங்க யாரு..?’ இயேசுவுக்கே தண்ணி காட்டுவோம்.
June 18 அன்று facebook ல் எழுதியது.
மணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!
இந்து மதத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட கிறித்துவம்
‘கிறிஸ்த்துவர்கள் மீதான தாக்குதல்’ என்ற பெயரில் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள்

