சுவாதி படுகொலையை ஜாதியோடு தொடர்புபடுத்துவது மோசமானது.
மற்ற ஜாதிக்காரர்கள் மீது நடத்துகிற தனிமனித தாக்குதல்களையும் தலித் மக்கள் மீது நடத்துகிற ஜாதிய தாக்குதல்களையும் தொடர்புபடுத்திப் பார்ப்பது தவறு.
அது தலித் விரோத ஜாதிய கண்ணோட்டம் தான்.
சுவாதி மீது நடத்தப்பட்டிருக்கிற கொடூரம், பெண்களுக்கு எதிரான வன்முறை.
பெண் ஆணுக்கான நுகர்வுப் பொருளாகப் பார்க்கப்படுகிற புத்தியின் கொடூர வன்முறை வடிவம்.
2 July at 13:27
‘கேரள நாட்டிளம் பெண்களுடனே..” என்ன ஒரு கவி உள்ளம். அழகியல்.
‘கேரள நாட்டிளம் ‘ஆ’ண்களுடனே..” ச்சீ இவளெல்லாம் ஒரு பொம்பளையா. நடத்தக் கெட்டவள்.
7 July at 13:27
மலையாள தேவரும் தமிழ் நாயரும்
கே. பாலாஜி. பல படங்கள் தயாரித்தவர். சிவாஜி படங்களை எடுப்பதற்காகவே தயாரிப்பாளர் ஆனவர். மலையாளி. ஆனால் மலையாளி என்தபற்காக எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட தயாரிக்காதவர்.
சின்னப்பா தேவர். ஏராளமான எம்.ஜி.ஆர் படங்களை தயாரித்தவர். எம்.ஜி.ஆர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.
பெயரிலேயே ‘தேவர்’ என்ற ஜாதி அடையாளமும் தன் நிறுவனத்திற்கு ‘தேவர் பிலிம்ஸ்’ என்று பெயரும் வைத்தவர்.
ஆனால், தன் ஜாதிக்காரரான சிவாஜி யை வைத்து ஒரு படம் கூட தயாரிக்காதவர்.
