புதிய கல்வி கொள்கையின் முன்னோட்டம் தான் NEET. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களின் மருத்துவக் கல்விக்கான மூடு விழாவிற்குப் பெயர் NEET; ஆரம்பக் கல்விக்கே ஆப்பு, அதுக்குப் பெயர் தான் புதிய கல்வி கொள்கை.
பார்ப்பனியமும் ஏகாதிபத்தியம் இணைந்த கைகளாக வேதக்கல்வி + தனியார் பள்ளி + இரண்டும் கலந்த நவீன கல்வி. இது மட்டுமேதான் திட்டம். பாடத் திட்டம்.
‘சுதேசி’ என்ற புனைபெயரில் பார்ப்பனிய – இந்து பெருமை பேசுகிறவர்கள், அதற்கு நேர் எதிராக ‘விதேசி’ அமெரிக்கா – அய்ரோப்பிய நாடுகளின் பெருமை பேசுவார்களே, அதே பாணி. ‘சமஸ்கிருத உணர்வு + ஆங்கில அறிவு = தேசபற்று’
பார்ப்பன மேன்மை + முதலாளித்துவக் கொள்ளை; இந்தக் கள்ளக்கூட்டுதான் இனி இந்தியாவின் உயிர்நாடி.
ஆக, NEET க்கு நாம் அடிக்கும் சாவு மணியே, தமிழர்களை மட்டுமல்ல, எளிய இந்தியர்களையே விடுதலை செய்வதற்கான நம்பிக்கை ஒலி.
– வே.மதிமாறன்
