Site icon வே. மதிமாறன்

ஸ்ரீ ராமனால் அருளப்பட்டது

நாத்திகர்கள் இந்து மதத்தையும் நமது நாட்டின் தேசியத்தை குறித்தும் கேலி செய்தாலும், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒழுக்கம் ஸ்ரீராமபிரானால் நமக்கு அருளப்பட்டது. நமது நாட்டிற்கு மட்டுமே அந்த பண்பு சொந்தம்?
-கோபாலன்

ஆச்சரியமாகத்தான் இருக்கு. 60 ஆயிரம் பெண்களுக்கு புருஷனா இருந்த தசரதனுக்கு மகனா பொறந்த ராமன், ஜானகியை மட்டும் தன் மனசுல நிறுத்தி ‘ஒருவனுக்கு ஒருத்தி’ங்ற ‘உன்னத புருஷனா’ வாழ்ந்தான்.

அவன் வாழ்ந்த ‘இந்து தேசம்’ இன்னைக்கு எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கையிலே, உலகத்திலேயே இரண்டாவது இடத்துல இருக்கு.
நம்ம ஆளுங்க, ராமனை பின்பற்றச் சொன்னா, தசரதனை பின் தொடர்கிறார்கள்.

அப்போ, தசரதனுக்கு எய்ட்ஸ் இருந்து இருக்குமோ?
தசரதனுக்கு இருந்திருந்தா அப்போ அந்த 60 ஆயிரம் பெண்களுக்கும் இருந்திருக்கணுமே?

60 ஆயிரம் பெண்களுக்கும் எய்ட்ஸ் இல்லைன்னா, தசரதனுடைய ‘ஆண்மையை’ பற்றி நாத்திகர்கள் ரொம்ப கேவலமா பேசுவாங்களே?

அவுங்களுக்கும் இருந்ததுன்னு ஒத்துகிட்டா, ‘அப்போ ராமனுக்கும் இருந்திருக்கும்’னு ரொம்ப அவதூறு பேசுவாங்களே.

‘இல்லைன்னு’ சொன்னா அப்போ எப்படி ராமன் பொறந்தான்னு? கேப்பாங்க.

‘இருக்குன்னு’ ஒத்துக்கிட்டா, கடவுளுக்கே எய்ட்ஸா?ன்னு கேப்பானுங்க.

எதுக்கு இந்த தொல்லை. இந்த கேள்வியும் வேணா. இந்த பதிலும் வேணா. விட்டுருவோம்.
     

வே. மதிமாறன்

Exit mobile version