Site icon வே. மதிமாறன்

இடஒதுக்கீடு நாட்டை கெடுத்துவிட்டது

தகுதியானவர்களுக்கு வாய்ப்பில்லாமல், இடஓதுக்கீடு நாட்டை கெடுத்துவிட்டது?

கமலக்கண்ணன், ஞ்சாவூர்.

உண்மைதான். பல நூற்றாண்டுகளாக நாட்டை இடஓதுக்கீடுதான் கெடுத்துவிட்டது.

தலையில் பிறந்தவன் பிராமணன். அவனுக்கு அரசின் அதிக சலுகைகளும் சமூகத்தில் உயரிய மரியாதையும், அவன் கொலையே செய்தாலும் தண்டனை கிடையாது,

தோளில் பிறந்தவன் சத்திரியன். அவன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் அவனும் அவன் பரம்பரையும்தான் மன்னராக வரவேண்டும்.

அடுத்து வைசியன். அவன் ஊழல், கலப்படம் செய்தாலும் அவன் பரம்பரைதான் வணிகம் செய்யவேண்டும்.

கடைசியாக சூத்திரர்கள். அவர்கள் இழிவானர்கள். பரம்பரையாக அடிமை வேலை செய்யவேண்டும்.

இந்த நாலு வர்ணத்திலும்கூட இடம் இல்லாதவர்கள் சண்டாளர்கள். பஞ்சமர்கள். என்று பல நூற்றாண்டுகளாக இடம் பெற்று வந்த இடஓதுக்கீடு, மனு வகுத்த இடஓதுக்கீடு.

இதுதான் இந்தியாவின் வெட்கக்கேடு. இந்த முறைதான் நாட்டை கெடுத்து விட்டது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

ராஜமரியாதை

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்

Exit mobile version