ஈழத் தமிழர்களோ, தமிழ்நாட்டு தமிழர்களோ புலம் பெயர்ந்த நாடுகளுக்குச் சென்ற பிறகும் கூட ஜாதி சங்கங்களாக, ஜாதி உணர்வாளர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
பிள்ளைமார், தேவர், நாயுடு, வன்னியர், கவுண்டர், முதலியார், செட்டியார், உடையார், முத்தரையர், நாடார் இன்னும் பிற தீவிர ஜாதி உணர்வாளர்கள், அதாவது தன் ஜாதி அடையாளத்தை பகிரங்கமாக வெளிபடுத்திக் கொண்டும், ஜாதி சங்கங்களில் பொறுப்புக்களில் இருப்பவர்களும், தன் ஜாதிதான் இந்த உலகத்தில் சிறந்தது என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் பிரச்சாரம் செய்பவர்களும் கூட;
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் குறிப்பாக பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிகளில் முதன்மையான ஜாதியான ‘தமிழுணர்வு’ சைவ பிள்ளைமார்கள் அதிகம்.
அதிலும் யாழ்பாணத்து சைவ பிள்ளைமார்கள் திருநெல்வேலி (தமிழ்நாடு) சைவ பிள்ளைமார்களைவிட தங்களை உயர்வானவர்களாக கருதுபவர்கள். அவர்களின் மதிப்பிற்குரிய தலைவராகவும் பிரபாகரன் இருக்கிறார்.
ஒரு வேளை பிரபாகரன் சக்கிலியராகவோ, பறையராகவோ, பள்ளராகவோ, அவ்வளவு ஏன் இஸ்லமியராகவோ இருந்திருந்தால் அவரை ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவராக ஒத்துக் கொண்டிருப்பார்களா?
தமிழகத்தில்கூட பிரபாகரனை தீவிரமாக ஆதரிக்கிற ‘முற்போக்காளர்கள்’ முற்றிலுமாக அம்பேத்கரை புறக்கணிக்கிறார்கள்.
திராவிட இயக்கங்களை பெரியாரை விமர்சிக்கும்போதும், டாக்டர் அம்பேத்கரை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, தந்திரமாக ‘செட்டு சேர்க்கும்’ பாணியில் அயோத்திதாசரையும், இரட்டைமலை சீனிவாசனையும் குறிப்பிடுகிறார்கள்.
மற்ற நேரங்களில் பொதுவான தமிழர் தலைவர்களாக காமராஜ், முத்துராமலிங்கம் போன்ற இந்திய தேசியத்தை வலியுறுத்தியவர்களை விமர்சனம் அற்று ஆதரிப்பது போல் கூட அயோத்திதாசரையும், இரட்டைமலை சீனிவாசனையும் ஆதரிப்பதில்லை.
ஆதிக்க ஜாதிக்காரர்கள் குறிப்பாக, மீன் உணவு சாப்பிடுவதின் மூலமாககூட மீனவர்களோடு மறைமுகமாக கூட தொடர்பற்ற ‘சைவ’ பிள்ளைமார்கள்,
தன்னுடைய மீனவ சமுதாயத்தை எப்படி இழிவாக பார்க்கிறார்கள், என்கிற கண்ணோட்டம் பிரபாகரனுக்கு இருந்திருந்தால், அவரை தமிழீழ தலைவராக ஆதிக்க ஜாதிக்காரரகள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா?
ஓகஸ்ட்7, 2012 அன்று எழுதியது.
எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்
தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது
‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?
தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத்தமிழர்களும்