கருணாநிதி ஒரு தமிழனத் துரோகி. ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது பதவி சுகம் அனுபவித்தவர். கனிமொழிக்காக கட்சிகளிடம் கையேந்தும் கருணாநிதி, ஈழத் தமிழர்கள் நலனுக்காக இப்படி செய்ததுண்டா? தன் குடுபத்திற்காக கட்சி நடத்துகிறார். இந்தியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவர். திருவாரூரி்ல் இருக்கும்போது சோத்துக்கு சிங்கி அடித்துக் கொண்டிருந்தவர். இன்றைக்கு இந்த நாட்டையே விலைக்கு வாங்கும் அளவிற்கு வசதியானவர். அவரை நீ ஆதரிப்பது நீயும் அவரைப் போல் ஒரு தமிழனத் துரோகியாக இருந்து பணம் சேர்ப்பதால்தான்.
-யாருப்பா நீ? (எழுதியவர் பெயர் குறிப்பிடாததால் இப்படி குறிப்பிட்டிருக்கிறேன்.)
கருணாநிதியை திட்டி எழுதி எனக்கெதுக்கு அனுப்பியிருக்கிறீர்கள்? என்னால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? நானே கஷ்டத்துல இருக்கேன். எங்கிட்ட ஒன்னும் பேறாது.
இத குமுதத்திற்கு அனுப்பியிருந்தாலாவது.. ‘லம்ப்பா’ எதவாது கிடைச்சிருக்கும், இல்ல நல்ல சம்பளத்துல வேலையாவது போட்டுக் கொடுத்திருப்பாங்க. உங்க திறமையை வீண் பண்ணிட்டிங்களே. கூடிய விரைவில் ஜூனியர் விகடன், தினமணியில் சிறப்புக் கட்டுரைகள் எழுதுவீர்கள்.பத்திரிகையுலகில் உங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். வாங்க அடுத்த ‘தமிழருவி’ நீங்கதான்.
இதையும் மீறி இன்னொரு முறையும் இதேபோல் எனக்கு எழுதி அனுப்புனா, 55 ரூபாய்க்கு என் செல்போன் நம்பருக்கு டாப்-அப் பண்ண சொல்லுவேன். Be Careful.
தொடர்புடையவை:
‘நாய் நக்கித்தான் குடிக்கும்’ – அப்போ சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்கும்?

