Site icon வே. மதிமாறன்

தலித்தல்லாதவர் கூட்டணியின் யோக்கியதை..

dead-stick-figure-face-png

 கவுண்டவர் ஜாதி அமைப்பான கொமு பேரவை, ஈரோடு மாவட்டம், பவானி எலவம்பாளையம் பகுதியில் இருக்கும் பொதுசுடுகாட்டில் வன்னியர் பெண் பிணத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு. அங்கு திவிக, பாமக , ஆதித்தமிழர் பேரவை,விசி கட்சி தோழர்கள் பேச்சு வார்த்தை (தகவல் தோழர் பரிமள ராசன்)

*
தலித்தல்லாதவர் கூட்டணியின் யோக்கியதை இதுதான்.

ஒரு வன்னியர் பிணத்தை புதைப்பதற்கு அனுமதி இல்லை. வன்னியர்களின் ஒப்பற்றத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் என்ன செய்கிறார்?

தாழ்தப்பட்டவர் வன்னியப் பெண்ணை காதலித்தால்… கொதிக்கிற ஜாதி உணர்வு, இப்போ எங்கே பதுங்கி இருக்கிறது?

தாழ்த்தப்பட்டவர்களை எதிர்ப்பதற்கு மட்டும் ஒன்று சேருவது… மற்றபடி அவர்கள் ஒருபோதும் வேறு காரணங்களுக்காக ஒன்று சேரவே முடியாது என்கிற இந்து ஜாதி படிநிலை முறையை இது வலுவாக அம்பலப்படுத்துகிறது.

நாயுடு, பிள்ளை, தேவர், முதலியார், வன்னியர் இடுகாடு மற்றும் சுடு காட்டில் பறையர் பிணத்தையும் பறையர் இடுகாட்டில் சக்கிலியர் பிணத்தையும் புதைக்க அனுமதிக்கவும் அதற்காக போராடவும் செய்கிறவர்களுக்கு மட்டுமே இதைக்கேட்பதற்கு யோக்யதை இருக்கிறது.

June 20 அன்று facebook ல் எழுதியது

தமிழ் உணர்வாளரின் தெலுங்கு டப்பிங்

ஜாதியை துண்டாக்கினால் அதற்குள்ளும் ஜாதி..

தெனாலிராமனா-வடிவேலா?; கிருஷ்ணதேவராயனை கூ முட்டையாக்கியது

Exit mobile version