‘ஊத்திக் கொடுத்த..’ என்கிற வார்த்தைதான் கோவன் மீது தேசத்துரோக வழக்குப் போடுவதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ஊத்திக் கொடுத்த என்கிற வார்த்தையைக் கோவன் தன் சொந்த வார்த்தையாகப் பயன்படுத்த வில்லை. அந்த வார்த்தை விஜயகாந்த் பயன்படுத்தியது.
ஜெயலலிதா, விஜயகாந்தை குடிகாரன் என்று சொன்னபோது, ‘இவுங்க தான் எனக்கு ஊத்திக் கொடுத்தாங்களா..’ என்று விஜயகாந்த் மறுத்துப் பேசியதைதான் கோவன் பயன்படுத்தியிருக்கார்.
சரி. கோவன் பயன்படுத்தியது ஆபாசமான வார்த்தை என்றே வைத்துக் கொள்வோம். அதற்காகத்தான் அவருக்குத் தேசத் துரோக தண்டனை என்றால்..
அதிமுக மேடைகளில் ரெக்காட் டான்ஸ் என்ற பெயரிலும் வசனம் என்ற பெயரிலும், ஆபாசமாக ஆணும் பெண்ணும் உடையணிந்து, கருணாநிதியைப்போலவும் குஷ்புவை போலவும் கனிமொழி, தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் குறித்தும்;
நின்னு பாக்கவும் முடியாது கேட்கவும் முடியாது அவ்வளவு ஆபாசமாகக் கீழ்தரமாகத் தமிழகம் முழுக்க எல்லா மேடைகளிலும் முழங்க்கிட்டே இருக்கிறார்கள் அதிமுககாரர்கள். இது காவல்துறையின் பாதுகாப்போடு நடக்கிறது.
கோவன் பயன்படுத்திய ஊத்திக் கொடுத்த வார்த்தைக்கே இவ்வளவு பெரிய தண்டனை என்றால்.. அதிமுக மேடையில் பெண்களை இவ்வளவு வக்கிரமா, கேவலமா பேசுகிற அவர்களுக்குத் தூக்கு தண்டனையே கொடுக்கனும்.
(2.11.2015 வாட்ஸ் அப்பில் நான் பேசி பதிவு செய்து வெளியிட்டது)