Site icon வே. மதிமாறன்

‘மாமன்னன் ’

‘திருமலை நாயக்கர் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்படும்’ முதலமைச்சர் அறிவிப்பு.
தமிழ் சமூகத்தின் மீது பார்ப்பனியத்தை, ஜாதியை, தமிழர் விரோத தீபாவளி போன்ற இந்து பண்டிகையைத் தீவிரமாகத் திணித்த,
பழனி கோயிலை தமிழ் பண்டாரங்களிடமிருந்து பிடுங்கி, பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தந்த மாமன்னன் திருமலை நாயக்கன்.
திருமலை நாயக்கரை கொண்டாடுவது பார்ப்பனியத்தை கொண்டாடுவதே.
9 January

*

‘கரிகாலன், கட்டபொம்மன், மருது சகோதரர்கள்’ தமிழ் மண்ணில் ஆண்ட மிகச் சிறந்த மன்னர்கள். மற்றவர் பார்ப்பன அடிமைகள்.
கட்டபொம்மனும், மருதுவும் வெள்ளையனை எதிர்த்து வீரப் போர் புரிந்தததில் மட்டுமல்ல, பார்ப்பன ‘பண்பாட்டு’க்குப் பலியாகாமல் ‘சமூக நிதி’ அரசியலிலும் மன்னர்கள்.

அதனால்தான் சுதந்திரப் போராட்டம் குறித்துச் சிலாகிக்கிற பாரதி போன்ற பார்ப்பன அறிவாளிகள்; கட்டபொம்பன், மருது சகோதரர்களைக் கொண்டாட மறுக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; பெயர்களைக் குறிப்பிட கூட மறுக்கிறார்கள்.
10 January

Exit mobile version