Site icon வே. மதிமாறன்

நான் ஏன் நோபல் பரிசை புறக்கணித்தேன்?

நம்புனா நம்புங்க. நம்பாட்டி போங்க.
இந்த ஆண்டு எனக்குத் தருவதாக இருந்த, அமைதிக்கான நோபல் பரிசை நான் மறுத்து விட்டேன்.
பரிசுக்கான பெயர் பட்டியல் வரும்போது, அதுல என் பெயர் நிச்சயம் இருக்காது. அப்ப தெரியும் என் நேர்மையும் உண்மையும்.
*

‘நான் ஏன் நோபல் பரிசை புறக்கணித்தேன்?’ இதோ ஆதாரம்
தங்கம் 2012 சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்:
கலைமாமணி விருது, தேசிய விருது, ஆஸ்கார் விருது, நோபல் பரிசு, ஞானப்பீட விருது இவைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? -கு. சிவகுமார், பொள்ளாச்சி.

எப்போதாவது, சரியான நபர்களுக்கு இந்த விருதுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்த விருதுகளின் நோக்கம் வேறு ஒரு அரசியல் பின்னணியை நிறுவுவதுதான்.

சர்வதேச அளவில் நோபல் பரிசு போன்ற விருதுகள், ஒரு உண்மையான கம்யுனிஸ்டுகளுக்குக் கொடுத்ததே இல்லை.
‘மனித குலம் தோன்றியதிலிருந்து இப்படி ஒரு மகத்தான மனிதனை பார்த்ததில்லை’ என்று வியக்கிற அளவிற்கு அறிவாளியான காரல் மார்க்சுக்கு எந்தச் சர்வதேச விருதுகளும் தந்ததில்லை.

ஏனென்றால், அந்தச் சர்வதேச விருதுகள் எல்லாம் மார்க்சியத்திற்கு எதிராக. கம்யுனிஸ்டுகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டவைதான்.

மற்றபடி, பெருபான்மையான விருதுகள், நடனமே தெரியாத, சரோஜாதேவியைப் பார்த்து, ‘ஆடப் பிறந்தவளே ஆடிவா..’ என்று எம்.ஜி.ஆர், பாடினாரே அதுபோல்தான் தரப்பட்டிருக்கிறது.

இப்பவாவது நம்புறீங்களா?
*
நான் நோபல் பரிசை வேணான்னு சொன்னத, நீங்க நம்பவே இல்லங்றது எனக்குத் தெரியும். ஏன்னா அத நானே நம்பள.

நீங்களும் நானும் நம்புற மாதிரி வேற ஒரு விருது சொல்றேன்;
அடுத்த வருசம் எனக்குக் கொடுக்கப் போறதா இருந்த, ‘பத்ம ஸ்ரீ’ விருதை வேணான்னு சொல்லிட்டேன். இப்போ நம்புறீங்க இல்ல. நானும் நம்புறேன்.

Exit mobile version