இளையராஜாவிற்கு விருது, பெருமை சேர்க்காது

Best popular film விருது Bajrangi Bhaijaan என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகச் சிறந்த பொழுது போக்குப் படம்.

ஆனால், ஒவ்வொரு காட்சியும் அன்பினால் நெய்யப்பட்டது. குபீர் சிரிப்பு, நெகிழ வைத்து கண்கலங்க வைக்கிற காட்சிகள் நிறைய.
நாயகனின் பார்ப்பனக் குடும்பச் சூழல் கதைக்கு மிக அவசியம். அவனை இந்து அமைப்பைச் சேர்ந்தவனாகக் காட்டியதை தவிர்த்திருக்கலாம்.

கதை பாகிஸ்தான் – இந்தியா பிரச்சினையோடு தொடர்புடையது என்பதாலும், நாயகனாக நடித்த சல்மான் கான் முஸ்லீம் என்பதினாலும் இந்துத்துவ அடையாளம் அழுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது.

கர்ப்பினி பெண்ணின் வயிற்றைக் கிழித்துக் கொலை செய்கிற இந்து அமைப்பிலிருந்து வந்தவன், ஒரு குழந்தைக்காகப் பல தியாகங்கள் செய்ய முடியும்? மற்றபடி, நான் கொண்டாடிப் பார்த்தப் படம்.
*
Piku அமிதாப்பை சிறந்த நடிகராக ஆக்கியிருக்கிறது. சரியான தேர்வு. Piku விற்கும் சிறந்த படத்திற்கான விருது அல்லது திரைக்கதைக்கான விருது தந்திருக்கலாம். இப்படி ஒரு வாழ்க்கையை இதுவரை எனக்குத் தெரிந்து யாரும் சொன்னதில்லை.

தந்தை – மகளுக்குமான உறவை, பெண்களின் அன்பின் இன்னொரு பரிமாணத்தை நுட்பமாக, நவீனமாகச் சொன்னதற்குச் சிறப்பு விருது கிடைத்திருக்க வேண்டும்.
இயந்திரங்களால் (CG) உருவாக்கப்பட்ட பாகுபலி யோடு ஒப்பிடும் போது, மனிதர்களின் உன்னத உணர்வுகளால் உருவான Piku 100 முறை சிறந்த படம்.

மற்றபடி இளையராஜாவிற்குத் தந்திருக்கிற விருது, அவருக்கு ஒரு போதும் பெருமை சேர்க்காது. திருவள்ளுவருக்குக் கலைமாமணி விருதா கவுரம் தரப்போகிறது?
இந்த விருதை அவர் நேரில் சென்று வாங்குவார் என்று எனக்கு நம்பிக்கையில்லை.

4 thoughts on “இளையராஜாவிற்கு விருது, பெருமை சேர்க்காது

  1. Sushiavenkatesan Susi · 2 mutual friends
    Supper
    Unlike · Reply · 1 · 5 hrs
    Madhanmeeransait
    Madhanmeeransait இளையராஜாவிற்கு கிடைத்த விருது அவருக்கு சாதாரணம் ஆனால் எனக்கு சந்தோசம்தான் இன்னும்பெரிய விருதுகள்லா அவருக்குகிடைக்கணும்
    Unlike · Reply · 3 · 5 hrs
    Bharathi Mithran
    Bharathi Mithran GANGAI amaran thaan award ku kaaranam nu sila madayanunga sollittu thiriraanunga
    Like · Reply · 5 hrs
    Mohamed Ismail
    Mohamed Ismail BB ungalukku pidithirunthathaa?
    See translation
    Like · Reply · 4 hrs · Edited
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi என்ன புரியலையே
    Like · Reply · 4 hrs
    Mohamed Ismail
    Mohamed Ismail Bajrangi Bhaijan padam ungalukku piditha padamaannu aacharyapatten
    Like · Reply · 4 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi கதை சொல்லப்பட்ட விதம்.
    Like · Reply · 1 · 4 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Azhagiri Elumalai
    Azhagiri Elumalai · 7 mutual friends
    till now he never taken pazhasiraja film award itself, award should be given entire film score including songs, thats the origiginal catogary ,its insulting him for giving only for movie background score, it’s happening 2nd time for him
    Like · Reply · 3 hrs

  2. முதலில் மண்டையை போடும் முன் இளையராஜா தாழ்த்தப்பட்ட தலித் எனும் ஜாதி சாக்கடையிலிருந்து வெளியேற வேண்டும். அவருடைய மகன் யுவன் சங்கரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

    வயதான காலத்தில் எந்த நேரமும் அல்லாஹ்வின் அழைப்பு வரலாம். மரண தூதர் கதவை தட்டும் முன், திருக்குரானை ஓதி, ஷஹாதா சொல்லி, இஸ்லாத்தை தழுவட்டும். இதுதான் அவருக்கு அவரே தரக்கூடிய மிகப்பெரிய விருது.
    ——————————

    அல்லாஹ்வின் மரண தூதரின் வருகைக்காக காத்திருக்கும் மூதாட்டி வப்பாட்டி ஜெயலலிதா, தீண்டத்தகாத முதியவர் இளையராஜா, பழுத்த பணங்காட்டு நரி கருணாநிதி ஆகியோருக்காக:

    “ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
    தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
    கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?

    வீடு வரை உறவு வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?”

  3. “பேசுவது தேச பக்தி, செய்வது நாட்டை மறுகாலனியாக்குவது! பார்ப்பன பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம்!” — தோழர் கோவன் – வினவு.

    “ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நமது முன்னோர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது ஆர்.எஸ்.எஸ் –ன் மூதாதையர்கள் அன்னிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடவில்லை. மாட்டுக்காக போராடினார்கள். ‘கோமாதா தான் தாய். கோமாதா தான் தெய்வம். மாட்ட பாதுகாக்கனும்’ என்று தேசவிடுதலைப் போராட்டத்தை திசை திருப்பினார்கள். எனவே இவர்களுக்கும் தேசவிடுதலைப் போராட்டத்துக்கும் தேசபக்திக்கும் துளியும் சம்மந்தமில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு.
    —————————————–

    மோடி அரசின் தேசத் துரோக நடவடிக்கைகள் ஏராளம்.

    அணுஉலை என்பது மற்ற மின்சாரம் தயாரிக்கும் முறைகளை விட பாதுகாப்பு குறைவானது. நம்ம நாட்டுல நீர், காற்று, குப்பைகள் போன்ற மாற்று எரிசக்திகள் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால், அணு உலைகள் தயாரித்து விற்கும் பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்துக்காக இந்தியாவில் அணு உலைகள் அமைக்கப்படுகின்றன. அதற்கு வழிவகுக்கு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரசு ஆட்சிக்காலத்தில் துவங்கிய இந்த வேலையை இப்போது வேகமாக அமுல்படுத்தும் வேலையில் பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஈடுபட்டு வருகின்றது.

    போபாலில் மெத்தில் ஐசோ சயனைடு வாயுவை கசியவிட்டு ஒரே இரவில் 30,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதையொத்த பாதிப்புகளை உருவாக்க காத்திருக்கின்றன அணுஉலைகள். ஆனால், ‘அணுஉலை மூலம் பாதிப்பு ஏற்பட்டால் நட்ட ஈடு தரமுடியாது’ என்று அணுஉலையை சப்ளை செய்கின்ற பன்னாட்டு கம்பெனிகள் சொல்கின்றன. இதனை ஏற்றுக்கொண்டு சர்வதேச அணுசக்தி கழகத்தில் நடந்த பேச்சுவார்த்தை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார் மோடி. அதன்படி, ‘அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் நட்டஈடு தரமுடியாது. வேண்டுமானால் இந்திய மக்களின் வரிப்பணத்தில் இருந்து எடுத்துக்கொள்ளலாம்.’ ஆகவே, நட்டத்தையும் – இழப்பையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் மோடி. இந்த நடவடிக்கைக்கு கையெழுத்து போட்டது தேசபக்தி நடவடிக்கையா? இது ஒரு அப்பட்டமான தேசத்துரோகம் இல்லையா?
    ————————————

    கென்யாவில் நைரோபியில் நடந்த (WTO) உலக வர்த்தக கழகத்தின் மாநாட்டில் ‘உங்கள் நாட்டில் கொடுக்கப்படும் மானியங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்’ என்ற நிபந்தனையை மோடி அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ரேசனில் அரசு போடும் இலவச ரேசன்அரிசியை நம்பி உயிர்வாழும் மக்களுக்கு அதையே வாய்க்கரிசியாக மாற்றுவதற்கு, ரேசன் மானியத்தை ரத்து செய்து, 2018-க்குள் ரேசன் கடையை மூடிவிடுவதாக மோடி கையெழுத்திட்டுள்ளார். இது என்ன தேசபக்தி நடவடிக்கையா? இதற்கு பெயர்தான் வல்லரசு நாடா? என் நாட்டு மக்களை பட்டினி போட்டுவிட்டு, அரைகுறை உணவுக்கும் வேட்டு வைத்துவிட்டு என்ன தேசபக்திய பத்தி பேசுற நீ ! நீ செய்யக்கூடிய இந்த வேலைக்கு பெயர் தேசத்துரோகம் இல்லையா? அவனுடைய தேசத்துரோகத்தை மூடிமறைப்பதற்குதான் எங்களை தேசத்துரோகியென முத்திரை குத்துகின்றான்.
    ——————————————–

    நம்ம தமிழ் நாட்டுல இந்து முன்னணிக்காரன் வீட்டில குண்டுவெடிச்சா அங்குள்ள இசுலாமியர்கள் மீது பழிபோடுவது, இறுதி விசாரணையில் குண்டுவைத்தது இந்து மக்கள் கட்சி பிரமுகர், இந்துமுன்னணி பிரமுகர், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் என அம்பலப்பட்டு போவதுதான் நடக்கின்றது. இவர்களே குண்டுவைத்துவிட்டு இசுலாமியர்கள் மீது பழியைப் போட்டு பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டை பெறுவது என்ற குறுக்கு வழியைதான் கடைபிடிக்கின்றார்கள்.

    அப்படித்தான் உ.பி-யில் முசாபர்நகர் படுகொலை நடந்தது. லவ் ஜிகாத் என்ற நிகழ்வை நடத்தி இந்துப் பெண்களை இசுலாமிய இளைஞர்கள் மயக்கி கவர்ந்து செல்கின்றார்கள் என்ற பொய்யைச் சொல்லி அதன் மூலமாக 40-க்கும் மேற்பட்ட இசுலாமியர்களை படுகொலை செய்தார்கள் அதன்பின் உ.பி தேர்தலில் 70-க்கும் மேற்பட்ட இடங்களை பி.ஜே.பி கைப்பற்றியது.
    ————————————–

    இன்று தமிழகத்தில் கூட்டணிக்கு செல்ல யாரும் தயாரில்லை. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் வடமாநிலத்தில் குண்டு வைத்தது போல் இங்கும் குண்டுவைத்தால் வெற்றி பெற்றுவிடலாம். அதன் பிறகு மக்கள் நலக் கூட்டணியாவது, அய்யாவோட, அம்மாவோட கூட்டணியாவது. ஒரே கூட்டணி நாம்தான் என்ற கனவில் உள்ளனர். குண்டு வைப்பது அவர்களுக்கு ஒரே ஒரு எளிமையான வழி. அதனைப் பயன்படுத்தி பொது எதிரியை சித்தரிப்பதும் அதனை வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிப்பதும் நடக்கின்றது.
    —————————————-

    இப்படிதான் மாட்டுகறி வைத்திருந்ததாக கூறி ஒரு இஸ்லாமிய முதியவரான அக்லக் என்பவரை கொலை செய்தது, இந்துத்துவ கும்பல். அவரது மகன் சங்க பரிவார கும்பலால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையிருமாய் மருத்துவமனையில் கிடக்கின்றார். இப்பிரச்சனையை ஆய்வு செய்தபோது அங்கிருந்தது மாட்டுகறி அல்ல ஆட்டுக்கறி என்பது நிரூபணமானது. இப்போது சொல்லுங்கள் செத்துப் போனவரை உயிரோடு கொடுக்க முடியுமா? என மக்கள் கேட்கின்றனர். இறந்து போன முதியவரின் மகள்கள் இருவருக்கும் அவ்வூரில் உள்ள இந்துக்கள் இணைந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். மக்களுக்கு மதம் வேறாக இருந்தாலும் ஒரு தாய் பிள்ளையாக வாழ்ந்து வருகிறோம் என நிருபித்துள்ளனர்.

    ஹரியானாவில் மாட்டு தோலை உரித்த குற்றத்திற்காக இரு இளைஞர்களை அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார்கள். மதம் – சாதி மாறி காதலித்தால் வெட்டி கொல்கிறார்கள். தற்போது கூட உடுமலைபேட்டையில் சங்கர் என்கிற தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். பசுமாட்டுக்கும் காளைமாட்டுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பல். இந்த கும்பல் தான் மதம் – சாதி மாறி காதலித்த தம்பதிகளை வெட்டி கொல்கிறார்கள். விலங்குகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட மனிதர்களுக்கு கொடுப்பதில்லை.
    ————————————————-

    மராத்வாடா பல்கலைகழகம், தமிழகத்தில் கோவை கலவரம், ஹரியானாவில் ஹூண்டாய் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க என எல்லா வகையிலும் தாழ்த்தப்பட்ட மக்களை அடியாளாக பயன்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல் தான் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை வெட்டி கொல்கிறார்கள். எனவேதான், ‘நான் பிறக்கும் போது இந்துவாக பிறந்தேன். சாகும் போது இந்துவாக சாக மாட்டேன்’ என முழங்கியதோடு மட்டுமல்ல ஆயிரக்கணக்கான மக்களுடன் பௌத்த மதத்தை தழுவினார் அம்பேத்கர். இவரை தூக்கிக் கொண்டு விழா நடத்தும் பார்பன தேச துரோகிகள் தான் தாழ்த்தப்பட்ட மக்களை வெட்டி கொல்கிறார்கள். யாரெல்லாம் ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்க்கிறோர்களோ அவர்கலெல்லாம் தேச துரோகிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள்.
    ————————————–

    வெள்ளைக்காரன் ஆட்சி தொடங்கி இன்று வரை காட்டிக் கொடுப்பதும், கூட்டிக்கொடுப்பதும் தான் ஆர்.எஸ்.எஸ்-ன் தொழிலாக உள்ளது. இத்தகைய வஞ்சக சதிகளுக்கு எதிராக அன்றே ராஜகுரு, சுகதேவ், பகத்சிங் போன்ற எண்ணற்ற தியாகிகள் போராடியுள்ளனர். அவர்களின் பாதையிலே செல்வதின் மூலமே நாம் மக்களுக்காக அதிகாரத்தை நிலை நாட்ட முடியும். தேசத் துரோகிகளாகவும் ஒட்டுமொத்த சமூகத்திற்கே அச்சுறுத்தலாகவும் உள்ள பார்ப்பன இந்துமதவெறி பாசிச கும்பல் நாட்டுப் பற்று குறித்தோ, தியாகம் குறித்தோ பேசுவதற்கு கிஞ்சித்தும் அருகதை இல்லை. நாடு மீண்டும் அடிமையாவதையும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்ன பாசிசத்தையும் முறியடிக்க வேத பார்ப்பனிய எதிர்ப்பை மரபாகக் கொண்ட தமிழ் பாரம்பரியத்தின் படைகளாக இயங்குவோம்” என தனது உரையை முடித்தார்.

  4. ///“பேசுவது தேச பக்தி, செய்வது நாட்டை மறுகாலனியாக்குவது! பார்ப்பன பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம்!” — தோழர் கோவன் – வினவு.////
    விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 9
    நன்றி https://senkodi.wordpress.com/2016/03/29/unarvu-9/

Leave a Reply

%d bloggers like this: