ஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்

2
ஜாதி ஒழிப்புப் பணியில் டாக்டர் அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பு வழியை ஏற்று செயல்பட்டவர் தந்தை சிவராஜ். தமிழ் நாட்டில் டாக்டர் அம்பேத்கரை தலித் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர்.

மிக நெருக்கடியான காலங்களில் பல தலித் தலைவர்கள் காந்திக்கும் காங்கிரசுக்கும் தீவிர ஆதரவாளர்களாக மாறி டாக்டர் அம்பேத்கருக்கும் தலித் மக்களுக்கும் துரோகம் செய்தபோது, அவர்களை அம்பலப்படுத்தி டாக்டர் அம்பேத்கருடன் நின்றவர்.

1940 ல் மகாராஷ்ட்டிரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரம்மாண்ட மாநாட்டை டாக்டர் அம்பேத்கர்; தந்தை சிவராஜ் தலைமையில் தான் நடத்தினார். அந்த அளவுக்கு சிறப்பு மிக்கவர்.

ஜாதி ஒழிப்பை இந்து மத எதிர்ப்பு வழியாகத்தான் செய்ய முடியும் என்று புரிந்து மனு தர்மத்தை கொளுத்தியவர். பெரியார் மீது பேரன்பு கொண்ட தலைவர்.

இந்திய அளவில் டாக்டர் அம்பேத்கரையும் தமிழகத்தில் பெரியாரையும் வழிகாட்டியாக ஏற்று செயல்பட்டவர். சிறப்புமிக்க தந்தை சிவராஜின் பிறந்த நாள் இன்று.(29-09-2015)

29 September

36 thoughts on “ஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்

  1. Senthilkumar Venkatachalam வாழ்க தந்தை சிவராஜ் அய்யா
    Unlike · Reply · 5 · 29 September at 07:48
    Sathya Chella
    Sathya Chella · 7 mutual friends
    semma heart emoticon
    Unlike · Reply · 1 · 29 September at 08:19
    ரபியுத்தீன் ரபீக்
    ரபியுத்தீன் ரபீக் இது வரை இவரை இருட்டடிப்பு செய்து விட்டார்கள்
    Unlike · Reply · 6 · 29 September at 08:38
    Ahamed Anis Ahamed
    Ahamed Anis Ahamed · 2 mutual friends
    இப்படி பட்ட . பெரியவர்களை நமக்கு அடையாளம் காட்ட தலைவர்கள் முயல வேண்டும்.பிறந்த நாள் வாழ்த்துகள்
    Unlike · Reply · 4 · 29 September at 09:04
    Kumar Duraisamy
    Kumar Duraisamy தகவலுக்கு நன்றி.(இன்னைக்கு அரசின் விளம்பரம் பார்த்தேன் ,யார் என்று தெரியால் யோசிந்தேன் ..)
    Unlike · Reply · 4 · 29 September at 09:17 · Edited
    லெனின் லெட்சுமி
    லெனின் லெட்சுமி வெகு ஜனங்களிடம் கொண்டு சேர்ப்போம்
    Like · Reply · 1 · 29 September at 09:26
    Mohamed Faizal
    Mohamed Faizal Nalla thagaval thandhadhruku mikka nandri thozhare
    Like · Reply · 29 September at 09:30
    Kuhanandan Lingam
    Kuhanandan Lingam · Friends with Guna Raj and 33 others
    தோழர் தங்களின் பதிவை ஆவலாகவும் எதிர்ப்பார்ப்புடன் எதிர் நோக்கும் தோழர்களுக்கு இது போன்ற பதிவுகளின் மூலம் வகுப்பெடுக்கும் உங்களின் பணி வாழ்க! தொடர்க!!
    Like · Reply · 5 · 29 September at 09:30
    சாக்கிய சசி
    சாக்கிய சசி · Friends with பசி தி.வி.க and 24 others
    அண்ணல் அம்பேத்கரை பின்பற்றியவர்களின் பலரின் வலாற்றை புதைப்பதில் பெரியார் வல்லவராக நின்ற போதும் அவரை பின்பற்றும் சிலர் இது மாதிரியாக செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. வாழ்த்துக்கள் வே.மதிமாறன் அண்ணா
    Like · Reply · 1 · 29 September at 10:03
    Mothi Baba
    Mothi Baba · Friends with ம.கு வைகறை
    Sir, I keep hearing that Dr.Baba Saheb Ambedhkar supported the motion to make Sanskrit the official language of India.I went through the constituent assembly debates where Hindi was voted to a 78-77 but there i find no mention of sanskrit being supported.They quote a P.T.I. message, dated 10th September 1949. Please clarify with authentic links the truth,Did Ambedhkar supported Sanskrit or not ?
    Like · Reply · 29 September at 10:14 · Edited

    Mothi Baba replied · 1 Reply
    Suresh Babu
    Suresh Babu · Friends with Thozhi Malar and 1 other
    இவர்கள் எல்லாம் நான் படித்த வரலாறில் பார்த்ததே இல்லை… gasp emoticon
    Like · Reply · 29 September at 10:49
    Kumaresan Karumpuli
    Kumaresan Karumpuli · Friends with வழக்குரைஞர் மு.சென்னியப்பன்
    ஐயா வாழ்க சிவராஜ் அவர்கள் புகழ் திகாம் வாழ்க
    Like · Reply · 29 September at 11:38
    Chandra Sambandam
    Chandra Sambandam · Friends with Annamalai and 6 others
    மறைக்கப்பட்ட தலைவர்கள்……. தங்களது பணி வரும் தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும்
    Like · Reply · 2 · 29 September at 11:39
    Sugumar Sugu
    Sugumar Sugu · 129 mutual friends
    தந்தைசிவராஜ் சிறந்த சுயமாியாதைக்காரா்
    தீவிரஇந்துமதஎதிர்ப்பாளர் அதனால் தான் வடமாநிலங்களில் நடந்த மாநாடுகளில் தலைமையேற்க புரட்சியாளா் அழைத்தார்
    Like · Reply · 2 · 29 September at 11:42
    Suresh Nathan
    Suresh Nathan · Friends with Vck Immanuvel and 4 others
    அய்யாவுக்கு நாம் அனைவரும் கடமைபட்டவர்கள்…
    Like · Reply · 29 September at 12:10
    Karpanai Pithan
    Karpanai Pithan · Friends with த.அறிவு மதி and 1 other
    யாருடைய வரலாற்றையும் புதைக்க வேண்டிய அவசியம் பெரியாருக்கு இல்லை தோழர் சசி அவர்களே குடியரசை முழுமையாக வாசிக்கவும் அல்லது மதிஅண்ணாவிடம் நிங்களே கேட்கவும்
    Like · Reply · 3 · 29 September at 13:29
    Nandha Kumar
    Nandha Kumar · 6 mutual friends
    அய்யாவுக்கு நாம் அனைவரும் கடமைபட்டவர்கள்… அய்யா மன்னியயுங்கள்
    Like · Reply · 29 September at 15:38
    Nandha Kumar
    Nandha Kumar · 6 mutual friends
    அய்யாவின் மனைவி திருமதி மீனாட்சி அம்மா நாம் மரந்துள்ளோம் தோழர்களே
    Like · Reply · 29 September at 15:44
    Subramaniam Maniam
    Subramaniam Maniam · 3 mutual friends
    Like · Reply · 29 September at 16:37
    Anbu Subhash
    Anbu Subhash · Friends with Sirpi Rajan and 6 others
    நன்றி
    Like · Reply · 29 September at 17:13
    Pachiappan
    Pachiappan · Friends with Ezhilan Naganathan
    Thanks Anna…..
    Like · Reply · 29 September at 18:24
    Packia Raj
    Packia Raj priyarucku nikarana thalaivar anna
    Like · Reply · 29 September at 19:08

    Gowtham P replied · 1 Reply
    Ambeth Kar
    Ambeth Kar i will salute the leader
    Like · Reply · 29 September at 19:39
    Azhim Basha
    Azhim Basha · Friends with Ahmed Gulam and 1 other
    Happy birthday
    Like · Reply · 29 September at 22:42
    Suresh GS
    Suresh GS · 2 mutual friends
    எங்களை வாழ வைத்தமைக்கு நன்றி!!!
    Like · Reply · 29 September at 23:03
    Sathya Murthy
    Sathya Murthy · Friends with Annamalai and 8 others
    தகவலுக்கு நன்றி
    Like · Reply · 1 · 30 September at 11:12
    Lakshmi Kanthan
    Lakshmi Kanthan · Friends with தமிழர்களே இணைவோம்
    Vazhga avar pugazh
    Like · Reply · 30 September at 13:45
    Mathan Krithik
    Mathan Krithik · Friends with Radhapuram Vicemurugesan
    Thanks
    Like · Reply · 2 October at 13:29

  2. தந்தை,(பேராசிரியர் )என் .சிவராஜ். B.A., B.L.,Ex.MP.,Ex.Mayor (29/9/1892 – 29/9/1964): வாழ்க்கை வரலாறு:

    சில முக்கிய குறிப்புகள் தந்தை சிவராஜ் குறித்து :-

    1. தனக்கு துணை நீதிபதி பதவி தந்ததை ஏற்காமல் மக்கள் பணி செய்வதை உயர்வாக கருதினார்.பழங்குடி சமுதாயம் முன்னேற பொதுவாக கல்வியும் குறிப்பாக சட்ட அறிவும் இருக்க வேண்டுமென்றார்.

    2. தந்தை சிவராஜ் மற்றும் மீனாம்பாள் சிவராஜ் தம்பதியர்கள், ஆதிதிராவிட மகாஜன சபா, ஜஸ்டிஸ் கட்சி , சுயமரியாதை இயக்கம், ஆகியவற்றுடன் இணைந்து சாதி ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு மறியல் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டனர்.(நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இவரை நன்கு பயன்படுத்திக்கொண்டன )
    3. மாணவர் விடுதிகள் நகரில் பல இடங்களில் தோன்றக் காரணமாயிருந்தார்.
    4. ஆதிதிராவிட மக்கள் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது என்பவை மனித உரிமைக்கு துரோகமானது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட தனி அதிகாரியினை நியமிக்க வேண்டுமென சட்ட சபையில் முழங்கியவர்
    5. தாத்தா இரட்டை மலை சீனுவாசனாருடன் டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர் அமைத்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்திற்கு (A.I.S.C.F) 1942 முதல் தலைவராக இருந்தவர்.
    6. சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் கலந்துக்கொண்டு இந்திய ஏழை மக்களின் இடர்பாடுகளை விளக்கினார்.
    7. 1946 இல் மக்களின் இழிவுகளை நீக்கி இன்னல்களை போக்க ஏதும் நடவடிக்கை எடுக்காததால் ஆங்கில அரசை எதிர்த்து அவர்கள் தந்த திவான் பகதூர் என்ற பட்டத்தை உதறித்தள்ளினார்… இந்தியர்களையும், ஆங்கிலயேர் களையும் தட்டிக்கேட்கும் வகையில் 1946 இல் ஜெய் பீம் என்ற ஆங்கில வார இதழை துவக்கி நடத்தினார்.நம் பூர்வீக பவுத்த நெறியினை மக்களிடையே பரப்பினார்.
    8. 1945-46 ல் சென்னை மாநகர மேயராக பதவி வகித்தார். அப்போது கல்விக்காக 16 பள்ளிகளை ஏற்படுத்தி, இலவச உணவும் அளிக்கச்செய்தார்.
    —————————-

    சிந்திப்பதெல்லாம் முற்போக்காகவம் செயல்படுவதெல்லாம் மக்களின் நன்மைக்காகவும் இருத்தலை கொள்கையாகக் கொண்டோர் தங்கள் செல்வாக்கின் முத்திரையை மக்கள் உள்ளத்தில் ஆழ பதித்துச் செல்வார்கள் அப்பெருமைக்குரியவர் தலைவர் தந்தை என் .சிவராஜ் அவர்கள்.

    வறுமை என்னவென்று தெரியாத நமசிவாயம் -வாசுதேவி தம்பதியருக்கு சென்னை ராஜஸ்தானியில் ஒன்றிணைந்த கடப்பா ஜில்லாவில் 1892 செப்டம்பர் 29 ஆம் தேதி பிறந்தார்.
    ——————–

    கல்விப்பணி:
    4 ஆம் வகுப்பு வரை தன் வீட்டிலேயே படித்தார். பின் சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் அப்போது தலைமை ஆசிரியராக இருந்த டி.ஜான்ரத்தினம் அவர்களிடம் 5 ஆம் வகுப்பு பயின்றார். தனது மெட்ரிக் படிப்பை முடித்து வெஸ்லி கல்லூரியில் ‘இண்டர்மீடியேட்’ பயின்றார்.

    பிறகு சென்னை மாநிலக்கல்லூரியில் B.A பட்டம் பயின்றார். இக்கல்லூரியில் டாக்டர் இராதாக்கிருஷ்ணன் இவரின் ஆசிரியராக இருந்தது சிறப்புக்குரியது.

    பின் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பினை முடித்தார். மேலும் சட்டக் கல்லூரியில் 3 ஆண்டுகள் பேராசியராக பணியாற்றினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழக்காட தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தனக்கு துணை நீதிபதி பதவி தந்ததை ஏற்காமல் மக்கள் பணி செய்வதை உயர்வாக கருதினார்.

    பழங்குடி சமுதாயம் முன்னேற பொதுவாக கல்வியும் குறிப்பாக சட்ட அறிவும் இருக்க வேண்டுமென்றார்.
    ————————-

    குடும்பம்:
    1918 ஜூலை 10 ல் தனது 26 ஆம் வயதில் அன்னை மீனாம்பாளை வாழ்க்கை இணையராக்கிக்கொண்டார்.

    தம்பதிகள் ஆதிதிராவிட மகாஜன சபா, ஜஸ்டிஸ் கட்சி , சுயமரியாதை இயக்கம், ஆகியவற்றுடன் இணைந்து சாதி ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு மறியல் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டனர்.(நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இவரை நன்கு பயன்படுத்திக்கொண்டன )

    கல்யாணி, தயாசங்கர், பத்மினி, போதி சந்தர் என 4 மகவுகள் இவர்களுக்கு பிறந்தனர்.

    பவுத்தத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக இருவரும் பின்பற்றினர்.
    ——————

    அரசியல் பணி:
    சென்னை மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் செனட் உறுப்பினராக தந்தை திகழ்ந்தார்.
    மாணவர் விடுதிகள் நகரில் பல இடங்களில் தோன்றக் காரணமாயிருந்தார்.
    மக்கள் சொந்த நிலா விவசாயிகளாக மாறாத வரையில், அவர்களுடைய அடிமைமுறை மாறாது என்ற கொள்கையே உடையவர்.

    அப்பொழுது மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ள பெரு முதலாளிகளுக்கு சரி நிகராக பந்தயக்குதிரைகளை வைத்து போட்டிகளில் வென்று காட்டியவர்.

    ஆதிதிராவிட மக்கள் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது என்பவை மனித உரிமைக்கு துரோகமானது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட தனி அதிகாரியினை நியமிக்க வேண்டுமென சட்ட சபையில் முழங்கியவர்.

    சென்னை மாகாண தாழ்த்தப்பட்ட சம்மேளனத்தின் பொதுச்செயலாளராகவும், சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் துணைத் தலைவராகவும் இருந்தவர்.

    தாத்தா இரட்டை மலை சீனுவாசனாருடன் டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர் அமைத்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்திற்கு (A.I.S.C.F) 1942 முதல் தலைவராக இருந்தவர்.
    சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் கலந்துக்கொண்டு இந்திய ஏழை மக்களின் இடர்பாடுகளை விளக்கினார்.

    1946 இல் மக்களின் இழிவுகளை நீக்கி இன்னல்களை போக்க ஏதும் நடவடிக்கை எடுக்காததால் ஆங்கில அரசை எதிர்த்து அவர்கள் தந்த திவான் பகதூர் என்ற பட்டத்தை உதறித்தள்ளினார்.இந்தியர்களையும், ஆங்கிலயேர் களையும் தட்டிக்கேட்கும் வகையில் 1946 இல் ஜெய் பீம் என்ற ஆங்கில வார இதழை துவக்கி நடத்தினார்.

    பிறகு டாக்டர் அம்பேத்கர் A.I.S.C.F ஐ கலைத்து விட்டு அகில இந்திய குடியரசுக் கட்சியை அமைத்தார்.

    1956 முதல் அக்கட்சியின் தலைவராக தந்தை சிவராஜ் ஏக மனதாக நாக்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிக்காலம் வரை அப்பொறுப்பினை வகித்தார்.
    ————-

    இந்து மதத்தினை புறக்கணித்து விட்டு , மதம் மாறினால்தான் , நாம் ஒரு தனி இனமாக உரிமைக்குரல் எழுப்பிட முடியும்,போராட முடியும் என வலியுறுத்தினார்.

    நம் பூர்வீக பவுத்த நெறியினை மக்களிடையே பரப்பினார்.

    1945-46 ல் சென்னை மாநகர மேயராக பதவி வகித்தார். அப்போது கல்விக்காக 16 பள்ளிகளை ஏற்படுத்தி, இலவச உணவும் அளிக்கச்செய்தார்.

    1944லும் 1960 லும் பாராளுமன்ற உறுப்பினரானார். அங்கு பல செயற்குழுக்களில் பங்கேற்று நாட்டிற்கு செயல்வகை மிகுந்த திட்டங்களை தந்தார்.

    இந்திய பழங்குடி மக்களின் நன்மைக்காக போராட்ட சென்ற இந்த அன்புத் தலைவர் 1964 செப்டம்பர் 29 ஆம் நாள் அதிகாலை 5.30 மணிக்கு மாரடைப்பால் பிரிவினை அடைந்தார்.
    —————-
    http://vizhithezhuiyakkam.blogspot.ae/2013/09/blog-post_4274.html

  3. அன்னை மீனாம்பாள் சிவராஜ் ( 26/12/1904 – 30 -11 -1992):

    பழங்குடி மக்களுக்கு மாதர் தரப்பில் கிடைத்த தாய் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள். அறிவிலும் ஆற்றலிலும் பெருமையுடன் திகழ்ந்தவர். அன்னை அவர்கள் நாடறிந்தவர். குறிப்பாகவும் சிறப்பாகவும் பழங்குடி மக்களின் வாழ்வுப் போராட்ட சரித்திரத்தில் அவருக்கு நிறைவான இடம் ஒதுக்கப்பட்டே ஆக வேண்டும்.

    அன்னை மீனாம்பாள் குறித்து சில முக்கிய குறிப்புகள்:-

    பல்வேறு மகளிர் போராட்டங்களில் தலைமை ஏற்று வழி நடத்தியவர் அன்னை மீனாம்பாள்.

    திராவிட கழக தலைவர் ஈ. வெ. ராமசாமிக்கு “பெரியார்” என்ற பெயர் வழங்கி சிறப்பித்தவர் அன்னை மீனாம்பாள்.

    சைமன் குழு வருகையை ஆதரித்து முதல் மேடை பேச்சில் 1928 ல் தம் பொது வாழ்வை தொடங்கினார்.

    தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர்.

    இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர்.

    1930 இல் இருந்தே அண்ணல் அம்பேத்கரின் பணிகளை தமிழக மக்களிடம் எடுத்துக் கூறியவர்.

    இணையர் தந்தை சிவராஜுடன் இணைந்து பவுத்த நெறியினை மக்களிடம் பரப்பினார் அன்னை மீனாம்பாள்.

    டாக்டர் அம்பேத்கரின் தங்கை என செல்லமாக அழைக்கப்பட்டவர் அன்னை மீனாம்பாள் .
    ————————————–

    அன்னை மீனாம்பாள் குடும்பம்:
    அன்னை மீனாம்பாள் 26 -12 -1904 இல் வி .ஜி.வாசுதேவப்பிள்ளை -மீனாட்சி தம்பதியருக்கு மகளாய் பிறந்தார்.

    அன்னையின் பிறப்பிலேயே பெருமையிருக்கிறது என்றால் மிகையாகாது. அவரது முப்பாட்டனார் ஒரு வணிகர். தாய்வழிப்பாட்டனார் பெ. ம.மதுரைபிள்ளை ஒரு பெரும் வணிகர். வள்ளலுங்கூட இரங்கூன் மாநகரில் கப்பல் வணிகத்தில் சிறந்து வாழ்ந்தவர். கப்பல் வைத்திருக்குமளவுக்கு செல்வம் படைத்தவர். அன்னையாரின் தந்தை திரு. வி.ஜி.வாசுதேவப்பிள்ளை அவர்கள் ஆதிதிராவிட தலைவர்களில் சிறப்பானவர். பழங்குடி மரபில் சென்னை மாநிலத்திலேயே முதன்முதலில் மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நெடுங்காலம் சென்னை மாநில சட்டமன்றத்தை அலங்கரித்தவர்.

    தந்தை சிவராஜின் வாழ்க்கை இணையர்.
    ————————————

    பொது வாழ்க்கை :-
    சைமன் குழு வருகையை ஆதரித்து முதல் மேடை பேச்சில் 1928 ல் தம் பொது வாழ்வை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர். 1930 இல் இருந்தே அண்ணல் அம்பேத்கரின் பணிகளை தமிழக மக்களிடம் எடுத்துக் கூறியவர். “என் அன்பு சகோதரி” என்று அண்ணல் அம்பேத்கரால் அழைக்கப்பட்டவர். திராவிட கழக தலைவர் ஈ. வெ. ராமசாமிக்கு “பெரியார்” என்ற பெயர் வழங்கி சிறப்பித்தவர்.
    ———————-

    கிட்டதட்ட 1970 வரை அவரது பொதுப்பணி தீவிரமாக இருந்தது. அன்னையின் அயராத உழைப்பிற்கும் உண்மையான தொண்டிற்கும் பல பதிவிகள் அவரைத் தேடிவந்தன. அவரில் சில:

    சென்னை மாநகராட்சியின் துணை மேயர் ,
    கவுன்சிலராக 6 ஆண்டுகள்,
    கவுரவ மாகாண நீதிபதியாக 16 ஆண்டுகள்,
    திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக 6 ஆண்டுகள்,
    சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினராக 9 ஆண்டுகள்,
    தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர் ,
    சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர்,
    சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினராக 13 ஆண்டுகள் ,
    போருக்குப்பின் புணரமைப்புக்குழு உறுப்பினர்,
    S.P.C.A உறுப்பினர்,
    நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர்,
    தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்,
    அண்ணாமலை பல்கலை கழக செனட் உறுப்பினராக 6 ஆண்டுகள் ,
    சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர்,
    விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்,
    காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்,
    மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவராக 6 ஆண்டுகள்,
    சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்,
    அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர்,
    லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர் போன்ற பொறுப்புகள் வகித்து மக்கள் பணி
    ஆற்றியவர்.
    ————————

    அரசியல் வாழ்க்கை :-
    அன்னையார் ஆதிதிராவிடர் தலைவர்களுடன் இன்னைந்து பணியாற்றியவர், அவர்களால் விரும்பப்பட்டு பெரிதும் பாராட்டப்பட்டவர். இருப்பினும் தான் தனித்தன்மையை நிலைநாட்டுவதில் சற்றும் தயங்காதவர். அன்னையவர்கள் பலநூறு கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் தலைமை தாங்கியும் கலந்துகொண்டும் சிறப்பித்திருக்கிறார்.

    31 -1 -1937 இல் திருநெல்வேலில் ஆதிதிராவிடர் மாநாட்டில் அன்னை மீனாம்பாள் பேசியது :-
    ” ஒற்றுமையில்லாக் குடும்பம், ஒருமிக்க கெடும் என்பார்கள். அதுபோல ஒரு குடும்பமோ, ஒரு சமுதாயமோ, ஒரு தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் ஒற்றுமை மிகவும் அவசியம். நாம் தேசத்தில் சாதிப்பிரிவினை அறவே ஒழிய இன்னும் பல ஆண்டுகள் செல்லுமாயினும் நம் சமூகத்தினர், நாம் முன்னேற்றமடைய நாங்களும் மனிதர்கள்தான்; எல்லா உரிமைகளும் எங்களுக்கும் உண்டு என்று நிருபிப்பான் வேண்டி நாம் யாவரும் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஆதிதிராவிடர்களின் கடைசி தலைவியான அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள்

    30 -11 -1992 இல் இம் மண்ணுலகிலிருந்து மறைந்தார்.

    http://vizhithezhuiyakkam.blogspot.de/2012/10/26121904-30-11-1992.html

  4. Annai Meenambal Shivaraj was born 26 December at Rangoon in Burma. She completed her F.A in 1917 from Ranggon College, Ranggon. She returned to Madras and got married to N.Shivaraj in 1918, who was a renowned Dalit leader. She was actively involved in politics with her husband.

    Her entry into politics started in 1928 with her speech in a public welcoming Simon commission. She was the first Scheduled Caste woman to become member of Madras Corporation representing Madras University senate. She was the leader of South Indian Scheduled Castes federation (SCF). She bestowed the title ‘Periyar’ (great one) to self respect movement leader E.V.Ramasamy.

    She presided over the SCF women’s conference held on 23 September 1944 in Madras, which was attended by Dr.Ambedkar. She also presided over the All India SCF women’s conference held in Bombay on 6 May She was 1945. She was the honorary magistrate for Madras province, member of post war rehabilitation committee, director of Scheduled castes cooperative bank, leader of Nellikuppam Parry company labourers, senate member of Annamalai university.

    She was active in public service till 1980. She is fondly called as ‘Annai’ Meenambal (Mother) by Dalits. She died on 30 November 1992 at the age of 92.

    Her son was Dayashankar IPS (Retd.). Very little known fact is Mrs.D.Sabitha IAS, Principal Secretary to Tamilnadu government, School education department is annai Meenambal’s grand daughter.

    https://karthiknavayan.wordpress.com/2014/12/27/annai-menambal-shivaraj/

  5. ஜாதியற்ற சமூகத்தை உருவாக்குவதுதான் பெரியாரின் லட்சிய நோக்கமாக இருந்தது தந்தை பெரியார் 137வது பிறந்தநாள் கருத்தரங்கில் மன்னார்குடியில் தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் பேச்சு.

    திராவிடர் விடுதலைக்கழகம், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மற்றும் தஞ்சை பசு.கௌதமன் எழுதிய இந்து மதத்தில் அம்பேத்கரும் பெரியாரும் என்ற புத்தகத்தின் நூல் திறனாய்வு மன்னார்குடி சிட்டி ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமை வகித்தார். நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் செந்தமிழன் வரவேற்றார்.

    தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், முன்னாள் அமைப்பாளர் பாரி, புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் பூபதி கார்த்திகேயன், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முரளி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துவக்கத்தில், இந்துத்துவ மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுதிதறிவு எழுத்தாளர்கள் நரேந்திரதபோல்கர், பேராசிரியர் கல்பர்கி ஆகியோரின் படத்தினை திறந்து வைத்து அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார், திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் உரையாற்றினர்.

    அதனை தொடர்ந்த தஞ்சை பசுகௌதமன் எழுதிய இந்து மதமும் அம்பேத்கரும்&பெரியாரும் என்கிற நூலில் திறனாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் விடுதலைக்கழக மாநில பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால்பிரபாகரன் நூலினை திறனாய்வு செய்து உரையாற்றினார். நூலாசிரியர் தஞ்சை பசுகௌதமன் ஏற்புரை நிகழ்த்தினார்.

    இறுதியாக, ஜாதிஒழிப்பு போர்க்களத்தில் பெரியாரும் அம்பேத்கரும் என்றும் தேவை என்ற தலைப்பில் தலித் முரசு ஆசிரியர் தோழர் புனிதபாண்டியன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்,

    அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் சென்னை அய்.அய்.டி. இல் தடை செய்யப்பட்ட போது இந்தியா முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக மாபெரும் போராட்டத்தை நடத்தினர். அண்மைக்காலங்களில் பெரியார் படத்தை மிக மோசமான வகையில் அவமரியாதை செய்தபொழுதும் அவை முகநூல்களில் வெளியிடப்பட்ட போதும் கூட அதற்கு எதிராக பெரிய எதிர்ப்புகள் உருவாகவில்லை. அதே போல அம்பேத்கருடைய சிலைகள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு ஆளாகி அவை உடைக்கப்படும் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தாலும் அதற்கெதிராக பெரிய எதிர்ப்பு என்பது இதுவரை இல்லை. ஆனால் அய்.அய்.டி. இல் ஒரு வாசகர் வட்டம் என்ற சிறிய மாணவர் அமைப்பு ஒரு சில கருத்தரங்கங்களை மட்டுமே நடத்தியிருக்கிறது. அதைக் கூட பொறுக்காத அய்.அய்.டி. நிர்வாகம் அதை தடை செய்தது. காரணம் அம்பேத்கர் பெரியார் என்ற தத்துவங்களின் பிணைப்பை, அது உருவாக்கக்கூடிய ஆற்றலை, எழுச்சியை, விழிப்புணர்வை எதிரிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதையும் இவ்விரு தத்துவங்கள் இணையும் பொழுது மக்களிடையே ஓர் ஓர்மை உணர்வு, சமூகநீதி உணர்வு முகிழ்த்தெழுவதை நம்மால் காண முடிந்தது. இத்தகைய உணர்வை நாம் தொடர்ச்சியாக வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் அவசியமும் இருக்கிறது.

    பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதோர் என்றொரு முரண்பாட்டை பெரியார் கட்டமைத்தார். இந்திய சமூகம் அல்லது தமிழ்ச்சமூகம் எப்படி பிளவுபட்டு நிற்கிறது என்றால் மநு தர்மத்தின்படி சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று இந்நாட்டின் தொல்குடி மக்கள் வர்ணத்தின் அடிப்படையில் படிநிலைப்படுத்தப்பட்டு பிரிக்கப்பட்டிருக்கின்றனர். மநு தர்மத்தால் வர்ண சாதியமைப்பால் பிளவுபட்டுள்ள மக்களை பெரியார் நேர்மறையாக பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மதம் மாறிய சிறுபான்மையின மக்கள் என்று அம்மக்களை அடையாளப்படுத்தி இம்மக்களிடையே ஓர் ஓர்மையை உருவாக்க வேண்டும் என்பதால் திராவிடர்கள் என்று அறிவித்து, அவர்களுக்கான ஓர் இயக்கத்தை கட்டமைத்தார். ஜாதியற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதுதான் பெரியாரின் லட்சிய நோக்கமாக இருந்தது.

    அம்பேத்கர் இந்தியாவை தீண்டத்தகுந்த இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று வர்ண அடிப்படையில் பிளவுபட்டிருந்த இந்தியாவை அடையாளம் கண்டார். சூத்திரர்கள் வர்ண அமைப்பை தாங்கிப் பிடிக்கின்றவர்களாக அதனுடைய ஏவலாட்களாக செயல்படுகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு அந்த அமைப்பில் எந்த உரிமையும் வழங்கப்படவில்லை என்ற உண்மையை அம்பேத்கர் முன் வைத்ததோடு, இந்த வர்ண அமைப்புக்குள் இல்லாத தலித் மக்கள் அவர்ணர்கள் என்றும் இந்த அமைப்பை எதிர்த்ததால் அவர்கள் ஊரை விட்டு வெளியே சேரிக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதை வரலாற்று ஆய்வுகளோடு நிறுவினார். சூத்திர ர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் முரண்பாடு நிலவினாலும் பெரும்பான்மையான இந்த மக்களை அவர் அடிமைச் சாதியினர் என்று அடையாளப்படுத்தியதோடு இவ்விரு பிரிவினரிடையே ஓர் ஒற்றுமையை வளர்த்தெடுப்பதன் மூலம்தான் வர்ண ஜாதி அமைப்பை தகர்த்தெறிய முடியும் என்று ஆழமாக நம்பி, அதனடிப்படையில்தான் தன் செயல்திட்டங்களை வகுத்துக் கொண்டார்.

    மக்களை பல கூறுகளாகப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் செயல்திட்டத்திற்கு பெயர்தான் பார்ப்பனியம். பார்ப்பனியத்தால் பிரிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைப்பதற்குப் பெயர்தான் அம்பேத்கரியம் – பெரியாரியம். நம்மைப் போன்ற சமூக மாற்றத்திற்காகப் போராடக்கூடியவர்கள் அடிப்படையில் இந்த மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்கான வரலாற்றை எழுத வேண்டும். அப்படியான இலக்கியங்களை உருவாக்க வேண்டும். தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சொன்னால், அவர்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது என்று சொன்னால் எப்படி திராவிடர் விடுதலைக் கழகம் அதற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கிறதோ அந்த வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போது நிலவக்கூடிய ஜாதிய சமூக அமைப்பை கேள்வி கேட்பதாக, அதை மறுதலிப்பதாக உங்கள் இலக்கியம் இல்லை என்று சொன்னால் அது இலக்கியமே ஆகாது. தற்பொழுது நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகளை கண்டிக்காத போராட்டங்கள் போராட்டங்களே அல்ல. ஜாதிய சமூகத்தை கேள்வி கேட்காத செயல்பாடுகள் எல்லாம் பழைமைவாத செயல்பாடுகளே.

    தலித் மக்களுக்கான ஓர் அமைப்பாக தேர்தலிலே போட்டியிடக்கூடிய அமைப்பாக ‘தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு’ என்றோர் அமைப்பை அம்பேத்கர் உருவாக்கினார். அந்த அமைப்பின் தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமானதொரு கோரிக்கையை அவர் முன்வைத்தார். அது என்னவென்றால், பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்த அமைப்பிலே தங்களை இணைத்துக் கொள்வதற்கு தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு என்ற பெயர் ஒரு தடையாக இருக்கும் என்று சொன்னால் அந்தப் பெயரையே நான் மாற்றிக்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன் என்று அம்பேத்கர் அறிவித்தார். அதே போல பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதை நான் வேண்டாம் என்று இன்று வரை சொல்லவில்லை. அவர்கள் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டாலும் இல்லை என்று சொன்னாலும் திராவிடர் இயக்கத்தின் உழைப்பின் பயனை அனுபவிப்பதற்கு ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவருக்கும் எல்லா உரிமையும் உண்டு என்று அறிவித்தார். ஆக, இம்மக்களிடையே ஜாதி அமைப்பில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்று இரு தலைவர்களும் சிந்தித்து செயல்பட்டுள்ளனர். இதை பின்பற்ற வேண்டுமே தவிர இன்றைக்கு இம்மக்களைப் பிரித்தாளக்கூடிய சூழ்ச்சிக்கு நாம் இரையாகிவிடக் கூடாது.

    தலித் மக்கள் எதற்காக நாள்தோறும் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை சமூக செயல்பாட்ட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையிலான இந்து மத சமூக அமைப்பை கேள்வி கேட்டதால் அம்மக்கள் சேரிக்கு தள்ளப்பட்டார்கள். அன்றைக்கு வேத மதத்தை எதிர்த்த பவுத்தர்கள் எல்லாம் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டனர். சேரி என்பது இன்றைக்கு உருவான ஒன்றல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இம்மக்கள் சேரிக்கு தள்ளப்பட்டனர். தாழ்த்தப்பட்டவர்கள் இந்த நாட்டின் சொத்து வளங்களை எல்லாம் தங்களுடையதாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காக போராட்டங்களை நடத்தவில்லை. அவர்கள் இந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தை தங்களுடையதாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காக போராட்டங்களை நடத்தவில்லை. மனிதமாண்பை மீட்டெடுப்பதற்கான மாபெரும் போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சேரிகளில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கூறினார். இந்த மக்களுடைய போராட்டம் முதலில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்த மக்களுடைய போராட்டம் சுயநலத்திற்கான போராட்டம் அல்ல.

    ஒரு பொது நன்மைக்கான போராட்டம். அநீதிக்கு எதிரான போராட்டம் என்பது விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். அதனால்தான் சக மனிதன் தெருவிலே நடக்கும் உரிமை கேட்டு வைக்கத்தில் போராடிய போது பெரியார் அம்மக்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்தார். இத்தகைய ஒப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதுதான் இம்மக்களிடையே ஒற்றுமையை உறுதிப்படுத்த முடியும்.

    இங்கு தமிழன் என்ற அரசியல் ஓர்மைதான் முன்வைக்கப்படுகிறது. அதனடிப்படையில் தமிழ்நாட்டின் எல்லைப்பிரச்சனை, காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற பிரச்சனை, மற்றும் ஈழ பிரச்சனை போன்றவை எல்லாம் முன் வைக்கப்படுகின்றன. ஆனால் இப்போராட்டங்களிலே தமிழன் என்ற அரசியல் ஓர்மையோடு போராடுகிறவர்கள் போராட்டம் முடிந்தவுடன் ஊருக்கும் சேரிக்கும் பிரிந்து செல்கிறார்கள். இந்த அரசியல் ஓர்மை ஒரு சமூக ஓர்மையாக ஏன் மாற்றப்படவில்லை என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். அரசியல் போராட்டங்களை தமிழன் என்ற ஓர்மையோடு முன்னெடுப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று குடும்பத்திலே ஒருவரை மணமக்களாக தேர்வு செய்யும்போது தமிழன் என்ற ஓர்மை இன்றி ஜாதிய கண்ணோட்டத்தோடு நடந்து கொள்கிறார்கள். தமிழன் என்ற அரசியல் ஓர்மை சமூக ஓர்மையாக முன்னெடுக்கப்பட்டால் ஒழிய இங்கு நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நாம் நீக்கிவிட முடியாது.

    இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இன்றைக்கு நாம் ஒரு குடிமகனுக்கு ஒரு வாக்கு ஒரு மதிப்பு என்று அரசியலில் சமத்துவத்தை உருவாக்கிவிட்டோம். ஆனால் சமூக பொருளாதாரத் தளங்களில் நாம் ஏற்றத்தாழ்வுகளை அப்படியே வைத்திருக்கிறோம். இந்த இடைவெளியை எவ்வளவு விரைவில் நாம் இட்டு நிரப்புகிறோமோ அந்த அளவிற்கு நல்லது. இல்லையென்று சொன்னால் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் திரண்டெழுந்து நாம் உருவாக்கி இருக்கக்கூடிய நாடாளுமன்ற ஜனநாயகத்தை தகர்த்தெறிந்து விடுவார்கள் என்று அம்பேத்கர் எச்சரித்தார். ஆனால் நாம் நாள்தோறும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதற்கு இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்வரவேண்டும். ஜாதி ஒழிப்பு பணிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.

    இந்திய பூமி என்று சொன்னாலும் இந்து பூமி என்று சொன்னாலும் அது ஜாதி எனும் கான்க்ரீட் தளத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. நீங்கள் சோசலிச சித்தாந்தத்தையோ, கம்யூனிச சித்தாந்தத்தையோ, தமிழ்த்தேசிய சித்தாந்தத்தையோ இம்மண்ணில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு முன்நிபந்தனை முதல் நிபந்தனை இந்த கான்க்ரீட் பூமியை தகர்த்தெறிந்தாக வேண்டும். அதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கரும் பெரியாரும் செய்தார்கள். சமூக மாற்றத்திற்காகப் போராடக்கூடிய அனைவரும் இம்மாபெரும் சிந்தனையாளர்களின் அறிவாயுதத்தைப் பயன்படுத்தி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மிக்க சமூகத்தை உருவாக்குவோம் என கூறினார்.

    கருத்தரங்கில் தூத்துக்குடியில் இருந்து வந்திருந்த தோழர் பால்ராஜ் மற்றும் திருவாரூர் ஆசாத் ஆகியோர் புத்தகங்கள் விற்பனை செய்தனர். அதில் ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.

    கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர்சாதிக், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட நிர்வாகிகள் கவிஞர் தம்பி, கவிஞர் கலைபாரதி, பெரியார் அம்பேத்கர் இளைஞர்மன்ற அமைப்பாளர் பிரகாஷ், மருதம் மீட்பு இயக்கம் அமைப்பாளர் வினோத், புதிய தமிழகம் கட்சி ஒன்றிய செயலாளர் சுரேஷ் கண்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் எஸ்.குமார் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் மன்னை நகர அமைப்பாளர் சசிக்குமார் நன்றி கூறினார்.

    http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=151703

  6. சாதி சூழ் உலகு..!

    திருநெல்வேலியிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் சிவந்திபட்டி என்னும் கிராமம் உண்டு. மொத்தம் ஆறு பேருந்துகள், ஒரு நாளைக்கு 25 தடவை திருநெல்வேலியிலிருந்து சிவந்திபட்டிக்கு வந்துபோயின. அந்த அளவுக்கு ஆள் நடமாட்டம் உள்ள கிராமம். அப்படிப்பட்ட ஊருக்குள் கடந்த பத்து வருடங்களாக எந்த பேருந்தும் செல்லவில்லை. அரசு உத்தரவின் பேரில் அனைத்துப் பேருந்துகளும் ஊருக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டன. பத்து வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த சில மாதங்களாய் மறுபடியும் பேருந்துகள் ஊருக்குள் போய்வரத் தொடங்கியுள்ளன.

    ஏன்..?

    சிவந்திபட்டிக்குள் நுழைந்தால் முதலில் வருவது தேவர்கள் வசிக்கும் பகுதி. இதற்கு அடுத்து வருவது தலித்துகள் வசிக்கும் பகுதி. பேருந்துகள் அனைத்தும் தலித்துகள் தெருவரை சென்று திரும்பும். இதனால், அங்கு ஏறுபவர்களுக்கு அமர்வதற்கான வசதி சுலபத்தில் கிடைக்கும். அதற்கு அடுத்து வரும் தேவர் தெருவில் ஆட்கள் ஏறும்போது, சீட் கிடைக்கவில்லை என்றால் நின்றுகொண்டுதான் வர வேண்டும். ‘ஒரு பள்ளப்பய உட்கார்ந்து வருவான். அவனுக்கு முன்னாடி நான் நின்னுகிட்டு வரணுமா..?’ என்று தேவர்களுக்குக் கடுப்பு. இதனால், பேருந்து ஊருக்குள் நுழையும்போதே ஜன்னல் வழியாக தேங்காய்ப்பூ துண்டைத் தூக்கிப்போட்டு விடுவார்கள். அந்தத் துண்டைப் பார்த்ததும், ‘யாரோ ஒரு பாண்டியன் (தேவர்) இடம் பிடித்து வைத்திருக்கிறார்’ என்று புரிந்துகொண்டு அதில் தலித்துகள் உட்காரக்கூடாது.

    இந்த நெடுநாளைய பிரச்னை உள்ளுக்குள் புகைந்துகொண்டே இருந்தது. தென் மாவட்டங்களில் சாதிப் பிரச்னை பற்றியெரிந்த சமயத்தில் சிவந்திபட்டியும் பற்றிக்கொண்டது. ‘பேருந்தில் எங்க பொண்ணுங்களை கிண்டல் செய்கிறார்கள்’ என்று தேவர்கள் தரப்பில் கிளப்பப்பட்ட பிரச்னை, மெல்ல மெல்ல பெரிதானது. தலித்துகள் தரப்பில் மூவரும், தேவர்கள் தரப்பில் ஒருவருமாக மொத்தம் நான்கு உயிர்கள் அரிவாளுக்கு பலியாயின. அதைத் தொடர்ந்துதான் பேருந்தை ஊருக்கு வெளியிலேயே நிறுத்த உத்தரவிட்டது அரசு. பத்து வருடங்களுக்குப் பிறகு இப்போது சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டு, ‘பேருந்துகள் முன்புபோலவே தலித்துகள் தெரு வரைக்கும் சென்று திரும்பும். யாரும் துண்டுபோட்டு இடம் பிடிக்கக்கூடாது’ என்ற நிபந்தணையுடன் மறுபடியும் இயக்கப்படுகின்றன.

    வாசிக்கும் நீங்கள் நகர எல்லைக்குள் பிறந்து வளர்ந்தவர் எனில், சாதியின் இத்தகைய வீச்சு, உங்களுக்கு வியப்பூட்டலாம். ‘பஸ்ஸுல உட்கார்றதுலக் கூடவா சாதி பார்ப்பாங்க..?’ என்று உங்கள் மூளை கேள்வி எழுப்பலாம். எல்லா சாதிய உணர்வுகளும் நிரம்பிய ஒரு தஞ்சைப்பகுதி கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கே நெல்லை மண்ணில் நிரம்பி வழியும் சாதி, ஆரம்பத்தில் திகைப்பூட்டுவதாக இருந்தது.

    இங்கு கிட்டத்தட்ட யாவரிடத்திலும் சாதி நீக்கமற நிறைந்திருக்கிறது. தன் சொந்த சாதியினர் நடத்தும் கடையில் பொருள் வாங்குவது, தன் சாதியைச் சேர்ந்த வக்கீலிடம் வழக்கு நடத்துவது என்று சாத்தியப்படும் இடங்கள் அனைத்திலும் சாதியை முன்னிலைப்படுத்துகின்றனர். திருமணம் போன்ற விழாக்களுக்கு ஒட்டப்படும் வாழ்த்துப் போஸ்டர்களிலும் சாதியே துருத்திக்கொண்டு நிற்கும். ‘தேவர் வீட்டுக் கல்யாணம்’, ‘நாடார் கோட்டையில் கொடைவிழா’ என்றுதான் அந்த போஸ்டரின் வாசகங்கள் சொல்லும். அத்தகையை போஸ்டர்களில் தவறாமல் ஏதாவது ஒரு நடிகரின் புகைப்படம் இடம் பிடித்திருக்கும். விக்ரம், பிரசாந்த், கார்த்திக் போன்றவர்களின் புகைப்படங்களை இம்மாதிரியான போஸ்டர்களில் பார்த்தபோது முதலில் ஒன்றும் தோன்றவில்லை. பின்னொரு நாளில் சந்தேகம் வந்து விசாரித்தபோதுதான், ஒவ்வொருவரும் தங்கள் சாதியைச் சேர்ந்த நடிகரின் புகைப்படத்தைப் போட்டுக்கொள்ளும் விஷயமே தெரிந்தது.

    முதலில் போஸ்டரில் தங்கள் சாதி நடிகரின் புகைப்படம் போடும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் தேவர்கள். முத்துராமன், கார்த்திக் ஆகியவர்களின் புகைப்படங்களோடு தொடங்கிய இது, பிற்பாடு பிரபு, அருண்பாண்டியன் என்று வளர்ந்து, இப்போது எஸ்.ஜே.சூர்யாவின் புகைப்படம் கூட சில இடங்களில் எட்டிப்பார்க்கின்றன. தேவர் மகன், விருமாண்டி ஆகிய படங்களில் நடித்ததால் கமல்ஹாசனையும் கூட சில நேரங்களில் தேவராக்கிவிடுகின்றனர். இதன்பிறகு நாடார்கள் தங்களின் போஸ்டர்களில் சரத்குமாரை கொண்டுவந்தார்கள்.

    தென் மாவட்ட கலவரத்திற்குப் பிறகு தலித்துகளின் போஸ்டர்களில் பிரசாந்த் சிரிக்கத் தொடங்கினார். பிற்பாடு அதில் விக்ரமும் இணைந்துகொண்டார். இதேபோல ரெட்டியார்கள் நெப்போலியனையும், பிள்ளைமார்கள் இயக்குனர் விக்ரமனையும், விஸ்வகர்மா இனத்தவர்கள் தியாகராஜ பாகவதர், பார்த்திபன் மற்றும் கவிஞர் பழனிபாரதியையும், நாயக்கர்கள் விஜயகாந்த்தையும் தங்களின் போஸ்டர்களில் கொண்டு வந்தார்கள். இதில் பெரிய காமெடி ஒன்றும் நடந்தது. முன்னால் அ.தி.மு.க. அமைச்சரும், இப்போது தி.மு.க.வில் இருப்பவருமான மு.கண்ணப்பன் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், ‘நடிகை சுகன்யாவுக்கும், கண்ணப்பனுக்கும் தொடர்பு’ என்று பத்திரிகைகள் அனைத்தும் கிசுகிசு எழுதின. உடனே தென் மாவட்ட யாதவர்கள், தங்களின் விழாவுக்கான போஸ்டர்களில் சுகன்யாவின் படத்தை அச்சிட்டு மகிழ்ந்தார்கள். (உண்மையில் சுகன்யா என்ன சாதி..?)

    இங்கு அனைத்து சாதியினரும் தங்களுக்கான இருப்பை உறுதிசெய்துகொண்டே இருக்கின்றனர். அது பெரும்பான்மையோ, சிறுபான்மையோ.. தான் இன்ன சாதியைச் சேர்ந்தவன் என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவும், மற்றவனை விட நான் ஒன்றும் சளைத்தவனில்லை என்று காட்டவும் எல்லோரும் பிரயத்தனப்படுகின்றனர். ‘பார்த்துக்கடே.. எங்களுக்கும் ஆள் இருக்கு..’ என்று சுற்றத்துக்கு உணர்த்தும் பொருட்டே நடிகர்களை போஸ்டர்களில் சிரிக்க விடுகின்றனர்.

    இது போஸ்டர்களோடு நிற்பதில்லை॥ சினிமா தியேட்டர்களின் கழிப்பறை சுவர்களில் ‘நாடார் குல சிங்கம்’ என்று கரிக்கட்டையால் கிறுக்கி வைக்கும் அளவுக்கு முத்திப்போகிறது। நெல்லைக்கு வந்துபோகும் ரயில்களின் கழிப்பறைகளிலும் இந்த வீர வசனம் காணக்கிடைக்கிறது. பேருந்தின் பின்பக்க கண்ணாடியில் படிந்திருக்கும் தூசி படலத்தில் எழுதி வைக்கிறார்கள் ‘வீர மறவன்’ என்று. தென்பகுதி கிராமங்கள் பலவற்றில் உள்ளே நுழைந்தாலே, ‘தேவர் கோட்டை உங்களை வரவேற்கிறது’ என்றோ, ‘தேவேந்திரன் கோட்டை உங்களை வரவேற்கிறது’ என்றோதான் எழுதி வைத்திருக்கிறார்கள்.

    ஒரு ஆசிரியரை மாணவனே கொன்றுவிட்டான் என்றொரு செய்திக்காக ஏழாயிரம்பண்ணை என்ற ஊருக்குப் போயிருந்தேன். அந்த மாணவனுடன் படிக்கும் இன்னொருவனை விசாரித்தபோது கொஞ்சமும் தயக்கமின்றி அந்த பதிமூன்று வயது சிறுவன் சொல்கிறான்.. ”வாத்தியாரும் நாடாக்கமாரு.. இவனும் நாடாக்கமாரு.. அப்படி இருந்தும் குத்திபுட்டான்ணே..”. மிக இயல்பாக அந்த சிறுவன் சொன்ன கணத்தில், எந்த அளவுக்கு சாதியின் தாக்கம் நிறைந்திருக்கிறது என்பது புரிந்தது. மெத்தப்படித்த பொறியியல் நண்பன் ஒருவன், தான் ஏன் விஜய் ரசிகராக இல்லை.. ஏன் அஜித் ரசிகராக இருக்கிறேன்..? என்பதற்கு சொன்ன காரணம், ‘விஜய் ஒரு தலித்’.

    சாதி என்பது நெல்லைக்கு மட்டுமான பிரச்னை இல்லைதான். ஆனால், இங்குதான் அது இவ்வளவு வெளிப்படையாக எல்லா செய்கைகளிலும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. எனது ஒரு வருட நெல்லை அனுபவத்தில் நானறிந்த வகையில் சொல்ல வேண்டுமானால், இங்கு அனைத்து விதமான பற்றுகளும் அதிகமாக இருக்கின்றன. வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி. போன்று சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் இங்குதான் அதிகம். புதுமைபித்தன், வல்லிக்கண்ணன், தி.க.சி, வண்ணதாசன், கி.ரா., கலாப்ரியா என்று இலக்கியவாதிகளின் எண்ணிக்கையும் நீண்டுகிடக்கிறது.

    ‘பக்கத்தில் இருக்கும் வரை நாம் எதையும் மதிப்பதில்லை’ என்ற பொது நியதிக்கு எதிராக, தன் மண் மீதும், தாமிரபரணி நதி மீதும் இந்த மக்கள் வைத்திருக்கும் நேசம் ஆச்சர்யம் தரக்கூடியது. குடும்ப உறவுகளை நேசிப்பதும், குடும்பத்தோடு நெருக்கமாக இருப்பதும் ஒப்பீட்டளவில் இங்கு அதிகம். வார்த்தைகளாலும், சூழ்நிலைகளாலும் ஏற்படும் கோபத்தை மறைத்துக்கொண்டு போலியாக வாழாமல் சட்டென்று உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிடுகின்றனர். தென் மாவட்ட அடிதடிகளுக்குப் பின்னுள்ளது இந்த வகை உணர்ச்சிகள்தான் என்று நினைக்கிறேன். இதே அடிப்படையில்தான், தன் சொந்த சாதி மீதான பற்றையும் மிக அதிகமாக வெளிப்படுத்துகின்றனர்.

    ‘நீ ஒரு சாதிய சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்’ என்பதை எல்லா கணத்திலும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது இந்த ஊர்.

    http://nadaivandi.blogspot.ae/2007/11/blog-post.html

  7. கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து:

    ராவ் பகதூர் மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை ராஜா எனப்படும் எம். சி. ராஜா (பி. ஜூன் 17, 1883 – இ. ஆகஸ்ட் 20, 1943) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தலித் அரசியல்வாதி மற்றும் சமூகச் செயற்பாட்டாளர். பி. ஆர். அம்பேத்கருக்கு இணையாக இவரும் தலித்துகளின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர்.

    வாழ்க்கைக் குறிப்பு:

    ராஜா 1883ல் சென்னையிலுள்ள செயிண்ட் தாமஸ் மவுண்டில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை லாரன்ஸ் காப்பகத்தில் மேலாளராக வேலை பார்த்தார். ராயப்பேட்டையிலுள்ள வெஸ்லி மிஷன் பள்ளியில் படித்தார். பின் வெஸ்லி கல்லுரியில் படித்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். ஒரு பள்ளி ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.
    ———————————–

    அரசியல் வாழ்க்கை:

    இளம் வயதிலேயே அரசியலுக்குள் நுழைந்த ராஜா செங்கல்பட்டு மாவட்ட வாரியத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1916ல் ஆதிதிராவிட மகாஜன சபையின் செயலாளரானார். தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். அதன் உறுப்பினராகவும் இருந்தார். நவம்பர் 1920ல் நடந்த முதல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றார். சட்டசபைக்கு நீதிகட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலித் உறுப்பினர் ராஜாதான். 1922ல் பறையர், பஞ்சமர் என்ற வார்த்தைகளுக்குப் பதில் ஆதி திராவிடர், ஆதி ஆந்திரர் என்ற வார்த்தைகள் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

    1921ல் பனகல் அரசரின் நீதிக்கட்சியரசு அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டினை அமலுக்குக் கொண்டுவந்தது. அதில் தலித்துகளுக்கு எந்தவொரு சலுகையும் தரப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ராஜா தலித்துகளுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமென வலியுறுத்தி, பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை எதிர்த்த போராட்டக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். அந்தப் போராட்டங்களுக்கு நீதிக்கட்சி கொஞ்சங்கூட அசைந்து கொடுக்கவில்லை. மாறாக அந்த ஆண்டு புளியந்தோப்பில் நடந்த கலவரத்துக்குக் காரணம் தலித்துகளைச் சமாதனப்படுத்த பிரிட்டிஷ் அரசு எடுத்த முடிவுதான் என்று நீதிக்கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர். இதனால் வெகுண்ட ராஜா நீதிக்கட்சியிலிருந்து 1923ல் விலகினார். 1926 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1928ல் அனத்திந்திய தாழ்த்தப்பட்டோர் சங்கத்தினை ஏற்படுத்தி அதன் தலைவாரானார். 1926 முதல் 1937 வரை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

    1932ல் இந்திய தேசிய காங்கிரசின் வலதுசாரிகளான டாக்டர் பி. எஸ். மூஞ்சே மற்றும் ஜாதவுடன் ராஜா ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி ராஜா அவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்றும் அதற்குப் பதில் அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடுதான் அனைத்திந்திய அளவில் தேர்தலில் தலித்துகளுக்கெனத் தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென அம்பேத்கார் அதிகாரபூர்வமாகக் கோரத் தூண்டுதலாய் அமைந்தது.

    1937ல் ஏப்ரல் முதல் ஜூலை வரை சென்னை மாகாணத்தில் சொற்பகாலமே ஆட்சியிலிருந்த கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவின் தற்காலிக இடைக்கால அமைச்சரவையில் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

    ஆகஸ்ட் 20, 1943ல் ராஜா சென்னை, செயிண்ட் தாமஸ் மவுண்டில், ராஜா தெருவிலிருந்த தனது வீட்டில் காலமானார்.

  8. Dr. K.R. Narayanan Centre for Dalit and Minorities Studies — Jamia Millia Islamia:

    The Centre for Dalit and Minorities Studies, conceived and established by Prof. Mushirul Hasan, Vice-Chancellor, Jamia Millia Islamia, became operational in February 2005 when Ms. Kumari Selja, Hon’ Minister for State, Ministry of Urban Employment and Poverty Alleviation, Government of India, in the presence of Dr. K. R. Narayanan, former President of India, formally inaugurated it.

    In his keynote address, Dr. K. R. Narayanan referred to the salience of addressing the concerns of Dalits and Minorities in the larger interests of the nation building processes in the country. He appreciated the overlapping nature of the two vital subjects – Dalits and Minorities – that have aptly been recognized and included in one centre. “This arrangement will enable scholars to study the issues in an inter-related manner, which would bring out the totality of the real situation for the world to know and act upon”, Dr. Narayanan observed.

    Recognizing Dr. K. R. Narayanan as a philosopher guide, the Centre has been rechristened as Dr. K. R. Narayanan Centre for Dalit and Minorities Studies.
    ————————————-

    Concerns:

    The Centre has been conceptualized as a relaying point, as well as, a source of inspiration for all inter-related issues concerning the Dalits, Minorities, and other marginalized and socially excluded sections of the population. While at the political level, the Dalit-Minority unity has been on the agenda in the recent years, an academic investigation on the subject cannot rest here. The limitation of the political approach to the problem is obvious. However, academic discourses ought to venture beyond and explore the possibilities of reviewing the paradigm of fragmentation and suggest ways of redefining the problem of solidarity in public sphere in the context of the sub-continent.

    The Centre aims at generating academic debates and discussions, formulating them in a non-partisan and plural manner within a framework of egalitarian social solidarity as an ideal. In terms of what has come to be termed in the academic circles as the ‘rights approach’ to the problem, the entitlements of both, the caste oppressed and the community excluded are seen as an extension and elaboration of the new concepts of Human Rights, Social Development, Distributive Democracy, and Protective Discrimination. Such a broad based view will bring the Centre right at the centre stage of the wider debates, benefit the students, and assist the researchers in different faculties.

    The ever deepening crisis in social, political, and economic spheres and the escalating tyranny of the traditionally hegemonic/dominant known as the majority, on one hand, and the rise of consciousness among Dalits and Minorities on the question of their legitimate rights, the growing global attention on internal socio-politics on the other, call for a paradigmatic shift. Any intellectual effort to revive the historical identity of interests, to view and interpret the differentiated collective existence within a single academic value framework and in this light to re-read the recent socio-political developments of the sub-continent would be at once a significant service to this fraction-driven society and also an advance of intellectual concerns. Dr. K. R. Narayanan Centre for Dalit and Minorities Studies is a step in that direction.
    ———————————

    Objectives:

    The Centre’ primary objectives are to generate awareness on the socio-economic, political, and cultural issues pertaining to Dalits, Minorities, and marginalized and socially excluded sections of the population. It aims to achieve this by encouraging inter-disciplinary research and creating various forms of intellectual platform for disseminating views and opinions concerning Dalit and Minority issues. It focuses on the following core thematic activities –

    Undertaking PhD, Post-Graduate, and Diploma Programmes;
    Conducting seminars, workshops, discussions, and lectures on issues relating to Dalits and Minorities;
    Functioning as a Research Centre for undertaking multi-disciplinary research;
    Exploring ways to introduce Dalit and Minority concerns in various University curriculum and syllabi;
    Establishing networks with various institutions, which thematically focus on Dalit and Minority issues; and
    Functioning as a Resource and a Documentation Centre for students, researchers, visiting scholars, civil society organizations, and faculty members etc.

  9. கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து: (Part 1/2)

    வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[1] ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.

    வாழ்க்கைச் சுருக்கம்

    வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

    தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.

    இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.
    ————————–

    இளமைப் பருவம் — பிறப்பு

    வ.உ.சி. 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். (ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் தான் பிறந்தார்[சான்று தேவை]. வண்டானம் என்ற ஊரில் அல்ல.)

    கல்வி

    ஆறு வயதில் வீரப் பெருமாள் அண்ணாவி என்ற தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டார். அவரது பாட்டியார் அவருக்கு சிவபுராணக்கதைகளைக் கூறுவார். அவரது பாட்டனாரிடம் இருந்து அவர் இராமாயணக் கதைகளையும், பாட்டனாரோடு சேர்ந்து சென்று அல்லிக் குளத்து சுப்ரமணிய பிள்ளை கூறிய மகாபாரதக் கதைகளையும் கேட்டறிந்தார்.

    அரசாங்க அலுவலரான திரு.கிருஷ்ணன் வ.உ.சி.க்கு ஆங்கிலம் கற்பித்தார். அவருக்கு பதினான்கு வயதாகும் போது அவர் ஓட்டப்பிடாரத்திலிருந்து தூத்துக்குடிக்குக் கல்வி கற்பதற்காக வந்தார். அவர் புனித சேவியர் பள்ளியிலும் கால்டுவெல் பள்ளியிலும் கல்வி கற்றார். திருநெல்வேலியில் இந்துக் கல்லூரியிலும் சேர்ந்து கல்வி கற்றார்.
    ————————-

    வழக்கறிஞர் தொழில்:

    வ.உ.சி. சில காலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவரது தந்தை அவரை சட்டக் கல்வி பெற திருச்சிக்கு அனுப்பி வைத்தார். திரு.கணபதி ஐயர், திரு.ஹரிஹரன் ஆகியோர் அவருக்கு சட்டம் கற்பித்தனர். அவர் சட்டத் தேர்வை 1894-ஆம் ஆண்டு எழுதித் தேர்ச்சி பெற்றார். 1895ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார். அவர் உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு வகை வழக்குகளைக் கையாண்டாலும் குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். வழக்குகளுக்காக இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுப்பதை ஆதரிக்கவில்லை. வ.உ.சி. பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்றார். சில வழக்குகளில் இரு கட்சியினரும் சமாதானமாகப் போகும்படி செய்தார். அவருடைய தகுதி, திறமை, நேர்மை இவற்றிற்காக நீதிபதிகளின் மதிப்புக்குரியவராக இருந்தார்.

    குற்றவியல் வழக்குகள் காவல் துறையினரால் தொடரப்படும். தவறாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வ.உ.சி. யினால் விடுதலை செய்யப்பட்டனர். அதனால் அவர் காவல் துறையினரின் கோபத்திற்கு ஆளானார். வ.உ.சி.யின் தந்தை இந்த சூழ்நிலையை விரும்பவில்லை. அதனால் அவர் வ.உ.சி.யை 1900-ஆம் ஆண்டு தூத்துக்குடிக்குச் சென்று பணியாற்றும்படி அனுப்பி வைத்தார். வ.உ.சி. தூத்துக்குடியிலும் புகழ் பெற்ற வழக்கறிஞராக திகழ்ந்தார்.

    வ. உ. சிதம்பரத்தின் திருமணம் மீனாட்சி அம்மாளுடன் 8 செப்டம்பர் 1901 அன்று தூத்துக்குடியில் நடந்தது.
    ———————————–

    பாரதியாருடன் நட்பு

    வ.உ.சி. சென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார். பாரதியார் ஒரு பெரும் புலவர். வ.உ.சி.யும் பாரதியாரும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரின் தந்தையரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சந்தித்துக் கொண்ட பொழுது இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருப்பதை அறிந்தனர். இருவரும் எப்பொழுதும் நாட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பாரதியார் தனது உணர்ச்சி மிக்க பாடல்களால் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார். வ.உ.சி.யும் பாரதியாரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.
    சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் தாக்கம்

    தென்னிந்தியாவில் ராமகிருஷ்ண இயக்கத்திற்கு வித்திட்ட, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியுமான ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் துறவியான ’சுவாமி ராமகிருஷ்ணானந்தருடனான’(சசி மகராஜ்) சந்திப்பு வ.உ.சி யின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரை வ.உ.சி. சென்னை ஐஸ் ஹவுஸில் தான் சந்தித்திருக்க வேண்டும். ’சசி மகராஜ் என்னிடம், “சுதேச எண்ணங்கள் பல நன்மைகளைத் தரக் கூடியது, இது என் கருத்து” என்று கூறினார். அவர் சொன்னது ஒரு விதையாக என்னுள் விழுந்தது. என் உள்ளம் அதனைப் போற்றிக் காத்தது’ என்று அந்த சந்திப்பைப் பற்றிக் கூறுகிறார் வ.உ.சி. இந்த ’விதை’யின் இரு தளிர்களே ’தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்’ மற்றும் ’தரும சங்கம்’ என்று தமது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார் வ.உ.சி
    ————————–

    சமுதாயப் பண — தொடங்கப்பட்ட தேசிய நிறுவனங்கள்

    வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். அவர் ஆளுமை மிக்க மனிதர். அவர் “சுதேசி பிரச்சார சபை”, “தர்ம சங்க நெசவு சாலை”, “தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்”, “சுதேசிய பண்டக சாலை”, “வேளாண் சங்கம்” போன்றவற்றை ஏற்படுத்தினார்.

    கப்பல் நிறுவனம் சுதேசிய நாவாய் சங்கம்-1906

    ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். “பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி”, இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.

    வ.உ.சி.,1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). நிறுவனத்தின் மூலதனம் ரூ.10,00,000. ரூ.25 மதிப்புள்ள 40,000 பங்குகள் கொண்டது. ஆசியர்கள் அனைவரும் இதில் பங்குதாரர்கள் ஆகலாம். 4 வக்கீல்களும் 13 வங்கியரும் இருந்தனர். கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தவுடன் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் வ.உ.சி. இறங்கினார். ஜனாப் ஹாஜி முஹம்மது பக்கீர் சேட் 8000 பங்குகளுக்காக ரூ. 2,00,000 கொடுத்தார். ஆனால் நிறுவனத்திற்குச் சொந்தமாகக் கப்பல் இல்லை. “ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி”யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. “பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி” இந்தப் புதிய போட்டியை விரும்பாததால் அது “ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி” யை அச்சுறுத்தியது. அதனால் இது கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்திய கப்பல் நிறுவனத்திற்கென்று சொந்தமாகக் கப்பல் இல்லாததால் இந்திய வணிகர்கள் திகைத்துப் போயினர். ஆனால் வ.உ.சி. அஞ்சவில்லை. உடனடியாக கொழும்பு சென்று ஒரு கப்பல் வாடகைக்கு எடுத்து வந்து கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடக்கும்படி செய்தார்.

    ஆனால் சொந்த கப்பல்கள் இல்லாமல் கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த இயலாது என்பதை அறிந்து கொண்டார். அதனால் சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார். தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லை. அதனால் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்குள்ள வணிகர்கள் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டு கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது “திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்”, என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். “எஸ்.எஸ். காலியோ” என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1300 சாதாரண இருக்கைகள் இவற்றைக் கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்ல இயலும். திரு. எஸ் வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று “எஸ். எஸ். லாவோ” என்ற கப்பலை வாங்கி வந்தார். நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரு படகுகளும் வாங்கினர்.

    இந்திய செய்தித் தாள்கள் அனைத்தும் இது குறித்து கட்டுரைகள் வெளியிட்டு வ.உ.சி. அவர்களைப் பாராட்டின. கப்பல் நிறுவனம் மெதுவாக வளர்ந்தது. மக்கள் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தனர். வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினர். பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்தின் தந்திரம் குறித்து வ.உ.சி. மக்களிடையே விளக்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த பிறகு அவர்கள் தங்கள் கட்டணத்தை விருப்பம் போல் ஏற்றிவிடுவார்கள். அப்போது இந்தியர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகும். அதனால் இந்தியர்கள் இலவசப் பயணத்தை மறுத்துவிட்டனர். உடனே வ.உ.சி.க்கு கையூட்டு கொடுக்க முயற்சி செய்தனர். சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலகினால் ரூ.1,00,000 கொடுப்பதாகக் கூறினர். வ.உ.சி. மறுத்துவிட்டார்.

    ஆங்கில அரசு பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கு பலவிதங்களிலும் உதவி செய்தது. அது ஆங்கிலேயர்களின் கப்பலில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு அதிகாரிகளுக்கு இரகசிய கடிதம் அனுப்பியது. சுங்க அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் பல விதமான தொல்லைகள் ஏற்படுத்தினர். இந்திய கப்பல் ஆங்கிலேயர்களின் கப்பலுடன் மோத வந்தது என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. வ.உ.சி. அது பொய்க் குற்றச்சாட்டு என்று நிரூபித்து இந்திய கப்பல் செல்ல அனுமதி பெற்றார். ஆனால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க இயலவில்லை.
    அரசியல் பணி
    ————————————————

    தூத்துக்குடி நூற்பாலை வேலை நிறுத்தம்

    சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியுடன் வ.உ.சி. திருப்தியடையவில்லை. அவர் மக்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வைத் தூண்ட நினைத்தார். இந்திய தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட வ.உ.சி.க்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. லார்டு. ராய் இந்தியாவில் இருந்த ஆங்கில அரசு அதிகாரி. அவர் 1905-ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஆங்கிலேய வணிகப் பெருமக்களின் கூட்டத்தில்,”இந்தியாவில் முதலீடு செய்யலாம். ஏனெனில் அங்கே தொழிற்சங்கம் இல்லை. அதனால் தொழிலாளர்களின் கூலி மிகக் குறைவு” என்று பேசினார். இந்த வகையான பேச்சிலிருந்து இந்தியாவில் அந்த கால கட்டத்தில் தொழிலாளர்களின் நிலையை நாம் அறியலாம். தூத்துக்குடியில் கோரல் நூற்பாலை என்று ஒரு தொழிற்சாலை இருந்தது. அங்கே தொழிலாளர்களுக்குக் கூலி மிகக் குறைவு.ஆனால் அவர்கள் நாள் முழுவதும் இடைவேளை இல்லாமல் பன்னிரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக கடினமாக உழைக்கவேண்டும். அவர்களுக்கு விடுமுறை கிடையாது. தொழிலாளர்கள் ஏதேனும் தவறு செய்தால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

    தொழிலாளர்களின் அவல நிலையைப் பார்த்து வ.உ.சி. மிகவும் வருந்தினார். நூற்பாலை தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்யும்படி தூண்டினார். வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்தனர். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள் வ.உ.சி. தூத்துக்குடியில் சொற்பொழிவு ஆற்றினார். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் நூற்பாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்குத் தலைமை தாங்கினர். அவர்கள் கோரிக்கைகள் பின்வருமாறு: 1. கூலி உயர்வு 2. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை 3. மற்ற விடுமுறை நாட்கள்

    மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலியில் இருந்து இரண்டு அதிகாரிகளையும் சிவகாசியில் இருந்து 30 காவலர்களையும் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தார். குற்றவியல் நடுவர் பொதுக்கூட்டங்களைத் தடை செய்தார். மறுநாள் மாவட்ட ஆட்சியர் திரு.விஞ்ச் தூத்துக்குடிக்கு வந்தார். தன்னைச் சந்திக்கும்படி வ.உ.சி.க்குச் சொல்லி அனுப்பினார். அந்த சந்திப்புக்குப் பிறகு வ.உ.சி. தொழிலாளர்களிடையே பேசினார். இந்தப் பொதுக்கூட்டம் ஒரு தனியாரின் இடத்தில் நடைபெற்றது. நூற்பாலை நிருவாகத்தின் கொடூரமான நடவடிக்கைகளே இந்த வேலை நிறுத்தத்திற்குக் காரணம் என்று மாவட்ட ஆட்சியரிடம் தான் கூறியதாகத் தொழிலாளர்களிடம் கூறினார். வ.உ.சி. தொழிலாளர்களுக்குப் பொதுமக்களின் துணையுடனும் தனது சொந்த சொத்துக்களில் மூலமாகவும் உதவினார். இதன் காரணமாக அவர் தனது சொந்த சொத்தில் பெரும் பகுதியை இழந்தார்.

    நூற்பாலை நிருவாகம், தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்து விரைவில் வேலைக்குத் திரும்பிவிடுவார்கள் என்று நினைத்தது. ஆங்கில அரசு நூற்பாலை நிருவாகத்திற்கு உறுதுணையாக இருந்தது. ஆனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது. நூற்பாலை நிருவாகத்தின் பாடு திண்டாட்டமாகிவிட்டது. சிலரை அச்சுறுத்தியது. சிலரை வேலையைவிட்டு நீக்கியது. சிலருக்கு ஆசை காட்டியது. எல்லாம் வீணானது. வேலை நிறுத்தம் இந்திய நாட்டில் உள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்தது. வ.உ.சி. பொதுமக்களிடையே தினமும் தொழிலாளர்களின் நிலை குறித்துப் பேசினார். அதனால் பொதுமக்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளித்தனர். வேலை நிறுத்தம் மேலும் மேலும் தீவிரமடைந்தது.மாவட்ட துணை ஆட்சியர் வ.உ.சி.யை அச்சுறுத்தினார். ஆனால் வ.உ.சி. அந்த அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்தினார். தொழிலாளர்கள் தினமும் ஊர்வலம் சென்றனர். வணிகர்கள் ஆங்கிலயர்களுக்குப் பொருட்களை விற்க மறுத்தனர். அதனால் அவர்கள் இலங்கையிலிருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். அவர்கள் தூத்துக்குடியில் தங்க அஞ்சி நடுக்கடலில் கப்பலில் தங்கினார்கள்.

    இறுதியில் நூற்பாலை நிருவாகம் அவர்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தது. 1908-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் நாள் திரு. சுப்ரமண்ய பிள்ளை, நூற்பாலை நிருவாக அலுவலர், வ.உ.சி.யைச் சந்தித்தார். வ.உ.சி.தொழிலாளர்கள் 50 பேருடன் நூற்பாலை நிருவாக இயக்குனரைச் சந்தித்தார். அவர்கள் கூலியை உயர்த்தவும் வேலை நேரத்தைக் குறைக்கவும் ஞாயிற்றுக் கிழமையன்று வார விடுமுறை அளிக்கவும் சம்மதித்தனர். 9 நாள் வேலை நிறுத்தத்திற்குப் பிறகு தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். வேலை நிறுத்தம் பெரும் வெற்றி பெற்றது. அது தொழிற்சங்கங்கள் இல்லாத ஒரு காலம். இந்தியாவில் முதல் தொழிற்சங்கமே 1920-ஆண்டுதான் தொடங்கப்பட்டது. சோவியத்புரட்சி 1917-ஆம் ஆண்டு நடைபெற்றது. வ.உ.சி. 1908-ஆம் ஆண்டே தொழிற்சங்கங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் பங்கு பெறச் செய்து அவர்களை வழி நடத்தி வேலை நிறுத்தத்தைப் பெரும் வெற்றி பெறச் செய்தார். வ.உ.சி. எல்லோருக்கும் முன்னோடியாக வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். இந்த வேலை நிறுத்தத்தின் பயனாக மற்ற ஆங்கில நிறுவனங்களின் தொழிலாளர்களும் பயன் பெற்றனர். அவர்கள் கூலியை அதிகரித்ததுடன் கொடூரமாக நடத்துவதையும் நிறுத்தினர். ஸ்ரீ அரவிந்தர் இந்த வேலை நிறுத்தம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது என்று பாராட்டி வந்தே மாதரம் என்ற இதழில் எழுதினார்.
    கைது-1908

    சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலயர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள். அவர்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்கள்.

    வ.உ.சி. வெளி நாட்டுப் பொருட்களைப் புறக்கணித்தார்.மக்களும் புறக்கணித்தார்கள்.அந்த காலகட்டத்தில் வின்ச் தான் மாவட்ட ஆட்சியர். ஆனால் மக்கள் வ.உ.சி. யின் சொற்களைக் கட்டளையாக ஏற்றனர். மக்கள் வ.உ.சி.யை அவ்வளவு மதித்தனர். அவருக்குப் பின்னால் தொழிலாளர்கள் அனைவரும் இருந்தனர்.சுதந்திரப் போராட்ட உணர்ச்சி மக்களிடையே கொழுந்துவிட்டு எரிந்தது. வ.உ.சி. சொல்லும் எதையும் செய்ய மக்கள் தயாராக இருந்தார்கள். வ.உ.சி.காலத்திற்கு முன்பு படித்தவர்கள் மட்டுமே சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அனைவரையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்த பெருமை வ.உ.சி.க்கே உரியது. அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டனர். அவர்கள் ஆங்கிலேயர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் வேலை பார்க்க மறுத்துவிட்டனர்.ஆங்கிலேயர்கள் மிகுந்த சிரமப்பட்டார்கள். வ.உ.சி. யின் செல்வாக்கு அளப்பரியது. .

    வ.உ.சி. சுதேசி கப்பல் நிறுவனத்தை ஆரம்பித்தது பணத்துக்காகவோ புகழுக்காகவோ அல்ல. ஆனால் பங்குதாரர்கள் பலர் பணம் ஈட்டவே விரும்பினர். அவர்கள் வ.உ.சி. சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விரும்பவில்லை. ஆனால் வ.உ.சி. அவர்கள் கருத்தை ஏற்க மறுத்துவிட்டார்.
    ———————————————–

    வங்கத்தின் சுதந்திரப் போராட்டத் தலைவரான பிபின் சந்திர பால் 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விடுதலையாக இருந்தார். வ.உ.சி. அதை ஒரு விழாவாக கொண்டாட எண்ணினார்.அந்த விழா நடந்தால் வ.உ.சி. மக்களிடையே பேசுவார். அதை ஆங்கில அரசு விரும்பவில்லை. அதனால் வ.உ.சி.யைக் கைது செய்ய முடிவு செய்தனர். ஆனால் அவரைத் தூத்துக்குடியில் கைது செய்தால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படும். அதனால் வ.உ.சி.யைத் திருநெல்வேலி வந்து தன்னைச் சந்திக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஒரு ஆணை அனுப்பினார். வ.உ.சி. அந்த ஆணையை ஏற்றுத் திருநெல்வேலி செல்லத் தயாரானார். அவர் கைது செய்யப்படுவார் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் எல்லோரும் அவரைச் செல்ல வேண்டாம் என்று தடுத்தனர். ஆனால் வ.உ.சி. அனைவரையும் சமாதானப்படுத்தி திருநெல்வேலிக்கு அவரது ஆப்த நண்பர் சுப்ரமண்ய சிவாவுடன் சென்றார்.

    சுப்பிரமணிய சிவா, மதுரைக்கு அருகில் உள்ள வத்தலகுண்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். அவர் அந்த கிராமத் தலைவரின் மகன். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிக்க புலமை வாய்ந்தவர். அவர் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே தாய் நாட்டின் சுதந்திரம் குறித்துப் பேசுவார். அவர் 1907-ஆண்டு தூத்துக்குடிக்கு வந்து சொற்பொழிவாற்றினார். வ.உ.சி.கடற்கரையில் நடந்த அந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரது பேச்சாற்றலும் தாய் நாட்டுப் பற்றும் வ.உ.சி.யை மிகவும் கவர்ந்தது. அவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். வ.உ.சி.யும் சிவாவும் மக்களிடையே சுதந்திரப் போராட்ட உணர்ச்சியைத் தூண்டினர். ஆங்கில அரசு அவர்களது நடவடிக்கைகளை நிறுத்த நினைத்தது.

    இருவரும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க சென்ற போது இருவரையும் திருநெல்வேலியைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்றும் கூறினார். வ.உ.சி. அவரது நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் வ.உ.சி.யும் சிவாவும் 1908-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் கைது செய்யப்பட்டனர்.
    கைது செய்யப்பட்டதன் விளைவுகள்-1908

    வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் கொந்தளித்தனர்.திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பள்ளிகளும் கல்லூரிகளும் சேதப்படுத்தப்பட்டன.மண்ணெண்ணெய் கிடங்கு தீ வைக்கப்பட்டது. இரண்டு நாட்கள் இந்த நிலை நீடித்தது. அஞ்சல் நிலையமும் தீ வைக்கப்பட்டது.காவல் நிலையமும் நகராட்சி அலுவலகமும் தாக்கப்பட்டது. தூத்துக்குடியில் வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் இரவு முழுவதும் தூங்கவில்லை. கடைகள் மூடப்பட்டன. கோரல் நூற்பாலை மற்றும் “பெஸ்ட் அண்ட் க்ம்பெனி” தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். நகராட்சி ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் போன்றோரும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இதுவே இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம்.1908-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் முதல் மார்ச் 19-ஆம் நாள் வரை நடைபெற்றது. பொதுமக்களும் அதில் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள். இந்த நிகழ்வை திருநெல்வேலி எழுச்சி என்று கூறுகிறார்கள்.

    வ.உ.சி. சிறையிலிருந்தபோது அவரது நண்பர்கள் அவரை ஜாமீனில் வெளிவரும்படிக் கேட்டுக் கொண்டனர். சிவாவும் பத்மநாப ஐயங்காரும் அவருடன் சிறையில் இருந்தனர். அவர் தனது நண்பர்களை விட்டுவிட்டுத் தனியாக வெளி வர விரும்பவில்லை. இந்நிகழ்ச்சியில் இருந்து அவரது தைரியத்தையும் நேர்மையையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

  10. வ. உ. சி (Part 2/2)

    நீதிமன்றத் தீர்ப்பும் சிறைத் தண்டனையும்-1908

    காவல் துறையினர் வ.உ.சி.க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

    1. வ.உ.சி. ஆங்கில அரசுக்கு எதிராக சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.(பிரிவு 123-அ)
    2. வ.உ.சி. சுப்ரமண்ய சிவாவிற்கு அடைக்கலம் கொடுத்தார்.(பிரிவு 153-அ)

    வழக்கு நேர்மையாக நடைபெறாததால் வ.உ.சி. அதில் பங்கேற்க மறுத்துவிட்டார். இரண்டு மாதங்கள் நடந்த இந்த வழக்கு விவரங்களை இந்தியா முழுவதும் மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர்.

    நீதிபதி திரு. பின்ஹே தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு விவரம் பின்வரமாறு:

    1. ஆங்கில அரசுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டிவிட்டதற்காக 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை.
    சிவாவுக்கு ஆதரவு அளித்ததற்காக மற்றுமொரு 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை.
    2. சிவாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை.

    40 ஆண்டு தீவாந்திரத் தண்டனை! யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமையான தண்டனை. ஆங்கில அரசுக்கு வ.உ.சி.யிடத்தில் அளவு கடந்த பயம். இந்தக் கொடுமையான தண்டனைக்கு அந்த பயமே காரணம். அவரைச் சிறையில் அடைத்தால்தான் அவர்களால் தொடர்ந்து இந்தியாவில் ஆட்சி செய்ய முடியும். வ.உ.சி.க்கு அப்பொழுது 36 வயது தான்.

    இந்தக் கொடிய தீர்ப்பைக் கேட்டு இந்திய மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வங்காளி, “அமிர்த பஜார்”, ” “சுதேசமித்ரன்”, “இந்தியா”, “ஸ்வராஜ்யா” மற்றும் பல செய்தித்தாள்கள் இத்தீர்ப்பைக் கண்டித்தனர். ஆங்கில இதழான “ஸ்டேட்ஸ் மேன்” இத்தீர்ப்பு நியாயமற்றது என்றும் வ.உ.சி.யின் தியாகம் போற்றத்தக்கது என்றும் குறிப்பிட்டது. ஆங்கில அரசை ஆதரிப்பவர்கள் கூட இந்தக் கொடிய தண்டனையை ஏற்றுக் கொள்ளவில்லை. லார்டு மார்லி, இந்தியாவுக்கான ஆங்கில அமைச்சர், இக்குரூரமான தண்டனையை ஏற்றுக் கொள்ள இயலாது என லார்டு மன்றோவுக்கு எழுதினார். அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீடு செய்ததில் 10 ஆண்டு தீவாந்திரத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் . அவரது நண்பர்கள் லண்டனில் உள்ள மன்னர் அவையில்(பிரிவியூ கௌன்சிலில்) முறையீடு செய்ததில் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைந்தது.
    ——————————————

    சிறைத்தண்டனை 1908–1912

    கப்பலோட்டிய தமிழனர் வ.உ.சிதம்பரனாருக்குத் சிறைத்தண்டனை தரக் காரணமாக இருந்ததால் ஆட்சியர் ஆசு என்பாரை வாஞ்சி சுட்டுக் கொன்றதாகத் தகவல் தரப்பட்டுள்ளது.

    வ.உ.சி. முதலில் கோயம்புத்தூர் சிறையிலும் பின்னர் கண்ணனூர் சிறையிலும் அடைக்கப்பட்டார். இப்பொழுதெல்லாம் அரசியல் கைதிகள் நல்ல முறையில் நடத்தப்படுகின்றனர். அக்காலத்தில் அவர்கள் மற்ற ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளைப் போலவே நடத்தப்பட்டனர். கடுமையான வேலைகள் செய்ய வேண்டும். வ.உ.சி. செல்வந்தர். நல்ல ஆரோக்கியமான சுவையான உணவு உண்ணும் வழக்கம் உடையவர். ஆனால் சிறையில் கல்லும் மண்ணும் இருக்கும் கூழைக் குடிக்க வேண்டியிருந்தது. சிறை ஆடைகள் முரடானவை. தலையை மொட்டையடித்து கை, கால்களில் விலங்கிட்டிருப்பர்.
    ————————————-

    செக்கிழுத்த செம்மல்

    சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நூற்றார். அப்பொழுது அவரது உள்ளங்கைகளில் இருந்து ரத்தம் கசிந்தது. கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார். அந்தப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒரு மாடு போல உழைத்தார். அவரது எடை மிகவும் குறைந்தது. மருத்துவர் சிறையதிகாரியை எச்சரித்தார். உடனே அரிசி உணவு வழங்கப்பட்டது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அவர் சொந்த உணவை உண்ணலாம் என்று கூறியது.
    வ. உ. சி. இழுத்த செக்கு சென்னை காந்தி மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    ஒரு நாள் வடுகுராமன் என்ற கைதி வ.உ.சி.யை வணங்கினார். அதைப் பார்த்த சிறை அதிகாரி கோபமடைந்து வடுகுராமனிடம் இனிமேல் வ.உ.சி.யை வணங்கினால் செருப்பால் அடி கிடைக்கும் என்று கூறினார். வடுகுராமன் சிறை அதிகாரியைக் கொலை செய்ய முடிவு செய்தான். வ.உ.சி. கொலை செய்வதைத் தடுத்துவிட்டார். ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் சிறைக் கைதிகள் கலவரம் செய்தனர். சிறை அதிகாரி கடுமையாகத் தாக்கப்பட்டார். சிறைக் கைதிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைத்தது. வ.உ.சி. அவரது நண்பர்களுக்கு எழுதி மேல்முறையீடு செய்து தண்டனக் காலத்தைக் குறைத்தார். வ.உ.சி. கைதிகள் பக்கம் சாட்சி கூறினார். அவர், சிறை அதிகாரி மிக மோசமான உணவை வழங்கியும் கடுமையாக அடித்தும் கைதிகளைக் கொடுமைப்படுத்தியும் கொடூரமாக நடந்து கொண்டதே கலவரத்திற்கான காரணம் என்று கூறினார்.

    சிறை இயக்குநர் ஒரு நாள் வ.உ.சி.யிடம் சிறை அலுவலராக பணியேற்றுக் கொண்டால் தண்டனைக் காலம் குறையும் என்றும் இன்னும் பல நன்மைகள் கிட்டும் என்றும் கூறினார். வ.உ.சி. அப்பதவியை மறுத்துவிட்டார். வ.உ.சி. கேரளாவில் உள்ள கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே சிறைக்கைதிகளுக்கு ஒரு வித்தியாசமான தண்டனை கொடுக்கப்பட்டது. அவர்கள் கம்பளியால் போர்த்தப்பட்டு அடிக்கப்பட்டார்கள். வ.உ.சி.யை அச்சுறுத்த சிறை அதிகாரி ஒரு கொடூரமான சிறைக்கைதியை வ.உ.சி.யின் அறைக்கு வெளியே தூங்கும்படி செய்தார். வழக்கமாக அவன்தான் எல்லோரையும் அடிப்பான். ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் அவன் வ.உ.சி.யின் சீடனாகிவிட்டான்.

    வ.உ.சி. சிறையிலிருந்த போது சுதேசி கப்பல் நிறுவனம் மூழ்கிப் போனது. அவரில்லாமல் மற்றவர்களால் நிறுவனத்தை நடத்த இயலவில்லை. அவர்கள் கப்பலை விற்றுவிட்டனர். அதுவும் “எஸ்.எஸ்.காலியோ” என்ற கப்பலை ஆங்கில கப்பல் நிறுவனத்திற்கே விற்றுவிட்டார்கள். அது வ.உ.சி.யை மிகவும் பாதித்தது. அந்தக் கப்பலை வாங்க வ.உ.சி.என்ன பாடுபட்டார்?

    1912-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் வ.உ.சி. விடுதலை அடைந்தார். அப்பொழுது அரசியல் சூழ் நிலை முற்றிலும் மாறி இருந்தது. சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது கொள்கையைத் தொடர்ந்தால் அது சுதந்திரப் போராட்டத்திற்கு இடையூறாகிவிடும். ஒரு தனிக்கட்சி ஆரம்பிக்கும் அளவு செல்வாக்கும் புகழும் இருந்த போதும் அவர் அப்படிச் செய்யவில்லை. அதன் மூலம் அவரது நாட்டுப்பற்றையும் மேன்மையான குணத்தையும் அறிந்து கொள்ளலாம்
    ———————————

    விடுதலைக்குப் பின்னர் (1913–1936)

    வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னை, கோயம்பத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் வசித்தார்.

    சென்னை வாழ்க்கை(1913–1920)

    வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னைக்குச் சென்றார். அவர் ஒரு மண்ணெண்ணைக் கடை ஆரம்பித்தார். ஆனால் ஒரு வணிகராக அவரால் வெற்றி பெற இயலவில்லை. அவர் அன்புள்ளமும் தாராள மனமும் கொண்டவர். அவரால் எப்படி வாணிகத்தில் வெற்றி பெற முடியும்? 1920-ஆம் ஆண்டு கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. வ.உ.சி.ஒரு பிரதிநிதியாக அதில் கலந்து கொண்டார். வ.உ.சி. லோக மான்ய பால கங்காதர திலகரின் சீடர். திலகர் செயல் வீரர். காந்திஜி மிதவாதி. வ.உ.சி.க்கு காந்திஜியின் வழிமுறைகளில் விருப்பமில்லை. வ.உ.சி. சிந்தித்தார். காந்திஜியின் வழிமுறைகளைப் பின்பற்றுவதா? மனசாட்சிப்படி நடப்பதா? வ.உ.சி. மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார். ஆனால் வ.உ.சி.யும் காந்திஜியும் ஒருவரை ஒருவர் மதித்தனர். காந்திஜி வ.உ.சி.யின் சுய நலமற்ற சேவையை அறிவார்.வ.உ.சி. காந்திஜியின் எளிமையும் தூய்மையும் மிக்க வாழ்க்கையை மதித்தார்.

    வ.உ.சி. சென்னையில் தொழிற்சங்கங்கள் தொடங்கி அதற்காகத் தீவிரமாகப் பணியாற்றினார். வ.உ.சி.யின் பெரும்பான்மையான தமிழ் நூல்கள் அவர் சென்னையில் வசிக்கும் போதே வெளியாகின. வ.உ.சி. சிறை சென்றதால் வழக்கறிஞர் பணி செய்வதற்கான உரிமையை இழந்தார். அவரால் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலவில்லை. திலகர் மாதம் ரூ.50 அனுப்பி வைத்தார்.
    கோயம்புத்தூர் வாழ்க்கை(1920–1924)

    கோயம்புத்தூரில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றார். அங்கே ஒரு வங்கி இயக்குனராகவும் பணியாற்றினார். இந்த வருமானம் அவருக்கு வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை. வ.உ.சி. தான் சிறையில் இருந்தாலும் அரசியல் கைதியாக மட்டுமே இருந்தமையால் வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதிக்கும்படி அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். திரு. ஈ.எச். வாலஸ் 1908-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பணியாற்றியிருந்ததால் அவர் வ.உ.சி.யின் நேர்மையும் திறமையும் அறிந்திருந்தார். அதனால் அவர் அனுமதி அளித்தார். அவரது அச்செயலுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் தனது கடைசி மகனுக்கு “வாலேஸ்வரன்” என்று பெயரிட்டார்.
    ——————————————

    கோவில்பட்டி வாழ்க்கை (1924–1932)

    கோவில்பட்டியில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அங்கேயும் அவர் வசதியற்றவர்களுக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் இலவசமாக வாதாடினார். 1927-ஆம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தார். சேலத்தில் நடந்த மூன்றாவது கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். கட்சி செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். ஆனால் சேலம் மாநாட்டிற்குப் பிறகு மீண்டும் ஒதுங்கியே இருந்தார். அவர் கட்சியில் இருந்து விலகி இருந்தாலும் அவர் கடைசி வரை திலகரின் சீடராகவே இருந்தார். கடைசி மூச்சு வரை ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வந்தார்.
    —————————-

    தூத்துக்குடி வாழ்க்கை (1932–1936)

    1932-ல் தூத்துக்குடி வந்தார். தமிழ் நூல்களை எழுதுவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்து வந்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்து நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாக் கொண்டிருந்தார். வ.உ.சி. சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினார்.இரண்டாம் உலகப் போர் மூண்டால் இந்தியா சுதந்திரம் பெறுவது உறுதி என்று அவர் கூறியிருந்தார்.அதே போல் இந்தியா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார்.

  11. சிவன் தான் முஸ்லீம்களின் முதல் நபி!!
    – ஜாமியத் உலமா முப்தி பேச்சு.
    எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான் என ஜாமியத் உலமா முப்தி தெரிவித்துள்ளார். ஜாமியத் உலமா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் புதன்கிழமை அயோத்தி சென்றனர்.
    வரும் 27ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பல்ராம்பூரில் நடக்கும் சமூக நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு துறவிகளுக்கு ஜாமியத் உலமா அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.
    அப்போது ஜாமியத் உலமா முப்தி முகமது இலியாஸ் கூறுகையில், முஸ்லீம்களின் முதல் நபி கடவுள் சிவன் ஆவார். எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான். இந்தியாவை இந்து நாடு என்று அறிவிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனா மற்றும் ஜப்பானில் உள்ள மக்களை சீனர்கள், ஜப்பானியர்கள் என்கிறோம். அதே போன்று இந்தியாவில் உள்ளவர்களை இந்துஸ்தானியர்கள் என்கிறோம் என்றார்.
    இவர் உலக உண்மையை உணர்ந்து பேசியுள்ளது அனைவருக்கும் சந்தோஷத்தை ஏற்ப்படுத்தியுள்ளது

  12. மலாலா இந்தியா வந்தால் வரவேற்போம்: சிவசேனா

    அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சைய், இந்தியா வரும்பட்சத்தில் அவரை வரவேற்போம் என்று சிவசேனா கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து கட்சியின் தலைவர் சஞ்சய் ரவுத்,

    ’’பாகிஸ்தான் இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் இந்தியா வர அனுமதிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலா, இந்தியா வந்தால் அவரை வரவேற்போம்.

    ஏனெனில், மலாலா, பாகிஸ்தானில் இருந்தவாறே, பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வருகிறார். பயங்கரவாதத்திற்கு தாங்கள் எதிரானவர்கள் என்பதை மலாலாவிற்கு நாங்கள் கொடுக்க இருக்கும் வரவேற்பின் மூலம், பாகிஸ்தான் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

  13. Indhu madhathaiyum, parpanaiyum kali pannittu, periyarvadikalayum, islamiyariyum nandraga valarthal dhan naadu vurupadum

  14. Pinnoki sellum naattai munetra padhaiyil ittu sella idhu dhan ore vazhi

  15. // சிவன் தான் முஸ்லீம்களின் முதல் நபி! – ஜாமியத் உலமா முப்தி பேச்சு. எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான் என ஜாமியத் உலமா முப்தி தெரிவித்துள்ளார். //
    ———————————–

    முஸ்லிம் வேடத்தில் உலாவரும் ஒரு பயங்கர காபிர் இந்த ஜாமியத் உலமா முப்தி. இவனைப்போன்ற போன்ற அயோக்கியர்களை திருக்குரான் முனாபிக்(நய வஞ்சகன்) என அறிவிக்கிறது. இந்த முப்தி இலியாஸை பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் அறிவிக்கிறது.

  16. // mangamadayan ——- How to type in Tamil?. How to use ekalappai? //
    —————————–

    search ekalappai in youtube.

  17. பெருமானார் காபாவை கைப்பற்றி, சிலைவணக்கத்தை ஒழித்து, சமநீதி சமத்துவம் சகோதரத்துவத்தை நிலைநாட்டிய காட்சி.

    சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது.

  18. //முஸ்லிம் வேடத்தில் உலாவரும் ஒரு பயங்கர காபிர் இந்த ஜாமியத் உலமா முப்தி. இவனைப்போன்ற போன்ற அயோக்கியர்களை திருக்குரான் முனாபிக்(நய வஞ்சகன்) என அறிவிக்கிறது. இந்த முப்தி இலியாஸை பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் அறிவிக்கிறது.//

    நல்ல மனிதர்களை இந்த காலத்தில் யாருக்கு பிடிக்கும்.

  19. Thank you so much for ekalapai details Mr. முஹம்மத் அலி ஜின்னா . I will try to use it.

  20. தலித் சிறுவர்கள் கொலை : நாய் மீது கல்லெறிந்தால் கூட மத்திய அரசை குறை சொல்லுவதா வி.கே.சிங் பாய்ச்சல்

    அரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள சன்கெடா கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை தலித் குடும்பத்தை சேர்ந்த ஒரு வீட்டில் பெட்ரோலை ஊற்றி மர்மகும்பல் தீவைத்தது. இதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2½ வயது ஆண் குழந்தை வைபவ், 11 மாத பெண் குழந்தை திவ்யா ஆகியோர் உயிருடன் எரிந்து கரிக்கட்டையாகி விட்டனர்.

    மேலும் அந்த குழந்தைகளின் தாய் ரேகா, தந்தை ஜிதேந்தர் ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் வி.கே.சிங், தெரிவித்த கருத்து ஒன்று கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இது குறித்து உத்தரபிரதேசம் காசியாபத்தில் வி.கே சிங் கூறியதாவது:- உள்ளூர் சம்பவங்களை மத்திய அரசுன் தொடர் படுத்தவேண்டாம். இரு குடும்பங்களுக்கு இடையே தகராறுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அது எப்படி உருவானது, அதன் பிறகு நடந்தது என்ன? நிர்வாகம் எங்கு தோல்வியடைந்தது.. இவற்றையெல்லாம் பரிசீலனை செய்த பிறகு மத்திய அரசிடம் அரசிடம் வாருங்கள்.

    ஒவ்வொரு விவகாரத்துக்கு மத்திய அரசை சாடுவதா? உதாரணமாக, யாராவது நாயின் மீது கல்லை விட்டெறிந்தால் அதற்கும் மத்திய அரசே பொறுப்பு என்பதா? விஷயம் அவ்வாறில்லை” என்று கூறினார்.

  21. // யாராவது நாயின் மீது கல்லை விட்டெறிந்தால் அதற்கும் மத்திய அரசே பொறுப்பு என்பதா? விஷயம் அவ்வாறில்லை” என்று கூறினார். //
    ——————————

    குஜராத் முஸ்லிம் படுகொலையின் மூலகர்த்தா மோடியிடம் கேட்டபோது “வண்டியில் செல்லும்போது, குறுக்கே ஒரு நாய்க்குட்டி வந்துவிட்டால் அதற்கு நான் பொறுப்பா?” எனக்கேட்டார்.

    தலித்துக்களையும் முஸ்லிம்களையும் கொல்வது, நாய்க்குட்டி மீது கல்லெறிவதற்கும் ஹிந்துத்வா ரதச்சக்கரத்தின் கீழே நசுங்கி சாவும் நாய்க்குட்டிகளுக்கும் ஒப்பானது என வெளிப்படையாக முன்னாள் ராணுவத்தத்தளபதியும் இன்றைய பிரதமரும் சொல்கின்றனர்.
    ———————

    இந்தியாவில் தலித்துக்கள்(தலித் கிருத்துவர் உட்பட) 40 சதவீதம், முஸ்லிம்கள் 30 சதவீதம். இரண்டும் சேர்ந்தால் 70 சதவீதத்துக்கு மேல். தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால், இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். பாக்கிஸ்தான் பங்களாதேஷ் அரேபியா மற்றும் 55 இஸ்லாமிய நாடுகளும் இந்தியா சொன்ன பேச்சை கேட்கும். இந்தியா மிகப்பெரிய வல்லரசாகிவிடும். வறுமை ஒழிந்து செல்வம் கொழிக்கும்.

    தலித் சகோதரா, இன்னமுமா புரியவில்லை. இந்த பாப்பானின் இடஒதுக்கீடு உனக்கு இனியும் தேவையா?. பார்ப்பன வர்ணதர்ம ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறு. திருக்குரானை கையிலெடு. இஸ்லாத்தை தழுவு. டெல்லி முதல் அரேபியா வரை நாம் ஆட்சி செய்யலாம்.

  22. //தலித்துக்களையும் முஸ்லிம்களையும் கொல்வது, நாய்க்குட்டி மீது கல்லெறிவதற்கும் ஹிந்துத்வா ரதச்சக்கரத்தின் கீழே நசுங்கி சாவும் நாய்க்குட்டிகளுக்கும் ஒப்பானது என வெளிப்படையாக முன்னாள் ராணுவத்தத்தளபதியும் இன்றைய பிரதமரும் சொல்கின்றனர்.//

    சரியாக சொல்லிருகிரார்கள் தேச துரோகிகளையும்,இயற்கையாகவே துரோகிகளான முஸ்லிம்களையும் சொல்லியிருபதால் நல்ல தேசியவாதிகளாக
    ஆகி ருகின்றனர் . தலித்துகள்,மற்றும் முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை மறுத்து விட வேண்டும் அப்போது தான் அந்த இடங்கள் ஏழை பிராமணர்களுக்கு
    கிடைக்கும்

  23. தந்தை சிவராஜ்/தந்தை பெரியார்

    பிராமணர்களை தேவையில்லாமல் எதிர்க்கும் மிருகங்களுக்கு எத்தனை அப்பன்டா உங்களுக்கு

  24. இந்தியாவை இந்து தேசமாக அறிவியுங்கள் —- தசரா பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேச்சு:

    மும்பை, மராட்டிய கூட்டணி அரசில் இருந்து சிவசேனா விலகாது என்று தசரா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.

    தசரா பொதுக்கூட்டம்:

    மராட்டிய பாரதீய ஜனதா அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி சார்பில் ஆண்டுதோறும் சிவாஜி பார்க் மைதானத்தில் தசரா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தசரா பொதுக்கூட்டம் நேற்று தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்தது.

    இதையொட்டி சிவாஜி பார்க் மைதானத்திற்கு செல்லும் பிரதான சாலைகளில் கட்சி கொடிகள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இரவு நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதும் இருந்து தொண்டர்கள் வந்து குவிந்தனர்.

    இரவு 7.15 மணியளவில் கட்சி கொடிகளுடன் சிவசேனா தொண்டர்கள், மகளிரணியினர், இளைஞரணியினர் திரண்டனர். கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது–
    ————————————-

    புலிகளாக இருக்கிறோம்:

    இங்கு நான் என்ன பேச போகிறேன் என்பதை நமது நண்பர்களும், எதிரிகளும் (பாகிஸ்தான்) கூர்மையாக கவனித்து கொண்டிருக்கிறார்கள். சிவசேனாவினர் இன்னும் புலியாகத்தான் இருக்கிறோம். மற்றவர்கள் தான் ஆடுகளாக மாறியிருக்கிறார்கள். நம்முடைய பிணைப்பு மக்களுடன் தான் உள்ளது. நாம் எதை நல்லது என்று நினைக்கிறோமோ, அதையே சொல்கிறோம். தவறு என்று தெரிவதை சிவசேனா எப்போதும் தட்டி கேட்கும். அப்போது யாருடைய மனம் புண்பட்டாலும் கவலை இல்லை.

    ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுவோம். அதனால் மற்றவர்கள் நமக்கு எதையும் போதிக்க தேவையில்லை. இந்துத்துவ கொள்கையில் இருந்து ஒரு போதும் சிவசேனா பின் வாங்காது. இந்தியாவை இந்து தேசமாக அறிவியுங்கள். பொதுமக்கள் வீட்டில் மாட்டிறைச்சி இருக்கிறதா? என்று சோதனை நடத்துவதை விட்டு விட்டு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்.
    ————————————–

    போலீஸ் பாதுகாப்பு:

    பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் புகுந்து அப்பாவி மக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை சுட்டு கொன்றனர். ஆனால் இன்று பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் மந்திரியின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு மும்பை போலீசாரால் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதனால் போலீசாரின் மனது எந்த அளவிற்கு புண்படும் என்பது யாருக்காவது தெரியுமா? தைரியம் இருந்தால், பாகிஸ்தானுக்குள் நுழையுங்கள் பார்க்கலாம்.

    இன்று கசூரி மும்பை வந்து புத்தகம் வெளியிடுவார். நாளை தீவிரவாதி தாவூத் இப்ராகிம் வந்து புத்தகம் வெளியிடுவார். அதற்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுப்பார்களா? இதையெல்லாம் பார்த்து கொண்டு சிவசேனாவால் சகித்து கொள்ள முடியாது. பாகிஸ்தானுக்கு ஆதவராக யார் வந்தாலும் அவர்களுக்கும் சுதீந்திர குல்கர்னிக்கு ஏற்பட்ட நிலைமை தான் நேரிடும்.
    —————————————

    பாகிஸ்தானுக்கு எதிராக:

    ராவணனுக்கு எதிராக ராமர் போர் தொடுத்தது போல் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மராட்டிய மாநில பா.ஜனதா கூட்டணியில் இருந்து சிவசேனா எப்போது விலகும் என பலர் ஆவலாக எதிர்பார்க்கின்றனர். ஆனால் சிவசேனா ஆட்சியில் பங்கு கொண்டே அரசின் தவறுகளை தட்டி கேட்கும்.

    ஆட்சியில் எவ்வளவு நாள் இருக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் சிவசேனா விலைவாசி உயர்வுக்கு எதிராக போராடியது. ஆட்சியில் பங்கு கொண்டிருந்த போதிலும், சிவசேனா இன்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்து கொண்டு தான் வருக்கிறது.

    பா.ஜனதா அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என்று கூறிவருகிறது. ஆனால் அதற்கான தேதியை அறிவிக்க மறுக்கிறது. கூடிய விரைவில் மராட்டியத்தில் சிவசேனா கொடி மட்டுமே பறக்கும்.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.
    ————————————————-

    நினைவிடத்தில் மரியாதை:

    பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்கு முன்னதாக உத்தவ் தாக்கரே சிவாஜி பார்க் மைதானத்தில் உள்ள தனது தந்தையும், மறைந்த சிவசேனா தலைவருமான பால் தாக்கரேயின் நினைவிடத்திற்கு தனது மனைவி ரேஸ்மி தாக்கரேயுடன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    கூட்டத்தில் சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே, கட்சி மூத்த தலைவர்கள் மனோகர் ஜோஷி, சஞ்சய் ராவுத் எம்.பி., மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மும்பை மேயர் சினேகல் அம்பேக்கர், ராகுல் செவாலே எம்.பி., உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ——————————–

    பரிசளிப்பை ஏற்க மறுத்த உத்தவ் தாக்கரே:

    தசரா பொதுக்கூட்டத்தின் போது உத்தவ் தாக்கரே பேசி முடித்ததும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்தும், வீரவாள் பரிசளித்தும் கவுரவிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, மராட்டியத்தில் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னை பொதுக்கூட்ட மேடையில் யாரும் கவுரவிக்க வர வேண்டாம் என்று அவர் கேட்டு கொண்டார். மேலும் உத்தவ் தாக்கரே கேட்டு கொண்டதற்கிணங்க சிவசேனா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் வறட்சி நிவாரணத்திற்காக நிதியுதவி வழங்கினார்கள்.

  25. இன்று இந்தியாவில் உள்ள தலைவர்களில் சிறந்த தலைவி அம்மா புரட்சிதலைவி தான் சிறந்த ஆளுமை, ஏழை மக்கள் மீது கருணை
    பருப்பு விலையில் மற்ற மாநிலத்தில் கஷ்டபட்டாலும் அம்மா முடிந்தவரை ரேஷனில் பருப்பு தருகிறார்கள். இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்
    எந்த ஆட்சியில் கொடுத்தார்கள் எம்ஜியார் கூட கொடுக்கவில்லை. கோவில் மற்றும் வழிபாடு தளங்களில் அன்னதானம் போன்ற சிறந்த நற்பணி
    எதனாலயே அம்மா தான் மீதும் வருவார். பெரியார், அண்ணா, காமராஜர்,ராஜாஜி, எம்ஜியாரின் (இவர்கள் எல்லோரையும் அம்மா மூலமாக பார்கிறேன்.பால் தக்கரே சிறந்த தலைவர். ஆனால் மற்ற மாநிலத்தவர் வருகையை எதிர்த்தவர். இதனால் தமிழர்கள் ஆரம்பத்தில் (குறிப்பாக தமிழக பிராமணர்கள் )
    மிகவும் பாதிக்கபட்டர்கள்

  26. // தந்தை சிவராஜ்/தந்தை பெரியார், பிராமணர்களை தேவையில்லாமல் எதிர்க்கும் மிருகங்களுக்கு எத்தனை அப்பன்டா உங்களுக்கு //
    ——————————-

    காந்தியை தேசப்பிதாவெனவும் பாரத்மாதாவை தாயெனவும் பார்ப்பனர் வணங்குகின்றனர். —- அப்படியானால் பாப்பார பாரத்மாதாவின் கள்ளப்புருஷனா காந்தி?.

  27. காந்தியை தேசப்பிதாவெனவும் பாரத்மாதாவை தாயெனவும் பார்ப்பனர் வணங்குகின்றனர். —- அப்படியானால் பாப்பார பாரத்மாதாவின் கள்ளப்புருஷனா காந்தி?.///

    அது ஒரு பக்கம் இருக்கட்டும். இவ்வளவு தேச பக்தர்கள் மகாத்மா காந்தியை தேச்பிதவாக ஏற்று கொண்டவர்கள் எப்படி அவரை கொன்று இருக்க
    முடியும். பெரியார் ஒரு பொய்யர் தானே மகாத்மா காந்தியை கொன்றது பிராமணர்கள் அல்ல. முஸ்லிம் தான் சரிதானே
    பாரத மாதா என்பவள் ஒரு அடையாளம் இந்த தேசத்திற்கான குறியீடு.இப்பேர் பட்ட பொய்யாரான உங்கள் பெரியாரை தான் நீங்கள் தந்தை என்கிறீர். உங்கள் ரிஷிமூலமும் பொய் தானே

  28. // தலித்துகள்,மற்றும் முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை மறுத்து விட வேண்டும் அப்போதுதான் அந்த இடங்கள் ஏழை பிராமணர்களுக்கு கிடைக்கும் //
    —————————-

    தலித்துக்கள் இஸ்லாத்தை ஒட்டுமொத்தமாக தழுவும் நாள் நெருங்குகிறது. வேடிக்கை என்னவென்றால், தலித்துக்களை ஹிந்து வர்ணதர்ம ஜாதிசாக்கடையிலிந்து வெளியேற்றி இஸ்லாத்தின் பக்கம் விரட்டும் வேலையை பார்ப்பனர் மிக அருமையாக செய்கின்றனர்.

    தலித்துக்கள்(தலித் கிருத்துவர் உட்பட) 40 சதவீதம், முஸ்லிம்கள் 30 சதவீதம். தலித்துக்கள் இஸ்லாத்தை தழுவினால், முஸ்லிம் ஜனத்தொகை 70 சதவீதத்துக்கு மேல். இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். பார்ப்பனரை சுன்னத் செய்து பாரத்மாதாவுக்கு புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு அனுப்பிவிடுவோம்.

  29. சரி 70% வெறும் மக்கள் தொகை அறிவு இல்லை வெறும் 30% உள்ள மற்றவர்கள் அடிமையாக தான் வைத்து இருப்பர். உருபிடியாக சிந்திக்காமல் இருந்தால்

  30. இந்திய சிறந்த ஜனநாயக நாடு. அவர் அவர் விரும்பும் மதத்தை ஏற்க எவருக்கும் உரிமை உண்டு. தலித்துகள் இஸ்லாதிருக்கு போவது அவர்கள்
    உரிமை. ஆனால் இஸ்லாதிலாயே தீவிரவாதம் உள்ளது. இஸ்லாத்தின் வேரானா அரபு நாட்டிலயே பிரச்சனை உள்ளது அவனே அவஸ்தை பட்டு
    கொண்டு இருக்கிறான். இஸ்லாத்திற்கு வந்தால் அரபுநாட்டில் சௌக்கியமாக வாழலாம் என்று இப்போது சொல்ல முடியாது . இந்தியாவில் தான்
    முஸ்லிம்கள் சுதந்திரமாக பேச முடியும் (இஸ்லாம் உட்பட) அந்த நாடுகளில் தலை போய்விடும்

  31. // பெரியார் ஒரு பொய்யர் தானே மகாத்மா காந்தியை கொன்றது பிராமணர்கள் அல்ல. முஸ்லிம் தான் சரிதானே //
    ———————–

    ப்ரம்மாச்சாரிய சத்திய சோதனை செய்கிறேன் என பொய் சொல்லி, சபர்மதி ஆஸ்ரமத்தில் தனது சொந்த தங்கையின் கொள்ளுப்பேத்திகள், மனு அபா(Manu and Abha) ஆகிய இரண்டு பெண்களுடனும், பல ப்ராஹ்மண பொம்மனாட்டிகளுடனும் பல்வேறு கோணங்களில் காமசூத்திர லீலைகள் செய்து ஒரு செக்ஸ் பைத்தியமாக காந்தி வாழ்ந்தார்.

    இப்பேற்பட்ட செக்ஸ் பைத்தியஙகளை பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் அறிவிக்கிறது.

    ஷரியா சட்டப்படி செக்ஸ் பைத்தியம் காந்தியை போட் தள்ளுவதற்கு முன்பு ஷஹாதா சொல்லி கோட்சே இஸ்லாத்தை தழுவினார். தனது பெயரை இஸ்லாயில் என பச்சை குத்திக்கொண்டார்.

    ஜனாப்.கோட்சே ஒரு ஜிஹாதி முஸ்லிம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

  32. //ஜனாப்.கோட்சே ஒரு ஜிஹாதி முஸ்லிம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.//

    அவ்வளவு தான். காந்தி எப்படியாவது இருந்து தொலையட்டும். அவர் வைசியர். கொன்றது முஸ்லிம் என்று ஒத்து கொண்டதால் நீங்கள் பெரியாரை
    விட நேர்மையாளர்

  33. // காந்தி எப்படியாவது இருந்து தொலையட்டும். அவர் வைசியர். கொன்றது முஸ்லிம் என்று ஒத்து கொண்டதால் நீங்கள் பெரியாரை விட நேர்மையாளர் //
    ————————

    ஜனாப்.கோட்சே சாஹிப் ஒரு வேத ப்ராஹ்மணராக வாழ்ந்து, வர்ணதர்ம ஹிந்து மதத்தை விட்டு வெளியேறி இஸ்லாத்தை தழுவி ஒரு ஒப்பற்ற ஜிஹாதியாக மாறினார் என்பதுதான் எங்களுக்கு பெரிய த்ரில்.

    இது போன்ற நேர்மையான ப்ராஹ்மின் சகோதரர்களை நாங்கள் 100 கோடி அகண்டபாரத முஸ்லிம்களின் இமாம்களாகவும் கலீபாக்களாகவும் மனம்திறந்து வரவேற்கிறோம். “யா அல்லாஹ், ஜிஹாதி ப்ராஹ்மின் சகோதரர்களுக்கு நல்வழி காட்டுவாயாக” என துஆ செய்கிறோம்.

    எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே !!.

  34. ////// தலித்துகள் இஸ்லாதிருக்கு போவது அவர்கள் உரிமை. ஆனால் இஸ்லாதிலாயே தீவிரவாதம் உள்ளது. இஸ்லாத்தின் வேரானா அரபு நாட்டிலயே பிரச்சனை உள்ளது அவனே அவஸ்தை பட்டு கொண்டு இருக்கிறான். இஸ்லாத்திற்கு வந்தால் அரபுநாட்டில் சௌக்கியமாக வாழலாம் என்று இப்போது சொல்ல முடியாது . இந்தியாவில் தான் முஸ்லிம்கள் சுதந்திரமாக பேச முடியும் (இஸ்லாம் உட்பட) அந்த நாடுகளில் தலை போய்விடும் ////////////
    ——————————

    “இந்தியா பாக்கிஸ்தான் இஸ்ரேல்” மனது வைத்தால், அரேபியாவை மூன்று பங்காக பிரித்துக்கொள்ள முடியும்:

    அரபு நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியரும் 60 லட்சம் பாக்கிஸ்தானியரும் வேலை செய்ன்றனர். இந்தியா பாக்கிஸ்தானிலிருந்து அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் நவதானியங்கள் செல்லாவிட்டால், அரபிகள் பட்டினி கிடந்துதான் சாகவேண்டும். இது தவிர இந்தியரும் பாக்கிஸ்தானியரும் 15 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தால், அரேபியாவின் பொருளாதரம் குலைந்து தெருக்கள் எல்லாம் நாறிவிடும்.

    ஆக இந்தியரும் பாக்கிஸ்தானியும் இல்லாவிட்டால், அரேபியா உலக மேப்பில் இருக்காது என்பதை எந்த அரபியும் மறுப்பதில்லை, மறுக்கமுடியாது. ஏமனுக்கெதிராக சவூதியும் மற்ற அரபுநாடுகளும் போர் அறிவித்தன. பாக்கிஸ்தான் போர் செய்வான், நாம் உட்கார்ந்து சாப்பிடுவோம் என மனப்பால் குடித்தனர். ஆனால், பாக்கிஸ்தான் ராணுவம் “எங்களுக்கும் ஏமனுக்கும் எந்த பிரச்னையுமில்லை. ஆகையால் நாங்கள் ஏமனுக்கெதிராக போர் செய்ய மாட்டோம். உனது போரை நீயே செய்” என அறிவித்து விலகிவிட்டது. இதனை ஈரான் அரசாங்கமும் அமெரிக்காவும் பெரிதும் வரவேற்றது.

    இந்த சூழ்நிலையில், பாக்கிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்றுத்தருவோமென ஒரு முட்டாள் துபாய் ஷேக்கு அறிவித்தான். அவசர அவசரமாக மோடியை அபுதாபிக்கு அழைத்து ஹிந்து கோயில் கட்ட நிலம் தந்து, துபாயிலிருந்து மோடி மூலம் பாக்கிஸ்தானை மிரட்டும் தொனியில் பேச வைத்தான். அன்று முதல், அரேபியாவில் வாழும் இந்தியா பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் “அடத்தூ !!. இவனெல்லாம் ஒரு முஸ்லிமா. காபிரை விட மோசம். இவன் இனிமேல் எக்கேடு கெட்டால் நமக்கென்ன” என சொல்லி அரபிகளை விட்டு விலகிவிட்டனர். அதாவது, யாராவது அரபு நாடுகளை உதைத்தால், இனி இந்தியா பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் அலட்டிக்கொள்ள மாட்டார்.
    ————————————

    அரேபியாவில் வீட்டு வேலை செய்ய வந்த ஏழை ஹிந்து பெண்களை அரபி தேவடியாமவன் சகட்டுமேனிக்கு கற்பழிக்கிறான். டெல்லியில் சவூதி தூதராக வேலை பார்த்த சவூதி தேவடியாமவன், 2 நேபாள ஹிந்து பெண்களை 20 அரபி நாய்களை வைத்து இரவும் பகலும் கற்பழித்துள்ளான். இது போல் லட்சக்கணக்கான அநியாயங்கள் அரேபியாவில் நடக்கிறது. அனைத்தும் அமுக்கப்படுகிறது. இந்த தேவடியாமவன்களை பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் சொல்கிறது. ஆனால், சவூதி அரசாங்கம் இந்த அரேபிய தேவடியாமவன்களை தண்டிக்குமா?.

    பிழைக்க வந்த லட்சக்கணக்கான இந்தியர் மீது அரேபியாவில் அநியாயம் நடக்கிறது. சம்பளம் தராமல் அவர்களை மிரட்டி வேலை வாங்குகிறான் அரேபிய தேவடியாமவன். அநியாயத்துக்கெதிராக இந்தியா எழுந்து நின்றால், எனது தாய் நாடு என பெருமையோடு மார் தட்டுவேன்.

    இந்தியரை காப்பாற்ற இந்தியா வராவிட்டால் வேறு யார் வருவார்?. ஆகையால்தான், உங்களுடைய பாரத்மாதாவை 800 வருடங்கள் அடிமைப்படுத்தி ஆண்ட அரேபியாவை அடிமைப்படுத்த உங்களுக்கு அருமையான வாய்ப்பு என லாஜிக்காக பேசுகிறேன்.
    ————————-

    இது இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு. பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது. இரண்டு நாடுகளும் ஒரு ரகசிய உடன்படிக்கை செய்து, மோடியும் நவாஸ் ஷெரீப்பும் இணைந்து “அரேபியாவை கட்டியது நாங்கள். உங்களுக்கு நல்வாழ்வு தந்தது நாங்கள். உங்களுக்கு சாப்பாடு போடுவது நாங்கள். நாங்கள் இல்லாவிட்டால் உங்களுடைய டங்குவார் அறுந்துவிடும். ஆகையால், இந்தியருக்கும் பாக்கிஸ்தானியருக்கும் உடனடியாக நிரந்தர குடியுரிமையும், இலவச வீட்டு வசதியும் தரவேண்டும். அதுவரை, முடிவற்ற வேலை நிறுத்தம். இந்தியா பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்” என அறிவிக்க வேண்டும்.

    இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் முழு ஆதரவு தரும். 15 நாட்களுக்குள் அரபி மண்டியிட்டு விடுவான். சில நாள் கழித்து, இந்தியா பாக்கிஸ்தான் இஸ்ரேல் ஆகியமூன்று நாடுகளும் திடீர் தாக்குதல் நடத்தி, அரேபியாவை மூன்று பங்காக பிரித்துக் கொள்வது ரொம்ப நல்லது.

    முட்டாள் அரபியால் என்ன புடுங்கமுடியும்?.

  35. ஒரு உண்மை என்னவென்றால் தமிழகத்தை பொறுத்தவரை உண்மையாக பாதிக்கப்பட்ட சமூகங்கள் தலித்துக்களும், பிராமணர்களும் தான்
    மற்ற சமூகங்களை வைத்து எல்லா கட்சிகளும் அரசியல் செய்கின்றன சும்மா பெரியாரிஸ்டுகள் பார்பான் பார்பனீயம் என்று பிழைப்பு நடத்துகின்றன
    இடஒதுக்கீட்டில் கூட உண்மையில் ஏழை பிற்படுதபட்டவர்களுக்கு போய் சேர்வதில்லை. மேல்ஜாதிகாரன் தான் அனுபவிக்கிறான்.அதனால் தான்
    மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க பயப்படுகிறான்.
    மண்ணாங்கட்டி இஸ்லாம் எல்லாம் தீர்வல்ல. ஏற்கனவே முஸ்லிமாக போனவர்கள் எல்லாம் என்றும் புலம்பி கொண்டு இருக்கின்றன

  36. //// உங்கள் ரிஷிமூலமும் பொய் தானே ///
    ————————————-

    ரிஷிமூலம் நதிமூலம்:

    இஸ்லாம் யாருக்கும் எதிரியல்ல. பார்ப்பன வர்ணதரும ஜாதியை விட்டு வெளியேறி வந்த பார்ப்பனர், ஷத்திரியர், வைசியர், தலித் ஆகிய அனைவரும் சமத்துவம் சகோதரத்துவத்துடன் வாழும் மார்க்கம்தான் இஸ்லாம். சொல்லப்போனால் காபாவில் 360 சிலைகளை வைத்து வணங்கிக்கொண்டிருந்த குரைஷி எனும் பிராமணர் குலத்தில்தான் அல்லாஹ் அண்ணல் நபியை(ஸல்) படைத்து சிலைவணக்கத்தை ஒழிக்க கட்டளையிட்டான்.

    பெருமானாரை 8 வயது முதல் 50 வயது வரை உயிருக்குயிராய் பாதுகாத்து வளர்த்தவர் அவருடைய பார்ப்பன பெரியப்பா அபுதாலிப். அவருடைய மரண தருவாயில், பெருமானார்(ஸல்) அவரை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மன்றாடுகிறார். அப்பொழுது “நான் விரும்பினாலோழிய இஸ்லாத்துக்கு யாரும் வரமுடியாது. உங்களுடைய கடமை எடுத்துச்சொல்வது. ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்” என அல்லாஹ் பெருமானாரை(ஸல்) கண்டித்தான்.

    இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்பு கலீபா உமர் காபாவில் 360 சிலைகளின் பெரிய பார்ப்பன பூசாரியாக இருந்தார். ஒரு நாள் “முஹம்மதின் தலையை கொய்து வருகிறேன்” என ஹுபால் சிலை மீது சத்தியம் செய்து உருவிய வாளுடன் கலீபா உமர் கிளம்பினார். செல்லும் வழியில், திருக்குரானின் வசனங்களை கேட்டு, கண்ணீர் வழிய உடல் நடுங்க பெருமானாரின்(ஸல்) கைகளைப் பற்றி இஸ்லாத்தை தழுவினார்.

    அண்ணல் நபியின்(ஸல்) முதல் எதிரி அவருடைய சொந்த பார்ப்பன பெரியப்பா அபு லஹபும், உறவினன் அபு ஜஹலும்தான். உலகிலேயே பெரிய செக்யூலர்வாதி பாப்பான் அபுஜஹல்தான். “நீங்கள் ஆறு மாதம் காபாவில் அல்லாஹ்வை வணங்கிக்கொள்ளுங்கள், ஆறு மாதம் நாங்கள் எங்களுடை 360 சிலைகளை வணங்கிகொள்கிறோம். உங்களை அரேபியாவின் அரசனாக்குகிறோம். பொன்னும் பொருளும் உங்களுடைய காலடியில் வந்து கொட்டுகிறோம்” என்று காபிர்-முஸ்லிம் நல்லிணக்க சித்தாந்தத்தை பாப்பான் அபுஜஹல் பெருமானாரின் முன் வைத்தான். “ஒரு கையில் சூரியனயும் மறு கையில் சந்திரனையும் நீ தந்தாலும் அல்லாஹ்வின் கட்டளையை நான் நிறைவேற்றாமல் போகமாட்டேன்” என அறிவித்து, காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்து நொறுக்கி அரேபியாவிலிருந்து பார்ப்பனியத்தை வேரறுத்தார் பெருமானார்.

    இஸ்லாத்தின் மாபெரும் கலீபாக்களான அபு பக்கர் சித்தீக், உமர், உஸ்மான், ஹஜ்ரத் அலி ஆகிய அனைவரும் காபாவில் 360 சிலைகளை வணங்கிய பார்ப்பன குலத்தில் பிறந்துதான் இஸ்லாத்தை தழுவி இஸ்லாத்தின் ஒப்பற்ற தலைவர்களாக மாறினர்.

    மெக்காவில் இஸ்லாத்தை தழுவிய பிராமின்ஸ்தான் இந்தியாவுக்கு இஸ்லாத்தை கொண்டு வந்தனர். காஷ்மீரில் (இந்தியா + பாக்கிஸ்தான்) வாழும் 2 கோடி முஸ்லிம்களும் பட், சவுத்ரி, ராவ், கசூரி, கேர், குரு போன்ற ப்ராஹ்மின் பண்டித ஜாதிப்பெயர்களை தாங்கி இன்றைக்கும் வாழ்கின்றனர். இந்தியாவில் முதன் முதலாக இஸ்லாத்தை ஒட்டுமொத்தமாக தழுவியவர் காஷ்மீர், ஆப்கான், சிந்து, பாக்கிஸ்தான் ஆகிய இடங்களை ஒன்றாக இணைத்த “ஆரியவர்த்தா” எனும் பிராமின் சாம்ராஜ்ஜியத்தில் வாழ்ந்த பிராமின்ஸ்தான் என்பது கண்கூடு.
    —————————————–

    அன்னை ஆய்ஷாவின் பெயரை பற்றி சிறிது சிந்தித்து பாருங்கள். ஷா(sha) என்று முடியும் அரபி பெயர் ஏதாவது உண்டா?. ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால் நான் கேள்விப்பட்டதே இல்லை. அதே சமயம் ஷா என்று முடியும் ஆ ஷா, உ ஷா, வர்ஷா, ஹர்ஷா, அபிலாஷா, அனிஷா, அலிஷா, நிஷா, நடாஷா, மனிஷா, திஷா …. என ஹிந்து பிராமண பெண்களின் பெயர்கள் கிட்டத்தட்ட 150 இருக்கிறது. (shaவையும் shahவையும் போட்டு குழப்பிக் கொள்ளவேண்டாம். shah என்றால் பாரசீக மொழியில் அரசனென்று பொருள். ஆண்பாலை குறிக்கும். sha என்றால் வேதமறிந்தவரென்று பொருள். ஆண் பெண் இருவருக்கும் பொதுவான பட்டம். shastry எனும் பெயர் ஆதாரம்).

    ஆகையால் பிராமின் சமுதாயம் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவி இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக மாற்றவேண்டும் என்பதே எங்களுடைய அழைப்பு. இந்தியா இஸ்லாமிஸ்தானாக மாறினால், 55 இஸ்லாமிய நாடுகளுக்கும் தலைவனாக உருவாகும். வறுமை ஒழிந்து அமைதி மலரும். “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழவேண்டும்” என்பதுதான் திருக்குரானின் அடிப்படை. அல்லாஹ் நாடினால், இன்ஷா அல்லாஹ் நடக்கும்.

    பார்ப்பனீயத்தை ஒழிக்க, பிராமின் சகோதரர்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவட்டும். பிராமின் சகோதரா, வர்ணதர்மத்தை விட்டு வெளியேறு. திருக்குரானை எடு. உனது முன்னோர்களின் அக்ரஹாரம் புனித மெக்கா நோக்கி உனது குதிரையை செலுத்து.

Leave a Reply

%d bloggers like this: