Site icon வே. மதிமாறன்

பெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா?

கடலூரில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு

*

‘பாரதியார் சிறு தெய்வ வழிபாட்டு முறையை, குறிப்பாக பலியிடுதலை கண்டித்திருக்கிறார்’ என்று கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள்; அப்படி என்றால் பெரியார் ஈவேராவும் பலியிடுதலை, கிராம வழிபாட்டு முறையை கண்டித்திருக்கிறாரே, அவருக்கு ஒரு நியாயம்?, பாரதிக்கு ஒரு நியாயமா?

-தமிழன்

ஒரு பகுத்தறிவாளர் ‘எந்த மதங்களும் வேண்டாம்’ என்ற நிலையில்தான், இஸ்லாத்தையும் புறக்கணிக்கிறார். ஆனால், ஆர்.எஸ், எஸ் இந்து மதவெறிக் கும்பல் இஸ்லாமை எதிர்த்து, மசூதியை இடித்தார்கள்.

‘ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு மதத்திற்கு எதிரானது’ என்று மசூதி இடிப்பை ஒரு பகுத்தறிவாளன் ஆதரிக்க முடியுமா?

அதுபோல் பாரதி, கிராம தெய்வங்களின் வழிபாட்டு முறையை கண்டித்துவிட்டு, பார்ப்பன தெய்வங்களையும் அதன்  வழிபாட்டு முறையையும் பரிந்துரைக்கிறார்; பெரியார், பகுத்தறிவாளர் என்கிற முறையில் சிறு தெய்வங்களும், அவைகளை வழிபாடும் முறையும் காட்டுமிராண்டித்தனமானவை’ என்று கண்டிக்கிறார். அதை விட கூடுதலாக பார்ப்பன தெய்வங்களையும் கடுமையாக எதிர்க்கிறார்.

கேவலத்திற்கு மாற்றாக கழிசடையை பரிந்துரைக்கும் பாரதியும்; பகுத்தறிவாளராக,  மக்களின் வாழ்க்கைக்கு தீங்கு செய்கிற பிற்போக்குத் தனங்களுக்கு எதிராக இயங்கிய பெரியாரும் ஒன்றா?

தொடர்புடையவை:

மக்கள் தொலைக்காட்சி பேட்டி

சிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்

‘பெரியார்-தமிழுக்கு, தலித் மக்களுக்கு, இலக்கியத்திற்கு எதுவுமே செய்யவில்லை?’- அவதூறு பரப்பும் அடியார்களுக்கு…

Exit mobile version