Site icon வே. மதிமாறன்

அன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ!

இதெல்லாம் காந்தி காலத்திலேயே பாத்துட்டோம்.. புதுசா எதவாது ட்ரை பண்ணுங்கப்பா...

அன்னா அசாரே பற்றி நீங்கள் எழுதவில்லையே?

-ஸ்ரீதர், சென்னை.

காங்கிரஸ் அரசின் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க சொல்லி எந்த பி.ஜே.பி ஆதரவு முதலாளி பணமாகவோ, பொருளாகவோ அல்லது புகழாகவோ (விளம்பரம்) லஞ்சம் கொடுத்திருப்பான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன், அதானாலதான் உடனே எழுத முடியல.

டிஜிட்டல் பேனர்கள் வந்ததுக்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூனே நாளில் ஒருத்தர் பிரபலமாகி, தலைவராகவும் ஆகிவிடுவதுப்போல், வெறும் ஊடகங்கள் மூலமாக மூனே மாசத்துல பெரிய தலைவராயிட்டாரு இந்த இந்தியன் தாத்தா.

 என்னமோ இந்தியாவுல ஊழல் நாலுமாசமாத்தான் நடப்பதுபோல், இவ்வளவு நாள் சும்மா இருந்துட்டு, இப்போ தீடிருன்னு ஊழலுக்கு எதிராக சோர்ந்து படுத்திருக்கிறார் இந்த தாத்தா.

ஒரு வேளை நாலு மாசத்துக்கு முன்னாலதான் பொறந்தாரோ, அப்போ பொறக்கும்போதே கிழவனாவே பொறந்துட்டாருபோல.

குறிப்பு:

சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க நீதிபதியிடம் பேரம் பேசிய ஜெயெந்திரன், உண்ணாவிரதத்தை முடித்து வைத்தால் பொருத்தமாக இருக்கும்.

தொடர்புடையது:

‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்

Exit mobile version