நீங்கள் ஆயிரம் விமர்சித்தாலும், ஏ.ஆர்.ரகுமான்தான் இந்தியாவிற்கு ஆஸ்கர் விருதை வாங்கித் தந்தார். அது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை.
-ஜே.அப்துல் ஜமால், பாளையங்கோட்டை.
‘ரகுமான் ஆஸ்கர் அவார்டே வாங்கிவிட்டார்’ என்று மிக பெரிய அளவில் பெருமையாக கருதப்பட்டது. உண்மைதான். ஒத்துக்கொள்கிறேன்
அதே சமயத்தில், ’ஆஸ்கர் விருது இவ்வளவுதானா?’ என்கிற எண்ணத்தையும் ஒரு சாரரிடம் ஏற்படுத்தியது என்பதையும் நீங்கள் ஒத்துக் கொள்ளவேண்டும்.
*
உன்னை போன்றவர்களிடம் கேள்வி கேட்பவன் வடிக்கட்டின முட்டாளாகத்தான் இருப்பான். இதுதான் என் கருத்து. இதற்கு பதில் சொல்?
-பெயர் குறிப்பிடவில்லை
உங்களின் சுய விமர்சனம் எனக்கு பிடிச்சிருக்கு.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத இதழ்களுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடயவை:
‘நாய் நக்கித்தான் குடிக்கும்’ – அப்போ சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்கும்?
குஷ்புவும் நமீதாவும் செம்மொழி மாநாடும்

