பெரியாரோடு இருந்தவர்கள் என்று சொல்லப்பட்ட, இரா.செழியன், க. ராசாராம், ஆர்.எம். வீரப்பன் போன்றவர்களும்,
தமிழ்த் தேசியம், விடுதலை புலி ஆதரவு, திராவிட அரசியல், தலித் அரசியல் என்று பேசுகிற பலரும் அவர்களின் அரசியலுக்கு நேர் எதிராக இருக்கிற சோ, இந்து ராம், காலச்சுவடு, தினமணி போன்ற பார்ப்பனர்களிடமும், இன்னும் சில பார்ப்பன ஊடகங்களிடமும் மிகவும் மரியாதையாகவும், இணக்கமாகவும் அவர்களுடன் சேர்ந்தும் செயல்படுகிறார்களே?
-தமிழ்.
‘கர்ணன்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. துரியோதனனின் அரசவைக்கு வர இருக்கிற கிருஷ்ணனுக்கு ‘யாரும் எழுந்து மரியாதை செய்யக் கூடாது’ என்பது மன்னன் துரியோதனனின் உத்தரவு.
அப்படியிருந்தும் கிருஷ்ணனின் வருகையின்போது ‘விதுரன்’ எழுந்து மரியாதை செய்வது மட்டுமல்லாமல், கிருஷ்ணனை ஆதரித்தும் பேசுவார். உடனே துரியோதனன், விதுரனைப் பார்த்துக் கோபத்துடன்,
“சிற்றப்பா, உடன் பிறந்த வியாதி நீ” என்பான்.
இந்த வசனம் துரியோதனனின் சிற்றப்பா விதுரனுக்கு மட்டும்தானா பொருந்துகிறது?
தொடர்புடையவை:
‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்
காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு
கலைஞன் பரப்பிய வெளி: சுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி
‘தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்
தினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை

