பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்ற ஒரு பழமொழி தமிழில் இருக்கின்றது. இதற்கு பொருத்தமாக நிகழ்காலத்தில் உள்ள ஒரு அரசியல் பிரச்சினையோடு தொடர்புபடுத்தி சொல்வதானால் எதை சொல்லலாம்?
–நீ. கதிர்வேலு.
இந்தப் பழமொழியை மாத்திப்போட்டு, அதாவது, ‘தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளுவது’ என்று வைத்துக் கொள்வோம்.
டூ விலர் பார்க்கிங் வசதியுடன் அரசே, டாஸ்மாக் பாரில் தமிழனுக்கு ‘சரக்கை’ ஊத்திவிட்டு, பிறகு ‘குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வருகிறான்’ என்று அரசின் ஆட்களான போலிசை வைத்து நடு ரோட்டிலேயே மடக்கி பிடித்து கைது செய்வது.
ஆகஸ்ட்21, 2012

