Site icon வே. மதிமாறன்

கதரும் மில்லும்; காந்தி நடத்தும் நாடகம்

???????????????????????????????தர் துணி, மில் துணி இவை இரண்டில் எது சவுக்கியமான விலைக்குக் கிடைக்கிறதோ, அதை அணிவதால் தான் ஏழைகள் தற்காலப் பொருளாதார நிலைமையைச் சமாளிக்க முடியுமென நாம் கருதுகின்றோம். ஆகையால்தான் கதரை விட மில் துணிகளை ஆதரிப்பது நலமெனக் கூறுகின்றோம்.

காங்கிரஸ் மில் துணிகளையும் ஆதரித்து, கதரையும் போற்றி வருவதிலிருந்தே கதர் ஒழிந்துவிடுமென்பது விளங்கவில்லையா? இன்னும் சில காலங்களுக்குப் பின்னால் எல்லோரும் செய்யப் போவதை சுயமரியாதை இயக்கம் இன்றே செய்து முடித்துவிட வேண்டுமென்று கூறுகின்றது.   ……………………………………………………………

ஆகவே இந்தியாவை ஓர் நாடக மேடையாக்கி தோழர் காந்தி அவர்கள் கதாநாயகனாய் சாத்வீக வேடந்தாங்கி, கதர், மதுவிலக்கு, சத்தியாக்கிரகம் என்னும் பாட்டுக்களைப் பாடி வைதீகத் திரை மறைவில் நின்று கொண்டு விடுதலை நாடகம் நடிக்கின்றார். இந்தப் பொருத்தமற்ற வேடத்தைக் கண்டு காந்திக்கு ஜே போட ஆரம்பித்து விட்டனர். இதுதான் காங்கிரசின் இன்றைய நிலை.

-பெரியாரின் தளபதி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி.

1931 ஆம் ஆண்டு திருவாரூரில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பேசியதின் சிறிய பகுதி.

தொடர்புடையவை:

பேச்சுக்கு பேச்சு அடிக்கு அடி-அழகிரியின் வியூகம்

பூணூல் Vs துண்டு – பார்ப்பனியம் Vs திராவிட இயக்கம்

Exit mobile version