கருப்பு ராஜாவால்
நன்மை பெற்ற கருப்பர்கள்
வெள்ளை ராஜாவுக்கு
விசுவாசமாகி
முதுகில் கத்தி வைக்கிறார்கள்.
விரோதிகளும் துரோகிகளும்
ஓரே அணியில்..
ஆனாலும் வீழ்த்த முடியாத வீரம்.
அவன் உயிர்..
அவன் பெயரிலோ
புகழிலோ இல்லை
எதிரிகளை அச்சம் கொள்ள வைத்த
அவனின் உண்மையிலிருக்கிறது.
எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும்
இந்த அசுரனின் தாடி மயிரைக்கூட
அசைக்க முடியாது.
ஏன்னெறால்
இவன்
எதிரிகளிடமே மண்டியிட்டு
தவம் செய்து
வரம் கேட்ட
மூட அசுரனல்ல.
எதிரிகளை துவம்சம் செய்து
துரோகிகளுக்கும்
அருளிய
கோபம் நிறைந்த
அன்பான அசுரன்.
-வே. மதிமாறன்.
விரைவில்…
*
அட்டை வடிவமைப்பு: தோழர் மணிவர்மா
பெரியார் படம் உதவி: பிரின்ஸ் என்னாரஸ் பெரியார்
வெளியீடு :
அபசகுனம் வெளியீட்டகம்
7- பிரியா காம்பளக்ஸ், கோபாலபுரம் 2 ஆவது வீதி, கோவை-641018 / 0422-2236300.
சென்னை – 9092390017 / கோவை – 9750871000
தொடர்புடையது

