அய்யா ராமதாஸ் அவர்கள் அப்போதே.. அதாவது, சமூக நீதி காவலராக தலித் தோழராக தமிழின மீட்பராக விடுதலைச் சிறுத்தைகளோடு இணைந்து தமிழ்குடிதாங்கியாக ‘அருள்பாலித்து’ வந்த நாட்களிலேயே..
‘நீதிக் கட்சி காலத்திலிருந்து பிறகு பெரியார் காலம் வந்து திராவிடக் கட்சிகளால் தமிழ் நாட்டில் தெலுங்கர்களே ஆதிக்கம் செலுத்துகிறா்கள்.. தமிழ் நாட்டில் தமிழனுக்கு செல்வாக்கில்லை..’ என்று பேசி வந்தது அறிந்ததே..
அப்படியெல்லாம் இனவாதம் பேசிய அவர் நேற்று, (4-03-2014) தெலுங்கு மக்கள் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி விழாவை சிறப்பித்திருக்கிறார்.
அதுபோலவே இனவாதம் பேசிய ‘முதலியார் முன்னேற்றம்’ நடிகர் ராஜனும் அய்யாவுடன் இணைந்து தெலுங்கர் கரத்தை பலப்படித்திருக்கிறார்.
அதுசரி, இந்த தெலுங்கு மக்கள் கட்சியில்.. அருந்ததிய மக்களுக்கு இடம் இருக்கா?
இருந்தால், அப்புறம் அது எப்படி தலித்தல்லாதவர் கூட்டணியில் வரும்?
அருந்ததியரை சேர்த்தால்.. ரெட்டி, நாயுடு சும்மா விடுவாங்களா?
‘எங்களுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று கூட சொல்லுங்கள்.. ஆனால் ‘அவுங்கள’ எங்கள் கட்சியில சேர்க்க மாட்டோம்’ என்பார்களோ?
தெலுங்கு மக்கள் கட்சி என்று பெயர் வைச்சாச்சியில்ல.. அப்புறம் அத எதுக்கு தமிழில் எழுதியிருக்கீங்க?
ஜாதியை துண்டாக்கினால் அதற்குள்ளும் ஜாதி..
தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?
பிரேமானந்தாவுக்கு தண்டனை ஜெயேந்திரனுக்கு விடுதலை; இது கம்யுனிஸ்ட் கட்சி ஸ்டைல்..
சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

