
இன்று காலை இந்தோனேசியாவிலிருந்து தோழர் தனவனம் (Thana Vanam.) தொலைபேசியில் அழைத்து பெரியார் பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னார்.
“புத்தாண்டுக்கு, பொங்கலுக்கு அவ்வளவு ஏன் ஆசிரியர் தினத்திற்கும் கூட நாம் வாழ்த்துகள் பரிமாறிக் கொள்கிறோம். ஆனால், பெரியார் பிறந்தநாளுக்கு வாழத்துகள் சொல்லிக் கொள்வதில்லை.
இவை எல்லாவற்றையும் விட சிறப்பான நாள் பெரியார் பிறந்தநாள் தான். இந்த நாளை இனி நாம் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிற நாளாக பழகிக் கொள்ள வேண்டும்” என்றார்.
ஆமாம். தோழர் தனவனம் சொன்னதைப் போல், நாம் ஒருவருக்கொருவர் பிறந்த நாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வோம்.
இனிய பெரியார் பிறந்தநாள் வாழ்த்துகள்.
