பெருமாள் முருகனை எதிர்ப்பவர்களில் மட்டுமல்ல, ஆதரிப்பவர்களிலும் மிகத் தீவிரமான இந்துத்துவவாதிகள் இருக்கிறார்கள். அதை அவர்கள் இந்தச் சூழலிலும் வெட்கம் இல்லாமல் ‘இலக்கியத் தரத்’தோடு வெளிபடுத்தவும் செய்கிறார்கள்.
தன் பிரச்சினையே சமூகப் பிரச்சினையாக மாறும்போது, துணையாகப் பெரியார் – டாக்டர் அம்பேத்கர் தொண்டர்கள் தான் வருவார்கள்; ‘ஆண்டவர்’ எப்போதுமே பார்வையாளர்தான்.. என்பதை இப்போதாவது உணர்வாரா உமா சங்கர் IAS.
எவ்வளவு வன்மம்.. எவ்வளவு ஆத்திரம்.. எவ்வளவு காழ்ப்புணர்ச்சி.. எவ்வளவு மோசமான அணுகுமுறை..
உமாசங்கர் IAS ன் ‘ஊழியம்’ குறித்து, பேட்டிக் கண்ட தினத்தந்தி ‘ஊழியரிடம்’. ச்சீ.
‘ஒவ்வொரு வார்தைக்குப் பின்னும் வர்க்க சார்பு இருக்கிறது’ என்பது எவ்வளவு உண்மையோ.. அதைவிட உண்மை;
‘ஒவ்வொரு வார்தைக்குப் பின்னும் ஜாதி சார்பு இருக்கிறது’ என்பதும். இது ஜாதி எதிர்ப்புப் பேசுபவர்களிடம் கூடுதலாகவே இருக்கிறது.
ஜாதி ஆதிக்கத்தை, பார்ப்பனியத்தை, இந்து மதத்தை உயர்வாகவும்; பெரியாரை, திராவிட இயக்கத்தை இழிவாகவும் தொடர்ந்து எழுதுகிற, ‘ஜெயமோகன்’ என்பவர், கதை எல்லாம் எழுதுவாராமே? அப்டியா?
18 hrs ·

