Site icon வே. மதிமாறன்

ஆசிரியர்களை விட மாணவர்கள் முற்போக்கானவர்கள்

எந்தக் காலத்திலுமே ஆசிரியர்களை விட மாணவர்கள் முற்போக்கானவர்கள் தான். மாணவர்களிடம் மதம், ஜாதி உணர்வு கிடையாது.

ஆசிரியர்களிடம் இருந்தது. இருக்கிறது. ஆதிக்க ஜாதிகளை மட்டும் சொல்லவில்லை, எல்லா ஜாதிகளையும் சொல்கிறேன். இந்து மதத்தை மட்டும் சொல்லவில்லை, எல்லா மதங்களையும் சொல்கிறேன்.

மாணவர்கள் மதம், ஜாதியற்று இருக்க விரும்பினால் அதைக் கெடுப்பது ஆசிரியர்கள் தான். ‘நம்ம மதப் பழக்கத்தை விட்டு விடக்கூடாது’ என்பதும், தன் ஜாதி மாணவன் என்று தெரிந்தால் ஜாதிப் பாசம் காட்டுவதும் இப்படியான மத, ஜாதி வேறுபாடுகளைக் கற்பிப்பதும் ஆசிரியர்கள் தான். தன் மத நம்பிக்கையை மற்ற மத மாணவர்களிடம் திணிப்பவர்களும் இவர்களே தான்.

ஆசிரியர்கள் பெற்றோராகவும் இருக்கிறார்கள். பெற்றோராகத் தன் மத, ஜாதி பழக்கத்தை வலிந்து தன் குழந்தைகளிடம் திணித்து விட்டு,
மற்ற குழந்தைகளை மத, ஜாதியற்று பார்ப்பார்கள் என்பது நம்பக்கூடியதா?

6 September at 23:29

ஆசிரியர் தினம்: ராதாகிருஷ்ணனின் கருணையும் ஸ்டாலினின் கண்ணீரும்; பெரியார்-டாக்டர் அம்பேத்கர்

Exit mobile version