Site icon வே. மதிமாறன்

..சாட்சியாக இருக்கிறது பெரியார் குடும்பம்

IMG-20151209-WA0002
பெரியார் பெரும்தொண்டர்கள் அய்யா அண்ணாதுரை (தொப்பி அணிந்திருப்பவர்) – அய்யா ஏ.வி. தங்கவேல் அவர்களுடன்.
93 வயதாகிறது அய்யா தங்கவேல் அவர்களுக்கு. ஆத்தூரில் பெரியார் இயக்கத்தை வளர்த்ததில் முக்கியமானவர். 4 தலைமுறை பெரியார் குடும்பத்தின் தலைவர். தன் பேரன் தமிழ் பிரபாகரனின் திருமணத்திற்கு வாழத்துரை வழங்க என்னையும் அழைத்திருந்தார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து சிறப்பான சொற்பொழிவை வழங்கினார். நான் சிறப்பழைப்பாளராகக் கலந்து கொண்டேன்.

‘அய்யா வணக்கம். நான் மதிமாறன்’ என்று அறிமுகம் செய்த கொண்ட உடன் பொங்கும் உற்சாகத்தோடு என் கைகளைப் பற்றிக் கொண்டு, ‘நான் உங்க பேச்சை விரும்பி கேட்பேன். (பேரன் உதவியுடன் T.v – Youtube) ரொம்பச் சிறப்பா பண்றீங்க..’ என்று கொண்டாடினார். அய்யா பற்றிப் பல நினைவுகளை உற்சாகத்தோடு பகிர்ந்து கொண்டார்.

இரவு பொதுக்கூட்டத்தில் என் பேச்சை கேட்பதற்காக வந்திருந்து, இரவு 10 மணிவரை இருந்து முழுமையாகக் கேட்டு, வாழ்த்தினார். பெரியார் கருத்துக்களை அடுத்தடுத்த தலைமுறை கொண்டுபோவதைக் கண்டு அய்யாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

பெரியார் நடத்திய குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம் பற்றி நான் பேசியதை குறிப்பிட்டு, ‘ அந்தப் போராட்டத்தை அய்யா இங்குதான் அறிவித்தார்.’ என்றார். அய்யா அண்ணாதுரை அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதை பெருமையோடு பகிர்ந்து கொண்டார்.

பெரியார் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்கிற எனக்கு இதை விட வேறு என்ன பெரியா அங்கீகாரம் வேண்டும்?
‘என்ன செய்து கிழித்தார் பெரியார்?’ கேட்பவர்களுக்கு..
ஆத்தூரில் சாட்சியாக இருக்கிறது ஏ.வி. தங்கவேல் அவர்களின் 4 தலைமுறை குடும்பம்.
24 December at 19:00

Exit mobile version