
29 காலை தஞ்சை அருகே கோவில் வெண்ணியில் ரமேஷ் – ரம்யா இருவருக்கும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் தலைமையில் நடந்த திருமணத்தில் நான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டேன். மிகச் சிறப்பாக நடந்தது திருமணம். திருமணத்தில் மாமிச உணவு (பிரியாணி) விருந்து வைத்தது கூடுதல் சிறப்பு.
*
திருமணத்திற்கு முதல் நாள் பிற்பகலே தஞ்சை சென்று விட்டேன். தோழர் சண்முகசுந்தரம் நான் இருந்த இடத்திற்குச் சந்திக்க வந்தார். நாளை மாலை உங்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லை என்றால் தஞ்சை இலக்கிய வட்டம் சார்பில் ஒரு கலந்துரையாடல் வைத்துக் கொள்ளலாம் என்றார். மகிழ்ச்சியோடு சம்மதித்தேன்.
‘மாலை 4 மணிக்கு எழுத்தாளர் வே.மதிமாறனுடன் ஒரு கலந்துரையாடல்’ என்று தனது face book ல் பதிவும் போட்டு விட்டார்.
வேலை நாளாக இருந்தும், பல தோழர்கள் வந்து கலந்து கொண்டார்கள். 2 மணிநேரத்திற்கும் மேல் மிக விரிவாக ஜாதி ஒழிப்பும் முற்போக்களார்களின் கண்ணோட்டத்தில் மாற்றமும் என்ற அளவில் பேசினோம்.
face book ல் பதிவை பார்த்து விட்டு நெய்வேலியிலிருந்து தோழர்கள் கீதா, சுந்தர் இருவரும் வந்திருந்தது தோழர்கள் பலரையும் நெகிழ வைத்தது.
குறுகிய நேரத்தில் ஒரு கருத்தரங்கத்தை வடிவமைத்து சிறப்பாக நடத்திய தோழர் சண்முகசுந்தரத்திற்குத் தான் நான் சிறப்பு நன்றியை சொல்ல வேண்டும்.
