சிங்கப்பூர், மலேசிய பயணத்தை வடிவமைத்து என்னுடன் என் துணைவியாரையும் அழைத்து, சிங்கப்பூரில் அவர்கள் வீட்டிலேயே தங்க வைத்து, சொந்த வேலைகளை எல்லாம் ஓரம் கட்டி;
10 நாட்களும் என் நிழல் போல் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் ஊர், ஊராக, வீதி வீதியாக சுற்றித்திரிந்த விஜயபாஸ்கர் – காயத்திரி தம்பதியர்.
விஜயபாஸ்கர் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். காயத்திரி வழக்குரைஞர். 10 தலைப்புகளில் நான் பேசிய DVD களை (200 க்கும் மேல்) நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் பேசி பேசியே விற்றுத் தீர்த்தார் காயத்திரி.
இருவருமே என் உறவினர்கள். தூரத்துச் சொந்தமல்ல, நெருங்கிய சொந்தம். ஆனால் கலப்பு. மாநிலமே வேற வேற.
மகாராஷ்டிரத்தில் பிறந்த டாக்டர் அம்பேத்கர், தமிழ்நாட்டில் பிறந்த பெரியார் வழி சொந்தம்.